Followers

Wednesday, October 31, 2012

நாட்டை ஆள்வது முகேஷ் அம்பானியா! மன்மோகன் சிங்கா!

அர்விந்த் கெஜ்ரிவாலின் அடுத்த குற்றச்சாட்டு ஆரம்பம்!



ஏற்கெனவே ராபர்ட் வதேராவின் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்தார். பிஜேபியின் தலைவர் நிதின் கட்கரி செய்து ஊழல்களையும் பட்டியலிட்டார். தற்போது ரிலையன்ஸ் கம்பெனி செய்த தில்லுமுல்லுகளையும் அதற்கு பாஜகவும் காங்கிரஸூம் எவ்வாறு துணை போயின என்பதை நேற்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். காங்கிரஸூம் ஊழல் மலிந்திருக்கிறது. பாஜகவும் சளைத்ததல்ல என்பதை நிரூபித்து வருகிறது. முக்கிய கட்சிகள் இரண்டுமே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதால் நாட்டை யாரிடம் ஒப்படைப்பது என்று நாட்டு மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆரம்பத்தில் ஒரு டேப் ஒலிபரப்பப்படுகிறது. அதில் நீரா ராடியா, ரஞ்சன் பட்டாசார்யா(வாஜபாய் மருமகன்), போன்றோர் எவ்வாறு மந்திரிகளை மாற்றுகின்றனர் அதற்கு எங்கிருந்து உத்தரவு வருகிறது என்பதை அறியக் கூடியதாயிருக்கிறது. இனி கெஜ்ரிவால் வைக்கும் குற்றச்சாட்டுகளை வரிசையாக பார்ப்போம்.

ரிலையன்ஸ் கம்பெனிக்கு பிஜேபி அரசில் கேஸ் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது. கேஸானது ஒவ்வொரு குடும்பத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே ரிலையன்ஸூக்கு கொடுத்தால் நமது நாட்டு நிறுவனமாக உள்ளதால் நமக்கு மிக குறைந்த விலையில் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு. 2000 லிருந்து இன்று வரை அரசை மிரட்டுவது, இஷ்டத்துக்கு விலையை ஏற்றுவது சில மந்திரிகளையே மாற்றச் சொல்வது என்று ரிலைன்ஸின் ஆதிக்கம தற்போது கொடி கட்டிப் பறக்கிறது.

2004ல் ரிலைன்ஸ் கொடுத்த வாக்கு ஒரு யுனிட் கேஸ் 2.25 டாலருக்கு தருவதாக சொன்னது. 17 வருடங்கள் இதனை தொடர்ந்து நாங்கள் தருவோம் என்ற வாக்குறுதியும் தரப்பட்டது. பதினேழு வருடங்கள் என்று சொல்லி விட்டு 2007 ல் ஒரு குண்டை தூக்கி போட்டது. நாங்கள் 4.25 டாலருக்கே கேஸ் சப்ளை செய்ய முடியும் என்று அரசிடம் தெரிவித்தது ரிலையன்ஸ். ஒரு ஒழுங்கான அரசு வாக்கு தவறும் ரிலையன்ஸின் ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் பிரணப் முகர்ஜியின் தலைமையில் அமைந்த குழு 4.25 டாலருக்கு ஒத்துக் கொண்டு அவர்களின் பணியை தொடர அனுமதித்தது. 2014 வரை நீங்கள் இந்த 4.25 டாலரில் சப்ளை செய்யலாம் என்று ஒத்துக் கொண்டது அரசு. ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும்? இதற்கு பின்னணி என்ன? எத்தனை கோடிகள் கை மாறியது? நாட்டு மக்களின் நலனை விட ரிலையன்ஸின் நலன்தான் இவர்களுக்கு முக்கியமாக போய் விட்டது.

இத்தோடு முடியவில்லை. 2014 இன்னும் வரவேயில்லை. 2010ல் மற்றொரு குண்டை தூக்கிப் போட்டது ரிலையன்ஸ் கம்பெனி. அதாவது எங்களால் தற்போது 4.25க்கு சப்ளை செய்ய முடியாது. 14.25 க்குத்தான் எங்களால் கேஸ் சப்ளை செய்ய முடியும் என்றது ரிலையன்ஸ். இவ்வளவு அதிகம் எங்களால் கேஸூக்கான விலையைக் கொடுக்க முடியாது. ஏனெனில் இதனால் மின்சாரத்தின் விலையும் தாறுமாறாக ஏறும். இதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று ஜெயபால் ரெட்டி திட்டவட்டமாக மறுத்து விட்டார். அவ்வாறு கொடுத்தால் அரசுக்கு 14ஆயிரம் கோடி இரண்டு வருடத்தில் நஷ்டம் ஏற்படும். 14 ஆயிரம் கோடி இரண்டு வருடத்தில் ரிலையன்ஸ் கம்பெனி லாபம் அடையும. இது அநியாயம். எனவே இதனை நான் தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

நமது நாட்டின் மொத்த கேஸ் தேவை 15 கோடி யூனிட். இதில் பாதி அளவான 8 கோடி யூனிட்டை ரிலையன்ஸ் கம்பெனி அரசுக்கு தர வேண்டும் என்று ஒப்பந்ம் உள்ளது. 8 கோடி உற்பத்தி செய்வதற்கு பதிலாக 2 கோடி யூனிட் மட்டுமே உற்பத்தி செய்து 'எங்களால் இவ்வளவுதான் முடியும். 8 கோடி யூனிட் நாங்கள் தர வேண்டும் என்றால் நாங்கள் முன்பு கேட்ட 14.15 டாலரான யூனிட்டுக்கு உள்ள விலையை தந்தால் எங்களின் இலக்கை அடைகிறோம்' என்று மிரட்ட ஆரம்பித்தனர்.

தற்போது வேறு வழி இல்லாமல் இந்த ஒப்பந்தத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஜெயபால் ரெட்டியை அகற்றியுள்ளது காங்கிரஸ் அரசு. இனி என்னவெல்லாம் காட்சிகள் அரங்கேறப் போகிறதோ தெரியவில்லை.

இந்த கேஸ் நமது நாட்டு மக்களின் சொத்து. இதை வெளியில் எடுத்து என்டிபிஸிக்கு தருவதுதான் ரிலையன்ஸின் வேலை. இதற்கு 2.15 டாலரே போதுமானது. இதுவே அந்த கம்பெனிக்கு அதிக லாபத்தை தரும் என்கிறது மும்பை ஹைகோர்டின் தீர்ப்பு. கேஸின் விலை ஏன் தாறுமாறாக எகிறுகிறது இதற்கு யாரெல்லாம் காரணம் என்பது தற்போது விளங்கியிருக்கும். தற்போது ரிலையன்ஸ் கேட்கும் தொகையான 14.25 டாலர் கொடுக்க ஆரம்பித்தால் மின்சாரம் ஒரு யூனிட் 3 ருபாயிலிருந்து 7 ரூபாய்க்கு எகிறும். ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் அல்லல்படும் பொது மக்கள் மேலும் சுமையை சுமக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுவர்.

மொய்லி இதற்கு தலை சாய்ப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



(அந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர். அதன் காணொளி)

செல்வந்த நாடுகளில் ஏதோ அரசியல்வாதிகள் திருடினால் அது பொது மக்களை அந்த அளவு பாதிக்காது. ஆனால் இந்தியா போன்ற பெரும் பான்மை ஏழைகளை கொண்ட ஒரு நாட்டில் இவ்வாறு நாட்டை சுரண்டுவதற்கு எவ்வாறு மனது வருகிறது? இதற்கு பிஜேபியும் காங்கிரஸூம் ஏன் ஒத்து ஊதுகிறது. ஒரு நாட்டின் எதிர்க் கட்சி சரியாக இருந்தால் அந்த நாடு மிக சிறப்பாக செல்லும்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிஜேபியும் திருடுவதில் சம பங்கு வகிக்கிறது. இவர்கள் எங்கிருந்து காங்கிரஸை காட்டிக் கொடுப்பார்கள்.? 2ஜி அலைக் கற்றையிலிருந்து கேஸ் பிரச்னை வரை நாட்டின் செல்வம் கொள்ளை போக பிஜேபி அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அதனை காங்கிரஸ் மிக சிறப்பாக முடித்துக் கொண்டிருக்கிறது.





ஒரு பில்லியன் டாலருக்கும் அதிக பெறுமானமுள்ள முகேஷ் அம்பானியின் மும்பை வீடு.
----------------------------------------------------------------------------------

கெஜ்ரிவாலின் அடுத்த குற்றச்சாட்டு

பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியின் நிறுவனமான பூர்த்தி ஷுகர் அண்ட் பவரில் முதலீடுச் செய்த நிறுவனங்களின் இயக்குநர்களில் பலர் செக்யூரிட்டி கார்டுகளும், தொழிலாளர்களும்தான் என்பதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. இந்நிறுவனங்களின் வளாகங்களில் வருமான வரித்துறை பகிரங்கமாக நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்தது.

மும்பையில் 12 இடங்களிலும், புனே, நாக்பூர், கொல்கத்தா ஆகிய இடங்களிலும் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிறுவனங்களில் இயக்குநர்களான 13க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தங்களின் பெயர்கள் எவ்வாறு இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தது என்பதுக் குறித்து தெரியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான முதலீடுகளுடன் துவங்கிய நிறுவனத்திற்கு பின்னர் அதிகளவிலான பணம் குவியத் துவங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைத்த நிதிகளின் மூல ஆதாரங்களைக் குறித்து தெரிவிக்கவில்லை எனில் வரி ஏய்ப்பு நடத்தியதாக கருதவேண்டி வரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 'நான் ஊழலே செய்ததில்லை' என்று கட்கரி தற்போது சாதிக்கிறார்.

------------------------------------------------------

அமெரிக்க சாண்டி புயலில் சிக்கியவர்களை மீட்பதில் உதவி புரியும் ஹெலிகாப்டர்.







14 comments:

T.Thenmathuran said...

http://yarlmedia.com/?p=13462

UNMAIKAL said...

>> தாஜ்மஹால் மும்தாஜின் சமாதியா சிவன் கோவிலா << என்ற பதிவுக்கு


பின்னூட்டம்

மீட்போம்! மீட்போம்! மீட்போம்!

சிவபெருமானின் உறைவிடமான‌ பூலோக சொர்க்கமான திரிக்கைலாய மலையை, வத்திகனை, மக்கா, மதீனாவை, தாஜ்மஹாலை????


தாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும்

அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.


Purushottam Nagesh Oak (March 2, 1917 – December 4, 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hinducentric brand of historical revisionism.

Oak's "Institute for Rewriting Indian History" issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.

Oak's claims, e.g. that Christianity and Islam are both derivatives of Hinduism,

or that the Catholic Vatican,

Kaaba and the Taj Mahal were once Hindu temples to Shiva,[1]

and their reception in Indian popular culture have been noted by observers of contemporary Indian society,

who variously characterized Oak as a "mythistorian"[2] or more directly as a "crackpot".[3]

In addition to this Oak again asserted that the Vatican was allegedly originally a Vedic creation called Vatika and that the Papacy was also originally a Vedic Priesthood.


In his book, Some Missing Chapters of World History, Oak claimed that the first civilization was developed in India from which all world civilizations grew. He wrote books in three languages.

சொடுக்கி.
>>
மெக்காவையும் , மதீனாவையும் தங்களுடையது என
பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.
<< காணுங்கள்.

திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.

இது திபெத் பகுதியில் உள்ளது.

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்;

`கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.

பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.

இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்).

சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.

பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான்.

ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.

``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;

இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.

கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் வர்ணிக்கிறார்.

கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.


ஏழாம் நூற்றாண்டிலிருந்து 1954-ல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போல இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள்

கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது.

1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.

-திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலாசாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்!

சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்!

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நிய சீனாக்காரன் எப்படி ஆக்கிரமித்தான்? -

சொடுக்கி >>>
சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?
<<< படியுங்கள்

.

UNMAIKAL said...

சிறுபான்மையினர் கல்வி உதவி

குஜராத்தில் மத்திய அரசு நேரடியாக செயல்படுத்த முடிவு -ரஹ்மான் கான்


Thursday, 01 November 2012 01:47

MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்

NOV 1, முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மாணவர்களுக்கு,

மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் "கல்வி உதவி" திட்டங்களை குஜராத்தின் "காவி அரசு" அமல் படுத்துவதில்லை.


இதைத்தொடர்ந்து,

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மறுக்கும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில்,

மத்திய அரசு நேரடியாகவே திட்டங்களை செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.ரஹ்மான் கான் தெரிவித்தார்.

கடந்த 1950 முதல், மத்திய அரசு பல்வேறு கல்வி உதவி திட்டங்களை மாநில அரசுகள் மூலமாக செயல்படுத்தி வருவதை குறிப்பிட்ட அமைச்சர்,

கடந்த 2007முதல் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான ஒரு திட்டத்தையும், அதில் இணைத்துள்ளது என்றார்.

திட்டம் துவக்கப்பட்டு 4 ஆண்டுகள் முடியும் நிலையிலும், இந்த திட்டத்தை குஜராத் அரசு செயல்படுத்த முனையவில்லை என்பதோடு, மறுத்தும் விட்டது.

எனவே, இந்த திட்டங்களை மத்திய அரசு நேரடியாக செயல்படுத்த, முடிவு செய்துள்ளதாக தெரிவித்த அமைச்சர்,

குஜராத் என்று மட்டுமில்லாமல், கல்வி உதவி திட்டங்களை, முறையாக செயல்படுத்தாத அனைத்து மாநிலங்கள் விஷயத்திலும் இந்த கொள்கை கடைப்பிடிக்கப்படும்,என்றார்.

மேலும், நாடு முழுவதிலுமுள்ள "வக்ப்" சொத்துக்களை பாதுகாக்கவும் பராமரிக்கவும்,

ஆக்கிரமிப்புக்களை அகற்றி சொத்துக்களை மீட்கவும், உரிய சட்டம் நாடாளுமன்றத்தில் விரைவில் இயற்றப்படும் என்றார்.

அதற்க்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார், அமைச்சர் ரஹ்மான் கான்.

SOURCE: http://www.maruppu.in

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ....

அதிலேன் சந்தேகம்?அம்பானிகளும்,டாட்டாக்களும்தான் இந்தியாவை ஆளுகின்றனர்...

UNMAIKAL said...

சிங்களவர்களை 'உளவாளிகளாக' சேர்த்துக் கொள்ள 'ரா' நடவடிக்கை

Updated: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2012, 18:00 [IST]


டெல்லி: சிங்களவர்களை இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா'வில் இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியை இலங்கை ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றன.

இந்திய ஊடகங்கள் சிலவற்றில், ரா அமைப்பில் சிங்கள மொழி தெரிந்தவர்களையும் இணைத்து கொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் இதனடிப்படையில் ஏராளமான சிங்களவர்களை சேர்த்துக் கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அனைத்து இலங்கை ஊடகங்களும் வரவேற்றுக் கொண்டாடி இருக்கின்றன.

இதேபோல் சிங்கள மொழிக்கு அடுத்தப்படியாக ஆப்கானிஸ்தானின் பாஸ்தோ, ஈரானின் தாரி, சீனாவின் மண்டரின், மியன்மாரின் மியன்மாரி ஆகிய மொழிகளை அறிந்தவர்களையும் பணியில் சேர்க்க ரோ அமைப்பு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் ரகசியங்களை எப்ப எப்ப தெரியலாம் என்று சிங்களவன் காத்திருக்க... வாசலை திறந்துவிடுகிறதா ரா அமைப்பு என்பது அரசியல் பார்வையாளர்களின் ஆதங்கம்.

SOURCE: THATSTAMIL

kk said...

தாஜ்மகால் இந்துக்கோவிலா என் கின்ற பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதாக இருந்தேன்...பறுவாயில்லை அது உங்களிடம் தானாக வந்துவிட்டது இது எப்பொழுதோ ஆரம்பித்த பிரச்சனையாகத்தெரிகின்றது..உங்களிடம் இப்போதாவது கிடைத்தது சந்தோஸம்தான் விரைவில் ஆய்வுகளுடன் கூடிய பதிலை எதிர்பார்க்கின்றேன்..

UNMAIKAL said...

//Kiruththikan Yogaraja said...
தாஜ்மகால் இந்துக்கோவிலா என் கின்ற பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதாக இருந்தேன்...பறுவாயில்லை அது உங்களிடம் தானாக வந்துவிட்டது இது எப்பொழுதோ ஆரம்பித்த பிரச்சனையாகத்தெரிகின்றது..உங்களிடம் இப்போதாவது கிடைத்தது சந்தோஸம்தான் விரைவில் ஆய்வுகளுடன் கூடிய பதிலை எதிர்பார்க்கின்றேன்.. //


திரு.Kiruththikan Yogaraja,

தாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும்

அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.


உலகனைத்தும் உள்ள அனைத்துமத வழிபாடு தலங்களும் அனைத்துமத புனித தளங்களும் இந்துமத கோயில்களின் மேல் உருவாக்கப்பட்டவைகள் என்ற இந்துத்வா காவிக‌ளின் ஓல‌த்தை கேட்டு கேட்டு ப‌டித்து ப‌டித்து புளித்துவிட்டது.

வரலாற்றை திரித்து திரித்து
பொய்களை திரும்ப திரும்ப கூறி திரும்ப திரும்ப எய்தி எய்தி ஜகதாள புரட்டு செய்வதில் வல்லவர்கள் இந்த‌ இந்துத்வா காவி புழுதிகள் என்று உலக‌றியும்.

இத‌ற்கு ஆய்வு ஒன்றும் தேவையில்லை.

முதலில் 1950 வாக்கில் சீனா ஆக்கிரத்து கொண்ட‌
தலையாய கடவுளான‌
சிவபெருமான் உறையும் திருக்கைலாயத்தை சீனாவிடமிருந்து இந்துத்வா காவிகள் மீட்கட்டும்.


.

ராவணன் said...

இது என்ன அண்ணாச்சி புது சந்தேகம்?

உங்கள் இத்தாலி அன்னை சோனியா அம்மையார்தானே இந்தியா என்ற நாட்டை ஆள்வது.

இப்ப எதுக்கு முகேஷ் அம்பானி, மன்மோகன் சிங்?

ஆள்வது உங்களது இத்தாலி அன்னை..அவுக எது செஞ்சாலும் இந்தியாவின் நன்மைக்கே...

இந்தியாவை முன்னேற்ற ஒரு நாளைக்கு 48 மணி நேரம் பாடுபடும் உங்கள் அன்னைக்கு ஒரு வணக்கம்.

suvanappiriyan said...

திரு யோகராஜா!

//தாஜ்மகால் இந்துக்கோவிலா என் கின்ற பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதாக இருந்தேன்...பறுவாயில்லை அது உங்களிடம் தானாக வந்துவிட்டது இது எப்பொழுதோ ஆரம்பித்த பிரச்சனையாகத்தெரிகின்றது..உங்களிடம் இப்போதாவது கிடைத்தது சந்தோஸம்தான் விரைவில் ஆய்வுகளுடன் கூடிய பதிலை எதிர்பார்க்கின்றேன்.. //

முதலில் இந்து மதம் என்பதற்கு என்ன வரையறை என்பதை முடிவெடுத்தால்தான் மற்ற பிரச்னைகளுக்கு போக முடியும.

இன்று மெக்காவில் உள்ள கஃபாவில் தினம் ஒரு சிலை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். நமது நாட்டை எல்லாம் மிஞ்சி விட்டனர். ஆப்ரஹாம் காலத்தில் ஏக இறைவனை வணங்குவதற்காக புணருத்தானம் செய்யப்பட்டது இந்த கஃபா. அதன் பிறகு அங்குள்ள மக்கள் சிலை வணக்கத்தை ஆரம்பிக்கின்றனர். அது முகமது நபி காலத்தில் தடுக்கப்படுகிறது.

அதுபோல் நமது நாட்டில் நமது முன்னோர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டிலேயே வாழ்ந்தனர். ஆரியர்களின் வருகைக்கு பிறகுதான் பல தெய்வ வணக்கத்துக்கு மாறினோம்.

தற்போது வந்து இஸ்லாம் எங்களைப் போன்றவர்களை நமது மூதாதையர் மார்க்கத்துக்கு திரும்ப அழைத்து சென்றுள்ளது. இந்த சிலை வணக்கம் என்பது நமது நாட்டுக்கு இடையில் வந்த பழக்கமே!

தாஜ்மஹாலைப் பொருத்த வரை அது ஒரு சமாதி. இஸ்லாத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை இடித்து விட்டு ஒரு கல்லூரியை கட்டினாலும் அல்லது ஒரு தொழிற்சாலையை கட்டினாலும் நான் வரவேற்பேன்.

இந்துத்வவாதிகள் வழக்கமாக வைக்கும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று. இதுவரை பாபரி மசூதி ராமர் பிறந்த இடம் என்பதை இன்று வரை கோர்ட்டில் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை அத்வானி மோடி வகையறாக்கள். தேர்தல் நெருங்குவதால் இந்துக்களின் ஓட்டை அள்ளுவதற்காக இது போன்ற காமெடிகளை அவ்வப்போது இவர்கள் அரங்கேற்றுவார்கள். இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. :-)

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜாமைதீன்!

//அதிலேன் சந்தேகம்?அம்பானிகளும்,டாட்டாக்களும்தான் இந்தியாவை ஆளுகின்றனர்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//சொடுக்கி >>>
சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ? <<< படியுங்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ராவணன்!

//இப்ப எதுக்கு முகேஷ் அம்பானி, மன்மோகன் சிங்?

ஆள்வது உங்களது இத்தாலி அன்னை..அவுக எது செஞ்சாலும் இந்தியாவின் நன்மைக்கே...//

ஏதோ ...நீங்க சொன்னா சரி. :-)

சதீஷ் செல்லதுரை said...

தேர்தல் வரும்போது அனைத்தையும் மறந்து வாக்களிக்க மக்கள் இருக்கும் வரை இதெல்லாம் சுச்சூபி விசயமாக போகும்.அம்பானி,அமெரிக்க என்று எத்தனை எஜமானர்கள் நமக்கு?

தனி தனியாக சிறு சிறு நாடுகளாக இந்தியா மாறும்பட்சம் கொஞ்சம் மாற்றம் வருமோ?

suvanappiriyan said...

//தனி தனியாக சிறு சிறு நாடுகளாக இந்தியா மாறும்பட்சம் கொஞ்சம் மாற்றம் வருமோ? //

அது இன்னும் அதிக குழப்பத்தை உண்டு பண்ணும்.