Followers

Thursday, October 18, 2012

பரிணாமவியலின் பொய் முகங்கள் அம்பலம்

பரிணாமவியலின் பொய் முகங்கள் அம்பலம்!


'ம் ஹூம்....யம்மாவ்..'

'என்ன குழந்தாய்?'

'எத்தனை நாள் நான் குரங்காவே இருக்கிறது. நான் எப்போ மனுஷனா மாறுவேன்'

'கவலைப் படாதே குழந்தே! நம்ம டார்வின் மாமா கிட்டே சொல்லி ஒன்னய மனுஷனா மாத்திட சொல்லிடறேன்'

'அவருதான் செத்து போயிட்டாரே'

'அவர் போனா என்ன? அவரோட சிஷ்யர்கள் கிட்டே சொல்லி ஒன்னய மனுஷனா மாத்திர்றேன். கவலைப் படாதே'

------------------------------------------------


//பாருங்க நீங்களும் சரியாப் புடிச்சீங்க. வ்ரலாறு,அறிவியலை திரிகாமல் மத பிரச்சாரம் செய்ய முடியாது என்பது உண்மை என்றாலும்,வஹாபிகள் போல் 100% பொய் சொல்ப்வர்கள் நான் பார்த்தது இல்லை.

இவர்களையும் நம்பி ஒரு கூட்டம், நாம் மட்டும் எழுதவில்லை என்றால் ,இவர்கள் பாட்டுக்கு கதை விட்டே,கால்த்தை ஓட்டிக் கொண்டு இருப்பாரகள்.
இதற்குத்தான். உடனே மறுப்பு பதிவு இட்டுவிடுகிறோம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொடுமை!!!!!!!!

அன்றில் இருந்து இன்று வரை பொய் பொய், மேலும் பொய் இதுவே வஹாபி பிரச்சாரம் ஆகும்!!!// -சார்வாகன்.



இது சார்வாகன் கொடுத்த பின்னூட்ட பதில். அதாவது வஹாபிகள் பொய்களை சொல்லி தங்கள் மார்க்கத்தை பரப்புகிறார்களாம். அதிலும் 100 சதவீதம் பொய்கள் தானாம். ஒருவனை பார்த்து பொய சொல்லுகிறாய் என்று சொல்லும் போது மற்ற அவரது நான்கு விரல்களும் அவரை நோக்கியே திரும்புகின்றன என்பதை ஏனோ மறந்து விடுகிறார்.



இந்த டார்வினிஷ்டுகள் எந்த அளவு பொய்களில் கை தேர்ந்தவர்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை நாம் இங்கு எடுத்துக் கொள்வோம்.



இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் மோசடி என்று சொன்னால் பில்ட்டவுன் மோசடியை சொல்லலாம். மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தான் என்ற பொய்யை நம்ப வைக்க இவர்களுக்கு இடைப்பட்ட படிமங்கள் கிடைக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு சார்லஸ் டாசன் என்ற தொல்லுயிரியலாளர் ஆய்வுகளை மேற்கொண்டார். இங்கிலாந்தின் கிழக்கு சிசெக்ஸ் பகுதியில் பில்ட் டவுன் என்ற கிராமத்தில் ஒரு மனித படிமத்தை கண்டெடுத்தார். 1912 ஆம் ஆண்டு தன் நண்பர்கள் ஆர்தர் கீத்வுட்வர்ட், தே சார்டின் போன்ற அறிஞர்களின் துணையுடன் ஆய்வுகளை மேற்கொண்டார்.



(பொய்யாக புனையப்பட்ட மண்டை ஒடு)

இவர்களுக்கு மண்டை ஓட்டின் சில பகுதிகள் மற்றும் தாடையின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தன. இவற்றின் உதவியால் சில ஆண்டுகள் கழித்து முழு மண்டை ஓட்டை புனரமைப்பு செய்து புவியியல் கழகத்திடம் ஒப்படைத்தனர். அதற்கு கற்பனையான முகமும் கொடுக்கப்பட்டது.




மனித மண்டை ஓடும் குரங்கின் தாடையும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பதால் இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் படிமம்தான் என்பது போன்ற செய்தியை பரப்பினர். இதன் தாடைப் பகுதியில் இருந்த பற்கள் மனிதனை ஒத்து இருந்ததால் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்பதற்கு இடைப்பட்ட படிம ஆதாரம் கிடைத்து விட்டது என்று வெகுவாக பிரபலப்படுத்தப் பட்டது. இந்த உயிரினத்திற்கு 'பில்ட்டவுன் மனிதன்' என்று பெயர் சூட்டினர். இந்த மனிதன் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் என்றும் கதை கட்ட ஆரம்பித்தனர்.



இதில் சந்தேகமடைந்து சிலர் கேள்வி கேட்கப் போக அவர்களை கிண்டலடித்து அவர்களை அடக்கி விட்டனர் பரிணாமவியலார். (தற்போது கூட யாராவது பரிணாமத்தை சந்தேகங் கொண்டு கேள்வி கேட்டால் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு 'ஹி..ஹி...உங்களுக்கு பரிணாமத்தை புரியும் அளவுக்கு இன்னும் அறிவு வளர வில்லை' என்று சார்வாகன், தருமி போன்றவர்கள் கிண்டலடிப்பதையும் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்)



கார்டியன் பத்திரிக்கை இந்த செய்தியை 21-11-1912 ஆம் ஆண்டு வெளியிட உலகம் முழுவதும் மனித பரிணாமத்துக்கு இடைப்பட்ட படிமம் கிடைத்தாக செய்தி பிரபலம் ஆனது. 1913 ஆம் ஆண்டு அதே இடத்தில் ஒரு கோரைப் பல்லும் கிடைத்தது. அதே இடத்தில் சில மூளைப் பகுதிகளும் சில தாடைப் பகுதிகளும் கிடைக்க ஆரம்பித்தன. ஈரைப் பேனாக்கி பேனை பெருமாளாக்கும் பரிணாமவியலார் மேலும் ஒரு ஆதாரம் கிடைத்ததாக துள்ளி குதித்தனர்.



முன்பு ஆட்சேபித்த சில அறிஞர்கள் தற்போது கீத்தின் வாதத்தை ஒப்புக் கொள்ள ஆரம்பித்தனர். இடையில் நோய் வாய் பட்டு சார்லஸ் டாசன் இறந்து விடுகிறார். அந்த சுரங்கத்தில் அதன் பிறகு வேறு எந்த படிமங்களும் கிடைக்காததது ஆராய்ச்சியாளர்களை சற்று குழப்பத்தில் ஆழ்த்தியது.



1924 ஆம் ஆண்டிலிருந்து 1946 ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் பல இடங்களில் பல ஆதி மனிதனின் படிமங்கள் கிடைக்க ஆரம்பித்தன. கிடைத்த படிமங்கள் அனைத்தும் பில்ட்டவுன் படிமங்களோடு ஒத்து வரவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை மேலும் சந்தேகத்திற்க்குள்ளாக்கியது.



உலகின் பல்வேறு இடங்களில் மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட, இந்த இரண்டு படிமங்களுக்குமான வேறுபாடு பரிணாமவியலாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த இரண்டில் எது சரி? பில்ட்டவுன் மனித படிமமா? அல்லது உலகின் மற்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட படிமங்களா?



பரிணாமத்தை தூக்கிப் பிடிக்கும் ஆய்வாளர்கள் பில்ட்டவுன் படிமத்தையே உண்மை என்று நம்பினர். ஏனெனில் இதை வைத்துதான் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்ததை ஆதாரத்தோடு நிறுவ முடியும். ஆனால் காலம் செல்லச் செல்ல நிறைய படிமங்கள் கிடைக்க ஆரம்பித்தன. இவை அனைத்துமே பில்ட்டவுன் படிமத்தோடு ஒத்து வரவில்லை. எனவே ஆய்வாளர்கள் வேறு வழி இன்றி பில்ட்டவுன் படிமத்தை ஆய்வுக்கு கொண்டு செல்லும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.



படிமங்களின் வயதைக் கணக்கிடும் ப்லூரின் சோதனை 1940 வாக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த புதிய யுக்தியைக் கையாண்டு கென்னத் ஒக்லி என்ற தொல்லுயிரியலாளர் பில்ட்டவுன் படிமத்தை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.



ஆய்வு ஆரம்பித்தவுடன் முடிவுகள் வர ஆரம்பித்தது. அறிவியல் உலகமே ஸ்தம்பித்து விட்டது. ஆம். பில்ட்டவுன் படிமம் பல பொய்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதை அறிவயல் உலகம் தெரிந்து கொண்டது. அப்படி என்ன அதிர்ச்சி தரும் பொய்களை சமர்ப்பித்திருந்தனர்?



முதல் அதிர்ச்சி: பில்ட்டவுன் படிமம் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தயது என்று சொன்னது மகா பொய். அது வெறும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள படிமம்தான்.இது முதல் சறுக்கல். ஏனெனில் மனிதன் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தற்போதய நிலையில் இருந்ததாக படிமங்களின் ஆய்வு உறுதி செய்கிறது.



மனிதன் தறபோதய வளர்ச்சியில் முழுதாக பரிணமித்து உள்ளபோது இடையில் அதன் இடைப்பட்ட இனம் எவ்வாறு வர முடியும் என்று கேட்டனர் ஆய்வர்கள்?



அதிர்ச்சி இரண்டு: மண்டை ஓடு மனிதனுக்கானது. ஆனால் அதன் தாடையோ ஓரங்கூட்டான் குரங்கினுடையது என்பது ஆய்வில் தெரிய வந்தது. வேதிப் பொருட்களைக் கொண்டு அந்த படிமங்கள் ஒரே வயதுடையதாக பொய்யாக காட்டப்பட்டுள்ளது.



அதிர்ச்சி மூன்று: தாடைப்பகுதியில் இருந்த பற்கள் குரங்கின் பற்களாகும்.அதை மனித பற்களாக தெரிய வைக்க கருவிகள் கொண்டு தீட்டப்பட்டு மண்டை ஓட்டின் படிமத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருந்தது ஆய்வில் தெரிய வந்தது. மனிதனின் பழங்கால பற்கள் போன்று தோற்றமளிக்க அதனை வர்ணத்தால் மாற்றவும் செய்துள்ளனர்.

இந்த மேசடி வேலையை செய்த கூட்டு களவானிகளாக அறியப்படுபவர்கள். இவர்கள் அனைவருமே பரிணாமவியலை கரைத்து கடித்த அறிஞர்களாம். :-)

1.Charles Dawson,

2.Tielhard de Chardin,

3.W. J. Sollas,

4.Grafton Elliot Smith,

5.Arthur Conan Doyle,

6.Martin A. C. Hinton

ஒரு படித்த அறிவியல் அறிஞர்கள் செய்யும் செயல்களா இது? அதிலும் ஒருவர் அல்ல. பலர் சேர்ந்து செய்த சதி திட்டம் இது. பரிணாவியலை தூக்கிப் பிடிக்கும் அறிவியல் அறிஞர்களின் லட்சணம் இதுதான். ஒரு குழுவாக சேர்ந்து நாற்பதாண்டு காலம் இந்த உலகை முட்டாளாக்கியிருக்கின்றனர் பரிணாவியல் ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் தங்களின் கருத்தை மெய்ப்பிப்பதற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் என்பது இந்த பதிவின் மூலம் நிரூபணமாகிறது.



1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி "தி டைம்ஸ்" மற்றும் "தி ஸ்டார்" பத்திரிக்கைகள் இது குறித்து செய்தி வெளியிட்டன. தி டைம்ஸ் நாளிதழ் இதனை "பித்தலாட்டம்" என்றும் "நேர்த்தியான மோசடி" என்றும் தலையங்கத்தில் குறிப்பிட்டது.

ஆராய்ச்சியில் பிழை ஏற்படலாம். அதை யாரும் குறை காண மாட்டார்கள். ஆனால் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக பரிணாமம் அடைகிறது என்ற பொய்யை நிரூபிப்பதற்காக உலகை முட்டாளாக்கிய இந்த பரிணாம மோசடிகாரர்களை அறிவியல் உலகம் என்றுமே மன்னிக்காது.


டிஸ்கி: பரிணாவியல் என்றாலே அது ஆஷிக்தான். தற்போது புதிதாக திருமணம் ஆனதால் கொஞ்சம் பிசியாக இருக்கிறார். எனவே அவர் பதிவிலிருந்து சில விபரங்களை எடுத்து கொஞ்சம் எளிதாக்கி இந்த பதிவை வெளியிடுகிறேன். வஹாபிகளை குறை சொல்ல புகு முன் பரிணாமவியலின் உண்மை முகம் என்ன என்பதை சார்வாகனுக்கு விளக்கவே இந்த பதிவு. பரிணாவியல் ஆய்வாளர்களின் பொய்களை அடுக்கினால் 10 பதிவுகள் தேறும். அவைகளையும் நேரமிருப்பின் பிற்பாடு வெளியிடும் எண்ணமும் உள்ளது இறைவன் நாடினால்..

References:
1. Piltdown Man, The Bogus Bones Caper - Richard Harter, Talk Origins Website.
2. Creationist Arguments: Piltdown Man, Talk Origins Website.
3. Piltdown Man - Natural History Museum, London.
4. The Unmasking of Piltdown Man - BBC
5. Fossil fools: Return to Piltdown - Paul Rincon, BBC dated 13th November 2003.
6. Piltdown Man: Timeline of deceit - BBC dated 13th November 2003.
7. Charles Dawson: 'The Piltdown faker' - BBC dated 21st November 2003.
8. Piltdown Man Forgery - Times Archive, Times Online Website.
9. Piltdown Man is revealed as fake - PBS
10. Piltdown Man Forgery (The times article extract) - Clark University.
11. Piltdown Man - wikipedia.
12. Piltdown Man - archaeology - famous hoax: Age of the Sage website.
13.ethirkkural.com/2010/09/evolution-stheory-harry-potter-stories.html

30 comments:

இராஜகிரியார் said...

சலாம் சகோ. சுவனப் பிரியன்,

கார்ட்டுன் மிகவும் நன்றாக இருந்தது. மிகவும் நன்றாக வரைகின்றீர்களே. தகவல்களும் பயனுள்ளவை.

இராஜகிரியார் said...

பொய்யை உண்மையாக்கணும்டா Forgery-யும் பித்தலாட்டமும் செய்தால் மட்டும் தான் முடியும். அதை தான் இந்த டார்வினிஷ்டுகளும், Anti-Islamist களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

நல்ல பகிர்வு.

ஆனால் இதை வைத்து நீங்கள் ஏன் பெரு மகிழ்ச்சி அடைகிறீர்கள் என தெரியவில்லை, நாங்களல்லவா மகிழ வேண்டும்,

பரிணாமவியலில் மோசடியாக ஆதாரம் காண்பிக்கப்பட்டால் அதனை இன்னொரு பரிணாமவியளாலர் ஆய்வு செய்து உண்மை என்னவென கண்டறிந்து உலகிற்கு சொல்கிறாரே ,அந்த நேர்மையை மதவாதிகளிடம் காண முடியுமா?

முக்காலமும் அறிந்த இறைவன் சொல்லிவிட்டார், என 7 ஆம் நூற்றாண்டில் ஒரு நூலை எழுதிவிட்டு , கிமு 2500 இல் நடந்தது அதற்கு முன்னர் நடந்தது எல்லாம் , கி.பி ஏழாம் நூற்றாண்டு நூலில் சொல்லியபடி நடந்தது என்பதும், அதில் சொல்லி இருப்பதற்கு அநூலே ஆதாரம் என்பதும் ஒலக மகா காமெடியாக இருப்பதை எந்த மார்க்கப்பந்தும் சொல்வதே இல்லையே ஏன்?

பரிணாமவியல், மற்றும் அறிவியலில் பொய் சொல்லி தப்பிக்க முடியாது,மற்ற பரிணாமவியலாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்களே உண்மையை வெளிக்கொண்டுவருவார்கள் என்பதனை நீங்களே தெளிவாக பதிவிட்டு சொன்னதற்கு நன்றி!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அண்ணே இதுல இப்ப அம்பலப் பட என்ன இருக்கு? அதான் எப்பவோ நாறி நசநசத்து போச்சே !!!!

பரிணாம பித்தலாட்டங்கள பத்தி பேசுனா புக்கே போடலாம். அவனவன் கண்ணுல விளக்கன்னையே ஊத்திகிட்டு கண்கானிக்கரப்பயே இப்படி தில்லுமுல்லு பன்னுராங்கன்னா, கவனிக்காம விட்டா அவ்ளோ தான்.

பரிணாம பித்தலாட்டங்கள நினைவுபடுத்தீங்க...இன்ஷா அல்லாஹ் நான் இன்னொரு பெரிய பித்தலாட்டத்த பத்தி அடுத்து எழுதுறேன்.

ஒ சார்வாகான எல்லாம் நீங்க இன்னும் மதிச்சிகிட்டு இருக்கீங்களா? ரொம்ப கஷ்டம் அண்ணே. அவர் மேல எனக்கு என்னைக்கும் மதிப்பு இருந்ததில்ல. இந்த பதிவுல பாதில ஒடுனதுல இருந்து அது இன்னும் சுத்தமா போய்டுச்சு.. http://www.ethirkkural.com/2012/03/blog-post.html

//இதற்குத்தான். உடனே மறுப்பு பதிவு இட்டுவிடுகிறோம்.// - ஆண்டவா, என்ன கொடும இது. சார்வாகனின் இந்த முத்து உதிரல்களை அவர் தஞ்சாவூர் கல்வெட்டுல பதிஞ்சு பக்கத்திலேயே உட்கார்ந்துக்கலாம். மறுப்பு சொன்னாராம்? எப்ப நடந்தது இது? என்னோட பதிவுகளையும் அவர் மறுப்பு சொன்னதா சொல்ற அவருடைய பதிவுகளையும் பக்கத்து பக்கத்துல வச்சுகிட்டு சரி பார்த்துக்கொள்ளலாம். அவர் மறுப்பு இதுவரை சொன்னதே இல்லை. ஒன்னு, பதிவுல சொன்னத விட்டு திசை திருப்புவார், இல்லேனா வேறு வார்த்தைகளை போட்டு ஒத்துக்குவார், அதுவும் இல்லேன்னா ஆதாரம் இன்னும் கிடைக்கலேன்னு சொல்லுவார். ஸ்ப்பாஆ இது தான் இதுவரை நடந்திருக்கு. மறுப்புன்னு மட்டும் எதையும் அவர் இதுவரை சொன்னதே இல்லை. :-)

//நாம் மட்டும் எழுதவில்லை என்றால் // - இதுக்கு ஒரு ஸ்மைலி மட்டுமே..

shueib said...

Malala Yousafzai The Hidden Truth...

Today the world and especially the whole Pakistani nation is forced to make their mind set that Malala Yousafzai is the girl of the nation, she is the star and she represents Pakistani women. Let me clear, who is making Malala famous, who is giving you ideas and reports regarding Malala? Yes it is no other than media. Think for a while, there is no Malala and everyone is busy in showing hatred against the anti Islam film. The image of America in Pakistani society is going towards downfall. People in the form of rallies discouraging drone attacks. Our media is on the forefront in the cause.
What happened next? Suddenly Malala Yousafzai appeared on the scene media reported she was attacked in Swat while going to school with her fellows. Of course when so ever there comes such news that 14 years old girl shot by someone, this thing must be condemned by everyone. Why Malala was attacked so late, after a year ago after operation Swat? Why she was attacked soon after the release of anti-Islamic film. Why media is giving so much hype to the issue? Why Obama shared words for Malala, why she always appeared in the pictures with American people? Why Chief of Army Staff is visiting Malala? Why ISPR is giving messages for Malala’s health?

http://pakmuzone.info/2012/10/15/malala-yousafzai-the-hidden-truth/

இராஜகிரியார் said...

சகோ. சுவனப் பிரியன்,

முன்பு நீங்கள் தமிழ் பழமொழிகள் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தீர்கள் தானே. அதில் “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை பார்“ என்ற சொலவடையை சேர்த்தீர்களா? :-))

துரைடேனியல் said...

Super!

shueib said...

Malala Yousafzai The Hidden Truth ...

Today the world and especially the whole Pakistani nation is forced to make their mind set that Malala Yousafzai is the girl of the nation, she is the star and she represents Pakistani women. Let me clear, who is making Malala famous, who is giving you ideas and reports regarding Malala? Yes it is no other than media. Think for a while, there is no Malala and everyone is busy in showing hatred against the anti Islam film. The image of America in Pakistani society is going towards downfall. People in the form of rallies discouraging drone attacks. Our media is on the forefront in the cause.
What happened next? Suddenly Malala Yousafzai appeared on the scene media reported she was attacked in Swat while going to school with her fellows. Of course when so ever there comes such news that 14 years old girl shot by someone, this thing must be condemned by everyone. Why Malala was attacked so late, after a year ago after operation Swat? Why she was attacked soon after the release of anti-Islamic film. Why media is giving so much hype to the issue? Why Obama shared words for Malala, why she always appeared in the pictures with American people? Why Chief of Army Staff is visiting Malala? Why ISPR is giving messages for Malala’s health?

Yes these are the questions that one should think with open mind. Most of you must have remembered the incident of Arfa Kareem, yet there was coverage but no political and army official was involved on such a wide scale. There was no such support from America. Media is working on its theory known as Magic Bullet Theory, forcefully it is taking attention of people from one issue to another that is in the benefit of America. There is no single person who can think over the strategies behind. Take the case of Mukhtara Mai, all was scam but she got famous just because of American support. So this is the background.

We here are not disgracing Malala, she is truly a face of proud for Pakistan and we are praying for her health. What do you think, is this attack is done by Taliban? The responsibility of this act is taken by Taliban, as Hamid Mir receives a text from the group. On the other hand Rehman Malik is saying that there is a new Talbanic group who is accepting the responsibility. We are now forced to think that this is just an American propaganda, everything is clear from the back ground picture, the present scenario and who will get benefit from all this.

Now after this Malala incident:

Are you against the killing of Talibans?

Now do you remember the past reaction of anti-Islamic film that was created by Americans?

Do you think there should be drone attacks for the killing of Talibans

Readers, you will not find such an exclusive story anywhere else, PakMuZone is working on the facts and true things. What do you think Malala Yousafzai incident has created soft corner for America in Pakistan. It is all due to Media and with the help of few corrupt politicians. We people are being used in the hands of media. The innocent proud of Pakistan is working for America, although she is unaware of the fact. We have found some pictures, on which we don’t want to comment. The decision of truthfulness of this case is on the judgement of readers. We are neutral neither supporting Talibans nor do Americans. These are just facts; we are not giving conclusion for this it is up to the readers what they takes out from the whole story.

http://pakmuzone.info/2012/10/15/malala-yousafzai-the-hidden-truth/

suvanappiriyan said...

சகோ ராஜகிரியார்!

//பொய்யை உண்மையாக்கணும்டா Forgery-யும் பித்தலாட்டமும் செய்தால் மட்டும் தான் முடியும். அதை தான் இந்த டார்வினிஷ்டுகளும், Anti-Islamist களும் செய்து கொண்டிருக்கிறார்கள். //

இந்த பித்தலாட்டங்களை உண்மை என்று ஒரு பெரும் படித்த கூட்டம் இன்னும் நம்பிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆஷிக்!

//ஒ சார்வாகான எல்லாம் நீங்க இன்னும் மதிச்சிகிட்டு இருக்கீங்களா? ரொம்ப கஷ்டம் அண்ணே.//

அவரைப் பற்றி நம் போன்ற பழைய ஆட்களுக்கு நன்றாகவே தெரியும். புதிய ஆட்களும தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? எனவே தான் ஒரு நினைவூட்டல். :-)

மேலும் நாம் பதில் எழுதுவது தனி ஒரு சார்வாகனுக்காக அல்ல. அவரது எழுத்i உண்மை என்று .ன்றும் நம்பிக் கொண்டிருக்கும் பல வாசகர்களுக்காகவே!

//பரிணாம பித்தலாட்டங்கள நினைவுபடுத்தீங்க...இன்ஷா அல்லாஹ் நான் இன்னொரு பெரிய பித்தலாட்டத்த பத்தி அடுத்து எழுதுறேன். //

ஆவலோடு அனைவரும் எதிர்பார்க்கிறோம்.

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

பதிவை படிக்கலாம் என்று பார்க்கும் போது..உங்கள் கார்டூனும் கீழ் உள்ள வசனங்களும் என்னை சிரிக்க வைத்து விட்டது....இந்த நேரத்தில் எனக்கு ஒரு சிந்தனை தோன்றியது....

சார்வகனும் ,அவர் வாங்கிய கொரியன் மொபைலும் :

நீண்ட நாளுக்கு அப்பறம் சார்வகனும் அவருடைய சகா ஒருவரும் சந்தித்து கொள்கின்றனர்...

சகா : வணக்கம் ,தோழரே நலமா..???

சார்வாகன் : நலம் ,நலமறிய ஆவல்....

சகா : கைல என்ன ஆப்பிள் மொபைல் புதுசா...போன வருஷம் கொரியன் மொபைல் தானே வைத்து இருந்தீர்கள் ..மாற்றி விட்டீர்களா..

சார்வாகன் : இல்லை..இல்லை..இது கொரியன் மொபைல் தான் ..ரொம்ப நாளா கொஞ்சம் கொஞ்சமா மாற்றமடைந்து நேற்று தான் ஆப்பிள் மொபைலாக மாறிவிட்டது...இன்னும் இது பெரிய லேப்டாப்பாக மாறும் என்று காத்திருக்கிறேன்....

சகா : பரிணாமம் இருக்கும் வரை உங்களுக்கு லாபம்தான் போல...

சார்வாகன் : ஆமாம் ஆமாம்...என்ன உங்களுக்கு வார்த்தை சப்தம் கீழிருந்து வருகிறது ??

சகா : அதே பரிணாமம் தான் ...மேல இருக்க வேண்டிய வாய் கீழ போயிட்டு ...கீழ இருக்க வேண்டியது..மேல வந்துட்டு...காலங்காத்தல ரொம்ப சங்கடமா இருக்கு...நேருக்கு நேரா ஒரு பயலும் பேச மாட்டேங்குறான்...பரிணாமம் இல்லாமல் கடவுள்னு ஒருவரே இருந்திருக்கலாமோன்னு தோணுது..அப்பதான் அது ,அது... அந்த ,அந்த வசதியான இடத்துல இருந்திருக்கும்....

சார்வாகன் : ஆமாம் ஆமாம்...

பரிணாமத்தின் விளைவை உணர்ந்தவர்களாக பரிதாபமாக இருவரும் பிரிந்து செல்கின்றனர்.


நன்றியுடன்
நாகூர் மீரான்

suvanappiriyan said...

வவ்வால் சுவாமிகள்!

//பரிணாமவியலில் மோசடியாக ஆதாரம் காண்பிக்கப்பட்டால் அதனை இன்னொரு பரிணாமவியளாலர் ஆய்வு செய்து உண்மை என்னவென கண்டறிந்து உலகிற்கு சொல்கிறாரே ,அந்த நேர்மையை மதவாதிகளிடம் காண முடியுமா?//

ஹி...ஹி....அதுக்கு ஏங்க 40 வருஷம் ஆச்சு. அந்த ?போர்ஜரியை எப்படியோ ஒப்பேத்திடலாம் அப்படீங்கற ஐடியாவுல வெளியில விடாம இருந்தீங்க...புதிய படிமங்கள் கிடைத்து வெளித் தோற்றத்திலேயே மிகுந்த வித்தியாசம் தென்படவும் வேறு வழி இல்லாமல் ஆய்வுக்கு உட்படுத்தினீர்கள்! இதுல பெருமை வேறயா?

எங்க வீட்ல மறைந்திருந்த திருடனை நாங்கதான் கண்டு பிடிச்சோம் என்று அந்த வீட்டு ஓனர் பெருமை பட்டுகிட்டாராம். கடைசியில அந்த திருடன் அவருடைய மகனாம். இதுல அந்த வீட்டு ஓனர் பெருமைபட்டுகிட்டா இதைவிட கேவலம் என்ன இருக்க முடியும்?

//முக்காலமும் அறிந்த இறைவன் சொல்லிவிட்டார், என 7 ஆம் நூற்றாண்டில் ஒரு நூலை எழுதிவிட்டு , கிமு 2500 இல் நடந்தது அதற்கு முன்னர் நடந்தது எல்லாம் , கி.பி ஏழாம் நூற்றாண்டு நூலில் சொல்லியபடி நடந்தது என்பதும், அதில் சொல்லி இருப்பதற்கு அநூலே ஆதாரம் என்பதும் ஒலக மகா காமெடியாக இருப்பதை எந்த மார்க்கப்பந்தும் சொல்வதே இல்லையே ஏன்?//

உசிலம்பட்டியிலுள்ள ஒரு முஸ்லிமும் உகாண்டாவில் உள்ள ஒரு முஸ்லிமும் உக்ரைனில உள்ள ஒரு முஸ்லிமும் குர்ஆனின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை ஒரு வரி விடாமல் அவனால் பின்பற்ற முடிகிறதே? அனைத்து நாட்டுக்கும் பொருந்தி வருகிறதே? அது எவ்வாறு என்று சிந்தியுங்கள். விடை கிடைக்கும்.

suvanappiriyan said...

திரு துரை டேனியல்!

//Super!//

வருகைக்கும் கருததுக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சுஐப்!

//We are neutral neither supporting Talibans nor do Americans. These are just facts; we are not giving conclusion for this it is up to the readers what they takes out from the whole story.//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

Aashiq Ahamed said...

//ஆனால் இதை வைத்து நீங்கள் ஏன் பெரு மகிழ்ச்சி அடைகிறீர்கள் என தெரியவில்லை, நாங்களல்லவா மகிழ வேண்டும்,//

?????????????????????

//பரிணாமவியலில் மோசடியாக ஆதாரம் காண்பிக்கப்பட்டால் அதனை இன்னொரு பரிணாமவியளாலர் ஆய்வு செய்து உண்மை என்னவென கண்டறிந்து உலகிற்கு சொல்கிறாரே//

:-) :-) சுவனப்பிரியன் அண்ணே, கேள்வி கேட்டா திசை திருப்புவாங்கன்னு நான் சொன்னேன் இல்ல, இதோ உங்க பதிவுளையே அதற்கான ஆதாரம் வந்துருச்சு பாருங்க. இந்த பதிவோட மைய கருத்து என்ன? வஹாபிகள் பொய் சொல்றாங்குன்னு ஒருவர் சொல்றாரு, அட எப்பா உங்க (பரிமாணவாதிங்க) கிட்ட தான் பித்தலாட்டமும் பொய்யும் நிறைஞ்சிருக்குன்னு பதிவுல சொன்னா, 'இல்ல நாங்க அப்படி செய்யல' அப்படின்னு சொன்னா தானே அது மறுப்பு. அத விட்டுட்டு 'நாங்க தான இந்த பித்தலாட்டத்த கண்டுபிடிச்சோம்'னு சொல்றது இந்த பதிவுக்கு பதிலா? இல்ல திசை திருப்பலா?

அப்ப இந்த பதிவுல சொன்னது உண்மைன்னு ஒத்துக்குறது மட்டும் இல்லாம (அதாவதும் பித்தலாட்டமும் செய்வார்கள் பரிநாமவாதிகள்), நாங்க பித்தலாட்டமும் செய்வோம், அத கண்டுபிடிக்கவும் செய்வோம்னு சொல்றது என்ன மாதிரியான பதில்னும் புரியல.

மொத்ததுல இந்த பதிவு பரிணாமவாதிகள் பொய் பித்தலாட்டத்துல கைதேர்ந்தவர்கள் என்று சொல்லுது. அத இங்கே ஒருவர் ஒத்துகிட்டாச்சு. பதிவோட நோக்கம் நிறைவேரிடுச்சு...சுவனப்பிரியன் நீங்க சந்தோஷப்பட்டுக்கலாம் :-)

ராவணன் said...

அண்ணாச்சி ஒரு சின்ன சந்தேகம்....

விலா எழும்பிலிருந்து பெண்ணை அந்த அரேபிய அல்லா படைத்ததாக எங்கோ படித்த நினைவு.

விலா எழும்பிலிருந்து ஒரு பொண்ணு வருமா அண்ணாச்சி?

அது என்ன பரிணாமம் அண்ணாச்சி?

இதப்பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணாச்சி...

suvanappiriyan said...

ராவணன்!

//விலா எழும்பிலிருந்து ஒரு பொண்ணு வருமா அண்ணாச்சி?//

மண்ணையும் தண்ணீரையும் குழைத்து ஆதமை உருவாக்கி அதற்கு உயிரையும் ஒருவனால் கொடுக்கப்பட்டதை நாங்கள் நம்புகிறோம். அந்த ஆதமின் விலா எலும்பிலிருந்து அவரது துணையை படைப்பது என்பது அந்த இறைவனுக்கு எந்த சிரமத்தையும் தந்து விடப் போவதில்லை.

உலக மக்கள் அனைவரின் மூலமும் ஒரு தாய் தந்தையரிலிருந்து பல்கிப் பெருகியதாகத்தான் இன்றைய விஞ்ஞானமும் கூறுகிறது.

suvanappiriyan said...

//அப்ப இந்த பதிவுல சொன்னது உண்மைன்னு ஒத்துக்குறது மட்டும் இல்லாம (அதாவதும் பித்தலாட்டமும் செய்வார்கள் பரிநாமவாதிகள்), நாங்க பித்தலாட்டமும் செய்வோம், அத கண்டுபிடிக்கவும் செய்வோம்னு சொல்றது என்ன மாதிரியான பதில்னும் புரியல. //

சார்வகனும் பரிணாமவாதிகள் பித்தலாட்டம் செய்ததை அவரது பதிவிலே ஒத்துக் கொண்டுள்ளார். :-)

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//பதிவை படிக்கலாம் என்று பார்க்கும் போது..உங்கள் கார்டூனும் கீழ் உள்ள வசனங்களும் என்னை சிரிக்க வைத்து விட்டது....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nasar said...

பாய் ....எத்தினி வாட்டி ஆளாளுக்கு மாறி மாறி செத்த பாம்ப [டார்வினிசம்] அடிசிக்கீனே
இருப்பீங்கோ....!!! உங்களுக்கே நியாயமா கீதா...!!!??

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

பரிணாமவாதிகள் என்பதில் பல வகையினரும் இருப்பது இயல்புதானே, சிலர் சீக்கிரம் புகழ் அடைய இப்படி எதையாவது செய்து ,அதனையும் மற்ற அறிவியலாளர்கள் தானே வெளிக்காட்டினார்கள் என்றால் , பரிணாமவியாலளர்கள் நேர்மையானவர்கள் என்பதனை அறிய வேண்டாமா?

ஆனால் மார்க்கப்பந்துக்கள் எப்படி என்றால்,

மதாயின் சாலேக் என்ற இடத்தில் உள்ள கட்டமைப்புகளை கட்டியது நபாதியான்கள், காலம் கி.மு 4 நான்காம்ம் நூற்றாண்டு ,

ஆனால் அதனை அரேபிய கட்டமைப்பு, ஆதி மனிதன் 12-14 அடி உயரத்தின் சான்று ,காலம் 5000-6000 ஆண்டுகளுக்கு முன் என கதை விட்டு ,அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டாலும் சிறிதும் ஏற்றுக்கொள்வதில்லை, தொடைச்சுவிட்டுக்கிட்டு அடுத்த கதைக்கு போவது ஏன்?

ஆஷிக் அகமது ரொம்ப பெருமையாக்க இப்போ பேசுபவர் ,மேற்சொன்ன கதைக்கு மறுப்பு சொன்னாரா? இல்லையே.

ஆனால் பரிணாமவியலாளர்கள்,அறிவியலாளர்கள் என்ன செய்வார்கள் எனில் தவறான ஒன்றை என்றும் ஆதரிக்கவே மாட்டார்கள், தவறு என தெரிய வந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டுவார்கள் ,ஏற்றுக்கொள்வார்கள்.

இப்பவும் களி மண்ணும் ,தண்ணீரும் கலந்து முதல் மனிதன் உருவாக்கப்பட்டான் என மூடத்தனமாக நம்புவர்களிடம் அறிவியலை எதிர்ப்பார்க்க முடியுமா?
-----------

குரான் மட்டும் தானே இறை வேதம் ,அப்புறம் ஏன் ஹதித்களை நம்புகிறீர்கள் என கேட்டால் கூட சரியான பதில் வராது உங்களிடம்.

suvanappiriyan said...

வவ்வால்!

//ஆனால் அதனை அரேபிய கட்டமைப்பு, ஆதி மனிதன் 12-14 அடி உயரத்தின் சான்று ,காலம் 5000-6000 ஆண்டுகளுக்கு முன் என கதை விட்டு ,அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டாலும் சிறிதும் ஏற்றுக்கொள்வதில்லை, தொடைச்சுவிட்டுக்கிட்டு அடுத்த கதைக்கு போவது ஏன்?//

http://en.wikipedia.org/wiki/Mada%27in_Saleh

இந்த சுட்டி அல் ஹிஜ்ர் என்ற அல் ஊலா வில் உள்ள இடம் சாலிஹ் நபியும் அவரை பின்பற்றி வாழ்ந்தவர்களின இடம் என்கிறது. நீங்கள் கொடுத்த யுனெஸ்கோ சுட்டி நபாத்தியன்களின் கல்லறை என்று சொல்லி விட்டு இந்த செய்திக்கும் யுனெஸ்கோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கழட்டிக் கொள்கிறது. சாலிஹ் நபியை பின் பற்றிய ஸமூது கோத்திரத்தார்தான் நபாத்தியன்களா அல்லது அவர்களை இறைவன் அழித்த பிறகு மயான பூமியான அந்த இடத்தை நபாத்தியன்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்களா என்பது ஆய்வுக்குரிய விஷயம். அதனை நான் ஆதாரம் கிடைத்தவுடன் தெளிவாக்குகிறேன். ஆனால் அந்த இடம் கல்லறையாக இருக்க 90 சதவீதம் சாத்தியமே இல்லை. இவ்வாறு இருக்க ஆஷிக் அதை எவ்வாறு விமரிசிக்க முடியும்

//இப்பவும் களி மண்ணும் ,தண்ணீரும் கலந்து முதல் மனிதன் உருவாக்கப்பட்டான் என மூடத்தனமாக நம்புவர்களிடம் அறிவியலை எதிர்ப்பார்க்க முடியுமா?//

மனிதனின் உடலில் மண்ணில் உள்ள வேதிப் பொருட்களும் தண்ணீரில் உள்ள வேதிப் பொருட்களும் முழுவதும் ஆக்கிரமித்துள்ளதை இன்றைய விஞ்ஞானம் ஒத்துக் கொள்கிறது. இது பற்றி நானே பல பதிவுகளை எழுதியுள்ளேன்.

//குரான் மட்டும் தானே இறை வேதம் ,அப்புறம் ஏன் ஹதித்களை நம்புகிறீர்கள் என கேட்டால் கூட சரியான பதில் வராது உங்களிடம்.//

குர்ஆனை எவ்வாறு விளங்குவது என்பதை முகமது நபியின் ஹதீதுகளை வைத்துதானே விளங்க முடியும். 'இறைவனை தொழுது கொள்ளுங்கள்' என்று கட்டளை குர்ஆனில் வரும். எவ்வாறு தொழுவது என்பதை முகமது நபியிடம் மட்டுமே கற்று கொள்ள முடியும். இப்படி குர்ஆனின் அனைத்து சட்டங்களையும் தெளிவாக விளங்க முகமது நபியின் ஆதாரபூர்வமான ஹதீதுகள அவசியமாகிறது.

suvanappiriyan said...

சகோ நாசர்!

//பாய் ....எத்தினி வாட்டி ஆளாளுக்கு மாறி மாறி செத்த பாம்ப [டார்வினிசம்] அடிசிக்கீனே
இருப்பீங்கோ....!!! உங்களுக்கே நியாயமா கீதா...!!!??//

உயிர் இருப்பதாக நமபுவதற்கு வவ்வால், சார்வாகன் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்களே! இவர்களுக்காகவாவது அவ்வப்போது பரிணாம பதிவுகள் அவசியமாகிறது.

வவ்வால் said...

சு.பி சுவாமிகள்,

சொன்னாலும் பொருதுவது போல சொல்லுங்கோ,

நபாதியன்கள் தான் அதனை கட்டியதுன்னே தொல்லியல் ரீதியாக அதன் காலம் நிர்ணயம் செய்தாச்சு ,அப்புறம் எங்கே இருந்து அதனை ஆக்ரமிக்க.

சமுது என சொல்வதெல்லாம் புராணம்.

வரலாற்று ரீதியாக ஆதாரமே இல்லை.

சில நாட்களுக்கு முன்னர் நான் விக்கிப்பீடியாவை ஆதாரமாக சொன்ன போது , அதனை யார் வேண்டுமானாலும் மாற்றி எழுதலாம், அதில் இருப்பது பொய் என சொன்னீர்கள், இப்போ விக்கிய விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லையோ :-))

நீங்க சொல்லும் விக்கி சுட்டியிலும் மதாயின் சாலிக் ஐ கட்டியது நபாதியன்கள் என்று தான் வருகிறது.

கி.மு 4 ஆம் நூற்றாண்டில் 12 அடி மனிதன் இருதிருந்தால் அவனது எலும்புகள் கிடைத்திருக்கும், வரலாற்றிலும் பதிவாகி இருக்கும்.

கி.மு 5000 ஆம் ஆன்டினை சேர்ந்த எகிப்திய பிரமிட்டில் கூட 12 அடி உயர மனிதனின் மம்மி கிடைக்கவில்லை :-))

கி.மு 4 ஆம் நூற்றாண்டு எல்லாம் ரொம்ப இள்மை வரலாற்ரை பொறுத்தவரை.

எனவே உங்கள் கட்டுக்கதையை பற்றி எதுவும் சொல்லாமல் பரிணாமவியலாளர்கள் பற்றி பேசுவது எல்லாம் வேடிக்கை.

ஒரு தகவல் கிடைத்தால் அதுகுறித்து மேலும் தேடிப்பார்க்காமல் அப்படியே எழுதினால் இப்படித்தான் மாட்டிக்க வேண்டியிருக்கும் :-))

-----------
//மனிதனின் உடலில் மண்ணில் உள்ள வேதிப் பொருட்களும் தண்ணீரில் உள்ள வேதிப் பொருட்களும் முழுவதும் ஆக்கிரமித்துள்ளதை இன்றைய விஞ்ஞானம் ஒத்துக் கொள்கிறது. இது பற்றி நானே பல பதிவுகளை எழுதியுள்ளேன்.
//

அப்படிப்பார்த்தால் பஞ்ச பூதங்களால் ஆனது உலகு, மனிதனிலும் அவையே இருக்குன்னு சொன்ன இந்து வேதங்களை நீங்க ஏற்றுக்கொண்டவராகிறீர்கள் :-))


இந்து வேதங்கள் குரானை விட பழமையானவை.

உலகில் உள்ள தனிமங்கள், மூலக்கூறுகள் கொண்டவையாக தான் அனைத்துமே இருக்கும். இதனை உணர்ந்து கொண்டால் அனைவருமே சொல்ல முடியும். இதற்கு எதற்கு இறைவேதம்?

//குர்ஆனை எவ்வாறு விளங்குவது என்பதை முகமது நபியின் ஹதீதுகளை வைத்துதானே விளங்க முடியும். '//

அப்போ குரானை படித்தால் யாருக்கும் புரியாது :-))

ஹதீத்கள் என்பது முகமது அய்யா சொன்னது மட்டுமா இருக்கு, ஏன் அபுரலி சொன்னார், இன்னார் சொன்னார்னு நிறைய ஹதீத்கள் முகது அய்யாவின் காலத்திற்கு பிறகும் இருக்கு, அதை எல்லாம் முதலில் வெட்டி எறியுங்கள்.

வரலாறு,புவியியல்,அறிவியல் ,உயிரியல் என எந்த புரிதலும் இல்லாமல் பேசுபவர்களோடு பேசுவது ஆயாசமாக இருக்கிறது,ஆனாலும் ஒரு நகைச்சுவையாக கருதியே பேசிக்கொண்டு இருக்கிறேன், தொடரட்டும் உங்கள் நகைச்சுவைப்பணி :-))

துரைடேனியல் said...

இந்த காலத்தை நிர்ணயிக்கும் சோதனைகள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. இன்னுமொரு சோதனை முறை வந்து இதற்கு முன்பு வந்தது அத்தனையும் தவறு. இதுவே துல்லியமானது என்று சொல்லி வேறு ஒரு காலக் கணக்கு சொல்வார்கள். இந்த போலி பரிணாமவாதிகளை நம்பி மோசம் போகும் இவர்களை என்னவென்று சொல்வது? அருமையான பகிர்வு. நிச்சயம் இதே போல் தொடருங்கள். ஆவலாய் காத்திருக்கிறேன்.

Jayadev Das said...

நம் உடல் நாம் சாப்பிடும் பொருட்களில் இருந்து உருவாகிறது, நாம் சாப்பிடும் பொருட்கள் மண்ணில் இருந்து வருகிறது + நீர் குடிக்கிறோம். எனவே நீரில் உள்ளதும் மண்ணில் உள்ளதும் நம் உடலில் இருக்கும். ஆனால் இதை வைத்து எப்படி

\\மனிதனின் உடலில் மண்ணில் உள்ள வேதிப் பொருட்களும் தண்ணீரில் உள்ள வேதிப் பொருட்களும் முழுவதும் ஆக்கிரமித்துள்ளதை இன்றைய விஞ்ஞானம் ஒத்துக் கொள்கிறது. இது பற்றி நானே பல பதிவுகளை எழுதியுள்ளேன்.\\

இதை நிரூபிப்பீர்கள்?

suvanappiriyan said...

சகோ ஜெய தேவதாஸ்!

\\மனிதனின் உடலில் மண்ணில் உள்ள வேதிப் பொருட்களும் தண்ணீரில் உள்ள வேதிப் பொருட்களும் முழுவதும் ஆக்கிரமித்துள்ளதை இன்றைய விஞ்ஞானம் ஒத்துக் கொள்கிறது. இது பற்றி நானே பல பதிவுகளை எழுதியுள்ளேன்.\\

இதை நிரூபிப்பீர்கள்?//
மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறுங்கள்.

ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் ஜான் நம்ஸ்லே வெளியிட்ட 'தி எமெண்ட்ஸ்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 ல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.

எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:

1. ஆக்சிஜன் - 43 கிலோ கிராம்
2. கார்பன் - 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் - 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் - 1 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் - 780 கிராம்
7. பொட்டாஷியம் - 140 கிராம்
8. சோடியம் - 100 கிராம்
9. குளோர்ன் - 95 கிராம்
10. மக்னீசியம் - 19 கிராம்
11. இரும்பு - 4.2 கிராம்
12. ஃப்ளூரின் - 2.6 கிராம்
13. துத்தநாகம் - 2.3 கிராம்
14. சிலிக்கன் - 1 கிராம்
15. ருபீடியம் -0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் - 0.32 கிராம்
17. ப்ரோமின் - 0.26 கிராம்
18. ஈயம் - 0.12 கிராம்
19. தாமிரம் - 72 மில்லி கிராம்
20. அலுமினியம் - 60 மில்லி கிராம்
21. காட்மியம் - 50 மில்லி கிராம்
22. செரியம் - 40 மில்லி கிராம்
23. பேரியம் - 22 மில்லி கிராம்
24. அயோடின் -20 மில்லி கிராம்
25. தகரம் - 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் -20 மில்லி கிராம்
27. போரான் - 18 மில்லி கிராம்
28. நிக்கல் - 15 மில்லி கிராம்
29. செனியம் - 15 மில்லி கிராம்
30. குரோமியம் - 14 மில்லி கிராம்
31. மக்னீஷியம் - 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் - 7 மில்லி கிராம்
33. லித்தியம் - 7 மில்லி கிராம்
34. செஸியம் - 6 மில்லி கிராம்
35. பாதரசம் - 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் - 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் - 5 மில்லி கிராம்
38. கோபால்ட் - 3 மில்லி கிராம்
39. ஆண்டிமணி - 2 மில்லி கிராம்
40. வெள்ளி - 2 மில்லி கிராம்
41. நியோபியம் - 1.5 மில்லி கிராம்
42. ஸிர்க்கோனியம் - 1 மில்லி கிராம்
43. லத்தானியம் - 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் - 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் - 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் - 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் - 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் - 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் - 0.4 மில்லி கிராம்
50. தங்கம் - 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் - 0.2 மில்லி கிராம்
52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்
53. வாளடியம் - 0.11 மில்லி கிராம்
54. தோரியம் - 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் - 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் - 50 மில்லி கிராம்
57. பெல்யம் - 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் - 20 மில்லி கிராம்

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களில் ஆகிசிஜன் ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத் தக்கது.

Jayadev Das said...

ஆனால் இது எல்லாம் நாம் உண்ணும் உணவில் இருந்தல்லவா வருகிறது? கடவுள் நேரடியா மண்ணில் இருந்து படைத்தார் என்பதை எப்படி நிரூபிப்பீங்க?

suvanappiriyan said...

//ஆனால் இது எல்லாம் நாம் உண்ணும் உணவில் இருந்தல்லவா வருகிறது? கடவுள் நேரடியா மண்ணில் இருந்து படைத்தார் என்பதை எப்படி நிரூபிப்பீங்க? //

நாம் உண்ணும் உணவு எங்கிருந்து வருகிறது? மண்ணிலிருந்து தானே!

இந்த மண்ணிலிருந்துதான் மனிதனை இறைவன் படைத்தான் என குர்ஆன் சொல்கிறது. இது முஸ்லிம்களின் நம்பிக்கை. இன்றைய அறிவியல் உலகம் மண்ணிலும் தண்ணீரிலும் என்னென்ன மூலக் கூறுகள் உள்ளனவோ அவை அனைத்தும் மனிதனின் உடலில் உள்ளதாக் கூறுகிறது. எனவே அறிவியலை நம்பக் கூடியவர்களும் மனிதனின் மூலம் தண்ணீரும் மண்ணும் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். இந்து மதத்தில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் தான் விளக்க வேண்டும்.

Jayadev Das said...

நான் நீங்கள் சொல்லவருவதை பிரிந்து கொள்ள முயற்சிக்கிறேன், அவ்வளவு தான் சகோ...........