Followers

Thursday, June 30, 2011

யார் இந்த பிரவீன் சுவாமி?





யார் இந்த பிரவீன் சுவாமி?

தரமான செய்திகளை தருபவர் என்று பலராலும் நம்பப்படுபவர். தி ஹிந்துவிலும், ஃப்ரண்ட்லைனிலும் பல காலமாக எழுதி வருபவர். சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர். சாதனையாளர் விருதுகள் பல பெற்றவர்.

இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் ஹிந்துவிலும், ஃபிரண்ட் லைனிலும் தவறாமல் இவரது கட்டுரை இடம்பெறும். சொல்லி வைத்தாற்போல் நடந்த அத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் ஏதாவது ஒரு காரணததை இவராகவே கற்பனை செய்து கொண்டு கண் காது மூக்கு எல்லாம் வைத்து படிப்பதற்கு சுவாரஸ்யமாக செய்திகளை தருவதில் கில்லாடி.

1.)2007 பிப்ரவரி 20ல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு கோச்சுகளில் குண்டு வெடித்து 66 முஸ்லிம்கள் இறந்தனர். புலனய்வின் அறிக்கை வருவதற்கு முன் இவர் ஃப்ரண்ட்லைனில் எழுதிய கட்டுரையின் தலைப்பு 'அமைதிக்கு எதிரான சதி'. 'இந்தியா பாகிஸ்தான் நட்புறவை விரும்பாத பாகிஸ்தானிய இஸ்லாமியவாதிகள்தான் இந்த குண்டு வெடிப்பை நடத்தியுள்ளனர்' என்பது அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சம். இதற்கு ஆதாரமாக இவராக சுயமாக சில சம்பவங்களை முடிச்சுப் போட்டு தனது கைவரிசையை காட்டியிருந்தார்.

முடிவில் என்ன ஆயிற்று? அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நாங்கள்தான் என்று சுவாமி அசிமானந்தா ஆசி வழங்கியுள்ளார்.

2.) 2007 மே 19ல் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிக்கின்றது. வெள்ளிக் கிழமை தொழுகைக்கு வந்த 9 முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர். அந்த சம்பவத்தை எதிர்த்துக் கண்டனப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது அதை விடக் கொடுமை. இப்படி முஸ்லிம்கள் உயிர் அங்கு பலியாகியிருக்க நான்கு நாட்கள் கழித்து 2007 மே 23 அன்று தி ஹிந்து நாளிதழில் பிரவீன் சுவாமி ஒரு செய்திக் கட்டுரை எழுதுகிறார்.

தலைப்பு: 'மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்கு பின்னால்'

துணை தலைப்பு: 'வகுப்பு வாத வன்முறை, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றம், உலக அளவிலான ஜிஹாத், ஆந்திர பிரதேச தலைநகரை உலுக்குகிறது'

இந்தியாவின் நகரங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த குறி அப்படியே இருப்பதாகவும் அதன் ஒரு முன்மாதிரிதான் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். இதற்கு காரணம் லஸ்கர் இ தொய்பா என்றும் கண்டுபிடித்திருந்தார்.

ஆனால் இன்று என்ன ஆயிற்று? மக்கா மஸ்ஜிதில் நாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று நீதி மன்றத்தில் அடித்துச் சொல்கிறார் அசீமானந்தா.

3.) 2007 அக்டோபர் 12 ந்தேதி அஜ்மீர் தர்ஹாவில் குண்டு வெடிக்கிறது. புனித ரமலான் நோன்பு துறக்க வந்த நோன்பாளிகள் 3 பேர் தங்கள் நோன்புகளைத் துறக்காமலேயே கொல்லப்பட்டனர். 28 நோன்பாளிகள் படுகாயமுற்றனர்.

மறுநாள் வழக்கம் போல் தி ஹிந்து பத்திரிக்கையில் பிரவீன் சுவாமி ஒரு கட்டுரை எழுதுகிறார்.

தலைப்பு: 'பாப்புலர் இஸ்லாமுக்கு எதிரான போர்'

'பாப்புலர் இஸ்லாம்' என்று இவர் கூறுவது பெரும்பாலான முஸ்லிம்கள் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்பதாகும்.அதாவது தர்ஹா வழிபாட்டை பிடிக்காத இஸ்லாமிய தீவிரவாதிகள் அஜ்மீர் தர்ஹாவில் குண்டு வெடிக்கச் செய்துள்ளார்கள் என்கிறார். 2006 ஆம் ஆண்டு மாலேகானில் ஒரு தர்ஹாவில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்கிறார்.

ஆனால் அசீமானந்தாவோ ' அஜ்மீர் குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டது இந்திரேஷ் குமாரும், சுனில் ஜோஷியும் என்கிறார். இவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸின் முக்கிய புள்ளிகள். 'தர்ஹாவை ஏன் குண்டு வெடிப்புக்கு தேர்ந்தெடுத்தீர்கள்' என்று கேட்டதற்கு 'இந்துக்கள் அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்வதை தடுக்கவும், முஸ்லிம்களை பழி வாங்கவும்' என்கின்றனர் இந்த மாபாதகர்கள்.

அசிமானந்தா ஏன் இந்த உண்மைகளை எல்லாம் கோர்ட்டில் போட்டு உடைத்தார் என்பதன் பிண்ணனியையும் பார்த்து விடுவோம். தெரிந்த விபரம்தான் ஆனாலும் புதிதாக படிப்பவர்களுக்கு:

நவம்பர் 19, 2010 அன்று கைது செய்யப்பட்ட அசிமானந்தா ஹைதரபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரிக்கப்பட்டு ஹைதராபாத்தின் சன்கால்குடா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருடன் 21 வயதான அப்துல் கலீம் என்ற முஸ்லிம் இளைஞனும் அடைக்கப்பட்டிருந்தார்.அசிமானந்தாவுக்கு உணவு பானங்களை எடுததுச் செல்வது. பணிவிடைகள் செய்வது என அனைத்து உதவிகளையும் அப்துல் கலீம் செய்துள்ளார். இந்த இளைஞனின் செயல்களால் கவரப்பட்ட அசிமானந்தா அவனின் வாழ்க்கை குறித்து விசாரித்துள்ளார். மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் கலீமும் ஒருவர். கடுமையான சித்தரவதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்பட்ட பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து தான் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்பட்டதை அப்துல் கலீம் விவரித்துள்ளார். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசைகளோடு சிரகடித்து பறந்து கொண்டிருந்த தன்னுடைய வாழ்க்கை எவ்வாறு திசை மாறிப் போனது என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

மர்ம உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி நிர்வாணமாக ஐஸ் கட்டிகளில் படுக்க வைத்து தனக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளை அப்துல் கலீம் விவரித்த போது கண்கலங்கிப் போனார் அசிமானந்தா. இந்த இளைஙனைப் போன்று பலரின் வாழ்க்கை நிர்மூலமாவதற்கு தானும் ஒரு காரணம் என்பதை நினைத்து வெட்கி வேதனைப்பட்டு தனது தவறுக்கு பிராயச்சித்தமாக கோர்ட்டில் அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்திருக்கிறார் அசிமானந்தா.

இனி பிரவீன் சுவாமியின் மேட்டருக்கு வருவோம்......

'ரிப்போர்டிங் என்னும் செய்திகளைக் கொடுப்பதில் பிரவீன் சுவாமி ஒரு பொழுதும் நெறிமுறைகளைக் கடைபிடிப்பது கிடையாது' என்று டெல்லியை மையமாகக் கொண்டு புலனாய்வு ஆவணப்படங்களைத் தயாரிப்பவரும், குஜராத் இனப்படுகொலைகளைப் பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்தவருமான சுப்ரதீப் சக்ரவர்த்தி கூறுகிறார். 'பிரவீன் கூறும் செய்திகளுக்கு அவர் ஒரு பொழுதும் ஆதாரங்களைக் குறிப்பிட மாட்டார். புலனாய்வுத் துறையினர் இப்படி நம்புகிறார்கள் என்பதுதான் அவரின் முக்கிய ஆதாரமாக இருக்கும்' என்கிறார் சக்ரவர்த்தி.

இஸலாமிய பயங்கர வாதத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதத் தயாராகும் இந்தப் பத்திரிக்கையாளர்கள் ஹிந்துத்வ பயங்கர வாதம் குறித்தும் ஆய்வு செய்வதற்கோ எழுதுவதற்கோ எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

பிரவீன் சுவாமியைப் போன்று நாக்கிலும் தங்களின் எழுத்திலும் விஷத்தைக் கக்கி இந்தியர்களின் ரத்தத்தில் தங்கள் உடம்பை வளர்த்து வரும் கருங்காலிகளை இனம் கண்டு ஒதுக்கினாலே இந்தியா தலைநிமிரும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.

இவர்கள் ஏன் முஸ்லிம்களை மட்டும் குறி வைக்கிறார்கள் என்பது நடுநிலையாளர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இன்று இந்தியாவில் வர்ணாசிரிமத்துக்கு பெரும் சவாலாக இருப்பது இஸ்லாமே! யூதர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதும் இஸ்லாமே! ஏனெனில் கிறித்தவமும் அதன் பொலிவை இழந்து வெகு நாட்களாகிறது. புத்த மதத்தையும் ஓரம் கட்டியாகி விட்டது, பூர்வீக மார்க்கமான சமணத்தையும் துடைத்தெறிந்தாகி விட்டது. இஸ்லாத்தையும் அதே போன்று ஒரு வழி பண்ணி விட்டால் வர்ணாசிரமத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று நினைத்து இவர்கள் காய்களை நகர்த்துகின்றார்கள். இவர்களின் இந்த திட்டம் 10 சதவீதம் கூட வெற்றி பெறப் போவதில்லை. ஏனெனில் பெரும் பெரும் வல்லரசுகளையே மண்டியிட வைத்த இஸ்லாம் அசிமானந்தாவைப் போல் தவறை உணர்ந்து இஸ்லாத்தை அரவணைக்கும் காலம் வரும். அதுவரை பொறுப்போம்.

சமீபத்தில் நண்பர் சார்வாகன் இந்தியாவின் ஆட்சி இந்துத்வாவின் ஆட்சியாக மலர பலர் தற்போது ஆசைப்படுவதாக தனது பதிவில் கூறியிருந்தார். தாராளமாக வரட்டும். இந்துத்வா ஆட்சி வந்தால் வர்ணாசிரமம் தலை தூக்கும். சாதிக் கொடுமைகள் மீண்டும் தலை எடுக்கும். தற்போது முன்னேற்றத்தில் செல்லும் நமது நாடு பின்னோக்கி செல்லத் தொடங்கும். இந்த அநியாயங்களை எல்லாம் பார்த்து இந்துத்வ வாதிகளே நடுநிலையாளர்களாக அசிமானந்தாவைப் போல் மாற வாய்ப்பு உண்டு. எனவே சார்வாகன் இனி இந்துத்வாவை வளர்க்க தாராளமாக பாடுபடலாம். வாழ்த்துக்கள். :-)


'தவறையோ பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்'
-குர்ஆன் 4:112

'யாரேனும் தீமையைச் செய்து அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடினால் இறைவனை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாக அவர் காண்பார்'
-குர்ஆன் 4:110

7 comments:

***வாஞ்ஜுர்*** said...

Click the link

1. >>> உண்மையான பயங்கரவாதிகள். ஒரு பார்வை. Video.


2. >>> அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே"

suvanappiriyan said...

வாஞ்சூர் அண்ணன்!

தொடர்புடைய சுட்டியை தந்தமைக்கு நன்றி!

இத்தனை அபாண்டங்கள் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டும் பெரும்பான்மையான இந்து மக்கள் முஸ்லிம்களோடு அதே சகோதர பாசத்தோடு பழகியதையும் இங்கு நாம் நினைத்து பார்க்க வேண்டும். பத்திரிக்கைத் துறை, தொலைக்காட்சி, சினிமா என்று அனைத்து ஊடகங்களும் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டம் போட்டு காய் நகர்த்தி வந்தபோது எந்த சலனமும் இல்லாமல் அதே இன்முகத்தோடு சகோதர பாசத்தோடு பழகிய பெரும்பான்மையான அந்த நல்ல உள்ளங்களையும் நாம் மறந்து விடக் கூடாது. இது போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை ஆயிரம் மோடி வந்தாலும், அல்லது ஆயிரம் அத்வானி வந்தாலும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க முடியாது.

எனவே இனிமேலாவது இந்த இந்துத்வ வாதிகள் முஸ்லிம்களிடம் மல்லுகட்டுவதை விட்டு விட்டு கிராமங்களுக்கு சென்று தீண்டாமையை ஒழிக்க பாடுபடட்டும்.

naren said...

நண்பரே, இரண்டே இரண்டு குண்டுவெடிப்பை பற்றி சொல்லிவிட்டு மற்றவைகளை விட்டு விட்டீர்களே.

சரி, இந்த அசிங்கமானந்தாவை, கைது செய்தது, குறை சொல்லப்பட்ட காவல் அமைப்புகள் தான். சட்டப்படி என்ன நடவடிக்கை தேவையோ அது நடைப்பெறும்.

இந்துத்வா வருவதற்கு பலப்பேர் பல காரணங்கள் கூறுகின்றர். உஙகள் காரணம் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.

உங்கள் கூற்றுப்படியே இந்துத்வா ஆட்சி வந்து எல்லோரும் இஸ்லாமுக்கு மாறி 110%, அதன் பிறகு பாகிஸ்தானில் நடைபபெருவதைப்போல் முஸ்லிம்களுக்குள் அடித்துகொள்வதைபோல் ஆகக்கூடாது என்பது என் ஆசை.

அவர்கள் 200% முஸ்லிம் அல்ல முழுமையான முஸ்லிம்கள் அல்ல என்று முல்லாகள் உசுப்பேற்ற உள்நாட்டு கலகம் வந்து விடாது?

suvanappiriyan said...

10-மே-2008 அன்று ஹூப்ளி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பினைஇந்துத்வா இயக்கத்துடன் தொடர்புடைய கர்நாடக கிரிமினல் நாகராஜ் ஜம்பகி என்பவர் 'தான் குண்டு வைத்ததாக' ஒப்புக் கொண்டார். ஜம்பகி மட்டுமல்லாமல் அவருடைய குழுவின் மற்ற இருவர்களான ரமேஷ் பவார், மற்றும் லிங்கராஜ் லால்கர் என்பவர்களும் இந்துத்வா கொள்கையுடைய இயக்கத்தினைச் சேர்ந்தவர்கள் என்று மாநில உளவு நிறுவனம் தகவல் அளிக்கிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலும் இக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

-தி இந்தியன் எக்ஸ்பிரஸ், புனே, 13-ஜனவரி-2009
மகேஸ் பாரப், மற்றும் அனில் ஜக்டப் என்ற மஹாராஷ்ட்ர இளைஞர்கள் இருவர் கம்பாலியாவில் உள்ள ஜாம் நகரில் வைத்து சந்தேகத்தின் பேரில் குஜராத் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். போலீஸார் அவர்களிடமிருந்து இரண்டு லேப்டாப்கள், நான்கு மொபைல் போன்கள், இரு சக்கர வாகனம் ஒன்று, ஜாம் நகர் விமான நிலையம், சவுராஷ்ட்ரா பகுதி, அட்டாரி எல்லை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகள் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸா நிறுவனங்கள் ஆகியவற்றின் வரைபடங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. மேற்கொண்டு விசாரணைக்காக அவை ஏ.டி.எஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
-புத்ஹாரி, 10-டிசம்பர்-2008

பா.ஜ.க வினுடைய மாணவரமைப்பான ஏ.பி.வி.பி உடன் தொடர்புடைய இந்தூரை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்து ஜக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு மஹாராஷ்ட்ராவில் மாலேகானிலும் மற்றும் குஜராத்தின் மொதசாவிலும் நடத்திய குண்டு வெடிப்பில் மொத்தம் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மாலேகானைச் சேர்ந்த 6 முஸ்லிம்களும் மொதசாவைச் சேர்ந்த 1 முஸ்லிமும் கொல்லப்பட்டார்கள்.

-தி இந்தியன் எக்ஸ்பிரஸ், புனே, 23-அக்டோபர்- 2008

மேற்கொண்டு நடந்த விசாரணையில் அபினவ் பாரத் என்ற இந்துத்வ தீவிரவாத இயக்கமும், சில ராணுவ அதிகாரிகளும் மற்றும் மதத் தலைவர்களும் இக் குண்டு வெடிப்பில் ஈடுபட்டிருந்ததாக கண்டறியப்பட்டது. மேலும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா மற்றும் வேறு சில இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் இக்கும்பலே காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது குறித்த விசாரணையில் சில திடுக்கிட வைக்கும் தீவிரவாத உண்மைகள் தெரிய வந்துள்ளது. அபினவ் பாரத் தீவிரவாத அமைப்பினுடைய உறுப்பினர்கள் 2002ன் ஆரம்பத்திலிருந்தே தேசிய அளவில் குண்டு வெடிப்புகளை நடத்த தயார் செய்து வந்திருக்கிறார்கள். 5 லட்சம் முஸ்லிம்கள் பங்கெடுக்கும் தப்லீக் ஜமாத்தில் கலந்து கொள்பவர்களை குறி வைத்து லம்பா கேராவுக்கு அருகில் இரண்டு வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அக்குண்டு வெடிப்புடன் தொடர்புடைய உள்ளூர் செயல் வீரர்களான ராமநாராயணன் களசங்ராம் மற்றும் சுனில் ஜோஷி ஆகியோரை ம.பி போலீஸார் கண்டறிந்து கைது செய்தனர். ஏ.டி.எஸ்ஸடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

-இந்து, டில்லி, 20-நவம்பர்-2008

suvanappiriyan said...

நரேன்!

//நண்பரே, இரண்டே இரண்டு குண்டுவெடிப்பை பற்றி சொல்லிவிட்டு மற்றவைகளை விட்டு விட்டீர்களே.//

பதிவு நீண்டு விடும் என்பதற்காகத்தான் உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச் சொன்னேன். இது போல் இன்னும் நூறு சம்பவங்களுக்கு மேல் ஆதாரத்தோடு சொல்ல முடியும். (இடையில் அலுவலக வேலை வேறு வந்து விடுகிறது.)

உதாரணத்துக்கு ஒன்றிரண்டை பட்டியலிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது மற்ற சதிகளும் அம்பலப்படுத்தப்படும்.

//இந்துத்வா வருவதற்கு பலப்பேர் பல காரணங்கள் கூறுகின்றர். உஙகள் காரணம் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.//

பல காரணங்களில் நான் சொன்ன காரணமும் பிரதானமான ஒன்று. அடுத்து இந்து மதத்தின் மேல் உள்ள பற்றினால் இதை எல்லாம் செய்யவில்லை. அதிகாரம் கையை விட்டுப் போகிறதே! ஆட்சி அதிகாரம் நம் கைக்கு வராதே! இந்துக்களின் ஓட்டைப் பெறுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளிலேயே அவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள். ஆனால் இதில் வெற்றியடையப் பொவதில்லை என்பது வேறு விஷயம்!

//உங்கள் கூற்றுப்படியே இந்துத்வா ஆட்சி வந்து எல்லோரும் இஸ்லாமுக்கு மாறி 110%, அதன் பிறகு பாகிஸ்தானில் நடைபபெருவதைப்போல் முஸ்லிம்களுக்குள் அடித்துகொள்வதைபோல் ஆகக்கூடாது என்பது என் ஆசை.//

பாகிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு முக்கிய காரணமே மொசாத்தும், சி.ஐ.ஏவும் என்பது அனைத்து பாகிஸ்தானியருக்கும் தெரிந்தே இருக்கிறது. சமீபத்தில் கூட மொசாத்துக்கும், சி.ஐ.ஏ வுக்கும் உளவு பார்த்த முன்று பாகிஸ்தானியரை கைது செய்துள்ளனர். அங்கு நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்தியாதான் காரணம் என்ற செய்தியை பரப்புவார்கள். நமது நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்பதற்கு கச்சிதமாக நாடகத்தை நடத்துவார்கள்.

இரண்டு நாடுகளுக்கும் பகை தொடர்ந்தால்தான் அவர்களின் ஆயுதம் விற்பனையாகும். இங்கு நமக்கு எப்படி ஐ.எஸ்.ஐ அச்சசுறுத்தலோ அதே போல் பாகிஸ்தானுக்கு ராவின் அச்சுறுத்தல் என்று கைக்கூலிகளால் செய்தி பரப்பப்படுகிறது.

புல்லாங்குழல் said...

உங்கள் கட்டுரை அருமை. கேள்வி பதிலில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவதும் பண்பு அற்புதம்

suvanappiriyan said...

சகோ. நூருல் அமீன்!

//உங்கள் கட்டுரை அருமை. கேள்வி பதிலில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவதும் பண்பு அற்புதம்//

தொடர்ந்து பதிவுகளை படித்து கருத்துக்களையும் கூறி வாருங்கள்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!