Followers

Monday, February 03, 2014

கோட்சே உயிருடன் இல்லை - கோட்சேயிசம் இன்றும் உள்ளது!

சென்னை, ஜன.31- கோட்சே இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கோட்சேயின் தத்துவமான இந்துத்துவா இன்றும் இருக்கிறது - எச்சரிக்கையாக இருந்து முறியடிக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னைப் பெரியார் திடலில் மாணவர் இந்தியா எனும் அமைப்பில் நேற்று (30.1.2014) நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் வரைந்த கருத்தோவியம் வருமாறு:

1. காந்தியார் சுடப்பட்டது ஏன்?

காந்தியார் சுடப்பட்டது ஏன்? என்பதுபற்றி தந்தை பெரியார் தனது நாட்குறிப்பிலே குறித்து வைத்திருந்தார். அது இதோ:

இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947 இல்; காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948 இல்; அதாவது சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947 இல். காந்தி கொல்லப்பட்டது 30.1.1948 இல். அதாவது அவர் நம் நாடு மத சார்பற்றது என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால் இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளது மிகவும் முக்கிய மானது.

(ராமராஜ்ஜியம் அமைக்கப் போகிறேன் என்று சொன்னபோது காந்தியாரை மகான் ஆக்கினார்கள். நான் சொன்ன ராமன் வேறு; இராமாயண ராமன் வேறு என்று சொன்னபோது, அவரை துர் ஆத்மா ஆக்கி விட்டார்கள் என்பதுதான் உண்மை).

2. காந்தியாருக்குப் பார்ப்பனர்கள்மீது ஏன் கோபம்?

சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) இருந்தார். பொது வாழ்க்கையில் மிகவும் தூய்மையானவர்; பக்த சிரோன்மணிதான்; மாதம் தவறாமல் திருவண்ணாமலை ரமண ரிஷியைத் தரிசிப்பவர்தான். அவரிடம் சமூக நீதிப் பார்வை இருந்தது. முழுக்க முழுக்கப் பார்ப்பனர்கள் - கல்வி, உத்தியோகங் களைத் தாங்களே அனுபவித்துக் கொண்டு இருந்தனர். இதனால் பார்ப்பனர்களுக்கு ஆத்திரம்; விளைவு காந்தி யாரிடம் காவடி எடுத்தார்கள். ஓமந்தூர் ராமசாமி தாடி யில்லாத ராமசாமி நாயக்கர் என்று புகார் சொன்னார்கள்; எல்லா உத்தியோகங்களையும் பார்ப்பனர் அல்லா தாருக்குத்தான் கொடுக்கிறார். பார்ப்பனர்கள் வஞ் சிக்கப்படுகிறார்கள் என்று குற்றப்பத்திரிகை படித் தார்கள். காந்தியார் அவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.

அதற்குப்பின் முதலமைச்சர் ஓமந்தூரார் காந்தி யாரைச் சந்தித்து உண்மை விவரங்களைக் கூறினார். பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்குமேல் எத்தனைப் பங்கு அனுபவிக்கிறார்கள் என்பதையும் புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார். காந்தியாருக்கு உண்மை நிலவரம் புரிந்துவிட்டது.

அதற்குப்பின் தங்களைச் சந்திக்க வந்த பார்ப் பனர்களிடம் சொன்னார், உங்கள் பங்குக்குமேல் அதிகம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுக் கடைசியாக ஒரு கேள்வி கேட்டார்

பார்ப்பனர்களைப் பார்த்து, பிராமணர் களுக்குத் தர்மம் வேதம் ஓதுவதுதானே? உங்களுக்கு ஏன் பிணம் அறுக்கும் டாக்டர் வேலை? உங்களுக்கு ஏன் டி ஸ்கொயர்? போய் உங்கள் வருணத் தொழிலைச் செய்யுங்கள் என்று காந்தி யார் கூறியதுதான் தாமதம், பார்ப்பனர் கள் ஒரு புள்ளி வைத்துவிட்டனர் அப்பொழுதே!

சரி இனிமேல் காந்தி நமக்குச் சரி வரமாட்டார். அவர் செல்வாக்குப் பார்ப் பனர்களுக்கு இனிப் பயன்படப் போவ தில்லை என்று தீர்க்கமாக முடிவு செய்து, காந்தியாரை விட்டு வைக்கக்கூடாது என்று முடிவு கட்டிவிட்டனர்.

3. வானொலியில் என்ன பேசினார் பெரியார்?

உலக மக்கள் எல்லோராலுமே போற்றப்படும் பெரியார் காந்தியார் முடிவெய்திய சேதியானது எல்லா மக்களுக்குமே துக்கத்தைக் கொடுக்கக் கூடிய சேதியாகும். இவரது முடிவு இந்த நாட்டுக்கு பரிகரிக்க முடியாத நஷ்டம் என்பதோடு, இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அவர் மறைய நேரிட்டது எந்த விதத்திலும் சகிக்க முடியாத சம்பவம். அவர் உலகத்தில் உயிர் வாழும் பிரபலஸ்தரான மாபெரும் பெரியார்கள் வரிசையில் ஒரு பெரியாராய் இருந்தார். அவரைப் போல் பொதுத் தொண்டையே தனது வாழ்நாள் தொண்டாகக் கொண்ட வர்களையும், தனக்கென எதுவுமே இன்றி ஒரு லட்சியத்திற்கே வாழ்ந்து வந்தவர் களையும் காண்பது மிகவும் அரிதான காரியமாகும். தென் ஆப்பிரிக்காவில் அவர் பெற்ற வெற்றியே இந்திய மக்களின் மதிப்பையும், பின்பற்றுதலையும் அவருக்கு வலியக் கிடைக்கச் செய்தது.
கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒரே லட்சியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்பதும், அதில் ஏற்படும் எப் படிப்பட்ட கஷ்ட நஷ்டங்களையும், வெற்றி தோல்விகளையும் லட்சியம் செய்யாமல், மற்றவர்கள் என்ன சொல்வார்கள், எப்படி நினைப்பார்கள் என்பதைப்பற்றியும் கவலை இல்லாமல் தொண்டாற்றுவது என்பதும் எல்லோராலும் ஆகும் காரியம் அல்ல. இப்படிப்பட்ட ஒருவருக்கு இந்தக் கோரமான முடிவு ஏற்பட்டது. இந்த நாட்டின் மதிப்பைக் கெடுக்கக்கூடியதும், இயற்கைக்கு விரோதமானதுமான வாய்ப்பு என்பதில் சிறிதும் அய்யமில்லை. அதிலும் காந்தியார் யாருக்காக, எந்த மக்களுக்காக உயிர் வாழ்ந்தாரோ, அல்லும் பகலும் இடையின்றி பாடுபட் டாரோ, அவர்களாலேயே இந்த முடிவு ஏற்பட்டதென்றால், இது வெகுவெகு வெறுக்கத்தக்க காரியம். இவ்விழிதர மான காரியத்துக்கு சுட்டவன் ஒருவனே பொறுப்பாளி என்று என்னால் கருத முடியவில்லை.

பொதுவாகவே இந்நாட்டில் பொது ஒழுக்கம் மோசமான தன்மை அடைந்து விட்டதை இச்சம்பவம் காட்டுகிறது. ஒரு நாகரிக நாட்டில் இப்படிப்பட்டவருக்கு இந்த மாதிரி சம்பவம் ஏற்படுவதென்பது சிறிதும் ஏற்க முடியாத காரியமாகும்.

எனவே, இப்படிப்பட்ட பரிதாபகரமான முடிவானது நமக்கு ஒரு படிப்பினையாகி, இப்படிப்பினை மூலமாவது இந்த நாட்டில் அரசியலின் பேராலும், மத இயலின் பேராலும், இன இயலின் பேராலும் கருத்து வேற்றுமைக்காக கலவரங்களும், கேடுகளும், நாசங்களும் மூட நம்பிக்கைப் பிடிவாதங்களும் ஏற்படுவதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லாமல் அறிவுடைமையோடும் வாழுபவர்களாக மக்கள் நடந்து கொள் வார்களேயானால் அதுவே பரிதாபகர மானதும், வெறுக்கத்தக்கதுமான முடிவை எய்திய அப்பெரியாருக்கு நாம் காட்டும் மரியாதையும், நன்றியறிதலுமாகும். திராவிட மக்கள் இதையறிந்து எப்படிப் பட்ட நிலையிலும் அமைதியுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டு மென்பது எனது விண்ணப்பம்.
(நெருக்கடியும், பதற்றமும் நிறைந்த ஒரு காலகட்டத்தில் தந்தை பெரியார் எவ்வளவுப் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொண்டுள்ளார் என்பதைக் கவனிக்கவேண்டும்).

காந்தியாரைச் சுட்டுக்கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று பரப்பிவிட்டார்கள். இதன் காரணமாக நாட்டின் பல பாகங் களில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் மூண்டன. வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் தந்தை பெரியாரின் வானொலி உரை அமைதியை ஏற்படுத்தியது. வட மாநிலத்தில் குறிப் பாக பம்பாயில் பார்ப்பனர்கள் தாக்கப் பட்டனர். தீ வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மொரார்ஜி தேசாய் தனது வாழ்க்கை வரலாறு நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

4. பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?

காந்தியாரை பார்ப்பன சக்திகள், இந்துத்துவா வெறியர்கள் கொன்றது ஒரு திட்டமிட்ட சதியின் அடிப்படையில் தான். கோட்சேயின் பின்னணியில் இருந்தவர் வி.டி.சவர்க்கார்தான்.

இதுபற்றி காந்தியாரின் கொள்ளுப் பேரன் துஷார் ஏ.காந்தி என்பவர் ‘‘Let’s Kill Gandhi’’
என்ற நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அதில் தெளிவாகவே குறிப்பிட் டுள்ளார் காந்தியாரைக் கொன்றவர்கள் பார்ப்பனர்கள் என்று.

இந்து மகாசபையிலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பார்ப்பனர்களே நிறைந் திருந்தனர். அவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். வகுப்புகளற்ற, ஜாதியில்லாத ஓர் இந்தியச் சமுதாயத்தை உருவாக்குவதற்காக காந்தியார் ஓர் இயக்கத்தைத் தொடங்கியமைக்காகப் பார்ப்பனர்கள் அவர்மீது கடுஞ்சினம் கொண்டிருந்தனர். காந்தியார் விடுதலை பெற்ற கீழ்ஜாதி மக்களின் புத்தெழுச்சியும், அவர்களது ஜனநாயக உரிமைகளைப் பற்றிய அவர்களது புரிதலும் ஆங்கிலேய ஆட்சியில் ஆட்சித் துறையிலும், நீதித் துறையிலும் நீக்கமற நிறைந்து இவற்றைத் தங்களின் தனி உடைமையாக்கி வைத் திருந்த உயர்ஜாதியினரின் குறிப்பாகப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை அச் சுறுத்திக் கொண்டிருந்தன. 1947-க்கு முன்பு இந்தியாவில் ஒரே ஒரு பார்ப்பன அரசுதான் இருந்தது. மராட்டியத்தில் பூனாவைச் சேர்ந்த பேஷ்வாக்களின் மராத்தா பேரரசு மட்டும்தான் பார்ப்பன அரசாக இருந்தது. பூணூல் பார்ப்பனர் கள் பிரிட்டானியாவில் இந்தியாவை விட்டு வெளியேறிய அடுத்த நொடியே இந்த நிலத்தின் ஆட்சி அதிகாரம் மீண்டும் தங்கள் கைகளிலேயே வந்து விழும் என்று எப்போதும் கருதிக் கொண் டிருந்தார்கள். பேஷ்வா (பார்ப்பனர்) மரபினரின் இந்தக் கனவு காந்தியாரால் தகர்த்தெறியப்பட்டு விட்டது என்று காந்தியாரின் பேரன் எழுதியுள்ளார்.

மற்றொரு தகவலையும் காந்தியாரின் பெயரன் துசார் காந்தி தம் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையைப்பற்றியது அது. இதோ காந்தியாரின் பெயரன் எழுதுகிறார்:

கோட்சேயின் அறிக்கை உறுதியாக அவனால் எழுதப்பட்டதல்ல. ஏனெனில் மொழி ஆளுமையை அவன் ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. அந்த அறிக்கை இளகிய மனம் கொண்டவர்களையும் உணர்ச்சிவயப்படச் செய்து மாற்றும் வகையில் மிகத் திறமையாக எழுதப் பட்டிருக்கிறது. சதிகாரர்களில் ஒருவரான வி.டி.சவர்க்கார்தான் அந்த அறிக்கை யினை உருவாக்கியவர். அவர் அனல் வீசும் எழுத்தாளர். இணையற்ற பேச் சாளர். அவர்கள் சிறைப்படுத்தப்பட்ட காலத்திலும், விசாரணையின்போதும் கோட்சே சவர்க்காரோடு மிக நெருங்கிய உறவாடினான். கோட்சேயின் பெயரில் வெளியான அந்த அறிக்கையில் சவர்க் கார் எழுதுகோலின் உயிர்த் துடிப்பைக் காண முடிந்தது என்று காந்தியாரின் கொள்ளுப் பெயரன் எழுதியுள்ளார்.

உண்மையில் இந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிச் சொன்ன வர்தான் இந்த சவர்க்கார் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து வாழ முடியாது என்று முதலில் பிரிவினையை உருவாக்கியதே சவர்க்காரே தவிர முஸ்லிம்கள் அல்ல. ஆனால், முஸ்லிம்கள் தான் பிரிவினைவாதிகள், இந்தியாவைத் துண்டாடிவிட்டனர் என்று பழிபோடு வதும் இந்த இந்துத்துவா பார்ப்பனர் கூட்டம்தான்.

தேசியம் என்று சொல்லி அதன் பலாபலன் முழுவதையும் அனுபவத்த வர்கள் பார்ப்பனர்களே!

முதல் இந்தியர் நீதிபதி யார் என்றால் முத்துசாமி அய்யர்தான். முதல் துணை வேந்தர் யாரென்றால் சுப்பிரமணிய அய்யர்தான்.

திராவிடர் கழகக் கூட்டங்களில் எல்லாம் அப்பொழுது சொல்லப்படுவது மூன்று பி (‘B’ )க்கள்.

பிரிட்டீஷ், பிராமின், பனியா இந்த மூன்றும்தான்.

அந்த ‘B’ கள்! அதில் ஒன்று தொலைந் தது. இன்று மீதி இரண்டும் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டுதானிருக் கின்றன.

5. தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறை எதுவாக இருந்தது?

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரை தனி மனிதர்மீது பகையல்ல - தத்துவத்தின்மீதுதான் பகை! காந்தி யாரைப் படுகொலை செய்தபோது தந்தை பெரியார் தூண்டிவிட்டிருந்தால், இங்கு என்னவெல்லாம் நடந்திருக்கும் . மகா ராட்டிரத்தில் பார்ப்பனர்கள் தாக்கப் பட்டதுபோல இங்கு நடக்காமல் தடுக்கப் பட்டு விட்டதே!

கோட்சே என்பவன் ஒரு துப்பாக்கி - துப்பாக்கி ஒரு கருவிதானே தவிர, மூலமல்ல. அதனை இயக்கும் சக்தி எது? தத்துவம் எது? நம் கோபம் அதன்மீது தான் திரும்பவேண்டும்; அதனைக் கண்டு பிடித்து அறிவித்தவர்தான் தந்தை பெரியார்.

என் மதம், என் ஜாதி என்பதுதான் ஹிந்துத்துவா என்பது. எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் தந்தை பெரியார் தத்துவம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே வித்தியாசம் இல்லாமல் தான் பழகி வருகிறோம். மார்க்கத்தால் முஸ்லிம்கள் என்றாலும், இனத்தால் திராவிடர்களே. அண்ணன், தம்பிகளாக, மாமன் மச்சானாக ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளும் பண்பாடு இங்கு - இதற்குக் காரணம் திராவிடர் இயக்கம்தானே! மறுக்க முடியுமா? (பலத்த கைதட்டல்)!

இளைஞர்களின் கடமை என்ன?

கோட்சே இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம்; அந்தக் கோட்சேயிசம் என்பது வேறு ஒன்றும் இல்லை. இந்துயிசம்தான். அதன் ஒரு வடிவம்தான் நரேந்திர மோடி.

அவர்தான் பிரதமராக வேண்டுமாம்; காரணம் அவர் குஜராத் மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்துவிட்டாராம்.

உண்மையிலே அது ஒரு திட்டமிட்டப் பொய்ப் பிரச்சாரமே!

மேற்கு வங்காளத்தில் மம்தா விரட்டினால் டாட்டாவுக்குப் புகலிடம் குஜராத்தில்தான். ஏழை - எளிய மக்களை விரட்டி விட்டு நிலங்கள் எல்லாம் தாரை வார்க்கப் படுகின்றன.

வளர்ச்சி என்றால் யாருக்கு வளர்ச்சி? மேல்தட்டு மக்களுக்குத்தானே அங்கு வளர்ச்சி.

பணக்காரர்கள் பார்ப்பனர்கள் இவர்கள்தானே மோடியின் பின்புலமாக பலமாக இருக்கிறார்கள். அடையாளம் காண வேண்டாமா?

நம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் நடமாடும் பிரச்சார வாகனமாக மாற வேண்டும். அவர்கள் முகநூலில் புகுந்து விளையாடுகிறார்கள் என்றால், அதற்கு மேலும் நாம் செல்லவேண்டும் - அவர்களின் அகநூல் வரை ஆராய்ந்து வெளிப் படுத்தவேண்டும்.

பயங்கரவாதிகள் என்றால் ஒரு தொப்பி, ஒரு குறுந்தாடி என்று சித்தரிக்கிறார்கள். நாம் திருப்பிப் பதிலடி கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகள் என்றால் ஒரு உச்சிக்குடுமி ஒரு பூணூல், ஒரு காவி என்று அடையாளப்படுத்தவேண்டும்.

அவர்கள் பாசிசத்தைப் பரப்பக் கூடியவர்கள். நாமோ பகுத்தறிவை, சமூகநீதியை, சமத்துவத்தை, சமதர்மத்தை எடுத்து முன்வைக்கவேண்டும்.

மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்கும் நமது முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

காந்தியார் எதற்காகப் பலியானார்? அவரைக் கொன்றொழித்த கூட்டம் எது? சக்தி எது? அதன் கொள்கை என்ன? என்று பிரச்சாரப் பீரங்கியாய் முழங்கிட வேண்டும்.

- சென்னைப் பெரியார் திடலில் நேற்று மாலை மாணவர் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை (30.1.2014).

நிகழ்ச்சி

மாணவர் இந்தியா மாநிலச் செய லாளர் புதுமடம் அனீஸ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் என்.தைமிய்யா, திருமங்கலம் ஷமீம், தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த அருள் மதிவர்மன், இளையராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.

காஞ்சி வடக்கு மாவட்ட மாணவரணிச் செயலாளர் அன்சாரி நன்றியுரையாற்றினார்.

கோட்சே யார்? மகாவிஷ்ணு அவதாரம்!

முன்பு ஆனந்தவிகடன் தீபாவளி மலரில், சென்னை மாநிலக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர் சி.சாமிநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடகம் ஒன்று வெளியிடப்பட்டது.

காந்தியார் மிக அதிக அளவில் தொண்டு செய்து வந்தாராம் - அதனால் பூபாரம் தாங்கவில்லையாம். அவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்பதற்காக மகாவிஷ்ணு கோட்சே அவதாரம் எடுத்து வந்து காந்தியாரை வதம் செய்ததாக எழுதப்பட்ட நாடகம் இது. (மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியின்போது மை நாதுராம் கோட்சே என்ற நாடகத்தை முக்கிய நகரங்களில் வட மாநிலங்களில் சங் பரிவார்க் கூட்டம் அரங்கேற்றியது). நான்தான் கோட்சே பேசுகிறேன் - கோட்சே காந்தி என்ற தனி மனிதனைக் கொல்லவில்லை. மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து கோட்சே, காந்தி என்ற அரக்கனைக் கொன்றதாக நடித்துக் காட்டப்பட்டது. (ஆக, அவதாரம் என்பது பார்ப்பனர் அல்லாதாரை வதம் செய்வதற்குத்தான். அந்த நிலை இன்றுவரை தொடர்கிறது).


- மாணவர் இந்தியா கூட்டத்தில் திரு கி. வீரமணி.

Read more: http://www.viduthalai.in/headline/74449-k-veeramani-statement.html#ixzz2sGiJ7LyZ





11 comments:

ஆனந்த் சாகர் said...

முஹம்மது உயிருடன் இல்லை - முஹம்மதினிசம் இன்றும் உள்ளது!

suvanappiriyan said...

//முஹம்மது உயிருடன் இல்லை - முஹம்மதினிசம் இன்றும் உள்ளது!//

ஆம்! சக மனிதனை சூத்திரன் என்று சொல்லாமல் சகோதரன் என்று சொல்வதும், நான் தலையில் பிறந்தேன், நீ காலில் பிறந்தாய் என்று சொல்லாமல் எல்லோரும் ஆதமுடைய மக்களே என்று சொல்வதும், தமிழ் நீச மொழி என்று ஒதுக்காமல் உலக மொழிகள் அனைத்தும் இறைவனால் உருவாக்கப்பட்டவை என்றும் சொல்வது முஹமதினிசம். இது மேலும் மலர வேண்டும். முழு உலகமும் அமைதிப் பூங்காவாக மாற வேண்டும்.

Anonymous said...

// இது மேலும் மலர வேண்டும். முழு உலகமும் அமைதிப் பூங்காவாக மாற வேண்டும்.//

நல்ல நகைச்சுவை , முஹம்மதினிசம் மலர்ந்த ஆப்ரிக்க இஸ்லாமிய நாடுகளை பாருங்கள் என்னே செழிப்பு, வளமை, கல்வி வளர்ச்சி, முஹம்மதினிசம் மலர்ந்த வளைகுடா இஸ்லாமிய நாடுகளை பாருங்கள் அடடா என்ன ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். முஹம்மதினிசம் வளர்ந்த பாகிஸ்தானை பாருங்கள் என்னே அமைதி அடேயப்பா. உலகத்திற்கே மொத்தமாகவும் சில்லறையாகவும் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மலிவு விலையில் கிடைக்கிரார்களாம். என்னே முஹம்மதினிசம் செய்த மாயம்.


உலகில் ஒட்டு மொத்தமாக கல்வி அறிவு உள்ளவர்களை கணக்கெடுத்தால் முஹம்மதினிசம் மலர்ந்தவர்கள் கடைசி இடத்தில் தான் இருக்கிறார்களாம். உலகில் தங்களுக்குள்ளும் சண்டை போட்டு கொண்டு, அடுத்தவவனுக்கும் தொல்லை கொடுத்து கொண்டு ஒரு கேவல வாழ்கை வாழ்பவர்கள் அண்ணாத்தைகள் தான். எல்லாம் முஹம்மதினிசம் செய்த மாயம். இவர்கள் கால் வைக்கும் இடம் கலவரம், இவர்கள வாழும் இடம் வறண்டு போய்விடுகிறது, தரித்திர பிண்டங்கள்.


கொஞ்சம் எகிப்து, பஹ்ரைன், சிரியா, லிபியா மேலும் பல முஹம்மதினிசம் மலர்ந்த நாடுகள் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக முழு அமைதியுடன் வாழ்ந்து உலகிற்கே வழி காட்டி வருவதை சுவனப்ரியர் எப்படி மறந்து போனார்..

suvanappiriyan said...

//நல்ல நகைச்சுவை , முஹம்மதினிசம் மலர்ந்த ஆப்ரிக்க இஸ்லாமிய நாடுகளை பாருங்கள் என்னே செழிப்பு, வளமை, கல்வி வளர்ச்சி, முஹம்மதினிசம் மலர்ந்த வளைகுடா இஸ்லாமிய நாடுகளை பாருங்கள் அடடா என்ன ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.//

அமைதியாக சென்று கொண்டிருந்த ஈராக்கிலும், லிபியாவிலும், ஆப்கானிஸ்தானத்திலும் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி படை எடுத்து அந்த நாடுகi நிர்மூலமாக்கியது யார்? யூத கிறித்தவ கைக்கூலிகளே! அதற்கு முன் அந்த நாடுகள் எந்த அளவு அமைதியாகவும் வளமாகவும் சென்று கொண்டிருந்தது என்பதை அங்கு வேலை செய்தவர்கள் அறிவார்கள்.

இஸ்லாம் கூறிய வழி முறைகளை ஓரளவு நடைமுறை படுத்தி வரும் சவுதி அரேபியா, மலேசியா, போன்ற நாடுகளில் இன்று வரை அமைதி நிலவியே வருகிறது. கல்வியறிவிலும் அந்த மக்கள் முன்னே சென்று கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் இஸ்லாமிய ஆட்சியை அமுல்படுத்த ஆரம்பித்தால் அமைதி தானாக வந்து விடும். தவறு இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம். இஸ்லாத்தில் அல்ல.

SNR.தேவதாஸ் said...

கவலைப்படாதீர்கள் பாரத பிரதமர் திரு.மோடி அவா்கள் இருக்கும்போது தங்களுக்கு இந்தக் கவலை எல்லாம வேண்டியதில்லை.

வாழ்க வளமுடன் பாரத பிரதமர் திரு.மோடி
கொச்சின் தேவதாஸ்

Anonymous said...

கோட்சேயிசம் கொஞ்சமாவது உயிருடன் இருப்பதால் தான் இந்துக்களும், இந்து சமயமும் இந்த நாட்டில் வாழ முடிகிறது.

UNMAIKAL said...

//devadass snr said...
கவலைப்படாதீர்கள் பாரத பிரதமர் திரு.மோடி அவா்கள் இருக்கும்போது தங்களுக்கு இந்தக் கவலை எல்லாம வேண்டியதில்லை.

வாழ்க வளமுடன் பாரத பிரதமர் திரு.மோடி
கொச்சின் தேவதாஸ்//


மோடி ஒரு கொலைகார வெறிநாய் - குமுதம்!

மோடி இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை - ‍‍ குமுதம்

மோடியின் முகமூடியை கிழித்தெறியும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாலன்.

எந்த கோணத்திலிருந்து எப்படி பார்த்தாலும் மோடி ஒரு கிரிமினல் மாஃப்பியா. பயங்கரவாதி ஒரு சைக்கோ. நரபலி மோடி.

இந்த உரையை எல்லோரும் முழுவதும் கண்டிப்பாக கேளுங்கள்.

சொடுக்கி படிக்க‌
---> மோடி யார்? மோடி ஒரு கிரிமினல் சைக்கோ – பாலன்.
<---


.

UNMAIKAL said...

காஷ்மீர பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை.

ஆனால் பண்டிட்கள் X முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன?

முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின் போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம்.

கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம்.

ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும்.

காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார்.

தொண்ணூறுகளில் காஷ்மீரில் ஆளுநராக ஜக்மோகன் இருந்தபோது அவருடைய தூண்டுதலின் பேரிலேயே பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டு டில்லிக்கு அனுப்பப்பட்டனர்.

ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள் தான் பண்டிட்கள்.

அப்படி அனுப்பபட்ட பண்டிட்களுக்கு இந்திய அரசாங்கம் டில்லியில் கடைகளையும், குடியிருப்புகளையும் ஒதுக்கிக் கொடுத்திருப்பதோடு, அரசு வேலைகளையும் வழங்கியிருக்கிறது.

காஷ்மீரில் அவர்கள் அரசு ஊழியர்களாக பணி செய்திருந்தால் அதை ஓய்வூதியமாகவும் கொடுக்கிறது.

இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள்.

உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.

குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை.

இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள்.

காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல.

அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். - அ.மார்க்ஸ் (a.marx)

**************************************
முஸ்லீம்களின் மேல் பழி சுமத்த கையில் இஸ்மாயில் என்று முஸ்லிம் பெயரை பச்சை குத்திக்கொண்டும் முஸ்லீம்கள் போல் சுன்னத் செய்து கொண்டும் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே போல்

குஜராத்தில் முஸ்லீம் இன படுகொலை செய்ய ஆர்.எஸ்.எஸ் மோடியால் திட்டமிட்டு

கோத்ரா ரெயில் தீவைக்கப்பட்ட சம்பவத்திற்கு முன்பே குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்திற்கு குஜராத் உள்துறையும் அரசியல் தலைமையும் அனுமதி அளித்து

கோத்ரா சம்பவத்திற்கு முன்பே வி.ஹெச்.பி, பஜ்ரங்தளம், பா.ஜ.க ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் ஹிந்துத்துவா சக்திகள் வகுப்புவாத ரகளைக்கு தயாரிப்புடன் ஆயுதங்களுடன் இருக்க‌

கோத்ராவில் சபர்மதி ரயிலில் தீ மூட்டி அப்பாவி மக்களை எரித்து முஸ்லீம்களின் மேல் பழி சுமத்தி பல்லாயிரக்க்கணக்கான முஸ்லீம்களை கொன்று அவர்களின் உடைமைகளை சூறையாடி கொள்ளையடித்த‌ மோடியின் கயமைத்தனத்தை கொடூரத்தை நூற்றாண்டுகளானாலும் மறைக்க மறக்க முடியுமா?

UNMAIKAL said...

இந்து மாயை - இந்துத்துவம் எனும் கொடிய நோயை நாடு முழுவதும் பரப்பும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி. - மோடி யின் விபரீதமான காவிமயம்.

சொடுக்கி படிக்க‌ --->
R.S.S - B.J.P- மோடி யின் இந்து மாயையும் குண்டு வெடிப்புகளும்.
<---


.

Anonymous said...

காந்தியை இப்போதுள்ள ஒரு அரசியல்வாதியுடன் ஒப்பிடச் சொன்னால், நான் முலாயம் சிங்குடன் ஒப்பிடுவேன். ஏன்யென்றால், இவ்விருவருமே இஸ்லாமியர்களை தாஜா செய்வதில் வல்லவர்கள். இஸ்லாமியர்களின் அடிவருடிகளாக தங்களை காட்டிக் கொள்வதில் தனக்கு தானே பெருமை கொள்பவர்கள்.

என்னும் சொல்லப் போனால், "காந்தி - முலாயம்" இவ்விருவருமே என் கண்களுக்கு "குருவும் - சிஷ்யனுமாக" தான் காட்சியளிக்கின்றனர். முலாயம் சிங்கின் இன்றைய "முஸ்லீம் அடிவருடல்" கொள்கைக்கு, அன்றே விதை விதைத்து, உரம் வைத்து, தண்ணீர் ஊற்றி வளர்த்தது காந்தி தான்.

இஸ்லாமிய அடிவருடலில், முலாயம் சிங் எப்படி "முல்லா"யம் சிங்காக நடந்து கொள்கிறாறோ, அதே போல தான், மகாத்மா காந்தி - "மௌலான" காந்தியாக நடந்து கொண்டார். இதற்கு ஒரு நல்ல சான்று கிலாபத் இயக்கமும், அதை தொடர்ந்து நடந்த மாப்ளா கலகங்களும் தான்.

1914 முதல் 1918 வரை நடந்த முதலாம் உலகப் போரில், "நேச நாடுகள்" என்ற பெயரில் ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்க, பிரிட்டன் போன்ற நாடுகளும், "மைய நாடுகள்" என்ற பெயரில் அஸ்திரியா, ஜெர்மனி, ஒட்டோமான்(துருக்கி), பல்கேரியா போன்ற நாடுகளும் இரு பிரிவாக போரிட்டன. இப்போரில் இரு தரப்பினரும் பாதிப்புகளை சந்தித்த போதிலும், நேச அணியின் கையே ஓங்கி இருந்தது. இப்போரின் விளைவாக அஸ்திரியா, ரஷ்யா, ஒட்டோமான் ஆகிய நாடுகள் பல கூறுகளாக பிரிந்தது.

இதில், ஒட்டோமான்(துருக்கி) பேரரசு என்பது கலீபாவின் கீழ் செயல்படும் ஒரு வடித்துக்கட்டிய இஸ்லாமிய நாடு. துருக்கியின் பிரிவினையை எதிர்த்தும், கலீபாவின் ஆட்சியை மீண்டும் அமைக்கவும் உலக அளவில் இஸ்லாமியர்கள் முயன்றனர்.

இதன் தொடர்ச்சியாக, 1919ல் முகமது அலி(Mohammad Ali), மௌலான சவ்கத் அலி(Maulana Shaukat Ali) எனப்படும் அலி சகோதரர்களும், சில இஸ்லாமிய தலைவர்களும் ஒன்றிணைந்து, அகில இந்திய கிலாபத் கமிட்டி(All India Khilafat Committee) என்ற இயக்கத்தை பாரத தேசத்தில் தொடங்கினர்.

"துருக்கியில் மீண்டும் கலீபா ஆட்சியை மலர செய்வதே தங்கள் லட்சியம்" என்று கிலாபத் இயக்கத்தினர் கூறினர். ஆனால் உண்மையிலேயே, "பாரதத்தில் உள்ள இஸ்லாமியர்களை ஒன்றினைத்து, தங்கள் பலத்தை பெருக்கி கொண்டு, இந்துக்களை ஒடுக்க வேண்டும்" என்பதே கிலாபத் இயக்கத்தின் மறைமுக லட்சியமாக இருந்தது. நேச நாடுகள் அணியில் பிரிட்டனும் இடம் பெற்று, துருக்கிக்கு எதிராக இருந்ததால், பாரதத்தில் இருந்த இஸ்லாமியர்கள் பிரிட்டிசார் மீது அதிர்ப்தியில் இருந்தனர்.

1920ல் இஸ்லாமியர்கள் கிலாபத் இயக்கத்திற்காக காந்தியின் ஆதரவை நாடிய போது, காந்தி தன் மனபூர்வமான ஆதரவை அளித்தார். தான் ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல், காங்கிரஸ் இயக்கத்தின் அப்பாவி கடைக்கோடி இந்து தொண்டர்களையும் கிலாபத் இயக்கத்திற்காக போராட செய்தார். ஒரு ஒப்பந்தம் போட்டது போல, கிலாபத் இயக்கத்திற்கு காந்தி ஆதரவு தர, காந்தி துவங்கிய ஒத்துளையாமை இயக்கத்திற்கு கிலாபத் இயக்கம் ஆதரவளித்தது.

Continued...

Anonymous said...

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த கிலாபத் இயக்கத்தை முஸ்லீம் லீக் எதிர்த்தது. அதே சமயம், சுவாமி சிரத்தானந்தர் ஆதரித்தார். ஆனால், இந்து மகா சபா எதிர்த்தது!

சுவாமி சிரத்தானந்தர், "பிரிட்டிஸ் அரசுக்கு எதிராக கிலாபத் இயக்கம் செயல்படும்" என நம்பி தொடக்கத்தில் ஆதரித்த போதிலும், அது செல்லும் திசை சரியில்ல என்று உணர்ந்தவுடன், "கிலாபத் இயக்கம் இஸ்லாமிய வெறியை வளர்ப்பதாக" காந்தியை எச்சரித்தார். ஆனால் வழக்கம் போலவே, காந்தி அந்த எச்சரிக்கையை ஒரு பொருட்டாக கருதாமல், ஒரு காதில் வாங்கி, மறு காது வழியாகவிட்டார். அதன் பிரதிபலன்கள் விரைவாகவே தெரிந்தது.

காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்ததே ஒரு அபத்தமாகவும், இஸ்லாமிய அடிவருடலின் மாபெரும் துவக்கமாகவும் தான் நான் காண்கிறேன்.

ஏன்யென்றால், 1947ல் பாரதம் இரண்டாக பிளக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு என்று தனி நாடு உருவாக்கப்பட்ட பின்பு கூட, பாரத தேசத்தை இந்து நாடாக அறிவிக்க காந்தியோ, காங்கிரசோ முன் வரவில்லை. ஆனால், 100% இஸ்லாமிய மத அடிப்படையில், துருக்கியில் கலீபா முறை ஆட்சி அமைய நடத்தப்பட்ட கிலாபத் இயக்கத்திற்கு காந்தியும், காங்கிரசும் போட்டிப்போட்டு ஆதரவளித்தனர்.

"ஒரு கண்ணுக்கு வெண்ணை, மறுகண்ணுக்கு சுண்ணாம்பு" என்பார்களே, அது தான் இது. இந்துக்களுக்கு என்று ஒரு தேசம் அமைவதை விரும்பாத காந்தி, இஸ்லாத்தின் அடிப்படையில் ஒரு நாடு உருவாவதை விரும்புகிறார். அதை ஆதரிப்பதை பெருமையாகவே கருதுகிறார். இது தான் காந்தியின் இஸ்லாமிய அடிவருடலின் தன்மை.

காந்தி கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவளித்த போது, "கிலாபத் இயக்கம், ஓராண்டுக்குள் நமக்கு சுயராஜ்ஜியத்தை பெற்று தரும்" என்று பெருமை பொங்க கூறினார். ஆனால், கிலாபத் இயக்கம் பாரதத்திற்கு சுயராஜ்ஜியம் வழங்கவில்லை; மாறாக, கேரள பகுதிகளில் கலீபா ராஜ்ஜியத்தை தான் ஏற்படுத்தியது.

இஸ்லாமியர்களின் தேச பக்தியும், ஒற்றுமை உணர்வும் அதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. காந்தியின் இஸ்லாமிய அடிவருடலுக்கு, இந்துக்கள் தங்கள் உயிரை பலியாக கொடுக்க நேரிட்டது.