Followers

Monday, April 14, 2014

பிஜேபி கோமாளிகள் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு!

கோமாளிகளின் ஒட்டு மொத்த கூட்டணியான பிஜேபி கூட்டணியில் மீண்டும் சலசலப்பு! நேற்றைய மீனம்பாக்கம் கூட்டத்தில் எந்த கூட்டணி கட்சி தலைவர்களும் மோடியோடு மேடை ஏறாதது இதனை பட்டவர்த்தனமாக வெளிக் காட்டியது. ரஜினியை சந்திக்க செல்லும் விஷயம் விஜயகாந்துக்கும் மற்ற கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் சொல்லப்படவே இல்லையாம். வெகுண்டெழுந்த விஜயகாந்த் முறைத்துக் கொண்டிருக்கிறார். ரஜினிககும் ராமதாஸூக்கும் ஏற்கெனவே ஆகாது. இதில் மோடி ரஜினியை சந்தித்தது ராமதாஸூக்கு ஏக கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகோவுக்கு தமிழகத்தில் உள்ள செல்வாக்கை சொல்லவே வேண்டாம்.

சோ ராமசாமி வேறு தனது பூணூலை முறுக்கிக் கொண்டு 'பிஜேபி நிற்கும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு ஓட்டளியுங்கள்' என்று தனது பங்குக்கு நாரத முனி வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்று அனைவருமே ஒட்டு மொத்தமாக மோடியை நஞ்சாக வெறுக்கின்றனர். விஜகாந்துக்கு ராமதாஸை பிடிக்காது. ராமதாஸூக்கும் விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவை பிடிக்காது. நரேந்திர மோடிக்கு தனது கூட்டணி கட்சி தலைவர்களை விட அதிமுக தலைவி ஜெயலலிதாவின் மீதே அதிக கரிசனம். இத்தனை உள்ளடி வேலைகளையும் மீறி பிஜேபி கூட்டணி எத்தனை இடங்களை பிடிக்கும்? :-)



(தின மலரில் இன்று நான் ரசித்த கார்ட்டூன்)

அடுத்து யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போடுவது போல் பிஜேபியையும், மோடியையும் இன்று வரை எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்ததால் தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவை இன்று ஜெயலலிதா இழந்துள்ளார். இது அதிமுக வெற்றிக்கு மிகப் பெரிய பின்னடைவு. ஐந்து முனை போட்டி நிலவும் தற்போதய சூழலில் லட்சக்கணக்கான வாக்குகளை இன்று இழந்துள்ளது அதிமுக. இனி கலைஞர் காட்டில் மழை. தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவளிக்கும் நிலையில் 30 சீட்டுகள் தாராளமாக கலைஞருக்கு செல்ல வாய்ப்புள்ளது.

No comments: