Followers

Friday, October 02, 2015

கிராமத்தை விட்டு வெளியேற தயாராகும் முஸ்லிம்கள்!



பக்ரீத்தில் பசு மாடு பலி கொடுத்ததாக இக்லாக் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என இக்லாக்கின் தாய் அஸ்கரி கோரியுள்ளார். இத்துடன் அங்குள்ள முஸ்லிம் குடும்பங்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேற ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

டெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகைக்காக பசு மாடு பலி கொடுத்து அதன் இறைச்சியை உண்டதாக கிளம்பிய வதந்தியில், 52 வயது இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டார்.

கடந்த திங்கள் கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அவரது குடும்பத்தினரும் அப்பகுதி கிராமத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் அதிர்ந்து போன பிசோதாவில் வசிக்கும் சுமார் 50 முஸ்லிம் குடும்பங்கள் பாதுகாப்பு கருதி அக்கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இதற்கு உபி அரசு மற்றும் போலீஸார் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதது காரணம் எனக் கருதப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் அக்கிராமம் அமைந்துள்ள கௌதம புத்தர் மாவட்டத்தின் ஊரகப் பகுதி காவல்துறை கண்காணிப்பாளரான சஞ்சய்சிங் கூறுகையில், ‘நான் உதவி ஆட்சியர் மற்றும் போலீஸ் படைகள் சகிதம் கடந்த இரண்டு நாட்களாக அக்கிராமத்தில் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் அமைதி திரும்பினாலும், கிராமத்தினர் இடையே லேசான பயம் நிலவுகிறது. முஸ்லிம் சமூகத்தினருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படுவதால் அவர்கள் பயப்படத் தேவை இல்லை. இதற்காக அக்கிராமத்தை விட்டு வெளியேறவும் அவசியம் இல்லை.’ என தெரிவித்தார்.

இந்நிலையில், அடித்துக் கொல்லப்பட்ட இக்லாக்கின் தாயான அஸ்கரி தன் குடும்பத்திற்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார். இது ஒரு திட்டமிட்ட சம்பவமாக இருக்கும் என தாம் சந்தேகப்படுவதால் அதன் மீது சிபிஐ விசாரணை நடத்த உபி அரசு பரிந்துரைக்க வேண்டும் என அதன் முதல் அமைச்சர் அகிலேஷ்சிங் யாதவிடம் வலியுறுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்த சமூக இணையதளங்கள் காரணம் என அம் மாநில காவல்துறை இயக்குநர் ஜக்மோகன் யாதவ் புகார் கூறி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜக்மோகன், ‘அமைதி திரும்பும் பிசோதாவில், இந்த சம்பவத்தின் மீது சமூக இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்களால் பதட்டம் கிளப்ப முயற்சி நடைபெறுகிறது. இதன் பல பதிவுகள் சமூக இணையதள விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக நம் கட்டுப்பாட்டு அறைகள் நடத்தும் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது. இதை மேலும் கண்காணித்து கட்டுப்படுத்த, எங்கள் கட்டுப்பாட்டு அறைகளில் கூடுதலான அலுவலர்களை நியமிக்க உள்ளோம்.’ எனக் கூறியுள்ளார்.

வதந்தியை ஆதாரமாக வைத்து நடந்ததாகக் கருதப்படும் சம்பவம் குறித்து பிசோதாவின் சிவன் கோயிலின் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்த அதன் பூசாரியிடம் போலீஸார் நேற்று எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில், கடந்த திங்கள் கிழமை இரவு அறிமுகம் இல்லாத மூன்று இளைஞர்கள் கோயிலுக்கு வந்து இந்த அறிவிப்பை ஒலிபெருக்கியில் அளிக்கும்படி தம்மை பலவந்தப்படுத்தியதாக பூசாரி கூறியுள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
02-10-2015

மாயாவதியிடமும், முலாயம் சிங்கிடமும் சென்று விட்ட தலித் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களை திரும்ப கொண்டு வர இந்துத்வா முயல்கிறது. அதன் முயற்சியே இன்று இஹ்லாக் கொல்லப்பட்டது.

கேவலம் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்காக இந்திய மக்களை கூறு போட்டுக் கொண்டிருக்கும் நாசகார சக்திகளை இறைவா! உனது பொறுப்பில் விட்டு விடுகிறோம். அவர்களை அழித்து எனது தேசத்தை காப்பாற்றுவாயாக! அண்ணன் தம்பிகளாக சகோதர வாஞ்சையோடு பழகி வரும் மக்களை பிரிக்க நினைப்பவர்களை எங்கள் கண் எதிரிலேயே அழித்து விடுவாயாக!

4 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

// இதனால் அதிர்ந்து போன பிசோதாவில் வசிக்கும் சுமார் 50 முஸ்லிம் குடும்பங்கள் பாதுகாப்பு கருதி அக்கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இதற்கு உபி அரசு மற்றும் போலீஸார் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதது காரணம் எனக் கருதப்படுகிறது. //
----------------------

வெளியேறி எங்கே செல்வர்?. அங்கே இவர்களுக்கு வீடு நிலம் யார் தருவர்?. ஹிந்துக்களின் தெய்வம் கோமாதாவை அறுத்து உண்ணும் இவர்களை தேசத்துரோகிகளாக பெரும்பாலான ஹிந்துக்கள் கருதுகினனர். அவர்கள் இவர்களை வரவேற்பார்களா?. வாழவிடுவார்களா?.

இவர்கள் இந்தியாவில் எங்கே சென்றாலும், ஹிந்துக்கள் துரத்துவர். வாழவிட மாட்டர். போலீசும் சட்டமும் கைகட்டி வேடிக்கை பார்க்கும். இவர்களுக்கு இரண்டே வழிதான் இருக்கிறது. ஒன்று ஜிஹாத் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவை விட்டே வெளியேற வேண்டும்.
---------------

இந்த முஸ்லிம் குடும்பங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனிடம் "எங்களுடைய உயிருக்கும் உடமைக்கும் இனி இந்தியாவில் பாதுகாப்பில்லை. போலீசும் சட்டமும் எங்களை பாதுகாக்காது. இந்திய அரசாங்கத்தின் மீது எங்களுக்கு இனி நம்பிக்கையில்லை. ஆகையால் எங்களுக்கு தயவு செய்து உங்கள் நாட்டில் வாழ அடைக்கலம்(appeal for asylum) தாருங்கள்" எனும் கோரிக்கையை வைக்கவேண்டும்.

நேரடியாக இவர்கள் டெல்லியில் உள்ள அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன், ஐரோப்பிய யூனியன் மற்றும் மனித உரிமை கழகத்தில் அடைக்கலம் கோரி மனு தாக்கல் செய்து "அடைக்கலம் கிடைக்கும் வரை அசைய மாட்டோம்" என அறிவிக்க வேண்டும்.

இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற 40 கோடி முஸ்லிம்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து "நாட்டை விட்டு வெளியேற நாங்கள் தயார் -- Quit India Movement" எனும் இயக்கத்தை நாடு முழுதும் பரப்ப வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், முஸ்லிம் சகோதரர்கள் மீது அருள் புரிவானாக.
--------

நாட்டை விட்டு முஸ்லிம்களை வெளியேற்ற, ஹிந்து சகோதரர்கள் பார்லிமெண்ட் முன்னால் திருக்குரானை தயவுசெய்து கொளுத்த வேண்டும். எங்களுடைய "Quit India Movement" இயக்கத்துக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

முஹம்மத் அலி ஜின்னா said...

இப்பொழுது புரிகிறது, ஜின்னா ஏன் பாக்கிஸ்தானை உருவாக்கினாரென்பது.

வெகுவிரைவில் ஒரு இறுதிப்பிரிவினை இன்ஷா அல்லாஹ் நடக்கும். முஸ்லிம்கள் இன்னொரு பாக்கிஸ்தானி உருவாக்கும் வரை, ஹிந்துத்வா வெறியன் ஓயமாட்டான்.

Unknown said...

மாடிறச்சி சாப்பிட கூடாது என்று சொல்லும் வாயலேயே மாட்டு மூத்திரத்தை குடிக்க வைத்தானே என் இறைவன் அவனே மிக்க பாக்கியமுடையவன்

Unknown said...

மாடிறச்சி சாப்பிட கூடாது என்று சொல்லும் வாயாலேயெ மாட்டு மூத்திரத்தை குடிக்க வைத்தானே என் இறைவன் அவனே மிக்க பாக்கியமுடையவன்