Followers

Wednesday, June 22, 2011

குழந்தைத் திருமணமும் சில அறியாமைகளும்!


//இஸ்லாமிய மத நிறுவனரான முகமதுவும் கூட தனது சகோதர முறையினன் ஆன அபு பக்கரின் மகளை சிறுக் குழந்தை ( 6 வயதில் ) என்றும் எண்ணாமல் திருமணம் செய்தக் குறிப்புகளையும் ( Volume 7, Book 62, Number 64:, Volume 7, Book 62, Number 15, Sahih Bukhari ). அதே போல மகன் முறையினன் ஆன சயதின் மனைவியும், மருமகளான ஜைனாப்பை முகமது மணந்துள்ளார் ( Sura al-Ahzab 33:37 ). இதுவும் ஒருவகையில் INCEST உறவு மனநிலையின் பிரதிப்பலிப்பே ஆகும். சொல்லப் போனால் அந்தக் கால அரபு சமூகத்தில் மருமகள் முறையினளை மணப்பது தடுக்கப்பட்டு இருந்த போதிலும், ஆங்காங்கே INCEST உறவுகள் நடந்தே வந்துள்ளன அதற்கு ஒரு உதாரணம் தான் முகமதுவின் செயல்பாடுகள் கூட.//

சமீபத்தில் ஒரு பதிவில் அல்ல இரண்டு பதிவில் முகமது நபி சகோதர உறவான அபுபக்கரின் மகள் ஆயிஷாவை மணந்தது INCEST போன்ற தகாத உறவு முறையே என்று ஒரு பதிவர் பதிவிட்டிருந்தார். இந்த மறுப்பு அவருக்கில்லை. அவர் பதிவை படிப்பவர்களுக்காக!

முகமது நபி வாழ்ந்த காலத்தில் 6 வயது 9 வயது போன்ற பெண்களை மணப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் அவர்கள் பூப்பெய்த உடன்தான் கணவனின் வீட்டுக்கு குடும்பம் நடத்த செல்வார்கள். ஏன் இன்றைய இந்தியாவில் இன்றும் கூட இந்த திருமணங்கள் பல கிராமங்களில் சர்வசாதாரணமாக இந்த விஞ்ஞான யுகத்திலும் நடந்து வருகிறது.

நமது முண்டாசு கவிஞன் பாரதியாரும் 6 வயது பெண்ணை மணந்தவர்தான். பெண் உரிமைக்கு பாடுபடும் ஆர்வலர்கள் இதை கண்டு கொள்ள மாட்டார்கள்.

கலைஞர் முரசொலியில் 'உடன் பிறப்பே' என்று தினமும் கடிதம் எழுதுகிறார். உடன் திமுக தொண்டர்களை எல்லாம் 'ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கும் பங்கிருக்கு' என்று சி.பி.ஐ கைது செய்தால் எந்த அளவு அறிவீனமோ அதைத்தான் சம்பந்தப்பட்ட பதிவரும் செய்திருக்கிறார்.

முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள் என்று திருக்குர்ஆன் (003:103, 049:010) வசனங்கள் கூறுகிறது. இனம், நிறம், மொழி, நாடு என்று பகுப்பில்லாமல் முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மார்க்க சகோதரர்கள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

இந்த சகோதரத்துவம் இரத்தம் பந்தம், அல்லது பால்குடி சம்பந்தமான உறவு முறைகள் அல்ல. ஒரே மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். இஸ்லாம் யார் யாருக்கிடையில் திருமண உறவை தடை செய்திருக்கிறதோ அந்த உறவுகள் தவிர, மார்க்க சகோதரர்கள் என்பது திருமணத்திற்கு ஒரு தடை இல்லை. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு பெண் கொடுப்பதோ, பெண் எடுப்பதோ தடை செய்யப்பட்டதல்ல. என்பதை புரிந்து கொண்டிருந்தால், அறியாமல் தவறாக விளங்கிய இரு நபிமொழிகளிலும் ஏற்படுத்திய முரண்பாடு அடிபட்டுப் போகும். நண்பர் இரண்டு நபிமொழிகளை புரிவதில் இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த நபிமொழிகளைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) ''நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள். (புகாரி,5081)

நபி (ஸல்) அவர்கள், தமது தோழர் அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களை பெண் கேட்கிறார்கள். மார்க்க ரீதியாக சகோதரர்களாகி விட்டதால் ''நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, நபி (ஸல்) அவர்களும், அபூ பக்ர் (ரலி) அவர்களும் மார்க்க சகோதரர்களாகி விட்டதால் தமது மகள் ஆயிஷாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது என்று கருதியிருந்த அபூ பக்ர் (ரலி) அவர்கள் இங்கே தமது கருத்தைத் தெரிவிக்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள்'' என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள், அபூ பக்ர் (ரலி) அவர்கள் இருவருக்கும் இரத்த பந்த உறவு இல்லை. பால்குடி உறவும் இல்லை என்பதால் மார்க்க சகோதரர்கள் என்ற சகோதரத்துவம் திருமண உறவுக்குத் தடை இல்லை என்று அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். இதிலிருந்து ஒரு மார்க்க சட்ட விளக்கம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கிறது.

இனி அன்னை ஜைதைப் பற்றிய அவதூறுக்கு வருவோம்.

அவர்களை அவர்களின் தந்தையர் பெயராலே குறிப்பிடுங்கள்’ (அல்குர்ஆன் 33:5) என்ற வசனம் அருளப்படும் வரை முஹம்மதின் மகன் ஜைத்என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம்என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் செய்தி புஹாரி, முஸ்லீம் என்ற நபிமொழிக் கிரந்தங்களில் காணப்படுகின்றது.

முதலில் ஜைது என்பவர் முகமது நபியின் சொந்த மகன் அல்ல. அவர் அன்னை கதீஜாவால் அடிமையாக நபியவர்களிடத்தில் வருகிறார். அடிமையாய் இருந்த அவரை தனது வளர்ப்பு மகனாக அறிவிக்கிறார் முகமது நபி. அதன் பிறகு தனது மாமி மகளை ஜைதுக்கு திருமணம் முடித்து வைக்கிறார். ஒரு வருடத்துக்குப் பிறகு மனத்தாங்கலால் இருவரும் பிரிகின்றனர். அதன் பிறகே தனது மாமி மகளை திருமணம் செய்கிறார் முகமது நபி. மருமகளை திருமணம் செய்ததாக ஒரு பொய்யை தனது பதிவில் பதிக்கிறார் சம்பந்தப்பட்ட பதிவர்.

என்னதான் ஒருவனை தத்து எடுத்து கொண்டாலும் பெற்ற மகனுக்கு ஈடாக முடியாது என்ற சட்டத்தை மனிதர்களுக்கு விளக்கும் முகமாகவே இறைவன் இத்தகைய சம்பவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறான்.

எல்லாவற்றிலும் அரைகுறையாக இருந்து கொண்டு தன்னை மெத்த படித்த அறிவு ஜீவியாக கருதிக் கொண்டு பதிவு எழுதுபவரை என்னவென்பது.

ஓரினப்புணர்ச்சி ஒரு மனிதனின் விருப்பம் என்பதால் அதை குறை சொல்லக் கூடாதாம். மருத்துவமும் மறுக்கவில்லையாம். சொல்கிறார். எய்ட்ஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் பரவ முக்கிய காரணமே ஓரினப் புணர்ச்சி என்கிறது மருத்துவம்.

//நெருங்கிய உறவோடு உறவாடுதல் என்பதை கடவுள் தடுத்தார் எனக் கூறுவோருக்கு கடவுள் ஏன் அதனைப் படைத்தார் என்பதற்கு பதில் தெரியாது.//

//திரு. bat-ன் கேள்விகளுக்கு பதில்கள் :

நாத்திகர்கள் ஓரினச் சேர்க்கையை ஏன் ஏற்கின்றார்கள் ?

***
ஏனெனில் அறிவியல் அதனை இயற்கைப் பாலுணர்வு எனக் கூறிவிட்டது.

நாத்திகர்கள் தகாப் பாலுறைவை ஏன் ஏற்பதில்லை ?

***
ஏனெனில் அறிவியல் அதனால் பிறக்கும் குழந்தைகள் நோய்நொடியோடு பிறக்கும் எனக் கூறிவிட்டது. //

திருடுவதும் கொலை செய்வதும் தவறுதான். இவர்களை ஏன் கடவுள் படைத்தார் என்று கேட்டால் அவரின் அறிவின் முதிர்ச்சியை எப்படி மதிப்பீர்கள்?

அடுத்து தகப்பன் மகளிடம் உறவு வைப்பது, அண்ணன் தங்கையிடம் உறவு வைப்பது போன்ற தகாத உறவுகளில் குழந்தை குறையுடன் பிறக்கும் என்பதால் அறிவியல் தடுக்கிறது. எனவே அதை நானும் தடுக்கிறேன் என்கிறார். குறையுள்ள குழந்தைகள் பிறக்காமல் இருந்தால் இது போன்ற தகாத உறவுகளையும் ஆதரிப்பார் போல் இருக்கிறது. இவருக்கு அறிவியல் மதம். அறிவியல் அறிஞர்கள் தூதர்கள். அவ்வளவே!

//அமெரிக்காவில் ஒன்றுவிட்ட சகோதரங்கள் ( மாமன், அத்தையின் பிள்ளைகள் உட்பட ) மணந்துக் கொள்வதை சட்டம் தடை செய்துள்ளது. //

இடையில் இப்படி ஒரு காமெடி! யாரும் யாருடன் வேண்டுமானாலும் சேரலாம் என்று தறி கெட்டு செல்லும் ஒரு சமூகத்தில் நெருங்கிய உறவுகளுக்கும் நடக்கும் சட்ட பூர்வ திருமணத்துக்கு தடையாம்!

//ஆனால் உண்மையில் மதங்களோ, சட்டங்களோ இவற்றைத் தடை செய்யாவிட்டால் என்னவாகும் என யோசித்துப் பார்த்தேன்.

பதில் என்னத் தெரியுமா ? ஒன்றும் ஆகாது. இவற்றைத் தடை செய்யாவிட்டாலும் 99 சதவீதமான மனிதர்கள் இந்த மாதிரி உறவுகளில் ஈடுபட மாட்டார்கள். இயற்கையிலேயே இப்படியான உறவில் ஈடுபடக் கூடாது என்பது நமக்குள் பதிவாகியுள்ளது.//-Aaronan

காலங்காலமாக ஒரு பழக்கம் இருந்து வந்தால் அது மரபு வழியாக பல தலமுறைக்கும் கடத்தப்படும். உலகில் உள்ள வேதங்கள் அனைத்துக்கும் மூலம் ஒருவனே என்பதால் இந்த கருத்துக்கள் பல தலைமுறைகளாக வழி வழியாக நமது முன்னோர்களால் பின்பற்றப்படுகிறது. இந்த எண்ணங்களுக்கும் மூலம் வேத நூல்களே!


சமூகத்தில் எங்கெல்லாம் வக்கிரமான எண்ணங்களும் செயல்களும் நடைபெறுகிறதோ அதை எல்லாம் எடுத்துப் போட்டு நீங்களும் இதே போன்று கெட்டு குட்டிச்சுவராகுங்கள் என்று வரிந்து கட்டிக் கொண்டு இந்த அதி மேதாவிகள்அதனை ஆதரித்து பதிவு எழுதிக் கொண்டிருக்கிறர்ர்கள். பாவம். அவர்கள் வழியிலேயே விட்டு விடுவோம்.

18 comments:

Rabbani said...

எல்லாவற்றிலும் அரைகுறையாக இருந்து கொண்டு தன்னை மெத்த படித்த அறிவு ஜீவியாக கருதிக் கொண்டு பதிவு எழுதுபவரை என்னவென்பது
...................................
அஸ்ஸலாமு அலைக்கும்
சரியான சம்மெட்டி அடி சகோதரரே
எதோ எனது கேள்விக்கு பதில் என்பதால் நான் அங்கு சென்றேன் இபோது புரிகிறது அவர் களின் உண்மை முகம் எல்லாமே அரை குறை நிறைய பொய் ஆகையால் நான் அவர்களிடம் விவாதம் செய்வதை நிறுத்தி விட்டேன். இங்கு நான் கூட உங்களை சகோதரர் என்கிறேன் இதை இந்த அரை குறைகள் நாம் கூடபிறந்த அண்ணன் தம்பி என்று நினைப்பார்கள் போல

Rabbani said...

இதோ அந்த கருத்து பரிமாற்றங்கள் உங்களின் வாசகர்களுக்காக
bat said
நண்பரே நீங்கள் அறிவியலை அணுகும் விதம் எனக்கு புல்லரிக்கிறது நிங்கள் ரொம்ப வளரனும் அதற்கு காம்ப்ளான் சாப்பிடனும் உதாரணமாக நமது உடலை எடுத்து கொள்வோம் ஒவ்வொரு உறுப்பும் அதனது வேலையே செய்வதினால் நாம் நல்ல மனிதனாக இருக்க முடியாது நல்லவனாக வாழ நல்ல நம்பிக்கைகள் நல்ல எண்ணம் நல்ல செய்கைகள் அவசியம் இந்த நல்ல நம்பிக்கைகள் நல்ல எண்ணம் நல்ல செய்கைகள் என்றால் என்ன என்பதை ஆழ மாக சிந்திக்கும் போது உங்களுக்கு உண்மை விளங்கும்

June 23, 2011 10:48 AM


இக்பால் செல்வன் said...
@ // அறிவியல் என்று சொல்லி திருப்பி திருப்பி பரிணாமம் பரிணாம கொள்கைகள் என்று குழப்ப வேண்டாம் //

சரி ! பரிணாமம் அறிவியல் இல்லையா ? இது புதுவிதக் கண்டுப்பிடிப்பாக இருக்குதே.. அப்போ எது அறிவியல் என விளக்கினால் .. உலக மகா மக்கள் அனைவரும் புரிந்துக் கொள்வார்கள் ...

// மனிதன் என்ற சமூக விலங்கு எவ்வித கடிவாழமும் இல்லாமல் இருந்தால் அவன் கண்டிப்பாக ஒரு மிக மிக கொடிய விலங்காக தான் இருப்பான் //

அப்படி அனைத்திலும் இருக்க மாட்டான் என நான் அடித்துக் கூறுகின்றேன் .... குறிப்பாக INCEST எடுத்துக் கொள்வோம் .. எந்த வித கடிவாளமும் அதனைத் தடுக்கவில்லை .. அது இயற்கையிலேயே பரிணாம வளர்ச்சியால் தடுக்கப்பட்டுவிட்டது ... இந்தக் கூற்றை தவறு என அறிவியல் பூர்வமாக நிரூபித்துக் காட்டுங்கள் .... ( நிச்சயம் நோபல் பரிசுக் கூட உங்களுக்குக் கிடைக்கலாம் ) .. நான் ஏற்றுக் கொள்கின்றேன் ..

ஒரு சிறிய உதா. எந்தவித கடிவாளமும் இல்லாத மிகவும் பழங்குடி சமூகமான அந்தமானியர்களிடம் INCEST என்பதே இல்லை ... அங்கு நவநாகரிக சமூகக் கட்டுபாடுகள் ஏதுமில்லை என்பதும் நினைவில் கொள்க.

ஹஹா..ஹா....

June 23, 2011 10:55 AM

bat said

எந்தவித கடிவாளமும் இல்லாத மிகவும் பழங்குடி சமூகமான அந்தமானியர்களிடம் INCEST என்பதே இல்லை ... அங்கு நவநாகரிக சமூகக் கட்டுபாடுகள் ஏதுமில்லை என்பதும் நினைவில் கொள
.......................................


நீங்கள் ஒரு விசயத்தை ஆழமாக சிந்திப்பது மாதிரி தெரியவில்லை ஒரு மனிதனிடம் இன்ன இன்ன கெட்ட பழக்கம் இல்லை என்று ஒருவனால் உறுதியாக சொல்லமுடியாது அப்படி இருக்கும் போது ஒரு சமுதாயத்திலே அது இல்லை என்று கூசாமல் பொய் சொல்லுகிறீர்கள் அதற்கான ஆதாரம் என்ன உங்களிடம் மந்திர சக்தி உள்ளதா ஒரு மனிதன் இன்னதை செய்யமாட்டான் என்று உறுதியாக இன்னொரு மனிதனால் கூற இயலாத போது ஒரு சமுதாயமே அதை செய்ய வில்லை என்று பொய் சொல்லுகிறீர்கள் மேலும் எதிலும் குதர்க்கமாக வே உங்களின் சிந்தனை இருப்பதால் உங்களிடம் சொல்ல நிறைய கருத்து இருந்தாலும் அதை முன் வைக்க நான் தயாரில்லை உங்களிடம் பொய் நிறைய இருக்கிறது பொய் செய்திகளின் மூலம் ஹிட் ஆகிவிடலாம் என்ற எண்ணம் உங்களிடம் உள்ளது. ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் பொய் தான் எல்லா பாவத்திற்கும் தாய்

June 23, 2011 11:50 AM

Rabbani said...

ஆரோணன் said...
@ bat - நீங்கள் உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்பதால், இங்கு வந்து இப்படி பேசுவதாக தெரிகின்றது. எனக்கும் பல விஷயம் பிடிப்பதில்லை, அதனால் அது எல்லாம் தவறு என ஆதாரமில்லாமல் பேச முடியுமா..

இக்பால் அண்ணாவும் அப்படித் தான் என நினைக்கின்றேன். ஆதாரம் ஒன்றையும் நீங்கள் வைக்கவில்லை .. கேலி மட்டும் தான் செய்கின்றீர்கள்

:)

June 23, 2011 11:57 AM


ஆரோணன் said...
bat - // ஒரு மனிதன் இன்னதை செய்யமாட்டான் என்று உறுதியாக இன்னொரு மனிதனால் கூற இயலாத போது ஒரு சமுதாயமே அதை செய்ய வில்லை என்று பொய் சொல்லுகிறீர்கள் //

ஒரு மதத்தில் மாறிவிட்டால் மட்டும் ஒரு மனிதன் இன்னதை செய்யமாட்டான் என உறுதியாக உங்களால் கூற முடியுமா அண்ணா... அதே போல அந்த சமுதாயமே அதை செய்யாமல் இருக்கு என உங்களால் கூற முடியுமா ?

:)

June 23, 2011 12:00 PM

ஆரோணன் said...
திரு. bat-ன் கேள்விகளுக்கு பதில்கள் :

நாத்திகர்கள் ஓரினச் சேர்க்கையை ஏன் ஏற்கின்றார்கள் ?

*** ஏனெனில் அறிவியல் அதனை இயற்கைப் பாலுணர்வு எனக் கூறிவிட்டது.

நாத்திகர்கள் தகாப் பாலுறைவை ஏன் ஏற்பதில்லை ?

*** ஏனெனில் அறிவியல் அதனால் பிறக்கும் குழந்தைகள் நோய்நொடியோடு பிறக்கும் எனக் கூறிவிட்டது.

:)



bat said...
நண்பர் ஆரோனியனுக்கு

நாத்திகர்கள் ஓரினச் சேர்க்கையை ஏன் ஏற்கின்றார்கள் ?

அதை விரும்புவதால்

நாத்திகர்கள் தகாப் பாலுறைவை ஏன் ஏற்பதில்லை ?

சமூகம் தன்னை அடையாளம் கொண்டு வெறுத்து ஒதுக்கும் என்ற பயத்தினால்
இது தான் உண்மை நீங்கள் எப்போதுமே உண்மையை விளங்க முற்படுவது இல்லை அவ்வாறு விளங்கினாலும் குதர்க்கமான சிந்தனை நிறைய பொய் இதன் மூலம்
சிந்தனையில் மேம்பட்ட மக்களாக முடியவே முடியாது

June 23, 2011 12:04 PM

Rabbani said...

ஆரோணன் said...
@ bat - நீங்கள் மட்டும் நாத்திகர்ள் மோசமானவர்கள் என்ற தொனியில் பேசுகின்றீர்களே ? சொல்லப் போனால் நாத்திகர்களை விடவும் உங்களைப் போன்ற ஆத்திகர்கள் பலரும் தான் வக்கிரமான பாலியல் எண்ணங்களை சதா மனதில் சுமந்துக் கொண்டிருக்கின்றனர் ..

என நான் கூறினால் நீங்கள் ஏற்பீர்களா ? அதே போலத் தான் நீங்கள் சொல்வதையும் யாரும் ஏற்கப் போவதில்லை ...

:)

June 23, 2011 12:22 PM


ஆரோணன் said...
ஆத்திகர்களின் எண்ணத்தில் வக்கிரங்கள் இருக்கு, கடவுளுக்கு பயந்தே நல்லவர்களைப் போல உள்ளார்கள்.

நாத்திகர்கள் யாருக்கும் பயப்படாத போதும் வக்கிர எண்ணங்கள் இல்லாமல் இருக்கின்றார்கள் ..

அப்படிப் பார்த்தால் யாருக்கு சொர்க்கப் பதவியில் முன்னுரிமை .. ஹிஹி !!!

எங்கே சொர்க்கம் இருக்கு என கேட்கின்றீர்களா ?

:)

June 23, 2011 12:24 PM


bat said...
உங்களுடன் விவாதம் செய்ய எனக்கு தற்போது நேரம் இல்லை நல்ல இனியமுறையில் கருத்து சொன்ன திற்கு நன்றி

June 23, 2011 12:25 PM


ஆரோணன் said...
@ bat - மிக்க நன்றிகள் அண்ணா.. நீங்கள் விளையாட ஆரம்பித்தமையால் நானும் விளையாடினேன். ஆதாரச் சுட்டிகள் பல மேலேக் கொடுத்துள்ளேன். நேரம் இருந்தால் கொஞ்சம் படிச்சுப் பாருங்க..

உண்மைகள் விளங்கலாம் ( அறிவியலின் படி ) ...... கற்க கசடற ......

:)

June 23, 2011 12:26 PM


bat said...
நாத்திகர்கள் யாருக்கும் பயப்படாத போதும் வக்கிர எண்ணங்கள் இல்லாமல் இருக்கின்றார்கள் ..
.................................
காமெடி பண்ணுவது நிங்கள நானா என்று படிப்போர் புரிந்து கொள்ளட்டும்

..............................
இமாதியான உரையாடல் மூலம் நான் புரிந்து கொண்டது

நாம் ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்க்கும் போது அவர் அதிலிருந்து தப்புவதிர்காக மற்றவர் வருவார் அவரும் உடனுக்குடன் subject மாற்றி கருத்து வைப்பார் எல்லாமே அரை குறை விதண்டவதங்கள்

இவர்களிடம் சரக்கு இல்லை
சரி அந்த என் ஒரு கேள்விக்குத்தான் அவர் 7 , 8 பதிவு போட்டு பதில் சொல்வதாக மக்களை குழப்புகிறார் சகோதரர் முஹம்மத் ஆஷிக் இன் வகை பட்டுதப்பட்ட கேள்விகளுக்கு பதிலை காணோம் ஏன் எனது கேள்வி செக்ஸ் சம்பந்தப்பட்டது அதனால் இவ்வளவு ஆர்வம் இதில் நண்பர் சார்வாகன் நமக்கு தான் இந்த subject யில் அதிக ஆர்வம் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்

Anonymous said...

ஆரோணன் said...
@ bat - நல்ல காமெடி பண்றீங்க சார்.

நாத்திகர்கள் மட்டும் தான் இந்த இரண்டையும் செய்கின்றார்கள் எனக்கூறும் உங்களிடம் அதற்கான ஆதாரம் புள்ளி விவரம் தர முடியுமா ..... ஆத்திகர்களிலும் இப்படியான செய்கைகள் இருக்குதே ...

----------------------


bat said...
நாத்திகர்கள் தகாப் பாலுறைவை ஏன் ஏற்பதில்லை ?

*** ஏனெனில் அறிவியல் அதனால் பிறக்கும் குழந்தைகள் நோய்நொடியோடு பிறக்கும் எனக் கூறிவிட்டது.
....................
அப்போ உங்களின் கூற்று படி நெருங்கிய சொந்த துடன் safe ஆக செக்ஸ் வைத்துகொள்ளலாம

June 23, 2011 12:13 PM


ஆரோணன் said...
@ bat - // அப்போ உங்களின் கூற்று படி நெருங்கிய சொந்த துடன் safe ஆக செக்ஸ் வைத்துகொள்ளலாமா ? //

நீங்கள் வைத்துக் கொள்வீர்களா ??? ஒருவேளை கடவுள் வந்து சொல்லிவிட்டால் வைத்துக் கொள்வீர்கள் அப்படித் தானே !!!

ஹிஹி

நாத்திகர்கள் வைத்துக் கொள்ள மாட்டார்கள்
**** ஏனெனில் இயற்கையாகவே INCEST AVOIDANCE CUES அவர்களிடம் இருக்கு ...

அதனால் அப்படி எண்ணக் கூட மாட்டார்கள்...

:)

கடவுளை கும்பிடும் உங்களைப் போன்றோரிம் INCEST AVOIDANCE CUES இல்லை, அதனால் கடவுளின் கட்டளைக்கு காத்திருக்கின்றீர்கள்....

எப்படா கடவுள் சொல்லுவார் என ?

June 23, 2011 12:18 PM

Anonymous said...

உடன்பிறந்த சகோதரிக்கு பிறந்த பெண்குழந்தையை சீராட்டி பாராட்டி தாய்மாமன் என்ற முறையில் மடியிலமர்த்தி காது குத்தி வயதுக்கு வந்தவுடன் தட்டி கட்டி முறை செய்து

ஒரு தகப்பன் போல் குழந்தையிலிருந்தே கண்காணித்து வளர்த்த பெண்ணையே மணந்து கொள்ளும் வழமை நம் தமிழக‌த்தில் கண்கூடு.

இதை பிற நாட்டினர் கூடா ஒன்று என கருதுவது யாவரும் அறிந்ததே

.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

Peace be upon you... Brother Suvanappiriyan.

///சமூகத்தில் எங்கெல்லாம் வக்கிரமான எண்ணங்களும் செயல்களும் நடைபெறுகிறதோ அதை எல்லாம் எடுத்துப் போட்டு நீங்களும் இதே போன்று கெட்டு குட்டிச்சுவராகுங்கள் என்று வரிந்து கட்டிக் கொண்டு இந்த அதி மேதாவிகள்அதனை ஆதரித்து பதிவு எழுதிக் கொண்டிருக்கிறர்ர்கள். பாவம். அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டு விடுவோம்.///

---I'm repeating it..!

suvanappiriyan said...

சகோ பேட்!

பிரான்ஸிலிருந்து பிரசுரிக்கப்பட்ட Le Monde Mussalman என்னும் இதழில் Mr. Chatalier என்னும் கிறிஸ்தவ மிஷனரி எழுதிய கட்டுரையில் காணப்படும் கருத்து

"No doubt our missionaries have failed so far indirectly undermining the faith of the Muslims, This end can be achived only by the propagation of ideas through the mediam of European languages.

"முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பலவீனமடையச் செய்வதில் எமது மிஷனரிகள் (பிரச்சாரகர்கள்) தோல்வி கண்டு விட்டனர் என்பதில் சந்தேகமில்லை. மேற்கத்திய மொழிகள் மூலம் நம் கருத்துக்களைப் பரப்புவது கொண்டே இதனைச் சாதிக்க முடியும்".

அவர் மேலும் கூறுகிறார்:

"With the weakening of their belief in Islam, decay and disintergration are bound to set in and when this decay and this disintergration spreads throught the world of Islam, the religious spirit of the Muslims will be entirely uprooted and will never be able to re-emerge in a new form".

"இஸ்லாத்தின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கை பலவீனமடைந்தவுடன், அவர்களை வீழ்ச்சியும் நலிவும் பலவீனமும் ஆட்கொண்டுவிடும். நலிவும் பலவீனமும் முஸ்லிம் உலகம் முழுவதும் வியாபித்துப் பரவியதும் முஸ்லிம்களின் மத உணர்வு முற்றிலும் வேரோடு பிடுங்கப்பட்டுவிடும். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் புது உருப்பெற்று என்றும் தலை தூக்க முடியாது.”

மேற்கண்ட வாக்கியத்தின் செயல்பாடுகளே இன்று நாம் இணைய உலகில் முகமது நபியின் பெயரால் சொல்லப்படும் செய்திகள். ஹதீதுகள் என்ற பெயரில் ஆங்கிலத்தில் நிறைய கட்டுக் கதைகள் இவர்களால் பரப்பப்பட்டன. இதனை தேடிப் பிடித்துதான் நமது இணைய தள புலிகள் முகமது நபியின் வாழ்க்கையை களங்கப்படுத்த நினைக்கினறனர். அவற்றில் ஒன்றுதான் நபி அவர்களின் திருமணத்தைப் பற்றிய கட்டுக் கதைகள்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. ஆஷிக்!

//--I'm repeating it..!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

முகமது பற்றி எனக்கு தெரியாதுங்க.. ஆனால் நீங்க சொன்ன பாரதியும், காந்தியும் கூட தீர்க்கதரிசோ கடவுளின் தூதரோ இல்லை. சாதரண மனிதன். சாதரண மனிதனின் வாழ்க்கை அந்தந்த காலத்தின் பழக்க வழக்கத்துக்குத் தான் இருக்கும்.

ஆனால் முகமது கடவுளோட தூதர் தானே ? அப்போ ஏன் அவரு 6 வயசு பொண்ணை 54 வயசுல கட்டிகிட்டாரு ... ஒரு கடவுளோட தூதர் பண்ற காரியமாத் தெரியல ...

முகமதுவை விட புத்தரும், மகாவீரரும் பன்மடங்கு உன்னதமானவர்களாக எனக்குப் படுது .. ஏனெனில் முகமதுவை விட 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் இவர்கள் ...

ஆனால் அவர்கள் யாவரும் கடவுளை இருக்கிறதா சொல்லலை.. என்பதும் முக்கியமானது

Anonymous said...

bat என்னும் அன்பர் ஆதாரங்களோடு விவாதம் செய்யிங்கனு சொன்னேன் .. ஆனால் அவரு எதையும் சொல்லாமா ? தாறு மாறா பேசிக்கிட்டு இருக்கிறாரு...

:)

Rabbani said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அதிகபடியான தகவல்களை உங்களது பின்னுடத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன்

suvanappiriyan said...

ஆரோணன்!

//முகமது பற்றி எனக்கு தெரியாதுங்க.. ஆனால் நீங்க சொன்ன பாரதியும், காந்தியும் கூட தீர்க்கதரிசோ கடவுளின் தூதரோ இல்லை. சாதரண மனிதன். சாதரண மனிதனின் வாழ்க்கை அந்தந்த காலத்தின் பழக்க வழக்கத்துக்குத் தான் இருக்கும்.

ஆனால் முகமது கடவுளோட தூதர் தானே ? அப்போ ஏன் அவரு 6 வயசு பொண்ணை 54 வயசுல கட்டிகிட்டாரு ... ஒரு கடவுளோட தூதர் பண்ற காரியமாத் தெரியல ...//

முகமது நபியைப் பொறுத்த வரை 'நான் உங்களைப் போன்ற ஒரு சாதாரண ஆசா பாசம் உடைய ஒரு மனிதனே! உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசமாக உள்ளது எனக்கு வரும் இறைச் செய்தி' என்று தெளிவுபட அறிவித்திருக்கிறார்.

மேலும் அன்றைய அரபுலகில் 6 வயது 9 வயது பெண்களை திருமணம் செய்து முடித்து வைத்துக் கொள்வது அன்றைய அரபு வழக்கம். ஆனல் குடும்பம் நடத்த பன்னிரண்டு வயதுக்கு மேல்தான் கணவனின் வீட்டுக்கு அனுப்புவார்கள். அதன் படிதான் அன்னை ஆயிஷாவின் திருமணமும் நடந்தது.

மேலும் இதனால் விளைந்த நன்மைகளை நாம் பார்க்க வேண்டும். மனிதர்களுக்கு அன்னை ஆயிஷா மூலமாக பல ஆயிரம் ஹதீதுகள், முகமது நபியின் வாழ்வு முறை கிடைத்தது. மற்ற மனைவியரை விட அறிவிலும், ஞாபக சக்தியிலும் சிறந்து விளங்கினார்கள். முகமது நபியோடு தான் மிகவும் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தியதாக அவர்கள் வாயாலேயே பல ஹதீதுகள் காணக் கிடைக்கின்றன.

இன்றும் கூட நமது சமூகத்தில் சிறு வயதில் 'உன் பெண்ணை எனது மகனுக்கு திருமணம் முடிப்போம்' என்று பேசி வைத்துக் கொண்டு பிறகு திருமணத்தை நடத்தும் வழக்கம் உள்ளது. அரபுலகத்தில் பேசி வைக்காமல் திருமணமே முடித்து விடுவார்கள். இவ்வளவுதான் வித்தியாசம்.

மேலும் கிறித்தவ மதத்தில் கன்னியாஸ்திரிகள் தங்களின் இளமையை மதத்துக்காக தியாகம் செய்வதை இன்றும் கூட பார்க்கிறோம். அதே போல் இந்து மதத்தில் பொட்டு கட்டி விடுதல் என்ற பெயரில் பெண் பிள்ளைகளை கோவிலுக்கு நேர்ந்து விடுவது சமீபகாலம் வரை இருந்தது.

suvanappiriyan said...

சார்வாகன்!

//நல்ல மனிதர்கள் ஒரு தீய கோட்பாட்டால் maddened, தெய்வீக உருவாக்குவதில் நம்பிக்கை எதிர்க்க வேண்டும். நேரம் தன்னை தொடக்கத்தில் அல்லது இறுதியில் இல்லாமல், தான், மற்றும் கொள்கைகள், வாழ்க்கை மற்றும் ஓய்வு அடிப்படையில் உலக, uncreated என்பதை அறியவும். Uncreated மற்றும் அழிக்கமுடியாத, அது அதன் சொந்த இயல்பு பலவந்தத்தத்திற்குள் அனுபவித்தே.

- யோகசாஸ்த்ரா, சமணம்
[நன்றி கூகிள் த்மிழ் மொழி பெயர்ப்பு]//

இது தமிழ் வாக்கிய அமைப்பு தானா!

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது உங்களுக்காவது புரிகிறதா?

Anonymous said...

@ சுவனப்பிரியன் - கூகிள் தமிழின் மொழிப் பெயர்ப்பு முழுமை இல்லாத ஒன்று .. இப்போது தான் வளருகின்றது .. உங்களின் கேள்வி

//Good men should combat the believer in divine creation, maddened by an evil doctrine. Know that the world is uncreated, as time itself is, without beginning or end, and is based on the principles, life and rest. Uncreated and indestructible, it endures under the compulsion of its own nature//

இது தானே !

நல்ல சான்றோர்கள் முட்டாள்களாக்கப்பட்ட இறைப் படைப்புக் கொள்கையினால் நம்பிக்கை உடையோரோடு போராடவேண்டும். தெரிந்துக் கொள்ளுங்கள் உலகம் படைப்பட்டது இல்லை, அது காலத்தைப் போன்று அந்தமும் இல்லாதது, ஆதியும் இல்லாதது, அது கொள்கைகளின், வாழ்க்கையின், அமைதியின் அடிப்படையிலானது. அது உருவாக்கப்படவும் இல்லை, அழிக்கப்படப் போவதும் இல்லை, அது தன்னியல்பில் இயங்கி வருகின்றது.

- யோகசாஸ்த்ரா, சமணம்

இது தான் அந்த வரியின் அர்த்தம் சகோ ....

இது தான் எனதுக் கருத்துக்களும் ஆகும். இவை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சமணப் பெரியவர்களால் முன்வைக்கப்பட்ட கொள்கை ஆகும்... அது தான் உண்மையுமாகும்.

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//இப்போது நீங்கள் உங்கள் உடன்பிறவோடு உறவாடினால், அதன் மூலம் உண்டாகும் சந்ததிக்கு கெட்ட ஜீன்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது, ஏனெனில் அந்த கெட்ட ஜீன் ஒன்று உங்கள் உடன்பிறப்புக்கும் இருக்கும், உங்களுக்கும் இருக்கும், இங்கு நல்ல ஜீனைவிட , கெட்ட ஜீனே அதிகமாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டுவிடுகின்றது அல்லவா ?//

இஸ்லாத்தைப் பொறுத்தவரை நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் முடித்துக் கொள்ள அனுமதிதானே ஒழிய கட்டாய கடமை இல்லை. அதிலும் 'நீங்கள் ரத்த பந்தம் இல்லாத உறவில் திருமண உறவு அதிகம் வைத்துக் கொண்டு சொந்தங்களை பெருக்குங்கள்' என்ற ஹதீதையும் நாம் பார்க்கிறோம். பிறத்தியில் திருமணம் முடிப்பதால் சொந்தங்கள் பெருகும் என்ற அடிப்படையில் வெளியில் திருமணம் முடிக்க முகமது நபி அறிவுறுத்துகிறார்.

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட அத்தை மகளைப் பற்றிய செய்திக்கு வருவோம். அத்தையும் அவரது கணவரான வெளி உறவு ஒருவரும் இணைந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். இங்கு ஜீன்களில் கலப்பு உண்டாகிறது. அதே போல் அத்தையின் அண்ணனும் வேறொரு பெண்ணும் இணைந்து புதிய ஜீன் மாற்றங்களினால் ஒரு ஆணை பெற்றெடுக்கிறார்கள். இங்கு ஒரு தலைமுறை வித்தியாசப்படுகிறது. அறிவியல் ஆய்வு படி நான்கு குடும்பங்கள் இங்கு சங்கமிப்பதால் நீங்கள் சொல்லும் கெட்ட ஜீன் அழிக்கப்பட்டுகிறது. இப்பொழுது அத்தையின் மகளும், அத்தையின் அண்ணன் மகனும் திருமணம் முடிக்கும் போது அங்கு புதிய ஜீன் மாற்றங்கள் ஏற்படுகிறது.

அதே போல் சொந்தங்களே இல்லாத முற்றிலும் வேறு வேறு குடும்பங்களில் திருமணம் முடித்தவர்களுக்கும் குறைபாடுடைய குழந்தை பல இடங்களில் பிறந்துள்ளதே!

அண்ணனும் தங்கையும் நேரிடையாக திருமண உறவு வைப்பதைத்தான் ஆராய்ச்சி முடிவுகள் தடுக்கின்றது. இதை இஸ்லாம் முதல் ஏனைய பிற மதங்களும் கூட தடுக்கின்றன.


. //அது உருவாக்கப்படவும் இல்லை, அழிக்கப்படப் போவதும் இல்லை, அது தன்னியல்பில் இயங்கி வருகின்றது. //

எல்லாவற்றிற்கும் அறிவியலை துணைக்கழைக்கும் நீங்கள் இந்த வரிகளுக்கு அறிவியல் பூர்வமான விளக்கத்தை கொடுக்க முடியுமா?

kannan said...

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் வளர்ப்பு மகளை திருமணம் செய்ய இஸ்லாத்தில் தகப்பனுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்க வேண்டுமே? (இந்த பதிவை கொஞ்சம் late ஆகத்தான் படித்த்தேன்)

kannan from abu dhabi.

http://samykannan.blogspot.com/

suvanappiriyan said...

சகோ. கண்ணன்!

//உங்கள் கூற்றுப்படி பார்த்தால் வளர்ப்பு மகளை திருமணம் செய்ய இஸ்லாத்தில் தகப்பனுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்க வேண்டுமே? (இந்த பதிவை கொஞ்சம் late ஆகத்தான் படித்த்தேன்)//
'உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள்,உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்கு பாலூட்டிய(வாடகை)அன்னையர், பால்குடி சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள் ஆகியோர் மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளாத நிலையில் விவாகரத்து செய்து விட்டால் அவர்களின் புதல்விகளை மணப்பது உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும் விலக்கப்பட்டுள்ளனர். இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் விலக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்ததைத் தவிர. இறைவன் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கிறான்.'
-குர்ஆன் 4:23

இங்கு வளர்ப்பு மகனோ, மகளோ தடுக்கப்பட்ட திருமண உறவில் அடங்கவில்லை. எவ்வளவுதான் பிறத்தியாரின் குழந்தை மீது அன்பு இருந்தாலும் இஸ்லாமிய பார்வையில் பெற்றவர்களே உண்மையான தாய் தந்தையர் ஆவர்.