Followers

Friday, April 05, 2013

பொது பல சேனா எதிர்பார்ப்பது என்ன?

பொது பல சேனா அமைப்பில் முஸ்லிம் பிரிவொன்றை நிறுவுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அவ்வமைப்பின் செயலாளர் பொதுபல சேனாவில் முஸ்லிம் பிரிவு - கலகொட அத்தே ஞானசார தேரர்
தெரிவித்தார்.

முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து தமது சமூகத்தையும் நாட்டையும் மீட்டுத் தருமாறு சம்பிரதாய முஸ்லிம்கள் எம்மிடம் கோரிக்கை விடுக்கின்றனர். அவர்களை பொது பல சேனாவுடன் சேர்த்து செயற்பட நாம் அழைப்பு விடுக்கிறோம். எதிர்காலத்தில் பொது பல சேனாவில் முஸ்லிம் பிரிவொன்றை செயற்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.

பொதுபல சேனா நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

-http://www.jaffnamuslim.com/2013/04/blog-post_5642.html


பொதுபல சேனா இலங்கை முஸ்லிம்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை இந்த அறிக்கை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அதாவது எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டில் முஸ்லிம்கள் பள்ளி வாசலுக்கும் போய் கொள்ளலாம: தர்ஹாவுக்கும் போய்க் கொள்ளலாம்: புத்த விகாரைக்கும் வரலாம்: கோவிலுக்கும் செல்லலாம். இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டால் முஸ்லிம்கள் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை இலங்கையில் ஓட்டலாம் என்பதை மிக நாசூக்காக தெரிவிக்கிறது பொதுபல சேனா என்ற அமைப்பு.

//முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து தமது சமூகத்தையும் நாட்டையும் மீட்டுத் தருமாறு சம்பிரதாய முஸ்லிம்கள் எம்மிடம் கோரிக்கை விடுக்கின்றனர். அவர்களை பொது பல சேனாவுடன் சேர்த்து செயற்பட நாம் அழைப்பு விடுக்கிறோம். எதிர்காலத்தில் பொது பல சேனாவில் முஸ்லிம் பிரிவொன்றை செயற்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.//

இந்த வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். 'சம்பிரதாய முஸ்லிம்கள்' என்பவர்கள் யார்? பள்ளிவாசலுக்கும் வருவார்கள்: தர்ஹாக்களுக்கும் செல்வார்கள்: மாரியம்மன் கோவிலுக்கும் செல்வார்கள்:புத்த விகாரைக்கும் செல்வார்கள். இது போன்ற முஸ்லிம்களைத்தான் நமது நாட்டு இந்துத்வாவாதிகளும் 'தேசபக்தி முஸ்லிம்கள்' என்று புகழாரம் சூட்டுகின்றனர். இது போன்ற பெயர்தாங்கி முஸ்லிம்களைத்தான் பொதுபல சேனாவில் சேருமாறு அதன் தலைமை அழைப்பு விடுக்கிறது.

அடிப்படைவாத முஸ்லிம்களிடம் இருந்து காக்க வேண்டுமாம். யார் இந்த அடிப்படைவாத முஸ்லிம்கள? குர்ஆனும் நபிமொழிகளும் மட்டுமே இஸ்லாமிய மார்க்கமாக முடியும் என்று மிகச் சிறந்த பிரசாரத்தை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி தற்போது 'ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்' என்ற பெயரில் இலங்கையிலும் தொடங்கப்பட்டுள்ள அமைப்பைக் குறித்தே பொதுபல சேனா பேசுகிறது. மற்ற அமைப்புகளைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. எல்லாம் பத்தோடு பதினொன்றாக கரைந்து விடும் என்பது அவர்களுக்கும் தெரியும். குர்ஆனையும் ஹதீஸையும் கையிலெடுத்திருக்கும் இந்த இளைஞர் பட்டாளத்தை வளர விட்டால் புத்த மதம் முற்றாக துடைத்தெறியப்பட்டு விடும் என்ற பயத்தினாலேயே தவ்ஹீத் ஜமாத்தை இவர்கள் எதிர்க்கிறார்கள். எனவேதான் சில நாட்களுக்கு முன்பு 'ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தை அரசு தடை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை இதே அமைப்பு வைத்தது. தவ்ஹீத் ஜமாத்தின் வரவால் பவுத்த மதத்தை சார்ந்தவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் மனமாற்றமடைந்து இஸ்லாத்தில் அதிகம் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர். சவுதியில் கூட இந்த மாற்றங்களை அவ்வப்போது நான் நிறைய பார்த்து வருகிறேன். சமீபத்தில் நடந்த மனமாற்றம்..

----------------------------------------------------------

சவூதியில் இஸ்லாத்தை தழுவிய இரு சிங்கள சகோதரர்கள்...........!!



இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவூதி அரேபியா, தபூக் கிளையில் இலங்கை புத்த மதத்தை சேர்ந்த, சிங்கள மொழி பேசக்கூடிய இந்திக்கா, பிரசன்னா ஆகிய இரு சகோதரர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்காக ஏக இறைவனிடத்தில் பிரார்த்திப்பீர்.........!!

------------------------------------------------------------

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற 3 சகோதரிகள்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 14-03-2013 வியாழன் அன்று தபூக் பிரசவ மருத்துவமனையில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் மணிலாவை சேர்ந்த சகோதரி எமிலியும் இலங்கை கன்தலாவைச் பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி சந்திரிக்கா சமந்தி பிரேராவும், இலைங்கை நெக்கம்போவை பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி அனோமா தில்ஹனி சில்வவும், தூய இஸ்லாத்தை தழுவினார்கள். அவர்களுக்கு சுமையா இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கிக் கூறினார்கள். அவர்களில் எமிலி,-அமல் என்றும், சந்திரிக்கா சமீரா என்றும், அனோமா ஈமான் என்றும் தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

--------------------------------------------------------------

ஒரு இலங்கை சகோதரரின் பின்னூட்டத்தையும் பார்த்து விடுவோம்.......


கலகொட அத்தே ஞானசார தேரர் ஒரு பயங்கரவாதியென்று பெளத்த பெரும்பீடங்களே தெரிவித்துவிட்டது. இது அனவருமறிந்தசெய்திதான் இருப்பினும் இவருக்கு தற்பொது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது, அதனால்தான் இப்படியான செய்திகளை அறிவிக்கின்றார், முஸ்லிம்கள் உன்போன்றா குடிகாரனிடமும் உன்போன்ற பயங்கரவாதியிடமும் ஒருபோதும் உதவிகேட்டு நிற்கமாட்டார்கள் ”லாஇலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை வாயினால் மொழிந்த எந்தவொரு முஸ்லிமும் உன்போன்ற கயவர்களின் உன்போன்ற முனாபிக்குககளின் உதவியை நாடமாட்டார்கள் என்பதை நீ உணர்ந்துகொள்.

இதையும் தாண்டி கலகொட அத்தே ஞானசார காசுகொடுத்து முஸ்லிம்கள் சமுதாயத்தில் ஒட்டிவாழக்கூடிய இஸ்லாமியப் பெயரை மாத்திரம் கொண்ட யாரையாவது நீ உன்பக்கம் திருப்பவேண்டுமென்று முயற்சிக்கின்றாய் அது நன்றாகவே எமக்கு புரிகின்றது, நீ முயற்சி செய் கண்டிப்பாக மேற்குறிப்பிட்ட சிலர் உனக்கு கிடைப்பார்கள் இல்லாமலில்லை. அவர்கள் யாராக இருப்பார்களென்று நாமே உமக்கு விளக்குகிறோம். மிக இலகுவாக உன்னால் கண்டுபிடிக்கலாம். இதோ அவர்களின் விபரம் குறித்துக்கொள்:

எங்களைப்போல் இறைநம்பிக்கை வைத்து, இறைவனையே உதவிதேடும் கூட்டத்தினரல்ல அவர்கள். இன்னும் விரிவாக சொல்லவேண்டுமானால் உன்னைப்போன்ற பிறப்பாலும் வளர்ப்பாலும் இழிவானவர்களே அவர்கள், உன்னுடன் வந்து சேரக்கூடிய கூட்டம். அல்ஹம்துலில்லாஹ் உன்போன்ற நயவஞ்சகர்களின் மூலம் எங்கள் மத்தியில் வாழக்கூடியவர்களின் யாராவது குழப்பத்தை விருகின்றார்களா என்பதையும் எம்முடனேயிருந்து எமக்கெதிராக இறை மறுப்பாளர்களாக வாழ்ந்து எம்மை குழியிலிட நினைத்து யார் மறுமைக்காக அவர்களுகே குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கின்றார்களே அவர்கள் யாரென்பதையும் பொதுபலசேனமூலமாக எல்லாம் வல்ல இறைவன் எமக்கு காட்டித் தரவிருக்கின்றான் அதையிட்டு நாம் எல்லாம் வ்ல்ல இறைவனுக்கு மீண்டும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

கலகொட அத்தே ஞானசார தேரா உமது செயல்பாட்டையும் உமது அருவருக்கத்தக்க இயல்புகளையும் நேரடியாகக் காணக் கிடைத்ததையிட்டு நாம் அல்லாஹ்வுக்கு நன்றிகூறி நாம் ஒவ்வொரு தொழுகையிலும் இன்னும் குனூத் ஓதி அல்லாஹ்விடம் பிரார்த்தித்த வண்ணமேயுள்ளோம்.

இன்னும் கலகொட அத்தே ஞானசார தேரா உமது பாசையில் சொல்லவேண்டுமானால் உனது பருப்பு முஸ்லிம்களாகிய எம்மிடம் வேகாது. இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள், பெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் உன்னைப்போல்தான் குறுகிய அறிவுகொண்டவர்களென்று நீ நினைப்பதில் தவறில்லை. காரணம் உனக்கு குறிப்பிட்ட எல்லையைத்தாண்டி யோசிக்க தெரியாது. நாம் உன்னைப் போன்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதற்குப் பதிலாக இறைவனிடம் பிரார்திக்கின்றோம்.

-Renees MHM says

--------------------------------------------------------------



சமூகங்களுக்கு மத்தியிலான புரிந்துணர்வு, நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு தாயிப்ஃ அழைப்பு மற்றும வழிகாட்டல் மையத்தின் தமிழ், சிங்களப் பிரிவு ஏற்பாடு செய்யும் சிறப்பு கலாச்சார நிகழ்ச்சி. மாற்று மத சகோதரர்கள் பெருமளவில் பங்கு கொண்டு பயனடையுமாறு அழைப்பு வழிகாட்டல் மையம் கேட்டுக் கொண்டுள்ளது.



17 comments:

Unknown said...

அதானே. முஸ்லீம்கள் மனிதனாக மாறுவது எவ்வளவு பெரிய தப்பு?

suvanappiriyan said...

//அதானே. முஸ்லீம்கள் மனிதனாக மாறுவது எவ்வளவு பெரிய தப்பு?//

தர்மபுரி சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் நடைபெற்று வரும் கௌரவக் கொலைகளும் தலித் பெண்கள் மீதான தாக்குதல்களும்

1. சென்னிநத்தத்தில் கோபாலகிருஷ்ணன் என்கிற தலித் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார் (விவரம் : கட்டுரையின் உள்ளே)

2. காந்தளவாடி பிரியா கொலை செய்யப்பட்டார் (விவரம் :கட்டுரையின் உள்ளே)

3. கோகிலா கௌரவக் கொலை செய்யப்பட்டார் (விவர ம்: கட்டுரையின் உள்ளே)

4. சிட்டாம்பூண்டி காவேரி மர்மமான முறையில் இறந்தார் (விவரம்: கட்டுரையின் உள்ளே)

5. எம்.கண்ணனூரைச் சேர்ந்த கண்ணன் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் (விவரம் : கட்டுரையின் உள்ளே)

6. கோவையைச் சேர்ந்த நந்தினி கௌரவக் கொலை செய்யப்பட்டார் (விவரம் : கட்டுரையின் உள்ளே)

7. வேலூர் அருகே தலித் பெண் ரோசி கந்தன் என்கிற சாதி இந்துவை காதல் திருமணம் செய்துகொண்டார். கந்தனின் குடும்பத்தினரால் ரோசி 15.12.2012 அன்று தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

8. திருவள்ளூர் அருகே மெதூர் கிராமத்தில் நந்தினி என்கிற சாதி இந்துப் பெண் தலித் இளைஞரான பிரவீனை காதலித்து வந்தார். நந்தினியின் உறவினர்கள் 17.01.2013 அன்று நந்தினியை அடித்து சித்திரவதை செய்து அவரது கழுத்தை அறுத்துள்ளனர். படுகாயமடைந்த நந்தினி சிகிச்சை எடுத்துவருகிறார். இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

9. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தலித் பெண் இளையநிலாவும் அவரது காதலரும் பேசிக்கொண்டிருந்தபோது 18.12.2012 அன்று அப்பகுதியைச் சேர்ந்த சாதி இந்துக்கள் அவரது காதலனை கடுமையாகத் தாக்கி இளையநிலாவின்மீது பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்க முயன்றுள்ளனர். மன்னார்குடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10. கடலூர் மாவட்டத்தில் உள்ள சம்பந்தம் காலனி கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் சந்தியா சிதம்பரத்தில் உள்ள புகைப்பட ஸ்டுடியோ ஒன்றில் பணிபுரிந்துவந்தார். ஸ்டுடியோவின் உரிமையாளர் 25.12.2012 அன்று பாலியல் வன்புணர்வுக்கு முயன்று கொலை செய்துள்ளார் என்று சந்தியாவின் பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்கள்.

11. திருநெல்வேலி மாவட்டம் கருத்தபிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் 13 வயது ப்ரியா 17.01.13 அன்று மாலை சாதி கிறிஸ்துவரான சினியன் என்கிற 50 வயது நபரால் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். ஆழ்வார்க்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

suvanappiriyan said...

continue....

12. நாமக்கல் மாவட்டம் பெரிய அய்யம்பாளையத்தில் வசித்துவரும் 18 வயது தலித் பெண் கஸ்தூரி கடந்த 30.12.2012 அன்று கிருஷ்ணன், குமார், சிவா ஆகிய மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். நல்லிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13. கடலூர் மாவட்டம், குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் சுகந்தி 24.12.2012 அன்று அவரது உறவினர் பாக்யராஜுடன் விருத்தாசலம், மணிமுத்தாறு படித்துறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட சாதி இந்துக்களால் ஆடை கிழிக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார். பாக்யராஜ் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. விருத்தாசலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

14. செஞ்சி தும்பூர் காலனியைச் சேர்ந்த ரீட்டாராணி என்கிற தலித் பெண், மனிமாறன் என்கிற சாதி இந்துவை காதலித்தார். மணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்து ரீட்டாராணியை தன் பாலியல் தேவைக்கு பயன்படுத்திக்கொண்டார். இது குறித்து செஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

15. கடலூர் மாவட்டம், பென்னடத்தைச் சேர்ந்த தலித் பெண் சத்யாவை, ஆடலரசன் என்கிற சாதி இந்து 2.2.2013 அன்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பென்னடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

14. பென்னேரி பகுதியில் வசிக்கும் தலித் சிறுமி ரேவதியை சாதி இந்துவான 52 வயது ஜெயசீலன் 26.01.13 அன்று கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார். சோழவரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

16. சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த 16 வயது தலித் சிறுமி இசக்கியம்மாளை சாதி இந்துவான ஞானதுறை கடந்த 17.01.2013 அன்று கடத்திச் சென்று கடுமையாக சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

17.சேலத்தில் 16 வயது தலித் சிறுமி தீபா என்பவரை கடண்டஹ் 16.01.2013 அன்று சாதி இந்துக்கள் இரண்டு பேர் கட்டி வைத்து சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

18.. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ரஞ்சனியை சாதி இந்துவான சரவணன் அடித்துத் துன்புறுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி : இந்தியா டுடே

Anonymous said...

அடப்பாவிகளா முஸ்லிம் என்றாலே தீவிரவாதியா??

உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!

ஜெய்ப்பூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளர் ரஷீத் ஹுசைன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஜெய்ப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் காவல்துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்தத் தொடங்கினர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொறியாளர் ரஷீத் ஹுசைனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பத்து நாள்கள் காவலில் வைத்திருந்தனர்.

பிறகு அவர் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி அவரை விடுதலை செய்து அனுப்பி விட்டனர்.

இந்தப் பத்துநாள்களுக்குள் இன்போசிஸ் நிறுவனம் எந்தவிதமான முன்னறிவிப்பும் தராமல் ரஷீதைப் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தது.

ஆனால் ரஷீத் ஹுசைன் சும்மா உட்கார்ந்துவிடவில்லை.

2008 ஆகஸ்டில் அவர் இன்போசிஸ் நிறுவனத்துக்கு எதிராக லேபர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றமும் ரஷீதுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது.

இன்போசிஸ் நிறுவனம் ரஷீதுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் முன்னிலையில் இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பும், ராஜஸ்தான் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் முதல் நாளிலிருந்தே ரஷீதின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்ததுடன் நீதிக்கான நெடும்பயணத்தில் முன் நின்று போராடின. வெற்றி பெற்றன.

“ ரஷீதுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பு இந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஆகும். அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். தவறான நடவடிக்கை எடுக்கும் காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும்” என்று கூறுகிறார் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பின் தலைவரும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த தேசியச் செயலாளருமான முஹம்மது சலீம் அவர்கள்.

முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் போக்கு இனியேனும் நிறுத்தப்படுமா?

(நன்றி: சமரசம்)

(ஆக்கம் http://www.valaiyugam.com/2013/04/blog-post_5.html)

Anonymous said...

AHMEDABAD: Astronaut Sunita Williams hasn't spared time for Gujarat chief minister Narendra Modi during her current visit to Gujarat.

Instead, she was seen throughout the day in the company of Jagruti Pandya, wife of slain minister Haren Pandya and Sunita's first cousin.

Efforts were made by the chief minister's office to tie up a meeting between Modi and Sunita but she did not respond. As a result the Modi government has not extended her protocol as a state guest though police did provide her with a pilot vehicle.

Sunita declined offer by protocol officers to travel in a Gujarat government vehicle on her arrival at Ahmedabad airport on Thursday afternoon.

During her last visit to Gujarat in September 2007 after she returned from her first space flight, Modi had attended a civic reception organized by his government in Ahmedabad in Sunita's honour.

He had praised her then but relations have gone sour since apparently because of the family's belief that Pandya's murder was more political than communal.

http://timesofindia.indiatimes.com/india/Sunita-Williams-ignores-Narendra-Modi-during-Gujarat-visit/articleshow/19391675.cms

Anonymous said...

சுனிதா ஜீ.....பிளீஸ்....ஒரு போட்டோ ஜீ....!!!
(கெஞ்சிய மோடி பதுங்கிய சுனிதா)

குஜராத்திற்கு வருகை தந்திருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க வின்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மோடியுடன் ஒரு சந்திப்பு விருந்திற்கு விருப்பம் தெரிவிக்க கோரி மோடியின் அலுவலக அதிகாரிகள் சுனிதா வில்லியம்ஸை கெஞ்சி கூத்தாடிய போதும் சுனிதா அதற்கு செவி சாய்க்காமல் மோடியுடனான சந்திப்பிற்கு மறுப்பு தெரிவித்து,
மாறாக மோடியால் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் முன்னால் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவின் மனைவியுடன் ஒரு நாள் முழுவதும் செலவழித்தார்.

புரோட்டோகால் வழக்கப்படி மோடியின் அரசு சுனிதா வில்லியம்ஸிற்கு வாகண ஏற்பாடுகள் ஏற்படுத்தி கொடுத்திருந்தும் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பும் தெரிவித்து விட்டார்.விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வாகணத்தில் கூட ஏற மறுத்தால் வாகணம் திரும்பி வந்தது.

2007 ல் குஜராத் வந்திருந்த சுனிதா வில்லியம்ஸிற்கு மோடியின் அரசு கம்பீரமான வரவேற்பை அளித்திருந்தது.
சுனிதா வில்லியம்ஸுடனான சந்திப்பை அன்றைய மோடி அரசு பத்திரிக்கைகளில் பெரிய அளவில் பிரசுரித்து தன் அரசியல் வளர்ச்சிகளுக்கு அச்சந்திப்பை பெரிதும் பயன்படுத்திக்கொண்டார்.
அதேபோன்ற தற்போதைய சந்திப்பை ஒன்றை ஏற்பாடு செய்து தன்னை விளரம்படுத்திகொள்ள நினைத்த மோடிக்கு சுனிதா வில்லியம்ஸ் விருப்பம் தெரிவிக்காமல் போனதின் பின்னனியில் ஹரேன் பாண்டியாவின் கொலையில் மோடியின் பங்கு உண்டு என்ற நம்பிக்கையே காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

கொல்லப்பட்ட ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜக்குருதி பாண்டியா சுனிதா வில்லியம்ஸின் நெருங்கிய உறவினராவார்.
இன கலவரத்தில் கொல்லப்பட்டதாக கூறும் ஹரேன் பாண்டியாவை மோடி, அரசியல் பகை காரணமாக கொன்றுவிட்டார் என்று ஹரேன் பாண்டியாவின் மனைவியும் உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

http://en.wikipedia.org/wiki/Haren_Pandya

http://indiatoday.intoday.in/story/gujarat-polls-haren-pandya-widow-seeks-justice-for-her-husband/1/237898.html

UNMAIKAL said...

பெளத்த தீவிரவாதிகளுக்கு சங்க்பரிவார் ஆதரவு!

6 Apr 2013

புதுடெல்லி:புதுடெல்லி உணவுப்பொருட்களின் பொதிகளில் ஹலால் முத்திரை பதிப்பதற்கு எதிராக களமிறங்கி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் மற்றும் அவதூறு பிரச்சாரங்களை நடத்தி வரும் சிங்கள பெளத்த பேரினவாத இயக்கமான பொது பல சேனாவுக்கு சங்க்பரிவார் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸை ஆதரிக்கும் ஸம்வாதம் ஆர்க் என்ற ஆன்லைன் மாத இதழில் ஆர்.எஸ்.எஸ்ஸின் செய்தி தொடர்பாளரான ராம் மாதவ் எழுதிய கட்டுரையில் பொதுபல சேனா(பி.பி.எஸ்) இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களை நியாயப்படுத்துகிறார்.

வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்யப்படும் உணவுப் பொருட்களில் ஹலால் முத்திரை பதிக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை அனைத்து மதத்தினரும் உபயோகித்து வருகின்றனர். ஹலால் முத்திரைக்கு பி.பி.எஸ் தெரிவிக்கும் எதிர்ப்பு இலங்கை தீவில் இஸ்லாம்-கிறிஸ்தவ மயமாக்கலுக்கு எதிரானது என்று ராம் மாதவ் எழுதுகிறார்.

இலங்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தனது கட்டுரையில் கூறும் ராம் மாதவ், அதற்கு உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்றதை சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கையில் மஸ்ஜிதுகள் மற்றும் மதரஸாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஹிஜாப் மற்றும் தொப்பி அணிபவர்களின்எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று தனது கட்டுரையில் அங்கலாய்க்கிறார் ராம் மாதவ்.

இதற்கு எதிரான மக்கள் உணர்வை பி.பி.எஸ் பிரதிபலிக்கிறதாம் என்றும் – ராம் மாதவ் கூறுகிறார்.

தமிழ் புலிகளின் கட்டுப்பாடு கிறிஸ்தவ சபைகளின் கரங்களில் இருந்தது என்றும் ராம் மாதவ் குற்றம் சாட்டுகிறார்.

பி.பி.எஸ் எழுப்பும் குற்றச் சாட்டுக்களை அனுபவ ரீதியாக பரிசீலித்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற அழைப்புடன் கட்டுரையை முடிக்கிறார் ராம் மாதவ்.

ஆர்ய வம்சாவளியைச் சார்ந்தவர்களான சிங்களர்களுடன் ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு நல்ல உறவு உள்ளது.

ராஜபக்சே அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருக்க பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார அமைப்புகள் இந்திய அரசு மீது அழுத்தம் கொடுத்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை உறுதிச் செய்கிறது ராம் மாதவின் கட்டுரை.

கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைஸர் தலையங்கம் தீட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.thoothuonline.com

Anonymous said...

By தினமணி

First Published : 04 April 2013 12:34 AM IST

புதிய சவுதிமய மண்டலங்கள் (நிடாகத்) திட்டத்தினால் கேரளத்தைச் சேர்ந்த 2 லட்சம் பேர் சவுதி அரேபியாவிலிருந்து தாயகம் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் இந்த முடிவில் இந்திய அரசு தலையிட்டு, கேரளத்தவர் நலன் காக்க வேண்டும் என்று மாநில முதல்வர் உம்மன் சாண்டி பிரதமரை வேண்டிக்கொள்வதும், கேரள மாநிலத்தவரும், வெளிநாடு வாழ்இந்தியர் நலத்துறை அமைச்சருமான வயலார் ரவி, தனது தலைமையில் ஒரு குழுவுடன் சவுதி அரேபியா சென்று பேச்சு நடத்த முடிவாகியிருப்பதும் வியப்பானவை அல்ல. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் பயன் ஏற்படுமா என்பது சந்தேகமே.

நிடாகத் திட்டம் புதிதாக இப்போது அறிவிக்கப்பட்டதும் அல்ல. 2011-ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. எப்படியும் தள்ளிப்போகும், நம்மைவிட்டால் இவர்களுக்குக் கதியில்லை என்ற எண்ணத்தில் இத்தனை காலம் சும்மா இருந்துவிட்டு இப்போது கடைசி நேரத்தில் கேரள அரசு புலம்புகிறது. வேறு வழி தெரியாமல் இந்திய அரசின் நடவடிக்கையைக் கோருகிறது.

சவுதி அரேபியாவில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பல லட்சமாக இருக்க, 80 லட்சம் வெளிநாட்டவர் தங்கள் மண்ணில் வேலை பார்த்து, ஆண்டுக்கு 26 மில்லியன் ரியால் அளவுக்குத் தங்கள் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதை எப்படி ஒரு அரசு பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

கால்நூற்றாண்டுக்கு முன்பு அரபு நாடுகளில் எண்ணெய் வளம் இருந்தது. ஆனால், தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்களும், கணக்காயர்களும், ரசாயன வேதியியலாளர்களும் இல்லை. இத்துறைகளில் மண்ணின் மைந்தர்கள் அந்நேரத்தில் புலமையும் திறமையும் பெற்றிருக்கவில்லை. இப்போது இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் அனைத்துத் துறைகளிலும் திறமைபெற்று வந்த பிறகு, தங்கள் வேலைகளை மற்றவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதை விரும்பாத நிலை இயல்பானது.

சுமார் 20 லட்சம் பேர் சவுதி அரேபிய அரசின் மூலமாகப் பணியமர்த்தப்பட்டவர்கள். சுமார் 60 லட்சம் பேர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர். இப்போதைய சிக்கல் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்குத்தான்.

சவுதி அரசாங்கமே அழைப்புவிடுத்து நியமித்துள்ளவர்களுக்குப் பணிஇழப்பு அச்சங்கள் கிடையாது. 10 பணியாளர்களுக்கு மிகாத நிறுவனங்களுக்கு "நிடாகத்' விதிமுறைகள் பொருந்தாது என்பதால், வீட்டு வேலைக்காகச் சென்றிருப்போருக்கும், சிறு கடைகளில் பணியாற்றும் வெளிநாட்டவருக்கும் பாதிப்பு இருக்காது.

பத்து பேருக்கும் அதிகமாக பணிபுரியும் நிறுவனங்களைத்தான் அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என நான்கு மண்டலங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள நிறுவனங்களும் எத்தனை விழுக்காடு அரேபிய ஊழியர்களைக் கட்டாயமாகப் பணியமர்த்த வேண்டும் என்று நிர்ணயித்துள்ளனர்.

மண்ணின் மைந்தர்கள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய துறைகள் அனைத்தும் "வெள்ளைச்சட்டை' வேலைகளாக இருப்பதைக் காணலாம். அதாவது, வங்கிப் பணிகளில் 90% பேர் அரேபியர்களாக இருந்தாக வேண்டும். அதேபோன்று, செக்யூரிட்டி துறை 86%, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் 86%, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் 80%, சேவை நிறுவனங்களில் 80%, தகவல் தொழில்நுட்பம் 70%, கப்பல் போக்குவரத்து 70%, கல்வி நிறுவனங்கள் 70% பெண்கள் கல்வி நிறுவனங்கள் 80% மின் மற்றும் குடிநீர் விநியோகம் 64% பேர் இருந்தாக வேண்டும்.

Anonymous said...

..... மற்றபடி சாலை வாகனப் போக்குவரத்து, கட்டுமானப் பணி, கட்டடங்கள் பராமரிப்பு (பிளம்பிங் உள்பட), உணவுக்கூடங்கள் போன்ற மனித உழைப்பு தேவைப்படும் துறைகளுக்கு அதிகபட்சமாக 28% அரேபியர்கள் இருந்தால் போதுமானது. ஆகவே, இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு கடின உடல்உழைப்புப் பணிகளுக்காகச் சென்றுள்ளவர்கள் பாதிப்படையும் வாய்ப்பு மிகமிகக் குறைவு.

தனியார் நிறுவனங்களின் கணக்காளர், மேலாளர், பொறியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே இந்த புதிய மண்டல திட்டத்தால் பாதிக்கப்படக்கூடியவர்கள். இவர்களில் திறமையானவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அல்லது மற்ற நாடுகளிலும் வேலை தேடிக்கொள்ள முடியும். ஆனால், சவுதி அரேபியாவில் கிடைத்த அதே சம்பளம் இந்தியாவில் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.

இவ்வாறு, மண்டல திட்டத்தின் காரணமாக தனியார் நிறுவனங்களால் வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு "விசா' நீட்டிப்பு கிடைக்காது. இவர்கள் நீலம், பச்சை மண்டலத் தொழில்களுக்கு மாறிக்கொள்ள வாய்ப்பு இருந்தால், தற்போது வேலை செய்யும் முதலாளியின் அனுமதி இல்லாமலேயே மாறிக்கொள்ள சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்திருந்தாலும், இதற்கான வாய்ப்புகள் குறைவு.

தற்போது, மத்திய அமைச்சர் வயலார் ரவி தலைமையில் சவுதி அரேபியா செல்லும் குழுவின் நோக்கம், மண்டல திட்டத்தைக் கைவிடக் கோருவது அல்ல. பணியிழக்கும் ஊழியர்கள், விசா இல்லாத நிலையில், வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுவிடக்கூடாது என்பதுதான். அவர்கள் நாடு கடத்தப்பட்டவர்கள் (டிபோர்ட்டட்) என்றால் மீண்டும் அரபுநாடுகளில் வேலைவாய்ப்பு தேடுவதில் சிக்கல்கள் ஏற்படும். ஆகவே, விசா நீட்டிப்பு இல்லாமல் சவுதி அரேபியாவில் தங்கும் கேரளத்தவரின் கடவுச்சிட்டை களங்கப்படாமல் பார்த்துக்கொள்வதுதான் வயலார் ரவி குழுவின் முதன்மைப் பணி.

வயலார் ரவியிடம் தமிழகம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை, இத்தகைய அக்கறையைத் தமிழக ஊழியர்களிடமும் காட்டுங்களேன் என்பதுதான். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமிழர்களும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களைப் பற்றியும் கவலைப்படுவதுதானே நியாயம்?

http://dinamani.com/editorial/article1529186.ece

Anonymous said...

Coimbatore: An alleged Maoist, wanted in several murder cases including the Silda massacre, was arrested in Coimbatore in the early hours today, police said.

A police team from West Bengal, with the assistance of 'Q' Branch of Tamil Nadu police, reached Coimbatore last evening after tracing the location of the cellphone number of Shyam Charan Tudu and arrested him from a house at Peelamedu, they said.

Tudu was working in a foundry for the last four months with some alleged Maoists, police said, adding that he would be taken to West Bengal later in the day.
He was wanted in various cases including seven murder cases. Tudu allegedly had a role in the attack on a CRPF camp in Silda in West Bengal in 2010 in which 24 jawans of the Eastern Frontier Rifles were shot dead allegedly by Maoists. Sleuths were searching for him for the last five years.

http://www.ndtv.com/article/india/alleged-maoist-wanted-in-silda-massacre-case-arrested-in-tamil-nadu-351024?pfrom=home-health

Anonymous said...

Kannur: One person was killed and another critically injured in a bomb explosion at Mattannur here Saturday.
An RSS worker, Dileep (30) of Ambilaatu Veedu, died when the explosives he was carrying on the bike detonated at 5.30am Saturday morning.
District police chief Rahul R Nair and other police officers rushed to the spot.
The police are investigating where the diseased was carrying the explosives to.

http://www.madhyamam.com/en/node/10709

suvanappiriyan said...

அப்படியே கமலஹாசனிடம் சொல்லி தினம் கௌரவ கொலைகளாக நடந்து வரும் விழுப்புரம், ராமநாதபுரம் சாதி சண்டைகளையும் கொலைகளையும் பற்றி விபரமாக எடுக்கச் சொன்னால் ஹிந்து மதத்தின் சாதி வெறி ஒழிய வாய்ப்புண்டு. இந்த நாட்டில் சூத்திர்கள் என்ற சாதி எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதற்காக நடந்த நயவஞ்சக கொலைகள் என்னென்ன? என்பதை எல்லாம் விலாவாரியாக படம் எடுத்தால் நம் நாடு திருந்த வாய்ப்புண்டு.

மற்றபடி தாலிபான்களில் பல பிரிவினர் உண்டு. அமெரிக்கா தான் அங்கேயே மேலும் தங்க தாலிபான்களின் ஒரு பிரிவை ஆட்டி வைப்பது எல்லோரும் அறிந்ததே. ‘பல குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் காரணம் அல்ல. மீடியாக்களை தங்கள் கைகளில் வைத்திருக்கும் அமெரிக்க படைகளின் செயல்களே’ என்று சமீபத்தில் முல்லா உமர் கொடுத்த பேட்டியையும் புறம் தள்ள முடியாது.

என்னதான் நியாயம் பேசினாலும் ஆஸ்காரை எப்படியும் வாங்கி விடுவது என்று வெறி பிடித்து அலையும் அக்ரஹாரத்து அமபியிடம் இன்னும் அதிகம் இஸ்லாமிய எதிர்ப்பை எதிர் பார்க்கலாம்.

ஆனால் இந்த அற்ப பதர்களை எல்லாம் தூரமாக்கி இஸ்லாம் தெளிந்த நீரோடையாக சலனமற்று தனது செய்தியை உலகுக்கு எடுத்து சென்று கொண்டே இருக்கும்.

Unknown said...

//இஸ்லாம் தெளிந்த நீரோடையாக சலனமற்று தனது செய்தியை உலகுக்கு எடுத்து சென்று கொண்டே இருக்கும்.//

அதுக்குள்ள எத்தனை கோடி மக்கள் பலியாவாங்களோ தெரியலையே

Dr.Anburaj said...

உலகில் பல மொழிகள் மற்றம்கலாச்சாரங்கள் தோன்றி மக்களை வாழ்வித்து வருகின்றன. அவைகளுக்கு தனித்தன்மையான சமய வழக்கமும் உள்ளது. அரேபியாவில் மகம்மது என்ற அரேபியர் பின்பற்றி, பின் பின்பற்றாமல் விட்ட, உபதேசித்த அரேபிய கோத்தர பழக்கவழக்கங்களை மட்டும்தான் அல்லா ஏற்றுக் கொள்வார்என்று போதித்தது மகத்தான மூடநம்பிக்கை. அரேபியனாக வாழ்வது அல்லது அரேபியன் போல் வாழ்வது மட்டும்தான் அல்லாவிற்கு பிடிக்கும் என்று போதித்த அரேபியர் மகம்மதால் பலியான மனித உயிர்கள் எத்தனை கோடி கோடி கோடி அப்பப்பா ?
இதைத்தான் தவறு என்ற புத்த மதம் சொ்ல்கின்றது. அறிவுள்ளவன் அனைவரும் சொல்வார்கள் 1400 வருடங்களக்கு முன்தையஅரேபிய நாகரீகம் பல குறைகளை கொண்டது.அவைகள் பரவுவது உலகில் வன்முறை பெருகவே உதவும். புத்தமதத்தவர்களக்கு இப்போடுதாவது புத்தி வந்ததே

suvanappiriyan said...

டாக்டர் அன்புராஜ்!

//அரேபியாவில் மகம்மது என்ற அரேபியர் பின்பற்றி, பின் பின்பற்றாமல் விட்ட, உபதேசித்த அரேபிய கோத்தர பழக்கவழக்கங்களை மட்டும்தான் அல்லா ஏற்றுக் கொள்வார்என்று போதித்தது மகத்தான மூடநம்பிக்கை.//

இஸ்லாமிய கொள்கைகளை தப்பும் தவறுமாக எல்லோரையும் போலவே விளங்கியிருக்கிறீர்கள்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' இதுதான் இஸ்லாத்தின் அஸ்திவாரம். இதைத்தானே நமது தமிழக முன்னோர்களும் முன்பு சொல்லி சென்றனர்?

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' இதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது

"நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"

சித்தர்களின் இந்த பாடலைத்தானே குர்ஆனும் கூறுகிறது? மறுக்க முடியுமா?

"சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்

பூத வாசல் ஒன்றலோ, பூத ஐந்தும் ஒன்றலோ?

காதில் வாளி , காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?

சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?"

மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இல்லை என்ற இந்த கருத்தைத்தானே இஸ்லாமும் கூறுகிறது? இவை எல்லாம் காலத்துக்கு ஒவ்வாத சட்டம் என்று எப்படி கூறுகிறீர்கள். எல்லா நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற சட்டத்தையே இஸ்லாம் மனித குலத்துக்கு வழங்கியுள்ளது.

//அறிவுள்ளவன் அனைவரும் சொல்வார்கள் 1400 வருடங்களக்கு முன்தையஅரேபிய நாகரீகம் பல குறைகளை கொண்டது.//

என்ன குறை என்று கொஞ்சம் பட்டியலிடுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.

Dr.Anburaj said...

அரேபியா காரணுக்கு தெரிந்தது எல்லாம் இந்திய சித்தருக்கு தெரிந்ததுதானே.பின் குரான் இந்தியாவிற்கு என் ? தேவையில்லையே!திருக்குறள் இருக்கு
திருவாசகம் இருக்க பகவத்கீதை இருக்க
சீதையைத்தவிர வேறு பெண்ணை சிந்தையாலும் தொடேன் என்ற கருத்தை வலியுருத்தும் -பெண்ணுக்கு மிகப்பெரிய கண்ணியத்தை அளிக்கும் இராமாணாயம் இருக்க- பெண்களை வைப்பாட்டியாக வைக்கச் சொல்லும் அரேபிய கலாச்சார ஆவணம் குரான் என்ற நூல் இந்தியாவிற்கு தேவையில்லை. மகம்மதுவைவிட மிகச்சிறந்தவர்களை இந்தியா கொண்டுள்ளது.

suvanappiriyan said...

//அரேபியா காரணுக்கு தெரிந்தது எல்லாம் இந்திய சித்தருக்கு தெரிந்ததுதானே.பின் குரான் இந்தியாவிற்கு என் ? தேவையில்லையே//

இந்திய சித்தர்கள் சொன்னபடி நீங்கள் நடக்கிறீர்களா? இல்லையே! தெருவுக்கு ஒரு சாமி: ஊருக்கு ஒரு சாதி என்று வந்ததாலேயே இஸ்லாத்துக்கு அவசியமேற்படுகின்றது.

//சீதையைத்தவிர வேறு பெண்ணை சிந்தையாலும் தொடேன் என்ற கருத்தை வலியுருத்தும் -பெண்ணுக்கு மிகப்பெரிய கண்ணியத்தை அளிக்கும் இராமாணாயம் இருக்க- //

ராமாயணத்தைப் பற்றி அறிஞர் அண்ணாவும், பெரியாரும் நிறையவே எழுதியுள்ளனர். அதை படித்து விட்டு ஒரு முடிவுக்கு வரவும்.