Followers

Friday, April 06, 2018

பெங்களூருவில் மலர்ந்து கொண்டிருக்கும் மனித நேயம்!


பெங்களூருவில் மலர்ந்து கொண்டிருக்கும் மனித நேயம்!

சையத் குலாப் என்ற இஸ்லாமிய இளைஞர் துபாயில் மூன்று ஆண்டுகள் வேலை செய்து வந்தார். வேலை செய்து கொண்டிருக்கும் போதே நமது தாய் நாட்டுக்கு நம்மால் ஆன உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதுக்குள் எண்ணினார். துபாய் வேலையை ராஜினாமா செய்து விட்டு தாயகம் திரும்பி தொழில் தொடங்கினார். கடுமையாக உழைத்ததால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. தொழிலில் கிடைத்த மேலதிக லாபத்தை தனது தேவைக்கு போக மீதமுள்ளதை ஏழைகளுக்கு உணவளிப்பதில் செலவழித்தார். இவர் இலவசமாக உணவு வழங்குவதை அறிந்த பலர் தொடர்ந்து தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.

பெங்களூருவில் பிரதானமான இடத்தில் அமைந்திருக்கும் நிம்ஹல் மருத்துவமனையில் தினமும் ஏழைகள், வழி போக்கர்கள், நோயாளிகளின் உறவினர்கள் என்று இவரது சேவை நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு நாளைக்கு மதிய உணவு 300 பேருக்கு இவரது நண்பர்களோடு சேர்ந்து சமைத்துக் கொடுக்கிறார்.

இந்த மருத்துவமனைக்கு அருகிலேயே ராஜீவ் காந்தி மருத்துவமனை, சஞ்சய் காந்தி மருத்துவ மனைகளும் அமைந்துள்ளது. பெங்களூரு போன்ற ஸ்மார்ட் சிட்டியில் மதிய உணவு என்ன விலை விற்கப்படும் என்பது நமக்கும் தெரியும். சாதி மத பேதம் பாராது சையத் குலாப் என்ற இந்த இளைஞன் தரும் ஒரு வேளை உணவை வாங்க நீண்ட வரிசை தினமும் காத்திருக்கிறது.

நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற மேல் தட்டு மக்கள் மக்கள் வங்கியில் சேமித்த பணத்தை திருடி மேல் நாடுகளில் உல்லாசமாக சுற்றுகின்றனர். பெரும் செல்வந்தரல்லாத சையத் குலாப் போன்ற இளைஞர்கள் தமது சேமிப்பை ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். நாட்டுப் பற்று என்பது எவரிடத்தில் அதிகமிருக்கிறது என்பதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்
குர்ஆன் (2:261)
அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது,
 1. தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது.

2.
தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.










4 comments:

Dr.Anburaj said...

பதைக்கும் நெஞ்சை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா
உண்டி கொடுத்தோா் உயிா் கொடுத்தோரே

அன்பா் சையத் குலாம் காபீா் தத்துவத்தை நம்பாதவரஃஆகவேதான் தொண்டு தியாகம் வழியில் தவம் செய்து வருகின்றாா். வாழ்க வாழ்க நீடுழி.

நல்ல தகவலுக்கு நல்ல எண்ணங்களை பரப்பியதற்கு நன்றி

Dr.Anburaj said...

பிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்
ஒரு பெண் ஒரு சின்ன மான் குட்டிக்கு தன் மார்பில் பால் கொடுக்கும் புகைப் படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த அளவுக்கு விலங்குகள் மீதும் மரங்கள் மீதும் இயற்கையின் மீதும் காதல் கொண்ட மக்கள் பிஷ்னோய் மக்கள்

தங்கள் கானகப் பகுதியில் அத்துமீறி நுழைந்து மானைக் கொன்றதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது வழக்கு போட்டவர்கள் இந்த பிஷ்னோய் மக்கள் தான்.

வைல்டஸ்ட் இந்தியா என்னும் டிஸ்கவரி சேனல் டாக்குமெண்ட்டரி படத்தில் இந்த மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் குறித்து சிறப்பாகப் படம் எடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் முதல் எபிசோடு ராஜஸ்தானின் பாலை நிலங்களையும் அங்கு வாழும் விலங்குகளையும் மிக அழகாக பிருமாண்டமாக காட்டுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வித மான்கள் புனிதமாகக் கருதப் படுகின்றன. ஆகவே அவைகள் அங்கு பாதுகாப்பாக உணர்கின்றன. அழகிய குட்டி குட்டி மான்கள் அங்கும் இங்கும் சுதந்திரமாக அலைகின்றன. அவற்றை அங்கு வாழும் பிஷ்னோய் பழங்குடியினர் அன்பாக உபசரிக்கிறார்கள். பாதுகாக்கிறார்கள். ஒரு பிஷ்னோய் பழங்குடிப் பெண் ஒரு மான் குட்டிக்குப் பால் கொடுக்கும் ஃபோட்டோ ஒன்றை பலரும் பார்த்திருந்திருக்கலாம். பிஷ்னோய் பழங்குடியினர் மான்களையும், எருமைகளையும், குரங்குகளையும் பிற அரிய விலங்குகளையும் மட்டும் பாதுகாக்கவில்லை. அவர்கள் மரங்களையும் உயிரினும் மேலாக பாதுகாக்கிறார்கள். உலகின் ஆதி சுற்றுச் சூழல் போராளிகள் பிஷ்னோய்களே. கஜோரி என்றொரு வகை மரம் அங்கு புனிதமாகக் கருதப் படுகிறது. அது பஞ்ச கால மரமாகக் கருதப் படுகிறது. கடும் பஞ்ச காலத்திலும் கூட அதன் மரப் பட்டைகளைத் தின்று உயிர் பிழைத்து விடலாம். ஆகவே அவை எந்தக் கட்டத்திலும் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

ஒரு முறை ஒரு கஜோரி மரத்தை வெட்டுவதற்காக மன்னன் படைகளை அனுப்பி வைத்த பொழுது முதலில் எங்களை வெட்டி விட்டு மரங்களை வெட்டுங்கள் என்று அந்த மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மன்றாடியுள்ளார்கள். படையினர் அவர்களைக் கொல்லக் கொல்ல மொத்தம் 393 பேர்கள் அங்கு அந்த மரத்தைப் பாதுகாப்பதற்காக உயிரை விட்டிருக்கிறார்கள். இதை பிஷ்னோய் பழங்குடி மக்களின் மூத்தவர் ஒருவர் குழந்தைகளுக்குக் கதையாகச் சொல்கிறார்.

Dr.Anburaj said...

பின்ணணியில் வர்ணணையாளர் உருக்கத்துடன் இது 300 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த உண்மைச் சம்பவம் அவர்கள் மரங்களைக் காப்பதற்காக உயிரையே விட்டிருக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல 393 பேர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து அந்த மரத்தைக் காப்பாற்றியுள்ளார்கள். ஏனென்றால் அவர்கள் இந்துக்கள் என்று சொல்கிறார்.

அதைக் கேட்கும் நான் விவரிக்க இயலாத பரவசம் அடைந்தேன். இந்த போஷ்னோய் இன மக்களின் குரு ஜம்பேஷ்வரர். அவர் 14ம் நூற்றாண்டில் அந்த மக்களுக்கு 29 முக்கியமான கடமைகளைக் கட்டளைகளாக இட்டிருக்கிறார் அவையே இன்றும் போற்றப் படுகின்றன. கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலான கட்டளைகள் விலங்குகளையும், மரங்களையையும் சுற்றுச் சூழலையும் போற்றும் பாதுகாக்கும் பேணும் கட்டளைகளே.

சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் சூழலியலின் சமன்பாட்டை பேணுவதின் முக்கியத்துவத்தையும் அவர் விஷ்ணு வழிபாட்டுடன் கூடவே போதித்திருக்கிறார். இயற்கை அழிந்தால் மனிதன் வாழ முடியாது. அங்குள்ள குரங்குகளும், மாடுகளும், பறைவகளும், மான்களும், மரங்களும் இல்லையென்றால் அங்கு மனிதனும் அழிந்து விடுவான் என்று போதித்திருக்கிறார். ஏனென்றால் அவரும் அவர் இன மக்களும் இந்துக்கள்.


Caretaker Khanga Ram nurses deer back to health at Lord Jambheshwar temple in Jajiwal Dhora village Jodhpur. Express photo
ஒரு மரத்தைக் காப்பாற்றுவதற்காக 393 மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்ததும் இதே இந்தியாவில்தான் நடந்துள்ளது. ஆனால் இன்றோ கும்பல் கும்பலாகப் போய் இந்தியாவின் நூறாண்டுகள் வயதுள்ள ஒரு செம்மையான மரத்தை வெட்டுகிறோம். அவை வெறும் மரங்கள் அல்லவே. இந்த நாட்டின் அரிய பொக்கிஷங்கள் அல்லவா? அந்தப் பழங்குடி மக்களிடம் இருந்து தமிழர்கள் என்ன பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம்? மரங்களை வெட்டியதும் இல்லாமல் அப்படி வெட்டியவர்கள் தமிழர்கள் என்பதினாலேயே அவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று போராடுகிறார்கள். எப்பேர்ப்பட்ட கலாசார சீரழிவை அடைந்து விட்டது தமிழ் நாடு? மரங்கள் இந்தியாவின் ஜீவ நாடி. குறிப்பாக தமிழ் நாட்டில் பெரும் அளவு மர வன அழிப்பினால் தொடர்ந்து மழை அளவு குறைந்து பாலைவனமாகி வருகிறது. அது குறித்த சூழலியல் பிரக்ஞை சற்றும் இன்றி தமிழர் அரசியல் செய்து வருகிறார்கள் தமிழ் நாட்டு மக்கள். மனித உயிர்களை விட மரங்கள் மேலானவையா என்று ஒரு இந்த்துவ நண்பரே கேட்க்கிறார் என்றால் அவருக்கு மேற் சொன்ன பிஷ்னோய் மக்கள் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் போனதுதான் காரணம். மனித உயிர்களை விட மரங்கள் மேலானவையா என்றால் என் பதில் ஆம் என்பதே.

Dr.Anburaj said...

ஒரு மரம் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. ஒரு மரத்தை வெட்டுவது நிகழ்கால மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். ஆகவே ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுபவன் பல நூறு பேர்களைக் கொன்றவனாகின்றான் ஆகவே அப்பேர்ப்பட்ட கொலைகாரனைச் சுட்டுக் கொல்வதில் எந்தத் தவறும் இல்லை. மரத்துக்காக உயிர் இழந்த அந்த பழங்குடி மக்களை ஒப்பிட்டால் காசுக்காக நூற்றாண்டுகள் வளர்ந்த மரங்களை வெட்டுபவர்கள் மகா பாவிகள். தமிழர்கள் இந்த ராஜஸ்தான் பழங்குடியினரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. வெட்டி ஜம்பமும் போலிப் பெருமிதமும் போலி மொழி வெறியும் தீயவைகள் அனைத்தையும் ஆதரிக்கும் சீழ் பிடித்த மனப்பாங்குமே இன்றைய தமிழ் நாட்டினரின் கலாசாரமாக மாறிப் போய் விட்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஒரு சீழ் பிடித்த கேடு கெட்ட சமூகத்தில் நான் ஒரு அங்கம் என்று சொல்லிக் கொள்ள வெட்க்கமும் வேதனையும் அடைகின்றேன். தமிழர்களின் பண்பாடு இது அல்ல. முல்லைக்குத் தேர் கொடுத்த பண்பாடு அது. மரங்களை வழிபடும் கலாசாரம் அது. அதுவே இன்றைய தமிழகத்தின் தேவை. மரம் வெட்டிகளைப் போற்றி ஆதரிப்பது வெட்க்கக் கேடான அருவருக்கத்தக்க ஒரு விஷயம் என்பதை என்று தமிழ் நாட்டு மக்கள் உணரப் போகிறார்கள்?