
ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனாபேட் மாவட்டத்தில் அமைந்துள்ள கோஹானா கிராமத்தில் 14 வயதே ஆன ஒரு தலித் சிறுவன் புறா திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மேல் சாதி காவல்துறை கயவர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளான். கோவிந்த் என்ற இந்த சிறுவனை அடித்து கொன்று பிறகு தூக்கில் ஏற்றியுள்ளது காவல்துறை.
புறா திருடியதாக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு அங்கு கோவிந்த் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். அவனை மீட்க அவனது தாய் காவல் நிலையம் சென்றபோது லஞ்சம் கேட்டுள்ளது காவல்துறை. கேட்ட பணத்தையும் கொண்டு வந்துள்ளார் கோவிந்தின் தாய். ஆனால் 'எங்கள் காவலில் இருந்து தப்பி விட்டான்' என்று காவல் துறை சொல்லியுள்ளது. ஒரு சிறுவன் போலீஸ் காவலில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்? அவனை அடித்து கொன்று விட்டு நாடகமாடுகிறது காவல் துறை.
மாட்டுக் கறியை புனிதமாக்கி அதனை சாப்பிடுபவர்களை எல்லாம் எதிரிகளாக்கினர் இந்துத்வவாதிகள். அதன் பலனை இன்று அனுபவித்து வருகிறது நமது நாடு. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இரண்டு தலித் பிஞ்சுகளை உயிரோடு கொளுத்தினர் இந்துத்வாவாதிகள். நேற்று கோவிந்த் என்ற இளைஞன் அடித்து கொல்லப்பட்டுள்ளான்.
அன்றே இந்தத்வாவாதிகளை இந்துக்கள் கடுமையாக தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இனியாவது நடுநிiலை இந்துக்கள் இந்துத்வாவாதிகளுக்கு எதிராக கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும். அதற்கு இஸ்லாமியர்களும் கிருத்தவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இனியும் தாமதித்தால் நமது இந்தியாவை இந்த இந்துத்வாவாதிகள் சோமாலியா ரேஞ்சுக்கு கொண்டு சென்று விடுவார்கள்.
தகவல் உதவி
NDTV
23-10-2015
No comments:
Post a Comment