Followers

Friday, June 10, 2011

இறைவன் இருக்கிறானா? இல்லையா? - பெரியார் தாசன்


இன்று இணைய உலகில் மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பது இறைவன் இருக்கிறானா? இல்லையா?. இதைப் பற்றி பல விவாதங்கள் பல தரப்பிலும் நடந்து வருகின்றன. இதில் இறைவன் இருப்பதை உணர்ந்து கொண்டு பலரும் பல முடிவை எடுக்கின்றனர். அதில் சமீபகாலத்தில் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட திரு பெரியார் தாசன் தான் எவ்வாறு எந்த சூழ்நிலையில் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன் என்பதை அவரது பாணியிலேயே கூறுவதைக் கேட்போம்:

//இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை. //

ஓ!- தருமி.

இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று நான் சொன்னதற்கு அது தவறு என்ற தோனியில் தருமி அவர்களின் பின்னூட்டம் அமைந்துள்ளது. எனது வாதத்தை நியாயப்படுத்த வேறு எங்கும் போக வேண்டியதில்லை. நமது முன்னால் வேறொரு மார்க்கத்தில் பிறந்து இன்று இஸ்லாத்தை தனது வாழ்வியலாக கொண்டிருக்கும் பெரியார் தாசனையும், ஏ.ஆர். ரஹ்மானையும் இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

பலரின் குற்றச்சாட்டு மொகலாயர்கள் காலத்தில் ஒரு கையில் வாளையும், மறு கையில் குர்ஆனையும் வைத்துக் கொண்டு 'எதை ஏற்றுக் கொள்கிறாய்?' என்று கேட்டு மத மாற்றம் நடந்தது என்ற ரீதியில் பலரும் அறிந்து வைத்துள்ளார்கள். இங்கு வந்த மொகலாயர்களின் முக்கிய நோக்கமே இங்கு தங்களின் ஆட்சியை நிறுவுவதுதானே யொழிய மதத்தைப் பரப்புவது அல்ல. முன்னால் குஜராத் இந்துவாக இருந்து மாலிக்காபூராக மாறிய தளபதி கூட அவரது சொந்த தேடலிலேயே இஸ்லாத்தை ஏற்றதாக அறிகிறோம். இங்குள்ள பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதித்து அனைவரும் ஆட்சி செய்ததால்தான் அவர்களால் கிட்டத்தட்ட தொள்ளாயிரம் வருடங்கள் இந்தியாவை ஆள முடிந்தது.

//மேலும் பெரியார் தாசன் இப்ப உதிர்க்கும் முத்துகளை அவர் நாளையோ மறுநாளோ அவர் கிறித்துவராக மாறும் போது படித்தால் தான் நகைச்சுவையாக இருக்கும், அவர் அப்படி மாறமாட்டார் என்று உங்களிடம் எந்த உத்திரவாதமும் இல்லை என்று நம்புகிறேன் :)//- கோவிக் கண்ணன்!

மேலே காணொளியில் பெரியார் தாசனின் பேச்சை கேட்ட பின்புமா உங்களுக்கு இந்த கேள்வி? பேச்சை முழுவதுமாக கேட்டு அதன் பிறகு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

மேலும் பெரியார் தாசன் சித்தார்த்தனாக மாறினார். சித்தார்த்தன் இன்று அப்துல்லாவாக மாறியுள்ளார். நாளை ஆல்பர்ட்டாக மாறினால் இஸ்லாத்துக்கு அதனால் எந்த நட்டமும் இல்லை. நட்டம் என்ற வகையில் பார்த்தால் பெரியார் தாசனுக்குத்தான்.

பெரியார் தாசனின் வேகத்தைப் பார்த்தால் அவர் திருமாவளவனையும் அவர் பாதையில் கொண்டு வந்து விடுவார் போல் இருக்கிறது. :-) எனவே கோவிக்கண்ணன் சிங்கையிலிருந்து உடன் புறப்பட்டு தமிழகம் வந்து திருமாவளவனை சந்தித்து ஏடாகூடமாக எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம் என்ற கோரிக்கை வைப்பாராக!

இது போன்ற மன மாற்றங்கள் நிகழாமல் தடுக்க இந்து மதத்தின் சட்டங்களை திருத்த அதன் ஆர்வலர்கள் முயல வேண்டும். அதை விடுத்து இஸ்லாத்தை கொச்சை படுத்துவதால் ஏற்படும் மாற்றங்களை தடுக்கவும் முடியாது. அவர்கள் இஸ்லாத்துக்கு செல்வது தவறு என்று நினைப்பவர்கள் இதற்கு மாற்றாக வேறொரு மார்க்கத்தை அவர்கள் காட்ட வேண்டும்.

'முஹம்மதே! காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும் 'இது வெளிப்படையான சூன்யத்தைத் தவிர வேறு இல்லை' என்று ஏக இறைவனை மறுப்போர் கூறியிருப்பார்கள்'

-குர்ஆன் 6:7

----------------------------------------------------------------------------

""நபிகளின் வாழ்க்கையை அறியும்போது, எனக்கு இஸ்லாமிய உணர்வு ஏற்படுகிறது என்றார் பெரியார்''
- -
அ. மார்க்ஸ்
பெரியார் மிகத் தெளிவாக இஸ்லாம் குறித்து பேசியிருக்கிறார். எல்லா மதங்களையும் ஒழிக்க மாநாடு போடும் நீங்கள், இஸ்லாத்தை மட்டும் ஆதரிப்பது ஏன் என்று கேட்கப்பட்ட கேள் விக்கு, ""எல்லா மதங்களும் ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஏதாவது ஒரு மதம் இருக்க வேண்டுமானால் அது இஸ்லாமாகத் தான் இருக்க வேண்டும் என்று பதில் சொன் னவர் பெரியார். ஆனால் அவர் இந்து மதத்தை விட்டு வெளியே போனவர்களை இந்து மதத் திற்கு கொண்டு வர நினைத்திருந்ததாகச் சொல் வது வேதனை மட்டுமல்ல வியப்பாகவும் இருக்கிறது.
அதற்கான உரிய ஆதாரங்களை மணி தர வேண்டும். பெரியார் இஸ்லாத்தை தீண்டத் தகாதவர்களுக்கு மட்டும்தான் பரிந்துரைந்தார் என்று சொல்வதும் விஷமத்தனமானது. பெரி யாரிடம் எல்லோரையும் இஸ்லாத்திற்கு வரச் சொல்லும் நீங்கள் ஏன் இஸ்லாத்திற்கு வரவில்லை என்று கேட்டபோது, ""இஸ்லாத்தில் இல்லாமல் இருந்தால்தான் நான் இந்து மதத்திற்கு எதிராக விமர்சிக்க முடியும்'' என்று பதில் சொன்னவர் அவர்.


அது மாத்திரமல்ல, இஸ்லாமிய நம்பிக்கைக ளில் ஒன்றான நபிகள் நாயகம் தான் இறுதி இறைத் தூதர் என்கிற கருத்தையும் ஏற்றுக் கொண்டவர் பெரியார். அவருக்குப் பின் அந்தத் துறையில் யாரும் இல்லாததனால் அவர் இறுதித் தூதர் என்கிற கருத்து என்று சொன்னார். அது போலவே ஹஜ் யாத்திரை போவதைக் கூட அவர் ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இந்து மதத் தைப் போல எல்லாப் பாவங்களையும் செய்து விட்டு, கோவில் குளத்திற்குப் போய் குளித்தால் போதும் என்கிற அர்த்தத்தில் ஹஜ் யாத்திரை செய்யப்படுவதில்லை. அது ஒரு மதக் கடமையாக நபிகள் தோன்றிய இடத்திற்கு சென்று வருதல் என்கிற பொருளில் மேற்கொள்ளப்படுகிறது என விளக்கம் அளித்தார்.

எனவே இஸ்லாம் குறித்து பெரியார் தொடர்ச்சியாகப் பாராட்டும் வகையிலேயே பேசியிருக்கிறார். அது மாத்திரமல்ல, கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது என்கிற கருத்து வந்தபோது கிறிஸ்தவ மத்திலும் சாதி உள்ளது. இஸ்லாத்திற்கு மாறு வதே சிறந்தது என்றும் அவர் மொழிந்துள்ளார்.

அம்பேத்கர் புத்த மதத்திற்குச் செல்வது என்கிற முடிவெடுத்தபோது கூட இஸ்லாத்திற்குச் செல்வது சிறந்தது என்கிற கருத்தை பெரியார் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை அவர் விமர்சித்தது என்பது இன்று உண்மையான முஸ்லிம்கள் எல்லோரும்
விமர்சிக்கக் கூடிய அம்சங்களைத்தான் எடுத்துக் காட்டாக தர்காவை வணங்குவது, கந்தூரி விழா எடுப்பது, பேய் பிசாசு ஓட்டுவது முதலான மூட நம்பிக்கைகள் இஸ்லாத்தில் புகுந்திருப்பதைத் தான் அவர் விமர்சித்தார். இவை தவிர நான் அறிந் தவரை இஸ்லாத்தில் அவர் விமர்சித்திருப்பது பெண்களுக்கு ஹிஜாப் என்னும் முகத்திரை போடுகிற அம்சத்தைத்தான் அவர் கண்டித்தார்.
எனவே பெரியார் இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று சித்தரிப்பது அடிப்படையில் பெரியாரை புரிந்து கொள்ளாத ஒன்றாகும். அது மாத்திர மல்லாமல் சமீபத்தில் வந்த ஆணைமுத்து தொகுதிகளில் பெரி யார் ஓரிடத்தில், ""நபிகளின் வாழ்க் கையை அறியும் போது, எனக்கு இஸ் லாமிய உணர்வு ஏற்படுகிறது'' என்கிற பொருள்பட குறிப்பிட்டுள்ளார். பெரியார் இருந்த வரைக்கும் எந்த அம்சங்களிலும் அவர் இந்துத்து வாவாதிகளுடன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனால் சமீபத்தில் முல்லைப் பெரி யார் அணை விஷய மாக சாலை மறியல் போராட்டம் நடந்தபோது, இந்து முன்னணி அமைப்பு, பெரியார் திராவிடர் கழ கம் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தியது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் நான் பெரிதும் மதிக்கும் மணி, இவ்வாறு பேசியிருப்பது எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை உறுதி செய்கிறது.

ஆனாலும் இப்போதும் கூட மணி அப்படி பேசியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். பெரியார் கடைசி பல ஆண்டுகள் பொது மேடைகளில் கைலியுடன் தோன்றி னார் என்பதைக் கூட நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அதை வெறும் உடல் நோயின் விளைவு என்று நான் கருதவில்லை. எத்தனை அரசியல்வாதிகள் இப்படி யான ஒரு நிலையில் கைலியுடன் பொது மேடைகளில் தோன்றக் கூடியவர்களாக இருப்பார்கள்?

தயவு செய்து நீங்கள் மணியிடம் இன்னொரு முறை இப்படித்தான் பேசினீர்களா என்று கேட்டுப் பாருங் கள். அவர் இல்லை என்று சொன் னால் நான் மகிழ்வேன். அவர் மீதுள்ள மரியாதைகளை நான் தக்க வைத்துக் கொள்வேன்.

""
இஸ்லாம் மார்க்கம் உங்களுக்கு ஒரு வழிமுறையாக இருக்கும் என்றார் பெரியார்''
-
வீரபாண்டியன்
இஸ்லாம் குறித்து பெரியாரின் கருத்துக்களை பெரியாரியவாதிகள் இருட் டடிப்புச் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இஸ்லாம் என்பது தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தீண்டப்படாமல் கிடந்த மக்களுக்கான ஒரு மாற்ற மருந்து என்கிற கருத்தை பெரியார் கொண்டிருந்தார். அதே வேளையில் மதம் மாறுவது பற்றி அம்பேத்கர் ஆலோசனை கேட்டபோது, ""நீங்கள் போய் புத்த மதத்தில் சேருங்கள், நீங்கள் முடிவு செய்து விட்ட விஷயத்தில் நான் தலை யிட விரும்பவில்லை. ஆனால் சாதாரண மாய் போகதீர்கள். கூட்டம் கூட்டமாகப் போனால்தான் உங்களை அங்கே மதிப் பார்கள். பெரும் கூட்டத்தை திரட்டிக் கொண்டு செல்லுங்கள். ஆனால் அதே வேளையில், நான் பிறந்த - நான் வாழ்ந்து கொண்டிருக்கிற மதத்தில் இருக்கிற பிரச்சனை களை சரி செய்வதற்காக இந்த மதத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியில் போனால் அதைப் பற்றி விமர்சனம் செய்யும் உரி மையை நான் இழந்து விடுவேன். அதனால் கடைசி வரையில் இங்கேயே இருந்து உள்ளிருப்புப் போராட் டம்தான் நடத்துவேன். இங்கி ருந்து கொண்டு தான் இவர்களிடத்தில் சண்டை செய்வேனே தவிர மதம் மாற மாட்டேன்'' என்று சொன்னார்.


அதே நேரத்தில், இந்து மதத்தின் பிற்போக் குத் தனங்கள், இங்கிருக்கிற தீண்டாமைக் கொடுமை, ஏற்றத் தாழ்வுகள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக - தீண்டத்தகாதவர்கள் சேரிகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கு வடிகாலாக, ""நீங்கள் இஸ்லாத்திற்குப் போங்கள். அங்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை. சாதிப் பிரிவுகள் இல்லை. அந்த மார்க்கத் தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கு அது ஒரு வழி முறையாக இருக்கும்'' என்று அவர்க ளுக்கு அவர் பரிந்துரை செய்தார்.

ஆனால், எல்லா மக்களையும் மதம் மாற்றுவது, மதத்திற்கு மாறிப் போவது என்கிறபோது தான் மாறத் தேவையில்லை என்றும் பெரியார் சொன்னார். எனவே பெரியாரிய வாதி இஸ்லாம் குறித்து பெரியார் சொன்ன கருத்துக்களை இருட்ட டிப்புச் செய்யத் தேவையில்லை. ஒரு வேளை பேராசிரியர் பெரியார் தாசன் அவர்கள் அண்மையில் இஸ் லாத்திற்கு மாறிப் போனதைப் பற்றி திராவிட இயக்கப் பத்திரிகைகளில் கடுமையான விமர்சனங்கள் வந்ததை நான் படித்தேன். அவர் மாறிப் போனது ஒரு பெரியாரியவாதி, ஒரு பகுத்தறிவாளர் என்று சொன்ன நாத்திகவாதி. அப்படி இஸ்லாத் திற்கு மாறிப் போகிறாரே என்கிற கோபத்தில் திராவிட இயக்கப் பத்தி ரிகைகள் கடும் விமர்சனம் செய்ததை நான் பார்த்தேன். அந்த அடிப்படையில் அவர்கள் இது போன்ற கருத்துக்களை சொல்லியிருக்கலாம்.

அதே நேரத்தில் இஸ்லாம் என்பது உட்பிரிவுகள் ஏதுமில்லாமல், மனிதர்களை சாதிப் பிரிவுகள் ஆக்கி விட்டு, பேதப்படுத்துகிற வேலை யைச் செய்வதில்லை. அங்கே சமத் துவம் இருக்கிறது என்கிற பெரியா ரின் கருத்திலிருந்து பெரியாரியவாதி கள் மாறுபடவும் வாய்ப் பில்லை.
பெரியாரியவாதிகள் எனப்படு வோர் உயர்சாதி மேலாண்மையை, உயர்சாதிக்காரர்களின் கொடுமை களை எதிர்த்துப் போராடுவதில் பின்வாங்குகிறவர்கள் அல்ல. அதே நேரத்தில் அவர்கள் எந்த மதத்திற் காகவும் பிரச்சாரம் செய்ய மாட் டார்கள். மதம் என்பது மனிதர் களுக்கு "அபின்' என்கிற கருத்துக் கொண்டவர்கள் தான் அவர்கள். அதுதான் அவர்களின் கருத்தாக்கம். பல சமூகப் பிரச்சனைகள் வருகிற போது, உதாரணமாக பாபர் மஸ்ஜித் இடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு போன்ற பிரச்சனைகளின் போது இஸ்லாமியச் சகோதரர்களோடு அவர்கள் கைகோர்த்து நின்றதை நாடு பார்த்தது. பிரச்சனை என்றால் அவர்கள் வருவார்களே தவிர மதப் பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபடுவதில்லை. இதுதான் அவர்க ளின் நிலைப்பாடு என்று நான் புரிந்து கொள்கிறேன்.

--------------------------------------------------------------------------------

[''இஸ்லாத்திற்குள் நுழைந்தால் ''வெறும் ஐந்தாயிரம்-பத்தாயிரம் பேருடன்'' நுழையமாட்டேன் -தமிழகத்தில் இருக்கின்ற பறையர் -பள்ளர் - அருந்ததியர் என அனைவரையும் அழைத்துக்கொண்டுதான் நுழைவேன் - திருமாவளவன் ]

நேற்று (21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்)அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல - தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர்.

மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி யூசுஃப் மிஸ்பாஹி, மவ்லவி ஹாமித் பக்ரி ஆகியோரின் உரைகள் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி - சிறப்பாக இருந்தது.

பேரா. அப்துல்லாஹ்வை வாழ்த்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் வந்துகொண்டிருப்பதாக செய்தி பரவியதும் பள்ளியில் குழுமியிருந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் அதிகரித்தது.

கூடியிருப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக ''மக்கா மஸ்ஜித்'' இமாம் மவ்லவி காஸிமி அவர்கள் - ''பேரா.பெரியார் தாசனை தொடர்ந்து - ''இஸ்லாத்தை'' விரைவில் ஏற்கப்போகும் தோழர் திருமா இன்னும் சிறிது நேரத்தில் மேடைக்கு வந்துவிடுவார்'' என்று அறிவித்தார். அதைக்கேட்டதும் ''நாரே தக்பீர்'' முழக்கம் ஒலித்தது..

.

கூட்டத்தின் நடுவிலே மீண்டும் தோழர் திருமா விடமிருந்து மக்கா மஸ்ஜித் காஸிமிற்கு வந்த தொலைபேசி அழைப்பு மூலம் தான் மேடைக்கு வந்த பிறகு தான் பேரா.அப்துல்லாஹ் உரையாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஒருவழியாக தோழர்.திருமா வந்து சேர்ந்ததும் - மக்கா மஸ்ஜித் காஸிமி, பகிரங்கமாக அம்மேடையிலேயே அவருக்கு இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தார் - அதைக்கேட்ட கூட்டத்தினரில் பலருக்கு மகிழ்ச்சி.

திருமாவின் உரை - வழக்கம் போல ''கனீரென்று'' தெள்ளத் தெளிவாக அமைந்திருந்தது. இஸ்லாம் பற்றிய அவரின் அவரின் அறிதலும்-புரிதலும் கூட்டத்தில் பலரின் புருவத்தை உயரவைத்தது.

மவ்லவி காஸிமின் அழைப்புக்கு பதிலளித்து உரையை தொடங்கியவர், இஸ்லாத்தை ஏற்க அவருக்கு தடைக் கற்களாக அவர் ஏற்றிருக்கும் கட்சித் தலைமை பொறுப்பை - தமிழக அரசியல் சூழ்நிலையை விவரித்தார். ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட தலித்களின் முன்னேற்றத்திற்காக - விடுதலைக்காக இன்னமும் செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டார். அவசரப்பட்டு இஸ்லாத்தை தான் ஏற்பதன் மூலம் தலித்களின் சமூக-பொருளாதார -சூழ்நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றார்.

மேலும், அம்பேத்கார் புத்த மத்தை ஏற்றபோது - அவர் சார்ந்த ''மகர்'' சாதியினர் மட்டுமே பவுத்த மதத்திற்கும் நுழைந்ததாகவும் - பெரும்பான்மையான ''தாழ்த்தப்பட்ட'' மக்கள் இன்னும் ''வர்னாசிரம''பிடியில் இருப்பதாகவும் குறிப்பிட்டு - தமிழகத்திலும் அவ்வாறு நடந்து விடக்கூடாது என்றார்.

உரையின் நிறைவாக இஸ்லாத்திற்குள் நுழைந்தால் ''வெறும் ஐந்தாயிரம்-பத்தாயிரம் பேருடன்''நுழையமாட்டேன் - தமிழகத்தில் இருக்கின்ற பறையர் -பள்ளர் - அருந்ததியர் என அனைவரையும் அழைத்துக்கொண்டுதான் நுழைவேன்'' என்று ''பலத்த'' நாரே தக்பீர் முழக்கத்துக்கு இடையே முழங்கினார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேரா.அப்துல்லாஹ், தமிழக நாத்திக-திராவிட அமைப்புகள் கிண்டலும்- கேலியும் கலந்து கண்டனம் தெரிவிக்கும் நேரத்தில், எதைபற்றியும் கவலைப்படாமல் தனக்கு வாழ்த்துரை வழங்க துணிவுடன் வந்த திருமாவுக்கு நன்றி தெரிவித்தார். இஸ்லாத்தை ஏற்க தன்னை ''இறைவன்''தூண்டியதாகவும் ''முஸ்லிம்கள்'' எவரும் தூண்டவில்லை என்றார்.

தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக இருக்கும் ''குழு மனப்பானமை பற்றி வருந்தினார். குறிப்பாக,ரியாதிலிருந்து தாயகம் திரும்பிய அவரை வரவேற்க சென்ற முஸ்லிம்கள், அமைப்பு-இயக்க அடிப்படையில் தனித்தனி குழுக்களாக வந்திருந்ததையும் - எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்த ''இந்து முன்னனியினர்'' மட்டும் ஒற்றுமையாக ஒரே கூட்டமாக குழுமியிருந்ததையும் குறிப்பிட்டார்.

தனக்கு மிரட்டல் விடுக்கும் பெரியார் திராவிட கழகத்தினருக்கு தனக்கேயுரிய பாணியில் பதிலளித்தார்.நாத்திகம் பரப்பிய போது தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் - தூய இஸ்லாத்தை ஏற்றவுடன் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரைப்பற்றியும் அஞ்சுவதில்லை என்றார். ஏகத்துவத்தை பரப்பும் பணியை மேற்கொள்ள போவதாகவும் - அப்பணிக்காக தன்னை அனைத்து அமைப்பினரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

www.nidur.info

32 comments:

Unknown said...

நன்பரே இஸ்லாமில் இணைந்தால் தலித் என்ற அரசாங்க சலுகை கிடைக்காதாமே? அதுக்கு என்ன பண்ணுறது

VANJOOR said...

தீண்டாமையும் இஸ்லாமும். - பெரியார்

இந்து மதத்தில் தீண்டாமையானது பலமான இடம் பெற்றிருக்கிறது என்பதை எந்த இந்துவும் இதுவரை மறுக்கவே இல்லை. அப்படி மறுப்பவர்கள் தாங்கள் யோக்கியமான இந்துவா, இந்து சாஸ்திரங்களை புராணங்களை வேத சாஸ்திரங்கள் எனபவைகளை கடவுள் வாக்குகள். கடவுள் நடவடிக்கைகள் என்பவைகளை அப்படியே ஒப்புக்கொள்ளுபவர்களா அல்லது தங்களுக்கு இஷ்டமானபடி சமயத்துக்கு மக்களை ஏய்ப்பதற்கு ஆக பேசுபவர்களா? என்பதை முதலில் நாணயமாய் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

மத தத்துவ ஆதாரங்களின்படி தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும், பேதமும் இஸ்லாம் மதத்தில் இல்லை என்பதையும் இந்து மதத்தில் இருப்பதோடு அல்லாமல் அமுலிலும் மிக்க கொடுமையான தத்துவத்துடன் இருந்து வருகிறது என்பதையும் நாம் எங்கும் நிரூபிக்கமுடியும்

ஒரு தீண்டாதவன் முஸ்லீமானாலும் ஒரு கூட்ட தீண்டாதவர்கள் முஸ்லீம்களானாலும் அவர்களைப் பொறுத்தவரை தீண்டாமை அந்த நிமிடமே ஒழிந்துவிடுகிறது மாத்திரம் நேரில் பிரத்தியக்ஷத்தில் பார்த்து வருகிறோம்.

முஸ்லீம் மதத்துக்கு போனால் உயர்ந்த முஸ்லீம் பெண் கொடுப்பானா? என்று ஒரு தலைவர் கேட்கிறார். ஆனால் இந்து மதத்தில் இருந்தால் மாத்திரம் இவர் தன் பெண்ணைக் கொடுக்கக்கூடுமா என்று நாம் கேட்டால் அது அதிகப் பிரசங்கித்தனமாய்விடும் என்று அஞ்சுகிறோம்.

தீண்டாதவர்கள் இஸ்லாமாகி முஸ்லீமாகி மனிதர்களாவதுதான் யோக்கியமான மார்க்கம் என்று கூறுகிறோம்.

இதை ஆட்சேபிப்பவர்கள் தங்களால் இதுவரை இது விஷயத்தில் செய்யப்பட்ட காரியம் இன்னது, அதனால் ஏற்பட்ட பயன் இன்னது, அல்லது காந்தியார் ஈறான மற்ற சீர்திருத்தக்காரர்களால் ஏற்பட்ட காரியம் இன்னது என்று அனுபவரீதியாய் எடுத்துக்காட்டி ஆட்சேபிக்கத் தாழ்மையாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம்.

-பெரியார் - ”குடி அரசு” துணைத் தலையங்கம் 09.08.1936
------------------

CLICK THE LINK AND READ.

1. இஸ்லாம் ஏன் ? எதற்காக ? - பெரியார். !!!


2. தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார். சேந்தையம்பட்டியில் ஆதிதிராவிடர்கள் 69 பேர்கள் இஸ்லாத்தை தழுவியது தொடர்பாக ஈ.வெ.ரா. பெரியார் ஆற்றிய உரை


..

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//நன்பரே இஸ்லாமில் இணைந்தால் தலித் என்ற அரசாங்க சலுகை கிடைக்காதாமே? அதுக்கு என்ன பண்ணுறது//

என்னை ஒருவர் தினமும் 100 ரூபாய் கொடுத்து விட்டு அதற்கு பகரமாக தனது காலில் கிடக்கும் செருப்பால் பல முறை அடிக்கிறேன் என்று கூறினால் அதற்கு நான் ஒத்துக் கொள்வேனா? இன இழிவு நீங்குவது பெரிதா? அல்லது இன இழிவோடு அரசு தரும் சலுகைகளை பெறுவதா? இன்று இஸ்லாமியர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு சட்டமாக்கப் பட்டுள்ளதே!

97. மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
"இதை எந்தப் பகரமும் இல்லாமல் உமக்கு நாம் வழங்கி விட்டோம். முன்னர் இதை விடச் சின்னப் பிரச்சினைகளுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டதுண்டு" என்று (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்டு வந்தவரிடம்) ஆமிர் கூறினார்.
Volume :1 Book :3

692. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முதன் முறையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய் வந்தவர்கள், குபா என்ற பகுதியிலுள்ள உஸ்பா என்ற இடத்தில் தங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை அபூ ஹுதைபா(ரலி) அவர்களின், அடிமை, ஸாலிம் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார். அவர் குர்ஆனை அதிகம் ஓதிய வராக இருந்தார்.
Volume :1 Book :10

1936. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன்!" என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள், 'விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை!" என்றார். 'தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இல்லை!" என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர், 'இல்லை!" என்றார். நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'கேள்வி கேட்டவர் எங்கே" என்றார்கள். 'நானே!" என்று அவர் கூறினார். 'இதைப் பெற்று தர்மம் செய்வீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! என்னை விட ஏழையாக இருப்போருக்கான (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!" என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்: பிறகு 'இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!" என்றார்கள்.
Volume :2 Book :30

நம் நாட்டில் இன்றும் கொத்தடிமைகள் இருந்து வருகின்றனர். 1400 வருடங்களுக்கு முன்பு இதே போன்ற கொத்தடிமைகள் இஸ்லாமிய ஆட்சியில் பல சட்டங்களின் மூலமாக சன்னம் சன்னமாக குறைக்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே அடிமைகளே இல்லாத பிரதேசமாக அரபு பிரதேசம் மாறியது. ஒரு அடிமை முகமது நபி காலத்தில் மற்றவர்களுக்கு இமாமாக நின்று தொழ வைத்தததையும் நாம் பார்க்கிறோம். ஆனால் தமிழகத்தின் பல ஊர்களில் இன்றும் கூட சில சாதியினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

Anonymous said...

பௌத்தத்தில், சமணத்தில், சீக்கியத்தில் சேர்ந்தால் கிடைக்குமே !!! :)

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//பௌத்தத்தில், சமணத்தில், சீக்கியத்தில் சேர்ந்தால் கிடைக்குமே !!! :)//

என்ன கிடைக்கும் ....அதே தீண்டாமையா?

பவுத்தமும், சீக்கியமும், சமணமும் இந்து மதத்தின் ஒரு பிரிவாக மாறி பல ஆண்டுகள் ஆகிறது இக்பால் செல்வன்! இதே பெரியார்தாசன் பவுத்தத்தில் எந்த மாற்றத்தையும் அவரால் காண முடியாததாலேயே இஸ்லாத்தின் பக்கம் அவரது பார்வை திரும்பியது. இதை அவரே மேலே காணொளியில் சொல்வதை கேளுங்கள்.

saarvaakan said...

நண்பருக்கு வணக்கம்
பேச்சு முழுதும் கேட்டேன்.பெரியார் தாசனின் சில கருத்துகளுக்கு விளக்கம் கோருகின்றேன்.
//1.திராவிடர் கழகத்தில் இருந்தது இல்லை.திரு அப்துல்லா சைவ இந்துவாகவே இருந்திருக்கிறார்.//
ஆக நாத்திகர் இஸ்லாமுக்கு மாறவில்லை.அல்லது இஸ்லாமுக்கும் வரும்போது பவுத்தராக இருந்திருக்கிறார்.அவர் பெயரை பெரியார்தாசன் என்று சொல்லாமல்,சேஷாசலம்,சித்தார்த்தன்,அல்லது அப்துல்லா என்று குறிப்பிடுவது நலம்.பெரியாரின் பெயரை வைத்து விளம்பரம் செய்கிறார்.சிலரை இஸ்லாமிய பெயர் தாங்கிகள் என்று சிலரை நீங்கள் குறிப்பிடுவது போல்.

2./இந்துவாக பிறந்தது இவர் செயல் அல்ல,பெரியாரை ஏற்றது அறிவால்.பவுத்தம் ஏற்றது அம்பேத்காரை படித்தது.இஸ்லாமை ஏற்றது இறைவன் நாடியதால் என்கிறார்./
இஸ்லாமை ஆய்வு செய்து இஸ்லாமை இவர் ஏற்கவில்லை.இறைவன் நாடியது என்றால் நடியதை உணர முடிகின்றது.இதுவும் இஸ்லாமில் விளக்கப் படவேண்டி விஷயமே.இப்போது இறைவன் நாடுதலை உணர முடிவதை குரான் அனுமதிக்கிறதா?.இஸ்லாமின் படி எப்படி விளங்குகிறீர்கள்?

3. இஞ்சீல் என்பது புதிய ஏற்பாடு என்று திரு அப்துல்லா ஒத்துக் கொள்கிறார்.இத்னை சுவனப் பிரியன் ஏற்கிறாரா?

4. 1,24,000 நபிமார்கள் என்று குரானில் எண்ணிக்கை குறிப்பிடவில்லை. எந்த ஆதாரபூர்வ ஹதிதில் குறிப்பிடப் பட்டு உள்ளது?.

5.இறையச்சம் மட்டுமல்ல வயதானால் பல் அச்சங்கள் வரும்.அச்சத்தினால் மாறியவரை கஷ்டப் படுத்தக் கூடாது.இவருக்கு சுவனம் கிட்ட வாழ்த்துக்கள்.

6. கன்வில் ஆட்டோமான்[19ஆம் நூற்றாண்டு] காலத்து காஃபா பார்த்ததாக கூறுகின்றார்.இப்படி வருவது ஒரு வெளிப்பாடா?

7. சீட்டு கட்டி ஒரு இலட்சம் எடுத்ததாக் கூறுகின்றார்.இது சரியா?

8.ஜம் ஜம் தண்ணீர் குடித்த‌தால் பாவம் ஒழிந்ததாக உணருகின்றார்.இப்படி கூறலாமா?. இதற்கு குரான்,ஹதிதில் ஏதேனும் முன் உதாரணம் தர முடியுமா?.சரி குரானில் ஜம்ஜம் தண்ணிர் பற்றி விவரம் இல்லை.ஹதிதில் மட்டும் காட்டவும்.

9.சரியாக வழி நடத்திய சுன்னா(சுன்னத் அல்ல)

திரு சம்சுதீன் காசுமி ஏற்பாடு செய்த கூட்டமா? .திரு அப்துல்லா இஷ்டப் பட்டார் மாறினார்.இஸ்லாம் பற்றி சரியாக பல விவரங்கள் தெரிந்து கொள்ளவில்லை. ஒரு குரான் வசனம், ஹதிது கூட மேற்கோள் காட்டி பேசவில்லை.இதிலாவது இறுதிவரை இருப்பது அவருக்கு நல்லது.

Anonymous said...

@ சுவனப்பிரியன் - // இட ஒதுக்கீடு கிடைக்கும் // ஹிஹி ..

இஸ்லாத்தில் இணைந்தவுடன் தீண்டாமை ஒழிந்துவிடுமா ? அல்லது பவுத்தத்தி, சமணத்தில், சீக்கியத்தில் இணைந்தவர்கள் எல்லாம் தீண்டதகாதோராய் தான் இருக்கின்றார்களா ? என்பது தான் கேள்வி ...

பவுத்தமும், சமணமும், சீக்கியமும் இந்து மதத்தின் பிரிவுகள் என தாங்கள் வாதாடும் தக்க காரணங்கள் .. ஏனெனில் அவை இந்தியாவில் இருந்து தோன்றிய ஒரேக் காரணத்தால் தங்கள் பார்வைக்கு இந்து மதமாகத் தெரிகின்றதே ஒழிய .. அம்மூன்று மதங்களின் தத்துவமும் - சனாதன இந்து மதத் தத்துவங்களும் ஒவ்வாதவை ஆகும் ...

முதலில் பெரியார் தாசன் என்ற நபர் பவுத்தத்தில் என்னவற்றைக் காணத் தவறினார் .. அதனை அவர் இஸ்லாத்தில் கண்டுக் கொண்டாரா என்பதை விளக்கச் சொல்லுங்கள் ...

பவுத்த மதம் எங்கேயாவது தீண்டாமை செய்ய சொல்லி இருக்கா ? இல்லை இஸ்லாத்தைப் பின்பற்றுவோர் தீண்டாமை செய்த்தே இல்லையா ?

அவர் எதோ பொருளியல் காரணத்துக்காக மதம் மாறினார் என்றே பலருக்குப் படுகின்றது. ஏனெனில் அவர் பேச்சில் தடுமாற்றங்களே அதற்கு சாட்சியாக இருக்கு !

யார் வேண்டுமானாலும்- எம்மதத்துக்கும் மாறலாம் .. ஆனால் மதம் மாறிய பின் ஏனைய மதங்களைப் பற்றி அவதூறுப் பரப்புவது... அம்மதங்களில் உள்ள உணர்வுகளைப் பாதிக்கச் செய்யாதா ?

Anonymous said...

@ சார்வாகன் - சபாஷ் சரியான கேள்விகள் ? நானும் கவனித்தேன் திருவாசகத்தையும் - தேவாரத்தையும் கரைத்துக் குடித்த அப்துல்லாஹ்வுக்கு ஏன் குரானை / ஹடித்களை சரியாக எடுத்தியம்பி பேச முடியவில்லை .. வயதாகி விட்டதால் மனனம் செய்ய முடியவில்லையோ ? அல்லது மொழிப் பிரச்சனையோ என்னவோ ?

Anonymous said...

பெரியார் சொன்னார் இஸ்லாத்துக்கு மாறுகிரீர்கள் / மாறுங்கள் என்கின்றார் வாஞ்சூர் .. அதே பெரியார் கடவுளே இல்லை என்றார். அது மட்டும் தப்பாத் தெரியுதா உங்களுக்கு ?

உங்க கதை என்ன கதைனே புரியலையே ?

suvanappiriyan said...

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
சகோ. சார்வாகன்!

//அவர் பெயரை பெரியார்தாசன் என்று சொல்லாமல்,சேஷாசலம்,சித்தார்த்தன்,அல்லது அப்துல்லா என்று குறிப்பிடுவது நலம்.பெரியாரின் பெயரை வைத்து விளம்பரம் செய்கிறார்.//
பெயரில் என்ன இருக்கிறது. இஸ்லாமிய பெயர் தாங்கிய எத்தனையோ பேர் இஸ்லாம் சொன்னபடி நடப்பதில்லை. ஒருவன் குர்ஆனின் சட்டதிட்டத்தை முடிந்தவரை தனது வாழ்நாளில் கடைபிடிப்பவனே இஸ்லாத்தில் சிறந்த இடத்தைப் பெறுகிறான். அமெரிக்க அதிபரின் பெயர் பராக் ஹூசைன் ஒபாமா. இதனால் அவரை முஸ்லிம் என்று சொல்ல முடியுமா?

மேலும் பெரியார் எதை தீர்வாக சொன்னாரோ அந்த முடிவைத்தான் பெரியார் தாசனும் எடுத்திருக்கிறார். சகோ. வாஞ்சூர் அனுப்பிய பெரியாரின் ஒலிநாடாவை கேளுங்கள். இதற்கான விளக்கம் கிடைக்கும்.

//2. இஸ்லாமை ஆய்வு செய்து இஸ்லாமை இவர் ஏற்கவில்லை.இறைவன் நாடியது என்றால் நடியதை உணர முடிகின்றது.இதுவும் இஸ்லாமில் விளக்கப் படவேண்டி விஷயமே.இப்போது இறைவன் நாடுதலை உணர முடிவதை குரான் அனுமதிக்கிறதா?.இஸ்லாமின் படி எப்படி விளங்குகிறீர்கள்?//
'அவர்களை நேர் வழியில் சேர்ப்பது முஹம்மதே! உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு இறைவன் நேர்வழி காட்டுகிறான்'
-குர்ஆன் 2:272
முகமது நபிக்கே கூட ஒருவரை நேர்வழியில் கொண்டு வர முடியாது. பிரசாரம் செய்வது மட்டுமே அவரது வேலை என்கிறான் இறைவன். பெரியார்தாசனை நேர்வழியில் செலுத்த இறைவன் நாடி விட்டான். எனவே உடன் இஸ்லாத்தில் ஐக்கியமாகி விட்டார். அதன் முன்பே பல இடங்களில் குர்ஆன், ஹதீஸ் மொழி பெயர்ப்புகளை படிக்க ஆரம்பித்துள்ளார். இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று பல ஆண்டுகளாக விரும்பி உள்ளார். மனதில் உள்ளதுதான் கனவுகளாகவும் வரும். அவர் இஹ்ராம் கட்டி கஃபாவை வலம் வருவது போல் கனவும் காண்கிறார்.
தூண்டினால் இறைவன் துணை செய்வான்.

//3. இஞ்சீல் என்பது புதிய ஏற்பாடு என்று திரு அப்துல்லா ஒத்துக் கொள்கிறார்.இத்னை சுவனப் பிரியன் ஏற்கிறாரா?//
அதே அப்துல்லா அந்த இன்ஜிலை பிதா, பரிசுத்த ஆவி என்று பலவாறாக பிரித்து விட்டதாக அடுத்து கூறுகிறாரே!

//4. 1,24,000 நபிமார்கள் என்று குரானில் எண்ணிக்கை குறிப்பிடவில்லை. எந்த ஆதாரபூர்வ ஹதிதில் குறிப்பிடப் பட்டு உள்ளது?.//
குர்ஆனில் 25 நபிமார்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகிறது. ஆனால் மொத்த நபிமார்களின் எண்ணிக்கையை துல்லியமாக குர்ஆனிலோ நம்பகமான ஹதீஸிலோ காண முடியவில்லை. உலகில் உள்ள எல்லா மூல மொழிகளுக்கும் இறைத் தூதர்களை அனுப்பியதாக இறைவன் கூறுகிறான். அது வரைதான் நாம் நம்ப வேண்டும். வழி வழியாக வரும் செய்தியின் அடிப்படையில் அவர் இப்படி கூறியிருக்கலாம். இந்த செய்தி உண்மையாகவும் இருக்கலாம். இறைவனே அறிந்தவன்.

//6. கன்வில் ஆட்டோமான்[19ஆம் நூற்றாண்டு] காலத்து காஃபா பார்த்ததாக கூறுகின்றார்.இப்படி வருவது ஒரு வெளிப்பாடா? //
எந்நேரமும் ஒன்றைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால் அது நம் கனவில் வருவதை நாமே பல முறை உணர்ந்திருப்போம்.

//7. சீட்டு கட்டி ஒரு இலட்சம் எடுத்ததாக் கூறுகின்றார்.இது சரியா?//
அது வட்டி இல்லாமல் இருக்க வேண்டும். இது பற்றிய விளக்கம் அவர்தான் அளிக்க முடியும்.

suvanappiriyan said...

//8.ஜம் ஜம் தண்ணீர் குடித்த‌தால் பாவம் ஒழிந்ததாக உணருகின்றார்.இப்படி கூறலாமா?. இதற்கு குரான்,ஹதிதில் ஏதேனும் முன் உதாரணம் தர முடியுமா?.சரி குரானில் ஜம்ஜம் தண்ணிர் பற்றி விவரம் இல்லை.ஹதிதில் மட்டும் காட்டவும்.//

3362. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் இஸ்மாயீலின் தாயார்(ஹாஜ)ருக்குக் கருணைபுரியட்டும். அவர்கள் மட்டும் (இறையருளால் பொங்கி வந்த 'ஸம் ஸம்' நீரை அள்ளி எடுத்துத் தம் தோல் பையில் வைக்க) அவசரப்பட்டிருக்காவிட்டால் 'ஸம்ஸம்' (கிணறு, பூமியின் மேற்பரப்பில்) ஓடிக் கொண்டிருக்கும் ஓர் ஊற்றாக ஆகிவிட்டிருக்கும்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :60

1971 ல் எகிப்திய டாக்டர் ஒருவர் ஐரோப்பிய ஆங்கில பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்றும் ஜம் ஜம் கிணறு அது ஒரு பள்ளத்தாக்கில் இருப்பதால் மக்கா நகரில் உள்ள கழிவு நீர்கள் பள்ளத்தாக்கில் தேங்கி பூமிக்குள் சென்று ஜம் ஜம் கிணற்று நீரோடு கலந்து விடுகிறது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

இதை நான் படித்தவுடனே தெரிந்துகொண்டேன், இது இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் என்று. ஏனென்றால் அது ஒரு பள்ளத்தாக்கில் இருக்கும் அமைப்பை வைத்து ஒரு யூகமாய் கூறப்பட்டதே அல்லாமல் விஞ்ஞானப் பூர்வமாய் அல்ல. இதை அறிந்த அப்போதைய சவூதி மன்னர் ஃபைசல் அவர்கள் கோபமடைந்து எகிப்திய டாக்டரின் யூகத்தை தவறு என்று நிரூபிக்க முடிவெடுத்தார்.

மன்னர் ஃபைசல் அவர்கள் (Ministry of Agriculture and Water Resources ) அமைச்சகத்துக்கு ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்வதற்கு ஐரோப்பாவிலுள்ள (European laboratories)ஆய்வு நிலையத்திற்கும் ஜித்தாவிலுள்ள (Jeddah Power and Desalination Plants கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையம்)ஆய்வு நிலையத்திற்கும் அனுப்பி வைத்தது. அப்போது நான் கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையத்தில் இன்ஜீனியராக பணி புரிந்து கொண்டிருந்தேன். ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்யும் பணியை எங்கள் நிலையத்துக்கு ஓப்படைக்கப்பட்டது.

அதன்படி நான் கஃபாவில் உள்ள அதிகாரிகளிடம் விளக்கினேன். அவர்கள் ஆய்வுக்கு ஜம் ஜம் தண்ணீரை எடுக்க ஒரு ஆளை நியமித்து அனுப்பினர். நான் ஜம் ஜம் கிணற்றை பார்க்க நேரிட்டபோது அது 18x14 அடிதான் இருந்தது. பல ஆயிரக்கணக்கான ஹாஜிகளுக்கு பல ஆயிரம் மில்லியன் கணக்கான கேலன் தண்ணீரை நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் காலத்திலிருந்து பல நூறு நூற்றாண்டுகளாக அல்லாஹ் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

நான் எனது ஆய்வை தொடங்கினேன். எனக்கு துணையாக அனுப்பப்பட்ட ஆளிடம் கிணற்றின் ஆழத்தை காட்ட சொன்னேன். அவர் குளித்து விட்டு கிணற்றில் இறங்கிய பொழுது அவரது தோள்பட்டைக்கு சிறிது மேலாகத்தான் கிணற்றின் நீர் மட்டம் இருந்தது, அதாவது சுமார் ஐந்தடி எட்டு அங்குலம். மேலும் அவர் அங்கு வேறு குழாய்கள் இல்லை என்பதையும் கூறினார். தண்ணீரை ஆய்வு செய்வதற்காக வேண்டி மேலாக உள்ள தண்ணீரை குழாய் மூலம் வேறொரு இடத்திற்கு மாற்றினோம். பிறகு அவரை ஒரே இடத்தில் நிற்கும்படி கூறினேன்.

சிறிது இடைவெளிக்குப்பிறகு இரு கைகளையும் உயர்தியபடி 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறினார். ஊற்று நீர் சுரப்பதை காலில் உணரப்பட்டது. கிணற்றின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே அளவாக நீர் சுரந்தது. தண்ணீரிலிருந்து சிறிது மாதிரி எடுத்துக்கொண்டோம். காஃபா அதிகாரிகளிடம் காஃபா அருகில் உள்ள மற்ற கிணறுகளையும் பார்வையிட கோரினேன். அவைகள் எல்லாம் வற்றிய நிலையில் இருந்தன. எங்கள் ஆய்வின் படியும், ஐரோப்பிய ஆய்வின் முடிவின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது. ஜம் ஜம் தண்ணீருக்கும் மற்றைய தண்ணீருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் கால்சியமும், மாக்னீசியமும் அளவில் சற்று அதிகம். கால்சியம் சத்து அதிகமிருப்பதால் ஹாஜிகளுக்கு களைப்பை நீக்கி விரைவில் புத்துணர்ச்சி ஏற்பட செய்கிறது. மேக்னீசியம் அதிகமிருப்பதால் தண்ணீரில் கிருமிகள் சேராமல் தடுக்கிறது.

மேலும் ஐரோப்பிய ஆய்வின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது என்று தெரிய வருவதால் எகிப்திய டாக்டரின் கூற்று ஆதாரமற்றது என்பது தெளிவாகிறது. எங்கள் ஆய்வும் ஐரோப்பிய கூடத்தின் ஆய்வும் ஒன்றாக இருப்பதை அறிந்து மன்னர் ஃபைசல் மகிழ்ச்சியடைந்தார். ஜம் ஜம் தண்ணீர் எவ்வளவு சுத்தமானது என்று அறிய இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து கொண்டோம். இவையெல்லாம் அல்லாஹுத்தாஆலாவின் நாட்டப்படியே நடக்கிறது.
source: http://www.themodernreligion.com/science/zamzam.html

suvanappiriyan said...

//9.சரியாக வழி நடத்திய சுன்னா(சுன்னத் அல்ல)

திரு சம்சுதீன் காசுமி ஏற்பாடு செய்த கூட்டமா? .திரு அப்துல்லா இஷ்டப் பட்டார் மாறினார்.இஸ்லாம் பற்றி சரியாக பல விவரங்கள் தெரிந்து கொள்ளவில்லை. ஒரு குரான் வசனம், ஹதிது கூட மேற்கோள் காட்டி பேசவில்லை.இதிலாவது இறுதிவரை இருப்பது அவருக்கு நல்லது.//

வாக்கியங்களோடு சேர்ந்து வரும்போது த என்ற சொல் மறைந்து விடும். இது எல்லா மொழிகளிலும் உள்ளதே!

பெரியார் தாசன் பல வேதங்களையும் கற்றவர். இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் ஒரு முறை சென்னையில் ரயிலிருந்து இறங்கி குர்ஆன் பிரதியை பணம் கொடுத்து வாங்கிச் சென்று தினமும் இரண்டு மூன்று பக்கங்கள் படித்து விளங்கி பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் இஸ்லாத்தை ஏற்கிறார். இதை அவரே மேடையிலும் விளக்குகிறார்.

இன்ஷா அல்லாஹ் இதுவே இவரது இறுதி முடிவாக இருக்கும். இது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது.

saarvaakan said...

நண்பரே,

1. பெரியார் தாசன் இறைவன் தாசன்(அப்துல்லா) ஆகிவிட்டார்.திருப்பி பெரியார் தாசன் என்பது தவறான அர்த்தம் வரவில்லை என்றால் சரி.

2.//எந்நேரமும் ஒன்றைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால் அது நம் கனவில் வருவதை நாமே பல முறை உணர்ந்திருப்போம்.//
இப்பொதைய காஃபா என்றால் எங்காவது பார்த்து இருப்பார்.19ஆம் நூற்றாண்டு ஆட்டோமான் கால்த்து காஃபா என்றால் காலப் பிரயாணம் செய்தாரா?


3.//அதே அப்துல்லா அந்த இன்ஜிலை பிதா, பரிசுத்த ஆவி என்று பலவாறாக பிரித்து விட்டதாக அடுத்து கூறுகிறாரே!//
அவர் படித்த புத்தகம் ஒன்றை இன்ஞீல் என்று குறிப்பிட்டு அதில் தவறு கண்டு பிடித்து மாறினார்.அது புதிய ஏற்பாடா வேறு ஏதாவதா?

4.// 1,24,000 நபிமார்கள் என்று குரானில் எண்ணிக்கை குறிப்பிடவில்லை. எந்த ஆதாரபூர்வ ஹதிதில் குறிப்பிடப் பட்டு உள்ளது?//
_______________
4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
_____________
இந்த 1,24,000 என்பது எப்படி சொல்கிறீர்கள்.நான் உலகில் இதுவரை பிறந்த மொத்த மக்கள் தொகையும்(அல்லது 50%) நபிகளே என்று எதிர்வாதம் செய்யலாம் அல்லவா?
இந்த எண்ணிக்கை 1,24,00 நான் அறிந்தவரை குரான்,மற்றும் புஹாரி,முஸ்லிம் தொகுப்புகளில் இல்லை.வேறு தொகுப்புகளில் இருக்கிறதா என்பதா என் கேள்வி.

4.பி.ஜே இவருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் அது பற்றி

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//இஸ்லாத்தில் இணைந்தவுடன் தீண்டாமை ஒழிந்துவிடுமா ? அல்லது பவுத்தத்தி, சமணத்தில், சீக்கியத்தில் இணைந்தவர்கள் எல்லாம் தீண்டதகாதோராய் தான் இருக்கின்றார்களா ? என்பது தான் கேள்வி ...//

என் கிராமத்துக்கு பக்கத்தில் தலித் கிராமமும் உண்டு. அங்கு சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் 50 வருடங்களுக்கு முன்பு கிறித்தவத்தில் இணைந்தனர். ஒரு மாதா கோவிலும் உண்டு. அங்கு வரும் பாதர் ஒரு தலித் கிறித்தவரே! இதனை மாற்ற சொல்லி பல முறை கோரிக்கை விடுத்தும் ஒரு மாற்றமும் இல்லை. சில நேரங்களில் பாதர் வராமல் பூட்டியே கிடக்கும். மாரி மேரியானார்: ராசு ராபர்ட் ஆனார்: பெயரில்தான் மாற்றம். அதே சுகாதாரமின்மை: குடித்து விட்டு அதே கலாட்டா: வருடத்தில் ஒன்றிரண்டு கொலை அல்லது தற்கொலை: திருமணமும் அவர்களுக்குள்தான் முடித்துக் கொள்கிறார்கள்: மேல் சட்டை போடாதது: என்று அவர்களின் கதை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

அதே நேரம் எம்.ஜி.ஆர் காலத்தில் மீனாட்சிபுரம் ரஹ்மத் நகராக மாறிய இன்றைய கிராமத்தின் நிலையையும் சென்று பாருங்கள். பழைய முஸ்லிம்கள் அவர்களோடு திருமண உறவு வைத்துள்ளார்கள். பல தாழ்த்தப்பட்ட மக்கள் பள்ளியின் இமாமாகவே பணியாற்றறுகின்றனர். அரபு நாடுகளில் பலருக்கு வேலையும் கிடைத்துள்ளது. 'ஏலேய்..சாமிக்கண்ணு' என்று கூப்பிட்டவர்களெல்லாம் 'ரஹீம்பாய்' 'ரஹ்மான்பாய்' என்று அழைக்கின்றனர். சந்தேகம் இருந்தால் நேரில் சென்று பார்த்துக் கொள்ளவும்.

//அவர் எதோ பொருளியல் காரணத்துக்காக மதம் மாறினார் என்றே பலருக்குப் படுகின்றது.//

ஹஜ்ஜூக்கு சென்றது கூட தனது சொந்த பணத்தில்தான் என்கிறார். முதலில் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை இலவசமாக தந்தும் 'முடியாது' என்று பணம் கொடுத்து வாங்கிச் செல்கிறார். மருத்துவ தொழிலின் மூலம் இன்றும் பணம் சம்பாதித்து வருகிறார். தான் சுயமரியததைக் காரன் எவரிடமும் கையேந்நத மாட்டேன் என்றும் கூறுகிறார். இதற்கு மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சென்னையில் அவரிடமே நேரிடையாகவே மருத்துவ மனையில் கேட்டு தெளிவு பெறலாம்.

//யார் வேண்டுமானாலும்- எம்மதத்துக்கும் மாறலாம் .. ஆனால் மதம் மாறிய பின் ஏனைய மதங்களைப் பற்றி அவதூறுப் பரப்புவது... அம்மதங்களில் உள்ள உணர்வுகளைப் பாதிக்கச் செய்யாதா ?//

அவதூறா... உள்ளதைத்தானே சொல்கிறார். தான் கடந்து வந்த பாதைகளை ஒருவர் விளக்குவது தவறா? பல மதங்களையும் விமரிசித்து நீங்களே பல பதிவுகள் எழுதுகிறீர்களே! சம்பந்தப்பட்டவர்கள் மனம் வருந்த மாட்டார்களா? உங்களுக்க ஒரு நியாயம் பெரியார் தாசனுக்கு ஒரு நியாயமா!

//திருவாசகத்தையும் - தேவாரத்தையும் கரைத்துக் குடித்த அப்துல்லாஹ்வுக்கு ஏன் குரானை / ஹடித்களை சரியாக எடுத்தியம்பி பேச முடியவில்லை .. வயதாகி விட்டதால் மனனம் செய்ய முடியவில்லையோ ? அல்லது மொழிப் பிரச்சனையோ என்னவோ ?//

கொஞ்ச காலம் பொறுங்கள். குர்ஆன், ஹதீதுகளை இப்பொழுது முறையாக அறிஞர்கள் உதவியோடு கற்று வருகிறார். சிறந்த இஸ்லாமிய பேச்சாளராக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

suvanappiriyan said...

சார்வாகன்!

//இப்பொதைய காஃபா என்றால் எங்காவது பார்த்து இருப்பார்.19ஆம் நூற்றாண்டு ஆட்டோமான் கால்த்து காஃபா என்றால் காலப் பிரயாணம் செய்தாரா?//

இஸ்லாம் ஒரு கடல். பல தலைமுறைகளாக இஸ்லாமியர்களாக இருக்கும் பலரே சில இடங்களில் தவறான விளக்கத்தைக் கொடுத்து விடுவார்கள். பெரியார்தாசன் சில மாதங்களுக்கு முன்புதான் இஸ்லாத்தை ஏற்றவர். ஒரு அறிமுக உரைதான் அங்கு நிகழ்த்துகிறார். ஆர்வ கோளாறால் வார்த்தைகளில் சில தவறுகள் வந்து விடுவதுண்டு. இன்னும் சில ஆண்டுகளில் இந்த தடுமாற்றம் அவரிடம் இருக்காது.

இவரது பேச்சில் உள்ள சிறு சிறு தவறுகளை அனைவரும் சுட்டிக் காட்டுகின்றனர். அவரும் திருத்திக் கொள்கிறார். பீஜே எழுதிய கடிதத்தைப் பார்த்து விட்டு என் கருத்தை வைக்கிறேன்.

//அவர் படித்த புத்தகம் ஒன்றை இன்ஞீல் என்று குறிப்பிட்டு அதில் தவறு கண்டு பிடித்து மாறினார்.அது புதிய ஏற்பாடா வேறு ஏதாவதா?//

இது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். நீங்கள் சென்னையில் இருந்தால் இதை அவரிடம் நேரிடையாகவே கேட்கலாம்.

//இந்த எண்ணிக்கை 1,24,00 நான் அறிந்தவரை குரான்,மற்றும் புஹாரி,முஸ்லிம் தொகுப்புகளில் இல்லை.வேறு தொகுப்புகளில் இருக்கிறதா என்பதா என் கேள்வி.//

நான் பார்த்த வகையில் வேறு எங்கும் இல்லை. இது ஒரு செவி வழி செய்தியே!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.சுவனப்பிரியன்,
மீண்டும் நல்லதொரு இடுகை. சரமாரி கேள்விகள். சரளமான விவாதங்கள். நன்றி.

=====================================

@இக்பால் செல்வன் (சென்ற பதிவில் இட்ட எனது பின்னூட்டத்தின் தொடர்ச்சி)

இப்படி ஒரு இழிசெயலுக்கு... காரணம் கேட்கப்பட்டது.. அதுவும் உங்கள் பதிவில் வந்து கேட்டால் அது 'உங்களுக்கு இழுக்காக அமைந்துவிடுமோ' என சகோ.ஆஷிக் தன்னுடைய பதிவில் பின்னூட்டமாக்கி கேட்டார்.

வேறொரு பிலாகிலும் யாரோ கேட்டதாக நினைவு. நான் என்னுடைய பிலாகிலும் கேட்டேன்.

எல்லா இடத்திலும் அதே மழுப்பல். இங்கே ///சரி ! அதுவும் தங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால். ஒரு மின்னஞ்சல் மூலமாக வேண்டுகோள் வைத்திருந்தால். அதனை எடுத்துவிட்டு மூன்று குரங்குகளையோ, மூன்று நாய்க்குட்டிகளையோக் கூட போட்டி இருப்பேன் ..///---நாய்.. குரங்கு நீட்சி.

அந்த நீதிகதையில் வேறு என்ன என்ன கதாபாத்திரங்கள் எல்லாம் உள்ளன என்று கற்பனை செய்யும் உங்களுக்கு மட்டுமே தெரியும்.

உங்களைப்பற்றி நான் என்ன நினைத்திருந்தேனோ அட்சரம் பிசகாமல் அப்படியே ஒப்பிக்கிறீர்களே சகோ.இக்பால் செல்வன்..!

இது பற்றி இதற்கு முன் யாருமே உங்களிடம் எதுவுமே கேட்காதது போல விடுகிறீர்களே இஷ்டத்துக்கு ரீலு..!?

பின்னூட்டத்தில் உங்களுடன் இதுகுறித்து சகோதரர்கள் விவாதித்தது எல்லாம் பின்னே என்னவாம்?

அதென்ன மின்னஞ்சலில் மட்டுமே எல்லாத்தையும் சொல்ல வேண்டுமா? அப்படி கேட்டால், கேட்டது யாருக்கு தெரியும்..?

நீங்கள் சொல்லப்போவதில்லை என்பது என் எண்ணம். ஆனால், யாராவது மன்னிப்பு கேட்டால் மட்டும் அது "...******...பகிரங்க மன்னிப்பு..." என்று அடுத்த உங்களின் சூடான இடுகையாக திரட்டிகளில் இடம்பெறும்..!

உங்களின் இதுபோன்ற கீழ்த்தரமான எண்ணங்கள்தான் இப்படி திரட்டிகளின் அரங்கேறுகின்றன என்பதை ஊருக்கும் உலகுக்கும் வெட்டவெளிச்சமாக்கி உங்கள் 'நல்லவர்(?)' முகத்திரையை கிழிப்பதே அந்த எனது கண்டன பதிவின் நோக்கம்.

இதற்கு இன்னொரு பின்புலமும் உண்டு.

சகோ.நிருபன் பிளாக்கில் ஈழ பதிவில் தமிழரை தனி இனமாக கொண்டு தனித்தீர்வு கேட்டால்... தமிழ் பேசும் முஸ்லிம்களை தனி இனமாக கருதி ஒதுக்கி வைத்திருப்பதால் அவர்களுக்கும் அதே மாதிரியான தனித்தீர்வுதானே பதிலாக அமைய முடியும்...? ஒருஇனத்தவருக்கு 'தனிஈழம்' தான் 'தீர்வு' என்றால் மற்றஇனத்தவருக்கும் 'தனி....(?)' கூடாது..? என (என்ன சொல்வது என்று யோசித்து.. நானே ஒரு புதிய வார்த்தையை அங்கே அறிமுகப்படுத்தினேன்)

அதற்கு பின்னர் அது தவறாக உங்களால் வியாக்கியானப்படுத்தப்பட நீண்ட விளக்கங்கள் பல கொடுத்தேன். அதெ எல்லாம் கடாசிவிட்டு 'ஈழஸ்தான்' என்றும் ஒரு வரியை வைத்து மேப்பு மேப்பாக பதிவு போட்டீர்கள்..! இது நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்று கட்டியம் கூறும்.

இவ்வளவு சந்தர்ப்பவாத, பிழைப்புவாத, கொள்கை என்று ஏதுமில்லாத ஒரு கர்வம் தலைக்கேறிய பதிவரிடம் இனி அந்த "அனானி படம்" குறித்து விவாதிப்பதில் எந்த பலனும் இருக்காது என்று எனக்கு நன்கு புரிந்துவிட்டது. அதனால்தான் நேரிடையாக போட்டேன் ஒரு கண்டன பதிவு.

என் செயலுக்கு காரணம் நீங்கள் தான். உங்களின் தொடர்ச்சியான தான்தோன்றித்தனமான செயல்கள்தான்.

--தொடர்ச்சி...
அடுத்த பின்னூட்டத்தில்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ இக்பால் செல்வன்,


சரி... இப்போது உங்களின் 'பகிரங்க மன்னிப்பு' மேட்டருக்கு வருவோம்.


//இவற்றை செய்தால் நிச்சயம் முகமதுவின் படங்களை(?) (ஒன்றுதானே..?) நீக்கிவிடுவேன் .. அதே போல வேறுப் படங்களை இடவும் மாட்டேன்.//

சகோ.இக்பால் செல்வனின் அந்த மூன்று வேண்டுகோள்களையும் நான் ஏற்க தயார்...அவர் பின்வரும் எனது ஆறு வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே..!

1. 'நாங்கள் என்ன பதிவு எழுத வேண்டும்', 'எதைப்பற்றி எழுத வேண்டும்', 'எப்போது எழுதவேண்டும்' என்ற "எங்களின் கட்டுப்பாடுள்ள கருத்துச்சுதந்திரத்தில்" சகோ.இக்பால் செல்வன் அவர்கள், தன் மூக்கை நுழைத்து அறிவுரை கூறுதலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி அவர் அறிவுரை கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் ஒப்புக்கொள்ளவேண்டும். அதனை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். ஏனென்றால்... நாங்கள் இனி இஸ்லாமிய பதிவுகள் போட்டால் அது இக்பால் செல்வன் சொன்னபடி இவர்கள் எழுதியதோ என்று படிப்போர் சந்தேகம் கொண்டு விடக்கூடாது அல்லவா..? அதற்குத்தான்.

2. ஏனையோர் செய்தவை எல்லாம் இருக்கட்டும். எனது இஸ்லாமிய சகோதர்களுக்கான தன்னுடைய எதிர் பதிவில் உள்ள பன்றிகள் படத்தை(அதற்கு இதுவரை அறிவிற்கு பொருந்தும் சரியான பதிலை அளிக்காத நிலையில்..) சகோ.இக்பால் செல்வன் அவர்கள் அப்பதிவில் இருந்து நீக்க வேண்டும் - இதற்கு ஒரு சிறு பகிரங்க மன்னிப்பைக் கோர வேண்டும். ( அவர் பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ - அதனை எனதுப் பதிவில் பயன்படுத்த அனுமதிக்கவும் வேண்டும் )

3. குரானில் சொல்லப்பட்ட அல்லது இஸ்லாமியர் நம்பிக்கைகளை தாராளமாய் விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு. அப்படி, சகோ.இக்பால் செல்வன் அவர்கள் விரும்பினால் - அதனை குரானின் அடிப்படையில் கேள்விகளை வைக்க வேண்டும். அப்படி கேள்விகளை வைக்காமல், அவர்கள் சொன்னது, இவர்கள் சொன்னது, இங்கே இப்படி உள்ளது, அங்கே அப்படி உள்ளது என்ற ஆதாரமற்ற அடிப்படையில் பொய் பரப்புரைக்காக இஸ்லாமிய காழ்ப்புனர்ச்சிக்காக மட்டுமே இனி பதிவுகள் எழுதக்கூடாது.

4. ஈழம் பற்றிய சகோ.நிருபன் பதிவில், எனது பல நீண்ட பின்னூட்டங்களில் நான் கூறிய பல விஷயங்களை விட்டுவிட்டு, மாற்றுச்சிந்தனைக்காக ஒரு உதாரணமாக ஈழஸ்தான் என்று கூறியதை மட்டும் சகோ.இக்பால் செல்வன் அவரது பதிவொன்றில் எடுத்துப்போட்டு என்னை ஏதோ ஈழத்தமிழர்களின் வில்லன் போல சித்தரித்திருப்பதை தவறு என்று விளக்கி எனது மற்ற பின்னூட்டங்களையும் உங்கள் தளத்தில் வெளியிட வேண்டும்.

5. இயேசுவா/மகமதா பதிவில், "அந்த அனானி புகைப்படம் நபிஅல்ல வெறும் கற்பனைதான்...", "நபி படம் என்பது உண்மை அல்ல", "பதிவிற்கு பொருந்தாத போலிப்படம்" என்று என்று நீங்களே பலமுறை, பல இடங்களில், பலரிடம் இப்பொருள்பட கூறியுள்ளீர்கள். மிகவும் நன்றி சகோ.இக்பால் செல்வன் அவர்களே..! ஆக அந்த படம் நபியுடையதல்ல .. அது பொய்ப்படம் என்று பலர் உங்கள் மூலமாக அறிந்து கொண்டார்கள். ஒரு பொய்யான தகவலை உங்கள் வாசகர்களிடம் நீங்கள் பதிவிட்டு பரப்பியதற்காக உங்கள் வாசகர்களிடம் ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு, குற்ற நெஞ்சின் பிராயச்சித்தமாக அந்த படத்தை நேர்மையான முறையில் நீக்கிவிட வேண்டும். காக்கா பற்றிய பதிவில் அந்த பறவையின் படம் கிடைக்காவிட்டால் பூனையின் படத்தை போட்டு பதிவு எழுதியதற்கு ஒப்பான செயலுக்கு ஒரு மன்னிப்பு வேண்டல். அவ்வளவுதான்.

6. ஆனால், கல்வியியல், ஆராய்ச்சியல் ரீதியாக முகமதுவின் படங்கள் உள்ள தளங்களுக்கு ( விக்கிப்பீடியா போல ) தொடுப்புக்களை பதிவுகளில் இடுங்கள். அதனை தடுக்க நாங்கள் யார்..? ஆனால், அந்த சுட்டிகளில்... 'எவை எவை பொய்யான ஆதாரமற்றவை..', 'எவற்றுக்கு மட்டும் ஆதாரங்கள் உள்ளன' என்பதையும் உங்கள் வாசகர்களுக்கு அந்த சுட்டியின் அடியிலேயே அறிவித்து விடுங்கள். இதுதான் வாசகர்களை ஏமாற்றாத நேர்மை.

சகோ.இக்பால் செல்வன் அவர்கள், எனது மேற்படி ஆறு வேண்டுகோள்களையும் ஏற்றுக்கொண்டால், அதனை ஏற்றுக்கொண்டாதாக அறிவித்து அதன்படி அவர் நடது காட்டினால், அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்த எனது "பதிவுலக.......கொடுக்கி" என்ற பதிவை இன்ஷாஅல்லாஹ் நீக்கிவிடுகிறேன். சகோ.இக்பால் செல்வனின் அந்த மூன்று வேண்டுகோள்களையும் நான் ஏற்க தயார்..!

புரிதலுக்கு மிக்க நன்றிகள்

saarvaakan said...

நண்பர் சுவன பிரியன்,
//ஆர்வ கோளாறால் வார்த்தைகளில் சில தவறுகள் வந்து விடுவதுண்டு. இன்னும் சில ஆண்டுகளில் இந்த தடுமாற்றம் அவரிடம் இருக்காது. //
ஏற்கிறேன்.விமர்சனம்(பதிவுகள்) செய்யும் போது கூட இந்த கவனம் தேவை பலமுறை எனது பதிவுகளை நானே படித்து வார்த்தைகளை,வாக்கியங்களை மாற்றி இருக்கிறேன்.பல தளங்களை பார்த்து எனக்கு தோன்றுவது பிறருக்கும்(சிலருக்காவது) தோன்றும் என்றெண்ணினால் மட்டுமே பதிகிறேன்.அவருக்கு விருப்பமான மதம் பின்பற்ற எல்லா உரிமையும் உண்டு.பிரச்சாரம் செய்யும் போது அது விமர்சிக்கப் படுவது தவிர்க்க முடியாது.

//பீஜே எழுதிய கடிதத்தைப் பார்த்து விட்டு என் கருத்தை வைக்கிறேன்.//
படியுங்கள். கருத்திட அவசியம் இல்லை .பி.ஜே ஏதோ கோபத்தில் அவருக்கு எழுதிய கடிதம் என்று நினைக்கிறேன்.படித்திருப்பீர்கள் என்று நினைத்து கேட்டு விட்டேன்.
//இந்த எண்ணிக்கை 1,24,000 நான் அறிந்தவரை குரான்,மற்றும் புஹாரி,முஸ்லிம் தொகுப்புகளில் இல்லை.வேறு தொகுப்புகளில் இருக்கிறதா என்பதா என் கேள்வி.//
ஒருவேளை அறிந்தால் பதிவிடுங்கள்.நன்றி

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ இக்பால் செல்வன்...

said...//ஆனால் மதம் மாறிய பின் ஏனைய மதங்களைப் பற்றி அவதூறுப் பரப்புவது... அம்மதங்களில் உள்ள உணர்வுகளைப் பாதிக்கச் செய்யாதா ?//----ஏன் இந்த ஓர வஞ்சனை..? இது மதம் மாறியவர்களுக்கு மட்டும்தானா..? மதமே இல்லை என்று தமக்கென எக்கொள்கையும் இல்லாத இறை மறுப்பாளர்களுக்கு வேண்டாமா..? வேண்டாமா..? வாண்டாம..?

==================================

@இக்பால் செல்வன் said...///பெரியார் சொன்னார் இஸ்லாத்துக்கு மாறுகிரீர்கள் / மாறுங்கள் என்கின்றார் வாஞ்சூர் .. அதே பெரியார் கடவுளே இல்லை என்றார். அது மட்டும் தப்பாத் தெரியுதா உங்களுக்கு ?

உங்க கதை என்ன கதைனே புரியலையே ?///

---ஹலோ...! இது உங்க கதைதான்..! ஈரான் காரன் சொன்னான்னு சொல்லி இதுதான் நபிப்படம்னு நம்பிவிட்ட நீங்கள்...

"அல்லாஹ் ஒருவனைத்தவிர வணக்கத்திற்குரிய கடவுள் வேறில்லை" என்று..அத்தே ஈரான் காரன் சொல்றானே.... ஏத்துக்க வேண்டியதுதானே...?

இப்ப கதை புரிஞ்சிருக்காதே...

ம்ம்ம்!?

சூப்பரப்பு...

Anonymous said...

கடவுள் என்று நினைத்து மனம் உருகி மண்ணை வணங்கினால் கூட கடவுளைச் சென்றடைய வேண்டும். இறைவன் எல்லாவற்றையும் விடப் பெரியவன் என கூற்று நிஜமென்றால் இது கூட அவருக்கு தெரியாதா ? என்னை நீ பெயர் மாற்றி சிவன் அல்லது இயேசு அல்லது அல்லா என வணங்குகிறாய் அதனால் உனக்கு தண்டனை அளிப்பேன் என்று எந்த முட்டாள் கடவுளும் சொல்லியிருக்க மாட்டார். அப்படி இருந்தால் அது இறைவனின் வாக்காக இருக்க முடியாது.

அப்படியிருக்கு நான் வணங்கும் கடவுள் தான் நிஜம் என்று சொல்லி கொள்வது அடி முட்டாள் தனம் !

suvanappiriyan said...

அலைக்கும் சலாம்!

பல விளக்கங்களை அளித்த சகோ. ஆஷிக், சகோ வாஞ்சூர் இருவருக்கும் நன்றிகள் பல.

suvanappiriyan said...

கேள்வி: பிற மதங்களில் உள்ள அறிவு ஜீவிகள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இஸ்லாம் மதம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: உலகத்தில் உள்ள எல்லா வேதங்களையும் அடுக்கி வைக்கலாம். பகவத் கீதை, பைபிள் என்று எல்லாவற்றையும் வைத்து நாம் அறிவுபூர்வமாக ஆராய்ச்சி செய்து பார்த்தால், நேரடியாக இறைவன் சொன்னதாக எந்த வேதமாவது இருக்கிறதா?
முனுசாமி சொன்னதாக ராமசாமி கேட்டதாக, சின்னசாமி நம்பியதாக, கந்தசாமி அறிந்ததாக அது ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு தாத்தாக்கள் சொல்ல பேரன்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர, நேரடியாக எந்த இறைவனும் சொன்னதாக இல்லை.
இஸ்லாம் மதத்தில் மட்டுமே இறைவன் நேரடியாக சொல்லியிருக்கிறான். அதனால்தான் நான் இந்த களத்தில் இறங்கியிருக்கிறேன். இதற்காக பிரச்சாரம் செய்கிறேன்.
இந்து மதத்தில் பகவத் கீதைக்கு சங்கராச்சாரியார், நித்யானந்தா என்று ஆளாளுக்கு ஒரு அர்த்தம் சொல்லுகிறார்கள். ஆனால் ஒரு கமா, ஒரு ஃபுல் ஸ்டாப் கூட மாறாமல், 1600 வருடங்களாக இருக்கும் வேதம் எது? அப்படியென்றால் அறிவு ஜீவிகள் எந்த பக்கம் வரணும்.

கேள்வி: இஸ்லாமிய ரீதியாக உங்களது எதிர்கால திட்டம் என்ன?

பதில்: இறைவன் நாடுகிற வழிகளிலெல்லாம் இருக்கும். நான் என்னவாக இருக்க வேண்டும் என்று இறைவன் எப்படி நினைக்கிறானோ தெரியவில்லை. ஆனால் நான் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். தொழுகை, நோன்பு, ஹச் பயணம் போவது உள்ளிட்ட ஐந்து கடமைகளும் யாருக்காவும் இல்லை. எனக்காவும் இறைவனுக்காகவும் செய்கிறேன். இது யாருக்கும் எதிரானது கிடையாது. நான் யாசிக்கப் போகிறேன். இறைவனை புகழப் போகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளும் படி மன்றாடப் போகிறேன். இதைத்தான் நான் தொழுகையில் செய்யப்போகிறேன்.
இதேபோல் சமூகத்தில் நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், நான் ஏற்றுக்கொண்டது போலவே, வழிதவறி நடப்பவர்களை இந்தப் பக்கம் இழுப்பதற்கு என்னுடைய வாக்கு வங்கியை இறைவன் பயன்படுத்திக்கொள்வான் என்று நம்புகிறேன்.

saarvaakan said...

நண்பரே,

// 1600 வருடங்களாக //
மன்னிக்கவும். 1400+ மட்டுமே.இது அவர் சொன்னாரா? இல்லை தட்டச்சு செய்யும் போது ஏறப்ட்ட தவறா?
___________
/வழிதவறி நடப்பவர்களை இந்தப் பக்கம் இழுப்பதற்கு என்னுடைய வாக்கு வங்கியை இறைவன் பயன்படுத்திக்கொள்வான் என்று நம்புகிறேன்./
நீங்கள் சொலவ்து அனைத்துக்கும் முடிந்தவரை ஆதாரபூர்வமாக் வெளியிடுங்கள் .என்ன நினைத்து பதிவிடுகிறீர்களோ அதே சிந்தனை படிக்கும்சிலருக்காவது ஏற்பட்டால் மட்டுமே அது சரி.ஒருவேளை சிலர் இதனை பரிசீலிக்க்கலாம்.ஏற்கலாம்.நன்றி

நிரூபன் said...

சகோ, பதிவினைப் படித்தேன், ஓட்டும் போட்டேன்,
ஆனால் இந்த வாதம் பற்றி,
என் மர மண்டைக்கு எல்லாமே குழப்பமாக விளங்குகிறது.
என் சிற்றறிவினை வைத்து, இவ் வாதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை, மன்னிக்கவும்,

தருமி said...

//இங்குள்ள பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதித்து அனைவரும் ஆட்சி செய்ததால்தான் அவர்களால் கிட்டத்தட்ட தொள்ளாயிரம் வருடங்கள் இந்தியாவை ஆள முடிந்தது.//

ஓ! அப்படியா!

Anonymous said...

எந்த இஸ்லாமிய நாட்டிலாவது பெரியார் சிலையை பீடத்தில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற வாசகம் பொறித்து வைக்க முடியுமா.
முடியாதென்றால் ஏன். பெரியார் சொன்னதில் உங்களுக்கு ஏது பிரச்சாரம் செய்ய வசதியோ அதை மட்டும் சொல்கிறீர்கள். அதே பெரியார் செய்த விமர்சனங்களை மறந்து விடுகிறீர்கள்.

இஸ்லாமிய நாடுகளில் முஸ்லீம்கள் பிற மதங்களுக்கு மாற முடியுமா.
முடியாதென்றால் இந்தியாவில் மட்டும் ஏன் மத மாற்றம் செய்யத் துடிக்கிறீர்கள்.

இறைநிந்தனை ஏன் பாகிஸ்தானில் குற்றமாக கருதப்படுகிறது.

இஸ்லாத்திற்கு பிரச்சாரம் செய்யும் பெரியார்தாசன் இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமைகளை பெற்றுத் தர முயல்வாரா. இல்லை முஸ்லீம் முதலாளிகள் சுரண்டும் போது தொழிலாளிகளுக்காக குரல் கொடுப்பாரா.

Anonymous said...

உலகில் அடிமை முறை இருந்த நடுகளில் இஸ்லாமிய நாடுகளும் உண்டு. இன்றும் பாகிஸ்தானில் கொத்தடிமை முறை உள்ளது. அடிமை வணிகம் செய்ததில் முஸ்லீம்களும் உண்டு.எனவே அடிமை முறையை ஒழித்தது இஸ்லாம் என்பது பொய்.

Anonymous said...

கடவுள் சொன்னதாக சொல்லிவிட்டால் அதை நம்பிவிட வேண்டுமா. புத்த மதததில் அப்படி ஒரு வேதமே இல்லையே. புத்தர் சொன்னதுதானே பதிவாகியுள்ளது.
வேதம் இல்லாத மதம் உள்ளதே.

suvanappiriyan said...

சார்வாகன்!

//நீங்கள் சொலவ்து அனைத்துக்கும் முடிந்தவரை ஆதாரபூர்வமாக் வெளியிடுங்கள் .என்ன நினைத்து பதிவிடுகிறீர்களோ அதே சிந்தனை படிக்கும்சிலருக்காவது ஏற்பட்டால் மட்டுமே அது சரி.ஒருவேளை சிலர் இதனை பரிசீலிக்க்கலாம்.ஏற்கலாம்.நன்றி//

புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கு சில விஷயங்களில் தகவல் பிழை ஏற்படுவது உண்டு. இது தட்டச்சு பிழையா, அல்லது பெரியார்தாசனின் பிழையா என்பது தெரியவில்லை. அந்த பேட்டி வேறொரு தளத்திலிருந்து பேஸ்ட் பண்ணப் பட்டது. தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

suvanappiriyan said...

அனானி!

//எந்த இஸ்லாமிய நாட்டிலாவது பெரியார் சிலையை பீடத்தில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற வாசகம் பொறித்து வைக்க முடியுமா.
முடியாதென்றால் ஏன். பெரியார் சொன்னதில் உங்களுக்கு ஏது பிரச்சாரம் செய்ய வசதியோ அதை மட்டும் சொல்கிறீர்கள். அதே பெரியார் செய்த விமர்சனங்களை மறந்து விடுகிறீர்கள்.//

“இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.
ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்’ என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம்.” -தந்தை பெரியாரின் மேடைப் பேச்சு

இக்பால் செல்வன்!

//பெரியார் சொன்னார் இஸ்லாத்துக்கு மாறுகிரீர்கள் / மாறுங்கள் என்கின்றார் வாஞ்சூர் .. அதே பெரியார் கடவுளே இல்லை என்றார். அது மட்டும் தப்பாத் தெரியுதா உங்களுக்கு ?

உங்க கதை என்ன கதைனே புரியலையே ?//
ஆத்திகராக இருந்த பெரியாரை கடவுள் நிந்தனைக்கு இட்டு சென்றதே இந்து மதம்தான். சாதி வேற்றுமையும், கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததும், வேதங்களிலேயே மனிதர்களை பிரித்து வைத்ததும்தான் அவரை நாத்திகத்தின் பக்கம் இழுத்துச் சென்றது. அதே இந்து மதக் கொள்கைகள்தான் உங்களையும் பக்கம் பக்கமாக நாத்திகக் கருத்துக்களை எழுதச் சொல்கிறது. எனவே இதில் பெரியாரை குறை சொல்ல முடியாது.

Anonymous said...

//முனுசாமி சொன்னதாக ராமசாமி கேட்டதாக, சின்னசாமி நம்பியதாக, கந்தசாமி அறிந்ததாக அது ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு தாத்தாக்கள் சொல்ல பேரன்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர, நேரடியாக எந்த இறைவனும் சொன்னதாக இல்லை.//
முகமதுவின் வார்த்தைகளாக நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் ஹதீஸ்களும் இந்த வகையை சேர்ந்தது தானே, என் தந்தை சொன்னார், அவர்க்கு என் தாத்தா சொன்னார், என் தாத்தாவுக்கு அவரது தகப்பனார் சொன்னார் என்ற ரீதியில் தொகுக்கபட்டவைதானே ஹதீஸ்களும். ராமசாமி, சின்னசாமி அறிந்ததாக சொல்லப்படுவது பொய் இந்த ஹதீஸ்கள் எந்த அளவிற்கு உண்மை என்று ஏற்று கொள்வது. எந்த அடிப்படையில் ஹதீஸ்களை வைத்து விளக்கம் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.
//இந்து மதத்தில் பகவத் கீதைக்கு சங்கராச்சாரியார், நித்யானந்தா என்று ஆளாளுக்கு ஒரு அர்த்தம் சொல்லுகிறார்கள். ஆனால் ஒரு கமா, ஒரு ஃபுல் ஸ்டாப் கூட மாறாமல், 1600 வருடங்களாக இருக்கும் வேதம் எது? அப்படியென்றால் அறிவு ஜீவிகள் எந்த பக்கம் வரணும்.//
குரானுக்கும் ஹதீசுகும் கூட பலரும் பல வித விளக்கங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். பி.ஜே கூட குரானுக்கு அவரும் தனியாக ஒரு மொழி பெயர்ப்பு வைத்திருக்கிறார். எங்கள் ஊர் பகுதியில் சுன்னத் ஜமா அத் என்ற அமைப்பினரும் பி. ஜே வின் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரும் தங்களுக்குள் இந்த குரான் ஹதீஸ்களை பற்றி சண்டை போடுவதற்கென்றே அடிக்கடி போஸ்டர் அடித்து கூட்டம் நடத்துவார்கள். தங்களுக்குள் தங்கள் வேதத்தை பற்றிய கருத்துகளுக்கு அடித்துகொள்ளும் இவர்கள் தான் பிறருக்கு அறிவுரை சொல்லுகிறார்கள். பகவத் கீதையில் மனித கரம் பட்டு விட்டது என்று சொல்ல வருகிறீர்களா. பகவத் கீதையும் அருளப்பட்ட நாளில் இருந்து கமா, ஃபுல் ஸ்டாப் மாற்றாமல் அப்படியேதான் இருக்கிறது,. .

M. JAYA PRAKASH
KANYAKUMARI

suvanappiriyan said...

M. JAYA PRAKASH
KANYAKUMARI

//முகமதுவின் வார்த்தைகளாக நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் ஹதீஸ்களும் இந்த வகையை சேர்ந்தது தானே, என் தந்தை சொன்னார், அவர்க்கு என் தாத்தா சொன்னார், என் தாத்தாவுக்கு அவரது தகப்பனார் சொன்னார் என்ற ரீதியில் தொகுக்கபட்டவைதானே ஹதீஸ்களும். ராமசாமி, சின்னசாமி அறிந்ததாக சொல்லப்படுவது பொய் இந்த ஹதீஸ்கள் எந்த அளவிற்கு உண்மை என்று ஏற்று கொள்வது. எந்த அடிப்படையில் ஹதீஸ்களை வைத்து விளக்கம் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.//

சொன்ன அனைவர்களின் வரலாறும் பாதுகாக்கப் பட்டுள்ளது. இவர் சமூகத்தில் உண்மை பேசியவரா! மனநலம் பிறழாமல், ஞாபகசக்தியுடன் ஒரு விஷயத்தை சொல்பவரா, என்று அவரின் வாழ்வு அலசப்பட்டு அவர்களின் வரலாறு இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தவறான நபர் சொல்லக் கூடிய ஹதீதுகள் நம்பகமானவையல்ல என்று ஒதுக்கி விட்டோமே!

மேலும் குர்ஆனில் இந்த பிரச்னையும் இல்லை. முகமது நபி காலத்தில் எந்த முறையில் எத்தனை வசனங்கள் இறங்கியதோ அது தான் இன்று வரை உலகம் முழுவதும் பின் பற்றப்படுகிறது.

//குரானுக்கும் ஹதீசுகும் கூட பலரும் பல வித விளக்கங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். பி.ஜே கூட குரானுக்கு அவரும் தனியாக ஒரு மொழி பெயர்ப்பு வைத்திருக்கிறார். எங்கள் ஊர் பகுதியில் சுன்னத் ஜமா அத் என்ற அமைப்பினரும் பி. ஜே வின் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரும் தங்களுக்குள் இந்த குரான் ஹதீஸ்களை பற்றி சண்டை போடுவதற்கென்றே அடிக்கடி போஸ்டர் அடித்து கூட்டம் நடத்துவார்கள். தங்களுக்குள் தங்கள் வேதத்தை பற்றிய கருத்துகளுக்கு அடித்துகொள்ளும் இவர்கள் தான் பிறருக்கு அறிவுரை சொல்லுகிறார்கள்.//

அறிவை தேடுவதில் ஒருவருக்கொருவர் மாறபட்டாலும் குர்ஆனையும் ஹதீதையும் தூக்கி போட்டால் எவரின் பதிலும் அங்கு பயனற்று போய் விடும். மேலும் எவ்வளவுதான் சண்டையிட்டாலும் இருவருக்கும் ஒரு குர்ஆன்தான்: ஒரு நபிதான்: ஐந்து வேளை தொழுகைதான்: அனைவருக்கும் ஹஜ் ஒனறுதான்.

நடைமுறையில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. சிலர் நாகூர் தர்காவுக்கும் போகலாம் என்பார். ஒருவர் தொப்பி போடாமலும் தொழலாம். அதில் தவறில்லை என்பார். இப்படி அரிதான சில விஷயங்களே!

//பகவத் கீதையில் மனித கரம் பட்டு விட்டது என்று சொல்ல வருகிறீர்களா. பகவத் கீதையும் அருளப்பட்ட நாளில் இருந்து கமா, ஃபுல் ஸ்டாப் மாற்றாமல் அப்படியேதான் இருக்கிறது,. . //

நான் சொல்லவில்லை: சொன்னவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.