Followers

Sunday, April 18, 2021

தப்லீக் ஜமாத்தினரின் மனித நேயப் பணி!

 

தப்லீக் ஜமாத்தினரின் மனித நேயப் பணி!

 

'போன முறை கொரோனா வந்தபோது ஆக்சிஜன் சிலிண்டர் தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் போன முறை இந்த அளவு பற்றாக்குறை இல்லை. ஆனால் இந்த முறை பல மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு ‘நீங்களே ஆக்சிஜன் சிலிண்டர்களை தயார் செய்து கொள்ளுங்கள்’ என்று கை விரித்து விட்டன. அந்த அளவு தட்டுப்பாடு தற்போது. எனவே மத வேறுபாடு இல்லாமல் யாருக்கெல்லாம் சிலிண்டர் அவசர காலத்தில் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இலவசமாக வீடு வரை கொண்டு சேர்க்கிறோம். தற்போது ரமலான் மாதமாகையால் 24 மணி நேரமும் ஓய்வின்றி நோன்பையும் வைத்துக் கொண்டு பொது சேவையையும் செய்து வருகிறோம்.ஒரு மனிதனை காப்பாற்றுவதும் இறை வணக்கத்தில் வருகிறதாக குர்ஆன் கூறுகிறது. எனவே இதனையும் ஒரு வணக்கமாக செய்து வருகிறோம்.

 

தற்போது எங்கள் கைவசம் 50 சிலிண்டர்கள் உள்ளன. மேலும் 50 சிலிண்டர்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். எந்த மதத்தினரும் எந்த நேரமும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.'

 

என்கிறார் டெல்லி தப்லீக் ஜமாத் நிர்வாகி.

 

சிங்கிள் சோர்ஸ் என்றும் கொரோனாவை பரப்பியவர்கள் தப்லீக் ஜமாத்தினர் என்றும் பொய் கூறியவர்கள் இன்று எங்கே? பல உயிர்களை காத்துக் கொண்டிருக்கும் இவர்களை தேச விரோதிகள் போன்று மோடி சர்க்கார் முன்பு நடத்தியதையும் இங்கு நினைவு கூறுகிறோம்.

 

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்

 

தமக்குத் தீங்கு செய்தாரைத் தண்டிக்கும் முறையாவது தீமை செய்தவர் வெட்கப்படும் அளவுக்கு நன்மையைச் செய்வதுடன் அவர் செய்த தீமை யையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும்.




 

No comments: