Followers

Wednesday, April 28, 2021

யுவனுக்கு எதிராக களமிறங்கியிருக்கும் சங்கிகள்!


 


யுவனுக்கு எதிராக களமிறங்கியிருக்கும் சங்கிகள்!

 

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

குர்ஆன் 8:30.

 

இந்த வசனத்தை யுவன் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். உடனே உலகமெங்கும் உள்ள சங்கிகள் ஒன்றாக அங்கு குழுமி அவருக்கு எதிராக எழுதத் தொடங்கி விட்டனர்.

 

ஒரு குர்ஆன் வசனத்தை எடுத்துப் போடுவது அவ்வளவு பெரிய குற்றமா? பிடிக்கவில்லை என்றால் அவரது பக்கத்துக்கு வராமல் இருந்து கொள். அவரது முகநூல் பக்கத்தில் அவர் எதை விரும்புகிறாரோ அதனை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.

 

 

சங்கிகளுக்கு!

 

உனது இந்து மதம் ஒழுங்காக இருந்திருந்தால் நாங்களெல்லாம் ஏன் மதம் மாறப் போகிறோம்?

 

ஒருவன் தனது தாய் மதத்தை விட்டு வெளியேறுவது என்பது வேறு வழியின்றி எடுக்கப்படும் முடிவு இது. மிகுந்த வலிகளுடனேயே அதனை எடுக்கிறோம். மதம் மாறுவது உனக்கு வருத்தமாக இருந்தால் முதலில் இந்து மதத்தை சீர்படுத்து. அதன் பிறகு யுவனுக்கு பாடமெடு.

 

8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

 

1 comment:

Dr.Anburaj said...


உண்மையில் யுவனை அரேபிய வல்லாதிக்க வாதிகள்தான்
இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிராக நிறுத்தியிருக்கின்றார்கள். எற்கனவே இரண்டு திருமணங்களும் நிலைக்க வில்லை. 3வதாக எப்படியோ ஒரு முஸ்லீம் பெண்ணை மணக்கின்றாா்.காரணம் புரியவில்லை. காரணம் இல்லை. தந்தை சிறந்த இந்து.பக்திமான். நல்லவா் என்று பேர் எடுத்தவா். தீண்டாமை அவர்கள் வாழ்வில் இல்லை. ஸ்ரீசங்கர மடம் அவரை போற்றி மரியாதை அளித்து வந்தது. திருவாசகத்திற்கு சிம்போனி இசை அமைத்து சாதித்தவா். இவ்வளவு இந்து பண்பாட்டில் நிலைபெற்ற குடும்பத்தில் பிறந்த யுவன் முஸ்லீம்மாக மாறியது ஒரு விபத்து.

யுவனை வைத்து அரேபிய மதம் ஒரு இனியமதம் என்ற பிரச்சாரத்தை முன்வைத்தால் அரேபிய மதம் ஒரு பாழ்மதம் என்று அறிவிக்க ஒவ்வொரு இந்துவுக்கும் உரிமை உண்டு.

இந்து ஒருவன் மதம் மாறித் தொலைந்தால் உலக அரங்கில் இந்துக்களின் எண்ணிக்கை ஒன்று குறைகிறது. ஹிந்து விரோதிகளின் எண்ணிக்கை ஒன்று கூடுகிறது . எண்ணிக்கை மிக அவசியம். அகவே மதமாற்றத்தை அறவே ஒழிக்க வேண்டும்-சுவாமி விவேகானந்தாா்.