Followers

Tuesday, June 14, 2011

எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்!


இன்று இணைய உலகில் இஸ்லாத்தை பரப்புவதற்காக முஸ்லிம்கள் நிறைய சிரத்தை எடுக்கிறார்கள் என்ற வாதம் வைக்கப்படுகிறது. இது உண்மைதானா இன்று இப்பதிவில் அலசுவோம்.

நான் இணையத்துக்கு எழுத வந்ததே பல இஸ்லாமிய எதிர் பதிவுகளைப் பார்த்துதான். தமிழ் மணத்தில் எந்த மதத்தை காட்டிலும் இஸ்லாத்தின் மேல் ஒரு அதீத வெறுப்பைக் கக்கி பல பதிவுகள் வந்த வண்ணம் இருக்கும். இந்து மதத்தை பகுத்தறிவாதிகள்தான் விமரிசிப்பார்கள். அதுவும் அந்த மதத்தை சேர்ந்தவர்களே! ஆனால் இஸ்லாத்தை பொறுத்தவரை இந்த எதிர்ப்பு மற்ற மதத்தவர்களிடமிருந்தே அதிகம் வரும்.

முக்கியமாக இஸ்லாத்தில் சிலை வழிபாட்டை கண்டிப்பதும், உலக மக்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் என்று கூறி வர்ணாசிரமத்தை இஸ்லாம் எதிர்ப்பதும் அவர்களின் எதிர்ப்புக்கு காரணமாக இருக்கலாம். இந்த குற்றச்சாட்டுகளை விபரமாக அலசி பல பதிவர்களும் பல பதிவுகளை எழுதி விட்டார்கள். இருந்தும் இன்னும் எதிர்ப்பு குறைந்த பாடில்லை. அவர்கள் அநியாயமாக குற்றச்சாட்டுகளை வைக்கும் போது அதற்கு பதிலளிக்கும் நிர்பந்தத்திற்கு நாமும் தள்ளப்படுகிறோம்.

அடுத்து இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு 'வன்முறை மார்க்கம் இஸ்லாம்' என்பது. சில வருடங்களுக்கு முன்பு சமர்பதி எக்ஸிபிரஸ் ரயிலில் குண்டு, மாலேகானில் குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிப்பு, கோவிலில் குண்டு வெடிப்பு என்று எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும் அதைத் தொடர்ந்து முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர். இதை எல்லாம் பார்த்து 'ஏன் இப்படி முஸலிம்கள் ஆயுதங்களை கையில் எடுக்கிறார்கள்?' என்று சம்பந்தப்பட்டவர்கள் மேல் மிகுந்த கோபமும் வந்தது. ஏனெனில் இதில் இறந்தது அனைவருமே பொது மக்கள். இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. அடுத்து தனிப்பட்ட நபர்கள் யாரும் ஆயுதம் எடுப்பதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஏனெனில் குற்றவாளிகளை தடுப்பது எல்லாம் அரசின் வேலை.

ஆனால் ஹேமந்த் கர்கரே தலைமை ஏற்றவுடன் குண்டு வைத்தவர்கள் அனைவரும் இந்துத்வவாதிகள் என்ற உண்மை வெளி வந்து பரவலாக பலர் கைது செய்யப்படுகின்றனர். இவர்களின் கைதுக்கு பின்பு இந்தியாவில் எங்குமே குண்டுகளும் வெடிப்பதில்லை. இவை எல்லாம் நமக்கு தெரிந்த உண்மைகளே!

ஒருமுறை நான் எங்கள் ஊர் பள்ளியில் மாலை நேர தொழுகையை முடித்து விட்டு வெளியே வரும்போது ஒரு தாழ்த்தப்பட்ட நபரும் அவரது மனைவி இரண்டு குழந்தைகள் சகிதம் வெளியே காத்திருந்தனர்.. 'என்ன பிரச்னை?' என்று ஒரு பெரியவர் வினவியபோது, 'நாங்கள் இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறோம். எங்களுக்கு கலிமா(உறுதிமொழி) சொல்லிக் கொடுங்கள்' என்றனர். உடன் அனைவருமே பதறிபோய் 'என்னப்பா இது! நீ பிரச்னையை கிளப்பி விட்ருவே போலிருக்கே!ஏற்கெனவெ பல பிரச்னைகள் இங்கு! வெயியூரில் சென்று மாறிக் கொள்' என்றனர். அப்பொழுது எனக்கு பதினைந்து வயது இருக்கும். 'நான் ஒங்க ஊரை சேர்ந்தவன் பாய்! நான் எங்கு போவேன்? நீங்கள் தான் எனக்கு உறுதி மொழி சொல்லிக் கொடுக்க வேண்டும்' என்று அடம் பிடிக்க 'அப்படீன்னா... போலீஸிடமிருந்து ஒரு கடிதம் வாங்கி வா' என்று சொல்ல அவரும் வருத்தத்துடன் சென்று விட்டார்.

பிறகு வெளியூர் குடும்பத்தோடு சென்றவர் அங்கே இஸ்லாத்தை ஏற்று அந்த ஊரிலேயே செட்டில் ஆனார்.

இதை நான் எதற்கு சொல்கிறேன் என்று சொன்னால் முஸ்லிம்களிலேயே பலர் இது போன்ற காரியங்களை செய்வதற்கு தயங்குவர். கிறித்தவர்களைப் போல் ஒரு குரூப்பாக செயல்பட்டு இதே வேலையாக செயல்படுவதில்லை. அல்லது 'குருடன் பார்க்கிறான்' 'முடவன் நடக்கிறான்' என்று ஆங்காங்கே கூட்டம் நடத்துவதுமில்லை. பஸ்களில் வலுக்கட்டாயமாக நோட்டீஸ்களை கைகளில் திணிப்பதுமில்லை. விரும்பி ஏற்றுக் கொள்பவர்களை வரவேற்பார்கள். அவ்வளவே!

மற்றுமொரு சுவையான சம்பவம்:

சவுதிக்கு ஒரு கம்பெனிக்கு வந்த மதுரையை சேர்ந்தவர் இங்குள்ள நடவடிக்கைகளைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்கிறார். சில காலத்துக்கு பிறகு அவரது அக்காள் பையனையும் வீட்டு டிரைவராக வேறொரு அரபியிடம் அழைத்து வருகிறார். தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர். முன்னவரின் ஆலோசனைகளின் படி இவரும் இஸ்லாத்தை ஏற்கிறார். இது தெரிந்து அவரின் அரபி ' நீ எப்படி பாஸ்போர்டில் இந்து என்று போட்டு வந்தாயோ, அதன்படிதான் உன் நாட்டுக்கு செல்ல வேண்டும், ஏன் இஸ்லாத்துக்கு மாறினாய்?' என்று கோபப்பட ஆரம்பித்து விட்டார். அவரது மாமா அந்த அரபியிடம் சென்று 'இவன் முஸ்லிமாக மாறியதற்கு சந்தோஷப்படாமல், ஏன் கோபப்படுகிறாய்?' என்று கேட்டார். 'முஸ்லிமாக மாறினால் என்னிடம் இஸ்லாமிய சட்டங்களை பேச ஆரம்பித்து விடுவான். மாதாமாதம் சம்பளம் கொடுக்க வேண்டி வரும். ஒரு முஸ்லிமை வைத்து வேலை வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு' என்று சொன்னவுடன் இவருக்கு எதுவும் பேச முடியவில்லை. அந்த அரபிக்கு தெரியாமல் இஸ்லாத்தை கடைபிடித்து வருகிறார் அந்த நபர். அந்த அரபிக்கு பணத்தின் மீதுதான் கண் இருந்ததே தவிர அவர் இஸ்லாத்தை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

அதே போல் பெரியார் தாசன் முன்பு ரியாத் வந்த போது 'நான் மெக்கா சென்று கஃபாவை பார்க்க வேண்டும்' என்று நண்பர்களிடம் சொன்னபோது 'அது உங்களால் முடியாது. அதற்கு முஸ்லிமாக இருக்க வேண்டும்' என்று பதிலளித்திருக்கிறார்கள். 'என்னை முஸ்லிமாக மாறு என்று அப்போது கூட யாரும் என்னை கேட்கவில்லை. இப்பொழுது கூட இந்த முடிவை நானாகத்தான் சொந்தமாக எடுத்தேன்' என்று வருத்தத்துடன் சொல்கிறார்.

நான் இதை எல்லாம் எடுத்து எழுத காரணம் முஸ்லிம்கள் திட்டம் போட்டு மத மாற்ற காரியங்களில் எங்கும் ஈடுபடுவதில்லை எனபதை சொல்வதற்காகவே.

அடுத்து இது போன்ற மதமாற்றங்களால் தமிழக கலாசாரம் மாறுபடும் என்று இக்பால் செல்வன் ஒரு வாதத்தை வைத்தார். முதலில் தமிழக கலாசாரம், இந்திய கலாசாரம் என்ன என்பதை வரையறுத்து கூறும்படி கேட்டிருந்தேன். அவர் இதுவரை பதிலும் அளிக்கவில்லை. ஒரு கலாசாரம் இன்னதென்று தெரியாமல் அது அழிந்து விடும் என்பது எத்தகைய வாதமோ தெரியவில்லை.

ஒருவர் அன்பழகன் என்ற பெயரில் இஸ்லாத்தில் வருகிறார். அந்த பெயரிலேயே அவர் இஸ்லாத்தில் தொடரலாம். ஆனால் ராமன், கிருஷ்ணன் போன்ற கடவுளின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே போன்று மொழிப் பற்றுக்கும் நாட்டுப் பற்றுக்கும் இஸ்லாத்தில் தடையே இல்லை. உலக மொழிகள் அனைத்தும் இறைவனால் அருளப்பட்டதாகத்தான் குர்ஆன் கூறுகிறது.

எனவே இஸ்லாம் வளருவதால் நமது நாட்டுக்கு பிரச்னை: நமது மொழிக்கு பிரச்னை: நமது உடைக்கு பிரச்னை என்று போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துவதற்காகவே இந்த பதிவு.

1356. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, 'இஸ்லாதை ஏற்றுக் கொள்!' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், 'அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு" என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்" எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
Volume :2 Book :23

2678. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) கூறினார்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)" என்று பதில் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர (வணக்கம்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறேதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பி நோற்கும் (உபரியான) நோன்பைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இறைத்தூதர் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்ப்டடு) உள்ளதா?' என்று கேட்டார். 'இல்லை; நீ தானாக விரும்பிச் செலுத்தும் (உபரியான) ஸகாத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும் மாட்டேன்" என்று கூறியபடி திரும்பிச் சென்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்" என்றார்கள்.
Volume :3 Book :52

3865. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவியபோது மக்கள் அவர்களின் வீட்டருகே ஒன்று திரண்டு, 'உமர் மதம் மாறிவிட்டார்" என்று சொலலலானார்கள். அப்போது நான் சிறுவனாக என் வீட்டுக் கூரை மீது அமர்ந்து கொண்டிருந்தேன் - அப்போது ஒருவர் பட்டு அங்கி ஒன்றை அணிந்து கொண்டு வந்து, 'உமர் மதம் மாறிவிட்டார். அதனால் என்ன? நான் அவருக்கு அபயம் அளித்திருக்கிறேன் (எனவே, அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது)" என்று கூறினார். மக்கள் (அவர் சொன்னதைக் கேட்டு) அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டதைப் பார்த்தேன். நான், 'யார் இவர்?' என்று கேட்டேன். மக்கள், '(இவர்தான்) ஆஸ் இப்னு வாஇல்" என்று பதிலளித்தார்கள்.
Volume :4 Book :63

4587. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நானும் என் தாயாரும் (மக்காவில் இஸ்லாத்தை ஏற்றிருந்த) ஒடுக்கப்பட்ட பலவீனமான பிரிவினரைச் சேர்ந்தவர்களாயிருந்தோம்.
Volume :5 Book :65

5177. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஏழைகளைவிட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மணவிருந்து உணவே உணவுகளில் மிகத் தீய தாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார். 113
Volume :5 Book :67

38 comments:

saarvaakan said...

நண்பருக்கு வணக்கம்,
அருமையான பதிவு.
1.எதிர்ப்பில் வளர்ந்த சுவனப் பிரியன் என்றால் உடனே ஒத்துக் கொள்வேன்.[என்ன அடிச்சாலும் தாங்குகிறார்.ஒரு கடுஞ்சொல் கிடையாது,நீங்க ரொம்ப நல்லவருங்கோ!!!!!!!!!!!]
2. இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பவர்கள் பகுத்தறிவுவாதிகள் நான் ஏற்றுக் கொள்வது இல்லை.இறை மறுப்பாளர்கள் அனைத்து மதங்களையும் விமர்சிக்கலாம்.ஆனால் ஒரு மதத்தை விமர்சிக்க அதை பற்றி கொஞ்சமாவது தெரிந்து இருக்க வேண்டும்.இத்னை எளிதாக செய்ய ஒரு ஆலோசனை.மத பிரச்சாரகர்கள் சொல்வதை எல்லாம் மத புத்தக்த்தில் இருக்கிறதா என்று சரி பார்த்தாலே போதும்.
3.ஷாரியாவும் அதன் க(கொ)டுமையான சட்டங்களுமே நான் விமர்சிக்க காரணம்.மற்றபடி இஸ்லாமும் பிற மதங்கள் போலத்தான்.
4. அரபிகளை பற்றி எழுதுகிறீர்கள் ஏதாவது எட்டப்ப தமிழன்[தமிழரின் தனிக் குணம்] போட்டு கொடுக்க போகிறார் ஜாக்கிரதை.
5.இஸ்லாமிய பிரச்சாரகர்கள் 'மதத்தில் அறிவியல்' என்ற பெயரில் இணையம்,யு ட்யூபையே ஒரு வழி செய்து விட்டார்கள்.ஒன்றுமில்லை பெரு வெடிப்பு கொள்கை என்று தேடினால் குரானில் பெரு வெடிப்பு கொள்கை,அன்றே கூறினார் ஆண்டவன் என்று வருகிறது.
_______
நன்றி

suvanappiriyan said...

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

சகோ சார்வாகன்!

//[என்ன அடிச்சாலும் தாங்குகிறார்.ஒரு கடுஞ்சொல் கிடையாது//

இஸ்லாம் அப்படி என்னை வார்த்தெடுத்திருக்கிறது.

//5.இஸ்லாமிய பிரச்சாரகர்கள் 'மதத்தில் அறிவியல்' என்ற பெயரில் இணையம்,யு ட்யூபையே ஒரு வழி செய்து விட்டார்கள்.ஒன்றுமில்லை பெரு வெடிப்பு கொள்கை என்று தேடினால் குரானில் பெரு வெடிப்பு கொள்கை,அன்றே கூறினார் ஆண்டவன் என்று வருகிறது.//

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,

1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.

2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.

3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் - சந்திரன்களாக உருவாகின.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

தலைப்பு எதிர்ப்பில் வளர்ந்த முஸ்லிம்(கள்) என்றல்லவா இருக்கவேண்டும். ஏனெனில் இஸ்லாம் என்பது 99 சதவீதம் வளரவே இல்லை. அப்படியேத் தான் இருக்கின்றது. வளர்ந்தது என்னவோ முஸ்லிம்கள் மட்டும் தான் .... !!! ஹிஹி !

தாங்கள் என்னை நோக்கி பல கேள்விகள் வைக்கின்றீர்கள் .. நிச்சயம் பதில் சொல்லாமல் ஊரைவிட்டோ ( உலகைத்தைவிட்டோ ) ஓடிவிடமாட்டேன்.

மற்றப்படி இந்தக் காணொளிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துவிட்டது ... வேறு எதாவது புதுசா பகிரலாமே !?

கொஞ்ச நாள் இஸ்லாத்தை சுத்தியே நான் விமர்சிப்பதால் சில வேற்று மத நண்பர்கள் ஆசுவசாமாக இருக்கின்றார்கள். அடுத்த ரவுண்டில் அவர்களையும் இணைத்து கேள்விகளையும், சந்தேகங்களையும் வைப்போம் ...

இங்கேயே பலர் என்மீது காண்டில் இருக்கின்றார்கள் என்பதை என்னால் உணரமுடிகின்றது. அவர்களில் சுவனப்பிரியன் மட்டும் நல்லவராக இருக்கின்றார். என்பதால் மீண்டும் மீண்டும் நானே வந்தேன் / வருகின்றேன் / வருவேன்.

Anonymous said...

// தமிழ் மணத்தில் எந்த மதத்தை காட்டிலும் இஸ்லாத்தின் மேல் ஒரு அதீத வெறுப்பைக் கக்கி பல பதிவுகள் வந்த வண்ணம் இருக்கும். //

இது தவறு சகோ. இந்து, கிறித்தவம், இஸ்லாம் மூன்றும் ஒரே அளவில் தான் வருகின்றன.. நீங்கள் எனதுப் பதிவை மட்டுமே காண்பதால் என்னவோ அப்படித் தெரிகின்றது.

//இந்து மதத்தை பகுத்தறிவாதிகள்தான் விமரிசிப்பார்கள். அதுவும் அந்த மதத்தை சேர்ந்தவர்களே! ஆனால் இஸ்லாத்தை பொறுத்தவரை இந்த எதிர்ப்பு மற்ற மதத்தவர்களிடமிருந்தே அதிகம் வரும்.//

ஏன் தெரியுமா ? பகுத்தறிவு வாதிகள் அனைத்து மதங்களிலும் இருக்கின்றார்கள். ஆனால் இந்து மதத்தில் விமர்சிக்க பூரண தடை இல்லை. விமர்சித்துப் பதிவு எழுதினால் இரவு வீட்டுக்குப் போனால் சாப்பாடுக் கிடைக்கும். மற்றவர்களுக்கு அப்பாக்கியம் தமிழ்நாட்டில் இன்னும் வரவில்லை .. ஹிஹி

//இஸ்லாத்தில் சிலை வழிபாட்டை கண்டிப்பதும், உலக மக்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் என்று கூறி வர்ணாசிரமத்தை இஸ்லாம் எதிர்ப்பதும் அவர்களின் எதிர்ப்புக்கு காரணமாக இருக்கலாம்.//

இஸ்லாம் இதை செய்கின்றது. ஆனால் இதனை இஸ்லாம் மட்டுமெ செய்வதாகக் கூறுவது வேடிக்கை. ஏனெனில் இஸ்லாம் தோன்ற முன்னரே பல்வேறு சமயங்கள் வருணாசிரமத்தைக் கண்டித்தும், வழிப்பாடுகளை இல்லாமல் செய்தும் ஒருவழிப் பண்ணியதை மறக்க வேண்டாம். ஆனால் மீண்டும் இந்து மதம் தன்னைத் தானே மாற்றி பழையத் திண்ணையைப் பிடித்துக் கொண்டது. ஆனால் அதுவும் பல காலம் நீடிக்காது.. அதற்கு இஸ்லாத்தின் துணை தேவையே இல்லை என நான் கருதுகின்றேன். ஏனெனில் வயித்துவலிக்கு மருந்து சாப்பிட்டு தலைவலியை வாங்கிக் கொள்ள பலரும் விரும்பவில்லை என்பதால்.

//அநியாயமாக குற்றச்சாட்டுகளை வைக்கும் போது அதற்கு பதிலளிக்கும் நிர்பந்தத்திற்கு நாமும் தள்ளப்படுகிறோம். அடுத்து இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு 'வன்முறை மார்க்கம் இஸ்லாம்' என்பது. //

அய்யாவே ! அநியாயக் குற்றச்சாட்டே இல்லை. குர்-ஆனிலும், ஹடித்துகளிலும் இருப்பதை தான் எடுத்துவைக்கின்றோம் .. இல்லை என மறுக்க இயலுமா ? பூசிமொழுகி காரணங்களை வைத்து சொதப்பிக் கொண்டிருப்பது நீங்கள் தானே. .... !!!

//சமர்பதி எக்ஸிபிரஸ் ரயிலில் குண்டு, மாலேகானில் குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிப்பு, கோவிலில் குண்டு வெடிப்பு என்று எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும் அதைத் தொடர்ந்து முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர். இதை எல்லாம் பார்த்து 'ஏன் இப்படி முஸலிம்கள் ஆயுதங்களை கையில் எடுக்கிறார்கள்?' என்று சம்பந்தப்பட்டவர்கள் மேல் மிகுந்த கோபமும் வந்தது.//

அதே அதே ! அனைத்து இஸ்லாமியர்களையும் இந்த சிலர் செய்வதால் குற்றவாளியாகப் பார்ப்பதை நானும் எதிர்க்கின்றேன். ஏனெனில் பலருக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் குர்-ஆனில் இருக்கும் வன்முறைகளை வைத்து சிலர் நன்றாகவே தீவிரவாத வித்துக்களை தூவிவருகின்றார்கள். இதற்குக் காரணமே குரானில் இருக்கும் வன்முறைதான். அவற்றை மாற்றவோ, மறுக்கவோ முடியாத நிலையில் இஸ்லாமிய சமூகம் தத்தளிக்கின்றது. ஏனெனில் மறுக்கவோ , மாற்றவோ இஸ்லாமியர்களுக்கு என ஒரு போப் இல்லை, மாறாக பல உலிமாக்கள் அவரவர் போக்கில் ஒவ்வொரு விளக்கம் கொடுத்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார்கள். குரானைத் திருத்தவும் முடியாது .. அதே சமயம் இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்றர் போலவும் அது இல்லை.

// இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது //

இங்கே தான் சிக்கல். இஸ்லாம் கண்டிக்கின்றது என்றால். அது குரானா ? அல்லது இஸ்லாமியர்களுக்கான ஒருமித்தக் குரலா ? குரான் கண்டிக்கின்றது எனில் - அதே குரானில் வன்முறையும் இருக்கின்றது .. அது தான் பல அசம்பாவிதங்களுக்கு மூலக் காரணமே. இல்லை இஸ்லாமை பிரதிநித்துவப் படுத்திய ஏகோபித்த தலைமை என்று எதுவும் இல்லை. தாலிபான்கள் கூட தாமே இஸ்லாமைப் பிரதிநிதித்துவம் பண்ணுவதாகக் கூறிவருகின்றார்கள். சிக்கலே அதுதான்.

//இந்துத்வவாதிகள் என்ற உண்மை வெளி வந்து பரவலாக பலர் கைது செய்யப்படுகின்றனர். இவர்களின் கைதுக்கு பின்பு இந்தியாவில் எங்குமே குண்டுகளும் வெடிப்பதில்லை. இவை எல்லாம் நமக்கு தெரிந்த உண்மைகளே! //

அதே அதே ! ஆனால் உலகின் வன்முறைகளுக்கு முஸ்லிம் அமைப்புகளும் பெரும் காரணமாக இருக்கின்றன. அதனால் தான் இந்து தீவிரவாதிகளும் இப்படியான செயல்களில் இறங்கி தம்பங்கு வெறியாடுகின்றன.. திண்ணை சுத்தமாக இருந்தால் சாணிப் போட்டு மொழுக வேண்டிய அவசியமும் இல்லை.

Anonymous said...

// இஸ்லாத்தை ஏற்று அந்த ஊரிலேயே செட்டில் ஆனார். இதை நான் எதற்கு சொல்கிறேன் என்று சொன்னால் முஸ்லிம்களிலேயே பலர் இது போன்ற காரியங்களை செய்வதற்கு தயங்குவர். //

நல்ல விசயம் தான். தாம் விரும்பியவர் எந்த மதமானாலும் மாறிக் கொள்ள பூரண சுதந்திரம் வேண்டும். இது இஸ்லாமியருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் என தான் நானும் பேசி வருகின்றேன். ஆனால் வெறும் வெறுப்பின் காரணமாகவோ, அறியாமையினாலோ மதம் மாறுவதை நானும் தடுக்கின்றேன் .. காரணம் அது பயனற்ற ஒன்று .. இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சைப் போலாகிவிடும் .. பிரச்சனைகளுக்கு தீர்வாகாது .. முழுமையாக மனமிருந்தால் மதம் மாறுவதையும், மதம் துறப்பதையும் அனுமதிக்க வேண்டும் .. இது இஸ்லாமியர்களுக்கு பொருந்தும்.

//'முடவன் நடக்கிறான்' என்று ஆங்காங்கே கூட்டம் நடத்துவதுமில்லை. பஸ்களில் வலுக்கட்டாயமாக நோட்டீஸ்களை கைகளில் திணிப்பதுமில்லை. //

உண்மை தான். !! ஆனால் அதே பாணியை இப்போது இஸ்லாமியர்கள் சிலர் செய்யத் தொடங்கிவிட்டார்கள். வலுக்கட்டாயமாக மதமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என நான் கருதுகின்றேன். அப்படி மாற்றினால் அவர்கள் எப்போதும் பல்டி அடிக்க வாய்ப்பு இருக்கின்றது. இது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் முக்கியமாக வெளிநாடுகளில் - இது ஏற்படுத்தி வருகின்றது. பெரும்பாலான இஸ்லாமிய எவாஞ்செலிச வேலைகளை அரபு முஸ்லிம்களை விடவும் பாகிஸ்தானிய, வங்கதேச முஸ்லிம்கள் தான் செய்கின்றார்கள். இது ஒருவித சமூக முறுகலை ஏற்படுத்திவருகின்றது. இது அனைத்து சமூகங்களும் பேராபத்தாக முடியும்.

//இங்குள்ள நடவடிக்கைகளைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்கிறார்./.

சுயவிருப்பத்தோடு, முழுப் புரிதலோடு மதம் மாறிவிட்டுப் போங்கள் .. அதனை நான் எதிர்க்கவே மாட்டேன். ஆனால் மதம் மாறிவிட்டு, மற்றவர்களை னோக்கி நான் நிற்கிற இடம்தான் உசத்தி தெரியுமா. என ஏளனமாகப் பேசும் போது, அவன் நிற்கும் இடத்தின் ஓட்டைகளையும் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கு ... அவனவனுக்கு தன் முதுகின் அழுக்குத் தெரிவதில்லை மற்றவர் தான் சுட்ட வேண்டி இருக்கு என்ன ?

//இக்பால் செல்வன் ஒரு வாதத்தை வைத்தார். முதலில் தமிழக கலாசாரம், இந்திய கலாசாரம் என்ன என்பதை வரையறுத்து கூறும்படி கேட்டிருந்தேன். அவர் இதுவரை பதிலும் அளிக்கவில்லை. ஒரு கலாசாரம் இன்னதென்று தெரியாமல் அது அழிந்து விடும் என்பது எத்தகைய வாதமோ தெரியவில்லை. //

அய்யாவே ! கலாச்சாரம் என்பதை என்னவென்று விரைவில் உங்களுக்கு புரியவைக்கின்றேன். தமிழ் கலாச்சாரம் அழிந்துவிடுமோ என நான் அஞ்சவில்லை. ஆனால் கலாச்சாரம் என்பதை என்னவென்று முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும். அது நிறைவானதா ? இல்லையா என்பது இரண்டாம் பேச்சு .. ஆனால் கலாச்சாரம் தேவையா ? இல்லையா என்பதை மக்கள் கூட்டமே முடிவு செய்ய வேண்டும் .. பொட்டு வைப்பது நல்லதா கெட்டதா ? என்பதை என்னால் சொல்ல முடியாது. அது இந்து மதத்தில் இருந்து வந்ததாகவே பலரும் நினைக்கிறோம். ஆனால் அது சனாதன மதங்களுக்கு அதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் பொட்டு வைப்பதும், பூச் சூடுவதும் நமது கலாச்சாரத்தில் ஒன்றாகும்.. அதனை தேவையே இல்லாமல் மாற்று என்பது முட்டாள் தான் .. ஏனெனில் சந்தனமிடுவதும், வேட்டிக் கட்டிக் கொள்வதும், பூச்சூடுவதும் கூட கேரள முஸ்லிமகளிடையே இருக்கத் தான் செய்கின்றது.

அதே போல தொழில் உபகரணங்களை வணங்குவது தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒன்று. அதனை ஏளனம் செய்யவேண்டியதில்லை. வணங்குவது தாழ்வோ, உயர்வோ கூட இல்லை. அவரவர் விருப்பம். மக்கள் கூட்டம் வேண்டாம் என விடும் போது அப்பழக்கம் இல்லாமல் போய்விடும். குரானில் சொல்லப்படவில்லை என்பதால் இப்படியான மரியாதை வணக்கங்களை விசனப் படுத்துவதை தான் நான் எதிர்த்தேன். புரியவில்லை எனில். விரைவில் விளக்கமாகவே எழுதுகின்றேன்....

//மொழிப் பற்றுக்கும் நாட்டுப் பற்றுக்கும் இஸ்லாத்தில் தடையே இல்லை//

ஆனால் வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்த தேவையற்ற எதிர்ப்பு .. இதனை சந்தேகத்துக்கு உள்ளாக்கிவிட்டது ... தேசத்தைத் தாயகவும், தெய்வத்தைப் போலவும் நினைப்பது இந்தியக் கலாச்சாரம் அல்லவா ? ஏன் இதில் முஸ்லிம்கள் ( சிலர் ) முரண்பட்டார்கள் ..

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்றார் வள்ளுவர்.

இதுதான் தமிழர் கலாச்சாரம் -இந்தியக் கலாச்சாரம். இக்குறளை இஸ்லாமியர்களால் ஏற்க முடியுமா ?

Anonymous said...

//இஸ்லாம் வளருவதால் நமது நாட்டுக்கு பிரச்னை: நமது மொழிக்கு பிரச்னை: நமது உடைக்கு பிரச்னை என்று போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்//

மொழிக்கும் உடைக்கும் பிரச்சனை இல்லை என்றே நான் கருதுகின்றேன். ( பர்தாக்களைத் தவிர ) ஏனெனில் தமிழ் முஸ்லிம்கள் சிலர் தாவணிக் கூட அணிகின்றார்கள். ஆனால் அனைவரும் அதனை ஏற்க மாட்டார்கள் . குறிப்பாக வகாபிகள் .... !!! அப்போது தமிழர்கள் தமது கலாச்சாரங்களை இஸ்லாத்துக்காக விட்டுக் கொடுத்தே ஆகவேண்டிய சூழல் வரும் ...

ஆனால் தமிழர்களின் பல பழக்க வழக்கங்களுக்கு இஸ்லாமில் பல்வேறு இடையூறுக்கள் இருக்கின்றன... என்பது மறுக்க முடியாது உண்மைகள்.... !!!

மற்றப்படி மதனூல்களில் இக்காலத்துக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் குறித்து நான் தொடர்ந்து எழுதுவேன். இது குர்-ஆன் மட்டுமல்ல உலகில் இன்று வழக்கிலுள்ள மதங்களில் தமிழர்கள் பின்பற்றும் சகல மதங்களையும் தான் .... !!!

நான் எழுதுவதால் யாரும் இங்கே மாறிவிடப் போவதில்லை. இருந்தாலும், ஒவ்வொன்றையும் ஆழமாக சென்று மதப்புத்தகங்களை மக்கள் கண்களுக்கு முன் கொண்டுவர விரும்புகின்றேன். இடைத்தரகர்களின் போலிப் பிரசங்களை நம்பும் போக்கினை உடைக்கவே...

Anonymous said...

அப்புறம் வளவளவென எழுதுவது புரியவில்லை என ஒருத் தோழர் கூறினார். அவருக்காக ரத்தினச் சுருக்கமாக ஒரு வரி !!!

சொல் புத்தி, சுய புத்தி இரண்டிலும் ஒன்றிருந்தால் ஓ.கே.

ஆனால் சுயப் புத்திகாரனிடம் சொல் புத்திப் படி மட்டுமே நீ நடக்க வேண்டும் என்றால் .. எப்படி பாஸ் சரிப்பட்டு வரும் ?

:)

saarvaakan said...

//இஸ்லாம் அப்படி என்னை வார்த்தெடுத்திருக்கிறது.//
இதின் மீது விமர்சனம் வைக்க விரும்பவில்லை.மனிதப் பண்பு மேலாண்மை, மேம்படுத்தலில் மதங்கள் அதிக பங்காற்ற வேன்டுமென்பது என் எதிர்பார்ப்பு. நல்லது நடந்தால் எதன் மூலமாக இருந்தாலும் வரவேற்பதில் ஆட்சேபம் இல்லை.

இருந்தாலும் யு ட்யூபை இஸ்லாமிய மத அறிவியல் பிரச்சாரகர்கள் கைப்பற்றி விட்டது மிக்க சோகத்தை ஏற்படுத்துகிறது.
நன்றி

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//ஆனால் வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்த தேவையற்ற எதிர்ப்பு .. இதனை சந்தேகத்துக்கு உள்ளாக்கிவிட்டது ... தேசத்தைத் தாயகவும், தெய்வத்தைப் போலவும் நினைப்பது இந்தியக் கலாச்சாரம் அல்லவா ? ஏன் இதில் முஸ்லிம்கள் ( சிலர் ) முரண்பட்டார்கள் ..//

வந்தே மாதரம் என்பதன் பொருள் என்ன? “வந்தே மாதரம் என்போம். எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்று பாரதியார் பாடி நாடு எனும் தாயை வணங்குகிறோம் என்பதுதான் இதன் பொருள் என்று சொல்லித் தருகிறார்.

இப்பாடலின் விளக்கம் எப்படி என்றால் பாடல் முழுவதும் இந்தியாவை துர்க்கையாகவும், சரஸ்வதியாகவும், இந்துக்களின் இன்னபிற பெண் கடவுள்களாகவும் சித்தரிக்கிறது. அதாவது சரஸ்வதி, துர்க்கை ஆகியோரை நாங்கள் வணங்குகிறோம் என்பது ஒட்டு மொத்த பாடலின் கருத்தாகும்.
ஒரு முஸ்லிம் எப்படி இவற்றை வணங்க முடியும். அவ்வாறு கூறுவது இந்திய அரசியில் சாசனம் வழங்கியுள்ள மத உரிமைக்கு எதிரானது

தேசிய கீதமான ஜனகனமன வை பாட மாட்டோம் என்று சொன்னால் உங்கள் வாதத்தில் அர்த்தம் இருக்கும். வந்தே மாதரம் பாடாதவர் தேசபக்தி அற்றவர் என்று எதை வைத்து கூற முடியும்? நாட்டுக்கு விரோதமாக நடந்தால் அவனை துரோகி எனலாம். ஒரு பாடலை பாடாதவனுக்கு இந்த அடைமொழி நகைப்பிற்கிடமாக இல்லையா?

//வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்றார் வள்ளுவர்.//

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

என்பது இந்த குறளின் விளக்கம்.

இதுதான் இந்திய கலாசாரம், தமிழர் கலாசாரம் என்றால் ஒருவன் வாழ வேண்டிய அற நெறியை எதை வைத்து நிர்ணயிப்பீர்கள்? முஸ்லிம்கள் குர்ஆனை காட்டலாம். கிறித்தவர்கள் பைபிளை காட்டலாம். இந்தியர்களோ அல்லது இந்துக்களோ எதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொண்டு தெய்வத்துள் வைக்கப்படுவான்? இதை விளக்குவீர்களா?

Anonymous said...

@ சுவனப்பிரியன் - வந்தே மாதரம் பாடலில் எந்த சொல் துர்க்கையாக, சரஸ்வதியாக தங்களுக்குப் படுகின்றது என்பதை எடுத்துக் கூறினால் நானும் சரிப் பார்ப்பேன். எனக்கு ஓரளவுக்கு வங்காளச் சொற்களைப் படித்துப் பொருள் உணரமுடியும் என்பதால் ... நானும் அறிந்துக் கொள்வேன் .... !!!

அடுத்து

////வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்றார் வள்ளுவர்.//

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.//

தங்களின் குறள் விளக்கம் கொஞ்சம் வியப்பாக இருக்கின்றது.

வானுறையும் தெய்வத்துள் எனில் வான்+உறை+உம் தெய்வம்+த்+உள் எனப் பிரிக்கலாம் ...

வானத்தில் '' உறையும் '' எனில் '' இருக்கும் '' தெய்வத்தின் உள் ( INSIDE ) வைக்கப்படும் என்பதே பொருள்...

உறை மற்றும் உள் ஆகிய இருவார்த்தைகளும் கவனமாகப் பொருள்பட வேண்டும் . ஏனெனில் உறை என்பது accomadate என்றப் பொருளில் வரும் .. accomadation என்பது வெளியில் வைப்பது இல்லை உள்ளே வைப்பது / இருப்பது ...

அப்படிப் பார்ப்பின் உலகத்தில் வாழ வேண்டிய முறையில் வாழ்ந்தவரை வானத்தில் இருக்கும் தெய்வத்தில் ஒருவராக கருதி வணங்கப்படுவார் என்பதே மெய்யான பொருள்..

வைக்கப்படும் என்பது கருதப்படும் என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் வானுறையும் தெய்வமாக ஆகிவிடுவார் என வள்ளுவர் சொல்லவில்லை. தெய்வமாக கருதி வணங்கப்படுவார் எனவே கூறுகின்றார்.

ஆகையால் இந்து மதத்தில் இருக்கும் பல தெய்வங்கள் என்படுவது ஆபிரகாமிய மதங்களின் பல தெய்வங்கள் என்ற அர்த்தமில்லை. பல தெய்வங்கள் எனப்படுவது ஒரே தெய்வத்துக்கு ஒப்பானவர் என்ற ரீதியில் ஆகும்.

ஏனெனில் திருக்குரான் தோன்றுவதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் எழுந்த திருமந்திரம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனக் கூறிவிட்டது. அதனால் இஸ்லாமிய தத்துவம் புதிய தத்துவமல்ல என்பதும் நினைவில் வைக்கவேண்டியவை.

இந்திய சமண, பௌத்த, அத்வைத தத்துவங்கள் பிரம்மாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே எனக் கூறுகின்றது. அதாவது பிரபஞ்சத்தில் இருந்து தானே உலகம் தோன்றியது. தாயிடம் இருந்து தான் சிசு தோன்றியது. இரண்டும் ஒரே உட்பொருள் தான் எனக் கூறுகின்றது. ஆனால் பிரம்மம் வேறு, ஜீவன் வேறு என பிரிப்பது ஆபிரகாமிய மதத் தத்துவங்கள் ......... !!! இதுதான் அடிப்படை வேறுபாடுகள்.

இரண்டையும் அணுகிப் புரிந்துக் கொள்ள ஆழ்ந்த பொறுமையும், வாசிப்பும் அவசியம் .. ஒன்றை அறியாமல் மற்றதைக் குறை சொல்வதில் எனக்கும் உடன்பாடில்லை.

இதுவரை நான் கூட அல்லாஹ் என்ற இஸ்லாமியத் தத்துவத்தை விமர்சிக்கவில்லை. ஏனெனில் கடவுள் இல்லை, இருக்கு அது வேறுக் கதை. ஆனால் கடவுள் இருப்பு என வைத்துக் கொண்டாலும் ... அதில் பிரச்சனை இல்லை.

எனது விமர்சனங்கள் எல்லாம் குரானில் எழுந்த அரசியல், வன்முறை, வளர்ச்சியின் தேக்கனிலை, ஒற்றைவழிச் சிந்தனைகள் குறித்தே.

இந்து மதத்திலும் இப்படியானவை இருக்கின்ற அதனையும் விமர்சிப்போமே !வருங்காலங்களில் ...

அடுத்தும் ,

இன்று இந்திய மக்களை ஒன்றிணைப்பது எது தெரியுமா ? வேதமோ, உபநிடதங்களோ இல்லை , இந்திய நாடோ கூட அல்ல... ஏனெனில் வேதம் தான் இந்துக்களின் வேத நூல் எனக் கூறினால் 90 சதவீத இந்துக்களுக்கு வேத நூல்படி வாழவேண்டிய அவசியமே இல்லை.. ஏனெனில் பெரும்பாலான இந்துக்கள் சனாதானிகள் அல்ல... இது பல மரபுகளின் கலவை ... இதில் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு , நல்லதை விலக்கிவிட எமக்கு ஆசை இல்லை. கெட்டதை மாற்றியமைக்கவே போராடுகின்றோம் .. ஒட்டுமொத்தமாக வேறொன்றை REPLaCE செய்ய அல்ல !

இந்தியாவை இணைத்துவைத்திருப்பது இந்திய வாழ்க்கைமுறை, இந்தியக் கலாச்சாரமே ஆகும். இது ஒன்றே அல்ல !!! ஆனால் ஒன்று தான் .. அதற்கு தாங்கள் மேலும் வேதங்களை மட்டும் தேடாமல் பல நூல்களைப் படித்தறிய வேண்டி இருக்கும் .. நான் இங்கு இந்துக்களுக்கு வக்கலாத் வாங்கவில்லை.. ஆனால் இந்தியக் கலாச்சாரம் என்பதை ஒற்றை நூலில் எடுத்துக் காட்டிவிட முடியாது .. ஏனெனில் இது உருவாக்கப்பட்ட கலாச்சாரம் அல்ல பரிணமித்த - பரிணமித்துக் கொண்டிருக்கும் கலாச்சாரம். பரிணாமித்தலில் ஒருன் பங்காகவே நாமும் இயங்கிவருகின்றோம் .. ஏனைய உலக கலாச்சாரங்களும் அவ்வாறே பரிணமித்து error & trial basis யில் வருகின்றது.

error & trial என்பதை இஸ்லம் ஏற்க மறுக்கின்றது. காரணம் இஸ்லாத்தில் error -யே இல்லை என வாதிடுவதால் தான். ஆனால் ஆழமாக சிந்தித்தால் அதிலும் error இருக்கின்றன. அந்த error-ஐக் களைவதாலும், மாற்றுவதாலுமே முன்னகர முடியும். மறைப்பதால் அல்ல !

ஏனெனில் எதனையும் எப்போதும் யாராலும் மறைக்க முடியாது .... !! அது தான் சத்தியமே !

Anonymous said...

நண்பர்களுக்கு,
ஒரு மதத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது, எதிர் கூடார கருத்துக்களை மட்டும் படித்தால் போதாது.. அந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கொஞ்சமாவது கேட்க முயற்ச்சிக்கவும்.. அது தான் நேர்மையான முயற்சி.. அதை விடுத்து அலி சினா கற்றுக்கொடுத்த அ ஆ இ .. ஈயிலே இருந்தால் என்ன சொல்வது.. இக்பால் செல்வன் வந்தே மாதரத்தை பற்றி பேசுவது இதற்கு ஒரு சிறந்த உதாரணம்..
குர் ஆன் ஒரு அறிவியல் களஞ்சியம் இல்லை. அது ஒரு வாழ்க்கை நெறியை முஸ்லிம்-களுக்கு போதிக்கிறது . அப்புறம் எதற்காக முஸ்லிம்-கள் குர் ஆனின் அறிவியல் பற்றிய வசங்களை பற்றி பேசுகிறார்கள்? காரணம், குர் ஆன் இறைவனிடம் இருந்து தான் வந்தது என்பது முஸ்லிம்-களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். முஸ்லிம் அல்லாதவர்கள் குறிப்பாக பகுத்தறிந்து மட்டுமே ஏற்றுக்கொள்ளும் மன முதிர்ச்சி உடையவர்கள் முஸ்லிம்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் இதை ஏற்க வைக்க முயற்சிக்கும் பொருட்டு நடக்கும் விவாதங்களில், இப்படி அறிவியலுக்கு பொருத்தமான கருத்துகள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தால் அது படைத்த அந்த இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்கும் என்ற logical reasoning மட்டுமே இதற்கு காரணம், இதை மறுப்பது மற்றவர்களின் உரிமை.. மறுப்பது தானே விவாதங்களை வாழ வைக்கும்.. :)

All truths are easy to understand once they are discovered; the point is to discover them.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,
நடப்பதை எழுதியுள்ளீர்கள்.

///இந்து மதத்தை பகுத்தறிவாதிகள்தான் விமரிசிப்பார்கள். அதுவும் அந்த மதத்தை சேர்ந்தவர்களே!///

---"பகுத்தறிவுவாதிகள்" என்று இங்கே யாரை சொல்கிறீர்கள் சகோ.சுவனப்பிரியன்?

இறைநிராகரிப்பாளர்களையா..?
டார்வினின் கட்டுக்கதைகளை நம்புபவர்களையா..?
தமக்கென்று எக்கொள்கையும் இல்லாது தான்தோன்றித்தனமாய் வாழும் நாத்திகர்களையா..?
இவர்கள்தான் பகுத்தரிவற்றவர்கள் ஆயிற்றே..!
பகுத்தறிந்திருந்தால்... இறைவனை உணர்ந்திருப்பார்கள் அல்லவா..? அப்படி உணர்ந்திந்தால் சரியான மார்க்கம் எது என்று பல் இடங்களில் சென்று தேடி இருந்திருப்பார்கள். இறுதியில் இஸ்லாத்திற்குள் நுழைந்திருப்பார்களே..!

ஆக, இங்கே 'பகுத்தறிவாளர்கள்' என்று தம்மை சொல்லிக்கொள்கொள்ளும் நாத்திகர்கள் எல்லாம் "போலி பகுத்தறிவாளர்களே"..!

கலாச்சாரம்..!

உலகில் ஏகப்பட்ட மனிதகுலவிரோத காட்டுமிராண்டி கலாச்சாரங்கள் முன்பு கணக்கின்றி எக்கச்சக்கமாய் நிறைய இருந்தன. இப்போதும் பலரிடம் இருக்கின்றன. ஆனால், அவை குறைந்ததற்கு காரணம் இஸ்லாம். அவையும்.. இன்ஷாஅல்லாஹ் அந்த கெட்ட கலாச்சாரங்கள் முற்றிலும் ஒழிந்து போய்விடும்... அந்த மக்கள் இஸ்லாத்திற்குள் முழுதாக நுழையும்போது..! இதுபற்றி நிறைய பகிரவேண்டியனவாக இருப்பதால் ஒரு தனிப்பதிவாக இடுகிறேன்,இறைநாடினால்.

மற்றபடி இது நல்லதொரு ஆக்கம் சகோ.சுவனப்பிரியன். தந்தமைக்கு நன்றி.

HABEEBRAHMAN said...

கிறிஸ்துவம் வளர்க்கப்படும் (வளரும்) முறைகளில் ஒன்று இதோ.

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.


கிறிஸ்தவ‌திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி.

.

வாஞ்ஜுர் said...

சுட்டியை சொடுக்கி விடியோ காணவும்.


1.இந்திய முஸ்லீம்களின் முன்னோர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களா?


2.இஸ்லாம் ஏன் பரவுகிறது? இஸ்லாம் வளர்ச்சிக்கு காரணம் என்ன? எப்படி?


3.இஸ்லாம் வாள் முனையாலும் வன்முறையாலும் பரப்பபபட்டு வளர்ந்ததா?


4.வெட்டுங்கள் இஸ்லாமல்லாதவரை என்று திருக்குர்'ஆன் கூறுகிறதா



.

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//ஆனால் சுயப் புத்திகாரனிடம் சொல் புத்திப் படி மட்டுமே நீ நடக்க வேண்டும் என்றால் .. எப்படி பாஸ் சரிப்பட்டு வரும் ?//

முஹம்மது ஆஷிக்!

//---"பகுத்தறிவுவாதிகள்" என்று இங்கே யாரை சொல்கிறீர்கள் சகோ.சுவனப்பிரியன்?

இறைநிராகரிப்பாளர்களையா..?
டார்வினின் கட்டுக்கதைகளை நம்புபவர்களையா..?
தமக்கென்று எக்கொள்கையும் இல்லாது தான்தோன்றித்தனமாய் வாழும் நாத்திகர்களையா..?
இவர்கள்தான் பகுத்தரிவற்றவர்கள் ஆயிற்றே..! //

சுய புத்தி என்று எதைச் சொல்கிறீர்கள். எந்த மனிதனுமே அறிவை சுயமாக பெற்றுக் கொள்வதில்லை. எல்லோருக்குமே அறிவு பகிர்ந்து ஒரே மாதிரிதான் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அறிவுசார்ந்த சூழலில் வளரும் ஒருவனின் அறிவு வளர்ச்சிக்கும் கிராமத்தில் உள்ள ஒரு மாணவனின் அறிவு வளர்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் பகுத்தறிந்து இதனை விளங்கிக் கொள்ளலாம். ஐன்ஸ்டீன் ஒன்றைக் கண்டு பிடித்தார் என்றால் அது அவருக்கு மட்டுமே உரித்தான அறிவின் வெளிப்பாடு அல்ல. இவருக்கு முன்னால் பலரின் ஆராய்ச்சிகளின் தொகுப்பை ஒழுங்கு படுத்தி மேலும் செம்மைபடுத்துகிறார். இந்த கண்டுபிடிப்புகளுக்கு முன்னால் பலரின் அயராத முயற்சி மறைந்திருக்கிறது. அது வெளி உலகுக்கு காட்டப் படுவதில்லை.

நீங்கள் எழுதும் பதிவுகள் அனைத்தும் உங்களின் சொந்த அறிவினால் எழுதப்படுகிறதா? இல்லை. 20, 25 வருடங்களாக சிறுக சிறுக நீங்கள் படித்து உங்கள் மூளையில் சேமித்து வைத்ததன் வெளிப்பாடே தற்போதய உங்களின் பதிவுகள். ஆள் நடமாட்டமற்ற ஒரு தனி தீவில் ஒரு குழந்தையை தனித்து விட்டு விட்டு 25 வருடத்துக்கு பிறகு சென்று பார்த்தால் ஒரு விலங்கைப் போல்தான் அவனது செயல்கள் இருக்கும.

ஏனெனில் அவன் தன்னை சிறந்த மனிதனாக மாற்றிக் கொள்ள உதாரண புருஷர்கள் அங்கு இல்லை. எனவே சொல் புத்திதான் ஒருவனின் சொந்த புத்திக்கு அச்சாரமாக அமைகிறது.

பெருமை பட்டு கொள்ள வேண்டுமானால் நமது மூதாதையரான ஆதாம்தான் பெருமைபட்டு கொள்ள முடியும. உலகில் உள்ள அனைத்து அறிவும் அவரிடமிருநது வெளிப்பட்டதுதான். இதிலும் அவர் பெருமைபட்டு கொள்ள முடியாது. ஏனெனில் இந்த அறிவை அவருக்கு வழங்கியதே உங்களையும் என்னையும் படைத்த இறைவனே!



நிருபர்: நீங்கள் சார்பியல் தத்துவத்தை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?

ஐன்ஸ்டீன்: பெரிதாக ஒன்றும் இல்லை. இன்னும் ஓரிரண்டு வாரங்களில் யாராவது ஒருவர் இதைக்கண்டுபிடித்திருக்கக் கூடும்.

[ சந்தேகமே இல்லாமல் ஐன்ஸ்டீன் ஒரு ஜீனியஸ் தான்..ஆனால் சார்பியலின் அத்தனை பெருமையும்அவருக்கு தான் சேர வேண்டும் என்று நாம் கருதினால் அது தவறு. ஐன்ஸ்டீனே ஒரு பேட்டியில்சொன்னது போன்று அவருக்கு சம காலத்தில் ஏழெட்டு பேர் அவர் சிந்தித்தது மாதிரியே சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். Einstein was the First to report அவ்வளவு தான். இதே போல தொலைபேசியின்அனைத்து Credit களும் க்ரஹாம்பெல்லுக்கு சேரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.அவரது நண்பர் ஒருவர் அவருக்கே தெரியாமல் பெல்லின் டெலிபோன் மாடலை பேட்டன்ட் ஆபீஸ்ஒன்றில் பதிவு செய்து வைத்திருந்ததால் க்ரஹாம்பெல் முந்திக் கொண்டார்.ஒரு ஐந்தாறு பேர்கிட்டத்தட்ட டெலிபோனை செய்தே விட்டிருந்தார்களாம்! ]

நன்றி: பதிவர் சமுத்ரா



'அனைத்து பெயர்களையும் இறைவன் ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்' என்று கேட்டான்.

'நீ தூயவன் நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்: ஞானமிக்கவன்' என்று அவர்கள் கூறினர்.
குர்ஆன்: 2:31,32

saarvaakan said...

நண்பருக்கு வணக்கம்,
//பகுத்தறிந்திருந்தால். இறைவனை உணர்ந்திருப்பார்கள் அல்லவா..?//
Interesting!!!!!!!!!!!!
கொஞ்சம் சூஃபி கருத்தாக்கம் வருகின்றதே.நல்ல விஷயம்தான்.
http://www.patheos.com/Library/Sufism/Beliefs/Afterlife-and-Salvation.html
இஸ்லாமின்படி இறைவனை உணர்தல் என்றால் என்ன?
*************
அனைத்து மதங்களும் இறையியல் கருத்தாக்கங்களே.இந்த கருத்தாக்கங்கள் மத புத்தகங்களால் வரையறுக்கப் படுகின்றன.நீங்கள் சொல்லும் கருத்தாகக்ம் ,அதாவது உங்கள் கூற்றுப் படி இஸ்லாமில் இறைவனை இப்போதும் ,இறை நம்பிக்கையாளர்& நம்பிக்கை அற்றோர் எவரும் உணருதல் முடியும்.இதற்கு குரானில் இருந்து ஆதாரம் கொடுக்க இயலுமா?.
_______________
நீங்கள் உணர்ந்து இருப்பதால் இப்படி சொல்கிறீர்கள் சரியா? உணர்வதை விள்க்க முடியுமா? ஆம்/இல்லை

Unknown said...

//ஆனால் ஹேமந்த் கர்கரே தலைமை ஏற்றவுடன் குண்டு வைத்தவர்கள் அனைவரும் இந்துத்வவாதிகள் என்ற உண்மை வெளி வந்து பரவலாக பலர் கைது செய்யப்படுகின்றனர். இவர்களின் கைதுக்கு பின்பு இந்தியாவில் எங்குமே குண்டுகளும் வெடிப்பதில்லை. இவை எல்லாம் நமக்கு தெரிந்த உண்மைகளே!
//

தலைவா முஸ்லீம்கள் அநியாத்துக்கு நல்லவங்க போல. நீங்க கண்டுபிடிச்சிட்டீங்களே. அப்புறம் என்ன

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//
உணர்வதை விள்க்க முடியுமா? ஆம்/இல்லை
//

ஆம்.

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//தலைவா முஸ்லீம்கள் அநியாத்துக்கு நல்லவங்க போல. நீங்க கண்டுபிடிச்சிட்டீங்களே. அப்புறம் என்ன//

முஸ்லிம்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நான் எங்குமே வாதிடவில்லை. குண்டு வைத்தது இஸ்லாமியர்கள் தான் என்று ஒருதலைபட்சமாக முடிவெடுத்து எத்தனை பேரை உள்ளே பிடித்து போட்டார்கள். எத்தனை இழி சொல்கள் இஸ்லாத்தின் மேல்! முடிவில் செய்தது அனைவரும் இந்துத்வ வாதிகள் என்பது நிரூபணமானதே!

இதை வெளி உலகுக்கு கொண்டு வந்த ஹேமந்த கர்கரேயையும் போட்டு தள்ளியாகி விட்டது. அதில் கூட தங்கள் பெயர் வராமல் பாகிஸ்தானிலிருந்து கூலிப் படைகளை கொண்டு வந்து காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்டார்கள். மாஸ்டர் பிளான் யூத மூளை அல்லவா!

suvanappiriyan said...

சார்வாகன்!

//நீங்கள் உணர்ந்து இருப்பதால் இப்படி சொல்கிறீர்கள் சரியா? உணர்வதை விள்க்க முடியுமா? ஆம்/இல்லை//

கேள்வி: அரைகுறையாக சமைக்கப் பட்ட மாமிச உணவைக் கூட இரைப்பை ஜீரணித்து விடுகிறது.மாமிசத்தால் ஆன இரைப்பை மட்டும் தன்னைத் தானே ஜீரணிப்பதில்லை. இந்த அதிசயத்தின் உண்மை என்ன?

சுஜாதா பதில் : இதை விளக்க நம் உணவுப் பாதையில் நடக்கும் அதிசயங்களைப் பற்றி ஒர கட்டுரையே எழுதலாம். இந்த ஜீரணம் இரைப் பையில் ஏற்படும் சுரப்பிகளால் நிகழ்வது. அதன் அமில சக்தி கல்லையும் ஜீரணிக்கும் அல்லது கொல்லைப் பக்கம் அனுப்பி வைக்கும்.இரைப் பையை பாதுகாப்பதற்குஅதில் முலாம் போல் உள் சுவர் பூச்சு உள்ளது.அதன் எதிரி சாராயம். ம்யூகோஸா என்னும் இந்த சளி போன்ற பூச்சிலிருந்து தான் ஜீரணத்துக்கான அமிலங்கள் சுரக்கின்றன. ஆனால் வயிற்றைக் கரைப்பதில்லை.இது எப்படி என்பது இயற்கையின் இதுவரை தீர்க்கப் படாத மர்மம்.

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (56: 58, 59)

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(2:28)

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (23:12-14)

'இந்த குர்ஆன் இறைவன் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப் படடதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப் படுத்துவதாகவும் தெளிவு படுத்தும் வேதமாகவும் உள்ளது.இதில் எந்த சந்தேகமும் இல்லை.இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.'

குர.ஆன் 10 :37

'இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்' என்று அவர்கள் கூறுகிறார்களா?'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்.' என்று முகம்மதே கூறுவீராக!

குர்ஆன் 10 :38

தின மலர். அறிவியல் ஆயிரம்!கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?-பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார?

தினமலர்க் காரருக்கும் சார்வாகனுக்கும் வேண்டுமானால் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கலாம். சுவனப் பிரியனான எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது தான் அல்லாஹ், இறைவன், கர்த்தர், கடவுள் என்ற பெயர்களுடைய அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய ஒருவன். இத்தனை சான்றுகளையும் ஒரு சராசரி அறிவுள்ள மனிதனே கூட உணர்ந்து கொள்ள முடியும்.

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//மற்றப்படி இந்தக் காணொளிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துவிட்டது ... வேறு எதாவது புதுசா பகிரலாமே !?//

ஒவ்வொரு காணொளியும் வேறு வேறு தலைப்புகளை பேசும். நாத்திகம் என்ற கண்ணாடியை கழற்றி விட்டு பகுத்தறிவு என்ற கண்ணாடியோடு பாருங்கள் சலிப்பு தட்டாது. மேலும் மேலும் பார்க்கத் தோன்றும்.

அதோடு நாத்திகம், விபசாரம், திருமணமாகாமல் உடலுறவு, இஸ்லாத்துக்கு எதிரான காணொளிகள் என்று சளைக்காமல் நீங்களும் தானே வெளியிட்டுக் கெண்டிருக்கிறீர்கள்.

//ஆனால் குர்-ஆனில் இருக்கும் வன்முறைகளை வைத்து சிலர் நன்றாகவே தீவிரவாத வித்துக்களை தூவிவருகின்றார்கள். இதற்குக் காரணமே குரானில் இருக்கும் வன்முறைதான். அவற்றை மாற்றவோ, மறுக்கவோ முடியாத நிலையில் இஸ்லாமிய சமூகம் தத்தளிக்கின்றது. ஏனெனில் மறுக்கவோ , மாற்றவோ இஸ்லாமியர்களுக்கு என ஒரு போப் இல்லை,//

இதற்கு இன்னும் எத்தனை முறை பதில் சொல்வது? வன்முறையை தூண்டும் வசனங்கள் முகமது நபியையும், அவரது தோழர்களையும் கொல்ல வந்த இறை மறுப்பாளர்களை நோக்கி சொல்லப்பட்ட வசனங்கள். இதை எந்த முஸ்லிமாவது தவறாக பொருள் கொண்டால் அவருக்குஉண்மையான விளக்கத்தை எடுத்துக் கூற வேண்டும். அதை விடுத்து குர்ஆனை மாற்றுங்கள் என்பது சிறு பிள்ளைத்தனம். ஏற்கெனவே மாற்றிய பைபிளின் இன்றைய நிலை உங்களுக்கும் தெரியும் தானே! இறை வார்த்தையில் மனிதரின் கரம் எப்படி புக முடியும்?

//ஆனால் உலகின் வன்முறைகளுக்கு முஸ்லிம் அமைப்புகளும் பெரும் காரணமாக இருக்கின்றன. //

பாபர் மசூதி இடிப்புக்கு முன்னால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தில் ஈடுபட்டதை நம்மால் பார்க்க முடிந்ததா?

//ஆனால் பொட்டு வைப்பதும், பூச் சூடுவதும் நமது கலாச்சாரத்தில் ஒன்றாகும்.. அதனை தேவையே இல்லாமல் மாற்று என்பது முட்டாள் தான் .. ஏனெனில் சந்தனமிடுவதும், வேட்டிக் கட்டிக் கொள்வதும், பூச்சூடுவதும் கூட கேரள முஸ்லிமகளிடையே இருக்கத் தான் செய்கின்றது. //

வேட்டி கட்டுவதோ பூச்சூடிக் கொள்வதோ சேலைகட்டுவதோ பேண்ட அணிவதோ இஸ்லாமிய கருத்துகளுக்கு மாற்றமான ஒன்றல்ல. கைலி கட்டுவதும், தொப்பி அணிவதும் இஸ்லாமியர் அடையாளமாக பரவலாக ஆக்கி விட்டனர். தொப்பி இல்லாமல் தாராளமா பள்ளியில் சென்று தொழவும் செய்யலாம். கஃபாவில் நேரடி ஒளிபரப்பில் இதை நீங்களும் பார்க்கலாம்.

//அதே போல தொழில் உபகரணங்களை வணங்குவது தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒன்று. அதனை ஏளனம் செய்யவேண்டியதில்லை. //

நான் ஏளனம் செய்யவில்லை. அது அவர்களின் உரிமை. ஒரு முஸ்லிம் ஆயுத பூஜைக்கு கூப்பிட்டும் வரவில்லை என்று ஒருவர் உங்கள் பதிவில் கேட்டதால்தான், வராததற்கான நியாயத்தை விளக்கி பதில் அளித்தேன். இது போல் இயந்திரங்களை வணங்குவதை எந்த பகுத்தறிவாதி ஒத்துக் கொள்ள முடியும்? முதலில் இயந்திரங்களை வணங்கும் இந்த பழக்கத்திற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா?

// அப்போது தமிழர்கள் தமது கலாச்சாரங்களை இஸ்லாத்துக்காக விட்டுக் கொடுத்தே ஆகவேண்டிய சூழல் வரும் ... //

//ஆனால் தமிழர்களின் பல பழக்க வழக்கங்களுக்கு இஸ்லாமில் பல்வேறு இடையூறுக்கள் இருக்கின்றன... என்பது மறுக்க முடியாது உண்மைகள்.... !!!//

தீண்டாமை, சாதி ஒழிப்பு, கடவுள் கொள்கையில் ஒரு தெளிவு, மூடப்பழக்கங்கள் ஒழிதல் என்று பல நன்மைகள் ஒருவன் பெறும் போது பழைய கொள்கைகளில் சிலவற்றை விடுவது தவறல்லவே!

//நான் எழுதுவதால் யாரும் இங்கே மாறிவிடப் போவதில்லை.//

புரிந்து கொண்டால் சரி....

suvanappiriyan said...

நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

வருகை புரிந்து கருத்தை பதிந்த சகோ ஆஷிக், சகோ. வாஞ்சூர், சகோ அனானி, சகோ ஹபிப் முஹம்மது அனைவருக்கும் நன்றிகள்.

இன்று கனடாவில் புட்பால் மேட்சில் தனது அணி தோற்றதை கிரகிக்க முடியாமல் வழியில் வந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டது. பலருக்கு பலத்த காயம். இதை தொலைக்காட்சியில் பார்தது நான் பிரமித்து விட்டேன். இறை பக்தி அற்ற சமுதாயம் எங்கு செல்லும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

Unknown said...

// முடிவில் செய்தது அனைவரும் இந்துத்வ வாதிகள் என்பது நிரூபணமானதே!
//
ஹிந்துக்கள் தனக்குதானே பாம் வச்சுகிட்டு முஸ்லீம் மேல பழிய போடுறாங்க. ஆதாரத்தோடு கலக்கும் சுவனப்பிரியன்

saarvaakan said...

நண்பர் ஆசிக் அகமது,சுவன்ப் பிரியன்
1___________
பகுத்தறிந்து இறைவனை உண்ரலாம் என்பது இஸ்லாமின் படி அனுமதிக்கப் படாத செயல் என்றெண்ணுகிறேன்.இறைவன் நாடியவன் மட்டுமே நேர்வழியை அடைகிறான்.நர‌கத்திற்காக்வே கூட சிலரை[மனித,ஜின்] படைத்தைதாகவும் குரானில் கூறப் படுகின்றது.
******
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
*********
நான் தவறாக கூறுகின்றேன் என்றால் விளக்கவும்
_________
2
________
ஆசிக் அகமது பகுத்தறிந்து உணர்ந்தவர் என்றால் மதம்[குறைந்த பட்சம் கொளகை,தர்கா வழிபாட்டில் இருந்து சரியான மார்க்கம்] மாறி இஸ்லாமை ஏற்றது போல் தோன்றுகிறது.அதை பற்றி எப்படி பகுத்தறிந்தீர்கள்,உணர்ந்ததை பற்றி ஒரு பக்கத்திற்கு மிகாமல் ,தகுந்த சுட்டிகள்,வசன‌க் குறிப்போடு விளக்கவும்.

suvanappiriyan said...

சகோ. சார்வாகன்!

//1..இந்த ஜின் பற்றி பிற[மத] புத்தக்ங்கள் ஏதாவது கூறுகின்றனவா?.
2.ஜின்கள் பற்றி ஏதாவது அறிவியல் வழக்கம் போல் கூற இயலுமா?
3. ஜின்கள் இப்போதும் இருக்கின்றன,இவ்வுலகத்தில் மனிதர்களோடு வாழ்கின்றன.இவற்றை உணர முடியுமா?.இவ்வசனம் உணர முடியும் என்று கூறுகிறதா?
ஜின்களுக்கும் இறைத் தூதரா?//

மனிதர்களையும் - ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

மனிதர்களுக்கு முன்பே ஜின் இனம் படைக்கப்பட்டு விட்டது
அவர்கள் மலக்குகளுடனே இருந்துள்ளார்கள்.
ஷெய்த்தான் - இப்லீஸ் போன்ற தீய சக்திகள் அனைத்தும் ஜின் இனத்தை சார்ந்தவையாகும்.
ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும்.
ஆதம் ஹவ்வா இருவருடனும் சேர்ந்து இவர்கள் பூமிக்கு இறங்குகிறார்கள்.
இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்துக் கொண்டும் இருக்கின்றன.
அவர்களுக்கும் இறைத்தூதர்கள் உள்ளனர்

(மறுமை நாளில் இறைவன் ஜின் - மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் - மனித கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா...என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:130)

ஜின் கூட்டத்தாரே உங்களிலிருந்தே உங்களுக்கு தூதர் வந்துள்ளார் என்று இறைவன் கூறுவதிலிருந்து ஜின்களுக்கு ஜின் இனத்திலிருந்தே தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை விளங்கலாம். ஆனாலும் இவர்கள் மனித தூதர்கள் சிலரிடமும் அவர்கள் கொண்டுவந்த வேதத்திலும் பாடம் கற்றுள்ளார்கள்.
இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் - வேதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்தே மனித சமூகம் போன்று ஜின் இனமும் ஒரு பெரிய சமூகமாக ஆண் - பெண், சந்ததி பெருக்கம், பிறப்பு வாழ்வு, இறப்பு என்று மனித இயல்பில் பெரும் பகுதி கொடுக்கப்பட்டவை ஹராம் - ஹலாலுக்கு உட்படுத்தப்பட்டவை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

(நபியே) இந்தக் குர்ஆனை செவியேற்பதற்காக ஜின்களிலிருந்து சிலரை நாம் உம்மிடம் திருப்பியதும் அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள் என்று(உடனிருந்தவர்களிடம்) சொன்னார்கள். குர்ஆன் படிப்பது முடிந்ததும் தம் சமூகத்தாரிடம் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். (அல் குர்ஆன் 46:29)

(ஜின்கள்) கூறினார்கள் 'எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் - நேரான மார்க்கத்தின் பக்கமும் வழிக்காட்டுகிறது. (அல் குர்ஆன் 46:30)

இது நபி(ஸல்) தாயிபிலிருந்து திரும்பும் வழியில் குர்ஆனை ஓதி வரும் போது ஜின்கள் செவியேற்று அவர்களை விசுவாசித்த சம்பவமாகும். இந்த சந்தர்பத்தில் ஜின்கள் தம்மிடம் வந்ததையோ - குர்ஆனை சேவியேற்று சென்றதையோ நபி(ஸல்) அறியவில்லை. பின்னர் இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். இதை72 வது அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்திலிருந்து அறியலாம். மேலும் அந்த அத்தியாயத்தில் இறைவனுக்கு இணை கற்பித்து முஷ்ரிக்குகளாகவும் - காபிர்களாகவும் இருக்கும் ஜின்கள் பற்றியும் படைத்த ஒரே இறைவனுக்கு கட்டுப்பட்டு ஏகத்துவத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழும் ஜின்கள் பற்றிய விபரமும் கூறப்பட்டுள்ளது.
46:30 வது வசனத்தில் மூஸாவிற்கு பிறகு இது இறக்கப்பட்டுள்ளது என்ற ஜின்களின் கூற்றிலிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள முக்கிய நபிமார்களையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் ஜின்கள் அறிந்திருந்தனர் என்பதையும் அவற்றின் மீது நல்ல ஜின்கள் விசுவாசம் கொண்டிருக்கக் கூடும் என்பதையும் விளங்கலாம்.

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!
//ஹிந்துக்கள் தனக்குதானே பாம் வச்சுகிட்டு முஸ்லீம் மேல பழிய போடுறாங்க. ஆதாரத்தோடு கலக்கும் சுவனப்பிரியன்//

புதுடில்லி : ""மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை தலைவராக இருந்த ஹேமந்த் கர்காரே, தான் கொல்லப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன், என்னுடன் போனில் பேசினார். அப்போது, இந்துத்வா அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்தார்,'' என, காங்., பொதுச்செயலர் திக்விஜய் சிங் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை தலைவராக இருந்தவர் ஹேமந்த் கர்காரே. மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் இந்துத்வா அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, முக்கிய குற்றவாளிகளை கைது செய்தார்.இதன்பின், 2008ல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஹேமந்த் கர்காரே குறித்த பரபரப்பான தகவல்களை காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.


அவர் கூறியதாவது:மும்பை தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன், ஹேமந்த் கர்காரே போனில் என்னுடன் பேசினார். அப்போது அவர் சில அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார். மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்துத்வா அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்ததில் இருந்து, இந்துத்வா அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் அச்சம் தெரிவித்தார்.இது தொடர்பாக, சிலரிடம் இருந்து தனக்கு டெலிபோனில் மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் கூறினார். இருந்தாலும், மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.மாலேகான் குண்டுவெடிப்பில் தனது விசாரணையின் நேர்மை குறித்து, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.,வின் சில முக்கிய தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். என்னுடன் டெலிபோனில் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலேயே, அவர் கொல்லப்பட்டதாக தகவல் வந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார். திக்விஜய் சிங்கின் இந்த பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

-தின மலர் 11-12-2010

குண்டுவைக்க ரூ. 10 லட்சம் நிதி:

இதற்கிடையே, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம், மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணமான இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் பொருளாளர் அஜய் ரஹிர்கர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்காக பாரத் அமைப்பிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ரஹிர்கர், 2 அறைகளை புக் செய்துள்ளார். இந்த அறைகள் ரஹிர்கர், எச்.வி. ஆப்தே, கர்னல் பி.எஸ். ராவ் பல்வந்த் ஆகியோரது பெயர்களில் புக் ஆகியுள்ளது. இதை ஹோட்டல் ஊழியரான கெளரவ் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

சிங்காகாட்டில் ஆயுதப் பயிற்சி:

மேலும், இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு சிங்காகாட் என்ற இடத்தில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராகேஷ் தாவ்டே கூறியுள்ளார்.

இவருக்கும், நான்டெட் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், சிபிஐ தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை, ராம்ஜி கலஸ்கரே என்பவர்தான் தனது மெக்கானிக் ஷாப்புக்கு கொண்டு வந்ததாக, இந்தூரைச் சேர்ந்த மெக்கானிக் கடை உரிமையாளரான ஜிதேந்திரா சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.

கலஸ்கரே-டேங்களேவுக்கு வலைவீச்சு:

இந்த கலஸ்கரே தற்போது தலைமறைவாக உள்ளார். மேலும் குண்டுகளை வைத்ததாக கருதப்படும் சந்தீப் டேங்களே என்பவரும் தலைமறைவாக உள்ளார். இவர்கள் இருவரும் இந்த வழக்கில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் இவர்களைப் பிடிக்க தற்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கர்கரே இல்லாவிட்டாலும் கூட அவர் ஏற்படுத்தி வைத்து விட்டுப் போயுள்ள வேகத்தைப் பிடித்துக் கொண்டு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் மாலேகான் வழக்கில் மீண்டும் மும்முரமாகியுள்ளனர்.

suvanappiriyan said...

மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார்.

கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர் கைதாகக் காரணமாக இருந்தார்.

இதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.

இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

அதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை.

அதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்:

இதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார்.

தீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

தீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த்.

சங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்:

இதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார். அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டடான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.

Unknown said...

//மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டடான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.
//
அப்போ பாகிஸ்தான்ல நடக்குற வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்துத்துவா தான் காரணமா?
இதுவரை இஸ்லாத்தல் இறந்த மக்கள் கோடிக்கணக்கில் தெரியுமா?

saarvaakan said...

நண்பர் சுவனப் பிரியன்,
/தினமலர்க் காரருக்கும் சார்வாகனுக்கும் வேண்டுமானால் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கலாம். சுவனப் பிரியனான எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது தான் அல்லாஹ், இறைவன், கர்த்தர், கடவுள் என்ற பெயர்களுடைய அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய ஒருவன். இத்தனை சான்றுகளையும் ஒரு சராசரி அறிவுள்ள மனிதனே கூட உணர்ந்து கொள்ள முடியும்./
நான் உங்கள் புரிதல்களை ஆய்வு செய்கிறேன்.குழப்பம் கிடையாது.
___1___________
இறைவனை உணர்தல் என்றால் என்ன?

அதாவது இந்த அத்தாட்சிகளை எல்லாம் பார்த்து ,பிற [மத அறிவியல்] விள‌க்கங்களை விட ,குரான்(வஹாபி கொள்கையாக்கம்),சுன்னி பிரிவு ஹதிதுகள் மட்டும் சொல்லும் விளக்க்ங்கள் சரியாக உங்களுக்கு படுவதை இறைவனை உணர்தல் என்று கூறுகிறீர்கள் .சரியா?

***************

2_
______
குரானும் இதைத்தான் கூறுகின்றது. இந்த அத்தாட்சிகளை மட்டும் பார்த்து நம்புங்கள்.நம்பினால் சுவனம்,நம்பாவிட்டால் நரகம்.


இருந்தாலும் சிலரை நரகத்திற்கே படைத்தோம் எனில் ,அவர்கள் நினைத்தாலும் உங்கள் கொள்கையை ஏற்கமுடியாது என்றுதானே அர்த்தம்.அப்போது உங்களுக்கும் மறுமை நாள் வரை நீங்கள் நம்பிக்கையாளரா இல்லையா என்பது தெரியாது. எந்த இஸ்லாமிய பிரிவு சரியான‌து என்பதும் குழப்பம் இல்லையா!!!!!!!!!!!!!!
_____________
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

4:123. (முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான்.
______

suvanappiriyan said...

சார்வாகன்!

//அதாவது இந்த அத்தாட்சிகளை எல்லாம் பார்த்து ,பிற [மத அறிவியல்] விள‌க்கங்களை விட ,குரான்(வஹாபி கொள்கையாக்கம்),சுன்னி பிரிவு ஹதிதுகள் மட்டும் சொல்லும் விளக்க்ங்கள் சரியாக உங்களுக்கு படுவதை இறைவனை உணர்தல் என்று கூறுகிறீர்கள் .சரியா?//

திரு மூலர் மந்திரம், மற்றும் நான்கு வேதங்கள், திருக்குறள் என்று நம்மிடமும்(தமிழர்கள்) இறை தேடல் அந்த காலத்திலேயே சிறந்து விளங்கியுள்ளது. இவை அனைத்திலும் இறைவனின் கருத்துகளும் ஆங்காங்கே தென்படுவதைக் காணலாம். எவை எல்லாம் மனிதனின் கருத்துகள் எவை எல்லாம் இறைவனின் கருத்துகள் என்று துரதிர்ஷ்டவசமாக நம்மால் பிரித்தறிய முடியவில்லை. அதுதான் பிரச்னையே!

//இருந்தாலும் சிலரை நரகத்திற்கே படைத்தோம் எனில் ,அவர்கள் நினைத்தாலும் உங்கள் கொள்கையை ஏற்கமுடியாது என்றுதானே அர்த்தம்.அப்போது உங்களுக்கும் மறுமை நாள் வரை நீங்கள் நம்பிக்கையாளரா இல்லையா என்பது தெரியாது. எந்த இஸ்லாமிய பிரிவு சரியான‌து என்பதும் குழப்பம் இல்லையா!!!!!!!!!!!!!!//

நீங்கள் கேட்பது விதியைப் பற்றி! இதைப் பற்றி அதிகம் சர்ச்சை செய்ய வேண்டாம் என்று முகமது நபி தடுத்துள்ளதால் முன்பு நான் கொடுத்த ஒரு சிறிய விளக்கத்தை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

'தன்னிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை இறைவன் மாற்ற மாட்டான்'
-குர்ஆன் 13:11
மனிதர்கள் முயற்ச்சிக்க வேண்டும். அந்த முயற்ச்சியின் பலனாக இறைவனும் அந்த மக்ளை நேர்வழியில் செலுத்துகிறான். அதாவது தூண்டினால் துணை செய்வேன் என்கிறான் இறைவன்.

விதி என்ற ஒன்று இல்லாவிட்டால் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது இறைவனுக்கு தெரியாது என்று ஆகிவிடும். நாளை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியாத ஒருவன் எப்படி என் இறைவனாக இருக்க முடியும்? விதி இல்லை என்று சொன்னாலும் விபரீதம். விதி இருக்கிறது என்று சொன்னாலும் விபரீதம்.

விதி என்ற ஒன்றுக்கு மட்டும் எப்படி விளக்கம் அளித்தாலும் குழப்பமே வந்து நிற்கும். அதற்குரிய அறிவை இறைவன் நமக்கு கொடுக்கவில்லை.

'உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதில் நீங்கள் பூரித்து போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான்.'-குர்ஆன் 57:23

நடந்து விட்ட காரியங்களுக்குத்தான் விதியை நினைத்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். இனி வருங்காலங்களில் நம் விதி எது என்று நமக்கு தெரியாத காரணத்தால் விதி இல்லாதது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நாளை ஒரு விபத்தில் எனது காலும் கையும் வெட்டப்படும் என்பது எனக்கு முன்பே தெரியும் என்று வைத்துக் கொள்வோம். இன்று இரவு என்னால் நிம்மதியாக தூங்க முடியுமா? எனவே விதியைப் பற்றிய ஒரு தெளிவின்மை மனிதர்களுக்கு நன்மையே தருகிறது. எனவே தான் உலக கணக்கெடுப்பில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் முஸ்லிம்களிடம் மிக மிக கம்மியாக இருக்கிறது. எது நடந்தாலும் இறை விதிப்படியே என்று முஸ்லிம்கள் நம்புவதுதான் இதன் காரணம்.

'இறைவன் நாடியதை அழிப்பான்: நாடியதை அழிக்காது வைப்பான்: அவனிடமே தாய் ஏடு உள்ளது.'-குர்ஆன் 13:40

ஒரு மனிதன் வருங்காலத்தில் தான் நல்லவனாக வாழ வேண்டும், தனக்கு சொர்க்கத்தில் இறப்புக்குப் பிறகு வாழ்வு வேண்டும் என்றும் நற் கருமங்கள் செய்வதாகவும் இறைவனிடம் மனமுருகி பிரார்த்தித்தால், அந்த பிரார்த்தனையை ஏற்று தான் எழுதிய விதியை தானே மாற்றுகிறான் இறைவன்.

இதையேதான் வள்ளுவரும்

'ஆகூழால் தோன்றும் அசைவன்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி'-குறள் 371 என்கிறார்.

செல்வம் வந்து சேர வேண்டிய நல்ல வேளை வந்து விட்டால் ஒருவனிடம் ஊக்கமும் வாடா முயற்சியும் வந்து விடும். போக வேண்டிய வேளை வந்து விட்டால் சோம்பல் வந்து செயலிழக்கச் செய்து விடும். எனவே நமது எண்ணத்தில் நமக்கு நல்ல விதியாக வருங்காலம் வர வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

விதியை உங்கள் வாழ்க்கையில் விலக்க நினைத்தாலும் உங்களையும் மீறி அநத விதி உங்கள் முன்னால் வந்து நிற்கும் என்று குறள் 380ல் வள்ளுவர் விளக்குகிறார். இதில் மேலும் விளக்கப் புகுந்தால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் வந்து விடுவோம். :-(

saarvaakan said...

நான் கேட்பது விதி பற்றி அல்ல இறைவனை உணர்தலை இஸ்லாமின் படி வரையறுங்கள்.அவ்வளவுதான்.இங்கே ஒருவர் உணர்ந்த்தாக கூறியது எப்படி என்பது பற்றித்தான்.

//அதாவது இந்த அத்தாட்சிகளை எல்லாம் பார்த்து ,பிற [மத அறிவியல்] விள‌க்கங்களை விட ,குரான்(வஹாபி கொள்கையாக்கம்),சுன்னி பிரிவு ஹதிதுகள் மட்டும் சொல்லும் விளக்க்ங்கள் சரியாக உங்களுக்கு படுவதை இறைவனை உணர்தல் என்று கூறுகிறீர்கள் .சரியா?//
yes or no

suvanappiriyan said...

YES!

RAZIN ABDUL RAHMAN said...

@ jaisankar jaganathan

//ஹிந்துக்கள் தனக்குதானே பாம் வச்சுகிட்டு முஸ்லீம் மேல பழிய போடுறாங்க. ஆதாரத்தோடு கலக்கும் சுவனப்பிரியன்//

விரிவான பதில் சுவனப்பிரியன் அவர்களால் கொடுக்கப்பட்டது

//அப்போ பாகிஸ்தான்ல நடக்குற வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்துத்துவா தான் காரணமா?
இதுவரை இஸ்லாத்தல் இறந்த மக்கள் கோடிக்கணக்கில் தெரியுமா?//

மிஸ்டர் வெட்டி(அப்டித்தான் அவரது வலைதளத்துக்கு பேர் வச்சிருக்கார்)..

உங்க புத்தியும் சத்தும் இவ்ளோதானா???உங்களுடைய இந்த கேள்வி விட்டு கேள்வி தாவும் பண்பு?? மிகுந்த அயர்ச்சியை தருகிறது..

உங்களைப் போன்றவர்களுக்கு மண்ணும் தெரிவதில்லை..ஆங்காங்கு அவனவன் சொல்வதை கேட்டு இங்கே வந்து கேள்வி கேக்கவேண்டியது...

அதுக்கு பதில் வந்துவிட்டால்..அதை அப்படியே அத்துவிட்டுவிட்டு,இதை சொல்லிட்டியா அப்போ இதுக்கு என்ன சொல்ர...இதையும் சொல்லிட்டியா ...அப்போ இது??? இது??? ந்னு போய்ட்டே இருப்பீங்களே தவிர..

ஒரு கேள்வி கேட்டோமே,அதுக்கு முறையா பதில் கெடச்சதே...அதை ஏற்றுக்கொள்வது அறிவுடைமையாச்சே அதை செய்யனுமேன்னு உங்கள்களுக்கு தோன்றுவதே இல்லை..

ஏன்னா கேள்வி கேக்குறது..தெரிஞ்சிக்கிறதுக்காக இல்லை...வெற்று விமர்சனங்களுக்காகவும்,,,ஆங்காங்கே..தோன்றியுள்ள சிரங்கின் விளைவாலும்தான் என்பது உங்களது செய்கையில் தெளிவு...

அன்புடன்
ரஜின்

suvanappiriyan said...

//அதுக்கு பதில் வந்துவிட்டால்..அதை அப்படியே அத்துவிட்டுவிட்டு,இதை சொல்லிட்டியா அப்போ இதுக்கு என்ன சொல்ர...இதையும் சொல்லிட்டியா ...அப்போ இது??? இது??? ந்னு போய்ட்டே இருப்பீங்களே தவிர..//

சகோ.ரஜின்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

//முதலில் தமிழக கலாசாரம், இந்திய கலாசாரம் என்ன என்பதை வரையறுத்து கூறும்படி கேட்டிருந்தேன்.//
நீங்களும் ஒரு இந்தியர் மற்றும் தமிழர் தானே, சொந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் பராம்பரியம் என்பது இயற்கையாகவே தெரிய வேண்டும். சொந்த மண்ணின் கலாச்சாரம் பாரம்பரியம் என்ன என்பது தெரியாத அளவுக்கு இந்த மதம் உங்களை ஆக்கிரமித்து இருக்கிறது என்றால் உங்களை போன்றவர்களிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை.

suvanappiriyan said...

//நீங்களும் ஒரு இந்தியர் மற்றும் தமிழர் தானே, சொந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் பராம்பரியம் என்பது இயற்கையாகவே தெரிய வேண்டும். சொந்த மண்ணின் கலாச்சாரம் பாரம்பரியம் என்ன என்பது தெரியாத அளவுக்கு இந்த மதம் உங்களை ஆக்கிரமித்து இருக்கிறது என்றால் உங்களை போன்றவர்களிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை.//

தெரியாமலெல்லாம் இல்லை. நன்கு தெரிந்து விளங்கியதால்தான் நான் இன்று ஒரு முஸ்லிமாக உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். தமிழர்களின் பழக்கவழக்கங்களை இக்பால் செல்வன் மூலமாகவே வெளி கொண்டு வர முயற்ச்சித்தேன். ஏனெனில் இஸ்லாம் வளர்ந்தால் இந்திய மற்றும் தமிழர் கலாசாரங்கள் அழிய நேரிடும் என்று ரொம்பவும் வருத்தப்பட்டு இக்பால் செல்வன் பதிவிட்டிருந்ததாலேயே அத்தகைய கேள்வியை நான் கேட்டேன்.

இந்திய தமிழக கலாசாரங்கள்:

1.குலக்கல்வி முறை 2. தீண்டாமை. 3. உடன்கட்டை ஏறுதல். 4. தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதியாமை 5. தேவதாசி முறை 6. பொட்டு கட்டி கோவிலுக்கு நேர்ந்து விடுதல் 7..... என்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இஸ்லாம் வந்து இவற்றை எல்லாம் மாற்றினால் தமிழர்கள் நாம் பெருமைதானே பட வேண்டும்.

சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்:

கல்வியறிவிலும், சமூக உரிமைகளிலும் முதன்மை மாநிலம் எனப் பெயர் வாங்கிய கேரளத்தில் ஒரு அரசு அதிகாரி ஓய்வுப் பெற்றப் பின் அவர் பயன்படுத்திய பொருட்களையும், காரினையும், அந்த அலுவலகம் முழுதையும் சாணம் தெளித்து ” சுத்தப்படுத்தி ” உள்ளனர். இச் செயலை அறிந்த 55 வயதான ஓய்வுப் பெற்ற அதிகாரி ஏ வி ராமகிருட்ணன் கேரள மனித உரிமை கமிசனிடம் புகார் செய்துள்ளார்.

இந்த சுத்தப்படுத்துதல் வழக்கமான ஒரு நடைமுறையோ, அரசாங்க நடைமுறையோ இல்லை. ஏ வி ராமகிருட்ணன் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். பொதுவாக அவரது கண்டிப்பான நடைமுறைகளும், லஞ்சம் வாங்குவோருக்கு எதிராக மிகவும் கண்டிப்பாக நடந்து வந்துள்ள ஒரு நேர்மையான அதிகாரி ஆவார். இதனால் வெறுப்புற்ற பிற ஆதிக்கச் சாதி அலுவலகர்கள் இப்படியான ஒரு சுத்தப்படுத்தும் இந்து மத சடங்கை நடத்தி தமது சாதி வெறியினைக் காட்டியுள்ளனர்.

என்டிடிவி தொலைக்காட்சிக்குக் கொடுத்த செவ்வியில் ” இது என்னைப் போன்ற தனிமனிதனுக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல, இது நான் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையே அவமானப்படுத்தும் செயலாகும், இதை இப்படியே விட்டுவிடப் போவதில்லை, ஒரு முடிவு எடுக்கும் வரை ஓயமாட்டேன் ” என்றுக் கூறினார் ராமகிருட்ணன்.
மனித உரிமை ஆணையம் முழு விவரத்தையும் மே – 7 க்குள் அந்த அலுவலகம் சமர்பிக்கும் படி உத்தரவு அனுப்பி உள்ளது.

மாட்டுச் சாணத்துக்கு கொடுக்கப்பட்ட மதிப்பை சக மனிதனுக்கு கொடுக்க முடியாத இந்த ஈனப் பிறவிகளை என்ன சொல்வது. மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் பக்குவம் இந்நாட்டில் என்று வருமோ: அன்று தான் இந்திய நாட்டுக்கு முழு சுதந்திர நாளாகும்.

அன்றுதான் நமது கலாசாரத்தைப் பற்றிய பெருமையையும் பேச முடியும்.

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாம் எதிர்ப்பிலே வளர்ந்தது அருமையான பதிவு அந்த காலத்து மக்கா காபிர் களின் எதிர்ப்பை நினைத்து பார்த்தால் இப்போது ஒன்றுமே இல்லை மக்கா காபிர் களின் எதிர்ப்பையே தவிடு பொடியாக்கி வீறுகொண்டு வளர்ந்த இஸ்லாம் ஒருநாளில் கண்டிப்பாக தவறான புரிதல்களை களையும் இது சத்திய மார்க்கம் இதற்கு சொந்தக்காரன் எல்லாம் வல்ல இறைவன்.உங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்

rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாம் எதிர்ப்பிலே வளர்ந்தது அருமையான பதிவு அந்த காலத்து மக்கா காபிர் களின் எதிர்ப்பை நினைத்து பார்த்தால் இப்போது ஒன்றுமே இல்லை மக்கா காபிர் களின் எதிர்ப்பையே தவிடு பொடியாக்கி வீறுகொண்டு வளர்ந்த இஸ்லாம் ஒருநாளில் கண்டிப்பாக தவறான புரிதல்களை களையும் இது சத்திய மார்க்கம் இதற்கு சொந்தக்காரன் எல்லாம் வல்ல இறைவன்.உங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்