Followers

Monday, October 12, 2015

இருண்ட காலத்தை நோக்கிச் செல்கிறதா இந்தியா?



பாஜக ஆட்சியில் நிலைபெறும் அச்சுறுத்தல்கள் நீண்டகால விளைவுகளைக் கொண்டவை

இந்து மதத்தின் உருவ வழிபாடு குறித்து வெளிப்படையாக விமர்சித்துவந்த 77 வயதான எம்.எம். கல்புர்கி, கடந்த அகஸ்ட் மாதம் தனது வீட்டு வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பிப்ரவரி மாதம், மும்பை அருகே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த பன்ஸாரே கொல்லப்பட்டார். 2013-ல், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலைசெய்யப்பட்டார். இந்தப் படுகொலைகள், மிகப் பெரிய அபாயத்தின் அறிகுறிகள்தான். மதச்சார்பற்ற குரல்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன; பிற அபாயங்கள் தொடரப்போகின்றன.

பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல்கள் இந்தியாவில் அவ்வப்போது நடப்பவைதான் என்றாலும், இந்த முறை விஷயம் வேறு மாதிரியானது. இச்சம்பவங்கள் தொடர்பான செய்திகள் முதல் பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது அரசு. இவ்விஷயங்கள் தொடர்பான பிரதமர் மோடியின் மவுனம், அவற்றை மறைமுகமாக ஆதரிப்பதைக் காட்டுகிறது என்றே பலர் கருதுகிறார்கள். ஏனெனில், 2014-ல் அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற தாக்குதல்கள் வலுப்பெற்றிருக்கின்றன.

இந்து பாகிஸ்தான்?

அண்டை நாடுகளை ஒப்பிடும்போது சுதந்திரமான ஜனநாயக நாடாகவும், உயர்ந்த எண்ணங்களை ஆதரிக்கும் நாடாகவும் பெருமிதம் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது மிக முக்கியமான தருணம். 2011-ல் பாகிஸ்தான் தாராளவாத அரசியல் தலைவர் சல்மான் தஸீர் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் (தற்போது பாஜக செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்) இவ்வாறு சொன்னார்: “சல்மான் தஸீர் மட்டும் இந்திய முஸ்லிமாக இருந்திருந்தால், இந்நேரம் அவர் உயிருடன் இருந்திருப்பார்.” வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது, அந்நாட்டின் ஜனநாயக அமைப்பின் எதிர்காலம் குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.

மாறாக, நாம் இந்தியாவில் நடக்கும் விஷயங்களைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். இந்தியா விமர்சிக்கும் அதன் அண்டை நாடுகளின் பாதையில் இந்தியாவும் சென்றுவிடலாம் என்பதையும் நாம் உணர வேண்டும். மும்பையைச் சேர்ந்தவரும் புகழ்பெற்ற பத்திரிகையாளருமான நிகில் வேகில் என்னிடம் சொன்னார், “மதச்சார்பின்மை இல்லையெனில், இந்தியா ஒரு ‘இந்து பாகிஸ்தா’னாக இருக்கும்.”

இந்தியாவில் நடந்திருக்கும் இந்தப் படுகொலைகளுக்கும் இந்த ஆண்டு வங்கதேசத்தில் வலைப்பூ எழுத்தாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. ஆனால், வங்கதேசத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக உலகளாவிய விமர்சனங்கள் எழுகிறபோது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனும் அங்கீகாரப் பூச்சுக்குப் பின்னே மறைந்துகொள்கிறது இந்தியா.

நீடிக்கும் அச்சுறுத்தல்கள்

கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் விளைவாக, சுய தணிக்கையும், பயமும் கொண்ட சூழல் உருவாகி யிருக்கிறது.

கொலையாளிகளில் சிலர் இன்னமும் பிடிபடவில்லை. ஒரு கையில் துப்பாக்கியைச் சுமந்துசெல்லும் கொலையாளிகள் மறு கையில் பெயர்ப் பட்டியலை வைத்திருக்கிறார்கள். செப்டம்பர் 20-ல் சில தொலைபேசி அழைப்புகளை இடைமறித்துக் கேட்டவர்கள் மூலம் ஒரு முக்கியமான தகவலை, பத்திரிகையாளர் வாக்லே தெரிந்துகொண்டார். மற்றொரு வலதுசாரி அமைப்பான ‘சனாதன் சன்ஸ்தா’அடுத்து தன்னைக் குறிவைத்திருப்பதாக அவருக்குத் தெரியவந்தது. கல்புர்கியின் மரணத்தைக் கொண்டாடிய வலதுசாரித் தீவிரவாதிகள் பகிரங்கமாகவே பேசினர். இந்து மதத்தின் சாதி அமைப்பை விமர்சித்துவருபவரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான கே.எஸ். பகவான்தான் அடுத்த குறி என்று ட்விட்டரில் மிரட்டல் விடுத்தனர்.

மதச்சார்பற்ற நாடான இந்தியாவை, ‘இந்து தேச’மாக மாற்றும் நோக்கம்தான் இக்கொலைகளுக்குக் காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. அரசியல் தலைவர்களின் மவுனம் மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான பாஜகவின் இந்து தேசியக் கொள்கைகளும் இந்நோக்கத்துக்குத் துணைபுரிகின்றன.

இந்துத்வா எனும் தகுதி

கடந்த சில மாதங்களாக, நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய நிறுவனங்களில் ஒலித்துக்கொண்டிருந்த மதச்சார்பற்ற குரல்களை ஒழித்துக்கட்டியிருக்கிறது இந்திய அரசு. ஏதோ சராசரியான ஆட்களைத் தூக்கியடிக்கவில்லை அரசு. நாளந்தா பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகித்தவர் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென். புகழ்பெற்ற ஆளுமைகளின் பதவியிடங்கள், இந்துத்வா கொள்கை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மட்டுமே தகுதியாகக் கொண்டவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டன.

இந்தியா எனும் மதச்சார்பற்ற நாட்டுக்கு அடித்தள மிட்டவரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவாகர் லால் நேருவின் பாரம்பரியத்தைக் குறிவைப்பதுதான், இந்த அரசின் இலக்குகளில் மிக முக்கியமானது. கடந்த மாதம், புது டெல்லியில் உள்ள ‘நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலக’த்தின் இயக்குநரை வெளியேற்றிய அரசு, தற்போது அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்ததுடன், பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கும் பணிகளைச் செய்யவும் திட்ட மிட்டிருக்கிறது. வாஷிங்டன் நினைவிடத்தை, ஒபாமா அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு ஒப்பானது இது!

சுதந்திரச் சிந்தனை கொண்ட தலைவர்களின் பங்களிப்புகளை இருட்டடிப்புச் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பதுடன், மூர்க்கமான இந்து தேசியத் தலைவர்களை முன்னிறுத்துவதிலும் முனைப்புடன் இருக்கிறார்கள் பாஜக தலைவர்கள். மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்ஸே வைத் ‘தேசபக்தர்’ என்று விளித்தார் பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ். பின்னர், தனது கருத்தை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டாலும், அவரது கருத்தை பாஜக தலைவர்கள் பலர் ஆதரித்தார்கள். காந்தியைப் படுகொலை செய்த கோட்ஸே, ஆயுதம் தாங்கிய இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்னாள் உறுப்பினர். அந்த அமைப்புடன் தனது 8-வது வயதிலிருந்தே தொடர்பில் இருப்பவர் மோடி. இந்து தேசியவாத அரசின் நிழலில் தாங்கள் பலம் பெற்றிருப்பதாக இந்து அடிப்படைவாதிகள் கருதுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

நசுக்கப்படும் பேச்சுரிமை

2010-ல் வெளியான தனது நாவலால் ஆத்திரமடைந்த இந்து அமைப்புகளிடமிருந்து தனக்கு மிரட்டல்கள் வந்ததாக, புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன், கடந்த டிசம்பர் மாதம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தின. எங்காவது கண்காணாமல் போய்விடுவது நல்லது என்று போலீஸார் அவருக்கு அறிவுறுத்தினர். தனித்துவிடப்பட்டவராக உணர்ந்த பெருமாள் முருகன், தனது ஒட்டுமொத்த இலக்கிய வாழ்க்கையைவிட்டே விலகுவதாக ஜனவரி மாதம் அறிவித்தார். தனது குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி, எழுதுவதையே கைவிடுவதாக ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.

இந்த அச்சுறுத்தல்கள் பாஜக ஆட்சியில் இருக்கும் வரைதான் தொடரும் என்றுகூட நினைக்கலாம். ஆனால், இந்தியாவின் கட்டுமானத்திலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றம், நீண்டகால விளைவு களை ஏற்படுத்திவிடும் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். இந்தியாவில் நடக்கும் இந்தத் தாக்குதல்களை, ஏதோ மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் அல்லது சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கு மட்டும் நடக்கும் பிரச்சினையாகப் பார்க்க முடியாது. ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் அமைப்பின் - இதயத்தின் - மீதான தாக்குதல் இது. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும். நமது சொந்தக் குரலை இழப்பதற்கு முன்னர், அனைவரின் குரல்களைக் காக்க முன்வர வேண்டும்!

- சோனியா ஃபெலீரோ,

‘பியூட்டிஃபுல் திங்: இன்சைடு தி சீக்ரெட் வேர்ல்டு ஆஃப் பாம்பே’ஸ் டான்ஸ் பார்ஸ்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
12-10-2015

6 comments:

Dr.Anburaj said...

குருடன் சுவனப்பிாியன். முந்தைய கட்டுரைகளை தாங்கள் பாா்த்ததில்லையோ? முஸ்லீம் பெண்கள் ஆயுத பயிற்சி பெறும் காட்சியை தாங்கள் வெளியிட்டு பாராட்டி எழுதியிருந்தது நினைவில்லையோ ? பள்ளியில் நடக்கும் குழு பயிற்சி போன்றதுதான் ஆா் எஸ்எஸ் பயிற்சி.இந்த காலத்தில் சிலம்பு கம்பு எதற்கு ஆகம். இவர்கள் கையில் உள்ள கம்பு முருங்கை்காய் பறிக்க கூட ஆகாது. இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்டவா்களை முஸ்லீம்களுக்கு பிடிக்காது. இதுதான் கட்டுரையின் அடி நாதம். இந்துக்கள் காபீா்கள் என்றும் அவர்களுக்கு எதிராக கள்ள நியாயம் பேசுவது நபி பண்பாடு தக்கியா. தாங்கள் செய்திருப்பது இந்துக்களுக்கு எதிரான தக்கியா.

UNMAIKAL said...

கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடிகளால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் படித்து சிந்திக்க வேண்டியவை
.
இந்த அசிங்கத்தையா தூக்கி பிடித்துக்கொண்டு பிறரை அழித்தார்கள்? அழிக்கிறார்கள்?
.
.
இந்து கடவுள்களின் கற்பழிப்புகள் வக்கிரங்கள் எல்லையற்றவை உச்சமான பன்றித்தனமாகும் . எப்படி இருக்கின்றது? இந்துமதப் புரட்டுகள் சிலவற்றை பார்ப்போம். என்ன செய்யப் போகின்றீர்கள்? எதிர்த்து நிற்க போகின்றீர்களா? அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா?
.
இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது அறிவற்ற இழிநிலையால்தானே ஒழிய, அறிவியல் பூர்வமாக அல்ல. இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும், நிர்வாணமாக்க வேண்டியதும் அவசியமாகி விடுகின்றது.
.
அனைவரும் இங்கே"க்ளிக்" செய்து >>> இதுதான் இந்து மதத்தின் முகமாகும். <<<<<< படித்து சிந்தியுங்கள்.
.

UNMAIKAL said...

.
பிணம் திண்ணும் இந்து சாமியார்கள் கூட்டம்.
.
இவர்கள் கங்கை நதிகரையிலும் வடஇந்தியாவிலும் சுற்றி திரியும் இந்துக்களால் பெரிதும் மதிக்கப்படும் அகோரி என அழைக்கப்படும் சிவபக்தர்கள். மோட்சம் அடைய சிவபெருமானுடைய அருளை பெற பிணங்களையும் சந்திப்போர்களின் மலம் உண்டு அவர்களின் மூத்திரத்தையும் குடிப்பார்கள். இவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது மிக பாக்கியமாம்.
.
அனைவரும்
.
இங்கே க்ளிக் செய்து >>> பிணம் திண்ணும் இந்து சாமியார்கள் கூட்டம்.
<<<< அதிர்ச்சி தரக்கூடிய விடியோக்கள் காணுங்கள்.
.

.

Anonymous said...

சமீபத்தில பேஸ்புக்கில் நிறைய பேர் பசு இறைச்சிக்காக ஒருவர் (அவர் மாட்டை திருடவே இல்லை ) கொல்லப்பட்டதற்காகவும், போலீஸ் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் என்பதற்காக துணியை அவிழ்த்து (கணவன் மூதேவியே மனைவி மூதேவியின் துணியை உருவி அம்மணமாக்கவில்லை ) அம்மணமாக்கி விசாரணை செய்தனர் என்பதற்காக.... "நாடா இது..டிஜிட்டல் இந்தியாவாம் மயிராம்" என பொங்கி வழிவதை பார்க்கிறேன். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.... குறிப்பாக தமிழகத்தில் பொங்குபவர்களுக்கு....

நீங்கள் கூறுவது போல் இது (இந்தியா ) நாடு இல்லை தான். டிவி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, செருப்பு, சைக்கிள், என அனைத்தும் இலவசம், போதாதற்கு 3 வேளையும் கொட்டிக்க அரிசியும் இலவசம். ஆகையால் நீங்கள் இப்படித்தான் பொங்குவீர்கள்.
நல்ல அரசாங்கமாக இருந்திருந்தால் உங்களை எல்லாம் 12 மணி நேரம் உழைக்க செய்திருக்க வேண்டும். உழைத்தால் தான் சோறு என்ற நிலையில் வைத்திருக்க வேண்டும். தினமும் 300, 500 என வெடி குண்டு வெடித்து சாகும் பக்கத்து நாடுகளை போல் எப்போதும் பீதியிலே வைத்திருக்க வேண்டும். தினமும் ஆயிரகணக்கில் அகதிகளாய் அந்நிய நாட்டை தேடி ஓடவைத்திருக்க வேண்டும். பெண்களை எல்லாம் படிப்பு இல்லாமல் முக்காடு போட்ட அடிமைகளாக வாழ வைத்திருக்க வேண்டும், தாழ்த்தப்பட்டவர்கள் என்று எப்போதும் தங்கள் மனதில் கல்வெட்டாய் எழுதி வைத்து கொண்டு திரியும் உங்களை இன்னும் சுதந்திரத்துக்கு முந்தைய நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் ....

இப்படி எல்லாம் வைத்திருந்தால் உழைப்பின் உயர்வு புரிந்திருக்கும், அமைதியின் ஆனந்தம் புரிந்திருக்கும், சுதந்திரத்தின் சூட்சமம் புரிந்திருக்கும், நாட்டின் நலன் புரிந்திருக்கும், அந்நிய தேசங்களின் அவலம் தெரிந்திருக்கும்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், பாரத பிரதமர் அவர்களுக்கும் என்னுடைய கனிவான வேண்டுகோள் என்னவென்றால் "இந்திய நாட்டை பிடிக்காமல் நாட்டை விட்டு வெளியேறுவோர்களுக்கான துறை " ஒன்றை தொடங்குங்கள். ஊருக்கு ஊர் அதற்கான அலுவலகம் திறங்கள். பாஸ்போர்ட் , விசா உடனடியாக உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்.... எத்தனை பேர் இந்த நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஒரே ஒரு வருடம் வாழ்ந்து பார்க்கட்டும் இவர்கள் வக்காலத்து வாங்கும் நாடுகளில். அவர்கள் இவர்களை விலங்குகளை விட கேவலமாக நடத்தி கையை வெட்டும் போது தெரியும் இந்திய நாட்டின் அருமை, பெருமை மற்றும் முக்கியமாக பொறுமை, பொறுமை.... பொறுமையின் வலிமை....


Anandan Krishnan
Kanyakumari

Dr.Anburaj said...


சபாஸ் ஆனந்த கிருஷ்ணன் . சாியான பதிலடி. இந்தியாவில் வாழும் அரேபியா்கள் தான் முஸ்லீம்கள். அவர்களின் எல்லை தாண்டிய விசுவாசம் பெரும் பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. அரேபியா புனித புமி என்று வாய்கிழிக்க பேசுகின்றாா்கள். என் இந்தியாவின் மீது இவ்வளவு வெறுப்பு என்று புாியவில்லை. அன்பு மணக்குது அறம் மணக்குது அரபு நாட்டிலே என்று நாகூா் அனிபா பாடுகின்றாா். பிறகு ஏன் அவர் இந்தியாவில் வாழ்கின்றாா். இந்துக்களை காபீா் என்று காித்துக் கொட்டுகின்றாா்கள்.காபீா் என்ற சொல்லை பாராளுமன்ற தீா்மானம் மூலம் தடை செய்ய வேண்டும்.இதற்கு இந்துக்களின் தன்மானம் காக்க மாபெரும் போியக்கம் நடத்த வேண்டும். நான் எற்கனவே செய்து வருகின்றேன்.முஸ்லீம் நண்பா்களிடம் நான் கேட்கும் கேள்வி இந்துவாகிய என்னை காபீா் என்று நீ நம்பினால் என்னிடம் உனக்கு உறவு இல்லை என்பதே.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன் ஒரு நயவஞ்சகன். அவருக்கு உண்மை எது என்பதை அறிய ஆர்வமோ எண்ணமோ கிடையாது. இஸ்லாம் என்ற பைத்தியம் மட்டுமே தலைக்கு ஏறி இருக்கிறது. பொய்யும் புரட்டும் மட்டுமே அவருடைய எழுத்துக்களில் இருக்கும். அவருக்கு அறிவு நாணயம் சிறிதளவும் இல்லை. குருட்டு பூனை விட்டத்தில் பாயும் வித்தை காட்டிக்கொண்டு இருக்கிறார். ஒரு பைத்தியம் உளறிக்கொண்டு இருக்கிறது என்று விட்டுவிட வேண்டும். அவருடைய் நயவஞ்சக உளறலை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு பதில் அளிப்பது வீண் வேலை. அறிவு நாணயமோ முதிர்ச்சியோ இல்லாத இவரை புறக்கணிப்பதுதான் அவருக்கு தரப்படும் முதிர்ச்சியான பதில்.