Followers

Thursday, July 31, 2014

சாதித் திமிரால் நிகழ்ந்த நிகழ்வு - காது போச்சு.....



பாட்னா: ராமானுஜ் என்ற முன்னால் இராணுவ வீரரின் முறுக்கு மீசையைக் கண்டு அதிருப்தி கொண்டனர் யாதவ சாதியை சார்ந்த நங்கு யாதவ், பினா யாதவ். மீசையை எடுக்கும்படி வற்புறுத்தினர். ஆதிக்க சாதியினர் மீசையை எடுக்கும்படி கூறியும் அவர் எடுக்காததால் பலமாக தாக்கி அவருடைய காதை அறுத்திருக்கும் செய்தியை ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் காண முடிந்தது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.

உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவன் முறுக்கு மீசை வைக்கக் கூடாதா? காலில் செருப்பு அணிந்து ஆதிக்க சாதியினர் கிராமங்களில் நடக்கக் கூடாதா? தோளில் துண்டு போடக் கூடாதா? அட மதி கெட்டவர்களே! உன் அப்பன் வீட்டு பணத்திலேயா இந்த சுகத்தை பெற்றான்? அல்லது நீ பெரிய அரசு அதிகாரியாக இருந்து லஞ்சத்தில் கோடிகளாக சேர்த்து வைத்துள்ளாயே அந்த பணத்திலா மிடுக்காக நடக்கிறான்?

'எனது காதை அறுத்தனர். எனது இரு சக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றனர்' என்று பரிதாபமாக போலீஸில் வழக்கு பதிவு செய்துள்ளார். காதை அறுத்தவர்களோ யாதவர்கள். முலாயம் சிங் யாதவ் தனது மகனுக்கு இதனை எப்படி கையாள்வது என்பதை அழகாக சொல்லிக் கொடுப்பார்.

தனது வியர்வையை இந்த மண்ணுக்கு உரமாக்கி நமக்கு சோறு தரும் இந்த உழைக்கும் வர்க்கத்தை இப்படி கேவலப்படுத்தலாமா? இப்படியே போனால் இந்த நாடு உருப்படுமா? மதி கெட்டவர்களே திருந்துங்கள்! இல்லை என்றால் ஒரு நாள் அதே மக்களால் திருத்தப்படுவீர்கள்.


Ramanuj Verma told the police that brothers Nanku Yadav and Bina Yadav stopped him, when he was on way to his native Kauriya village in Patna district on Monday evening. The duo allegedly told him he had no business to sport a twirled moustache.

A fight ensued. The brothers called a few of their friends and all joined in assaulting Verma, according to his complaint.

"During the fight, Bina cut my ear. They then took my bike and other belongings and fled," the ex-solder told the police.

Bihta police station SHO Sanjit Kumar Sinha, quoting Verma's complaint, said a sharp weapon was used in slicing off his left ear.

தகவலுக்கு நன்றி

ஹிந்துஸ்தான் டைம்ஸ்
30-07-2014

கருவியல் சம்பந்தமாக ஆனந்த் சாகருக்கு விளக்கம்!


ஆன்ந்த் சாகர்!

//மேற்கண்ட மொழிபெயர்ப்பு உங்கள் அண்ணன் பீ.ஜே வின் ஏமாற்றுவேலை. அறிவியலை குரானின் உளறல்களுக்குள் நுழைப்பதற்கு உங்கள் அண்ணன் போடும் தமாஷான குட்டிக்கரனங்களில் இதுவும் ஒன்று. உங்கள் அண்ணன் சேர்த்துள்ள தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம் ஒரு பிராடு கூட்டம். உங்களுக்கு ஏன் இந்த ஈனத்தனமான பிராடு பிழைப்பு?//

சகோ பிஜே இந்த ஆராய்ச்சிகளை செய்யவில்லை. டாக்டர் கெய்த் மூரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீரகளா?

டாக்டர் கெய்த் மூர் உலக அளவில் புகழ் பெற்ற உயிரியல் துறை அறிஞர் ஆவார். இவர் உயிரியலில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய புத்தகங்களில் "The Developing Human" என்ற புத்தகம் அமெரிக்க அரசால் சிறந்த புத்தகமாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் கெய்த் மூர் Anotomy and cell Biology துறைகளில் பேராசிரியராக டொராண்டோ பல்கலைக் கழகம் கனடாவில் பணியாற்றுகிறார். இக்கல்லூரியில் Anotomy துறையில் எட்டு வருடங்களாக தலைமைப் பதவியிலும் இருந்து வருகிறார். இனி அவர் தரும் விளக்கங்களை ஆங்கிலத்திலேயே பார்ப்போம்.

In the Holy Quran God speaks about the stages of Mans embryonic development:

“We created man from an extract of clay. Then we made him as a drop in a place of settlement, firmly fixed. Then we made the drop in to an alaqah (leech,suspended thing,and blood clot) then we made the alaqah in to a mudghah (chewed – like substance)…… “ - Quran 23 : 12,13 ,14

literally, the Arabic word alaqah has three meanings : 1) leech 2)suspended thing 3)blood clot.
1) In comparing a leech to an embryo in the alaqah stage, we find similarity between the two as we can see in figure 1. also the embryo at this stage obtains nourishment from the blood of the mother, similar to the leech ,which feeds on the blood of others.

Figure 1 : Drawing illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (leech drawing from Human development as Described in the Quran and sunnah. Moore and others page 37, modified from integrated principles of zoology, Hickman and others.Embbroyo drawing from The developing Human, Moore and persaud,page 73)

2)The second meaning of the word alaqah is “suspended thing.” This is what we can see in figures 2 and 3 the suspension of the embryo, during the alaqah stage, in the womb of the mother.

Figure 2 : We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. ( The developing Human, Moore and persaud, 5th edition page 66

3) The third meaning of the word alaqah is “blood clot.” We find that the external appearance of the embryo and its sacs during the alaqah stage is similar to that of a blood clot. This is due to presence of relatively large amounts of blood present in the embryo during the stage.(see figure 4). Also during the stage, the blood in the embryo does not circulate until the end of the third week. Thus the embryo at this stage is like a clot of blood.

Figure 3 : In this photomicrograph, we can see the suspension of an embryo (marked b) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother. The actual size of the embryo is about 0.6 mm. (The developing Human,Moore,3rd edition page 66,from Histology, Leeson and Leeson.)

Figure 4 : Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage. The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The developing Human, Moore 5th edition, page 65.)

அரபு இலக்கணத்தின்படி 'அலக்' என்ற சொல்லுக்கு இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்ற மூன்று பொருளை தருகிறது. இந்த மூன்று மொழி பெயர்ப்புகளையும் அந்த நிலைக்கு பொருத்திக் கொள்ளலாம்.

ஆக 'அலக்' எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.

மேலும் விரிவாக காணொளிகளோடு பார்க்க இந்த லிங்குக்கு செல்லவும்.


http://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post.html

அறிவியல் விளக்கப் படங்களுடன் குர்ஆன் கூறும் கருவியலைப் பார்க்க இந்த லிங்குக்கு செல்லுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2013/04/blog-post_25.html

டாக்டர் கெய்த் மூரும் உளருகிறார் என்று நீங்கள் அடம் பிடித்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

பரிதாபப்பட வைத்த ஒரு நிகழ்வு - ஒரு இந்துத்வாவாதியின் மனக் குமுறல்



சென்ற ரமலானில் இந்துத்வா கட்சியான பிஜேபி இஃப்தார் பார்ட்டி கொடுத்து அங்கு இஸ்லாமியர்களையும் அழைத்திருந்ததை நாம் பத்திரிக்கைகளில் படித்திருப்போம். நேற்று வரை காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளை 'ஓட்டுக்காக இப்படி கஞ்சி குடிக்க செல்லலாமா? இதுதான் மதசார்பின்மையா?' என்று கலாய்த்த பிஜேபி இன்று அதே காரியத்தை செய்கிறது. இது பற்றி தமிழ் இந்துவில் ஒரு இந்துத்வாவாதி இட்ட பின்னூட்டத்தைப் பார்ப்போம்.

//இந்துத்துவவாதிகள் நோன்பு கஞ்சி குடிப்பதிலோ, முஸ்லீமாகவே மாறுவதிலோ எங்களுக்கு எந்த ஆக்ஷேபனையும் இல்லை. ஆனால் நாங்கள் கூற விளைவதெல்லாம் எங்களை முஸ்லீம்கள் பயங்கரவாதிகள், அவர்களும் இந்துக்களும் சேர்ந்து வாழவே முடியாது. நாம் தாடியை மழிப்போம், அவன் மீசையை மழிப்பான். நாம் மேலிருந்து கீழாக முகம் கழுவுவோம், அவன் கீழிருந்து மேலாக முகம் கழுவுவான், முஸ்லீம்கள் கடைகளைப் புறக்கணியுங்கள். லவ் ஜிகாத். இராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து ரத்து, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை கூடாது, காந்தி முஸ்லீம்களை நம்பி ஏமாந்தவர்… இப்படியெல்லாம் சொல்லி எங்களை உசுப்பேத்தி விட்டு விட்டு இத்தனை ஆண்டுகள் கஞ்சி குடிக்கப் போகாதவர்கள் இப்போது போவதேன் என்பதே கேள்வி. இத்தனை நாள் கஞ்சி குடித்திருந்தால், காந்தியைப் போல் எப்போதும் ஒரே பேச்சாயிருந்திருந்தால் ஏன் இவர்களைக் கேள்வி கேட்கப் போகிறோம். மோடி குல்லா போட்டாரா. கஞ்சி குடித்தாரா. இல்லையே. ஏன். அவரை எந்த நல்ல முஸ்லீமும் அழைக்க வில்லையா. ஸந்தர்ப்பவாதத்தைத் தான் கண்டிக்கிறோமே தவிர கஞ்சி குடித்ததை அன்று.//

- கிருஷ்ணபிரசாத்

சகோ கிருஸ்ண பிரசாத்தின் உள்ளக் குமுறலை நானும் ஆதரிக்கிறேன். இதையேதான் தேர்தலுக்கு முன்பும் நான் சொன்னேன். இஸ்லாமியர் எதிர்ப்பு என்பது உங்களிடமிருந்து ஓட்டுக்களைப் பெறுவதற்கே. இந்து மதத்தின் பெருமைகளை சொல்லி உங்களிடமிருந்து பிஜேபி ஓட்டுக்களை குவிக்க முடியாது. ராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் தனி அந்தஸ்து, முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்காதே, லவ் ஜிஹாத் என்று எதையாவது சொல்லித்தான் ஓட்டு அறுவடையை உங்களிடமிருந்து பெற முடியும்.

உபி முஸாஃபர் நகரில் நடந்ததென்ன? ஒரு இந்து பெண்ணை இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் சீண்டினார்கள் என்று ஊர் முழுக்க செய்திகளை பரப்பி கலவரத்தை உண்டு பண்ணினர். முடிவில் அந்த பெண்ணே அவரது குடும்பம் சகிதமாக 'இப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை. அந்த இளைஞர்கள் என்னை தொடவே கிடையாது' என்று பேட்டி கொடுத்ததை தொலைக் காட்சியிலே பார்த்தோம். அமீத்ஸா வின் திட்டமிடலால் மிகக் கச்சிதமாக காய்கள் நகர்த்தப்பட்டன. 50 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். பல கோடி ரூபாய் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. இதன் விளைவாக இந்துக்களின் ஓட்டை மிகச் சுலபமாக பெற்றது பிஜேபி. இன்று மோடி அருதி பெரும்பான்மை பெறுவதற்கு இந்த சம்பவம் மிக முக்கிய காரணமாக இருந்தது. பிஜேபியின் ஓட்டு பொறுக்கும் தந்திரம் இதுதான்.

இனி ஐந்து வருடத்திற்கு ராமர் பாசம் எடுபட்டு விடும். இஸ்லாமிய எதிர்ப்பு குறைந்து விடும். இனி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்வார் மோடி. ஐநாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு: இஃப்தார் பார்ட்டி என்று இன்னொரு காங்கிரஸாக பிஜேபி மாறும் என்பது எனக்கு முன்பு நன்றாகவே தெரியும். இதை சற்றும் எதிர் பார்க்காத ஒரு சில இந்துத்வாவாதிகள் ஆச்சரியப்படுகின்றனர். அவர்களை நினைத்து பரிதாபம்தான் பட முடியும். எத்தனை முறைதான் அவர்களும் ஏமாறுவார்கள்? ஆனால் முஸ்லிம்களாகிய எங்களுக்கு எந்த வித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் பிஜேபியின் இஸ்லாமிய எதிர்ப்பு என்பது இந்துக்களின் ஓட்டை ஒருமுகப்படுத்துவதற்காக கைக்கொள்ளப்படும் தந்திரம் என்பது இந்திய அரசியலை அவதானிக்கும் அனைத்து மக்களுக்கும் தெரியும்.

யுவன் சங்கர் ராஜாவின் அடுத்தடுத்த மாற்றங்கள்!

யுவன் சங்கர் ராஜாவின் அடுத்தடுத்த மாற்றங்கள்!



(மசூதியில் நோன்பு திறக்கும் நேரம்)

இன்று பிரபல இசையமைப்பாளர் யுவனும் நடிகர் ஜெய்யும் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தழுவி முதல் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியுள்ளனர். நாங்களெல்லாம் தாய் தந்தையர் இஸ்லாமியர் என்பதனால் இன்று இஸ்லாத்தில் இருக்கிறோம். ஆனால் இந்த இருவரும் இஸ்லாம் என்றால் என்ன என்று விளங்கி வந்துள்ளனர். இஸ்லாத்துக்கு வந்தவுடன் அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிறேன். நாளாக நாளாக இஸ்லாத்தின் பிடிப்பு அதிகமாகிக் கொண்டு செல்கிறது.



(பெருநாள் தொழுகைக்கு நடிகர் ஜெய்யுடன் நேற்று வந்தபோது)

தனது தந்தை, தனது அண்ணன், தனது தங்கை என்று எவருடனும் எந்த முறுகலும் இல்லாமல் தனது மார்க்க கடமைகளை யுவன் இன்று வரை நிறைவேற்றி வருகிறார். இஸ்லாத்தை ஏற்று தொடர்ந்து தொழுது வருவதால் முகத்தில் அதீத வசீகரமும் தற்போது வந்துள்ளது. பெருநாள் தொழுகை தொழுது விட்டு தனது குடும்பத்தவருக்கு மகிழ்ச்சியோடு பிரியாணியும் கொடுத்து அனைவரையும் சந்தோஷப்படுத்தியுள்ளார் யுவன்.



(பெருநாள் தொழுகை முடிந்து வந்து தனது குடும்ப உறுப்பினர்களோடு சந்தோஷமாக பிரியாணி சாப்பிட்டவுடன்)

அவர் பணிபுரியும் சினிமா துறையை வைத்து சிலர் விமரிசிக்கின்றனர். போகப் போக அதுவும் சரியாகும். உள்ளங்களை அறிபவன் இறைவனே! இணை வைக்கும் பெரும் பாவத்திலிருந்து மீண்டு விட்டார். சிறு சிறு தவறுகளையும் இனி திருத்திக் கொள்ள பிரார்த்திப்போம்.

சீக்கிரமே ஒரு நல்ல மார்க்கப்பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டு பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துவோம்.



ஆஹா..... யுவன் சங்கர் ராஜா வீட்டில் பிரியாணி ரெடியாகுதுங்கோ.... பிரேம்ஜி பிரியாணியை கிண்டுகிறார்..... :-)

Wednesday, July 30, 2014

மனிதனை இறைவன் எதனால் படைத்தான்?

சாரங்க்!

//சரி அல்லா எப்படி மனிதனை உண்டு பண்ணினார் என்பதற்கு பதில் தரவேண்டுகிறேன்//

அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 25 : 54

மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.
அல்குர்ஆன் 30 : 20

அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.
அல்குர்ஆன் 96 : 2


மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலுந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறுங்கள்.

ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் ஜான் நம்ஸ்லே வெளியிட்ட 'தி எலமெண்ட்ஸ்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 ல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.

எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:

1. ஆக்சிஜன் - 43 கிலோ கிராம்
2. கார்பன் - 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் - 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் - 1 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் - 780 கிராம்
7. பொட்டாஷியம் - 140 கிராம்
8. சோடியம் - 100 கிராம்
9. குளோர்ன் - 95 கிராம்
10. மக்னீசியம் - 19 கிராம்
11. இரும்பு - 4.2 கிராம்
12. ஃப்ளூரின் - 2.6 கிராம்
13. துத்தநாகம் - 2.3 கிராம்
14. சிலிக்கன் - 1 கிராம்
15. ருபீடியம் -0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் - 0.32 கிராம்
17. ப்ரோமின் - 0.26 கிராம்
18. ஈயம் - 0.12 கிராம்
19. தாமிரம் - 72 மில்லி கிராம்
20. அலுமினியம் - 60 மில்லி கிராம்
21. காட்மியம் - 50 மில்லி கிராம்
22. செரியம் - 40 மில்லி கிராம்
23. பேரியம் - 22 மில்லி கிராம்
24. அயோடின் -20 மில்லி கிராம்
25. தகரம் - 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் -20 மில்லி கிராம்
27. போரான் - 18 மில்லி கிராம்
28. நிக்கல் - 15 மில்லி கிராம்
29. செனியம் - 15 மில்லி கிராம்
30. குரோமியம் - 14 மில்லி கிராம்
31. மக்னீஷியம் - 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் - 7 மில்லி கிராம்
33. லித்தியம் - 7 மில்லி கிராம்
34. செஸியம் - 6 மில்லி கிராம்
35. பாதரசம் - 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் - 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் - 5 மில்லி கிராம்
38. கோபால்ட் - 3 மில்லி கிராம்
39. ஆண்டிமணி - 2 மில்லி கிராம்
40. வெள்ளி - 2 மில்லி கிராம்
41. நியோபியம் - 1.5 மில்லி கிராம்
42. ஸிர்க்கோனியம் - 1 மில்லி கிராம்
43. லத்தானியம் - 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் - 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் - 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் - 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் - 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் - 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் - 0.4 மில்லி கிராம்
50. தங்கம் - 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் - 0.2 மில்லி கிராம்
52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்
53. வாளடியம் - 0.11 மில்லி கிராம்
54. தோரியம் - 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் - 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் - 50 மில்லி கிராம்
57. பெல்யம் - 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் - 20 மில்லி கிராம்

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களின் கலவையே மனிதன் என்கிறது அறிவியல் . ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்த கலவையே தண்ணீர் என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமியில் கிடைக்கும் அனைத்து தனிமங்களின் கூட்டுக் கலவையே மனிதன் என்பது அறிவியலும் நிரூபித்துள்ளது. குர்ஆனும் மெய்ப்பிக்கிறது.

http://web2.airmail.net/uthman/elements_of_body.html

malam alluthal

பார்பனர்களை வந்தேறிகள் என்று வீரமணி கூறுவது ஏன்?

பார்பனர்களை வந்தேறிகள் என்று வீரமணி கூறுவது ஏன்?

ஹானஸ்ட் மேன்!

//அகண்ட பாரதத்தை பற்றி பேசும் அருமை நண்பா! பிராமணர்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சாகும்போது வேறு நாட்டிலா புதைக்கப் படுகிறார்கள்? அவனை வந்தேறி என்று கருதி உமது ஒரு மறுமொழியில் “வந்தேறிகள் யார்” என்று வீரமணியிடம் பொய் கேள் என்று எழுதிநீரே! அப்போது இந்த பரந்த மனப்பான்மை எங்கே போனது. அந்த வீரமணி சென்னையில் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் “பிராமணர்களே! தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்”" என்று வீர முழக்கமிட்டபோது உங்களை போன்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தீர்களே!//

அதற்கு காரணம் பார்பனர்களே! இந்த மண்ணின் மைந்தர்களோடு திருமண உறவு வைத்துக் கொண்டு சந்ததிகளை உருவாக்கியிருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது. வீரமணியும், பெரியாரும் வேறு வேலைகளை பார்த்துக் கொண்டு போயிருப்பார்கள். அக்ரஹாரம் என்ற தனி குடியிருப்புகளை நாடு தோறும் உருவாக்கிக் கொண்டு உழைக்கும் மக்களை வீட்டுக்குள்ளும் ஏற்ற மாட்டீர்கள். உட்கார்ந்த இடத்தை தண்ணீர் விட்டு கழுவி தோஷத்தை நீக்குவீர்கள். நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கே இந்த சம்பவம் நடந்துள்ளது. எனது வீட்டில் சுமதி என்ற இந்து பெண் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். தனது சொந்த வீட்டைப் போல் உரிமையோடு அனைத்து இடங்களுக்கும் வருவார். இந்த உரிமையை ஒரு பார்பனர் வீட்டில் அந்த பெண் பெற்று விட முடியுமா?

வரன் தேடும் பக்கங்களை பார்வையிடுங்கள். பிராமிண் ஐயர் என்று போட்டு வடமா என்ற உட்பிரிவையும் குறிக்கத் தயங்குவதில்லை. பிராமிண் ஐயர் என்று போட்டு விட்டு பிரஹாசரணம் என்ற உட்பிரிவையும் மறக்காமல் குறிப்பிடுகிறீர்கள். மற்ற சாதிகளும் அப்படித்தான். விஸ்வகர்மா, இசை வேளாளர், மறவர் என்று 1000க்கு மேற்பட்ட சாதிகளை முதலில் குறிப்பிடுகின்றனர். எனவே பார்பன எதிர்ப்பு தமிழகத்தில் ஒழிய ஒரே வழி அவர்கள் விரும்பி பிற்படுத்தப்பட்ட சாதியில் சம்பந்தம் வைத்து இந்த நாட்டு ரத்தத்தோடு கலக்க வேண்டும். அவ்வாறு செய்வார்களேயானால் 'வந்தேறிகள்' என்று வீரமணி சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.

//நீங்கள் புகழாரம் சூட்டி புளகாங்கிதம் அடையும் அத்தனை அரசர்களும் இந்து பெண்களை மணந்து முஸ்லிம் புதல்வர்களை பெற்று விட்டு சென்றுவிட்டார்கள். அந்த பெண்கள் (நீங்கள் அடிக்கடி கூறுவதுபோல) வர்ணாசிரம் மற்றும் சாதிவெறிக்கு பயந்துதான் மதம் மாறினார்களா? (ராணி ஷாபாய் என்பவர் மரியம் உஸ்மாநியாக மாறியது போல) மதமாற்றத்திற்கு அதுதான் காரணம் என்று சதா சர்வகாலமும் இங்கே எழுதிகொண்டிருப்பது ஏன்?//

குறிப்பிட்ட ஒரு சிலர் மன்னனின் விருப்பத்திற்காக மேலும் மகாராணி ஆகி விடும் ஆசையில் மாறியிருக்கலாம். மேலும் அந்த மன்னர்கள் அந்த பெண்களை வைப்பாட்டிகளாக வைக்காமல் தனது மனைவியாக்கிக் கொண்டு சம உரிமையை கொடுத்தார்கள். ஆனால் எங்கள் ஊர் ராஜராஜனின் வைப்பாட்டிகள் தங்கியிருந்த ஒரு தெருவே தஞ்சையில் இன்றும் சான்று பகன்றுக் கொண்டிருக்கிறது. இத்தனை தலைமுறை கடந்தும் அந்த குடும்பங்களின் இழிநிலை போன பாடில்லை. இதுதான் வித்தியாசம்.

ஆனால் அடித்தட்டு மக்கள் மாறக் காரணம் வர்ணாசிரமக் கோட்பாடே. மிரட்டி மதம் மாறியிருந்தால் இந்துத்வ ஆட்சி நடக்கும் இந்த காலத்தில் ஏன் தாய் மதம் திரும்புவதில்லை என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

//இந்து பெண்களை மணந்து இந்து ஜனத்தொகையை குறைத்து முஸ்லிம் ஜனத்தொகையை அதிகரித்தது தவிர வேறென்ன நடந்துவிட்டது? நம் தாய் பிறப்பினால் ஒரு இந்து என்று கூட நினைக்காமல் இந்துக்களுக்கு ஜசியா வரியை விதிக்க வில்லையா?//

இந்த திருமணங்களால் சாதி வெறி இந்துக்களிடம் குறைய ஆரம்பித்தது. ஒளரங்கஜேப் சாதி ஒழிப்பிற்கு பல திட்டங்களையும் தீட்டினார். இந்து ரத்தம் தனது உடலில் கலந்ததனால் எழுந்த பாசமாகக் கூட இருக்கலாம்.

//ஜசியா வரி//

இதனை எத்தனை முறை விளக்குவது. அதைவிட அதிகமாக ஜகாத் என்ற ஒரு பெரும் தொகையை முஸ்லிம்கள் அரசு கசானாவுக்கு மாதா மாதம் அனுப்பி வந்தனரே. முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தி விட்டு இந்துக்கள் எந்த வரியும் செலுத்தாமல் இருந்தால் அது நியாயமாகுமா?

//கொல்லப்பட்டதாக செய்தி வருகிறதே ஆனால் முஸ்லிம் தலைவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறதா? அப்படியானால் யார் அராஜகவாதிகள்?//

பழனி பாபா கொல்லப்படவில்லையா? நமது தேசத் தந்தை காந்தியை கொன்றது யார்? எதற்காக இந்த கொலை?

//இங்கே கொல்லப்படும் இந்து ஒரு காலத்தில் உமது பாட்டன் பாட்டியின் பேரனாக இருக்கலாம். நபி அவர்களுக்காக அவனை கொல்லும் முஸ்லிம்களுக்கு நபி அவர்கள் என்ன உறவு? கொள்ளு தாத்தாவா? எள்ளு தாத்தாவா?//

சட்டத்தை மதிக்காமல் ஒரு இந்துவை ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு முஸ்லிமை ஒரு இந்துவோ கொல்வதை நான் பார்த்தால் அதனை முதலில் தடுப்பேன். என்னால் தடுக்க முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் காவல் துறையில் புகார் செய்து நீதி மன்றத்தில் அந்த கொலையாளிகளை காட்டியும் கொடுப்பேன். இஸ்லாம் காரணமின்றி அப்பாவிகளை கொல்வதை வன்மையாக கண்டிக்கிறது.


Tuesday, July 29, 2014

முகலாய மன்னர்கள் வந்தேறிகளா நியாயமாரே......!

முகலாய மன்னர்கள் வந்தேறிகளா நியாயமாரே......!

ஹானஸ்ட் மேன்!

//முகமது கோரி இந்திய மண்ணில் பிறந்தானா? கஜினி முகமது இந்திய மண்ணில் பிறந்தானா? இவர்கள் எல்லாம் வந்தேறிகளா? அல்லது மரமேறிகளா? [edited]//

உங்களை பொறுத்த வரையில் அகண்ட இந்துஸ்தானம் தானே உங்களின் கனவு. அதன்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்திய பகுதிகள் இவை அனைத்தும் சேர்ந்ததுதானே நீங்கள் குறிப்பிடும் அல்லது இந்துத்வா குறிப்பிடும் அகண்ட ஹிந்துஸ்தானம். ராமாயணத்தின் பல பகுதிகள் இன்று ஆப்கானிஸ்தானத்தில் அல்லவா இருக்கிறது. அதன்படி கோரி முஹம்மதும், கஜினி முஹம்மதும் உங்கள் பார்வையில் அகண்ட இந்துஸ்தானத்துக்குள் வருகிறார்கள். மேலும் இந்திய ராஜ புத்திர பெண்களை மணந்து கொண்டு நமது பாரத மண்ணிலேயே தங்கள் உடலையும் புதைக்க சம்மதித்தார்கள். இவ்வாறு இந்த நாட்டு ரத்தத்தில் கலந்து விட்ட அவர்களை அந்நியர்கள் என்று மற்ற யாரும் சொல்லலாம் நீங்கள் சொல்லலாமா? ராம பிரான் கோபித்துக் கொள்ள மாட்டாரா?

நீங்கள் அதிகம் வெறுத்து ஒதுக்கும் ஒளரங்கஜேப்பின் வரலாறை பார்ப்போம்.

இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!

முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.

“Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.

********************************************

இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.

ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.

குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.

“Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”

Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.

************************************

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!

இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?

நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!

ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.

பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.

ஹிந்து இராஜபுத்திர ராணியார் ஷாபாய், ஜகத் கஸாயினி ஆகியோரின் வழியில் கி.பி.1618 ல் தோன்றியவர் ஒளரங்கஜேப். அவரது வாழ்வில் நவாப் பாய், உதயபுரி மஹல் என்ற இரு இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டவர் ஒளரங்கஜேப்.

ஹெச்.எல்.ஓ.காரட், சீதாராம் கோலீ, இந்து தேச சரித்திரம்,
1942, Page 170, Chennai.

இது போல் இந்துக்களோடு ரத்த உறவும், திருமண பந்தமும் உடைய ஒரு அரசர் இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று நம் வரலாற்றுப் பாட நூல்களில் தொடர்ந்து படித்து வருகிறோம். அதோடு இந்த மன்னர்கள் இந்த தேசத்தை எந்த அளவு நேசித்திருந்தால் திருமண உறவு முதற் கொண்டு நம் நாட்டிலேயே ஏற்படுத்திக்கொண்டு இங்கேயே இறக்கவும் விருப்பம் தெரிவித்திருப்பார்கள். இன்று இவர்களின் உறவுகள் இந்தியர்களை மணந்து இந்நாட்டு இரத்தம்ஆகி விட்ட பிறகு எப்படி இவர்களை நாம் அன்னிய தேசத்தவர் என்ற வார்த்தையை பிரயோகிக்க முடியும்?

இப்பொழுது சொல்லுங்கள். முகலாய மன்னர்கள் வந்தேறிகளா?

Monday, July 28, 2014

உலக முஸ்லிம்களின் நேற்றைய பெருநாள் தொழுகை!



செர்பியர்களால் முன்பு கொடுமைபடுத்தப்பட்ட கொசோவோ நாட்டில் இளம் பிஞ்சுகள் இறைவனிடம் கையேந்துகின்றனர்.



நாத்திகத்தில் திளைக்கும் கம்யுனிஸ்டுகள் அதிகம் உள்ள மாஸ்கோவில் முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை



பவுத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்தில் முஸ்லிம் பெண்களின் பெருநாள் தொழுகை



கிறித்தவர்கள் அதிகமாக வாழும் பிலிப்பைனில் முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை



யூதர்களால் கடித்துக் குதறப்படும் பாலஸ்தீனில் இறை கட்டளையை நிறைவேற்றும் முஸ்லிம்கள். வெடி குண்டுகள் வீசினாலும் எங்களின் இறை நம்பிக்கை என்றுமே நீர்த்துப் போகாது என்று கம்பீரமாக நிற்கும் பாலஸ்தீனர்கள்.



கிறித்தவர்கள் அதிகம் வாழும் பிரான்சில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் முஸ்லிம்கள்.

இந்த நன்நாளில் பாலஸ்தீன மக்களுக்காக நம்மை படைத்த இறைவனிடம் நீதி வழங்கிட இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.

'சமஸ்கிரதம் ஒரு செத்த மொழி' என்று சொல்வது உண்மையா?



சமஸ்கிரத மொழி என்றோ மரணத்தை தழுவி விட்டது என்கிறார் குஜராத்திக் கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய். இந்த வாக்கியம் சொல்லப்பட்ட ஆண்டு. 1857.

All the feasts and great donations
King Bhoja gave the Brahmans
were obsequies he made on finding
the language of the gods had died.
Seated in state Bajirao performed
its after-death rite with great pomp.
And today, the best of kings across the land
observe its yearly memorial

குஜராத்திக் கவி தல்பத்ராம் :தாஹ்யாபாயின் கவிதையை தமிழில் இப்படி மொழி பெயர்க்கலாம்:

"போஜ மன்னன் பார்ப்பனர்களுக்கு அளித்த விருந்துகள்,
பெருநிதிக் குவியங்கள் எல்லாமும்
தேவ பாஷையின் சாவைக் கண்டு
அதன் இறுதிச் சடங்குகளுக்காக அவன் அளித்தவை தான்...
ஆடம்பரமாக அமர்ந்திருந்த பாஜிராவ் அந்தச் சாவுச் சடங்குகளைச் செய்தான்.
இன்றும் கூட வழி வழி வரும் ஆட்சியாளர்கள்
ஆண்டு தோறும் அதற்குத் திவசம் செய்யத் தவறுவதில்லை.."


இந்த கவியின் கூற்று தற்போது மெய்யாகியுள்ளது. ஆம்.... இப்போது மோடியின் பா.ஜ.க அரசு அந்த வருடாந்திரத் திவசத்தை துவக்கியுள்ளது.

இப்படியாக இந்தியாவில் ஒரு பெரும் கூட்டமே சமஸ்கிரத மொழிக்கு எதிராக அதுவும் இந்துக்களிலேயே எழுவது கண்டு நான் ஆச்சரியமுறுவேன். ஏன் இவ்வாறு ஒரு மொழியை இந்த அளவு வெறுக்கிறார்கள் என்று சிந்திப்பேன். உலக மொழிகள் அனைத்தும் இறைவனால் மனிதனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்ற நம்பிக்கையை உடையவன் நான். இன்று இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவ்வளவு இழிநிலைகளை தாங்குவதற்கு காரணமே சமஸ்கிரத மொழிகளில் அமைந்த இந்து மதத்தின் ஸ்மிருதிகளே! அதனை எழுதியவர்கள் இன்று நம்மோடு இல்லை. எனவே குறைந்த பட்சம் அந்த மொழியையாவது வெறுப்போம் என்ற நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனவேதான் பெரும்பான்மையான இந்து மக்களின் நினைப்பு இவ்வாறாக இருக்கிறது: 'நீ உருது பேசுகிறாயா பேசிக் கொள்: ஆங்கிலம் பேசுகிறாயா பேசிக் கொள்: அரபியில் பேசிக் கொள்கிறாயா பேசிக் கொள்: ஹிந்தியில் பேசிக் கொள்கிறாயா... பேசிக் கொள் எனக்கு ஒரு இழிவோ பிரச்னையோ இல்லை: ஆனால் வழக்கொழிந்து போன சமஸ்கிரதத்தை மட்டும் மீண்டும் உயிர்ப்பித்து விடாதே! இப்பொழுதுதான் பல போராட்டங்களுக்குப் பிறகு வர்ணாசிரமம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. சமஸ்கிரதத்துக்கு உயிரூட்டினால் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொள்ளும் வர்ணாசிரமம்' என்ற நினைப்பே அந்த இந்து மக்களை சமஸ்கிரத மொழியைப் பார்த்து பயம் கொள்ள வைக்கிறதோ என்று நினைக்கிறேன்..

http://www.columbia.edu/itc/mealac/pollock/sks/papers/death_of_sanskrit.pdf

கோபப்பட வைத்த நிகழ்வு - ஒரு பாகிஸ்தானியோடு....

கோபப்பட வைத்த நிகழ்வு - ஒரு பாகிஸ்தானியோடு....

எனது பாஸூக்கு பாகிஸ்தானிகளிடம் நல்ல அபிப்ராயம் இல்லை. இந்தியர்களை உயர்வாக நடத்துவார். பாகிஸ்தானிகளை எந்த வகையிலாவது மட்டம் தட்டுவார். சவுதி முழுக்க பொதுவாக இதுவே நிலை. எனக்கு கீழும் முன்பு மூன்று பாகிஸ்தானிகள் வேலை செய்துள்ளனர். அவர்களின் வலியையும் அப்போது உணர்ந்திருக்கிறேன். இந்தியாவையும் இந்தியர்களையும் உயர்வாகவே மதிப்பர். நாம் நினைப்பது போல் இந்தியாவை அழிக்க எந்த நேரமும் அதே சிந்தனையிலேயே உள்ளவர்கள் பாகிஸ்தானிகள் என்ற எண்ணம் தவறு. அந்த நாட்டில் உள்ள நிச்சயமற்ற அரசியல் நிலவரங்களை சமாளிக்கவே அவர்களுக்கு 24 மணி நேரம் பத்தாது. ஆனால் ஒரு சில பாகிஸ்தானிகளுக்கு இந்தியா என்றாலே எரிச்சல் வரும். இவ்வாறு அவர்கள் நாடு பிரச்னையில் சிக்கித் தவிப்பதற்கு இந்தியாவே காரணம் என்று இன்றும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் பல பாகிஸ்தானியரை பார்த்துள்ளேன். அது மாதிரி எண்ணம் கொண்ட ஒரு பாகிஸ்தானி என்னிடம் அகப்பட்டான். அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஒரு முறை பிரதமராக மன்மோகன் சிங் ரியாத் வந்த போது நான் ஒரு வாடகை வண்டியில் ஒரு வேலையாக சென்றேன். அந்த வண்டியின் டிரைவர் நீண்ட தாடியுடன் தாலிபான்கள் தோற்றத்தில் இருந்தார். அப்போது மேம்பாலங்களில் இந்திய கொடியும், சவுதி கொடியும் ஒன்றாக பல இடங்களில் பறந்து கொண்டிருந்தது. அவர் என்னிடம் 'ஒரு காஃபிர் தலைவருக்கு எந்த அளவு மரியாதை கொடுக்கிறார்கள் பார்தாயா! பாகிஸ்தானிய தலைவர்கள் வந்தால் இந்த அளவு மரியாதை செய்வதில்லை இவர்கள்' என்று கோபப்பட்டார்.

'உங்கள் தலைவருக்கு மரியாதை செய்யவில்லை என்றால் அதற்கான காரணத்தை ஆராயாமல் எனது நாட்டு தலைவருக்கு மரியாதை செய்வதை நீங்கள் எப்படி எதிர்க்கலாம்?

'நீங்கள் முஸ்லிமா?'

'ஆம். நான் முஸ்லிம்தான்'

'பிறகு ஒரு காஃபிருக்கு சப்போர்ட் பண்ணுகிறாயா? இந்தியாவில் முஸ்லிம்களை இந்துக்கள் தினமும் கொல்வது உங்களுக்கு தெரியாதா?'

'எனது தாய் நாட்டில் அவ்வப்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்னை வருவது எனக்கும் தெரியும். இணையத்தை தினமும் பார்வையிடுகிறேன். இதை விட அதிகமாக பாகிஸ்தானில் நடக்கிறதே. தொழும் பள்ளியில் கூட குண்டு வைக்கிறீர்களே! அதற்காக நீங்கள் உங்களின் நாடான பாகிஸ்தானை வெறுக்கவில்லையே'

'இந்துக்களை பற்றி உனக்கு தெரியாது. பட்டால்தான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்'

'தீவிரவாத இந்துக்களை எப்படி சமாளிப்பது என்பது இந்திய முஸ்லிம்களுக்கும் தெரியும். அது பற்றிய கவலை உனக்கு வேண்டாம்'

அதற்குள் எனது இடம் வரவே இறங்கிக் கொண்டேன். என்னை மனதுக்குள் திட்டிக் கொண்டே அந்த பாகிஸ்தானி வண்டியை வேகமாக எடுக்க ஆரம்பித்தான். நானும் சிரித்துக் கொண்டே எனது இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தேன். நமது நாட்டில் பல குழப்பங்கள் இருக்கலாம். அதனை ஒரு எதிரி நாட்டைச்சேர்ந்த வெறுப்பை உமிழும் ஒருவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாது இல்லயா....

ஒவ்வொரு நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர் என்பதை உணர்ந்து கொண்டு எனது வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.

---------------------------------------------------------

பெருநாள் தொழுகையும் முடிந்து விட்டது. எனது ஃபித்ரா பணத்தை ரியாத் டிஎன்டிஜே அமைப்பிடம் சேர்ப்பித்து விட்டேன். அருமையான தூக்கம் ஒன்றை போட்டு விட்டு மதிய தொழுகையை தொழுது விட்டு நண்பரோடு பிரியாணியும் சாப்பிட்டாகி விட்டது. இன்று நாமெல்லாம் மகிழ்ச்சியோடு பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது காஸா மக்களுக்கு தினமும் ஏவுகணையை பரிசாக அனுப்பிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். அனைத்து மக்களும் இன்பமாக வாழும் சூழலை அமைத்துக் கொடுக்க அந்த ஏக இறைவனிடம் நமது பிரார்த்தனையை இந்த நல்ல நாளில் வைப்போம்.

அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

Sunday, July 27, 2014

நெகிழ வைத்த நிகழ்வு: டெல்லி காசியாபாத்....



காசியாபாத்: புதுடெல்லி

மதங்களின் பெயரால் மனிதர்களை பிரிக்க பலர் முயற்சித்த வண்ணம் உள்ளனர். ஆனால் டெல்லி காஸியாபாத்தில் உள்ள முஸ்லிம்கள் காவி உடை உடுத்திய இந்து நண்பர்களுக்கு தாகம் தீர சர்பத்தையும் பசி தீர பழங்களையும் இலவசமாக விநியோகிக்கின்றனர்.

இதுதான் இந்தியா. இது போன்ற சமூக சேவைகள் நாடெங்கும் நடைபெற வேண்டும். அனைவரையும் சகோதரர்களாக பாவிக்க வேண்டும். மத வெறுப்பு ஒழிய வேண்டும்.

அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.

காஞ்சி சங்கரராமனைக் கொன்றது மாமிசம் சாப்பிட்டவரா?

ஹானஸ்ட் மேன்!

//Islamic State Fighters சிரியன் army யை சேர்ந்த 85 பேரை கொன்று அதில் 50 பேரின் தலைகளை கொய்து Raqa city யில் காட்சிக்கு வைத்தனாராம்! எப்படி இவர்கள் இவ்வளவு ஈவு இரக்கம் இல்லாமல் செயல்படுகிறார்கள் என்றே தெரியவில்லை. தினமும் ஆடு வெட்டி வெட்டி இரத்தத்தை பார்த்து பார்த்து இரக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டதோ?//

இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. உண்மை பின்னரே தெரிய வரும்.

மற்றபடி ஆட்டை அறுத்து சாப்பிடுபவர்கள்தான் அதிகம் கொலைகளை செய்வார்கள் என்று இல்லை. மாமிசமே சாப்பிடாத பவுத்த மதத்தை சார்ந்தவர்கள்தான் இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றனர். மாமிசம் சாப்பிடாத இந்துக்கள்தான் குஜராத்தில் கர்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை வெளியில் இழுத்து தீயில் இட்டனர். அதனை கேமராவுக்கு முன்னால் சந்தோஷமாக சொல்லியும் காட்டினர். காஞ்சியில் சங்கரராமனைக் கொன்றவர்கள் சைவப்பிரியர்களே!

//கேட்கிறவன் முட்டாளாக இருந்தால் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்வார்களாம். பேசாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விஞ்ஞான பாடங்களை எடுத்துவிட்டு இந்த குரானை பாடமாக வைத்து விடலாம் போல இருக்கிறதே!//

குர்ஆன் பல விஷயங்களை பேசுகிறது. வரலாறு, அறிவியல் என்று பல துறைகளை தொடுகிறது. இதில் ஏதாவது ஒரு வசனம் இன்றைய அறிவியலுக்கு முரண்படுகிறது என்று உங்களால் காட்ட முடியுமா? குர்ஆனே சவால் விடுகிறது.

'நமது அடியாரான முகம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளராகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'
2 : 23 - குர்ஆன்

'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
4 : 82 - குர்ஆன்


இது போன்ற வசனங்களின் சவால்கள் இன்று வரை முறியடிக்கப் படாததால் நான் குர்ஆனை இறை வேதம் என்றே நம்புகிறேன்.இதற்கு முன் அருளிய வேதங்களையும் நம்புகிறேன். மதிக்கிறேன்.

மேலும் நம் முன்னோர்களான தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர், சித்தர்கள், திரு மந்திரத்தை அருளியவர்கள், ரிக்,யஜீர், சாம,அதர்வண வேதத்தை அருளியவர்கள் அனைவரையும் நானும் மதிக்கிறேன். இவற்றில் ஏதாவது ஒன்று முன்பு இறைச் செய்தியாகக் கூட வந்திருக்கலாம். இது போன்ற வேதங்களில் புராணங்களில் மனிதக் கருத்துகளும் புகுந்து விட்டதால் இதற்கு முன் அருளிய வேதங்களையெல்லாம் உள்ளடக்கி உலக முடிவு நாள் வரைக்கும் வரக் கூடிய மக்களுக்கு குர்ஆனை இறைவன் வழங்கினான். எனவே தான் மற்ற வேதங்களை நான் மதிப்பதோடு பின் பற்றத் தக்கதாக குரஆனைப் பார்க்கிறேன்.

//அது சரி, மேற்கத்திய கல்வி கூடாது என்று கூறும் போகோ ஹராம் என்ற அமைப்பின் ஒரிஜினல் தலைவர் முஹம்மத் யூசுப் என்பவன் தனது followers க்கு “”"பூமி தட்டையானது”"” என்று போதித்தானாம். இது எப்படி இருக்கு?//

யாரும் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் குர்ஆன் பூமியை தட்டை என்று எங்கும் சொல்லவில்லை. இது பற்றி நான் முன்பு விளக்கியும் இருக்கிறேன்.

//Secularism என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர்கள் இந்துக்கள்தான். அதனால்தான் கோவா மாநிலத்தில் இன்றைக்கு டெபுடி முதல்வராக இருப்பவர் Francis D ‘souza என்ற கிறிஸ்தவர் ஆவார்.//

அதனால்தான் 'இந்தியாவை சேர்ந்த அனைவரும் இந்துக்களே' என்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். இப்படி சொல்பவர்களைத்தானே பதவியிலும் அமர்த்துவீர்கள்.

//அது மட்டுமா? முஸ்லிம் வர்த்தகர்களும் முஸ்லிம் வந்தேறிகளும் (=immigrants ) தொழுவதற்காக ஒரு இந்து அரசனால் கேரளாவில் கட்டப்பட்டதுதான் “சேரமான் மசூதி” இது மெக்காவிற்கு அடுத்த 2 வது மிகப் பழமையான மசூதி ஆகும்.//

இந்தியாவின் வந்தேறிகள் யார் என்பது 90 சதமான இந்தியர்களுக்குத் தெரியும். கி.வீரமணியிடம் கேட்டால் ஆதாரங்களோடு பட்டியலிடுவார். அடுத்து கேரளாவில் இருக்கும் சேரமான் பள்ளி என்பது முகமது நபி காலத்திலேயே அவரை சென்று சந்தித்து தனது பெயரை தாஜூதீன் என்று மாற்றிக் கொண்ட சேரமான் பெருமாளின் வாரிசுகள் கட்டிய பள்ளி அது. இது பற்றியும் முன்பு நான் விளக்கியுள்ளேன்.

Saturday, July 26, 2014

பெற்ற தாயை விட மேலானவன் இறைவன் - திருவாசகம்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

-திருவாசகம்



பொருள்:குழந்தைக்கு வேண்டிய பாலை எப்போது தர வேண்டும் என்று நினைத்து நேரமறிந்து தருபவள் தாய். அந்த தாயை விட என் மேல் அன்பு செலுத்தி, நீ என்னுடைய உடலை உருக்கி, எனக்குள் இருக்கும் ஒளியை பெருக்கி, அழிவு இல்லாத தேனையொத்த அறிவினைத் தந்து , வெளியில் இருந்த செல்வமான சிவ பெருமானே,

விளக்கம்:இந்த பாடலில் நம்மை படைத்த இறைவன் தாயை விட ஒரு படி மேல் என்று பாடப்படுகிறது. ஒரு தாய் தனது குழந்தைக்கு பசித்தால் தாய்ப்பாலை புகட்ட முடியும். சிறிது பெரியவனானாலும் அவனுக்கு உணவு வழங்க முடியும். ஆனால் அறிவை வழங்க முடியாது. எல்லோராலும் மதிக்கப்படுகின்ற அந்த வற்றாத அறிவை எனக்கு தந்த இறைவா! என்னை இந்த உலகில் எல்லா செல்வங்களையும் குறைவின்றி தந்து கௌரவமாக வாழச் செய்திருக்கிறாயே! உன்னை நான் வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்! என்கிறார் மணி வாசகர்.

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இறை பக்தி பாடல்கள் இதுபோல் மலிந்து கிடக்கின்றன. ஆனால் அதனை எல்லாம் மறைத்து விட்டு எதற்கும் உதவாத வருணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கிற பார்பனர்களின் ராமாயணம் வலிந்து முன்னிறுத்தப்பட்டு இன்று இந்து வேதங்களின் தரத்தில் பார்க்கப்படுகிறது. வட நாட்டை ஆண்ட ஒரு அரசனின் மகனின் வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்களை மேலும் கற்பனையில் மெருகூட்டி ஒரு அவதார புருஷனாக காட்டப்பட்டு அந்த ராமனின் பெயரால் பல ஆயிரம் உயிர்களையும் காவு கொண்டு விட்டது இந்துத்வா. இது இனி மேலும் தொடராமல் இருக்க வட மொழி நூல்களை தூரமாக்கி திருவாசகம், திருக்குறள், திருமந்திரம் போன்ற தமிழ் நூல்கள் இந்து மக்களை சென்று அடைய வேண்டும். இந்து மதத்தின் மறுமலர்ச்சியை உண்மையிலேயே விரும்பும் இந்து இயக்கங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இதன் மூலமாக மட்டுமே இந்து மதத்தை அழியாமல் காக்க முடியும்.

Friday, July 25, 2014

கோழி முதலா! முட்டை முதலா?

திரு ஜனவி புத்திரன்!

// Dear Mr.Suvanappiriyan!
Can you answer whether the egg first or the hen?//

சந்தேகமே இல்லாமல் கோழிதான். அதன் பிறகுதான் முட்டை வந்தது. இதற்கு ஆதாரமாக உலக மதங்களின் வேத நூல்கள் அனைத்தும் இந்த பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் கடவுளே படைத்ததாக சொல்லுகின்றன. நமது சுய அறிவை உபயோகித்து யோசித்தாலும் கடவுள் படைக்காமல் தானாக எந்த பொருளும் உருவாகி விடாது என்று நமது அறிவே சொல்கிறது.

இதற்கு மாற்றாக கடவுள் படைக்கவில்லை என்று நீங்கள் சொன்னால் அதற்கான ஆதாரத்தை நீங்கள் தான் சமர்ப்பிக்க வேண்டும்.

//From the above book, scientists also say that our earth has totally altered or changed once in 30 million years….once upon a time the north or south pole was in sahara desert!!! or how was the first nuclei taken shape…is a mystery.. Like this a lot on assumptions and hypothesis only.//

'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன எனபதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா?'
21 : 30 –குர்ஆன்

நீங்கள் சொல்வதைத்தான் குர்ஆனும் சொல்கிறது.

பெரு வெடிப்புக் கொள்கை(Big Bang Theory)

'வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள்கள் வியாழனை ஒத்த ஆனால் மிக அடர்த்தியான ஒரு பொருளுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தாலும் அழுத்தத்தாலும் இரசாயன மாற்றத்தாலும் திடீரென வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுகள் வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சற்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.'

பெரு வெடிப்புக் கொள்கையும் குர்ஆனின் வார்த்தைகளும் எந்த அளவு ஒத்து வருகிறது என்பதைப் பாருங்கள்.

//I consider all the muslims and christians in India are my brethren only.
Because just 800 years or so/ 200 years… that our own blood brethren converted into Islam (Maximum under force) and Christianity ( divide and rule,encashing poverty and untouchability)…this is history.I hope that you will never repudiate this.//

ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு சிலர் கட்டாயமாக மாற்றப்பட்டிருக்கலாம். பெரும்பாலானவர் இந்து மதத்தின் வர்ணாசிரமத்துக்கு பயந்தே மாறினர். கட்டாய மத மாற்றம் என்றால் இன்றைய மோடி ஆட்சியில் அனைவரும் தாய் மதம் திரும்ப வேண்டியதுதானே. அனைத்து சலுகைகளும் கிடைக்குமே!

//Can you define who is a “HINDU”? You may please verify with a lawyer, how Hindu is defined in our Law. You will be or for that matter any one will be awe struck,wonder struck and thunder struck….. The line starts like this ….”Other than those who are christians,muslims,sicks etc. ” like that it narrates.. No one can define a Hindu…those who were living under the SIND RIVER were all known or called as Hindus by the west or others..
The biggest freedom in our so called hindu culture is….you can be a theist or an atheist,believer or non-believer,iconoclast ,parents as gods,even a grass can be considered as god,no compulsion to go to temples or follow rites or rituals,consider husband as god or vice versa…like that you can go on summarising……..simply you are a FREE BIRD to fly of your own!!!!!!!!!!!!!!!!!!//

நீங்கள் சுதந்திர பறவையாக இருந்து கொள்ளுங்கள். யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தலித்துகளை நசுக்கி, முஸ்லிம்களை இம்சித்து அந்த சுதந்திரத்தை பெற முயற்சித்தால் அதனை நாங்கள் எதிர்க்கலாம் இல்லையா?

நேற்றைய செய்தியை பார்த்திருப்பீர்கள். டெல்லியில் சிவசேனா எம்பி உணவில் தரம் இல்லை என்பதற்காக நோன்பிருந்த ஒரு முஸ்லிமை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்து அவரை இம்சித்துள்ளார். இது தான் நீங்கள் காட்டும் சகிப்புத் தன்மையா? சுதந்திர பறவை என்று சொன்னது இதைத்தானா?

//If only you read Thrukkural,Thrumanthiram,Thiruvachaham..etc you could imbibe a lot.( Please do read without any prejudice…at least for the sake of what they all deal with?//

திருக்குறளின், திருமந்திரத்தின் பெருமைகளை வியந்து பல பதிவுகளே எழுதியுள்ளேன். இனியும் எழுதுவேன்.

//Last but not least,I love all human beings besides all living creatures .
The human birth is a rarest gift!!
Let us try to understand with right thinking and approach.
Peace..Peace..and Peace…….& Patience ..patience…and patience is the real TRUTH or GOD or LIFE.//

அதைத்தான் நானும் சொல்கிறேன். இந்த உலகில் நாம் வாழப் போவது 60 வருடமோ எழுபது வருடமோ. வாழும் காலங்களில் மற்ற உயிர்களை துன்புறுத்தாது அமைதி வழியில் நமது பயணத்தை இந்த பூமியில் தொடர்வோம்.

'ஒன்றே குலம்: ஒருவனே தேவன்'

'யாதும் ஊரே யாவரும் கேளீர்'

https://soundcloud.com/arrahman/karnamotcham

அமைதிக்காக ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பாடலையும் கேளுங்கள்.......



இறந்த ஒரு ஆன்மா இன்னொரு உடலில் ஏறிக் கொள்ளுமா?

ஆனந்த் சாகர்!

//ஒவ்வொரு பௌதீக பிரபஞ்சத்திலும்(physical universe) கோடி கோடியான நட்சத்திரங்களும்(சூரியன்கள்) அவற்றை மையமாக வைத்து சுற்றிவருகின்ற பல கோடி கோடி கோடி கோடியான பூமி போன்ற கிரகங்களும் இருக்கின்றன. அவைகளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அங்கிருந்தும் சில ஆன்மாக்கள் இந்த நமது பூமியில் பிறப்பெடுக்கின்றன. அப்படியே இங்கிருந்தும் சில ஆன்மாக்கள் அந்த கிரகங்களில் பிறப்பெடுக்கின்றன.//

முதல் பாதி சரி. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மறு பாதியான அங்கிருந்து உயிர்கள் இங்கு வருவதும் இங்கிருந்து உயிர்கள் அங்கு போவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஏனெனில் பூமியன் தட்ப வெப்பத்தை தாங்கும் அளவிலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். சந்திரனுக்கு நாம் செல்ல இங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கிறோம். அங்கு சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. மற்ற பல கொள்களை நீங்கள் நெருங்கவே முடியாது. அந்த அளவு வெப்பம். இன்னும் சில கோள்களில் தாங்க முடியாத குளிர். உறைந்து விடுவீர்கள். எனவே மற்ற கோள்களில் உள்ள உயிர்கள் பூமிக்கு வருவதென்பது நடைமுறை சாத்தியமில்லாதது. அறிவியல் அறிஞர்களால் இதனை நிரூபிக்கவும் முடியவில்லை.

//மேலும் ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருக்க முடியும். அதாவது ஒரே ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருந்து உடல் அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது குவாண்டம் இயற்பியல் (quantum physics) மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உதாரணதிற்கு ஒரே ஆன்மாவானது ஒரே நேரத்தில் இருவேறு நபர்களாக இருவேறு உடல்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும். இந்த இரு நபர்களும் இருவேறு நபர்களாக கருதப்படுவார்கள். ஆனால் அவர்கள் இருவரும் உண்மையிலேயே ஒரே நபர்தான். எனவே உயிர்களின்(உடல்களின்) எண்ணிக்கை கூடுவது என்பது புதிரான விஷயம் அல்ல.//

நீங்கள் அதிகம் விட்டலாச்சாரியா படங்களை விரும்பி பார்ப்பவர் என்று நினைக்கிறேன். அல்லது ரஜினியின் சந்திரமுகி படத்தை பார்த்த பாதிப்பாகவும் இருக்கலாம்.  ஒரு உடலில் இன்னொரு உயிரின் ஆன்மா நுழைவது என்பது படத்துக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். நிஜ வாழ்க்கையில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை நண்பரே! சவுதி அரேபியாவில் பேய் என்றோ, அல்லது பேயை விரட்டுகிறேன் என்றோ யாராவது மந்திரிக்க ஆரம்பித்தால் அவரை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளி விடுவார்கள். ஏனெனில் குர்ஆனின் கட்டளைப் படி பேய் பிசாசு என்பது இல்லாத ஒன்று. அறிவியலும் பேய் பிசாசுகளை ஒத்துக் கொள்வதில்லை.

நான் கேட்ட கேள்விக்கு இது வரை யாரும் பதில் சொல்லவில்லை.

அதாவது ஒருவர் முன்பு ஒரு நாயை கொடுமைபடுத்தியிருந்தால் மறு பிறவியில் அந்த நாய் மனிதனாக பிறந்து போன பிறவியில் நாயை கொடுமை படுத்தியவன் நாயாக மறு பிறவி எடுப்பான் என்பது உங்களின் கொள்கை. பாதிப்படைந்த அந்த நாய் இந்த மனிதனை இந்த பிறவியில் கொடுமைப்படுத்துவான் என்பது மறுபிறவியின் தத்துவம். அந்த தத்துவத்தின் படி இன்ன குற்றத்திற்காக இவன் இவ்வாறாக படைக்கப்பட்டான் என்று அவனுக்கு தெரிய வேண்டும் அல்லவா? இத்தனை கோடி ஆண்டு ஆகியும் ஒருவருக்கும் தான் முற்பிறவியில் என்னவாக இருந்தோம். நமது ஏழு பிறவியில் இது எத்தனையாவது பிறவி என்ற உண்மை தெரிந்திருக்க வேண்டும். இப்படி எதுவுமே தெரியாமல் அவனை மறுபிறவியில் இழிவானவாக பிறக்க வைப்பதில் என்ன நன்மை கிடைக்க முடியும்?

தான் எதற்காக தண்டிக்கப்படுகிறோம் என்ற காரணமே தெரியாமல் ஒருவன் துன்பத்தை அனுபவிப்பது அவனை எந்த வகையில் நேர்வழியில் கொண்டு வரும்? இதைக் கொண்டு மற்றவர்கள் எப்படி பாடம் படிக்க முடியும்?

மேலும் உயிரைப் பற்றி இன்றைய அறிவியல் உலகம் ஒரு தீர்க்கமான முடிவுக்கே வர இயலவில்லை. அது ஒரு பெரும் புதிராக இருப்பதாக அறிவியல் அறிஞர்களே ஒத்துக் கொள்கின்றனர். உயிருக்கே சரியான விளக்கம் கிடைக்காத போது ஒரு உயிர் மற்றொரு உயிரில் ஏறிக் கொள்வதாகவும், மற்ற கோள்களில் இருந்து சில உயிர்கள் நமது பூமியில் மனிதனின் உடலில் புகுந்து கொள்வதாகவும் சொல்வதை எங்கிருந்து படித்தீர்கள்? இது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா? சங்கரிடம் இதைப் பற்றி சொன்னால் எந்திரன் போல ஒரு சினிமா எடுக்க வேண்டுமானால் இந்த கதை உதவும் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராத ஒன்று.


Thursday, July 24, 2014

மறுமை நாளில் இறந்த குழந்தைகள் பேசுமா?

மறுமை நாளில் இறந்த குழந்தைகள் பேசுமா?

ஹானஸ்ட் மேன்!

//இறைவன் ஒரு உருவம் கொடுப்பது குழந்தை பருவத்தில்தான். அப்படியானால் மறுமை நாளில் அதே உருவத்தில் திரும்ப உயிர் கொடுக்கபடுவான் என்றால் குழந்தையை மறுமை நாளில் விசாரிப்பது நியாயமா? பேசமுடியாத அந்த குழந்தை விசாரணையின்போது பதில் சொல்ல இயலுமா?//



எந்த வயதில் இறக்கிறீர்களோ அந்த உருவத்திலேயே எழுப்பப்படுவீர்கள். ஒரு துளி இந்திரியத்தில் தாய் தகப்பனின் முகம், நிறம், குரல், குணம் என்று அனைத்தையும் ஜிப் செய்து அடைத்து வைத்த இறைவனால் ஒரு குழந்தையை பேச வைக்க முடியாதா? ஒரு குழந்தையை எந்த நியாயமும் இன்றி கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க அந்த குழந்தையிடம் விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதாக இறைவன் கூறுகிறான். அன்றைய அரபுகள் நபிகள் காலத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தால் அதனை உயிரோடு புதைத்து விடுவார்களாம். உசிலம் பட்டியிலும், சேலம் போன்ற பகுதிகளிலும் பெண் குழந்தை பிறந்தவுடன் கள்ளிப் பால்,அல்லது நெல் மணிகளைக் கொடுத்து கொன்று விடும் பழக்கம் இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இப்படிகொல்லப் பட்ட பெண் குழந்தைகள் மறுமை நாளில் இறைவனுக்கு முன்னால் தன் பெற்றோர்களின் மேல் 'எந்த காரணத்திற்காக ஒரு பாவமும் அறியாத நாங்கள் கொல்லப் பட்டோம்' என்று வழக்கு தொடர்வார்கள் என்று இந்த வசனம் சொல்லிக் காட்டுகிறது.

'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.'

-குர்ஆன் 17 : 31


'என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப் பட்ட பெண் குழந்தை மறுமை நாளில் விசாரிக்கும் போது'

-குர்ஆன் 81 :8,9


//புதன் கிழமை (அதாவது நேற்று) நைஜீரியாவில் கடுனா என்ற இடத்தில 2 குண்டுகள் வெடித்து 42 பேர் அல்லாவின் அடி சேர்ந்தனர். அது மட்டுமா? பாக்தாத்தில் கார் குண்டு வெடித்து 23 பேர் இறந்து 40 பேர் காயமுற்றனர். (இவை இரண்டும் இன்று வந்த செய்திதாளின் செய்தி. இப்படி தினசரி வந்த வண்ணம்தான் உள்ளது)//

ஈராக், நைஜீரியா, லிபியா, சிரியா போன்ற நாடுகள் முன்பு அமைதி தவழும் நாடுகளாகவே இருந்தன. அங்குள்ள கனிம வளங்களை சுரண்டுவதற்காக அமெரிக்காவும் அதன் அடிவருடியான இஸ்ரேலும் ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்ற பொய்க் காரணத்தை கூறி அந்த நாடுகளின் மீது பொர் தோடுத்தனர். லிபியாவில் கடாபியை எதிர்க்கும் குழுவுக்கு ஆதரவு நல்கினர். அன்றிருந்து அந்த நாடுகள் நிம்மதி இழந்து தவிக்கிறது. இதற்கு முழு காரணமும் அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் ஆகும். நமது நாட்டிலும் குண்டு வெடிப்புகள், பெண் கொடுமை, கொலைகள் தினமும் நடந்தே வருகின்றன. அதற்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் சீரழிந்ததாக காட்ட முடியுமா?

//சரியாக இருந்தால் அவரை பின்பற்றும் முஸ்லிம்கள் இந்த குற்றங்களை செய்ய கூடாதே! ஏனென்றால் மனிதர்களை நேர்வழி படுத்ததானே குரான் அருளப்பட்டதாக சொல்கிறீர்கள். ஆனால் திருந்தவில்லையே!//

நபியையும் குர்ஆனையும் அனுப்பி கூடவே ஷைத்தானையும் இறைவன் அனுப்பியுள்ளான். நல் வழியில் செல்லாமல் தடுப்பது இந்த சாத்தானின் வேலை. அதனையும் மீறி இந்த பரீட்சையில் வெற்றி பெறுபவர்களே பாக்கியசாலிகள்.

//அது என்ன பெரியார் மண்? புதுசா ஏதேனும் சந்தையில் வந்திருக்கா?//

பெரியாரை அதிகம் மதிக்கும் அவரது கொள்கைகளை அதிகம் பின் பற்றும் இந்துக்களை கொண்ட நாடு நமது தமிழ்நாடு என்பது அதற்கு அர்த்தம்.

//வன்முறை பெரியார் மண்ணில் ஏற்படாது என்றால் அந்த ராமசாமி ராமரை செருப்பால் அடித்தாரே அதற்கு வன்முறை என்று பெயரில்லையா? உங்களுக்கு அது நன்முறையா?//

பெரியார் ராமர் என்ற மனிதனை அடிக்கவில்லை. ராமர் என்ற சிலையைத்தான் அடித்தார். அந்த அளவு அந்த மதத்தினால் பாதிப்படைந்ததனால் எழுந்த ஒரு வேகம் அது. ஆனால் பலரும் மதிக்கும் ஒருவரின் சிலையை இவ்வாறு பொதுவில் அடித்தது எனக்கு உடன்பாடு இல்லை. அது மேலும் குழப்பங்களையே உண்டு பண்ணும் என்பதே எனது நிலை. கல்வியிலும் சமூக அந்தஸ்திலும் தமிழர்களை தலை நிமிரச் செய்ததில் பெரியாரின் பங்கை அவ்வளவு லேசாக மதிப்பிட முடியாது. ஆனால் அதற்கு பின்னால் வந்த அவரது தம்பிகள் தங்களின் வாரிசுகளை முன்னிறுத்தி பெரியாரின் வழியை புறக்கணித்ததால்தான் இன்று தமிழன் டாஸ்மார்க்கில் க்யூவில் நிற்கிறான். உங்கள் ஆர்எஸ்எஸிடம் சொல்லி குடியால் அழியும் தமிழர்களை காக்க முயற்சி செய்யுங்கள்.


Tuesday, July 22, 2014

மலர் மன்னன் சொல்லுவார் சுதந்திரத்தை இழப்பார்கள் என்று!

மலர் மன்னன் சொல்லுவார் சுதந்திரத்தை இழப்பார்கள் என்று!

திரு பாண்டியன்!

//ஹிந்து மதத்திற்கென்று ஒரு standard code இல்லை இங்கு. யாரோ சொன்னார் , புக் இல் உள்ள நம்பர் சொல்லியது என்று இங்கு யாரும் அதை குருட்டுத்தனமாக ஃபாலொ பண்ணுவது இல்லை.//

பிறகு எதற்கு கோவிலில் சென்று சாமி கும்பிடுகிறீர்கள்? அந்த சாமியைக் கும்பிடும்போது சமஸ்கிரதத்தில் ஸ்லோகங்களை ஒரு பார்பனரை சொல்ல வைத்து அவரிடமிருந்து பிரசாதமும் வாங்கிச் செல்கிறீர்கள். கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும். எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். என்று கட்டளைகளை நீங்கள் பின் பற்றுவதில்லையா?

மனு ஸ்ருமிதி ஒரு இந்து எப்படி நடக்க வேண்டும். ஒரு பார்பனரிடம் மற்ற சாதி இந்துக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சட்டதிட்டங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளதே! திருமணம் இப்படித்தான் செய்ய வேண்டும். என்று சட்டங்கள் வரிசையாக உள்ளதே. ஆக உலகின் எந்த மதமாக இருந்தாலும் அந்நந்த மதத்துக்கென்று சில சட்டங்கள்: சில சம்பிரதாயங்கள் இருந்தே வருகிறது. இந்து, முஸ்லிம், கிறித்தவ, யூத மதத்தவர் அதனை (உங்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால்) குருட்டுத் தனமாக பின்பற்றியே வருகின்றனர். இதற்கு இந்து மதம் மட்டும் விதி விலக்கன்று.

//மலர்மன்னன் சொல்லுவார் , இங்கு இருந்து மதம் மாறுபவர்கள் முதலில் இழப்பது சுதந்திரத்தை என்று ..//

எனது மூதாதையர் முன்பு இந்துக்கள். இன்று நான் ஒரு முஸ்லிம். இப்படி இஸ்லாமுக்கு மாறியதால் நான் எந்த சுதந்திரத்தை இழந்து விட்டேன் என்று மலர் மன்னன் ஆதங்கப்படுகிறார். கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி, திருமணம், பொருளீட்டுதல் என்று எந்த துறையிலும் நான் இஸ்லாமியன் என்பதால் பின் வாங்கவில்லை. எனது சுதந்திரத்தை இழக்கவுமில்லை. சொல்லப் போனால் இப்பொழுதுதான் எனக்கு அதிக சுதந்திரமும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது.

நான் இந்துவாகவே இருந்திருந்தால் ஸ்ரீரங்கம் கோவிலின் கருவறைக்குள் எங்களையும் அனுமதியுங்கள் என்று இன்று கும்பலாக கோஷம் போட்டுக் கொண்டிருப்பேன். பக்தி முத்திப் போய் திருமணத்தையும் வெறுத்து இந்து மதம் காட்டும் சாமியாராகக் கூட மாறியிருப்பேன்.(நித்தியானந்தவைப் போல் ஒரு ஆசிரமத்தையும் இது வரை உண்டாக்கியிருப்பேன்) :-) தேரை அந்த சாதி இழுப்பதா அல்லது இந்த சாதி இழுப்பதா என்று பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பேன். அர்ச்சகராக பட்ட படிப்பு படித்த பின்னும் கோவில்களில் எங்களை ஏன் ஆனுமதிப்பதில்லை என்று ஒவ்வொரு கோர்டாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பேன். இரட்டை குவளை முறை, அக்ரஹார ஒதுக்கல், பொது குளத்தில் தண்ணீர் எடுக்க தடுத்தல் என்று தலித்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டித்து போராட்டமெல்லாம் நடத்திக் கொண்டிருப்பேன். சிதம்பரம் கோவிலில் தமிழில் இறைவனை பாட போராட்டம் நடத்திக் கொண்டிருப்பேன். வன்னியர்களும், தேவர்களும் தலித்களுக்கு வருடா வருடம் இழைத்து வரும் கொடுமைகளை தட்டிக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

ஆனால் அதற்கெல்லாம் இன்று அவசியம் இல்லை. ஏனெனில் நான் இன்று ஒரு இஸ்லாமியன். இதற்காக எனது மூதாதையருக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கும் நன்றி செலுத்திக் கொள்கிறேன்.

மலர் மன்னன் என்னை 'பேராண்டி' என்று செல்லமாக அழைப்பார். ஆனால் இன்று அவர் நம்மிடம் இல்லை. அறியாமல் செய்த அவரது பாவங்களை மன்னித்து இறைவன் அவரை பொருந்திக் கொள்வானாக!

விதியைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

ஹானஸ்ட் மேன்!

//மறுபிறவி இல்லை என்று மறுப்பவரின் பார்வைக்கு: “”இப்போது எவ்வாறு அவன் உங்களை படைத்துள்ளானோ இதே போன்று ‘மீண்டும்’ நீங்கள் படைக்கபடுவீர்கள்” (ஆதாரம் -குரான் 7 : 29) இதற்கு என்ன பொருள்?//

இதில் உங்களுக்கு என்ன குழப்பம்? இந்த உலகத்தில் நாம் வாழும் போது இறைவனால் ஒரு உருவம் கொடுக்கப்படுகிறோம். உருவம் கொடக்கப்பட்ட அந்த மனிதன் இறந்து மண்ணோடு மண்ணாகி விடுகின்றான். அதன் பின்னர் மறுமை நாளில் அவன் உலகில் எந்த உருவத்தில் வாழ்ந்தானோ அதே உருவத்தில் திரும்பவும் உயிர் கொடுக்கப்படுவான் என்கிறது குர்ஆன். இதில் உங்களுக்கு என்ன குழப்பம்? இந்த வசனம் நீங்கள் கூறும் மறு பிறவியை எப்படி ஆதரிக்கும்?

//எல்லாவற்றிற்கும் அல்லா தான் காரணம் என்று தெரிகிறது.. அப்படியிருக்க ஒன்று இந்துக்களின் மனத்தை மாற்றவேண்டும். அல்லது இந்துக்கள் அனைவரையும் மலடிகளாக மலடுகலாக ஆக்கி அந்த இனமே அழிந்து போக செய்யவேண்டும். அந்த ஆற்றல் உடையவன் தானே அல்லா? அவ்வாறு அவர் செய்யட்டுமே!//

நீங்கள் கேட்பது விதி சம்பந்தமான கேள்வி. இந்த விதியைப் பற்றி அதிகம் சர்ச்சை செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டுள்ளார். இருந்தாலும் ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். இன்றும் நேற்றும் நடந்த எனது விதியைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். நாளை என்ன நடக்கும் என்ற விதி எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு 10 நாளில் நான் இறந்து விடுவேன் என்ற விதி எனக்கு தெரிந்திருந்தால் என்னால் மற்ற நாட்களை சுகமாக கழிக்க முடியுமா? எனவே இந்த விதியைப் பற்றிய ஞானம் நமக்கு மறைவாக்கப்பட்டுள்ளது நமது நன்மைக்காகவே. இது பற்றி குர்ஆன் கூறுகிறது

'உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப் படாமல் இருப்பதற்காகவும் அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான்.'
-குர்ஆன் 57:23

முஸ்லிம்களிடத்தில் தற்கொலைகள் குறைவாக இருப்பதற்கு இந்த வசனத்தை நம்புவதுதான் காரணம். எவ்வளவு துன்பம் வந்தாலும் 'நம் விதியில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது' என்று கூறி தனது பாரத்தை முஸ்லிம்கள் இறைவன் மேல் இறக்கி வைத்து விடுவார்கள். உலகம் முழுவதிலும் தற்கொலை விகிதத்தில் முஸ்லிம்கள் பின் தங்கியிருப்பதற்கு அசைக்க முடியாத இந்த இறை நம்பிக்கையே காரணம்.

'மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர் வழியில் நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்ல என்று முஹம்மதே! கூறுவீராக'
-குர்ஆன் 10:108

இந்த வசனத்தின் மூலம் விதியை காரணம் காட்டி மனிதர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. எது நேர் வழி, எது தீய வழி என்று பகுத்து காட்டப்பட்டு விட்டது. எனவே ஒருவன் தீய செயல் செய்தால் அச்செயலுக்கு அவனே பொறுப்பாளி.

எல்லோரையும் நல்லவர்களாகவே படைத்து விட்டால் பிரச்னையே இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். இப்படி ஒரு அமைப்பை ஏன் இறைவன் ஏற்படுத்தினான் என்ற விபரம் சொல்லப்படவில்லை. அது நமது நன்மையைக் கருதியும் கூட இருக்கலாம். இதற்கான விடையை மறு உலக விசாரணையில் இறைவன் தெளிவு படுத்துவான். அது வரை பொறுப்போமே!

//ஆனால் அந்த பெண்ணை அந்த நிறுவன CEO இணைத்து கேவலமான photos களை மின்னஞ்சலில் அனுபியுள்ளான் இதுதான் நேர்வழியா? கூறும்.//

முஸ்லிம்கள் அனைவரும் பத்தரை மாற்று தங்கங்கள் என்று நான் எங்குமே சொல்லவில்லை. இது போன்று தவறாக நடப்பவர்களிடம் தொழுகை போன்ற இஸ்லாமியருக்கு உரிய நல்லொழுக்கங்கள் இல்லாதிருப்பதை பார்க்கலாம். எல்லா சமூகத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருக்கிறார்கள். இது போன்று சமூகங்களில் உள்ள தீயவர்களை இறைவன் தண்டிப்பான் என்ற உண்மையை உணர்த்தி அவர்களை நேர் வழிப் படுத்த வேண்டும். அந்த சமூகப் பொறுப்பு எனக்கும் உள்ளது உங்களுக்கும் உள்ளது.

மறு பிறவி என்பது சாத்தியமான ஒன்றா?

திரு ஜனவி புத்திரன்!

//ஒரே கேள்வி.. மறுபிறப்பில் ஆபிராமிய மதங்களில் நம்பிக்கை இல்லை//

மறு பிறவி என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு வாழ்வு முறை நடைமுறை சாத்தியமில்லாதது. அது எப்படி என்று இனி பார்ப்போம்.

மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர். நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.

இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.

அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?

இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.

ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.

இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?
-------------------------------------------------------------------------------------------------
மறுஉலக வாழ்வைத்தான் இந்து மக்கள் மறு பிறவி என்று தவறாக விளங்கிக் கொண்டனர். அது பற்றி நான் முன்பு எழுதிய இடுகையை மீண்டும் மீள் பதிவு செய்கிறேன்.
எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். நம் அனைவருக்கும் மரணம் நிச்சயிக்கப் பட்ட ஒன்று. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டா? இல்லையா? இஸ்லாம் மறுமைக்குப் பின் வாழ்வு உண்டு என்று குர்ஆனில் பல இடங்களில் தெளிவாக்குகிறது. இதைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்

ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
21 : 35 - குர்ஆன்

ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்

பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
3 : 133 -குர்ஆன்

மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
43 : 70 -குர்ஆன்

சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்

நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.

- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

மேலே நான் கொடுத்துள்ள இந்து மத வேத ஆதாரங்களும் இஸ்லாமிய வேத ஆதாரங்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இந்து மதமும் மறு உலக வாழ்க்கையை வலியுறுத்துகிறது. மறு பிறவி என்பது இந்து மத கோட்பாடு அல்ல. அது தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒன்று என்று விளங்கிக் கொள்ளலாம்.

Monday, July 21, 2014

தமிழக முதல்வரின் இஃப்தார் விருந்தும் அழகிய பேச்சும்.



'நபிகள் நாயகத்தின் கட்டளைகளை நமது நாடு பின்பற்றினால் அமைதிப் பூங்காவாக திகழும். சொல்வதோடு மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டியவர் நபிகள் நாயகம். அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன. நோன்பிருக்கும் இந்நன்னாளில் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'

அருமையான பேச்சு. தமிழக முதல்வரிடம் தற்போது மிகுந்த நிதானம் தென்படுகிறது. பேச்சில் முதிர்ச்சி தெரிகிறது. நபிகள் நாயகம் குடியின் தீமையை அழகுற அந்த நபருக்கு எடுத்துரைத்தார். அதன்படி முதல்வர் அவர்கள் சிறிது சிறிதாக மதுக் கடைகளை மூட முயற்சிப்பாராக! இலவசங்களை நிறுத்தினாலும் பரவாயில்லை. தமிழர்களின் எதிர்காலமே சூன்யமாகி விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு குடி நமது தமிழர்களை ஆட்டி படைக்கிறது. இந்நன்னாளில் இதற்கு நிரந்தர தீர்வை தமிழக முதல்வர் காண்பாராக!

இந்துவாக பிறந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?

திரு ஜனவி புத்திரன்!

//ஒரே கேள்வி.. மறுபிறப்பில் ஆபிராமிய மதங்களில் நம்பிக்கை இல்லை. ஒரே பிறப்புதான்.. அந்த ஒரே பிறப்பை, என்னை ஏன் ஹிந்துவாக பிறக்க வைத்தான் அல்லாஹ்? ஹிந்து தாய் தந்தைக்கு பிறந்தால், நான் ஹிந்துவாகத்தான் வளர்க்க படுவேன். யூதன் யூதனாக வளர்க்க படுவான். கிறிஸ்துவன் கிருதுவனாக வளர்க்க படுவான். பவுத்தான் பவுத்தனாக வளர்க்க படுவான்..//

இங்கு இறைவனை குற்றம் சொல்ல முடியாது. ஆதாமும் ஏவாளும் முதல் மனிதர்கள் இந்த உலகத்துக்கு. அதன் பின் நமது காலம் வரை இந்த உலகத்துக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான இறைத் தூதர்கள் மனிதர்களை நேர் வழிப் படுத்த வந்துள்ளார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தூதரை அனுப்பியுள்ளதாக குர்ஆனில் இறைவன் கூறுகிறான். ஆனால் மனிதனோ தனக்கு அருளப்பட்ட வேதத்தை சில காலத்துக்குப் பிறகு தனது வசதிக்காக மாற்றி விடுகின்றான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இறைத் தூதரான ஏசு நாதரை இன்று கிறித்தவர்கள் கடவுளாக மாற்றியதை பார்க்கிறோம். அவரும் நபிகள் நாயகத்தைப் போல ஒரு இறைத் தூதரே! அதே போல் இந்து மத வேதங்களும் ஏக தெய்வக் கொள்கையையே பறை சாற்றுகின்றன. ஆனால் அந்த வேதத்தை மொழி பெயர்க்காமல் தெருவுக்கு ஒரு கடவுளை உண்டாக்கிக் கொண்டது யார் தவறு? 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதூனே நமது தமிழர்களின் பண்பாடு. அதனைத்தானே இஸ்லாமும் போதிக்கிறது?

ஒரு இந்துவுக்கு மகனாக பிறந்ததனால் நீங்கள் இந்துவுவாக உள்ளீர்கள். ஆனால் உங்கள் மூதாதையரில் யார் ஏக தெய்வ கொள்கையில் இருந்து பல தெய்வ கொள்கைக்கு மாறினாரோ அவரையே இறைவன் குற்றம் பிடிப்பான். ஆனால் உண்மை விளங்கிய பின்னும் முரட்டுப் பிடிவாதம் பிடித்தால் அவர்களை இறைவன் தண்டிப்பதாக கூறுகிறான். இந்த காலத்தில் உங்களுக்கு அனைத்து வேதங்களையும் பார்வையிட வசதியுள்ளது. இணையம் மிக அழகிய வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உலக மதங்கள் அனைத்தையும் நமது உள்ளங் கையில் அடக்கி விடலாம். அந்த அளவு வசதிகள் வந்து விட்டது. இவ்வளவு வசதிகள் வந்த பின்னும் இத்தனை ஆதாரங்கள் இருந்த பின்னும் நான் எனது தாய் தந்தையர் வழியையே பின் பற்றுவேன் என்று அடம் பிடிப்பது யாருடைய குற்றம்? இதற்கு இறைவன் எப்படி பொறுப்பாவான்.

இனி இறைவன் பேசுகிறான் அதனைக் கேளுங்கள்:

இறைவனின் தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை உண்டு பண்ணிக் கொண்டு மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் மாதிரி ஆகி விடாதீர்கள். அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (குர்ஆன் 3:105)

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கிறார்களோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமையுடையவர்களும் சபிக்கிறார்கள்”. (2 : 159)

ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நல்லோருக்கு நன்மாராயங் கூறுவோராகவும் தீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களுக்கிடையே ஏற்படும் விகற்பங்களைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப்பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்களும் அத்தாட்சிகளும், வந்த பின்னரும் தம்மிடையே உண்டான பொறாமை, பகை ஆகியவற்றின் காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான்; இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (2 : 213)

“எவர்கள் தங்களுடைய மார்க்கத்தைத் தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் நபியே! உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்” (6 : 159)

“அவர்களுக்கு (மார்க்க) விஷயத்தில் தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால் அவர்களுக்கு (வேத) ஞானம் வந்த பின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராயபேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்”. (45 : 17)

“நிச்சயமாக உங்கள் சமுதாயம் – வேற்றுமை ஏதுமில்லா ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் ரப்பு: ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள்.
ஆனால் பிந்தைய சந்ததியர் தங்கள் மார்க்கக் காரியத்தில் பிளவுண்டு (பல பிளவுகளாகப்) போயினர், (ஆனால் இறுதியில்) இவர்கள் யாவரும் நம்மிடையே மீள்பவர்களாக இருக்கிறார்கள்”. (21 : 92, 93)

“நிச்சயமாக இதுவே (குர்ஆன்) என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்து விடும்; நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான்” (6 : 153)


டெல்லி இமாம் பதவிக்கு சாதி பார்க்கப்படுகிறதே!

டெல்லி இமாம் பதவிக்கு சாதி பார்க்கப்படுகிறதே!

//“Therefore, Emperor Shahjahan wrote to the Shah of Bukhara to send for the exalted post of the Imamat of Jama Masjid a man noble by birth, descendant of the Holy Prophet from both of his parents, with high learning and high qualities, i.e., inwardly and outwardly an outstanding figure of the time.”//

அண்ணன் ‘அரவிந்தன் நீலகண்டனின் அல்லக்கை’ தம்பி Maran அவர்களே,
உங்களுக்கு எதுக்கு இந்த பதில் சொல்லும் வெட்டி பொல்லாப்பு அப்பு?
ஷாஜஹான் ஒரு கூமுட்டை.

அந்த ஆளு ஓழுங்கான முஸ்லிமே இல்லை.

அவன் சொன்னது செஞ்சது பெரும்பாலும் ஏறுக்கு மாறான தவறுகள்.
அவன் ஒன்னும் இஸ்லாமின் அத்தாரிட்டி இல்லை.

அவனது சட்டங்கள் ஒன்னும் இஸ்லாமிய சட்டங்கள் ஆகாது. அறியவும்.

அவனுக்கு வால் பிடிக்க வேண்டாம்.

மேலும், நீங்க தந்த சுட்டியில், அறிவும் படிப்பும் உள்ள அறிஞர் வேண்டும்ன்னு சாஜகான் கேட்கிறான். இது சரி. ஆனால், நபியின் வாரிசாக இருந்தால் நல்லதுன்னும் கேட்கிறான். இது இஸ்லாத்தில் தேவை அற்றது.
நபியின் வாரிசாக ஒரு பாமர படிக்காத முட்டாப்பயல் எவனாச்சும் அங்கெ இருந்து இருந்தால் அவன் டெல்லிக்கு அனுப்பப்பட்டு இருந்திருக்கவே மாட்டான். சாஜகான் அவனை திருப்ப அனுப்பி இருந்திருப்பான். ஆக, இங்கே இமாம் ஆவுறதுக்கு முக்கியம் கல்வி. வாரிசு அல்ல.

இன்றைய இமாமுக்கு வாரிசு இல்லாமல் போனாலோ அல்லது புகாரியின் மகன் படிக்காத முட்டாளோவோ இருந்தாலோ அல்லது கேடு கேட்ட குடிகாரனாக இருந்தாலோ, மக்கள் விரட்டி அடித்து விடுவார்கள் என்பதையும் அறியவும். இமாமாக முடியாது என்பதையும் அறியவும்.

மேலும், டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் இமாமின் வாரிசுதான் இமாம் ஆகலாம் என்பதும் இஸ்லாத்துக்கு எதிரானது. ஷரியத் கோர்ட்டில் யாராவது வழக்கு போட்டால் புகாரியின் வேட்டி கிழிஞ்சிடும்.

அடுத்து,

முக்கியமாக, ஆனானப்பட்ட மக்காவிலுள்ள மஸ்ஜித்திலும், நபியே கைப்பட கட்டிய மதினாவில் உள்ள மஸ்ஜித்திலும் நபியின் வாரிசுகளுக்கு இமாமாக ஆகமுடியாமல் பெப்பே காட்டப்பட்டுவிட்டது. அப்படி வாரிசுகளுக்கு பெப்பே காட்ட சொன்னதே நபி தான். இதுதான் இஸ்லாம். நபியின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு எவனும் பந்தா விட முடியாது இஸ்லாத்தில். அறியவும்.
மீண்டும் சொல்றேன். ஷாஜகான் ஒரு கூமுட்டை. அவன் செஞ்சது ஏகப்பட்டது இஸ்லாத்தில் இல்லாதது. சொல்லாதது. எதிரானது.

அப்புறம்,

மக்கா பத்தியும் சப்பை கட்டி இருக்கார் உங்க பாஸ் அர நீல கண்டன்.
அதுக்கு உங்களின் அர வேக்காட்டு ஆதாரத்த காணோம் தந்தால் அதில் தொடரலாம்.

குறிப்பு >>>
முந்திய கமெண்டில் கொஞ்சம் காணோம். வினவு காரவுக வெட்டி விட்டாக. இதில் என்ன எல்லாம் கொத்துகறி போட போறாகளோ. கமென்ட் முழுசா வருமான்னு தெரியலை.

-நன்றி செம்மல்

தெலுங்கானா அரசு மசூதிகளுக்கு 2 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு!



ரமலான் மாதத்தில் மசூதிகளையும் தர்ஹாக்களையும் புணரமைப்பு செய்து தூய்மைப்படுத்துவதற்காக தெலுங்கானா அரசு 2 கோடியே 20 லட்ச ரூபாயை அரசு நிதியாக ஒதுக்கியுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல பள்ளி வாசல்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கும். ரமலானில் மக்கள் தொழுவதற்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள். அந்த மக்களின் நலனைக் கருதி தெலுங்கானா அரசு ஒதுக்கியுள்ள இந்த நிதி பாராட்டத்தக்க ஒன்றாகும். இதே போல் தமிழக அரசும் பராமரிப்பு வசதியின்றி இருக்கும் பள்ளி வாசல்களை கணக்கிட்டு அரசு நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை வைப்போம்.

---------------------------------------------------------------

ஆந்திராவின் சிங்கம் அஸாவுத்தீன் உவைசி பள்ளிவாசலில் தனது ரமலான் உரையில் பேசிய அழகிய பேச்சின் தமிழாக்கத்தைப் பார்ப்போம். 'யா அல்லாஹ்! மறுமை நாளில் காசாவில் இறந்த அந்த பிஞ்சு குழந்தைகள் உனது முன்னால் அந்த யூதர்களை காட்டி 'எந்த பாவமும் செய்யாத எங்களை இலக்காக்கிய இந்த இஸ்ரேலியர்களை இறைவா! தண்டிப்பாயாக!' என்று கேட்கும். பெஞ்சமின் நெதன்யாகுவே! அந்த நாளும் வரும். நீ செய்து வரும் அத்தனை அட்டூழியத்திற்கும் இன்றில்லா விட்டாலும் மறுமையில் இதற்கான தண்டனையை அடைந்து கொள்வாய்'

'எனது இளைய சமுதாயமே! 300 மக்கள் தொடர் குண்டு வெடிப்பில் இறந்தாலும் பாலஸ்தீன வீடுகளில் அந்த மக்கள் நோன்பிருக்கும் காட்சியைப் பார்க்கிறீர்கள். 300 க்கும் மேற்பட்ட தங்கள் சொந்தங்களை இழந்தாலும் அந்த மக்கள் தொழுகையை விட்டு விடவில்லை. எனவே இளைய சமுதாயமே! நோன்பிருக்க பழகிக் கொள் தொழுகையை கடைபிடி. முன்பு நம்மிடம் இறை நம்பிக்கை மிகைத்து இருந்தது. எனவே எதிரிகள் நம்மைக் கண்டு பயந்தனர். நம்மிடம் இறை நம்பிக்கை இல்லாது போனது. இன்று கண்டவனும் நம்மை சீண்டிப் பார்க்கிறான். இந்த இழி நிலைக்கு காரணம் நாம் தான். முன்பெல்லாம் மிகச் சிறந்த மருத்துவர்களை நாம் பெற்றிருந்தோம். கல்வியிலும் சிறந்து விளங்கியிருந்தோம். நமக்கு சமூகத்தில் அந்தஸ்து கிடைத்தது. இன்று படிப்பை தொலைத்தோம்: அரசு வேலைகளை தொலைத்தோம். இன்று பலராலும் எள்ளி நகையாடப்படுகிறோம். எனது இளைய சமுதாயமே! படிப்பதில் ஆர்வம் கொள். இறைவனை நினைப்பதில் ஆர்வம் கொள். இழந்த நமது கௌரவத்தை இறைவன் நாடினால் திரும்பவும் பெறலாம்.'

Sunday, July 20, 2014

சூரிய ஒளிகளின் ஊடுருவும் தன்மை - இறை மறுப்பாளர்களின் இதயம்!



'இவர்களது தன்மை வானத்திலிருந்து விழும் மழை போன்றது. அதில் இருள்களும், இடியும், மின்னலும் உள்ளன. இடி முழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தமது விரல்களைக் காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். ஏக இறைவனை ஏற்க மறுப்போரை இறைவன் முழுமையாக அறிபவன்.'

-குர்ஆன் 2:19


அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களின் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்து விட்டான்: இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது: மேலும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.

-குர்ஆன் 2:6


மழை மேகங்களானது 20 லிருந்து 260 சதுர மீட்டர் (10 லிருந்து 100 சதுர மைல்கள்) பரப்பளவில் விரிந்து பரந்துள்ளது. மேலும் செங்குத்தான உயரத்தில் 9000 லிருந்து 12000 மீட்டர் ( 30000 லிருந்து 40000 அடி வரை) பிரம்மாண்டமான தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பிரம்மாண்டமான கட்டுமானத்தில் நீர் சூழ்ந்த மேகத்தின் அடிப்பகுதியானது கருமை நிறத்தில் நமக்கு காட்சியளிக்கிறது. சூரியனின் ஒளிக்கதிர்களானது இந்த பிரம்மாண்டமான நீர் சூழ்ந்த மேகத்தை ஊடுருவி பூமிக்கு அதன் வெளிச்சத்தை அனுப்புவது என்பது இயலாத ஒன்று. ஏனெனில் மேகத்தின் கட்டுமானத்தில் அதிகமான குளிர்ந்த தண்ணீரும் ஐஸ் கட்டிகளும் இருப்பதே காரணம். இது போன்ற நேரங்களில் மிக சொற்பமான சூரிய கதிர்களே நமது பூமியை வந்தடைகின்றன.

எப்படி மேகத்தின் கருமையை ஊடுருவி சூரிய ஒளி பூமியை வந்தடைவதில்லையோ அது போல இறை மறுப்பாளர்களின்(காஃபிர்களின்) இதயத்தில் மேகத்தைப் போன்ற கருமை சூழ்ந்துள்ளதால் நேர் வழியான இறை கட்டளைகள் அவர்களின் இதயத்தை சென்றடைவதில்லை என்கிறான் இறைவன். அந்த காலத்திய அரபுகள் குர்ஆன் வசனம் காதுகளில் விழுந்து விடாமல் இருக்க பஞ்சை வைத்துக் கொள்வார்களாம். குர்ஆனின் வசனங்களுக்கு அந்த அளவு சக்தி இருக்கிறது என்பதை அந்த மக்கள் உணர்ந்தே இருந்தார்கள்.

இனி இடி மின்னல்களைப் பார்ப்போம்.

ஒரு வித மின் சக்தியானது இருள் சூழ்ந்த அந்த மேகத்தில் இறைவனால் ஏற்படுத்தப்படுகிறது. இந்த மின் ஆற்றலானது உறைந்த பனிக் கட்டிகளை உருகச் செய்து மழையாக கீழே பொழிவிக்கிறது. இதனிடையே காற்றும் அங்கு குறுக்கிடுவதால் அந்த இடத்தில் மிகப் பெரிய மின்னல் உண்டாகிறது. பிளஸ் மைனஸ் என்ற இரு வேறுபட்ட எதிரெதிர் சக்திகள் மோதுவதால் அது மின்னாற்றலாக மாற்றப்பட்டு ஒளி வெள்ளம் ஏற்படுகிறது. அந்த இடத்தில் உள்ள மின் சக்தியானது ஒரு மில்லியன் வால்ட்ஸ் சக்தியை உமிழ்வதாக அறிவியலார் கணித்துள்ளனர்.

இரண்டு மேகத்திரள்களுக்கிடையே இந்த மின் சக்தி ஊடுருவும் போது மின அதிர்வினால் மிகப் பெரிய சப்தம் உண்டாகிறது. அதைத்தான் நாம் இடி என்கிறோம். இது போன்ற நேரங்களில் அந்த இடத்தின் வெப்பமானது 10000 டிகிரி செல்ஷியஸை நெருங்கும் என்கின்றனர் அறிவியலார்.

தகவல் உதவி

"Allahs miracles in the Quran" - Harun yahya



இந்துத்வாவுக்கும் இஸ்ரேலியருக்கும் என்ன தொடர்பு?



இந்துத்வாவுக்குள் மறைந்து இருப்பது இஸ்ரேலிய சிந்தனை என்பதனை விளக்கும் அழகிய கருத்துப்படம். நன்றி: கார்டுனிஸ்டு யூசுப் முன்னா.

நமக்கு ஆச்சரியமாக இருக்கும். எங்கோ ஒரு தமிழகத்தின் மூலையில் இருக்கும் ஒரு பார்ப்பனர் தனது பூணூலை உருவி விட்டுக் கொண்டு இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்கலாம். பிஜேபி ஆட்சியில் எப்போதெல்லாம் அமருகிறதோ அப்போதெல்லாம் இஸ்ரேலிய உறவும் நமது நாட்டு உறவும் பலப்படும். அன்றைய வாஜ்பாய் ஆட்சியிலும் அதுதான் நடந்தது. இன்றைய மோடியின் ஆட்சியிலும் அதே உறவு மேலும் மேம்படுகிறது. இது ஏன் என்று என்றாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

ஆரியர்கள் பல பிரிவுகளாக உலகெங்கும் பிரிந்துள்ளனர். எகிப்தியர்கள், யூதர்கள், ஈரானியர்கள், ரஷ்யர்களில் சில பிரிவினர் மற்றும் நம் ஊர் பாரப்பனர்கள் என்று இவர்கள் அனைவருமே ஒரே இனமாக இருந்து காலப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நாடோடிகளாக சுற்றித் திரிந்து பல நாடுகளிலும் நிரந்தரமாக தங்கி விட்டனர். இவர்களின் முக சாயலும், எந்த செயலிலும் தங்களை முன்னிறுத்தி மற்றவர்களை பின்னுக்கு தள்ளி விடுவதிலும், வாழ்க்கையில் முன்னேற பாவ புண்ணியம் பார்க்காமல் எதனையும் செய்திட துணிந்து விடும் இயல்பும் ஏறத்தாழ அனைவருக்குமே ஒத்து வருவதை நாம் கவனித்திருப்போம். எனவே தான் எங்கோ இருக்கும் சுப்ரமணியம் சுவாமி இஸ்ரேலுக்காக துடிக்கிறார். நமது வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நமது பார்லிமெண்டில் வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார். அதே போல் ஆர்எஸ்எஸில் அங்கம் வகிப்பதில் முன்னணியில் இருப்பதும் பார்ப்பன அம்பிகள் என்பதும் நமக்குத் தெரியும். ஆர்எஸ்எஸூக்கும் இஸ்ரேலுக்கும் எந்த வகையிலெல்லாம் முன்பு தொடர்பு இருந்தது. அது நமது நாட்டை எந்த வகையிலெல்லாம் இன்று வரை அச்சுறுத்திக் கொண்டுள்ளது என்பதை பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் சாராம்சத்தைப் பார்ப்போம்.

ஆசிய நாடுகளில் மிக முக்கியமான நாடாக விளங்குவது நமது இந்தியா. பாகிஸ்தானும் ஓரளவு மனித வளங்களை கொண்ட நாடு. இந்த இரண்டு நாடுகளும் தொழில் துறைகளில் நெருங்கி வர ஆரம்பித்தால் மிகப் பெரிய பொருளாதார மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த இரு நாடுகளும் நட்பு நாடுகளாக மாறுவதில் நேரிடையாக பாதிக்கப்படுவது வேறு இரு நாடுகள். அவை முறையே அமெரிக்காவும் இஸ்ரேலும்.

இந்தியாவிற்கு மிகவும் அதிகமான இராணுவ தளவாடங்களை விற்பனை செய்து கொண்டிருப்பது அமெரிக்காதான். பாகிஸ்தானுக்கு அதிக அளவில் இராணுவத் தளவாடங்களை விற்பனை செய்து கொண்டிருப்பதும் அமெரிக்காவே! இராணுவத் தளவாடங்களை வளரும் நாடுகளான இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு விற்று இலாபம் சம்பாதிப்பதில்தான் அமெரிக்காவின் பொருளாதாரமே நிலை கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இராணுவத் தளவாடங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் நாடு இஸ்ரேல். 2007 முதல் 2012 வரை இந்திய அரசு 50000 கோடி ரூபாயை இராணுவத் தளவாடங்களுக்கு செலவிட இருக்கிறது. இதில் பெரும் பகுதி அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தான் செல்ல இருக்கிறது.

இப்படி நமது நாடு ஏராளமான தொகையை ராணுவத்துக்கு செலவிடக் காரணம் நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைதான். உள் நாட்டு பிரச்னைகளை நமது காவல் துறையை வைத்தே சமாளித்து விடலாம். எனவே நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவதில் நஷ்டத்திற்கு உள்ளாகும் நாடுகள் முதலில் அமெரிக்கா அடுத்து இஸ்ரேல் மூன்றாவது ரஷ்யா. மேலும் நமது நாட்டிலுள்ள வகுப்பு வெறி பாசிஸ்டுகள் என்று பட்டியல் நீள்கிறது.

தங்கள் நாட்டின் பொருளாதார வருவாயை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக பல சூழ்ச்சிகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ வும் இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாத்தும் இந்தியாவில் முழு வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொஸாத் மும்பைக்குப் பக்கத்திலுள்ள தானா என்ற இடத்தில் 770000 சதுர அடியில் 'ப்ளாஸா' என்ற பெயரில் தனது அலுவலகத்தை நிறுவி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்ரேல் நாட்டின் யூத மத குருக்களின் தலைவர் என்று அழைக்கப்படக் கூடிய யோனா மெட்ஸ்கர் (Israels chief robbyYona Metskar) என்பவருக்கும் இந்து தர்ம ஆச்சாரிய சபை தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுக்கும் சில காலம் முன்பு ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் டெல்லியில் உள்ள ஓபராயில் வைத்து 2007 பிப்ரவரி 7 ஆம் நாள் நடைபெற்றது. இதற்கு முதல் நாள்தான் ராம ஜென்ம பூமி புகழ் எல்.கே.அத்வானியின் வீட்டில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றது. சில பத்திரிக்கைகள் அன்று யூத மத தலைவர்கள் பலர் டெல்லி வந்திருந்ததாகவும் அவர்களுக்கும் இங்குள்ள இந்துத்வ தலைவர்களுக்கும் இடையே ஒருநாள் ரகசிய சந்திப்பு ஏற்பட்டதாகவும் கூறின.

ஆதாரம்
ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ்
பிப்ரவரி 07.

இஸ்ரேல் குஜராத் உறவுகள்!

குஜராத்தில் நவராத்திரி இரவுகளில் மக்களை மகிழ்வூட்ட இஸ்ரேலுடைய நடனக் குழு தருவிக்கப்பட்டிருந்தது. நடனக் குழுவை குஜராத் மாநில அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் துறைதான் தருவித்தது. இஸ்ரேல் நடனக்காரிகள் மிகவும் சிக்கனமாகவே ஆடை அணிந்திருந்தனர். ஆடியும் காட்டினர். 24.09.2006 அன்று அவர்கள் ஆடிக்காட்டியதை முதலமைச்சரே நேரில் கண்டு மகிழ்ந்தார்.

இஸ்ரேலிய மங்கையர் ஆபாசமாக ஆடை அணிந்திருந்ததால் மக்கள் வெகுண்டெழுந்து அவர்களை உடனே வெளியேற்றிட வேண்டும் என்றனர். இஸ்ரேலின் நடனக்குழு தலைவர் நாங்கள் வெளியேறிட இயலாது எனக் கூறினார். தங்கள் நாட்டில் மங்கையர் அப்படித்தான் ஆடை அணிவார்கள். அது இஸ்ரேல் நாட்டுப்புற நடனம். அது அப்படித்தான் என்று கூறி விட்டார். அத்தோடு மும்பையிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

மும்பையிலுள்ள இஸ்ரேலிய தொடர்பாளர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டார். மோடி குஜராத் சுற்றுலாத் துறை செயலாளர் ஆர்.எம்.பட்டேல் அவர்களை இஸ்ரேலிய நடனக் குழுவிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார். மன்னிப்பும் கேட்கப்பட்டது. அத்தோடு நடனங்கள் சற்றும் ஆபாசம் குறைவில்லாமல் நடைபெற ஆவணச் செய்யப்பட்டது.

'முதலமைச்சர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் தலையிட்டதால் இஸ்ரேலுக்கும் குஜராத்திற்கும் இடையேயுள்ள உறவுகள் உடைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டன.'

-ஆதாரம்
தி ஹிந்து 29-06-2006

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் இகத்நிரீடன்(22), மோர்ட்சரீலூஷ்(25) அவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவா வந்தனர். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்ல நேற்று கோவா விமான நிலையம் வந்தனர். அவர்களை போலீஸார் சோதனையிட்டபோது அவர்களிடம் 5 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை கோவா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

-தினகரன் 27.02.2007

இஸ்ரேல் மற்றும் நேபாளிகளின் துணையோடு இந்தியாவை இந்து ராஜ்யமாக மாற்றத்தான் சங்பரிவார் தீவிரவாதி பிகேட் வெடிகுணடு தாக்குதலை நடத்தியதாக தீவிரவாத தடுப்புப் படையின் அறிக்கை கூறுகிறது.

தயானந்த பாண்டேயிடம் பறிமுதல் செய்த லேப்டாப்பில் சங்பரிவார் இஸ்ரேலுடன் தொடர்பு கொண்ட போன் நம்பர்கள், தொலைபேசி உரையாடல்கள், வீடியோ காட்சிகள் எல்லாம் இருப்பதாக 4000 பக்கங்கள் கொண்ட ஏ.டி.எஸ்ஸின் அறிக்கை கூறுகிறது.

இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் சங்பரிவாரின் ஒரு அலுவலகம் திறக்கவும், இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற அரசியல் ஆதரவு, மற்றும் ஐ.நா வின் ஒத்துழைப்பு போன்றவற்றை தாங்கள் இஸ்ரேலிடம் கேட்டுள்ளதாகவும் பல அதிர்ச்சி தரும் தகவல்களை லேப்டாப்பிலிருந்து ஆதாரமாக காட்டியுள்ளது ஏ.டி.எஸ். இவை அனைத்து விபரங்களையும் புரோகித் சங்பரிவாருக்கு விளக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இது சம்பந்தமாக இஸ்ரேலுக்கு சங் பரிவாரை சேர்ந்த ஒருவர் போய் வந்ததாகவும் இவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாகவும் மாலேகான் வெடிகுண்டு புகழ் பார்பனரான ஜெனரல் புரோகித் இந்த லேப்டாப்பில் விவரிக்கிறார். முழு அறிக்கையும் வெளி வந்தால்தான் பலரின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும். ஆனால் பல உண்மைகள் வெளி வருவதற்கு முன்பே ஹேமந்த் கர்கரேயை திட்டமிட்டு பாகிஸ்தான் ஆட்களை வைத்து முடித்து விட்டது இந்துத்வா.

செய்திகள் ஆதாரம்
உணர்வு 18-01-2009

மேலே உள்ள பத்திரிக்கை செய்திகளை படித்தால் நமது நாட்டில் இஸ்ரேலின் கை எந்த அளவு நீண்டுள்ளது: அதற்கு நமது நாட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த வகையிலெல்லாம் வழி அமைத்துக் கொடுக்கிறது என்ற உண்மைகள் தெரிந்திருக்கும். ஆனால் ஒன்று. இந்த இந்திய நாட்டில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை இந்த நாட்டை இன்னும் எத்தனை இஸ்ரேல்கள் சேர்ந்தாலும் இந்துத்வா நாடாக மாற்றி விட முடியாது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்பொழுதுதான் சமஸ்கிரதத்தை கட்டாய பாடமாக்க மோடி அரசு முயற்சிக்கிறது. பொது சிவில் சட்டம் கொண்டு வரவும் முயற்சிக்கிறது. இப்படி கொஞ்சம் சொஞ்சமாக தனது இந்துத்வ முகத்தை மோடி அரசு காட்டவும் தொடங்கியுள்ளது. இது மேலும் தொடர்ந்தால் இதனால் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள் அல்ல. 70 சதவீதத்துக்கு மேல் இருக்கும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே பாதிப்புக்கு உள்ளாவர். பாதிப்புக்குள்ளான அவர்களே இந்த இந்துத்வாவை இந்த மண்ணில் இருந்து தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை. அது வரை நாமும் பொறுமை காப்போம்.


Saturday, July 19, 2014

திருமாவளவன் கடைபிடிக்கும் நோன்பு!



நோன்பு வைக்கும் முஸ்லிம்களை அழைத்து, இப்தார் விருந்து கொடுத்து வருபவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன். அத்தகைய விருந்தில் நோன்பாளிகளுடன் பங்கேற்கும் அவர், நோன்பு நோற்காமல் வெறுமனே கஞ்சி குடிப்பதை தவிர்த்து, அவரும் நோன்பிருந்து வருகிறார். 10 ஆண்டுகளாக நோன்பைக் கடைபிடித்து வரும் அவர், தன் சகாக்களையும் நோன்பிருக்கத் தூண்டுகிறார்.

இஸ்லாம் வலியுறுத்தும் நோன்பு என்பது, மதக்கடமை என்பதையும் தாண்டி அறிவியல் பூர்வமான உண்மை என்று கருதுகிறார் எழுச்சித் தமிழர். ஆண்டுக்கு ஒரு மாதம் வயிற்றுக்கும், செரிமான உறுப்புகளுக்கும் ஒய்வு கொடுக்கும் அருமையான செயல்பாடு என்றும், நோன்பு இருப்பதனால் உடலில் மிகப்பெரும் மாற்றத்தை உணர்வதாகவும் தன் அனுபவத்தை சொல்கிறார். எத்தனையோ மதங்கள் நோன்பை வலியுறுத்தினாலும், இஸ்லாம் கூறும் நோன்பில் ஓர் ஒழுங்கும், கால வரையறையும், கட்டுப்பாடும் இருப்பதனால் இந்த நோன்பை தான் கடைபிடிப்பதாக கூறுகிறார். (https://www.youtube.com/watch?v=JebZnuuqLJM&feature=youtu.be)

அரசியல் ரீதியாக மட்டுமின்றி பண்பாட்டுத் தளத்திலும் முஸ்லிம்களுடன், தான் ஒன்றியிருக்க விரும்புவதாகவும், அத்தகைய இரண்டறக் கலந்த உறவே சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்றும் சொல்கிறார். கடவுள் நம்பிக்கையே இல்லாத பெரியார், தன் நண்பர் ரசிகமணியின் 60-ஆம் கல்யாணத்துக்காக முருகன் கோயிலுக்குச் சென்றதை நினைவு கூரும் அவர், தான் மதம்மாறவில்லை எனினும் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கைகளை மதிப்பதாகவும், அவற்றில் பிடித்தவற்றை பின்பற்றுவதாகவும் கூறுகிறார்.

இன்று காலை சென்னையில் எனது இல்லத்தில் நடைபெற்ற 'ஸஹர்' விருந்தில், கட்சித் தோழர்களுடன் பங்கேற்று நோன்பு வைத்தார் தலைவர் திருமா வளவன்.

-ஆக்கம் ஆளூர் ஷாநவாஸ்

சகோ ஆளூர் ஷாநவாஸ்! சீக்கிரமே உங்க தலைவருக்கு சட்டு புட்டுனு ஒரு கல்யாணத்தை பண்ணி வைங்க. வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல......

ஒரு இந்துவா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கிறேன் - அரவிந்தன் நீலகண்டன்



வினவு அண்ணனுக்கு

வணக்கம்,

என்னோட பெயர் மனோஜ் குமார், நெல்லை மாவட்டம் வள்ளியூர் பக்கத்துல ஒரு கிராமத்த சேந்தவன். மெக்கானிக்கல் டிப்ளமா முடிச்சிட்டு இப்ப சென்னையில தங்கி வேலை தேடறேன்.

இந்த லெட்டரை ஏன் எழுதறேன்னு எனக்கே தெரியல, உங்கள்ட்ட சொல்லனும்னு தோணிச்சி. எழுதுறேன்.
வருசநாடு, கொடியங்குளம், தருமபுரி .. மாதிரி எங்க ஊர்ல பெரிய கலவரங்கள் நடக்கலேன்னாலும், எங்க ஊருல ஜாதி பாகுபாடு உண்டு. எங்க ஊருனு இல்ல, எங்க மாவட்டமுமே அப்படிதான். தூத்துக்குடியில் நான் பாலிடெக்னிக் படிக்கும் போது அங்க இருந்த மாணவர்கள் எல்லாருமே ஜாதி செட்டா குரூப் குரூப்பாத் தான் இருப்போம். சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கது மாதிரி ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார், பசுபதி பாண்டியன் இவங்களுக்கும் ரசிகர்கள் இருக்காங்க. “நாடு பாதி நாடார் பாதி”, “எக்குலமும் வாழனும் முக்குலம் தான் ஆளனும்”னு மாணவர்கள் நிறைய பஞ்ச் டயலாக்கு வெச்சுருக்காங்க. பள்ளிக்கூட சுவர்லயும் பாக்கலாம்.

நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேந்தவன். என் தாத்தாவோட பழைய காலம் மாறி இல்லைன்னாலும் நானும் ஜாதி பாகுபாட்டை அனுபவிச்சிருக்கிறேன். பள்ளி, ஊரு, கோவிலு எல்லா இடத்திலும் ஜாதி பாகுபாடு இருக்கிறது. முன்னெல்லாம் எங்க ஊரு பெரிய வீட்டுக்காரங்க எல்லாரையும் அடிப்பாங்களாம். அதை வாங்கிகிட்டு பேசாம அவங்க கிட்ட வேலை பாக்கனுமாம். கோவில் சப்பரம் வரும் தெருவில் செருப்பு போட்டு நடக்க கூடாதாம். இப்பல்லாம் அப்படியில்ல. இருந்தாலும் முழுசா போகலை.
என் வகுப்பு மாணவர்கள் என் கண்ணு முன்னாடியே பறப்பய, சேரி, சக்கிலின்னு அவங்களுக்குள்ள திட்டுறதுக்கு சகசமா பயன்படுத்துவாங்க.

ஜாதின்னு ஒண்ணு இல்லாம இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு பல தடவை கற்பனை செஞ்சு பார்த்திருக்கிறேன். கடவுள் ஏன் இப்படி படைச்சாருன்னு தெரியவில்லை. ஜாதியினால் எவ்வளவு பிரச்சனை. தர்மபுரியில் எங்க சமுதாயத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக எத்தனை பேரு வீடுகள கொளுத்துனாங்க. தினமும் எங்கையாவது ஒரு மூலையில் யாராவது ஒரு தாழ்த்தப்பட்டவர் ஜாதி கொடுமையால பாதிக்கப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.

தர்மபுரி பிரச்சனை நடந்த போது எனக்கு பல நாள் தூக்கமே வரவில்லை. நாம் அங்கு போய் நம்ம மக்களுக்கு எதாவது உதவலாம்னு நினைச்சாலும் எப்படி போவது எங்கு தங்குவது ஒன்றும் தெரியாத்தால் எதையும் செய்ய முடியவில்லை. எங்கள் ஊர் வி சி கட்சிகார்களிடம் கேட்டுபார்த்தேன். தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறினார்கள்.

தர்மபுரியில் கலப்பு திருமணம் செஞ்சுவச்சதப் பத்தின உங்க கட்டுரைய பாத்தேன். ரொம்ப சந்தோசமாக இருந்தது. நீங்க செய்தது மிகப்பெரிய பணி. எந்த ஊருல கலப்பு திருமணம் செய்ஞ்சால் கொலை செய்வேன்னு சொன்னார்களோ அந்த ஊரிலேயே கலப்பு திருமணம் செய்துவைத்திருக்கிறீர்கள். மனம் நிறைந்து உங்களை வாழ்த்துகிறேன்.

இதே சமயத்தில் உங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். நீங்க இந்து மதத்தை எதிர்த்து எழுதும் போது பலமுறை திட்டியிருக்கிறேன். சில கமெண்டுகளும் கோபத்துல போட்டுள்ளேன். நான் படிச்சது இந்து பள்ளிகூடம். எனக்கு சாமி நம்பிக்கையும், தேசபக்தியும் அதிகம். அந்த பள்ளிகூடத்துல ஜாதி வித்தியாசம் இல்லாம எல்லாரும் பாரதமாதா புதல்வர்கள்ன்னு சொல்லுவாங்க அது எனக்கு பிடிக்கும். அதனால, ஆர்.எஸ்.எஸ் மாதிரியான இந்து இயக்கங்கள் தான் நம் நாட்டிற்கு தேவைன்னு நினைச்சேன். சென்னை வந்ததுக்கு பின்னாடிதான் உங்க தளத்தை படிக்க ஆரம்பிச்சேன். உங்க கட்டுரைங்கள்ள இந்து மதத்த திட்டுற கட்டுரைகள் எனக்கு பிடிக்காது. சாதிப் பிரச்சினை சம்பந்தமா எங்க மக்கள ஆதரிச்சு நீங்க எழுதுறது எனக்கு பிடிக்கும்.

இப்போது வேலை தேடி சென்னை வந்து, எங்க ஊரு நண்பர்கள் கூட தங்கி இருக்கேன். சென்னை வந்த பிறகுதான் பல விசயங்கள் தெரிய வருது. ஊர் அண்ணன்கள் சிலர் அவங்க வீட்டுக்கு கூட தெரியாம புத்த மதத்துக்கு மாறியிருக்காங்க. அவங்க நிறைய சொல்லுவாங்க. அம்பேத்கர் இந்து மதம் மோசம்னு சொன்னதா சொல்லுவாங்க. அவங்க தான் உங்க வெப்சைட்டை குடுத்து படிக்க சொன்னாங்க.

நான் அவுங்க கிட்ட விவேகானந்தர் சாதி இல்லைனு சொல்லியிருக்கார் என்று பேசுவேன். இந்திய வல்லரசா வரணுமுனா மோடி தான் பிரதமரா வரணும்னு வாதாடுவேன்.

இருந்தாலும், அவங்க கேக்குற கேள்விங்களுக்கும் உங்க சைட்ல நீங்க எழுதற வாதங்களுக்கும் என்னால பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் நமக்குத்தான் விசயம் தெரியலியே தவிர, நிச்சயமா இதுக்கெல்லாம் சரியான பதில் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.

போன வாரம் திருவான்மியூரில இந்து ஆன்மீக சேவை கண்காட்சி ஒன்று நடந்தது. உங்களுக்கு பதிலடி கொடுக்க ஏதும் புக் கிடைக்குமான்னுதான் கண்காட்சியை பார்க்கவே நான் போனேன். அங்க நீங்களும், ரூம் நண்பர்களும் சொல்றதுதான் உண்மைங்கிறத நேரிலேயே பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

கண்காட்சிக்கு உள்ளே போனால் 2வது ஸ்டாலே வீர வன்னியர் ஸ்டால் என்று போட்டிருந்தார்கள். வன்னியர் தான் அரச பரம்பரை ன்னு சொல்லி அது சம்பந்தமான் புத்தகங்கள், வீடியொ எல்லாம் வைத்திருந்தார்கள். நாங்கள் தான் அரச பரம்பரை என்று அவங்க சொல்லும் போதே மத்தவங்க எல்லாம் அவங்களுக்கு அடிமையாக இருந்தாங்கன்னு தானே சொல்ல வாராங்க. அதை பாத்ததும் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. நாம எல்லாரும் இந்துக்கள் என்று உண்மையில் நினைத்திருந்தால் இப்படி ஒரு ஸ்டாலை போட்டிருப்பார்களா? தர்மபுரியில் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்து முடிந்து ஜாதி வெறி பரவிவரும் நிலையில் இந்து இயக்கம் நடத்தும் ஒரு கண்காட்சியில் சாதிவெறியை எப்படி அனுமதிச்சாங்கன்னு கோவம் வந்துச்சு.

கொஞ்சம் தள்ளி போனால் அகமுடையார் ஸ்டால், விஸ்வகர்மா ஸ்டாலுனு ஜாதிக்கு ஒரு ஸ்டால் வைத்திருந்தார்கள். ஜாதியும் இந்து மதமும் வேறு வேறு கிடையாது. ஜாதிதான் இந்துமதம் என்று ரூம் நண்பர் அடிக்கடி சொல்வார். அப்படி கிடையாது, இந்து மதத்தில் ஜாதி இல்லை. இடையில் வந்தவர்கள் தான் உருவாக்கி இருக்காங்க. இந்து இயக்கங்களும் ஜாதி இல்லைன்னுதான் பேசுறாங்கன்னு அவங்களோட சண்டைபோட்டிருக்கிறேன். இப்படி அது எல்லாம் பொய்யாகும்னு நான் நினைக்கவேயில்லை.
இந்து இயக்கங்கள் ஜாதியை ஆதரிக்கிறத நேரிலேயே பார்த்த பிறகு நான் இந்து இயக்ககங்களுக்கு ஆதரவா இருந்ததை நெனச்சி அவமானமா இருந்தது.

கண்காட்சி ஸ்டால்களை சில பெண்கள் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தங்க. அவங்ககிட்ட பேசிப் பார்த்தேன். அவங்களும் எல்லாரும் தாழ்த்தப்பட்ட சாதிதான்னு தெரிஞ்சது. கண்காட்சியின் மற்ற வேலைகளை இந்து இயக்க தொண்டர்கள் செய்து கொண்டிருந்தாங்க. ஆனால் சுத்தம் செய்யும் வேலைக்கு மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்துறாங்கன்னு பாத்தபோது ஆத்திரமா வந்தது.

நான் உங்களையும், ரூம் நண்பர்களையும் மூக்குடைக்க வேண்டும் என்றுதான் கண்காட்சிக்கு போனேன். ஆனால் நானே மூக்குடைபட்டு போனேன்.

அப்போ எந்த ஜாதியின் பேரும் இல்லாமல் அம்பேத்கர் படம் வைத்திருந்த ஒரு ஸ்டாலைப் பார்த்தேன். மனதுக்கு ஆறுதலா இருந்தது. நான் மூக்குடைபட்டதை யாரிடமும் கூறக்கூடாது என்று தான் கோவமாக நினைத்தேன். ஆனால் அங்கிருந்த அம்பேத்கர் படங்களும், ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் என்பவர் பழகிய விதம் காரணமாக, என்னையறியாமல் அவரிடம் என் ஆதங்கத்தை கொட்டி பேசினேன். நாமெல்லாம் இந்துக்களாக, இந்தியர்களாக இருக்கும் போது சாதி பெருமை பேசுபவர்களை அழைத்து ஸ்டால் போட்டிருக்காங்க, சுத்தம் செய்யும் பணிக்கு இந்து இயக்க வாலண்டியர்கள் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் தான் எனக்கு இன்னும் அதிர்ச்சியளித்தது. அவருடைய நிலைமை என்னைவிட பரிதாபமாக இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

அவர் அம்பேத்கர் படத்தை ஸ்டாலில் போடுவதாக சொன்னாராம். கண்காட்சி நடத்துறவங்க வேணுமினே ஒதுக்குபுறமா, ஒரு மறைவான இடத்தை கொடுத்து இங்கு போடுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம். அவரது மற்றொரு ஸ்டாலுக்கு பான்பராக் பாக்கெட் சைசில் சின்ன இடம்தான் தருவோம்னு சொல்லி இடம் ஒதுக்கிட்டாங்கன்னார். சென்னையை சேர்ந்த பிராமணர்கள் தான் இந்தக் கண்காட்சிய நடத்துறாங்கன்னு அவர் சொன்னார். பாத்தீங்கன்னா அவரும் சாதாரண ஆளு கிடையாது, பல புத்தகங்களை எழுதுன எழுத்தாளர். (எனக்கும் சில புத்தகங்களை அன்பளிப்பா கொடுத்தார்). அவருக்கே இந்த நிலைன்னா வேற எதைப்பத்தி பேசி என்ன ஆகப் போகுது?

அந்த ஸ்டாலில் அம்பேத்கர் பொன்மொழிகளை எழுதி வைத்திருந்தார்கள். “ சம்ஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கணும். பாகிஸ்தான் முசூலீம்கள் கிட்ட இருந்து இந்துக்களை பாதுகாக்க மகர் ரெஜிமென்டை ஏற்படுத்தணும்” இது மாதிரி நான் இதுவரைக்கும் கேள்விப்படாத அம்பேத்கர் பொன்மொழிகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள். இதெல்லாம் சொன்னால் ரூம் நண்பர்கள் ஒத்துக்கமாட்டார்களேன்னு அவரிடம் “இது அம்பேத்கரின் எழுத்துக்களில் எந்த தொகுதியில் வருது” என்று கேட்டேன். அதுக்கு அவர் “இந்த பொன்மொழிகள் தொகுதியில் இல்லை, அம்பேத்கார் பத்தி வேறு எழுத்தாளர் எழுதினதில் இருந்து போட்டிருக்கோம்”னு சொன்னார். இந்த புக்கை வைத்துதான் அம்பேத்கர் தொகுதிகளை வெளியிட்டிருக்காங்கன்னும் சொன்னார். அதனால அம்பேத்கர் தொகுதியிலும் இது இருக்கும் ஆனா எந்த தொகுதினுதான் ஞாபகமில்லைன்னு சொன்னார். ஒரு சின்ன புக்குல இருந்து இவ்வளவு தொகுதிங்க எப்படி வந்திச்சின்னு எனக்கு ஆச்சரியம். அந்த சாரோ எந்த தொகுதின்னு இமெயிலில் அனுப்புறேன்னு சொன்னார். மெயில் வந்தவுடன் உங்களுக்கு வெவரத்தை அனுப்புகிறேன்.

அப்புறம் அவருகிட்ட ஜாதி சங்க ஸ்டால் பத்தி கேட்டேன். தப்புதான்னு வருத்தப்பட்டாரு. கையோட வெங்கடேசன்னு ஒரு ஆர்.எஸ்.எஸ் சாருகிட்ட அழைச்சுகிட்டுப் போனார். இவரு கேக்குற கேள்விங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்ன பதில் சொல்றீங்கன்னு அவர் கிட்டே கேட்டார். அவருகிட்டயும் “நாம இந்துவா இருக்கும்போது இப்பிடி ஜாதி சங்கங்களை அனுமதிக்கிறது தப்புதானே, கூட்டி பெருக்கும் வேலைங்களுக்கு மட்டும் உங்ககிட்ட வாலன்டியருங்க இல்லையா”ன்னு கேட்டேன்.

அவரோ “நாங்கள் தேவேந்திர குல வேளாலர்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறோமேன்னு சொல்லி இன்னொரு குண்ட தூக்கி போட்டார். ஜாதி சங்கங்களை அனுமதிக்கிறது தப்புன்னு சொல்வாருன்னு பாத்தா, “வேணும்னா பறையன்னு சொல்லி நீயும் ஒரு ஸ்டால் போட்டுக்கோ” ன்னு சொல்றாமாரி இருந்தது அவருடைய பதில்.

இதை தவறுன்னு இவங்க கருதலயேன்னு வருத்தமாவும், கோபமாவும் இருந்தது. இவ்வளவு நாள் என்ன இந்துவா நினைச்சதுக்கு இது ரொம்பவே அதிர்ச்சியா இருந்தது. நீ இந்து இல்லை பறையன், அதை ஏத்துக் கொண்டு நீயும் ஸ்டால் போட்டுக் கொள்ளலாம்ங்கிற மாறி இருந்துச்சு அவரது பதில். கூனி குறுகி போனேன். அடுத்து என்ன பேசுவதுன்னு எனக்கு தெரியல. நாம் இத்தனை நாள் நண்பர்களாக நினைச்சவங்க நம்மை எட்டி உதைப்பது போல இருந்தது.

இல்லை சார், நாம இந்துக்களா இருக்கும் போது ஏன் ஜாதி பெயரை பயன்படுத்தனும்? நீங்க அம்பேத்கர் பெயரை போட்டு பறையருன்னு போட்டாலும் அது தப்புதானேன்னு வாதிட்டேன். இதுக்கு வெங்கடேசன் சாரு ஒன்னும் பதில் சொல்லல. நான் தெளிவா பேசுறதா அரவிந்தன் சார்தான் சொன்னார். கூட்டுறதுக்கு கான்ட்ராக்டு விட்டதால ஒன்னும் செய்ய முடியலேன்னு வெங்கடேசன் சாரு சொன்னாரு. எனக்கு அந்த பதிலிலும் திருப்தி இல்லை.

ரூம் நண்பர்களும் வினவும் சொல்றது மாதிரி இந்து மதமே இப்படித்தானா? இல்லை இந்து இயக்கங்கள் தான் இப்படியா? எனக்குள்ள பல கேள்விகள் தோணிச்சு.

அரவிந்தன் சாரை தவிர அங்கு எனக்கு ஆறுதலா யாரும் இல்லை. ரூம் நண்பர்கள் புத்த மதத்திற்கு மாறுமாறு கூறியது சரின்னுதான் பட்டது. முதல்ல அரவிந்தன் சாரை பாத்த போது அம்பேத்கர் மதம் மாறியது பத்தி கேட்டேன். அதுக்கு அவரு அம்பேத்கர் வேறு அந்நிய மதத்துக்கு மாறலை. புத்தமத மாற்றம் என்பது ஒரு ரூமிலிருது இன்னொரு ரூமுக்கு மாறுவது. ஆனா வீடு ஒன்னுதான். இப்படித்தான் அம்பேத்கர் கூட சொல்லியிருக்காருனு சொன்னார்.

அது இப்ப ஞாபகத்துக்கு வந்து அவருகிட்டயே கேட்டேன். “இப்ப நீங்க புத்த மதத்துக்கு மாறுவது சரியான தீர்வல்ல”ன்னு அவர் கூறினார். ஏன் இப்ப மாறி பேசுறாருன்னு எனக்கு குழப்பம் வந்தது.

உடனே சார் ஒரு பேப்பரை எடுத்து ஒரு மேப் வரைஞ்சு காமிச்சார். அதுல கட்டம் கட்டமா போட்டு இது எஸ்சி அதுக்கு மேல எம்பிசி பிறகு பிசி, எப்சின்னு போட்டு சைடுல முஸ்லீம்னு போட்டு இவங்க எல்லாரும் தாழ்த்தப்பட்டவர்கள தாக்குறாங்கன்னு சொன்னாரு. தாழ்த்தப்பட்ட மக்களை தாக்குறதுக்கு ஜாதி இந்துக்களை தூண்டுறது மேல இருக்குற பிராமணர்கள் மாதிரியான எஃப்சின்னு விளக்குனார். இதை வாய்ப்பா பயன்படுத்தி எஸ்சி மக்களுக்கு எதிரா முஸ்லீம்கள் செயல்படுறாங்கன்னும் சொன்னார்.
அதுக்கு நான் சொன்னேன், சார், முஸ்லீமகள் நம்ம மக்களுக்கு எதிராக இருக்கிறதா தெரியல. முஸ்லீம்கள் நம்மள எங்கயும் அடிக்கல. ஜாதி இந்துக்கள்னு சொல்றவங்க தான் தர்மபுரி மாறி பல இடங்கள்ள அடிக்கிறாங்க. முஸ்லிம் மதத்துக்கு மாறிய என் நண்பனைப் பற்றி சொல்லி வேணுண்ணா அவன்கிட்ட பேசுறீங்களான்னு கேட்டேன். அவன அவங்க மதத்துக்காரங்க சமமா மதிக்கிறாங்க. மசூதியில எல்லா இடத்துக்கும் அவன் போக முடியுது.

அதே நேரத்தில நான் காதலிக்கிற பி.சி சாதி பெண்ணை கலியாணம் செய்வதில் எனக்கு நிறைய கஷ்டங்கள் இருப்பதை சொல்லி முசுலீம் ஆட்களிடம் அப்படி இல்லையேன்னு கேட்டேன்.

இத அமைதியா கேட்ட அரவிந்தன் சார், டெல்லி ஜும்மா பள்ளிவாசலிலும், மெக்கா, மெதினாவிலயும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவங்க தான் இமாம் ஆக முடியும். அங்கேயும் சாதி இருக்குன்னு விளக்கினார்.

நான் சொன்னேன், “நான் சென்னையத் தாண்டி டெல்லி, மெக்காவுக்கெல்லாம் போறதுக்கு சான்சே இல்ல. அந்த இடங்கள்ள எப்படி இருந்தாலும் எனக்கு கவலையில்ல. எங்க ஊரு பள்ளிவாசல்ல என்ன மதிச்சா அது போதும். எங்க ஊரு பக்கத்துல இருக்கும் ஆத்தங்கரை தர்கா பள்ளிவாசலுக்கு யாரு போனாலும் நல்லாவே மதிப்பாங்க. அந்த மதிப்பு வள்ளியூர் முருகன் கோவில்ல கூட கெடைக்காது சார்” ன்னு சொன்னேன்.

அதே நேரத்தில, நம்ம பண்பாட்ட விட்டு கொடுக்காம நான் புத்த மதத்துக்குத்தான் மாறப் போறேன்னு சொன்னேன். அதுக்கு அரவிந்தன் சாரு, “தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மதத்துக்கு மாறி என்ன பயன்? இடைநிலை ஜாதிங்களும் உங்களோட மாறுனாத்தான் ஜாதிப்பாகுபாடு இருக்காது. அப்படி மாறதா இருந்தாலும் காசுக்கு ஆசைப்பட்டு முஸ்லீம், கிறிஸ்டீனுக்குத்தான் மாறுவாங்க. புத்தமதத்துக்கு யாரும் மாறமாட்டாங்க”ன்னு பேசுனார்.



இதக் கேட்டதும் எனக்கு சுரீர்னு கோவம் வந்துச்சு. சில வருசங்களுக்கு முன்னடி என்னோட சித்தப்பா கிரிஸ்டியனாக மாறினார். அவரு பேரு முதல்ல ஈஸ்வரன் இப்போது யோவானாகியிருக்கார். சார் நீங்க சொல்றது எங்களை கொச்சைப்படுத்துற மாறி இருக்கிறது என்று சொல்லி என் சித்தப்பா கதையை சொன்னேன். அவருதான் எங்கள் குடும்பத்துல முதல்ல படிச்சு ஆளானவரு. அரசு வேலையில் இருக்கிறார். நாங்க எவ்வளவு தான் சொல்லியும் எங்க ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமா இருக்காரு. ஏன்னா அவர் வந்தா இங்க யாரும் மதிக்க மாட்டார்கள். அவர் சொல்றது உண்மைதான். ஒரு பியூன் கூட மதிக்கமாட்டார். இதுக்குத்தான் சாதியை மறைச்சு வெளியூருல வேலைசெய்கிறார்னு சொன்னேன். மேற்கொண்டு அரவிந்தன் சாரு ஒன்னும் சொல்லல.

அதற்கப்பறம் பெரியார் பத்தி பேசுனோம்.

அம்பேத்கர் படத்தை நீங்க போட்டிருக்கீங்க. உண்மைக்குமே சந்தோசமா இருக்கு. ஆனா அம்பேத்கரை நம்மளவிட பெரியார் இயக்கங்களும், வினவு தளம், கீற்றுல தான் அதிகமாக போடுறாங்கன்னு கேட்டேன்.

அதெல்லாம் ஏமாத்துற வேலை. ஈ.வெ.ரா -வை பெரியார்னு அழைக்கிறதும், பாபாசாகேப் அம்பேத்கரை வெறுமனே அம்பேத்கர்னு அழைப்பதும் திராவிட இயக்கங்கள் திட்டமிட்டுத்தான் செய்யுராங்க. நம்மளயும் ஏமாத்துராங்க. அதனால் ஈ.வெ,ரா ன்னு மட்டும் சொல்லுங்க என்றார். கீழ்வெண்மணியில் நம்மாள்களை கொன்ற போது பெரியார் அதை கண்டிக்கல தெரியுமான்னு சொல்லி ஈ.வெ.ரா தாழ்த்தப்பட்டவங்களுக்கு எதிரானவர்னு பேசினார்.

“பெரியாரையும் அம்பேத்கரையும் இணைச்சி பேசுறதே முதலில் தப்பு. நீங்க அம்பேத்கரையும், காஞ்சி சங்கராச்சாரியாரையும் சேத்து பேச முடியுமா? சங்கராச்சாரியார் ஒரு முட்டாள். அம்பேத்கர்தான் அறிவாளி. பல பட்டங்கள் பெற்றவர். இவங்களை இணை வெச்சி பேசமுடியுமா? அதுமாறி தான் ஈ.வெ.ராவும் அம்பேத்கரும். இவங்க ரெண்டுபேரையும் இணைச்சி பேசுறதே தப்பு”
“வீரமணி யாதவ சாதிக்காரர் பெரியார் திடலில் யாதவர்களுக்கு தான் முன்னுரிமை தெரியுமா? வினவு ஆசிரியர்குழுவில் எத்தனை தலித்துங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அதை நடத்தற மாதையன் ஒரு ஐயர்னு உங்களுக்குத் தெரியுமா”ன்னு கேட்டார்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது சார். ஆனால் நம்மாள்களை போல அவுங்க ஜாதி பெருமையை வெளிப்படையா இங்க மாறி ஸ்டால் போட்டு சொல்லலியே”ன்னு சொன்னேன்.

“நாம என்ன தான் தி.க வை திட்டினாலும் கோவில் நுழைவு, அனைத்து சாதி அர்ச்சகர் என எல்லாத்துக்கும் திராவிட கட்சிங்கதான் முன்னணியில் இருக்கிறார்கள். கருணாநிதி தான் சட்டம் கொண்டுவந்தாரு”ன்னு சொன்னேன். உடனே அரவிந்தன் சார் குறுக்க பேசினார்.

“நம் வரலாறே நமக்கு தெரியவில்லை. இவங்கதான் எல்லாம் செஞ்சாங்கன்னா எம்.சி.ராஜா யாரு?, சகஜானந்தா யாரு? குஜராத்துல மோடிஜி அமைதியா பெரிய கோவிலுங்கள்ள கூட எல்லா ஜாதிக்காரங்களையும் அர்ச்சகரராக்கிட்டார் தெரியுமா” ன்னார்.
சகஜானந்தா யார்னு எனக்கு தெரியல. அவரிடம் கேட்டேன். தில்லை சிதம்பரம் கோவிலில் மடம் கட்டி அனைவருக்கும் கல்வி கொடுத்தவராம் அவரு தில்லைன்னு சொன்னதும் அங்கு கூட மனித உரிமை மையம்தான் கோவிலுக்குள்ள தமிழுக்காக போராடுனாங்கன்னு சொன்னேன்.



பிறகு மீண்டும் மத மாறுவது பத்தி பேசினோம்.

“நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு கோவிலை கட்டினார்கள். அதை எளிதாக அடுத்தவர்கள் கையில் விட்டுவிட்டு போகலாமா. உள்ளிருந்து கொண்டே போராட வேண்டும். இந்த கண்காட்சியில் அனைவரும் பாத்து பயப்படும் ஸ்டால் எது தெரியுமா இந்த ஸ்டால் தான். ஏன்னா நான் சாதியில்லைன்னு சொல்கிறேன். அதுவும் அவங்க விரும்பும் சாவர்க்கர் போன்ற இந்து இயக்க தலைவர்கள் சொன்னதை வைத்து சொல்றேன். ஈ.வெ.ரா மாதிரி வேறு யாரும் சொன்னதா சொன்னா அவங்க கவலைப்படமாட்டாங்க. உங்க சாவர்க்கர்தான்பா சொல்லியிருக்காருன்னு எடுத்து சொல்றேன்” என்றார்.

சில நிமிடங்கள் என்னை புத்தகம் படிக்க சொல்லிட்டு வெளியே போனார். திரும்பி வந்து “ நான் ஆர்.எஸ்.எஸ் காரங்கட்ட சொல்லிவிட்டேன். நீங்க கொங்கு கவுண்டர்களையும் வன்னியர்களையும் இந்து இயக்கத்துக்குள் கொண்டுவருகிறேன் என்ற பெயரில் பல தலித்துகளை வெளியே தள்ளிகொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லிட்டு வந்தேன்” என்றார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவருங்க கிட்ட நெருக்கமான பழக்கம் இருக்கும் போல.

நாங்க பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் வந்தார். தஞ்சாவூர் இல்லேன்னா கும்பகோணத்துக்காரர்னு நினைக்கிறேன் அவர மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்னு அறிமுகம் செஞ்சார். அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் நான் வேண்டாம்னு சொல்லியும் எனக்கு ரசனா ஜூஸ் வாங்கி கொடுத்தார். “அம்பேத்கர் மேற்கோள்களை தமிழில் மொழிபெயர்த்து அதை விளக்குவதற்கு ஆட்களும் தருவதாகவும் அதை பள்ளிக்கூடங்களில் காட்சிக்கு வைக்க உதவி வேண்டும்”னும் அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் கேட்டுக்கொண்டார் அரவிந்தன் சார்.

வினவு அவர்களுக்கு,

இந்த கண்காட்சிக்கு ஏன்டா போனோம்னு ஆகிவிட்டது. போகாமல் இருந்திருந்தால் இந்து மதமும் இயக்கங்களும் சரியானவை என்று கற்பனையிலாவது நிம்மதியா இருந்திருப்பேன். போனபிறகு ஜீரணிக்கவே முடியலை.
என்னை போல இன்னும் பல தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இந்து இயக்கங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் பேசிய ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் சார் கூட, அம்பேத்கருக்கு ஓரமாக இடம் ஒதுக்குவோம், பான்பராக் பாக்கெட் அளவு இடம் ஒதுக்குவோம்னு சொன்ன பின்பும் அவங்களை எதுக்கு நம்புறாருன்னு எனக்கே தெரியல.
“நம் சகோதரன் மனநோயால் பாதிக்கப்பட்டால் அப்படி விட்டுவிடுவோமா, அதனால் இடைநிலை ஜாதியினரை மாத்தணும். அதுக்கு மதத்தை கைவிடக் கூடாதுங்கிறது” தான் அவரோட கருத்து.
அவங்களை மாத்தி நமக்கு என்ன ஆகப்போகுது? நமக்கு வேண்டியது தன்மானம். அது மதம் மாறினால் கிடைக்கும்னா ஏன் மாறக்கூடாதுங்கிறது என்கருத்து.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உள்ள ஒருத்தர் தலித் சேம்பர் காமர்ஸ் ஆரம்பிச்சிருக்காருன்னும், அதுல தலித்துக்கள் பொருளாதார வலிமை உள்ளவங்களாகி அதுக்கு பின்னாடே நாமே இது மாதிறி பல கண்காட்சிகங்கள நடத்தலாம்னு அரவிந்தன் சார் சொன்னார்.
திரும்பும் போது “ஒரு இந்துவா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கிறேன். நீங்க சொன்ன விசயங்கள் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு” என்று அரவிந்தன் சார் வருத்தப்பட்டு சொன்னார்.

“உங்களுக்கே பான்பராக் பாக்கெட் அளவுக்கு தான் இடம் கொடுக்குறாங்க. பேசாம நீங்களும் என்னோடு மதம் மாறுங்க”ன்னு நான் சொன்னேன். அவர் மறுத்துட்டார். அரவிந்தன் சார் மாதிரி உள்ளவங்க எல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏன் மறுக்கிறாங்கன்னு தெரியல.
அங்கிருந்து வந்தததுக்கு பிறகு எனக்கு குழப்பமாவே இருக்கு. நீங்க இந்து மதத்தை திட்டறீங்க. ஆனால் தருமபுரியிலேயே கலப்பு திருமணம் செஞ்சு வக்கிறீங்க. ஒரு வகையில இதுதான் இந்து ஒற்றுமையை உண்டாக்குற காரியம். ஆனால், இந்து ஒற்றுமைன்னு பேசுறவங்க சாதிக்கு ஒரு ஸ்டால் போடுறாங்க. சாதியை மறந்து ஒன்றுபட வைக்கிற உங்களைத் திட்டுறாங்க.
ஒரே குழப்பமா இருக்கு. இதை உங்களிடம் பகிர வேண்டும் போல தோன்றியது. அதுக்குத்தான் இந்த நீண்ட லெட்டரை இமெயில்ல அனுப்புறேன்.

இப்படிக்கு
மனோஜ்குமார்

தகவலுக்கு நன்றி

வினவு தளம்.