Followers

Thursday, April 12, 2018

இறைவன் சிலருக்கு பதவியை கொடுத்தும் கேவலப்படுத்துவான்!


5 comments:

Dr.Anburaj said...

திரு.மோடி அவர்கள் நமது நாட்டு பிரதமா் பதவிக்கு அழகும் அந்தஸ்தும் பெருமையும் புகழும் சோ்த்தவா். ஒரு அரைக்கிறுக்கன் பெரியாரின் ரவுடி கும்பலுக்கு பயந்தவன் அல்ல.

காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்
கிடைத்ததடா சாக்கு என்று அனைத்து ஹிந்துவிரோதிகளும் , தேச விரோதிகளும் காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் பாஜகவையும் , பிரதமர் மோடி அவர்களையும் பாய்ந்து குதறுவது புரிந்துகொள்ள‌க்கூடியதுதான்…
முதலாவதாக , ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு…. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம்… உச்சநீதிமன்றம் ஆறுவாரகாலத்தில் ஒரு செயல்திட்டத்தை [ ஸ்கீம் ] உருவாக்கச்சொன்னது.அவ்வளவுதான்…. இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு … எல்லா விஷயத்திலும் சொதப்பும் தமிழக பாஜக இதில் மட்டும் தெளிவாக செயல்படவேண்டும் என்று எதிர்பாரப்பதில் எந்த நியாயமும் இல்லை…அவர்கள் வைத்து்க்கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்…?

செயல்திட்டம் எதற்காகவென்றால் , மேற்படி வாரியம் அமைப்பதில் உள்ள அரசியல்சட்ட முரண்களை , குழப்பங்களை தெளிவு படுத்தி முழுமையான ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான்….காரணம் , அரசியல்சட்ட ரீதியாகவே மாநிலங்களில் உள்ள அணைகளின் கட்டுப்பாடு அந்தந்த மாநில அரசுகளிடம்தான் உள்ளது… மாநில அரசிடமும் இல்லாமல் , மத்திய அரசிடமும் இல்லாமல் ஒரு தனி அமைப்பிடம் அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் ஒப்படைக்கப்படவேண்டுமென்றால் , அது ஒற்றை அரசு ஆணையில் அல்லது நீதிமன்றத்தீர்ப்பில் சாத்தியமே இல்லை…

இது அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவந்து , அதன்பின் செய்யப்படவேண்டிய விஷயம்….. அதற்கு பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும்… இதெல்லாம் ஆறுவார கால அவகாசத்தில் சாத்தியமா? அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும் …அணைகளின் கட்டுப்பாட்டை ஆணையத்திடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் தயாராக இல்லை…கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் போன்ற மாநிலங்களை விடுங்கள்… தமிழகமே அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை…காரணம் , அணைகள் வாரியத்திடம் சென்றால் அணைகளில் உள்ள தண்ணீர் விவசாயத்திற்கு மட்டுமே விநியோகிக்கப்படும்… இருக்கும் ஏரி , குளங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டு ,குடிநீர் தேவைக்காக பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களுக்கு குழாய் மூலம் நீர் எடுத்துச்செல்லும் வேலையெல்லாம் நடக்காது…மேலும் அணையை திறந்துவிட மாண்புமிகு முதலமைச்சர் தாயுள்ளத்துடன் உத்தரவிட்டார் என்று செய்தி வெளியிட்டு புளகாங்கிதப்பட்டுக்கொள்ளவும் முடியாது…

Dr.Anburaj said...

இன்னொரு முக்கியமான விஷயம் , அணைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு…இந்த இரு விஷயங்களும் இன்றுவரை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே உள்ளன… வாரியம் அமைந்தால் , இத்தனை மாநிலங்களிலும் உள்ள அணைகளையும் பராமரித்து , பாதுகாப்பது யார் ? ஆணையமா ? எனில் அதற்கான ஆள் பலம் ஆணையத்திடம் உள்ளதா? சரி …பராமரிப்பையும் பாதுகாப்பையும் நீங்களே பார்த்துக்க்கொள்ளுங்கள் என்று மாநிலங்களிடம் விட்டுவிட்டால் , பராமரிக்க நாங்கள் …. தண்ணீரைத்திறந்துவிட மட்டும் ஆணையமா என்ற கேள்வி எழாதா? பற்றாக்குறைக்காலத்தில் நீரை எந்த அடிப்படையில் பகிர்ந்துகொள்வது? [ உ.ச்சநீதிமன்றத்தீர்ப்பில் இதற்கு எந்த விளக்கமும் இல்லை..]

இத்தனை கேள்விகள் , குழப்பங்கள் உள்ளன…இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் , யூனியன் பிரதேசமும் [ புதுச்சேரி ] உட்கார்ந்து , பேசி தீர்வு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்..அதற்காகத்தான் மத்திய அரசு சம்பந்தப்பட மாநிலங்களின் கூட்டத்தைக்கூட்டி அவரவருக்கான பிரதிநிதிகளை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டது… தமிழகம் இந்த நிமிடம் வரை தன் பிரதிநிதி யார் என்று தெரிவிக்கவில்லை… சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம்தான் தெளிவுபடுத்தவேண்டும் ..அதற்காகத்தான் நாளை மத்திய அரசு மணுதாக்கல் செய்யவுள்ளது…

கடைசியாக , இந்த விஷயத்தில் பாஜக அரசியலே செய்யவில்லையா என்று கேட்கலாம்… நிச்சயமாக அரசியல்தான் செய்கிறது…..யார்தான் அரசியல் செய்யவில்லை? ஏன் உச்சநீதிமன்றம் அரசியல் செய்யவில்லையா? ராமர்ஜென்மபூமி வழக்கு பல பத்தாண்டுகளாக இழுத்தடித்துக்கொண்டு கிடக்கிறது…ஜெயலலிதா , லாலு போன்றோர் மீதான ஊழல் வழக்குகள் இருபது வருடங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டன.. ஆனால் , காவிரி வழக்கில் மட்டும் உச்சநீதிம‌ன்றம்கர்நாடகாவில் தேர்தல் வர ஓரிரு மாதங்கள் இருக்கும் நிலையில் தீர்ப்பளிக்கிறது…அதுவும் எப்படி? ஆறே வாரங்களில் தீர்வு காண வேண்டுமாம்… அறுபதாண்டுகால தாவாவை , ஆறே வாரத்தில் பாஜக அரசு தீர்த்து வைக்கவேண்டும் ..இல்லாவிட்டால் மோடி குற்றவாளி … நல்லா இருக்கு சார் நியாயம்…கொலீஜியம் என்ற அநீதியான நடைமுறையை மாற்றி , நீதிபதிகள் நியமன மசோதா கொண்டுவந்த

பாஜக அரசை , கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் தர்மசங்கடத்தில் தள்ளத்தான் நீதிமன்றங்கள் முயற்சிக்கின்றன

Dr.Anburaj said...

எத்தனை அணை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளுங்கள் எங்களுக்கு ஆட்சேபனையில்லை..என்று சட்டமன்றத்திலேயே பேசி டெல்டா விவசாயத்தை படுகுழியில் தள்ளிய கருணாநிதி மீது தவறில்லை…. சரி நீதிமன்றத்துக்காவது சென்று தடுப்போம் என்று முயற்சி செய்து வழக்குத்தொடர்ந்த விவசாயிகளின் வழக்கை கர்நாடகத்தின் நலத்துக்காக தமிழக அரசை மிரட்டி வாபஸ்பெற வைத்த இந்திரா மீது குற்றமில்லை…தன் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக மேற்படி வழக்கை வாபஸ் பெற்ற கருணாநிதி மீது எந்தக்குற்றமும் இல்லை..இதோ , இந்த நிமிடம் வரை காவிரி நதிநீர்ஆணையத்தை அமைக்க விடமாட்டோம் என்று கொக்கரிக்கும் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை… அதை கண்டும் காணாமல் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கும் ராகுல் – சோனியா மீது குற்றம் இல்லை…மோடி மட்டும்தான் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறார் என்று எவனாவது கிறுக்கன் பிரச்சாரம் செய்தால் அதை நம்பும் அளவுக்கு நாம் மடையர்களா?

இவ்வளவு ஏன் ? இரண்டு தினங்களுக்கு முன் , ஒரு டி.வி விவாதத்தில் காவிரிப்பிரச்சினைக்காக நாற்பது வருடங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தில் போராடிவரும் காவிரி விவசாயிகள் பாதுக்காப்புச்சங்கத்தின் திரு. ரங்கநாதன் அவர்கள் தெளிவாகச்சொன்னார்… காவிரிப்பிரச்சினை நல்லை தீர்வை நெருங்கிக்கொண்டிருக்கிறது… மிக விரைவில் நதிநீர் வாரியம் அமையும்… தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும்…ஆனால் , ஆறு வார காலத்திற்குள்ளாக ஆணையம் அமைத்தே தீரவேண்டும் என்று மத்திய அரசை நிர்பந்திப்பது நியாயமே இல்லை…அது சாத்தியமும் இல்லை என்றார்… அவரைவிட இந்த சோ கால்ட் போராளிகள் சொல்வதுதான் உங்களுக்கு நியாயமாக தெரிகிறதா?

Dr.Anburaj said...

காவிரி நதிநீர் ஆணையம் மட்டுமல்ல…

கோதாவரி நதிநீரை தென்பெண்ணையாறு வழியாக தமிழகத்துக்கு திருப்புதல் ,

தேசிய நதிநீர் இணைப்பு போன்ற மாபெரும் திட்டங்கள் மூலமாக தமிழகத்தின்

நதிநீர்ப்பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கும் திறமையும் ,

தகுதியும் தேசிய உணர்வுகொண்ட பாஜகவுக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு மட்டுமே

உண்டு நான் இன்னும் நம்புகிறேன்….

உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் தமிழகத்தில் ஸ்டாலினுக்கும் , மத்தியில் காங்கிரசுக்கும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுங்கள்…கர்நாடகத்தில் சித்தராமையா மீண்டும் ஆட்சிக்கும் வரவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்…அப்புறம் பாருங்கள் தமிழகத்தில் காவிரி கரைபுரண்டு ஓடிவந்து , கடலில் கலக்கும்…

குறையொன்றுமில்லை..

(சி.சரவணக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

Dr.Anburaj said...

பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்
April 12, 2018அன்பார்ந்த சொந்தங்களுக்கு,

வணக்கம். வட மாநிலங்களில் பட்டியலின மக்கள் பெருவாரியானவர்கள் பாஜக பக்கமே இருக்கிறார்கள். நடந்து முடிந்த பல மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக பட்டியலின மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். தனித்தொகுதிகளில் அதிகமாக பாஜகவே வென்றிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலிலும்கூட அதிகமாக பட்டியலின தொகுதிகளில் பாஜகவே அதிகமாக வென்றிருக்கிறது.

இதை உணர்ந்த காரணத்தினால்தான் காங்கிரஸ் முதல் பல்வேறு கட்சிகள் வரை பாஜகவின் செல்வாக்கை குறைக்க சம்பந்தமேயில்லாத பட்டியலின மக்களின் விஷயத்தில்கூட பாஜகவை சம்பந்தப்படுத்தி பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதேபோல் தமிழகத்தில் திட்டமிட்டு பல ஆண்டுகளாக பட்டியலின மக்களின் விரோதி பாஜக என்று பிரச்சாரம் செய்துவருகின்றனர். 20.1 சதவீதம் பட்டியலின மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1சதவீதம்கூட அந்த மக்களின் வாக்குகளை பெற முடியாத பட்டியலின கட்சிகள்வரை பாஜகவிற்கு பட்டியலின மக்கள் வடமாநில பட்டியலின மக்கள்போல் ஆதவு அளித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் பல்வேறு பொய் செய்திகளை பரப்பிவருகின்றனர்.

இதையெல்லாம் முறியடிக்கும்விதமாக தமிழக பட்டியலின மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றவும் தமிழகத்தில் பட்டியலின மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிற மாநாடாகவும் லட்சம்பேர் சங்கமிக்கிற மாநாடாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

என் சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன்.

இந்த மாநாட்டிற்கு உங்களால் முடிந்த நிதி உதவி, பொருள் உதவி அதிகமாகத் தேவைப்படுகிறது. செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உங்கள் அனைவரின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.

நிதி அளிப்பவர்கள் Bharathiya Janatha Party, Tamilnadu என்ற பெயரில் செக், டிடி அளிக்கலாம். 80G உண்டு. நிதி அளிப்பவர்கள் தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேசப்பணியில்
ம.வெங்கடேசன்
மாநிலத் தலைவர், எஸ்சி அணி

தொடர்புக்கு – 9941424629