Followers

Tuesday, October 02, 2012

நரேந்திர மோடியின் பொய் குற்றச்சாட்டு அம்பலம்!

நரேந்திர மோடியின் பொய் குற்றச்சாட்டு அம்பலம்!



"The figures Mr Modi has given today is Rs 1800 crore. The government has not given any response to it. I never got any such information from the RTI I had filed. I have not got any figure of Rs 1800 crore. I don't know where Mr Modi is referring to it", Verma said from Hisar.

"I can say that that I haven't got any figure of Rs 1800 crore because I haven't received any information...", he added.

He claimed he was never contacted by Modi.

Verma said the information he has got was about the expenditure of Rs 80-85 lakh.

"The figures that I have I had obtained through the Foreign Ministry or the Ambassadors that the Ambassadors have spent on Sonia Gandhi's tours at their level", he said.

http://news.outlookindia.com/items.aspx?artid=776965-

ஒரு நாட்டின் முதலமைச்சர் பொது மக்கள் மத்தியில் இந்தியாவையே வழி நடத்திச் சென்று கொண்டிருக்கும் ஒரு தலைவியைப் பற்றி ஒரு செய்தியை தெரிவிக்கும் போது அது நம்பகமானதுதானா? கேள்விப்பட்டதாக சொன்ன செய்தியை சொன்னவர் உண்மையிலேயே சொன்னாரா என்றெல்லாம் சிந்திக்காமல் போகிற போக்கில் இவர் அடித்து விட்ட பொய்களின் லிஸ்டில் தற்போது புதிதாக சேர்ந்துள்ள பொய்யையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ. 1880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுவது சரியல்ல என ஆர்.டி.ஐ., ஆர்வலர் ரமேஷ் வர்மா தெரிவித்துள்ளார். பிரபல தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ரமேஷ் வர்மா. அரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வெளிநாட்டு பயணங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது, எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இவரது கேள்வியை ஆதாரமாக கொண்டு, ராஜ்கோட்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நரேந்திர மோடி, சோனியாவின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ. 1880 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியுள்ளதாக வர்மா தெரிவித்துள்ளார். தான் எழுப்பிய கேள்விக்கு இதுவரை மத்திய அரசிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. மேலும், இது தொடர்பாக தான் மோடியுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை. இந்நிலையில், மோடி இவ்வாறு அறிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக வர்மா தெரிவித்துள்ளார். பொய்யிலேயே தனது வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கும் இவருக்கு இது ஒன்றும் புதிதல்லவே!

தான் திரும்பவும் ஆட்சியில் அமர்வதற்காக தனது மக்களையே பலி கொடுத்த நரேந்திர மோடிக்கு இந்த பொய்கள் ஒன்றும் நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. ஒரு பெண்மணியின் உடல் நிலையை வைத்து அதிலும் ஓட்டு அறுவடை செய்ய முயலும் நரேந்திர மோடியின் நாலாந்தர அரசியல் இன்று பல்லிளிக்கிறது. இந்த பொய்யரை சிறந்த நிர்வாகி என்று தூக்கி பிடிக்க பலர் நாட்டிலே உள்ளதுதான் மேலும் ஆச்சரியப்பட வைக்கிறது. குஜராத் ஏற்கெனவே வளமுள்ள மாநிலம். நம் நாட்டில் எவரை குஜராத்தின் முதல்வராக ஆக்கினாலும் இதே வளர்ச்சிதான் நமக்கு கிட்டும். ஆனால் மோடியால்தான் இந்த வளர்ச்சி என்று வானத்துக்கும் பூமிக்கும் சிலர் குதித்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. ராம ராஜ்யம் நரேந்திர மோடி மூலம் கொண்டு வர பிரியப்படுகிறார்களோ என்னவோ? :-)

-----------------------------------------------------

நரேந்திரமோடி ஆட்சியின் அலங்கோலம்!

தான் ஒரு பார்லிமென்ட் எம்.பி., என்று கூறியும் தன்னை குஜராத் போலீசார் கடத்திச் சென்று சித்ரவதை செய்தனர் என்று காங்கிரசைச் சேர்ந்த ஆதிவாசி பெண் எம்.பி., ஒருவர் குற்றம் சாட்டி அழுததால், லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எம்.பி.,க்கள் பலரும் வலியுறுத்தினர்.

எம்.பி.,க்கே இந்த கதியா:லோக்சபாவில் ஜீரோ நேரத்தின்போது, காங்கிரஸ் எம்.பி.,யான கிரிஜா வியாஸ் பேசினார். அப்போது, தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் பிரதீபா என்ற பெண் எம்.பி.,யை சுட்டிக்காட்டி பேசினார். குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,யான பிரதீபா, ஆதிவாசி வகுப்பைச் சேர்ந்தவர். பிரதீபாவுக்கு நடந்ததை விளக்கி கிரிஜா வியாஸ் பேசினார். அப்போது, குஜராத் மாநிலம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, தனது தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதீபா கிளம்பினார். ஆனால், குஜராத் போலீசார் அவரை மிரட்டி தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு கடத்திச் சென்றுள்ளனர். தான் ஒரு எம்.பி., என்றும், பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டும் கூட, போலீசார் அவரை விடாமல் வைத்திருந்து சித்ரவதை செய்துள்ளனர்.

மோடியே காரணம்:பிறகு ஒரு வழியாக, அவரை ரயிலில் ஏற்றிவிட்டுள்ளனர். ரத்லம் என்ற ஊரில் தான் ரயிலில் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், 200 கி.மீ., தூரத்தில் உள்ள பரோடாவில் இருந்து பிரதீபாவை போலீசார் ரயிலேற்றி விட்டுள்ளனர். இதனால் அவர் அலைக்கழிக்கப்பட்டு, மனம் மற்றும் உடல் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆதிவாசி எம்.பி.,யான இவருக்கு இந்நிலை ஏற்படுவதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே காரணம். அவரது உத்தரவின் பேரில் தான் அனைத்துமே நடந்துள்ளன.
இவ்வாறு கிரிஜா வியாஸ் பேசியதும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து, மோடிக்கு எதிராக குரல் கொடுத்தனர். அவையில் அமளி காணப்பட்டது.

இதையடுத்து எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், "இதுகுறித்து குஜராத் மாநில முதல்வரிடம் விளக்கம் கேட்கப்படும். இந்த சம்பவம் குறித்து முழு தகவல்களும் கிடைத்த பிறகு, இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும். இருப்பினும் ஆதிவாசி எம்.பி.,க்கு அது போன்ற அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்னையை அவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பலாம்' என்றார்.

முன்னதாக கிரிஜா வியாஸ் பேசும்போது, அருகில் இருந்த பிரதீபா கண்ணீர் விட்டபடி அழுது கொண்டும், தனது கைகளில் ஏற்பட்ட காயங்களை காட்டியபடியும் இருந்தார். இதனால், அவையில் பரபரப்பு காணப்பட்டது. எம்.பி.,க்கள் பலரும் உணர்ச்சிபூர்வமாகக் காணப்பட்டனர்.

நரேந்திர மோடி பிரதமரானால் என்னவெல்லாம் அரங்கேறும் என்பதற்கு இந்த ஆதி வாசி எம்பியின் நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.




36 comments:

UNMAIKAL said...

பதிவர்களே, வாசகர்களே,

தாங்களுடைய கவனத்திற்கு

"UNMAIKAL" பெயரில் அசல் "UNMAIKAL" அடையாளமான தங்க தராசு படத்தையும் காப்பி செய்து போட்டு

ஆள்மாறாட்ட‌ம் செய்து

தீய நோக்கத்துடன் "UNMAIKAL" பெயரில் போலியாக‌
வ‌லைத்தள‌ங்க‌ளில் க‌ருத்துக்கள் பதிவு செய்ய ஆர‌ம்பித்து விட்டார்க‌ள் விஷ‌மிக‌ள்.
-------------------------
அச‌ல் " "UNMAIKAL"

IF YOU CLICK UNMAIKAL IN COMMENT

THE PROFILE SHOULD APPEAR LIKE BELOW


http://www.blogger.com/profile/14079258396999150015

THIS IS TRUE UNMAIKAL BLOGGER ID.


UNMAIKAL


View Full Size

On Blogger since October 2011

Profile views - 526

About me

--------------------


IF YOU CLICK "UNMAIKAL" IN COMMENT BY THE FORGERER

THE PROFILE SHOULD APPEARING LIKE BELOW


THIS IS FALSE / FORGERY UNMAIKAL. PROFILE.


ஆள் மாறாட்ட‌ போலி “UNMAIKAL”


http://www.blogger.com/profile/16399483917260181454

Profile Not Available

The Blogger Profile you requested cannot be displayed. Many Blogger users have not yet elected to publicly share their Profile.


If you're a Blogger user, we encourage you to enable access to your Profile.

Help Centre | Terms of Service | Privacy | Content Policy | Developers

Copyright © 1999 – 2012 Google




==================================

அச‌ல் " "UNMAIKAL" BLOGGER ID:

http://www.blogger.com/profile/14079258396999150015

==================================

ஆள் மாறாட்ட‌ போலி
FORGED: “ UNMAIKAL “ BLOGGER ID:

http://www.blogger.com/profile/16399483917260181454

இராஜகிரியார் said...

மோடியின் திறமை(?)யை பற்றி மீடியாக்கள் ஏற்படுத்திய இந்த மாய பிம்பம் மாற்று மத சகோதரர்களையும் தாண்டி முஸ்லிம்களையும் நம்ப வைத்திருக்கிறது என்றால் இந்த மீடியாக்கள் பற்றி என்னவென்பது? நடுநிலையான மீடியாக்கள் வரும்வரை இதுபோன்ற மாய பிம்பங்களை உடைத்தெறிவது என்பது இயலாது என்றே தோன்றுகின்றது.

மேலும் செந்திலுடைய பெயரை நீங்கள் (இரண்டாவது முறையாகவும்) குறிப்பிட்டிருப்பதை ஒரு முஸ்லிமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு திறமை உள்ளதும் இல்லாததும் தங்களுக்கு எப்படி தெரியும்? அப்படியே இல்லை என்றாலும் ஒரு சம்பந்தமும் இல்லாமல் அவருடைய பெயரை குறிப்பிட்டு இழிவு படுத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

இஸ்லாம் போற்றும் மனித உரிமைக்கு இது முற்றிலும் எதிரானது. இது ஒரு நல்ல முஸ்லிமுக்கு அழகல்ல.

தவறு செய்வது மனித இயல்பு. சுட்டிக் காட்டுவது ஒரு முஸ்லிமின் கடமை என்பதால் சொல்கிறேன். எதிர் காலத்தில் தவிர்த்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

suvanappiriyan said...

இராஜகிரியார்!

//அவருக்கு திறமை உள்ளதும் இல்லாததும் தங்களுக்கு எப்படி தெரியும்? அப்படியே இல்லை என்றாலும் ஒரு சம்பந்தமும் இல்லாமல் அவருடைய பெயரை குறிப்பிட்டு இழிவு படுத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

இஸ்லாம் போற்றும் மனித உரிமைக்கு இது முற்றிலும் எதிரானது. இது ஒரு நல்ல முஸ்லிமுக்கு அழகல்ல.//

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! இனி சற்று கவனமாக இருந்து கொள்கிறேன். முன்பு அதிகம் திரைப்படங்கள் பார்த்ததன் பாதிப்புகளாக இருக்கலாம் :-)

Unknown said...

மோடியின் குற்றசாட்டை அம்பலபடுத்தியமைக்கு நன்றி ...

UNMAIKAL said...

மோடிக்கு எதிராக திரும்பிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்டின் சஸ்பெண்ஷன்-ஒரு வழக்கில் ரத்து

அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில், முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக திரும்பிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்டுக்கு ஒரு வழக்கில் விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அந்த நடவடிக்கையை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

2002ம் ஆண்டு குஜராத்தில் வெடித்த பெரும் இனக்கலவரத்தில் ஆயிரத்திற்கும மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் பட் ஒரு அபிடவிட்டைத் தாக்கல் செய்தார்.

அதில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக முக்கியத் தகவலை அளித்திருந்தார்.

இதையடுத்து பட் மீது மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மோடி அரசு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சஸ்பெண்ட் செய்தது.

சட்டவிரோதமாக பணிக்கு வராமல் இருத்தல், துறை ரீதியிலான விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகத் தவறியது,

அரசு வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய காரணங்களைக் காட்டி பட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது போக அவர் மீது 3 வழக்குகளும் போடப்பட்டன.


இந்த நிலையில் சஞ்சய் பட் மீதான ஒரு நடவடிக்கையை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அந்த வழக்கில் அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் மற்ற இரு வழக்குகளும் தொடர்வதாகவும், அதில் சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்வதாகவும் குஜராத் மாநில முதன்மை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.நந்தா கூறியுள்ளார்.

தன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து சஞ்சய் பட் மனு ஒன்றை மத்திய மறு ஆய்வுக் கமிட்டியிடம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஆகஸ்ட் 6ம் தேதி மறு ஆய்வுக் கமிட்டி பரிசீலனை செய்தது.

அப்போது, சஞ்சய் பட் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ஒரு வருடத்திற்கு மேலும் நீ்டிக்கத் தேவையில்லை என்று மத்திய உள்துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.


இதையடுத்து ஒரு வழக்கில் மட்டும் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதன்படி அந்த வழக்கில் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்தாகியுள்ளது.

பட் மீது ஏற்கனவே இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தனக்குக் கீவ் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவரை கட்டாயப்படுத்தி, போலியான அபிடவிட்டைத் தாக்கல் செய்ய வைத்ததாக ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது.

இந்த வழக்கில் கைதாகி 6 நாள் போலீஸ் காவலிலும் பட் வைக்கப்பட்டிருந்தார்.

இதேபோல அதிகார வரம்புக்கு மீறி ஆயுதங்களை வைத்திருந்ததாக ஒரு வழக்கும் அவர் மீது உள்ளது.

மோடிக்கு எதிராக என்ன செய்தார் பட்?

குஜராத் கலவரத்தின்போது குஜராத் மாநில உளவுப் பிரிவின் கூடுதல் துணை ஆணையராக பதவி வகித்து வந்தார் பட்.

மேலும் நரேந்திர மோடி வீட்டில் கலவரத்திற்கு முன்பு கூடிய கூட்டத்தின்போதும் பட் உடன் இருந்தார்.

அப்போது குஜராத் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தாமல் விடுமாறும்,


இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்கும்படியும்

காவல்துறை உயர் அதிகாரிகளை மோடி அறிவுறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார் பட்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த அபிடவிட்டிலும் தெரிவித்திருந்தார்.

SOURCE: THATSTAMIL.

UNMAIKAL said...

சோனியா செலவுக் கணக்கை கேட்கும் மோடி முதலில் தன் கணக்கைச் சொல்லட்டும் -ஆர்டிஐ சேவகர் விளாசல்

அகமதாபாத்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியினம மருத்துவச் செலவுகள் குறித்து மத்திய அரசிடம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விளக்கம் கேட்டு வரும் நிலையில்,

நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்களின் பயணச் செலவுகள் குறித்து ஒரு பெண் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டுள்ளார்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான விளக்கத்தை நரேந்திர மோடி அரசு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள், மருத்துவச் செலவுகள், தங்கும் செலவுகளுக்காக ரூ. 1880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

இதை காங்கிரஸ் மறுத்து வருவதோடு, அதற்கான ஆதாரத்தையும் கோரியது.

ஆனால், பத்திரிக்கைகளில் வந்த செய்தி தான் இது என்று மோடி கூறுகிறார்.

எந்தப் பத்திரிக்கை அது என்ற காங்கிரசின் கேள்விக்கு பாஜகவிடம் பதில் இல்லை.

இதையடுத்து நரேந்திர மோடி மீது வழக்குத் தொடரப் போவதாக காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

இந் நிலையில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 2007ம் ஆண்டு பங்கேற்க பெண்கள் முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகள்,

அதற்கு ஆன செலவு விவரத்தைக் கோரி திருப்தி ஷா என்ற பெண் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் குஜராத் அரசிடம் விளக்கம் கோரியுள்ளார்.

ஆனால், 5 ஆண்டுகள் ஆன பின்னரும் அதன் விவரத்தை மோடி அரசு இன்னும் தராமல் இழுத்தடித்து வருகிறது.

இது தொடர்பாக அவர் மீண்டும் மீண்டும் கடிதங்கள் அனுப்பியும் இதுவரை பதில் இல்லை.

இது தொடர்பாக குஜராத் பொதுத்துறை திருப்தி ஷாவுக்கு எழுதிய கடிதத்தில்,

மோடி 27 இடங்களில் மாநாடுகளில் பங்கேற்றதாக மட்டும் கூறியுள்ளது.

ஆனால், செலவு விவரத்தைத் தரவில்லை.

முதல்வரின் அலுவலகம் செலவு விவரத்தைத் தராததால், செலவை பூஜ்யம் என்று கணக்கிட்டுக் கொள்ளுமாறும் திருப்தி ஷாவுக்கு பொதுத்துறை கடிதம் எழுதியுள்ளது.

ஆனால், இதை ஏற்க முடியாது என்று கூறும் திருப்தி ஷா, இந்த 27 இடங்களுக்கும் மோடி ஹெலிகாப்டரில் பறந்தார். இதனால் ஏராளமாக செலவாகியுள்ளது.
எனவே விவரத்தை தந்தே ஆக வேண்டும் என்கிறார்.

இது தொடர்பாக குஜராத் தலைமை தகவல் கமிஷ்னருக்கு ஷா புகார் தரவே, இது குறித்து அவரும் விசாரித்து விளக்கம் தருமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.

ஆனாலும் இதுவரை மோடியின் அலுவலகம் விளக்கம் தரவில்லை என்று ஷா குற்றம் சாட்டியுள்ளார்.


SOURCE: THATSTAMIL

shueib said...

French rapper stuns fans, makes first TV appearance wearing hijab
Monday, 01 October 2012


French rapper Mélanie Georgiades, known as Diam’s, made her first TV appearance with her new image. (Composed by Al Arabiya)

By Ramdane Belamri
AL ARABIYA
inShare.34 Amid a nationwide debate in France surrounding attitudes towards the Islamic veil, or hijab, a French rapper has surprised fans by announcing her conversion to Islam and choosing to wear a headscarf.

Mélanie Georgiades, known as Diam’s, has gone through what onlookers have described as a “complete transformation” from an image she had prior to 2009.

Since 2009, Diam’s had been unusually absent from the mainstream rap scene, prompting more than three years of controversy over her whereabouts, despite making the odd public appearance with her scarf.
But recently the French rapper made her first television appearance with her new image.

Diam’s appeared in an exclusive TV interview with French TV station TF1, to talk about a past experience with drugs, including hallucinating narcotics, and being in a mental asylum until she discovered the “serenity of Islam.” The rapper said the religion was introduced to her by coincidence, when she saw a Muslim friend praying.

Diam’s, said she has been married for over a year and is a now a new mother, moving far away from her drug-relate past.

In her TV interview she said her “conversion to Islam was the result of a personal conviction, after understanding the religion and reading the Holy Quran.”

When asked about wearing the hijab in France, a country which has banned the niqab, she said: “I believe that I live in a tolerant society, and I don’t feel hurt by criticism, but by insults and stereotyping and ready-made judgments.”

Asked by her host about why she is wearing a hijab while many Muslim women don’t wear it, and don’t find it to be a religious obligation, she answered: “I see it as a divine order or a divine advice, this brings joy to my heart and for me this is enough.”

Stardom?
Diam’s said that by converting to Islam she gained comfort, adding that stardom doesn’t fit in with her life anymore, adding “this has warmed my heart, as I know now the purpose of my existence, and why am I here on Earth.”

Diam’s criticized the media which photographed her coming out of one of the mosques in France, wearing her Hijab and looking at her mobile, preceded by a man in a training suit, which many believed to be her husband.

Discussing how her life was like before her conversion to Islam, Diam’s said: “I was very famous and I had what every famous person looks for, but I was always crying bitterly alone at home, and this is what none of my fans had felt.”

She added: “I was heavily addicted to drugs, including hallucinating narcotics and was admitted in mental asylum to recover, but this was in vain until I heard one of my Muslim friends saying ‘I am going to pray for a while and will come back,’ so I told her that I want to pray as well.”

Recalling that moment, Diam’s said: “it was the first time that I touched the floor with head, and I had a strong feeling that I have never experienced before, and I believe now that kneeling in prayer, shouldn’t be done to anyone but Allah.”


Islam, a religion of tolerance
Diam’s said that she moved to Mauritius to read the Quran, and have a better understanding of Islam, discovering during her retreat, the tolerance of Islam.

When asked by her host about her views on Islam, and those who commit all the murders and atrocities pretending to be doing it in the name of religion, she answered: “I think we should differentiate between the ignorant and the knowledgeable, and the ignorant should not speak about what he doesn’t know, Islam does not allow murdering innocent victims the way we see it nowadays.”
.
http://english.alarabiya.net/articles/2012/10/01/241253.html

Senthilkumar said...

// இந்தியாவையே வழி நடத்திச் சென்று கொண்டிருக்கும் ஒரு தலைவி //

Ha ha ha.... you are a humorous person.

suvanappiriyan said...

rahman comment edited....

//UNMAIKAL" பெயரில் அசல் "UNMAIKAL" அடையாளமான தங்க தராசு படத்தையும் காப்பி செய்து போட்டு ஆள்மாறாட்ட‌ம் செய்து தீய நோக்கத்துடன் "UNMAIKAL" பெயரில் போலியாக‌ வ‌லைத்தள‌ங்க‌ளில் க‌ருத்துக்கள் பதிவு செய்ய ஆர‌ம்பித்து விட்டார்க‌ள் விஷ‌மிக‌ள். ------------------------- அச‌ல் " "UNMAIKAL" //

பேசாம நீங்க சொந்த id லையே கமெண்ட் போடுங்களேன்.

UNMAIKAL said...

சுவனப் பிரியன் said...

// rahman comment edited....

UNMAIKAL" பெயரில் அசல் "UNMAIKAL" அடையாளமான தங்க தராசு படத்தையும் காப்பி செய்து போட்டு ஆள்மாறாட்ட‌ம் செய்து தீய நோக்கத்துடன் "UNMAIKAL" பெயரில் போலியாக‌ வ‌லைத்தள‌ங்க‌ளில் க‌ருத்துக்கள் பதிவு செய்ய ஆர‌ம்பித்து விட்டார்க‌ள் விஷ‌மிக‌ள். -------------------------
அச‌ல் " "UNMAIKAL" .

பேசாம நீங்க சொந்த id லையே கமெண்ட் போடுங்களேன். //

குலாம் என சொந்த பெயரிலே கமென்ட் போட்டுக்கொண்டிருந்தவருக்கும்

போலியாக "குலாம்" என ஐ.டி உருவாக்கி துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டான் இந்த விஷமி சாக்கடை ஜந்து.


.

NKS.ஹாஜா மைதீன் said...

கொலைகாரனுக்கு பொய் சொல்லவா தெரியாது?

UNMAIKAL said...

சோனியாவின் சிகிச்சைக்கு அரசு எந்த செலவும் செய்யவில்லை:

தகவல் ஆணையம்-

மோடியின் புகார் 'புஸ்'!


டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவச் செலவுக்காக மத்திய அரசு எந்த செலவும் செய்யவில்லை என்று தேசிய தகவல் ஆணையம் கூறியுள்ளது.

இதன்மூலம் இந்த விஷயத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி ஆகியோர் சொல்லி வரும் புகார்கள் தவறானவை என்பது உறுதியாகியுள்ளது.

சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள், தங்கும் செலவு, மருத்துவ செலவுக்காக மத்திய அரசு ரூ. 1,880 கோடி செலவிட்டுள்ளதாக முதலில் சாமியும் பின்னர் மோடியும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந் நிலையில் இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நவீன் குமார் என்பவர் மனு செய்தார்.

இதற்கு பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை மற்றும் மத்திய அரசின் பிற துறைகளிடம் இருந்து விவரம் பெற்று உடனடியாக பதில் தந்துள்ளது தகவல் ஆணையம்.

அதில், சோனியா காந்தியின் மருத்துவச் செலவுக்காக மத்திய அரசின் எந்தத் துறையும் எந்த செலவையும் செய்யவில்லை.

இதுவரை அரசுக்கு இந்த விஷயத்தில் எந்த செலவும் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ சிகிச்சைக்காக சோனியா செலவிட்ட தொகை என்பது அவரது தனிப்பட்ட விஷயம்.

எந்த தனிப்பட்ட நபரின் சொந்த செலவு குறித்தும் தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்க முடியாது என்று கூறியுள்ளது ஆணையம்.

SOURCE: THATSTAMIL.

suvanappiriyan said...

சகோ மைதீன்!

//மோடியின் குற்றசாட்டை அம்பலபடுத்தியமைக்கு நன்றி ...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு செந்தில் குமார்!

//Ha ha ha.... you are a humorous person. //

பிரதமர் பதவிக்கு லாயக்கானவர் என்று மோடி, அத்வானி, சோனியா காந்தி என்று மூன்று பேர் நிறுத்தி வைக்கப்பட்டால் எனது தெரிவு சோனியா காந்தியாகத்தான் இருக்கும்.

இந்த நாட்டின் முன்னேற்றம் குறித்து எந்த நேரமும் சிந்திக்கக் கூடியவர் சோனியா என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

suvanappiriyan said...

சகோ ஹாஜா மைதீன்!

//கொலைகாரனுக்கு பொய் சொல்லவா தெரியாது?//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ராவணன் said...

அண்ணாச்சி...இத்தாலி சோனியா மாசு மருவற்றவர். இதுவரை எந்தத் தவறும் செய்யாதவர்.

அவர் ஒரு அப்பாவி அண்ணாச்சி. வாயில் விரலை வைத்தாலும் கடிப்பதோ சப்புவதோ கூட அவருக்குத் தெரியாது.

ராவணன் said...

////திரு செந்தில் குமார்!

//Ha ha ha.... you are a humorous person. //

பிரதமர் பதவிக்கு லாயக்கானவர் என்று மோடி, அத்வானி, சோனியா காந்தி என்று மூன்று பேர் நிறுத்தி வைக்கப்பட்டால் எனது தெரிவு சோனியா காந்தியாகத்தான் இருக்கும்.

இந்த நாட்டின் முன்னேற்றம் குறித்து எந்த நேரமும் சிந்திக்கக் கூடியவர் சோனியா என்பதில் மாற்றுக் கருத்தில்லை////

எப்படி அண்ணாச்சி இப்படி காமடியாக உங்களால் பேசமுடியுது?

bandhu said...

//இந்த நாட்டின் முன்னேற்றம் குறித்து எந்த நேரமும் சிந்திக்கக் கூடியவர் சோனியா என்பதில் மாற்றுக் கருத்தில்லை.//
you are really naive!

Nizam said...

நாளைக்கு Advani ஒர் அறிக்கை விடுவார் மோடி அவசரத்தில் இந்தோனிசிய ரூபியா (IDR) 1880 கோடி என்று சொல்லுவதற்கு பதிலாக இந்தியா ரூபாய்யில் சொல்லிவிட்டார். அதற்கு Digvijay Singh சொல்லுவரு அவருக்கு அவசரத்தை முடித்து கொண்டு பிறகு பொறுமையாக அவதுறை பறப்பலமே என்று சொல்லுவார்கள்.

k.rahman said...

good post.
my two cents

1. malnutrition in gujarat is higher than the national average. modi has no answers for that. media also are not highlighting that as much as they cover about his 'achievements'.

2. gujarat has always been a prosperous state even before modi became chief minister. however all the credit has been given to him as if he has made a huge turn around.

Nasar said...

சகோஸ்..கண்ணன்,இக்பால் செல்வன் பார்த்திங்களா ..!! இந்த அநியாயத்தை !!
இந்த முசல்மாணுங்க வாளை காட்டி இங்கிலீஷ் பாடகர் KATE STEVEN ஐ
முசல்மான் ஆக்கிட்டாங்க முன்பு...இப்போ பிரெஞ்ச் பாடகி DIAM'S ஐயும்
முசல்மான் ஆக்கிபுட்டாங்க...மேலும் முசல்மான் DIAM'S விடியோவை
YOUTUBE இல் இருந்ததை இரண்டு மணி நேரத்துக்குள் நீக்கிட்டாங்க ...ஆனால்
சர்ச்சைக்குரிய "அந்த " அமெரிக்கன் விடியோவை இன்னும் நீக்கவில்லை..
"இதுதாண்டா அமெரிக்காவின் ஜன"நாய்"கம் ...
தகவலுக்கு மிக்க நன்றி..SAHUIEB BRO http://english.alarabiya.net/articles/2012/10/01/241253.html

முட்டாப்பையன் said...

வணக்கம் சுபி சாமிகள்.
உங்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கோம்.மோடி எல்லாம் கிடக்கட்டும்.
நம்ம ஊர் செந்தில் என்றால் நடிகர் செந்தில்தானே.அவர் தேவர் என்பதால் உங்களுக்கு ஆகாதவரா?ராஜபிரியன் சொன்னாலும் நீங்க சாதாரணமாக,வழக்கமாக உங்க பாஷையில் வழவழ கொழகொழா என்று பதில்.உங்க பதிவில் அவர் பேரை எடுக்கவில்லை பாருங்க.அப்ப செந்தில் என்றால் இளக்காரமா?ஏன்?இந்த வெறி. அவர் தேவர் என்பதால் தானே?

அப்ப தேவர் என்றால் உனக்கு கீழ்த்தரமா?

இந்த கமமென்ட் நீங்க வெளி இடாவிட்டால் இந்த கமெண்ட் உங்க சகோ போடும் பதிவில் எல்லாம் மீண்டும் மீண்டும் போடப்படும்.
எங்கள் பதிவில் இதை காப்பி&பேஸ்ட் பண்ணி போட்டுக்கொல்கிறோம்.

கடைசியில் எங்களையும் தேவர்மகன் கமல் மாதிரி கொலை(பதிவுலகில்)
பண்ண வைத்துவிடுவீர்கள் போல. நாங்கள் நடு நிலை தவறாமல் இருக்க
உறுதி பூண்டுள்ளோம்.எங்களை கெடுக்காதீர்கள்.

நீங்களும்,உங்களை சார்ந்தவர்களும் எங்களை எரிச்சல் மூட்டுகிரீர்கள்.புரிதலுக்கு நன்றி!

suvanappiriyan said...

சகோ முட்டாப் பையன்!

//உங்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கோம்.மோடி எல்லாம் கிடக்கட்டும்.
நம்ம ஊர் செந்தில் என்றால் நடிகர் செந்தில்தானே.அவர் தேவர் என்பதால் உங்களுக்கு ஆகாதவரா?ராஜபிரியன் சொன்னாலும் நீங்க சாதாரணமாக,வழக்கமாக உங்க பாஷையில் வழவழ கொழகொழா என்று பதில்.உங்க பதிவில் அவர் பேரை எடுக்கவில்லை பாருங்க.அப்ப செந்தில் என்றால் இளக்காரமா?ஏன்?இந்த வெறி. அவர் தேவர் என்பதால் தானே?//

செந்தில் தேவர் சாதியை சேர்ந்தவர் என்பது எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும். அவர் படத்தில் நடிப்பதை நடிப்பாகவே பாருங்களேன். இங்கு ஏன் சாதியை வந்து புகுத்துகிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் தேவரா? எனக்கு தேவரானாலும், தலித் ஆனாலும், பார்ப்பணர் ஆனாலும் எல்லாம் ஒன்றே. அனைவரும் ஒரு தாய் மக்களே! தயவு செய்து சாதி வெறியை தூக்கி எறியுங்கள். எல்லோரும் இந்தியர் என்ற பரந்த மனப்பான்மைக்கு வாருங்கள்.

suvanappiriyan said...

சகோ சுஐப்!

//Diam’s appeared in an exclusive TV interview with French TV station TF1, to talk about a past experience with drugs, including hallucinating narcotics, and being in a mental asylum until she discovered the “serenity of Islam.” The rapper said the religion was introduced to her by coincidence, when she saw a Muslim friend praying.//

சிறந்த தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

முட்டாப்பையன் said...

சுவனப் பிரியன் said...

சகோ முட்டாப் பையன்!

//உங்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கோம்.மோடி எல்லாம் கிடக்கட்டும்.
நம்ம ஊர் செந்தில் என்றால் நடிகர் செந்தில்தானே.அவர் தேவர் என்பதால் உங்களுக்கு ஆகாதவரா?ராஜபிரியன் சொன்னாலும் நீங்க சாதாரணமாக,வழக்கமாக உங்க பாஷையில் வழவழ கொழகொழா என்று பதில்.உங்க பதிவில் அவர் பேரை எடுக்கவில்லை பாருங்க.அப்ப செந்தில் என்றால் இளக்காரமா?ஏன்?இந்த வெறி. அவர் தேவர் என்பதால் தானே?//

செந்தில் தேவர் சாதியை சேர்ந்தவர் என்பது எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும். அவர் படத்தில் நடிப்பதை நடிப்பாகவே பாருங்களேன். இங்கு ஏன் சாதியை வந்து புகுத்துகிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் தேவரா? எனக்கு தேவரானாலும், தலித் ஆனாலும், பார்ப்பணர் ஆனாலும் எல்லாம் ஒன்றே. அனைவரும் ஒரு தாய் மக்களே! தயவு செய்து சாதி வெறியை தூக்கி எறியுங்கள். எல்லோரும் இந்தியர் என்ற பரந்த மனப்பான்மைக்கு வாருங்கள்.//////////////////

இந்த பதில் உங்களில் இருக்கும் சுன்னி,வாபி,இன்ன பிற அனைத்துக்கும் உண்டுதானே?
மாட்டுநீங்க தல.
வாங்க.இதுக்குதான் காத்துக்கொண்டு இருக்கோம்.இந்த வார்த்தையை இனி நீங்க காப்பாத்துவீங்க என்று நம்புகிறோம்.

ஆதாரத்துக்காக இந்த கமெண்ட் எங்கள் பதிவில் காப்பி&பேஸ்ட்.

முட்டாப்பையன் said...

என்ன சுபி சாமிகளே.?நீங்க எதுக்குமே லாய்க்கு இல்லை என்று தீர்ப்பு சொல்லிடலாமா?

எங்க கிட்டவும் வரலை.சரி நான் அலுவலகத்தில் இருக்கிரேன்.பிறகு பார்ப்போம்.

முட்டாப்பையன் said...

என்ன சுபி சாமிகளே.?நீங்க எதுக்குமே லாய்க்கு இல்லை என்று தீர்ப்பு சொல்லிடலாமா?

எங்க கிட்டவும் வரலை.சரி நான் அலுவலகத்தில் இருக்கிரேன்.பிறகு பார்ப்போம்.

இராஜகிரியார் said...

//செந்தில் தேவர் சாதியை சேர்ந்தவர் என்பது எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும்.//

எனக்கும் இப்போ தான் சகோ. தெரியும்.

சகோ. முட்டாபையன்,

//ஏன்?இந்த வெறி. அவர் தேவர் என்பதால் தானே?
அப்ப தேவர் என்றால் உனக்கு கீழ்த்தரமா?//

மனிதனை மனிதனாக பாருங்கண்ணா...!

நான் தவறை சுட்டி காட்டினேன். அவரும் திருத்தி கொள்வதாக கூறிவிட்டார். பிறகு ஏன் இந்த சிண்டு முடியும் வேலை?

முஸ்லிம்களுக்கு அவர் தேவரானாலும் அல்லது தலித்தானாலும் இன்னும் வேறு யாரானாலும் அனைவரும் ஒன்றே.
ஏனெனில் இஸ்லாத்தின் படி அனைவரும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள் தான். வெவ்வேறு பாகங்களிலிருந்து பிறந்தவர்கள் இல்லை.

சகோ. சுவனப் பிரியன்,
தயவு செய்து அவரின் பெயரை பதிவிலிருந்து நீக்கி விடுங்கள். ஏனெனில் எப்படியாவது சிண்டு முடிந்துவிட வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைகிறது.

நன்றி.

உதயம் said...

முஸ்லிம் என்றால் மூட நம்பிக்கையை சாடக்கூடாது
முஸ்லிம் என்றால் மதுவின் தீமையைப் பிரச்சாரம் செய்யக்கூடாது
முஸ்லிம் என்றால் இஸ்லாத்தைப் பற்றி எழுதக்கூடாது
முஸ்லிம் என்றால் பொது இடத்தில் போராட்டம் செய்யக்கூடாது
முஸ்லிம் என்றால் சமூக அவலத்தை சுட்டிக்காட்ட கூடாது
முஸ்லிம் என்றால் நியாயவான்களை பாராட்டி எழுதக் கூடாது

இன்னும் எத்தனை "கூடாது" இருக்கிறதோ தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.

உதயம் said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

சகோ உதயம்!

//இன்னும் எத்தனை "கூடாது" இருக்கிறதோ தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். //

இன்னும் அவர்களுக்கு என்னவெல்லாம் தோணுகிறதோ அதனை அவர்களே நிரப்பிக் கொள்வார்கள். :-)

UNMAIKAL said...

சென்னையில் சொகுசு விமானமான
`ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் படம் பிடித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர்

தீவிரவாதிகளா என்று போலீசார் விசாரணை


ஆலந்தூர், அக்.4-

சென்னையில் இருந்து டெல்லி செல்லும் சொகுசு விமானமான `ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் புகைப்படம் எடுத்த கேரளா வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

`ட்ரீம் லைனர்' விமானம்

சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு டெல்லிக்கு ஏர்-இந்தியா `ட்ரீம் லைனர்' விமானம் செல்ல இருந்தது.

இதில் பயணம் செய்ய 206 பயணிகள் தயாராக இருந்தனர்.

விமானம் புறப்பட இருந்த நேரத்தில் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள சொகுசு இருக்கையில் பயணம் செய்ய இருந்த

கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த

அமீத்தாவா (வயது 35),

மன்சூர் (24) ஆகியோர்,

"நாங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை'' எனக்கூறி வெளியே செல்ல முயன்றனர்.

விமானம் புறப்பட இருந்த கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை என்று கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.

செல்போனில் புகைப்படம்

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.

மேலும் அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை, பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி பார்த்தனர்.

அதில் `டரீம் லைனர்' விமானத்தின் அனைத்து பகுதிகளும், விமானி அறைகளும் புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசார்,

உளவுத் துறையினர் மற்றும் கிïபிராஞ்ச் போலீசார் வந்து 2 கேரளா வாலிபர்களிடமும் விசாரித்தனர்.

அவர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருந்தார்களா? என பயந்து, விமானத்தில் இருந்த 204 பயணிகளையும் கீழே இறக்கி விமானத்தில் சோதனை நடத்தினார்கள்.

அதில் வெடிகுண்டு ஏதுவும் இல்லை என தெரியவந்தது.

தீவிர விசாரணை

இதையடுத்து மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுமார் 13/4 மணி நேரம் தாமதமாக பகல் 12.30 மணிக்கு `ட்ரீம் லைனர்' விமானம் புறப்பட்டு சென்றது.

கேரளா வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில்,

மன்சூர், சுற்றுலா நிர்வாக துறையில் இறுதி ஆண்டு படித்து வருவதாகவும்,

அமீத்தாவா கொச்சியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.

இவர்கள் ஏன் `ட்ரீம் லைனர்' விமானத்தை புகைப்படம் எடுத்தனர்?.

இவர்கள் தீவிரவாதிகளா அல்லது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என 2 பேரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=762532&disdate=10/4/2012


நூற்றுக்கணக்கான இணையதளங்களில்

`ட்ரீம் லைனர்' விமானத்தை பற்றிய அனைத்து விபரங்களும்.

விரிவாக `ட்ரீம் லைனர்' விமானத்தின் அனைத்து உட்பகுதிகளின் புகைப்படங்களும் காணொளிகளும்

ஏர் இந்தியா `ட்ரீம் லைனர்' உட்பட‌ இருக்கின்றன.

அதிலொன்று

இதோ சொடுக்கி >>>> Air India 787-8 Dreamliner Cabin Walk-through <<<< பார்க்கவும்.


இந்த விடியோவில் உள்ளதை விடவா அமீத்தாவா (வயது 35),

மன்சூர் (24) ஆகியோர் தங்கள் செல்போனில் படம் பிடித்திருப்பார்கள்? ?


ஆயிரக்கணக்கான மறுக்கமுடியாத சாட்சியங்கள் இமயமலை குவிந்து இருந்தும்

கொலைகார அத்வானி, பால் தக்கரே, மோடி போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல் இஸட் பாதுகாப்புடன் வள‌ர்க்கும் இந்திய அரசாங்கம்

இந்தியாவில் முஸ்லீம் அப்பாவிகளை எந்த நொண்டிச்சாக்கிலும் கைது செய்யலாம் என்னும் வன் கொடுமையை இதிலிருந்து விளங்கி கொள்ளுங்கள்.


.

UNMAIKAL said...

அட தமிழா! தமிழா!! தமிழா!!!

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது:

கர்நாடக தமிழ்ச் சங்கம்



பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது.

இதனை கர்நாடகம் ஏற்க மறுத்தது.

பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

உச்சநீதிமன்றமும் தமிழகத்துக்கு காவிரி நதிநீரை திறந்துவிட உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டது.

இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகளும், விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பும் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று மைசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் புகழேந்தி,

கர்நாடகாவில், கன்னட தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டபோதெல்லாம், தமிழ்ச் சங்கங்கள் ஒன்றாக இணைந்து கன்னட சகோதரர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

ஆனால் தற்போது கர்நாடகத்தில் வசிப்பவர்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை.

விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லை. தீவனம் இல்லை.

இந்தநிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டது சரியல்ல.

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக மைசூர் அரண்மனை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பு சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது.

பின்னர் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

http://tamil.oneindia.in/news/2012/10/04/india-karnataka-tamil-sangam-protests-against-tamilnadu-162572.html

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
இராஜகிரியார் said...

//இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பும் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.//

முல்லை பெரியாறு விவகாரத்தில் இங்குள்ள மலையாளத்தவர்கள் கேரளாவுக்கு எதிராக எதிர்நிலை எடுத்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

UNMAIKAL said...

WARNING. WARNING.
DANGER. DANGER.



மேலே உள்ள கருத்து

//Blogger அமைதி மார்க்கம் said...

"குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் சிக்கவைக்கப்படுகிறார்கள்." DO NOT CLICK HERE

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று தற்போது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராக பணியாற்றி வரும் மார்கண்டே கட்சு ஊடகங்கள் மற்றும் காவல்துறையினரின் முஸ்லிம் விரோத போக்கை வன்மையாக கண்டித்துள்ளார். ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பதோடு முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையும் குண்டு வெடிப்பை நிகழ்த்துபவர்கள் என்பது போல பத்திரிக்கைகளும், காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்திய காவல்துறைனருக்கு உண்மையான தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கான போதிய பயிற்ச்சிகள் அளிக்கப்படாததால் தான் குண்டுவெடிப்புகள் நிகழ்த்திய உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.//


என்று உள்ள கருத்து

சாக்கடையில் பிறந்த விஷ ஜந்துவால் பதிக்கப்ப்ட்டிருக்கிறது.

அதில் கண்டுள்ள

"குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் சிக்கவைக்கப்படுகிறார்கள்"

என்ற லின்க்கை க்ளிக் செய்யாதீர்கள்.

அது வைரஸ் அடங்கிய லின்க்.