Followers

Sunday, October 28, 2012

புரோட்டீன்களைப் பற்றி பரிணாமவியல் சொல்வதென்ன?



பரிணாமவியலை ஆதரிக்கும் ஒரு ஆராய்ச்சியாளரின் புலம்பல்:

"ஹையோ..ஹையோ.... நானா இது!....பரிணாமவியலை ஆழ்ந்து படிக்க ஆரம்பிச்சதிலிருந்து என் நிழல் கூட குரங்கு மாதிரியே தெரியுதே! கடவுளே என்னை காப்பாத்து.."

--------------------------------------------------------------------------

நம உடலில் உள்ள அல்புமீன் என்பது நீரில் கரையும் தன்மை உடைய எந்தவொரு புரதப் பொருளையும் குறிக்கும். இவை அடர்ந்த உப்புக்கரைசலிலும் ஓரளவிற்குக் கரையும் தன்மை கொண்டவை.. நமது உடலில் உள்ள கொழுப்பு, கொலஸ்ட்ரால், ஹார்மோன்கள், சர்க்கரை போன்ற அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இந்த புரோட்டீன்கள் மிகவும் உதவுகிறது. நமது உடலின் ரத்தக் குழாய்கள் மூலமாக பயணித்து லிவரிலிருந்து சத்துக்களை பிரித்து கொடுத்து எந்த பொருளுக்கு எத்தனை சதவீதம் தேவை என்பதை தீர்மானித்து தனது வேலையை கச்சிதமாக செய்கிறது. இதில் எந்த தவறும் ஏற்படாமல் எந்த குழப்பமும் இல்லாமல் தனது வேலையை செய்வதை பார்த்து உயிரியல் வல்லுனர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.


(கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள புரதம்)

நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் இந்த புரோட்டீன்கள் சிறந்த சேவையாற்றுகிறது. ஒரு கட்டிடத்திற்கு செங்கல் எவ்வளவு அவசியமோ அதுபோல் நமது உடலுக்கு அல்புமீன் புரோட்டீன்களின் பங்கு மிக அவசியமாகிறது. சிறு நீரகத்தை எடுத்துக் கொண்டால் அங்கு இந்த புரோட்டீன் எந்த நேரமும் தங்குவதில்லை. எப்பொழுதெல்லாம் சிறு நீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் உடன் ஓடி வந்து பிரச்னையை தீர்த்து வைத்து சீராக செய்ல்பட வைப்பதில் இதன் பங்கு முக்கியமானது. இந்த புரோட்டீன்கள் செடிகொடிகளின் விதைகளிலேயும் உள்ளன. ஒரு கோழி முட்டையின் வெள்ளைக் கருவிலும் உள்ளது அல்புமின் என்ற புரதம் . இதன் பலனை உணர்ந்த பலர் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதைப் பார்ததிருக்கிறோம். இந்த புரதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இதன் செயலைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். நாம் கேட்பது இந்த புரோட்டீனுக்கு இத்தகைய அறிவை கொடுத்து அதனை வேலை வாங்குவது யார்?

ஒரு உயிரி மற்றொரு உயிராக பரிணாமம் அடைந்தால் முக்கியமாக இந்த புரோட்டீனின் அளவும் கூடவோ அல்லது குறைவாகவோ பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். இது பற்றி பரிணாமவியலார் எந்த தகவலும் அளிக்கவில்லை. இது பற்றி டார்வின் அறிந்திருக்கவுமில்லை.

மற்றொரு அதிசயத்தையும் பார்ப்போம். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இரைப் பைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள சுரப்பிகளால் நாம் சாப்பிடும் பிரியாணி, மாட்டு கறி, என்று எதையெல்லாம் உள்ளே தள்ளுகிறோமோ அத்தனையையும் கரைத்து உடலுக்கு சக்தியாகவும் தேவையற்றவைகளை மலமாகவும் கொல்லைப் புறம் அனுப்பி விடுகிறது. இவை அனைத்து வேலைகளும் நாம் சாப்பிடும் உணவை விட மிருதுவான இரைப் பையில் நடக்கிறது. கடினமான உணவுகளையே கரைத்து விடும் இரைப் பை பழுதாகாமல் இருப்பதற்கான சூட்சுமம் என்ன? ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியையும் கரைத்து விடும் இந்த இடம் இரைப் பையையும் கரைத்து விட வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏன் நிகழ்வதில்லை?



ஏனென்றால் அந்த இரைப்பையின் சுவர்களில் ம்யூகோஸா என்ற பெயருடைய வழவழப்பான பூச்சு பூசப்பட்டுள்ளது. சாராயம் இதன் எதிரி. நம் குடிமகன்கள் அளவுக்கு மீறி சாராயத்தை உள்ளே தள்ளுவதால் இந்த ம்யூகோஸா என்ற பொருள் கரைந்து வெளியேறி ம்யூகோஸாவின் அளவு குறைந்து விடுகிறது. இதன் பிறகுதான் குடிகாரர்களுக்கு வயிற்றெரிச்சல் ஆரம்பமாகிறது. பல உயிரினத்திற்கும் இந்த பொருளின் அளவு மாறுபட வேண்டும். ஏனெனில் யானையின் செரிமானத்துக்கும் சிங்கத்தின் செரிமானத்துக்கும் குரங்கின் செரிமானத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ம்யூகோஸா என்ற பொருளின் அளவு உயிரினத்தின் செரிமாணத்துக்கு ஏற்ப மாறுபட்டால்தான் அந்த உயிரால் உயிர்வாழ முடியும். பரிணாமம் இஙகிருந்து தொடங்க வேண்டும். இதற்கு எந்த ஆய்வாவது செய்து சமர்ப்பித்துள்ளார்களா என்றால் எதுவும் இல்லை. இந்த இரைப்பையின் உள்ளே ம்யூகோஷா என்ற பொருளை அளந்து அமைத்தவன் யார்? அறிவியல் அறிஞர்களால் இன்று வரை இதற்கான காரணத்தை பெற முடியவில்லை.

அல்புமீனைப் பற்றியும், ம்யூகோஸாவைப் பற்றியும் டார்வின் தனது பரிணாம கொள்கையில் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. பரிணாமம் நடை பெற முதலில் டிஎன்ஏ, குரோமசோம்கள், புரோட்டீன்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். இந்த புரோட்டீன்களின் அவசியத்துக்கு காரணத்தை கண்டு பிடிக்காமல் வெளித்தோற்றத்தை வைத்து குரங்கிலிருந்து மனிதன் வந்ததையும் மானிலிருந்து ஒட்டகம் வந்ததையும் தனது கற்பனைத் திறனால் பலரை நம்ப வைத்து விட்டார் டார்வின்.

http://en.wikipedia.org/wiki/Gastric_mucosa
http://www.buzzle.com/articles/albumin-in-urine.html
http://www.albumin.org/
http://en.wikipedia.org/wiki/Albumin

-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------

இனி பழைய பதிவுகளில் பலர் வைத்த சில வாதங்களை பார்ப்போம்.

நான் முன்பு மான் ஒட்டக சிவிங்கி சம்பந்தமாக கேட்ட பல கேள்விகளுக்கு சார்வாகன் தரும் பதிலைப் பாருங்கள்..

//இது எப்போது நிகழும் எனில் அதாவது பழ ஈ ஜீனோம் பரிசோத்னை போல் பல் உயிரிகளின் ஜீனோம் மீதான மாற்ற நிகழ்வுகள் ஆவணப் படுத்தல் நடக்கும் போது மாறிவிடுவார்கள் என கூகிளாண்டவர்,ப்ளாக்கர், கம்ப்யுட்டர், கீபோர்ட், மத்ர்போர்ட், தமிழ்மணம், இன்ட்லி, இதர திரட்டிகள் அனைத்தின் மீதும் சத்தியம் செய்து கூறுகிறேன்.

அவர்கள் எழுப்பும் ஒவ்வொரு பரிணாம் எதிர்ப்புக் கேள்விக்கும் பதில் அளிக்கப் படும்.// - சார்வாகன்

நானும் சகோ ஆஷிக்கும் வைக்கும் பல கேள்விகளுக்கு தற்போது அவரிடம் பதில் இல்லையாம், ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறதாம். அந்த ஆராய்ச்சி முடிவுகள் வந்தவுடன் நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தந்து விடுவாராம். அதற்காக தமிழ்மணம், இண்ட்லி, கூகுள் மீதெல்லாம் சத்தியமிட்டு சொல்கிறார். :-)

ஆக இதுவரை இவர்கள் எந்த ஆய்வுகளையும் செய்யாமல் அனுமானங்களை வைத்தே காலத்தை ஓட்டியிருப்பது தெளிவாகிறது. இனி வரும் காலங்களில் முடிவுகள் தவறாக வந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? கல்லூரி பாடமாகவும், ஆராய்ச்சி துறையிலும் இதனை இத்தனை காலமாக எப்படி வைத்திருந்தார்கள்? உலகம் முழுவதும் பல கோடி பேரை நாத்திகத்தின் பக்கம் கொண்டு சென்றதற்கு என்ன பதிலை தரப் போகிறார்கள்?


--------------------------------------------------------

//சரி ஒரு விஷயத்தை அவர் கவனிக்க மறந்துவிட்டார் . இந்த மாதிரி பிரம்மாண்ட வாயில்களை கொண்ட கட்டிடத்திற்கு ஏறி செல்லும் படிகளை பார்த்தீர்கள் என்றால் . அவை சாதாரண மனிதர்கள் நடந்து செல்லும் படிதான் வடிவமைக்க பட்டிருக்கும் . 12 அடி மனிதன் இந்த படிகளில் ஏறினால் கால் இடறி கீழே விழுந்து விடுவான் அல்லது நான்கு படிகளாக தாண்டிதான் போக வேண்டி இருக்கும் . எதற்கு லூசுத்தனமாக படிகளை மட்டும் சிறிதாக கட்டினார்கள் என்று சு.பி.இடம் கேட்டு சொல்லவும் //-.அஞ்சா சிங்கம்

http://unusualplaces.org/madain-saleh/

http://www.quranandscience.com/historical/121-al-hijr-madain-saleh.html
(சவுதி அரசு தற்போது அமைத்த இரும்பு படிகளை இங்கு பார்க்கலாம்).

http://www.pbase.com/adnan_masood/madain_saleh

இந்த வீடுகளின் வாதில்கள் அனைத்தும் தரையிலிருந்தே தொடங்குகிறது. சில வீடுகள் சற்று உயரமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த மக்கள் உயரமாக இருப்பதால் சுலபமாக சென்று விடுவர். ஆனால் நம்மால் முடியாது. நாம் மேலே ஏறுவதற்காக சவுதி அரசாங்கம் இரும்பாலான படிகளை அமைத்துள்ளது. இதைப் பார்த்து விட்டுத்தான் அவர்கள் உயரமானவர்களாக இருந்தால் படிகள் ஏன் சின்னதாக உள்ளது என்ற அறிவார்ந்த கேள்வியை அஞ்சா சிங்கம் கேட்கிறார். சார்வாகனும் அதற்கு 'ஆஹா..ஓஹோ' என்ற பாராட்டு பத்திரம் வேறு வாசிக்கிறார்.

--------------------------------------------------------

அடுத்து வவ்வால் தனது வாதத்தில் மதாயீன் சாலிஹ் வீடுகளாக இருக்க முடியாது. அவை அனைத்தும் நபாத்தியர்களின் கல்லறை என்றார். ஆனால் இங்கு ஒரு மிகப் பெரிய ராட்சச கிணறு உள்ளதை பார்த்தேன். அந்த கிராம மக்கள் அனைவரும் அந்த கிணற்றிலிருந்தே தண்ணீர் எடுத்துள்ளனர். யாராவது மயானத்தில் இவ்வளவு பெரிய கிணறு தோண்டுவார்களா?

http://www.flickr.com/photos/oansari/4454941148/

சவுதி அரசு யாரும் தவறி விழுந்து விடக் கூடாது என்பதற்காக தற்போது இரும்பு கம்பிகளால் அடைத்து வைத்துள்ளது. அதையும் இஙகு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.


40 comments:

mohamed said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்,

மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம் பாய்.கார்டூன் சூப்பர்.தெரியாத பல ஆச்சர்யமான விசயங்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் புகழ் அனைத்தும் இறைவனுக்கே..எதிர்க்குரல் ஆஷிக் பாய் இல்லாத குறையை நீங்க தீர்த்து வைகிறீங்க போல மாஷா அல்லாஹ்.இறைவன் உங்கள் அறிவை விசாலமாக்கி வைத்து,நாங்கள் மட்டும் தான் பகுத்து அறியக்கூடியவர்கள் என்று வெறும் வாயளவில் மட்டும் சொல்லி கொண்டிருக்க கூடிய நாத்தீக சகோதரர்களுக்கு உண்மையான பகுத்து அறியக் கூடிய அறிவையும் தந்து நேர் வழிப் பெறக்கூடிய பாக்கியத்தை தந்து அருள் புரிவானாக

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ், ரொம்ப நல்ல பதிவு. இந்த புரதங்கள் பரிணாமம் குறித்து நான் இன்னும் சற்று விளக்கமாக எதிர்காலத்தில் எழுதுகின்றேன், இன்ஷா அல்லாஹ். பரிணாமத்திற்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் பல விவகாரங்களில் இந்த புரத பரிணாமமும் ஒன்று.

நீங்க இன்னும் சாவர்கானை விடவில்லையா? :-)

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத்!

//மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம் பாய்.கார்டூன் சூப்பர்.தெரியாத பல ஆச்சர்யமான விசயங்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் புகழ் அனைத்தும் இறைவனுக்கே..//

ஆம்....எல்லா புகழும் இறைவனுக்கே!

//எதிர்க்குரல் ஆஷிக் பாய் இல்லாத குறையை நீங்க தீர்த்து வைகிறீங்க போல மாஷா அல்லாஹ்//

இன்னும் இரண்டொரு நாளில் அதிரடியான பரிணாம பதிவோடு சகோ ஆஷிக் களமிறங்குவார். கொஞ்சம் பொறுங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

அறிஞர்.சார்வாகன், எதிர்பதிவு போட்டுட்டார் என்பதே உங்கள் பதிவை பார்த்த பிறகு தான் தெரிய வந்தது..(ரொம்ப லேட்டு ..நான் போன்லயே பேசலாம் போல!!!)

நீங்க பின்றீங்க சுவனப்பிரியன் !!! பரிணாமம் பற்றிய பதிவு போட உங்களைப்போன்ற சிலர் இல்லையென்றால் இவர்கள் பொய்யை சாதரணமாக பரப்பி இருப்பார்கள்...

பரிணாமம்,ஜீன்களைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது...ஏன்ன அதை பற்றி குப்பனுக்கும் சுப்பனுக்கும் புரிந்து கொள்ள முடியாது அல்லவா..!!!

ஆனால் குப்பனும் சுப்பனும் புரிந்து கொள்கிற மாதிரி கேள்விகளை கேட்க முடியும் .... பதில் சொல்பவர்கள் யார் ????

இப்போதைக்கு ஒரே ஒரு கேள்வி (நிறைய கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கிறீங்களே !!!)

கேள்வி 1 : முடியை பற்றியது :

தலையில் வளருவதும் முடிதான், தாடியும் முடிதான் ...மீசையும் முடிதான்..இமைகளில் இருப்பதும் முடிதான்..புருவங்களில் இருப்பதும் முடிதான்..(இன்னும் சில இடங்களில் உண்டு அது நமக்கு இப்போதைக்கு தேவை இல்லை..)

* தலைமுடியும் ,தாடிமுடியும் வளருவது போல் மீசை முடி வளராது...(வளர்ந்தால் என்ன ஆகும் சாப்பிடுவதற்கு ரொம்ப சிரமப்பட வேண்டி இருக்கும் )

* மற்ற எல்லா முடிகளும் வளருவது போல் இமை முடியும்,புருவ முடியும் வளராது..(வளர்ந்தால் என்ன ஆகும் * இமை முடி வளர்ந்தால் இமைகளை அசைக்க முடியாது ...சிக்கிக்கொள்ளும்,பார்க்க முடியாது.* புருவ முடி வளர்ந்தாலும் பார்க்க முடியாது..)

மனிதனுடைய தேவையை அறிந்த இத்தகைய தடுப்பு எப்படி வந்தது...யார் செய்தது..???

உங்களில் யார் புத்திசாலி ???

நன்றியுடன்
நாகூர் மீரான்



வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

அல்புமின்கள்,புரோட்டின்கள் இந்த வேலையை செய்கின்றது என கண்டுப்பிடிச்சு சொன்னது யார், விஞ்ஞானிகள் தானே?

அப்புறம் அவர்கள் சொல்லும் பரிணாமம் மட்டும் இல்லைனா எப்பூடி?
----------

மதாயின் சாலே படிகள் பற்றி அப்போவே இப்படித்தான் சொல்வீங்கன்னு சொல்லிட்டேன் :-))

அப்புறம் கிணறு இருக்குன்னு சொல்லிட்டிங்க, அப்படியே அங்கே சமவெளியில் வீடுகளும் இருக்குன்னு சொல்லிடுங்க.

ஒரு கிணறு மட்டும் இல்லை நூற்றுக்கணக்கில் இருந்தனவாம். எல்லாம் குகைகள் இருக்கும் சமவெளியில். இதனை முன்னரே சொல்லிட்டேன், கல்லறைகள் சுற்றி குடியிருப்பு இருந்தன என.

மேலும் கல்லறைகள் அவர்களை பொறுத்தவரை வழிப்பாட்டு தலம். அங்கு அதே போல கோயில்களும் இருந்தன.

சென்னை தி.நகரில் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டை சுற்றி , வீடுகள், கடைகள், என எல்லாம் இருக்கு , 1000 ஆண்டுகளுக்கு பின்னர் அகழ்வில் கண்டுப்பிடிச்சா நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு நினைக்கிறேன் :-))

Aashiq Ahamed said...

@ நாகூர் மீரான்,

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,

பின்னுறீங்க, மாஷா அல்லாஹ். ஆமாங்க, நான் இமை முடிய இதுவரைக்கும் கட் செய்ததே இல்ல. அதற்கான அவசியம் வரவும் இல்லை. ஏன் இமை முடி தலை முடி போல வளருவதில்லை?

நான் சொல்றத கேளுங்க. நீங்க இப்படியா கேள்விகள தொகுத்து ஒரு தளம் ஆரம்பிங்க. புது புது கேள்விகள் எழ அதை இங்கு பதிவு செய்திட்டு வாங்க. எதிர்காலத்தில் பலருக்கும் பயன்படும்.

வஸ்ஸலாம்..

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//நீங்க இன்னும் சாவர்கானை விடவில்லையா? :-)//

இவர் ஒருவர்தான் ஓரளவு பரிணாமத்தை ஆதரித்து பதிவுகள் எழுதி வருபவர். அவர் பதிவை நம்பி பலர் மோசம் போய் விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் அவரை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறேன். :-)

//இந்த புரதங்கள் பரிணாமம் குறித்து நான் இன்னும் சற்று விளக்கமாக எதிர்காலத்தில் எழுதுகின்றேன், இன்ஷா அல்லாஹ். பரிணாமத்திற்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் பல விவகாரங்களில் இந்த புரத பரிணாமமும் ஒன்று. //

நேரம் ஒதுக்கி சீக்கிரமே பதிவுகள் பக்கம் வரவும். பதிவை நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//* மற்ற எல்லா முடிகளும் வளருவது போல் இமை முடியும்,புருவ முடியும் வளராது..(வளர்ந்தால் என்ன ஆகும் * இமை முடி வளர்ந்தால் இமைகளை அசைக்க முடியாது ...சிக்கிக்கொள்ளும்,பார்க்க முடியாது.* புருவ முடி வளர்ந்தாலும் பார்க்க முடியாது..)

மனிதனுடைய தேவையை அறிந்த இத்தகைய தடுப்பு எப்படி வந்தது...யார் செய்தது..???//

பல கேள்விகளுக்கு இன்று வரை இவர்கள் விளக்கம் அளிக்கவில்லை. இனியும் ஆய்வுகள் நடந்து வருகிறது என்ற வழக்கமான பதிலைத்தான் வைத்திருப்பார்கள்.

UNMAIKAL said...

So fossils record proves that Darwin's theory is not true.

But yet, though they could not substantiate that Darwin's theory could be proved through fossils record,

they manufacture fossils record.
And for example - how do they do that?

In the magazines,
in the television channels and different channels,
discovery channels and different video programs,
we see the construction of the ape-man.

As if we are given to understand that these were the creatures which existed.

But what is the fact?

These creatures did not exist.

It is reconstruction of these creatures.

Ape-man - it is reconstruction.
What is reconstruction?

That if they find one piece of bone - for example if they find one arm bone.

Arm bone in the fossil - based on one arm bone, one hand, these construct the whole human being - the whole ape-man.

This is construction.

If they find one skull - based on one skull,

they make the whole body of ape-man,

signifying that this is the ape-man which is the intermediary between the ape and human being.

So, they fabricate drawings and constructions by just picking up one piece or two pieces of skeleton, and they make the whole structure.

Not making just whole structure,

they make the wife and children and the whole family,

signifying that these are the ape-man - half ape and half man.

This is forgery.


An example of such forgery is that one such thing took place in Piltdown.

A certain place known as Piltdown.

In 1912, Dr. Charles Dawson - he presented a skull with a jawbone and the skull.

And he said: "this is the ape-man - half ape and half man."

And he tried to prove that this will prove Darwin's theory.

Later on, Kenneth Oakley in 1949, he made a fluorine testing on this skull bone.

With this fluorine testing he came to know that the jaw bone hade few, or very little or negligible fluorine content.

The skull had little more fluorine content.

During the fluorine content of the jaw bone and the skull separately,
it was proved that it did not belong to the same specie.

But again, Weiner in 1953 through again a further study prove to the world that the jaw bone actually belonged to an ape which has died recently - just few years back.

And the skull belongs to a 500 year back man.

So it was the half skull taken of a man and jaw bone taken to an ape joint together and manipulated,

and trying to prove that this is an ape-man.

And they had stained it with potassium dichromate to give an understanding that it is backdated of long long years back.

But once they put in acid, the potassium dichromate finished off.
This is one example of Piltdown forgery.


READ FULL ARTICLE.

Darwin's Theory: True Or False? by Dr. Shuaib Sayyed

Unknown said...

வ அலைக்கும் சலாம், சகோ.ஆசிக் அஹ்மத்

உங்களைவிடவா சகோ. !!!பரிணாமத்தை துவைத்து, காயப்போட்டு, துப்பி, தூரப்போட்டுட்டீங்களே!!! இப்பொழுது தான் நம் சகோதரர்களின் பழைய பதிவுகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு வருகிறேன்...மாஷா அல்லாஹ்!!!ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டாப்பிக்ல கலக்கிகிட்டு வர்றீங்க..இன்ஷா அல்லாஹ் நானும் இணைகிறேன் சகோ.

நன்றியுடன்
நாகூர் மீரான்

UNMAIKAL said...

டார்வின் தியரி தப்பு

மங்கி ஃபால்ஸ்னு ஒரு இடம் இருக்கு... பொள்ளாச்சி பக்கத்துல.

தமிழில் குரங்கு அருவினு சொல்லுவாங்க.

கூட்டம் கூட்டமாய் குரங்குக இருக்கும் அங்க.

ரொம்ப நாளைக்கு முன்னாடி, குரங்குகள்ல பெருசுகள் கூடின இடத்துல ஒரு முக்கியமான விவாதம் சபைக்கு வந்தது.

அப்ப ஒரு குரங்கு அருவியில் குளித்துக் கொண்டிருந்த மனுஷங்களைப் பார்த்துட்டுக் இன்னொரு குரங்குகிட்ட கேட்டுச்சு.

"நம்மகிட்ட இருந்துதான் இந்த மனுஷப் பசங்க தோன்றுனாய்ங்கனு டார்வின் சொன்னதா சொல்றானுவ. ஆனா, எவனும் நம்ம மாதிரி அழகா இல்லியே..!".

அதைக் கேட்டதும் கோபமான ஒரு வயசாளிக் குரங்கு சொன்னது.

"சரி, டார்வின் அப்படிச் சொன்னாம்பா ஓகே.

ஆனா, குரங்கான நாம யாரும் மனைவியத் தள்ளி வைப்பது இல்லியே.

மனைவி மக்களை திக்கில்லாமல் தவிக்க விட்டு ஓடுறதில்லையே.

கள்ளக்காதல் கிடையாது.

கடத்தல் கிடையாது.

புகை பிடிப்பது, சூதாடுவது, குடிப்பது, கூத்தாடுவது கிடையாது.

எந்த ஒரு குரங்கும் இன்னொரு குரங்கை துப்பாக்கியாலோ அணுகுண்டாலோ தாக்கி அழிச்சுக்கிறது கிடையாது.

அப்புறம் எப்படி மனுசனுக நம்மகிட்ட இருந்து தோன்றுனானு சொல்றனுகன்னு தெரியலையே.

எனக்கென்னவோ டார்வின் சொன்னது தப்புனுதான் தோணுது...!".

குரங்குக பேசிக்கிட்டு இருக்கறது எதுவும் தெரியாம, குரங்கருவில இன்னும் குளிச்சுட்டுத்தான் இருக்கானுக மனுசப் பயலுக.

THANKS TO: http://katuku.blogspot.com
.
.

Unknown said...

சகோ.சுவனப்பிரியன்,

//நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இரைப் பைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள சுரப்பிகளால் நாம் சாப்பிடும் பிரியாணி, மாட்டு கறி, என்று எதையெல்லாம் உள்ளே தள்ளுகிறோமோ அத்தனையையும் கரைத்து உடலுக்கு சக்தியாகவும் தேவையற்றவைகளை மலமாகவும் கொல்லைப் புறம் அனுப்பி விடுகிறது. இவை அனைத்து வேலைகளும் நாம் சாப்பிடும் உணவை விட மிருதுவான இரைப் பையில் நடக்கிறது. கடினமான உணவுகளையே கரைத்து விடும் இரைப் பை பழுதாகாமல் இருப்பதற்கான சூட்சுமம் என்ன? ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியையும் கரைத்து விடும் இந்த இடம் இரைப் பையையும் கரைத்து விட வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏன் நிகழ்வதில்லை?




ஏனென்றால் அந்த இரைப்பையின் சுவர்களில் ம்யூகோஸா என்ற பெயருடைய வழவழப்பான பூச்சு பூசப்பட்டுள்ளது. சாராயம் இதன் எதிரி. நம் குடிமகன்கள் அளவுக்கு மீறி சாராயத்தை உள்ளே தள்ளுவதால் இந்த ம்யூகோஸா என்ற பொருள் கரைந்து வெளியேறி ம்யூகோஸாவின் அளவு குறைந்து விடுகிறது. இதன் பிறகுதான் குடிகாரர்களுக்கு வயிற்றெரிச்சல் ஆரம்பமாகிறது. பல உயிரினத்திற்கும் இந்த பொருளின் அளவு மாறுபட வேண்டும். ஏனெனில் யானையின் செரிமானத்துக்கும் சிங்கத்தின் செரிமானத்துக்கும் குரங்கின் செரிமானத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ம்யூகோஸா என்ற பொருளின் அளவு உயிரினத்தின் செரிமாணத்துக்கு ஏற்ப மாறுபட்டால்தான் அந்த உயிரால் உயிர்வாழ முடியும். பரிணாமம் இஙகிருந்து தொடங்க வேண்டும். இதற்கு எந்த ஆய்வாவது செய்து சமர்ப்பித்துள்ளார்களா என்றால் எதுவும் இல்லை. இந்த இரைப்பையின் உள்ளே ம்யூகோஷா என்ற பொருளை அளந்து அமைத்தவன் யார்? அறிவியல் அறிஞர்களால் இன்று வரை இதற்கான காரணத்தை பெற முடியவில்லை.//

வாவ்!!வாவ்!!வாவ்!!...இதெல்லாம் நீங்க எங்க, எந்த ஸ்கூல்ல படிச்சீங்க ..சொன்னா, அவங்க புள்ளைங்களையாவது அந்த ஸ்கூல்ல சேர்ப்பாங்க...அதுகளாவது நல்லா வரட்டும் !!!

ராஜ நடராஜன் said...

//"ஹையோ..ஹையோ.... நானா இது!....பரிணாமவியலை ஆழ்ந்து படிக்க ஆரம்பிச்சதிலிருந்து என் நிழல் கூட குரங்கு மாதிரியே தெரியுதே! //

யுரேக்கா!பரிணாம வளர்ச்சிதான் சகோ.சுவனப்பிரியன்.வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//அல்புமின்கள்,புரோட்டின்கள் இந்த வேலையை செய்கின்றது என கண்டுப்பிடிச்சு சொன்னது யார், விஞ்ஞானிகள் தானே?

அப்புறம் அவர்கள் சொல்லும் பரிணாமம் மட்டும் இல்லைனா எப்பூடி?//

அறிவியல் அறிஞர்கள் என்று சொல்லப்படுவோர் இரு வகை. ஒரு வகை நிரூபிக்கப்படாத அனுமானங்களை ஒத்துக் கொள்வது. மற்றொரு வகை நிரூபிக்காத முடிவுகள் அனைத்தையும் புறம் தள்ளுவது. பரிணாவியலை ஆராய்ந்து வரும் பல அறிஞர்களுக்கு இதன் நம்பகத்தன்மையில் பெருத்த சந்தேகம் உள்ளது. வேலை போய் விடுமே என்பதற்காக கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

//ஒரு கிணறு மட்டும் இல்லை நூற்றுக்கணக்கில் இருந்தனவாம். எல்லாம் குகைகள் இருக்கும் சமவெளியில். இதனை முன்னரே சொல்லிட்டேன், கல்லறைகள் சுற்றி குடியிருப்பு இருந்தன என.//

பயன்படுத்திய கிணறு இன்றும் பழுது படாமல் இருக்கிறது. நீங்கள் சமாதிகள் என்று சொல்லும் மலை வீடுகளும் இன்றும் அப்படியே உள்ளது. அப்படியானால் மனிதர்கள் வாழ்ந்த வீடுகளின் எச்சங்களாவது இருக்க வேண்டுமே? கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் பொட்டல் வெளிகளாகவே உள்ளன. அனைத்து சமாதிகளும், கிணறுகளும் இன்றும் இருக்க வீடுகளை மட்டும் காணவில்லையே? இதற்கு என்ன பதில்?

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//யுரேக்கா!பரிணாம வளர்ச்சிதான் சகோ.சுவனப்பிரியன்.வாழ்த்துக்கள்.//

அந்த கார்ட்டூனில் வருபவர் பரிணாவியலை தூக்கி பிடிக்கும் ஒரு ஆய்வாளர். அதாவது உங்க கட்சி. ஊருக்கெல்லாம் பரிணாமத்தை சொல்பவர் தனது உருவம் குரங்கை போல் மாறுவதை ஜீரணிக்க முடியவில்லை. பரிணாமவியல் தவறு என்று தெரிந்து கொண்டே அதை ஊருக்கு மட்டும் உபதேசித்து கொண்டுள்ளனர் என்பதை இந்த கார்ட்டுன் சொல்கிறது. :-)

suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//வாவ்!!வாவ்!!வாவ்!!...இதெல்லாம் நீங்க எங்க, எந்த ஸ்கூல்ல படிச்சீங்க ..சொன்னா, அவங்க புள்ளைங்களையாவது அந்த ஸ்கூல்ல சேர்ப்பாங்க...அதுகளாவது நல்லா வரட்டும் !!!//

ஹா...ஹா...இதை எல்லாம் இணைய தொடர்பு கிடைத்தவுடன் தேடலில் கிடைத்தவைகள். சினிமாக்கள் பார்ப்பதை நிறுத்தி குர்ஆனையும் அறிவியலையும் ஒப்பிட்டு பார்க்கும் ஆர்வத்தை வளர்த்து கொண்டதால் நான் தெரிந்து கொண்டதை பதிவுகளாக கொடுக்கிறேன். வேறு விஷேசமாக ஒன்றுமில்லை...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//So fossils record proves that Darwin's theory is not true.

But yet, though they could not substantiate that Darwin's theory could be proved through fossils record,

they manufacture fossils record.
And for example - how do they do that?//

பரிணாமவியலின் மற்றொரு பொய்யை வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு நன்றி.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

// மனிதர்கள் வாழ்ந்த வீடுகளின் எச்சங்களாவது இருக்க வேண்டுமே? கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் பொட்டல் வெளிகளாகவே உள்ளன. அனைத்து சமாதிகளும், கிணறுகளும் இன்றும் இருக்க வீடுகளை மட்டும் காணவில்லையே? இதற்கு என்ன பதில்?//

மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா ...அவ்வ்வ்!!!

ஏற்கனவே சொன்னது தான் செங்கல்,மண் போன்ர எளிய வீடுகள் அழிந்து போயிருக்கும், சில மண்ணில் புதைந்து இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நான் கொடுத்த சுட்டியில் எல்லாம் இருக்கு, அதை படித்துவிட்டும் இதையே கேட்டால் எப்பூடி?

சரி உங்களுக்கு ஒரு கேள்வி,

ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இருக்கு,ஆனால் ராஜ ராஜ சோழன் வாழ்ந்த அரண்மனை எங்கே?

அப்போ மன்னன் வாழவே இல்லை ,கோயிலை போன வருஷம் கலைஞர் கட்டினார் என்கிறீர்களா?

suvanappiriyan said...

//ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இருக்கு,ஆனால் ராஜ ராஜ சோழன் வாழ்ந்த அரண்மனை எங்கே?

அப்போ மன்னன் வாழவே இல்லை ,கோயிலை போன வருஷம் கலைஞர் கட்டினார் என்கிறீர்களா? //

கோவில் என்பது வழிபாட்டுக்காக உள்ளது. அதற்கு ஏன் அகழி வெட்ட வேண்டும்? கோவிலைச் சுற்றி பெரும் அகழி உள்ளதே? அது ஏன் என்று சொல்லுங்களேன். அங்கு ஒரு சுரங்கப் பாதையும் உள்ளது. இதை எல்லாம் படிக்கும் காலங்களில் பார்த்தது. தஞ்சை அரண்மனையை நீங்கள் பார்த்ததில்லையா? ராஜ ராஜ சோழனின் வைப்பாட்டடிகளுக்கென்று ஒரு தெருவே இருந்தது. அது இன்றும் அப்பெயரிலேயே அழைக்கப்படுவதாக அறிகிறேன்.:-)

//ஏற்கனவே சொன்னது தான் செங்கல்,மண் போன்ர எளிய வீடுகள் அழிந்து போயிருக்கும், சில மண்ணில் புதைந்து இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.//

நபாத்தியர்கள் அரபுகளின் வழி வந்தவர்கள் என்று கலையரசன் பதிவில் கூட ஒரு குறிப்பு உள்ளது.

கி.பி. 10 ம் நூற்றாண்டில், அரபு-இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் முசுட் (Musud), அந்தப் பிராந்தியத்தில் வாழும் மக்களின் வரலாறு பற்றிய செவி வழிக் கதைகளையும் தொகுத்திருந்தார். அரேபியர்களின் புராதன நாகரீகமாக, இன்றைய ஜோர்டானில் அழிந்து போன நபெத்தியர்களின் நாகரீகம் கருதப் படுகின்றது. நபெத்தியர்கள் என்ற இனமும், அவர்கள் பேசிய மொழியும் கூட இன்று இல்லை. இருப்பினும், அவர்கள் இன்றைய அரேபியரின் மூதாதையராக இருந்திருக்க வாய்ப்புண்டு. நிம்ரூட் என்ற மன்னன், நபெத்தியர்களை 500 ஆண்டுகள் ஆண்டதாக, அந்த மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. அதனையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட தரவுகளில் இருந்து நாம் சில முடிவுகளுக்கு வரலாம். ஒரு காலத்தில், ஈராக்கில் இருந்து ஜோர்டான் வரையில், நிம்ரூட் என்ற பெயரைக் கொண்ட மன்னன் ஆட்சி செய்துள்ளான். அவனது ஆட்சிக் காலம், வரலாறு எழுதப்பட்ட காலத்திற்கு முந்தியது.

-http://kalaiy.blogspot.com/2012/10/blog-post_27.html



UNMAIKAL said...

//வவ்வால் said...
சு.பி.சுவாமிகள்,

// மனிதர்கள் வாழ்ந்த வீடுகளின் எச்சங்களாவது இருக்க வேண்டுமே? கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் பொட்டல் வெளிகளாகவே உள்ளன. அனைத்து சமாதிகளும், கிணறுகளும் இன்றும் இருக்க வீடுகளை மட்டும் காணவில்லையே? இதற்கு என்ன பதில்?//

மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா ...அவ்வ்வ்!!!

ஏற்கனவே சொன்னது தான் செங்கல்,மண் போன்ர எளிய வீடுகள் அழிந்து போயிருக்கும், சில மண்ணில் புதைந்து இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நான் கொடுத்த சுட்டியில் எல்லாம் இருக்கு, அதை படித்துவிட்டும் இதையே கேட்டால் எப்பூடி?

சரி உங்களுக்கு ஒரு கேள்வி,

ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இருக்கு,ஆனால் ராஜ ராஜ சோழன் வாழ்ந்த அரண்மனை எங்கே?

அப்போ மன்னன் வாழவே இல்லை ,கோயிலை போன வருஷம் கலைஞர் கட்டினார் என்கிறீர்களா? //



ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் அரண்மனை

தஞ்சாவூர் அரண்மனை முதன் முதலில் மாமன்னன் இராசராசசோழனால் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு,

பின்னர் நாயக்க மன்னர்களாலும் மாரட்டிய மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டது.

இப்போது அரண்மனை 534 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே உள்ளது.

அரண்மனையில் அரசவை, அந்தப்புரம், மணிமண்டபம், ஆயுதகோபுரம், தர்பார் மண்டபம், சரசுவதிமகால் நூல்நிலையம். சங்கீதமகால், கந்தக கோபுரம்,ஏழடுக்கு மாளிகை, குதிரை, யானை லாயங்கள், சுதை உருவங்களுடன் கூடிய இருட்டறைப் பகுதிகளும் கானப்படுகின்றன.

http://kallarperavai.weebly.com/2970301530062996-299729922994300629933009.html

Jayadev Das said...

\\ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியையும் கரைத்து விடும் இந்த இடம் இரைப் பையையும் கரைத்து விட வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏன் நிகழ்வதில்லை?\\அட ஆமாம் நான் கூட இத யோசிச்சே பார்க்கவே இல்லை சுவனம்!! [அவ்வளவு ஏன் ஆப்பிரிக்காவுல மனுஷக் கறியே தின்னுராங்கலாம்!! ]

\\அதற்காக தமிழ்மணம், இண்ட்லி, கூகுள் மீதெல்லாம் சத்தியமிட்டு சொல்கிறார். :-)\\ அதெல்லாம் நாசமாப் போனா இவருக்கென்ன கவலை. வெவரமாத்தான் இருக்கார், என் தலை மேலன்னு சொல்ல மாட்டார். ஆக சத்தியம் செய்யும் மூட நம்பிக்கை மேல் தீராத நம்பிக்கை வைத்திருக்கிறார், வாழ்க பகுத்தறிவு. எப்படியோ கொக்கி போட்டு மடக்கியதர்க்கு நன்றி.

Jayadev Das said...

\\அல்புமின்கள்,புரோட்டின்கள் இந்த வேலையை செய்கின்றது என கண்டுப்பிடிச்சு சொன்னது யார், விஞ்ஞானிகள் தானே?\\ இது உள்ளதை பார்த்து சொன்னது.

\\அப்புறம் அவர்கள் சொல்லும் பரிணாமம் மட்டும் இல்லைனா எப்பூடி?\\ இது டார்வின் அவிழ்த்து விட்ட புருடா, இரண்டும் ஒன்றல்ல.

suvanappiriyan said...

திரு ஜெயதேவதாஸ்!

//அட ஆமாம் நான் கூட இத யோசிச்சே பார்க்கவே இல்லை சுவனம்!!//

இந்த ஏற்பாட்டை நமது உடலில் ஏற்படுத்தியவன் யார்? என்ற கேள்விக்கு அறிவியல் அறிஞர்களாலேயே இன்று வரை பதில் சொல்ல முடியவில்லை. இறைவனின் வல்லமையை உணரக் கூடிய இடங்கள் இவைகள் எல்லாம்.

//அதெல்லாம் நாசமாப் போனா இவருக்கென்ன கவலை. வெவரமாத்தான் இருக்கார், என் தலை மேலன்னு சொல்ல மாட்டார். ஆக சத்தியம் செய்யும் மூட நம்பிக்கை மேல் தீராத நம்பிக்கை வைத்திருக்கிறார், வாழ்க பகுத்தறிவு. எப்படியோ கொக்கி போட்டு மடக்கியதர்க்கு நன்றி. //

அதானே! ஏன் அவர் சத்தியம் பண்ணவில்லை? :-)

//இது டார்வின் அவிழ்த்து விட்ட புருடா, இரண்டும் ஒன்றல்ல.//

எப்படியோ வவ்வால் விளங்கிக் கொண்டால் சரி!

ராவணன் said...

////சுவனப் பிரியன் said...

திரு ஜெயதேவதாஸ்!

//அட ஆமாம் நான் கூட இத யோசிச்சே பார்க்கவே இல்லை சுவனம்!!//

இந்த ஏற்பாட்டை நமது உடலில் ஏற்படுத்தியவன் யார்? என்ற கேள்விக்கு அறிவியல் அறிஞர்களாலேயே இன்று வரை பதில் சொல்ல முடியவில்லை. இறைவனின் வல்லமையை உணரக் கூடிய இடங்கள் இவைகள் எல்லாம்.////


அண்ணாச்சி அந்த இறைவன் யாரு அண்ணாச்சி?

நம்ம முனியாண்டி சாமிதானே?

என்னது...அப்படி சொன்னா காசு கொடுக்கமாட்டாங்களா?

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

வரலாறு,அறிவியல் எல்லாம் உங்களுக்கு புரியப்போவதில்லை, பேசாம எல்லாம் குரானில் சொல்லியாச்சுன்னு வழக்கம் போல சொல்லிட்டு போயிடுங்க :-))

நபாதியன்கள் அரேபிய இனக்குழு என ஒன்று உருவாகும் முன்னர் உருவான ஒரு இனக்குழு, அவங்க ஆதி இரான், மெசபடோமியான்னு போகுது.

சரி விடுங்க, அப்பாவையே ,பையன் தான் பெற்றான்னு சொல்லிட்டு போயிடலாம் இதுக்கு :-))

---------

இப்போ தஞ்சாவூரில் இருக்கும் அரண்மனைய சோழர்கள் காலம்னு வரலாற்று/தொல்லியல் அறிஞர்கள் சொல்லவில்லை.

நாயக்கர்கள், மராத்தாக்கள் கட்டியது என்கிறார்கள், சந்தேகத்தோட பழைய இடத்தில் கட்டியிருக்கலாம்னு ஒரு பேச்சு ,ஆனால் அதனை நிருவ சான்று இல்லை, இருக்கும் கட்டமைப்பினை ஆய்வு செய்தால் 15 ஆம் நூற்றாண்டு அதற்கு பின் என தான் காட்டுது.

இவ்வளவு பேசுறிங்களே ராஜ ராஜ சோழன் கல்லறை என ஒரு மண் மேட்டை தான் சொல்லுறாங்க, அதுவும் உறுதியாக சொல்லவில்லை, அது பற்றி இணையத்திலும் நிறைய பேரு எழுதி இருக்காங்க.

சோழர்களைப்பற்றி காட்ட கோயில்களை தவிர வேறு கட்டமைப்பே கிடைக்கவில்லை.

இதே கதை தான் பாண்டிய, பல்லவ மன்னர்களுக்கும்.

வரலாறும் ,அறிவியலும் நிறுபிக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.

இப்போ டார்வின் தியரிக்கே இன்னும் ஏன் முழு ஆதாரம் இல்லை என்பதால் தான் தியரின்னு சொல்லுறாங்க, அதே சமயம் அது ஒரு வழியைக்காட்டி இருக்கு, அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு ,உயிரின் ஆதிய நிறுவப்பார்க்கிறார்கள்.

டார்வின் தியரி பரிணாமம் வேண்டுமானால் படிமம் என தேடி காட்ட வேண்டியதாக இருக்கும், ஆனால் உயிர் என்பது ஒரு செல் உயிரி மூலம் உருவாகியது என்பதை அறிவியலாளர்கள் ஏற்றுக்கொன்டிருக்கிறார்கள்.

எந்த உயிரியும் இப்போது இருப்பது போல முழுசாக உருவாகவில்லை.

உங்க படைப்பு வாதத்தின் படி மனிதன் மனிதானாகவே படைக்கப்பட்டான் என்பதை அறிவியலாளர்கள் ஏற்கவே இல்லை.

அதிலும் மனிதன் உருவாகி பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகே மொழி உருவாகி பேச, எழுதப்பழகினான், அப்படி இருக்கும் போது ஆதம் தோன்றியதும் சலாம் அலைக்கும் பேசியத்ஆக கதை சொன்னால் உலகில் ஏற்க அனைவரும் என்ன மார்க்கவாதிகளா :-))

---------

உங்களுக்கு ஒரு கேள்வி , ஆதாம் தோன்றிய போது 60 முழம் இருந்தார் எனில் அப்போது ஒட்டகம் என்ன உயரம் இருந்திருக்கும், ஒரு 70 முழ உயரம் இருக்குமல்லவா, ஏன் அவ்வள்வு பெரிய ஒட்டகத்தின் எலும்பு கூடு கிடைக்கவில்லை :-))

Unknown said...

அண்ணே!!! ....இங்க கருப்பா,குட்டையா,கணமா, சுருட்ட முடி வச்சிக்கிட்டு இருப்பாரே அவர தெரியுமா ???

அடிக்கடி முனியாணி,முனியாண்டி (அபிராமி அபிராமி )அப்டின்னு சொல்லுவாரு !!!...நல்ல மனுஷன் !

யாராவது பார்த்தா சொல்லுங்கண்ணே..!!!

suvanappiriyan said...

ராவணன்!

//அண்ணாச்சி அந்த இறைவன் யாரு அண்ணாச்சி?

நம்ம முனியாண்டி சாமிதானே?//

அது உங்கள் நம்பிக்கை. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நான் இறைவனை வணங்க ஆதாரமாக குர்ஆனை வைத்திருக்கிறேன். நீங்கள் எதை ஆதாரமாக வைத்து முனியாண்டியை இறைவன் என்கிறீர்கள். தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.

suvanappiriyan said...

//டார்வின் தியரி பரிணாமம் வேண்டுமானால் படிமம் என தேடி காட்ட வேண்டியதாக இருக்கும், ஆனால் உயிர் என்பது ஒரு செல் உயிரி மூலம் உருவாகியது என்பதை அறிவியலாளர்கள் ஏற்றுக்கொன்டிருக்கிறார்கள்.//

அந்த உயிர் எங்கிருந்து வந்தது யார் உண்டாக்கியது என்பதை உங்களின் அறிவியலாளர்கள் கண்டு பிடித்து விட்டார்களா? இதற்கு பதில் சொல்லுங்கள்.

Nasar said...

திரும்பவும் செத்த பாம்பை அடிக்கிறீங்களா ...!!!!!
பாவம் " ஐயா வண்டி " எப்படி பதில் சொல்லனும்னு தலைய சொரிந்துக்கொண்டு இருப்பார் .....!!!!
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று வாதத்துக்கு ஏற்றுக்கொண்டாலும் சவூதியில் கிடைத்த 15,20 அடி உயரமுள்ள
ஆத , சமுது மக்களின் எலும்புக்குடுகளை ஆராய்ந்து இவிங்களும்
குரங்கு மூலமாகத்தான் வந்தார்கள் என்று " ஐயா வண்டி " கூட்டத்தார்
சொல்றாங்களா ..?? அல்லது வழக்கம் போல லேப்ல ஆராய்ச்சி
பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்றாரா ..??!!
கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாய் ....புன்னியமாகபோகும் .

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

//அந்த உயிர் எங்கிருந்து வந்தது யார் உண்டாக்கியது என்பதை உங்களின் அறிவியலாளர்கள் கண்டு பிடித்து விட்டார்களா? இதற்கு பதில் சொல்லுங்கள்.//

ஒரு செல் உயிரிக்கு உயிர் எங்க இருந்து வந்துதுனா ..???காரணம் பிர்லா சிமென்ட் !!! ஏன்னா பிர்லா சிமென்ட்லதான் உயிர் இருக்கு !!!

இந்த அளவுக்கு சொல்லுவதற்கு கூட அவங்களுக்கு கூறு கிடையாது...!!!

Nasar said...

வவ்வால் சொல்கிறார் ....கேளுங்கோ
// வரலாறும் ,அறிவியலும் நிறுபிக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.//
ஆமாம் ....ஏற்றுக்கொள்கிறோம் ...வழி மொழிகிறேன்
[பரிணாமம் நிருபித்தாச்சா?! என்கிற கேள்வி மட்டும் கேட்ககூடாது அச்டுங்களா ]

// இப்போ டார்வின் தியரிக்கே இன்னும் ஏன் முழு ஆதாரம் இல்லை என்பதால் தான் தியரின்னு சொல்லுறாங்க, // இதுல உங்களுக்கே சந்தேகமாக இருக்கும் போது எங்களபோன்றவர்களுக்கு எப்படீங்க நம்பிக்கை வரும்...!!?? மேட்டர டீல்ல விட்ராமில்லையா ..?? ஏன் அதையே பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு இருக்கணும் ..??!! // அதே சமயம் அது ஒரு வழியைக்காட்டி இருக்கு, அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு ,உயிரின் ஆதிய நிறுவப்பார்க்கிறார்கள்.//

குரங்கு தியரிய தான் சுட்டிக்காட்டிக்கொண்டு வர்றீங்க இதுல இன்னும் ஆராய்ச்சி பண்ணி உயிரின் மூலத்தை நிறுவபாக்குறீங்களா ..?? நிதானத்தொடுதான் பேசுறீங்களா இல்ல காமெடி கீமெடி பண்றீங்களா ..?!

// டார்வின் தியரி பரிணாமம் வேண்டுமானால் படிமம் என தேடி காட்ட வேண்டியதாக இருக்கும், ஆனால் உயிர் என்பது ஒரு செல் உயிரி மூலம் உருவாகியது என்பதை அறிவியலாளர்கள் ஏற்றுக்கொன்டிருக்கிறார்கள்.// நாங்களும் அதேதான் பல வருடங்களாக கேக்குறோம் , ஒரு செல் அமிபாவுக்கு உயிர் எங்கிருந்து வந்தது ? யார் கொடுத்தாங்க ?இதுவரை பதிலே இல்லியே ஏன் ??

// எந்த உயிரியும் இப்போது இருப்பது போல முழுசாக உருவாகவில்லை.// புது புரூடா ....லேட்டஸ்டு கப்ஸா ....[சவூதியில் கப்ஸா ரொம்ப ஃமஸ்] யார் சொன்னாங்க ?? ஆதாரம் உண்டா ?? இன்சால்மேண்டா ???
// உங்க படைப்பு வாதத்தின் படி மனிதன் மனிதானாகவே படைக்கப்பட்டான் என்பதை அறிவியலாளர்கள் ஏற்கவே இல்லை.//

போகட்டுமே ...குடி முழ்கிவிடாது ...இன்றைய அறிவியல் முடிவு நாளையும் தொடருமா என்ன ..?? இது கடைசி முடிவா ??ஆஹாஹா

// அதிலும் மனிதன் உருவாகி பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகே மொழி உருவாகி பேச, எழுதப்பழகினான், அப்படி இருக்கும் போது ஆதம் தோன்றியதும் சலாம் அலைக்கும் பேசியத்ஆக கதை சொன்னால் உலகில் ஏற்க அனைவரும் என்ன மார்க்கவாதிகளா //

உங்களுக்கு கொஞ்சமாவது மசாலா டாப்புல இருக்கும்னு நினத்தேன் ஆனா என் நினைப்புல இப்படி மண்ணு கொட்டுவீங்கன்னு எதிர்பார்க்கல " வவ்வால்ஜீ சிந்தாபாத் "

// உங்களுக்கு ஒரு கேள்வி , ஆதாம் தோன்றிய போது 60 முழம் இருந்தார் எனில் அப்போது ஒட்டகம் என்ன உயரம் இருந்திருக்கும், ஒரு 70 முழ உயரம் இருக்குமல்லவா, ஏன் அவ்வள்வு பெரிய ஒட்டகத்தின் எலும்பு கூடு கிடைக்கவில்லை //

சுவன்ஜி இடம் இதையும் கேளுங்க ....ஆதாம் காலத்தில் 50 முழம் அகலமும்,10 முழம் உயரமும் உள்ள வவ்வால்[MY ANCESTORS] இருக்குமல்லவா அடலீஸ்ட் அம்மாம் பெரிய வவ்வாலின் எலும்பு கூடு கிடைக்கவில்லை ..??!! அறிவுபூர்வமான இதுபோல கேள்விகள கேட்டு சுவன் சகோவை திணற அடிக்கணும் ...ஆவ அவ்வ்

suvanappiriyan said...

வவ்வால்!

//அதிலும் மனிதன் உருவாகி பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகே மொழி உருவாகி பேச, எழுதப்பழகினான், அப்படி இருக்கும் போது ஆதம் தோன்றியதும் சலாம் அலைக்கும் பேசியத்ஆக கதை சொன்னால் உலகில் ஏற்க அனைவரும் என்ன மார்க்கவாதிகளா :-))//

எங்கு படித்தீர்கள்? இதற்கு என்ன ஆதாரம் என்று முன்பே கேட்டேன். இதுவரை பதில் தரவில்லை. திரும்பவுமா? :-(

வவ்வால் said...

நாசர்,

ஒரே ஒரு அச்சடித்த புத்தகத்த வச்சுக்கிட்டு அதில எல்லாம் சொல்லி இருக்குன்னு சொல்லும் காமெடிய விடவா?

கண்னு பார்க்குது,காது கேட்குது,வாய்ப்பேசுது எல்லாம் எல்லாம்ம் எப்படி சாத்தியம் இதெல்லாம் அல்லாசாமியின் ஏற்பாடுன்னு சொல்லுங்க :-))

ஏன் அல்லா சாமி மனிதனை படைக்கும் போதே ஐபோன், கணினி, இணையம், விமானம், மின்சாரம் ,கார் என அனைத்து வசதியோட படைக்காம ஒட்டகத்தில் பயணம் செய்யும் காட்டுமிரான்டியா படைச்சார் :-))

-------------------

சு.பி.சுவாமிகள்,

ஒரே விஷத்தினை எத்தனை தடவை உங்களுக்கு சொல்ல வேண்டும், ஆதி மனிதன் உயரம் என்ன என்ற பதிவில் இதனை தெளிவாக சொல்லிய பின்னும் , இன்னும் சொல்லவில்லை என்றால், என்ன சொல்ல வேண்டும்? கண் மூடித்தனமானவர்கள் என்பதை நிருபிக்கிறீர்கள்.

கீழே மீண்டும் உங்கள் பதிவில் போட்ட பின்னூட்டத்தினை காபி&பேஸ்ட் செய்துள்ளேன், புரிந்தால் சரி, இல்லை எனில் நீங்கள் மூன்று கால் முயல் பிடிக்க நினைத்தால் அதனையே தொடருங்கள் :-))

//வவ்வால் said...
சு.பி.சுவாமிகள்,

//என்று நான் கேட்ட கேள்விக்கு குர்ஆனிலிருந்து விளக்கம் தரவும். அல்லது தெரியாமல் தவறாக சொல்லி விட்டேன் என்று ஒத்துக் கொள்ளவும்.//

உங்களுக்கு தெரிந்தது மட்டும் தான் குரானா, இல்லை உங்களுக்கு தெரியாததை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ள இப்படியா?

எனக்கும் குரான் தெரியாது, முன்னர் சாந்தியும், சமாதனமும் நிலவட்டும் என ஒரு விவாதம் ஓடிய போது சில மார்க்க பந்துக்கள் சொன்னது தான் , அல்லா ஆதாமை படைத்தபின் மேல் உலகு அனுப்பினார், பின்னர் ஆதாமுடன் பேசி இந்த வணக்கத்தினை உருவாக்கினார் என சொன்னார்கள்.

//The Prophet said, "Allah created Adam in his image, sixty cubits (about 30 meters) in height. When He created him, He said (to him), ‘Go and greet that group of angels sitting there, and listen what they will say in reply to you, for that will be your greeting and the greeting of your offspring.’ Adam (went and) said, ‘As-Salamu alaikum (Peace be upon you).’ They replied, ‘As-Salamu ‘Alaika wa Rahmatullah (Peace and Allah’s Mercy be on you).’ So they increased ‘wa Rahmatullah’ The Prophet added, ‘So whoever will enter Paradise, will be of the shape and picture of Adam. Since then the creation of Adam’s (offspring) (i.e. stature of human beings) is being diminished continuously up to the present time." (Sahih al-Bukhari, Volume 8, Book 74, Number 246)//

இப்போ அசலாம்மு அலைக்கும் என்பதை ஆதாம் அல்லாவிடம் சொன்னதாக வருகிறதே ,இது சரியா தப்பா என நீங்கள் தான் சொல்ல வேண்டும் :-))

ஆதாம் பேசிய மொழி என்ன, அல்லா மற்றும் ஆதாமுடன் என்ன மொழியில் உரையாடி இருப்பார்கள், நீங்களே சொல்லிடுங்க ?//

ஆதாம் மேல் உலகம் போய் வானவர்களுக்கு அசலாம் அலைக்கும் சொன்னார் என்று கதை கூறப்பட்டுள்ளது, நீங்கள் இப்போதும் கண் தெரியாதவர் போல நடித்தால் அடியேன் பொறுப்பல்ல!

விஜய் said...

//ஏனெனில் யானையின் செரிமானத்துக்கும் சிங்கத்தின் செரிமானத்துக்கும் குரங்கின் செரிமானத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ம்யூகோஸா என்ற பொருளின் அளவு உயிரினத்தின் செரிமாணத்துக்கு ஏற்ப மாறுபட்டால்தான் அந்த உயிரால் உயிர்வாழ முடியும்.//

பச்சரிசி சாதம் மட்டுமே சாப்பிடுபவர்கள் புழுங்கலரிசி சாதம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது. அதே மாதிரி புழுங்கலரிசி சாதம் மட்டுமே சாப்பிடுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது. இறைச்சியே சாப்பிடாத ஒருவன் திடீரென்று ஒரு நாள் இறைச்சி சாப்பிட்டால் கண்டிப்பாக ஜீரணம் ஆகாது. இப்படியே நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். எந்த உணவானாலும் பழக பழக ஜீரண உறுப்புகள் அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்கின்றன.

suvanappiriyan said...

வவ்வால்!

//ஆதாம் மேல் உலகம் போய் வானவர்களுக்கு அசலாம் அலைக்கும் சொன்னார் என்று கதை கூறப்பட்டுள்ளது, நீங்கள் இப்போதும் கண் தெரியாதவர் போல நடித்தால் அடியேன் பொறுப்பல்ல! //

தவறான புரிதல். ஆதம் முழு படைப்பாக பூமியிலிருந்து வானத்துக்கு செல்லவில்லை.

அடுத்து மண்ணை தண்ணீரில் குழைத்து தனது ரூஹை ஊதி ஆதமை இறைவன் படைக்கிறான். அந்த ஆதமிலிருந்து அவரது துணையை படைக்கிறான். அவருக்கு ஞானத்தை அளிக்கிறான். அது எந்த மொழியில் என்ற ஆராய்சி நமக்கு தேவையில்லாதது. நாம் தற்போது பயன்படுத்தும் யுனிகோட் உலக மொழிகளுக்கெல்லாம் பொதுவாக இருப்பது போல் அந்த மொழியும் இருந்திருக்கலாம். இது போன்ற ஆராய்ச்சிகளினால் ஒரு பயனும் விளையப் போவதுமில்லை. தண்ணீரையும் மண்ணையும் குழைத்து ஒரு உயிரை உருவாக்கியவனுக்கு மற்றவை அனைத்தும் வெகு சாதாரணமே...

ராவணன் said...

////சுவனப் பிரியன் said...

வவ்வால்!

//ஆதாம் மேல் உலகம் போய் வானவர்களுக்கு அசலாம் அலைக்கும் சொன்னார் என்று கதை கூறப்பட்டுள்ளது, நீங்கள் இப்போதும் கண் தெரியாதவர் போல நடித்தால் அடியேன் பொறுப்பல்ல! //

தவறான புரிதல். ஆதம் முழு படைப்பாக பூமியிலிருந்து வானத்துக்கு செல்லவில்லை.

அடுத்து மண்ணை தண்ணீரில் குழைத்து தனது ரூஹை ஊதி ஆதமை இறைவன் படைக்கிறான். அந்த ஆதமிலிருந்து அவரது துணையை படைக்கிறான். அவருக்கு ஞானத்தை அளிக்கிறான். அது எந்த மொழியில் என்ற ஆராய்சி நமக்கு தேவையில்லாதது. நாம் தற்போது பயன்படுத்தும் யுனிகோட் உலக மொழிகளுக்கெல்லாம் பொதுவாக இருப்பது போல் அந்த மொழியும் இருந்திருக்கலாம். இது போன்ற ஆராய்ச்சிகளினால் ஒரு பயனும் விளையப் போவதுமில்லை. தண்ணீரையும் மண்ணையும் குழைத்து ஒரு உயிரை உருவாக்கியவனுக்கு மற்றவை அனைத்தும் வெகு சாதாரணமே...////

அண்ணாச்சி என்னோட சின்ன மூளைக்குள் ஒரு சின்ன சந்தேகம்.

தண்ணீரையும் மண்ணையும் குழைத்து ஒரு உயிரை(ஆதம் என்ற மனிதனை) உருவாக்க முடியுமா?

ஏதாவது அறிவியல் சான்று இருக்கா?

வெறும் சட்டி பனையை மட்டுமே உருவாக்கலாம் என்று எனது நண்பர் நாக்கூர் நாகப்பன் சொல்வது தப்பா அண்ணாச்சி?

suvanappiriyan said...

//தண்ணீரையும் மண்ணையும் குழைத்து ஒரு உயிரை(ஆதம் என்ற மனிதனை) உருவாக்க முடியுமா?

ஏதாவது அறிவியல் சான்று இருக்கா?//

மனித உடல் தண்ணீராலேயே படைக்கப்பட்டுள்ளது என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை. நானே பதிவுகள் எழுதியுள்ளேன். கூகுளில் தேடினாலும் கிடைக்கும்.

Unknown said...

சகோ சு.பி.

//மனித உடல் தண்ணீராலேயே படைக்கப்பட்டுள்ளது என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை.//

//அறிவியல் அறிஞர்கள் என்று சொல்லப்படுவோர் இரு வகை. ஒரு வகை நிரூபிக்கப்படாத அனுமானங்களை ஒத்துக் கொள்வது. மற்றொரு வகை நிரூபிக்காத முடிவுகள் அனைத்தையும் புறம் தள்ளுவது//

ஆதம் படைப்பு இதில் எந்த வகையைச் சார்ந்தது? அனுமானமாக‌ ஒத்துக் கொள்வதா?அல்லது நிரூபிக்காதது என்று புறந்தள்ளுவதா?

suvanappiriyan said...

சகோ இனியவனியவன்!

//ஆதம் படைப்பு இதில் எந்த வகையைச் சார்ந்தது? அனுமானமாக‌ ஒத்துக் கொள்வதா?அல்லது நிரூபிக்காதது என்று புறந்தள்ளுவதா?//

முதல் உயிர் எவ்வாறு வந்தது என்பதை இன்று வரை அறிவியலால் கண்டு பிடிக்கப் படவில்லை. உயிர் எங்கிருந்து வருகிறது. இறப்புக்கு பிறகு அது எங்கு செல்கிறது என்பதற்கும் அறிவியலில் விடை இல்லை.

அதற்கு விடை தெரியாத பட்சத்தில் ஆதமை இறைவன் படைத்து அவரிலிருந்து மனிதர்களை பல்கிப் பெருகச் செய்தான் என்ற கோட்பாடே சிக்கலில்லாத ஒரு தீர்வு. மனிதர்களின் மூலம் ஆப்ரிக்க ஒரு தாய் தந்தையர் என்ற அறிவியல் முடிவையும் இங்கு சீர் தூக்கி பாருங்கள்.

Unknown said...

சலாம் சகோ,

//அதற்கு விடை தெரியாத பட்சத்தில் ஆதமை இறைவன் படைத்து அவரிலிருந்து மனிதர்களை பல்கிப் பெருகச் செய்தான் என்ற கோட்பாடே சிக்கலில்லாத ஒரு தீர்வு.//

சின்ன திருத்தம் ஒரு ஆறுதல் தீர்வு அவ்வளவே.
நன்றி!!!!!