Followers

Tuesday, May 05, 2015

கூத்தாடி சல்மான் கானுக்கு இன்று தீர்ப்பு!




10 ஆண்டுகளுக்கு முன்பு குடி போதையில் கார் ஓட்டி நடை பாதையில் உற்ங்கிக் கொண்டிருந்த ஒருவரை கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு வரவிருக்கிறது. கோர்ட்டில் 'உங்களின் இனம் என்ன?' என்று நீதியதி கேட்டதற்கு 'இந்தியன்' என்று பதிலளித்துள்ளார். மீண்டும் நீதிபதி கேட்கவே 'இந்து முஸ்லிம்' என்று பதிலளித்தள்ளார். தனது தந்தை சலீம்கான் எனவும் தாயார் சுசீலா எனவும் தெரிவித்துள்ளார்.

காரை தான் ஓட்டவில்லை தனது டிரைவர்தான் ஓட்டினார் என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் நேரில் பார்த்த சாட்சிகள் இவரே காரை ஓட்டிச் சென்றதாக சொல்கின்றனர். போலீஸாரும் இதனை உறுதிப் படுத்துகின்றனர். கோர்ட் தண்டனையிலிருந்து தப்பிக்க பல முறை மோடி புராணமும் பாடிக் கொண்டிருந்தார். எதுவும் கை கூடவில்லை. இன்றைய தீர்ப்பில் 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒரு இஸ்லாமியனுக்கு உள்ள எந்த இலக்கணத்தையும் நாம் இவரிடம் எதிர்பார்க்க முடியாது. பல பெண்களோடு தகாத உறவு, தினமும் குடியில் புரள்தல், சக நடிகர்களோடு பல முறை சண்டை, என்று பல உதாரணங்களை கூறலாம். பெயர் ஒன்று மட்டுமே இஸ்லாமிய பெயராக உள்ளது. பெயரை வைத்து ஒருவன் இஸ்லாமியனாக முடியாது. அவனது சீரிய நடவடிக்கையை வைத்துதான் அவனை இஸ்லாமியனாக பார்க்க முடியும்.

இந்த பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போதே மும்பை கோர்டின் தீர்பும் வந்து விட்டது. குடி போதையில் கார் ஓட்டி ஒருவரை கொன்றது நிரூபணமானதால் சல்மான் கான் குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லியுள்ளது மும்பை நீதி மன்றம்.

10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அந்த சிறை வாழ்க்கையாவது இவரை மனிதனாக மாற்றுகிறதா என்று பார்போம்.

No comments: