Followers

Tuesday, February 11, 2014

அசீமானந்தா பேட்டி: என்ஐஏ மூலமாக விசாரிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளை திட்டமிடுவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்தலைவர்களை தான் தொடர்பு கொண்டதாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசீமானந்தா பேட்டி கொடுத்துள்ளார்.

இது பற்றி என்ஐஏ மூலமாக விசாரணை நடத்தவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் பொலிட்பீரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு: அசீமானந்தா கொடுத்த பேட்டியைக் கொண்டு ஒரு பத்திரிகை வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள வெடிமருந்துகள் விவரம் பல கேள்விகளை எழுப்புகிறது.இது பற்றி விரிவாக விசாரணை நடத்தப்படவேண்டும்.

பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளை திட்டமிடும் போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்தலைவர்களை தான் தொடர்புகொண்டதாக பேட்டியில் அசீமானந்தா தெரிவித்திருக்கிறார்.

82 பேர் உயிரிழக்கக் காரணமான 3 பயங்கரவாத தாக்குதல்களில் அசீமானந்தாவுக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு தொடரப் பட்டுள்ளது.

பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட மேலும் சில வழக்குகளிலும் அவர் விசாரணை வளையத்தில் கொண்டுவரப் பட்டுள்ளார்.

குஜராத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பான வனவாசி கல்யாண் ஆசிரமத்துடன் இணைந்து பழங்குடிகள் வாழும் பகுதிகளில் அசீமானந்தா வசிப்பவர். சூரத்தில் 2005 ஜூலையில் நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்குப் பிறகு தற்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்திரேஷ் குமார் என்பவருடன் டாங்ஸ் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றார்.

இந்தியாவில் முஸ்லிம்களை இலக்குவைத்து குண்டுவெடிப்பு நடத்திட திட்டமிடுவது பற்றி அந்த கோயிலில் விவாதிக்கப்பட்டதாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார் அசீமானந்தா. இப்படியொரு பேட்டி யாருக்கும் தரப்படவில்லை என அசீமானந்தா தரப்பு வழக்கறிஞர் மறுத்தாலும் தங்களிடம் பேட்டி சம்பந்தமான பதிவுகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறது அந்த பத்திரிகை

சில ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அந்த பேட்டியில் தெரிவித்துள்ள விவரங்கள் தேசிய பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்பதால் தேசிய புலனாய்வு அமைப்பு மூலமாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. -பி.டி.ஐ.

http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article5678578.ece?homepage=true

No comments: