Followers

Saturday, February 08, 2014

மோடி மஸ்தானிடம் 18 கேள்விகள்......



மோடிமஸ்தானிடம் 18 கேள்விகள்......

நேற்று வண்டலூரில் வருங்கால பிரதமர் என்று ஏகத்துக்கும் பில்டப் கொடுக்கப்படும் நரேந்திர மோடியின் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. பிரியாணிக்கும், 300 அல்லது 500 ரூபாய் பணத்துக்கும் கூட்டி வந்த கூட்டம் அது என்பது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். எவ்வளவு கூடினாலும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக எந்த கட்சிகளும் காலூன்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இனி 30000, அல்லது 40000 கூடிய இந்த கூட்டத்தை லட்சங்களாக பெருக்கி செய்திகளை தினமலரும், புதிய தலைமுறையும் வெளியிடும். எஸ்ஆர்எம் விடுதி மாணவர்களையும் பச்சமுத்து வலுக்கட்டாயமாக கூட்டத்துக்கு இழுத்து வந்ததாக ஒரு செய்தி. புதிதாக நரேந்திர மோடி எந்த செய்தியையும் இந்த கூட்டத்தில் சொல்லவில்லை. காங்கிரஸை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில்தான் குறியாக உள்ளார். தான் நாட்டுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்லவில்லை. இதுவரை இவர் செய்த சில சாதனைகளை நாமும் பட்டியலிடுகிறோம். வருங்கால பிரதமராகும் தகுதி இவருக்கு உண்டா என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

1. 2004 ஜூன் 15 அன்று அகமதாபாத் - காந்தி நகர் நெடுஞ்சாலையில் தீவிரவாதி என பட்டம் சூட்டி 19வயது இளம்பெண் இஷ்ரத் ஜகானை மற்ற நான்கு இளைஞர்களுடன் டி.ஐ.ஜி வன்சரா என்கவுண்டர் செய்தது சட்டபடி தவறு என 2009ல் அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், 2011ல் சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுக் குழு என்கவுண்டர் நாடகத்திற்கு முன்தினமே அவர்கள் கொல்லப்பட்டதை கண்டறிந்து வெளிகொண்டு வந்தது மோடிக்கு தெரியாதா?

2. 2005 நவம்பர் 23ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்த ஷொராபுதீன் அவரது மனைவி கவுசர்பீயும் குஜராத் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு, மூன்று தினங்கள் கழித்து அகமதாபாத் அருகே துப்பாக்கியால் துளைக்கப்பட்ட ஷொராபுதீன் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுவும் சட்டவிரோத என்கவுண்டர்தான். பிறகு டிஜிபி வன்சரா கிராமத்தில் கவுசர்பீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதும் மோடிக்கும் சம்பந்தம் இல்லையா?

3. இந்த என்கவுண்டர் படுகொலைகளை நடத்திய டிஜிபி வன்சரா இப்போது சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து இந்த கொலைகளை முதல்வர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அனுமதி கொடுத்த பிறகுதான் செய்தோம் என சொன்னது மோடியின் லட்சணத்தை காட்டவில்லையா?

4. குஜராத் மாநிலம் பிரிக்கப்பட்ட 1960 முதலே ஜவுளி, உரம், இரும்பு போன்றவை அங்கு பிரபலம். பிஜேபி கட்சியே துவக்கபடாத காலத்தில் துவக்கப்பட்ட குஜராத் மாநில பெட்ரோலிய கழகமும், மோடி பிறக்காததன் முன்பே துவக்கபட்ட அமுல் கம்பெனியும் குஜராத் வளர்ச்சியில் மக்களுக்கு சேவை செய்வதும், மோடியின் ஆட்சிகாலத்தில் புதுப்புது முதலாளிகள் வளர்ந்ததும், அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்ததும் யாருக்கும் தெரியாது என நினைக்கிறாரா மோடிஜி?

5. எஸ்ஸார், ரிலையன்ஸ், எல்.டி, போர்டு இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு தண்ணீர், மின்சரம், சாலை வசதி ஆகியவை கொடுக்கப்படுகிறது. மோடிக்கு நெருக்கமான அம்பானி குழுமத்திற்கு 7500 கோடி மதிப்புள்ள 5 கோடி சதுர மீட்டர் நிலத்தை வெறும் 160 கோடிக்கு கொடுத்து கார்ப்பரேட் சேவை செய்ததும், அந்த இடத்தை அந்நிறுவனம் பிளாட் போட்டு விற்பனை செய்ததும் அனைவரும் அறிந்ததுதான். ஆக மோடியின் குஜராத் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான மாடல் என்பது சரிதானா?

6. இரண்டே ஆண்டுகளில் இப்படி பன்னாட்டு, உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கு மோடி காட்டிய சட்டவிரோத சலுகைகளால் அங்குள்ள மக்களுக்கு சேரவேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கஜானாவில் சேரவில்லை என மத்திய தணிக்கைக்குழு சுட்டிகாட்டியதை தீர்க்கதரிசியான மோடியின் கள்ள மவுனம் எதைக் காட்டுகிறது?

7. கடந்த 8 ஆண்டுகளில் குஜராத்துக்கு 87 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு பெற்றதாக மோடி புளுக, இல்லை இக்காலத்தில் வந்த முதலீடு வெறும் 720 கோடிதான் என அந்த புளுகு எட்டே நாளில் ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் வெளுத்ததை காவிக் கூட்டம் சொல்ல மறந்தது ஏன்?

8. நர்மதா ஆற்றின் தண்ணீரையும், நிலத்தடி நீரையும் பெருமுதலாளிக்கு தாரை வார்க்கும் மோடி அரசை எதிர்த்து அங்கு விவசாயிகள் போராடுவதையும், அங்கு நடக்கும் விவசாயிகள் தற்கொலைகளையும் ஊடகங்கள் மூடி மறைப்பதும், பல லட்சம் விவசாயிகள் பலனடையும் சர்தார் சரோவர் அணை திட்டத்தை அமலாக்காமல் ஏமாற்றுவதை எழுதாமல் இருப்பதும் மோடி அரசின் விளம்பரங்களுக்காகதானே?

9. ஆண் பெண் விகிதாசாரத்தில் மிகவும் மோசமான இடத்தில் குஜராத் இருக்கிறது. 1000க்கு 919 பெண்களே உள்ளனர். ஊட்டசத்து குறைந்த பெண்கள் நிறைந்த மாநிலமும் இதுவே. இதற்கு மோடி சொன்ன காரணம் என்ன தெரியுமா? “நகர் புறத்து பெண்கள் சாப்பாட்டைவிட மேக்கப்பில்தான் கவனம் செலுத்துகிறார்கள் அதற்குதான் செலவு செய்கிறார்கள்” என்று நக்கல் அடித்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது பல்டி அடித்ததும் மோடியின் குரூர புத்தியின் ஒரு துளி அல்லவா?

10. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மின்மிகை மாநிலமாய் இருக்கும் குஜராத்தில் இன்றுவரை 11 லட்சம் வீடுகள் மின் இணைப்பு இல்லாமல் இருகிறது. அதுமட்டுமா 1 கோடியே 20 லட்சம் குடும்பங்களில் 63 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருப்பதும், பல லட்சம் மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் அலைவதும் வளர்ச்சியின் குறியீடா மிஸ்டர் மோடி?

11. மனுநீதியை அமலாக்க ஆர்.எஸ்.எஸ் கொடுத்த பயிற்சியை குடிநீர் கொடுப்பதில்கூடவா காட்டவேண்டும். பாவ்லா தாலுகா தன்வாடா கிராமத்தில் எந்த எந்த சாதியினருக்கு எப்போது தண்ணீர் விடப்படும் என பம்பு செட்டு சுவற்றில் பட்டியல் எழுதிவைக்கும் அளவுக்கு மோசமாக இருக்கிறது. கடைசியாக தண்ணீர் இருந்தால் தலித் மக்களுக்கு கிடைகும் நிலைதான். வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய இதை ரசித்தபடியே மோடி பவணி வருவது நியாயமா?

12. “பூரண மதுவிலக்கு அமலாக்கப்பட்ட குஜராத்தில் போன் செய்தால் சாராயம் வீடுதேடிவரும்” இது தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.. சட்டமன்ற பதிவேட்டில் உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சியில் குழாய் மூலம் சாரயம் விற்றவர்கள் இப்போது டோர் டெலிவரி செய்கிறார்கள். மோடி அவர்களே தாங்கள் வித்தியாசமான தலைவர்தானா?

13. வறுமை ஒழிப்பில் குஜராத் மிகவும் பின்தங்கி இருக்கிறது. பழங்குடியினர், இஸ்லாமிய சமுதாயத்தினர் வறுமையை ஒழிப்பதிலும் நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலம் குஜராத்தான். குழந்தை இறப்பை தடுப்பதில் தோல்வி, பொதுவிநியோக முறை சீரழிந்த நிலை.மக்களின் சுகாதார நலன் புறக்கணிக்கப்படுவது அதாவது கிராமப்புறத்தில் 67 சதவீத மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை போன்றவை திட்ட கமிஷன் அறிக்கையின் ஆதாரங்கள். வெறும் வாய் சவடால் மூலம் இதை மூட முயற்சிப்பது நியாமதானா மோடி?

14 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு 2 லட்சம் வேலை வாய்ப்புகளை வெட்டிச் சுருக்கிவிட்டது., அனைத்து துறைகளிலும் 2500 ரூபாய் சம்பளத்தில் அத்துக்கூலிகளாக இளைஞர்களை அலைய விடுவதுதான் இந்தியாவுகான முன் மாதிரியா?

15. ஐசோதாபென் என்கிற பெண்ணை உங்களுக்கு தெரியுமா? 14 வயதான சிறுமியை 17 வயதில் திருமணம் செய்த தாங்கள் இன்றுவரை அவரை நிம்மதியாய் வாழவிடாமல், கண்காணிப்புடன் வெளியே பேசவிடமல் வைத்திருப்பது யாருக்குத் தெரியும்? ஓப்பன் என்கிற பத்திரிகை இச்சம்பவத்தை வெளியே சொல்லும் வரை. ஏனெனில் நீங்கள் பிரம்மச்சாரி என்ற பிம்பத்தை கட்டிக்காத்து வருகிறீர்கள் அப்படிதானே? தன்னை நம்பிவந்த பெண்ணை காப்பாற்றாத எந்த ஒரு மனிதனும் தன் நாட்டை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எப்படி வரும்?

16. ஆசிஷ் கேத்தானை தெரியுமா மோடி? எப்படி மறப்பீர்கள்! உங்கள் அமைச்சரவையில் இருந்த மாயா கோட்னானிக்கு 28 வருட சிறைத் தண்டனையும், பாபு பஜ்ராங்கிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கிக் கொடுத்த தெகல்கா நிருபர் அவர்.

2002 ல் நீங்கள் செய்த இன அழிப்பில் உங்கள் கையில் படிந்த இரத்த கரையின் சாட்சி அவர். நீங்களும் சிறைக்கு செல்லும் காலம் நெருங்குகிறது. ஆகவே கார்ப்ரேட் கைகளில் தஞ்சம் அடைந்து, அவர்களுக்கு சேவகம் புரிந்து, இந்த நாட்டின் உட்ச பதவியை அடைய கனவு காண்கிறீர்கள். கனவு காண்பது அனைவருக்கும் உரிமை! உங்களுக்கு என்ன தடை?

17. நவீன ஊடகங்களான இணையத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கூலிப்பட்டாளத்தை வைத்து உங்களை பின்தொடர்பவரகள் 18 லட்சம் பேர் என ஆகாசபுளுகை அள்ளிவிட்டுக்கொண்டிருந்தீர்கள், கூலிக்கு மார் அடிக்கும் ஐ.டி கம்பெனிகளை நீங்கள் வாடகைக்கு வைத்துதான் இணைய உலகை ஏமாற்றுகிறீர்கள் என்பதை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்திவிட்டது. உண்மையை ஒருநாளும் நீங்கள் நம்பப் போவதில்லையா மோடி அவர்களே?

18 உங்கள் காவி கட்சியில் அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு தொலைகாட்சியின் மூலம் லஞ்சம் வாங்கியது பழைய சம்பவமாக இருக்கட்டும். சமீபத்தில் லைம்டோன் சுரங்க வழக்கில் 54 கோடி கொள்ளையடித்த பாபு போக்கிரியாவுக்கு மந்திரி பதவி கொடுத்ததாகட்டும் எதற்காகவாவது வெட்கப்பட்டிருக்கிறீர்களா?

சொல்லுங்க மோடி... சொல்லுங்க!

(கேள்விகளுக்கு உதவிய ஆதார நூல்: நரேந்திர மோடி நாமம் - கோவி.லெனின்)

http://natputanramesh.blogspot.in/2013/12/blog-post.html

3 comments:

Anonymous said...

அண்ணல் நபி(ஸல்) இருந்திருந்தால் மோடிக்கு என்ன தீர்வு வழங்கியிருப்பார்?:

1400 வருடங்களுக்கு முன்பு, "வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதரும் அடிமையும் ஆவார்கள்" எனும் உண்மையை பிரச்சாரம் செய்த நபிகளாரை பிராமணர்கள் கல்லால் அடித்தனர், கடுஞ்சொற்களால் வதைத்தனர். கடைசியில் அவரைக் கொல்ல திட்டமிட்டனர்.

அப்பொழுது மதினாவாசிகள் அவருக்கு அடைக்கலம் தந்து தலைவராக ஏற்றுக்கொண்டனர். மதினாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியது. சிறிது காலத்தில் வறுமை நீங்கி அமைதி மலர்ந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணல் நபிகளார், மக்கா பிராமணர்களிடம் தங்களை நாடு திரும்ப அனுமதிக்கவேண்டும் என்று பலமுறை அமைதி தூதனுப்பினார். ஆனால், அமைதியின் அர்த்தம் பிராமணர்களுக்கு புரியவில்லை.

இறுதியாக, தங்களது பிறந்த மண்ணை பிராமணரின் வருணதரும கொடுமையிலிருந்த மீட்க ஜிஹாத் எனும் தருமயுத்தம் ஒன்றே கடைசி வழியென்று அறிவித்தார். பத்ரு போரில், ஆயிரக்கணக்கான போர் வீரர்களையும் பயங்கர ஆயுதங்களையும் கொண்ட மாபெரும் பிராமணரின் படையை முந்நூற்று முப்பது பேர் கொண்ட மிகச்சிறிய முஸ்லிம்களின் படை பெருமானாரின் தலைமையில் தோற்கடித்தது.

அதற்குப்பிறகு, தனது அறுபதாவது வயதில் மக்காவை கைப்பற்றினார். புனித கஃபாவில் இருந்த முந்நூற்று அறுபது சிலைகளையும் உடைத்தெறிந்து வருணதருமத்தின் வேரை அரேபிய மண்ணிலிருந்து வெட்டி எறிந்தார். அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் 55 நாடுகளை கைப்பற்றிவிட்டது. 170 கோடி மக்கள் முஸ்லிம்களாக வாழ்கின்றனர்.

1940ல் இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் பிராமணர் முஸ்லிம்களை தாக்கினர். முஸ்லிம்கள் அவர்கள் மீது ஜிஹாத் செய்து 1947ல் பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று பாக்கிஸ்தான் ஒரு அனுசக்தி நாடாக உருவாகி பிராமணரின் திமிரை அடக்கிவிட்டது. என்ன அந்தர்பல்டி அடித்தாலும் பிராமணரால் பாக்கிஸ்தானை இனி ஒன்றுமே செய்யமுடியாது என்பது ஊரறிந்த உண்மை.

அதாவது "அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்" என்று திருக்குரான் அறிவிக்கிறது. ஆக அண்ணல் நபி(ஸல்) இருந்திருந்தால் "ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்ற மோடிக்கெதிராக ஜிஹாத் செய். அவனைப் போட் தள்ளு" என்று முஸ்லிம்களுக்கு நீதி வழங்கியிருப்பார் என்பதில் எந்த காபிருக்காவது எள்ளளவும் சந்தேகமுண்டோ?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

பாரதமாதாவின் பரிதாப நிலை:



வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், குருட்டுக்கிழவி பாரதமாதாவை வெள்ளைக்காரனிடம் வப்பாட்டியாக அடகு வைப்பான்.

என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.

சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.

பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அணுகுண்டை போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பிவிடுவேனென்றால் குட்டிச்சுவரில் முட்டிக் கொள்வான்.

எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் கழிந்து விடுவான்.

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்

அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.

தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.

ஹிந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.

துர்கா, லட்சுமி, பார்வதியென பெண்ணைக் கடவுளாய் பூஜிப்பான், கோயில் சுவற்றிலே ஆயகலை அறுபத்து நான்கையும் விலாவரியாய் விவரிப்பான்

பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்துவான்.

ஒருவனுக்கு ஒருத்தியென்பான், உனது கடவுள்களுக்கு ஏனடா எண்ணற்ற மணைவிகளெனக் கேட்டால் பேந்த பேந்த முழிப்பான்.

கற்புக்கு இலக்கணமெழுதுவான், ஐவருக்கு முந்தானை விரித்த பாஞ்சாலியைப் பற்றிக் கேட்டால், நீ நாசமாய் போகவென சபிப்பான்.

தேசப்பிதா காந்தியெனக் கதறுவான், அவருக்கு ஏனடா அல்வா கொடுத்தாயெனக் கேட்டால், அபச்சாரம் அபச்சாரமென்பான்.

உயிரைக் கொல்லுதல் பாவமென்பான், ஜாதி வெறிப்பிடித்து சகமனிதனை தண்டவாளத்தில் ரெண்டு துண்டாக்குவான்.

இந்த அரைநிர்வாணப் பக்கிரி அயோக்கியனிடம் தமிழ்த்தேசத்தை அடகு வைத்துவிட்டு தலையைச் சொறியும் இளித்தவாயன் தமிழனை என்னவென்று சொல்வது?