Followers

Monday, April 21, 2014

"என்ன ஓய் பட்டாபி! கலி முத்திடுத்து!"

'என்ன ஓய்! பட்டாபி! விஷயம் கேள்விப்பட்டேளா?'

'என்ன சொல்ல வர்றேள் மாமா! சொல்லுங்கோ'

'நம்ம இளையராஜாவோட மகன் பிள்ளையாண்டான் யுவன் , நடிகர் ஜெய், நடிகை மம்தா குல்கர்னி என்று ஏகப்பட்ட பேர் முஸல்மானா மாறிண்டு வர்றா. லோகத்துல என்ன நடக்கறதுண்ணு கண்டுக்காம இருந்தா எப்படி?'

'அந்த கருமத்தை டிவிட்டர்ல நானும் பாத்தேன். என்ன பண்றது கலி முத்திடுத்து'

'அப்படி என்ன ஓய் நம்ம வேதங்களான ருக், யஜூர், சாம, அதர்வண வேதத்துல இல்லாத ஆன்மீகம் அந்த குர்ஆன்ல இருக்கு?'

'உரக்க பேசாதேயும்! நம்ம வேதத்துல இருக்கிற முக்கால் வாசி ஸ்லோகங்கள் குர்ஆனிலயும் வர்றது. இது தெரியாம அந்த பிள்ளையாண்டான் குர்ஆனை கையில எடுத்துருக்கான்'

'அப்போ நம்ம வேதங்கள் அனைத்தையும் மலிவு பதிப்பில் தமிழ்படுத்தலாம் என்று சொல்றேளா?'

'சாஸ்திரப்படி அது மகா பாவம்! தமிழ் நீஷ பாஷையோண்ணோ? அதுல எப்படி வேதத்தை படிப்பேள்'

'இப்படியே சாஸ்திரம் சம்பிரதாயம் என்று சொல்லிண்டுருந்தா சூத்ராள் எல்லாம் முஸல்மான் ஆயிட்டா நம்ம பாடு திண்டாட்டமா போயிடும் ஓய்!'

'அதுக்காக பழக்கத்தை மாத்தச் சொல்றேளா? வேதங்களை தமிழில் மொழி பெயர்த்தாலும் இப்போ நம்மவா செஞ்சுண்டுருக்கிற பல வணக்கங்களை விட்டுட்டு ஏக தெய்வ கொள்கைக்கு மாறணும் ஓய்! இத்தனை வருஷம் நாம கும்பிட்ட அந்த விக்ரகங்களை எல்லாம் தூக்கி குளத்துல போடச் சொல்றேளா?'

'வேதத்துல ஏக தெய்வ வணக்கத்தைத்தான் சொல்லியிருக்குங்கறேள். பல தெய்வ வணக்கத்தையும் விடக் கூடாதுங்கறேள். குழப்பமா இருக்கேண்ணா!'

'அது அப்படித்தான். ரொம்பவும் சிந்திக்காதேயும். சில சட்டங்களை வேதத்துல இருந்து மறைக்கறதும் நம்மவா நலனுக்குத்தான். என் வாயை அதிகம் கிளறாதேயும். எனக்கு நேரமாயிடுத்து. சரி நான் வர்றேன்'

No comments: