Followers

Sunday, September 22, 2013

வஞ்சாராவின் தற்போதய நிலைமைக்கு யார் காரணம்?

வஞ்சாராவின் தற்போதய நிலைமைக்கு யார் காரணம்?





குஜராத் போலீஸ் அதிகாரி வஞ்சாரா இன்று மோடிக்கு பெருத்த தலைவலியாக மாறிப் போயுள்ளார். குஜராத் முன்னால் உள்துறை மந்திரி ஹரேன் பாண்டியாவின் கொலையிலும் மோடிக்கு பங்கிருப்பதாக செய்திகள் கசிகின்றது. ஹரேன் பாண்டியாவின் தந்தை 'இறப்பதற்கு சில நாள் முன்பு மோடியின் தரப்பிலிருந்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஹரேன் பாண்டியா சொன்னார்' என்ற வாதத்தையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். கொலை செய்வது என்பது தற்போது மோடிக்கு மிக பிடித்த பணியாகிப் போயுள்ளது. பிணியாகவும் போயுள்ளது. :-)

மோடியும் அமித்ஷா வும் சொன்னதால்தான் நாங்கள் என்கவுண்டர் பண்ணினோம் என்று கூறும் வஞ்சாராவைப் பார்த்து நான் கேட்பது 'அந்த கிறுக்கன் சொன்னான் என்றால் உங்களுக்கு புத்தி எங்கு போனது? முதலமைச்சர் எது சொன்னாலும் செய்து விடுவீர்களா? பதவி உயர்வுக்காகவும், ஒரு சில லட்சங்களுக்காகவும் காக்கி சட்டைக்கு உள்ள மதிப்பை கெடுத்துக் கொண்டு இன்று அவமானப்பட்டு நிற்பதற்கு வெட்கமாக இல்லையா?

தான் மீண்டும் முதல்வராவதற்காக உங்களையும் உங்களைப் போன்ற 20 போலீஸ் அதிகாரிகளையும் பயன்படுத்திக் கொண்ட மோடியே முதல் குற்றவாளி. ஆனால் தற்போது முதல்வராக இருப்பதால் சட்டம் அவரை நெருங்க சற்று தயக்கம் காட்டுகிறது. மோடி குஜராத் முதல்வர் பதவியிருந்து இறக்கப்பட வேண்டும். அதன் பிறகு இருக்கிறது வேடிக்கை. இந்திய வரலாற்றில் மோடியைப் போன்று அவமானப்படக் கூடிய ஒரு அரசியல்வாதியை நாம் பார்க்க முடியாது. அந்த அளவு அவரது இறங்கு முகம் இருக்கும். ஷொராபுதீன் கொலை வழக்கு, அவர் மனைவி கொலை வழக்கு, ஹரேன் பாண்டியா கொலை வழக்கு, இர்ஷத் ஜஹான் கொலை வழக்கு, துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கு, குஜராத்தில் கொல்லப்பட்ட 2500 முஸ்லிம்களின் கொலை வழக்கு என்று தனது ஆயுள் முழுக்க வழக்கு விசாரணையையும், சிறை தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.

இந்த நிலை தனக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக பிரதமர் பதவியை என்ன விலை கொடுத்தாவது அடைய மோடி முயற்சிப்பார். அதற்கான வேலையின் முதல் தொடக்கம்தான் முஸாஃபர் நகர கலவரம். இனி இதனை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல் படுத்த மோடி தயங்க மாட்டார். குஜராத்திலிருந்து முஸ்லிம் பெயர்களில் பல இந்துத்வா காலிகள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக முக நூலில் ஒரு செய்தியைப் பார்த்தேன்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் முஸ்லிம்களாகிய நாம் மற்ற இந்து சகோதரர்களுக்கு உண்மையை விளக்க வேண்டியது தலையாய கடமையாகும். ஊடுருவிய அந்த இந்துத்வ காலிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை பார்ப்போம்.

1. கோவிலில் இரவோடு இரவாக மாட்டுத் தலையை போட்டு விட்டு ஓடி விடுவது.

2. பள்ளி வாசல்களில் இரவோடு இரவாக பன்றி தலைகளை போட்டு விட்டு ஓடி விடுவது.

3. சாமி சிலைகளை உடைத்து விட்டு 'இந்தியன் முஜாஹித்' 'அல் உம்மா' என்று பேப்பரில் கிறுக்கி அந்த இடத்திலேயே போட்டு விட்டு ஓடி விடுவது.

4. இந்து கலலூரி பெண்களை முஸ்லிம் பெயர்களில் சென்று வம்பளப்பது. அதே போல் முஸ்லிம் கல்லூரி பெண்களை இந்து பெயர்களில் சென்று வம்பளப்பது. அதன் மூலம் கலவரத்தை பெருகச் செய்வது.

5. இந்து முண்ணனி, பிஜேபி தலைவர்களின் வீடுகளில் அவர்களே வெடி குண்டுகளை வீசி விட்டு முஸ்லிம்களின் மேல் பழியை போடுவது. சமீப காலத்தில் அவ்வாறு செய்து மாட்டிக் கொண்ட பிஜேபி தொண்டனைப் பார்த்தோம் :-)

இவையெல்லாம் இது வரை இவர்கள் இந்தியா முழுவதும் நடத்திய கலவரங்களின் பின்னணிகள்: அதையே தமிழகத்திலும் செயல்படுத்த எத்தனிப்பார்கள்.

இன்னும் என்னவெல்லாம் திட்டம் வைத்திருக்கிறாரோ அவை எல்லாம் மோடிக்கும் அமித்ஷாவுக்குமே வெளிச்சம்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, மோடியின் செயல்பாடுகளையும், அவர் எவ்வளவு பயங்கரமானவர் என்பதையும் இந்துக்கள் உணர்ந்தே உள்ளனர். இந்துக்களில் உள்ள ஒரு சில பார்ப்பணர்கள்தான் ஊடகத்தின் துணையைக் கொண்டு மோடிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருப்பதாக பாவ்லா காட்டுகிறார்கள். எந்த பிரச்னைகள் ஏற்பட்டாலும் நாம் உடனே காவல் துறையை அணுகி சம்பந்தப்பட்டவர்களை ஒப்படைக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் நாமே அவர்களுக்கு தண்டனை தர முயற்சிக்கக் கூடாது. தனி ஆளாக செய்வதை விட டிஎன்டிஜே, தமுமுக, பாபுலர் ஃபிரண்ட் போன்ற அமைப்புகள் மூலமாக இந்த இந்துத்வ காலிகளை இனம் காண வேண்டும்.

கிராமங்களில் சந்தேகத்திற்கிடமாக புதிய நபர்கள் தென்பட்டால் உடன் விசாரணையில் இறங்கி காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை இரவு நேரங்களில் சிலரை ரோந்துப் பணிகளிலும் ஈடுபடுத்தலாம். எப்படியும் தமிழகத்தில் 20 சீட்டுகளையாவது கூட்டணியோடு பிடித்து விட எத்தனிப்பார்கள். அதற்கு நாம் இடம் தந்து விடாமல், வன்முறையின்றி பிரசாரத்தின் மூலம் இந்துத்வாவின் சீர்கேடுகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்வோம்.



கம்யுனிஸ்டுகள் நமக்கு முன்பே அவர்களின் பிரசாரத்தை திருச்சியில் துவககி விட்டார்கள். அந்த நண்பர்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்வோமாக!

http://timesofindia.indiatimes.com/india/DG-Vanzara-sings-about-Haren-Pandya-murder-says-it-was-political-conspiracy-CBI/articleshow/22827281.cms