Followers

Saturday, June 11, 2011

பறவைகளின் தாய்மை உணர்வும் பரிணாமவியலின் விளக்கமும்!


'பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!'

-குர்ஆன் 6:38

மனிதர்களைப் போல பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் ஒவ்வொரு சமுதாயமாக வாழ்வதாக இங்கு இறைவன் குறிப்பிடுகிறான். ஒரு மனித இனத்தில் தாய்க்கு இருக்கும் அதே கனிவு தாய்ப் பறவை இடத்திலும் நாம் காண்கிறோம். அதன் குஞ்சுகளுக்கு இரையைத் தேடி அவற்றின் செரிமானத்துக்கு ஏற்றவாறு கூழாக்கிக் கொடுக்கும் அதன் அழகை நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஓரளவு அதன் குஞ்சுகள் பெரிதாகி இரை தேடும் பக்குவம் வந்தவுடன் தன் குஞ்சுகளையே விரட்டி விடும் தாய்ப் பறவையை நினைத்துப் பார்க்கிறோம். இத்தகைய பகுத்தறிவை இந்த சின்னஞ் சிறிய பறவைக்கு அளித்தது யார?

சமுதாயமா? அதெல்லாம் இல்லை. ஒரு செல் உயிராக இருந்து திடீரென்று தரைக்கு வந்து (விட்டலாச்சாரியா படம் போல்) திடீரென்று கால்கள் முளைத்து ஊர்ந்து செல்லக் கூடிய உயிரினங்களிலிருந்து குட்டி போட்டு பாலூட்டி வளர்க்கும் உயிரினங்களும் பறவைகளும் தோன்றின. மேலும் குட்டி போட்டு பாலூட்டும் இனத்திலிருந்து வாலில்லாக் குரங்குகளும் (Chimpanzees), வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதனும் தோன்றினான் -டார்வினின் பரிணாம வளர்ச்சி.

"மனிதனுக்கும் ,இயற்கைக்கும் ,உள்ள தொடர்புகளை நாம் இக்காலத்திலும் அறிய வேண்டும். மனிதன், இயற்கை, செடிகள், காடுகள், விலங்குகள் எல்லாம் ஒன்றோடொன்று இணை பிரியாது உள்ளது. அப்படி யோசித்து ஆராய்ந்து அறிவதுதான் பரிணாம வளர்ச்சியை அறியும் ஒரே வழி. இயற்கைக்கும் ,மனிதனுக்கும், விலங்குகளுக்கும் உள்ள இணைப்புகள் பற்றி நம் முன்னோர்கள் அறிவர். இந்திய இதிகாசங்கள், வேதங்கள், சம்ஹிதைகள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன. அந்த அளவிற்கு நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.எங்களுக்கு கூட அந்த வாய்ப்பெல்லாம் கிட்டவில்லை.”- சார்லஸ் டார்வினின் கொள்ளுப் பேத்தி "ரூத் ஸோபியா பாடெல்" மும்பையில் உதிர்த்த முத்து.

ஒரு பறவைக்கு இரைக்காக பறக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் மரங்களில் ஏறி பழங்களை தின்னும் அணில்களை நாம் பார்த்திருப்போம். அணில்களைப் போன்றே பறவைகளும் தங்களின் உணவை இறக்கைகளின் தேவையின்றியே பெற்றுக் கொள்ளமுடியும். அடுத்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இந்த உயிரினங்கள் பரிணாமத் தத்துவத்தில் அடங்காது. இதற்க்கெல்லாம் பரிணாமத்தில் பதில் இல்லை.

நீங்கள் இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது டார்வின் விஷயத்தில். டார்வின் பெரிய அறிவாளி: அவர் சொன்ன பரிணாமத் தத்துவம் சிறந்தது என்று கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டும். உடன் உங்களை பலரும் அறிவு ஜீவி என்று பாராட்டுவார்கள். :-)

மேலும் டார்வின் கோட்பாடுகளின் அபத்தங்களை நண்பர் ஆஷிக்கின் பதிவுகளில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

'ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? இறைவனைத் தவிர யாரும் அவற்றை அந்தரத்தில் நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'

-குர்ஆன் 16:79

'அவர்களுக்கு மேலே பறவைகள் சிறகுகளை விரித்தும் மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.'
-
குர்ஆன் 67:19

பூமி தன்னைத்தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத்தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்த பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்க்காக அது செல்கின்ற வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் தூரம்.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்த பறவைகள் மீது மோத வேண்டும்.

பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை இருப்பதால் அந்த பறவையை பூமி சேர்த்து இழுத்துக் கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின் பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன் பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்த பூமி வேகமாக சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது. பூமியில் மோதி செத்து விடும்.

இதனாலேயே 'வசப்படுத்தப்பட்ட' என்ற வார்த்தையை குர்ஆன் பயன்படுத்துகிறது.

இதே வசனத்தை தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்களோடு பொறுத்திப் பார்ப்போம்.

இரண்டு விமானங்கள் முறையே ஒன்று டில்லியில் இருந்து ஹாங்காக்கிற்கும் மற்றொன்று ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கும் ஒரே வேகத்தில் ஒரே நேரத்தில் பறந்தால் அவை ஒரே நேரத்தில் தரை இறங்குமா? இக் கேள்விக்கு 'ஆம்' என்றே அனைவரும் பதில் சொல்வார்கள். அதைத் தொடர்ந்து 'எவ்வாறு' என்று மற்றொரு கேள்வியை எழுப்பினால் 'அவ்விரு விமானங்களும் பறக்கும் தூரமும் பறக்கும் வேகமும் ஒன்றாக இருப்பதால் அவை இரண்டும் ஒரே நேரத்திலேயே தரை இறங்கும்' என்று பதில் கூறப்படும். இந்த பதில் முறையான பதிலாகாது. குறை உடைய பதிலாகும்.

பூமியின் மீது மேற் கொள்ளப்படும் பயணமாக இருந்திருந்தால் இந்தப் பதில் போதுமானதே. ஏனென்றால் பூமி சுழன்ற போதிலும் பூமியின் மீது செய்யப்படும் பயணங்களை அது பாதிப்பதில்லை. ஆயினும் விமானங்கள் தரையை விட்டு கிளம்பியவுடன் பூமியுடனான நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. எனவே பூமியின் சுழற்ச்சி விமானப் பயணத்தை பாதிக்க வேண்டும்.

உதாரணமாக டில்லி விமானம் ஹாங்காக்கை நோக்கி மணிக்கு 650 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கிறது எனக் கொள்வோம். ஆனால் அதே நேரத்தில் பூமியின் சுழற்ச்சி விமானம் செல்லும் அதே திசையில் டில்லியை சுழற்றுகிறது. இப்போது விமானம் பறக்கும் அதே வேகத்தில் பூமியும் சுழலுவதாக இருந்தால் டில்லி விமானம் எப்போதுமே டில்லியின் வான் பரப்பில் எங்கும் நகராமல் அந்தரத்தில் நின்றிருக்கும். இதிலிருந்து விண்ணில் பறக்கும் ஒருவர் கிழக்குத் திசையில் பறப்பதாக இருந்தால் பூமி சுழலும் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்க வேண்டும் என்றும் அப்போது மட்டுமே அவர் போக வேண்டிய இலக்கை எளிதாக அடைய முடியும் என்பதையும் அறியலாம்.

ஆனால் உண்மை என்னவெனில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1675 கிலோ மீட்டர் என்பதாகும். இந்த நிலையில் டில்லி விமானம் ஒரு மணி நேரம் பறப்பதாக இருந்தால் ஹாங்காங்கை நோக்கி எவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியும்? கீழ்க் கண்டவாறு இதை நாம் கணக்கிடலாம்.

விமானப் பயணங்களின் விபரீத விந்தைகள்:

பூமியின் சுழற்சி வேகம் 1675 கிலோ மீட்டர்கள். ஆயினும் விமானத்தை முந்தும் போது அதனுடைய சார்பியல் (relative speed) வேகம் (1675-650) 1025 கிலோமீட்டர்-மணி என்பதாகும். இதிலிருந்து டில்லி விமானம் ஒரு மணி நேரம் பறந்த போதும் அந்த விமானத்தால் டில்லியிருந்து முன்னேறிச் செல்ல முடியாமல் டில்லியிருந்து 1025 கிலோ மீட்டர் பின்வாங்கிச் செல்ல நேரிட்டது என்பதைப் பார்த்தோம். இதை மற்றொரு விதத்தில் கூறுவதாக இருந்தால் டில்லி விமானம் புறப்படுவதற்கு முன்னர் ஹாங்காங்கிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருந்ததோ அதைவிட 1025 கிலோ மீட்டர் அதிக தூரத்துக்கு விமானம் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும்.

இப்போது ஹாங்காங் விமானத்தின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம். இந்த விமானம் ஹாங்காங்கிலிருந்து டில்லி நோக்கிப் பறக்கிறது. வேறு விதத்தில் கூறினால் பூமி சுழலும் திசைக்கு எதிர் திசையில் ஹாங்காங் விமானம் பறக்கிறது. எனவே இந்த விமானம் டில்லியை நோக்கி ஒரு மணி நேரத்தில் 650 கிலோ மீட்டர் முன்னேறிய போது டில்லியானது அதே நேரத்திற்குள் 1675 கிலோ மீட்டர் தூரம் அந்த விமானத்தை நோக்கி முன்னேறுகிறது. எனவே இந்த விமானத்தின் சார்பியல் வேகம் இப்போது (650 +1675) மணிக்கு 2325 கிலோ மீட்டர்களாகும். பூகோளத்தின் சுழற்ச்சியால் இப்படிப்பட்ட விபரீத விளைவுகள் உள்ளபடியே ஏற்படுவதாக இருந்தால் ஹாங்காங் விமானம் 100 நிமிடத்தில் டில்லியை அடைய நேர்ந்திருக்கும்.

அதே நேரத்திலேயே டில்லி விமானமும் தரை இறங்குவதாக இருந்திருந்தால் அந்த விமானம் ஹாங்காக்கில் தரை இறங்கி இறக்க முடியாது. அந்த விமானம் தரை இறங்கிய இடத்திலிருந்து கிட்டத்தட்ட 5500 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஹாங்காங் இருந்திருக்கும். இப்படிப்பட்ட விபரீத விந்தை நடைபெறுமாயின் டில்லி விமானம் 39 மணி நேரம் கழிந்த பிறகே ஹாங்காங்கை அடைய முடியும். எவ்வளவு கேலிக்குரியதாக இருக்கும் இந்த முடிவு? ஆனால் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நமது விமான பயணத்திற்கு ஏற்படுகிறதா? இல்லவே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே! அப்படியானால் பூமி சுழலவில்லை என்பது இதன் பொருளாகுமா? அதுவும் இல்லை.

பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருவதற்காக நகர்ந்து செல்கிறதோ அந்த திசையில் பறக்கும் விமானங்கள் பூமியின் மீது மோதி நொறுங்கிப் போக வேண்டும். இதைப் போல் பூமி எந்தத் திசையில் நகர்கிறதோ அந்த திசையில் பறக்கும் விமானங்கள் ஒரு சில வினாடிகள் பூமியிலிருந்து தவறிப் போக வேண்டும். பூகோளத்தின் சூரியவலம் இப்படிப்பட்ட பிரச்னைகளைத் தோற்றுவிக்குமாயின் இந்த பூமியில் நமக்கு விமானப் பயணம் சாத்தியமாகுமா? ஆனால் நாம் இவ்விதப் பிரச்னைகள் ஏதுமின்றி விமானப் பயணங்களை சுலமாக நடததிக் கொண்டிருக்கிறோம்.

இதே போல் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பூமியின் சுழற்ச்சியாலும் அதன் நகர்வாலும் அதன் மீது பறக்கும் பறவைகளுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதை நன்கு அறிந்துள்ளோம். பூமியின் ஈர்ப்பு விசையானது காற்று மண்டலத்திலும் பரவி இருப்பதால் பூமி காற்று மண்டலத்தையும் தன்னுடன் இணைத்தவாறே சுழல்கிறது. மேலும் சூரியனையும் சுற்றி வருகிறது. எனவே காற்று மண்டலத்தின் மிக பலம் வாய்ந்த கீழடுக்களில் பறக்கும் பறவைகளானாலும் விமானங்களானாலும் அவைகளின் நகர்வு (பறத்தல்) பூமியின் மீது ஓடும் வாகனங்களைப் போன்று பூமியுடன் பிணைக்கப்பட்டதைப் போன்று நடைபெறுகின்றன.

பூமியின் ஈர்ப்பாற்றல் அதன் மீது பறக்கும் பொருட்களை நேரிடையாக ஈர்ப்பதுடன் அவை பறக்கும் இடத்தையும் காற்று மண்டலத்தையும் பூமியுடன் பிணைத்திருக்கும் விதத்தில் அவைகள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பூமியின் மீது பறப்பவைகள் பூமியின் சுழற்சி மற்றும் அதன் நகர்வு போன்றவற்றின் பாதிப்புகளிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பை இறைவன் தாமே செய்த காரணத்தால் இப்பறவைகளை பூமியின் சுழற்சியாலும் நகர்வாலும் ஏற்பட இருந்த இடையூறுகளில் இருந்து இறைவன் தாமே தடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறுவது மிகப் பொருத்தமான அதே நேரத்தில் மிக சீரியஸான நினைவூட்டல் என்பதும் இந்த வசனங்களிலிருந்து நன்கு விளங்க முடிகிறது.

'
ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? இறைவனைத் தவிர யாரும் அவற்றை அந்தரத்தில் நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'
-
குர்ஆன் 16:79

'
அவர்களுக்கு மேலே பறவைகள் சிறகுகளை விரித்தும் மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.'
-
குர்ஆன் 67:19

தகவல் உதவி
'
திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்'

6 comments:

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் கட்டுரை..

suvanappiriyan said...

//அசத்தல் கட்டுரை..//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! சகோ. கருன்.

suvanappiriyan said...

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் 4 மாணவர்கள் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்குவதற்கு வசதியாக பாளை ஐகிரவுண்டில் மாணவர்களுக்கு 'இளவரசர் மாளிகை' என்ற பெயரிலும் மாணவிகளுக்கு 'இளவரசிகள் மாளிகை' என்ற பெயரிலும் தனித்தனியாக விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கியுள்ளனர். விடுதியிலுள்ள மாணவ, மாணவிகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விடுதி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு கடந்த 23ல் விடுதி விழா நடந்தது. விழா முடிந்ததும் ஒவ்வொவரும் வீடுகளுக்கும் விடுதிக்கும் திரும்பினர். விழா மகிழ்ச்சியில் சில மாணவர்கள் குடித்துவிட்டு மாணவிகள் விடுதிக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த 3 மாணவிகளை உடைகளைக் கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் பின்னர் மாணவர்களின் மிரட்டலுக்குப் பணிந்தனர். இதன்பிறகு மாணவர்கள் அந்த மாணவிகளை நிர்வாணமாக நடனமாட கூறி வற்புறுத்தியுள்ளனர். வேறுவழியின்றி அவர்களும் நடனமாடினர். இதை தங்களது செல்போனில் அவர்கள் படம்பிடித்துள்ளனர். தொடர்ந்து விடுதிக்குள் வந்த சில மாணவிகளிடமும் மாணவர்கள் அத்துமீற முயன்றுள்ளனர்.

இதை பார்த்த மாணவி ஒருவர் துணிச்சலாக பெற்றோருக்கும் பேராசிரியர் களுக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தார். விடுதிக்குப் பேராசிரியர்கள் வருவது தெரிந்ததும் மாணவிகளிடம் அத்துமீறிய மாணவர்கள் அங்கிருந்து நழுவினர். இச்சம்பவம் தொடர்பாக 9 பேர் கொண்ட பேராசிரியர்கள், பேராசிரியைகள் குழு அமைக்கப் பட்டு மாணவிகளிடமும் அத்துமீறிய மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

http://vaiarulmozhi.blogspot.com/2011/06/blog-post_6509.html

மனிதனுக்கு ஓவராக சுதந்திரம் கொடுத்தால் எங்கு சென்று நிற்பான் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

suvanappiriyan said...

//எல்லா மனிதர்களுக்கு சிறைச்சாலையில் சாப்பாடு போட்டால் யாருமே (சிறைக்கு வெளியே) தப்பு செய்யமாட்டாங்க சார்.//

கோவியானந்தாவின் அருளுரையா!

பக்த கோடிகள் இக்பால் செல்வன், தருமி, யாசிர், எண்ணங்கள், என்று பட்டியல் நீளும் போல் இருக்கிறதே! ஆசிரமம் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? :-)

//ஓவராக 32 பல்லு இருப்பதால் எதாவது ஒரு பல்லில் குடைச்சல் ஏற்பட்டு பல்லுவலிவருது, அதனால் பிரச்சனை ஏற்படும் என்று முன்கூட்டியே நினைக்கிற பற்களை பிடிங்கி எடுத்துவிட்டால் வாழ்நாளில் பல்வலிகளைத் முற்றிலும் தவிர்க்கலாம். உங்க ஆலோசனை இது போன்றவையே//
பல் புரையோடிப் போயிருந்தால் ஆபரேசன் பண்ணி எடுத்து விட வேண்டும். மருந்து சாப்பில் சென்று பல் வலிக்கு மாத்திரை கொடுங்கள் என்று கேட்டால் அப்போது பல் வலி நிற்கும். இரண்டு நாள் கழித்து திரும்பவும் தொந்தரவு கொடுக்கும். இஸ்லாம் சொல்வது ஆபரேஷன். கோவிக்கண்ணன் நாடுவது மருந்து ஷாப்பை. சிறுமியை கற்பழித்த அந்த முஸ்லிம் பெயர்தாங்கிக்கு குர்ஆன் சொல்லும் தண்டனையை மக்கள் மத்தியில் நிறைவேற்றினால் அடுத்தவனுககு அந்த எண்ணம் வருமா?

//உங்களால் இந்தியாவில் இருந்து இஸ்லாத்தை விமர்சனம் செய்ய முடியும் ஆனால் அதையே நீங்கள் சவுதியில் இருந்து செய்துவிட முடியாது,//

எங்கு சட்டங்கள் பலகீனமாக இருக்கிறதோ அங்குதான் சீர்திருத்தம் தேவை. இந்தியர்களுக்கு இஸ்லாமே சிறந்த வழிமுறை என்று நாத்திக தந்தை பெரியார் சொல்லியுள்ளாரே! தலைவனுக்கு விளங்கியது பக்த கோடிகளுக்கு விளங்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

யாசிர்(பிராமணரா?:-))
//அல்லது அந்த விடுதியில் தவறு செய்த‌ மாணவர்கள் அனைவரும் நாத்திகவாதிகளா//

உண்மையான கடவுள் நம்பிக்கை அந்த மாணவர்களுக்கு இருந்திருந்தால் சக மாணவிகளை நிர்வாணப்படுத்தியிருப்பார்களா? அதிலும் மருத்துவதுறை மாணவர்களாம். கொடுமை!. சட்டத்தின் மென்மையும் இங்கு பிரச்னை.

//பலரும் இஸ்லாமியர்.. ஆனால் சமூக , குடும்ப அச்சத்தின் காரணமாக எதையும் வெளியில் சொல்வதே இல்லை . இது தான் உண்மையே ???//

மெய்யாலுமா? :-)

@இக்பால் செல்வன்
//சுதந்திர சிந்தனையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றோம் .//

அந்த கல்லூரி மாணவர்கள் சுதந்திரமாக சிந்தித்ததால்தான் ஆடை அவிழ்ப்பே நடந்திருக்கிறது.

'இறந்த பிறகு கேள்வி கணக்கா? அதெல்லாம இல்லபா! இருக்கிற வரைக்கும் சுதந்திரமாக சிந்தித்து, ஜாலியா இருப்பதை உட்டுட்டு.... சொர்க்கமாம் நரகமாம்...'


7:185. வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தில்தான் அவர்கள் நம்பிக்கைக் கொள்ளப் போகிறார்கள்?


12:109. (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சுவனப்பிரியன்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில்//--இதற்கு மிக அருமையான தெளிவான விளக்கம் சகோ. நன்றி.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. ஆஷிக்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!