Followers

Thursday, December 18, 2014

ஒன்றாகவே படித்தோம்! ஒன்றாகவே இறந்தோம்! - கவிதை



ஒன்றாக பள்ளியில் குதூகலித்து படித்தோமே!

நன்றாக பள்ளியில் ஒன்றாக உணவு உண்டோமே!

கூட்டாக வாழ்வின் கனவுகளை அசை போட்டோமே!

எட்டாத வேலைகளையும் எட்டி விட முனைந்தோமே!

ஒன்றாக பள்ளி சீருடையில் உலா வந்தோமே! தோழா...

நன்றாக சென்ற நமது பள்ளி நாட்களை நொடிகளில்

மிருகமான சில மனிதர்களின் கோழைத் தனத்தால்

இழந்து விட்டோம். இனி இழக்க ஒன்றுமில்லை!

இறப்பிலும் இன்று ஒன்று சேர்ந்து விட்டோம்!

ஒன்றாகவே படித்தோம்! ஒன்றாகவே இறந்தோம்! இறைவா!

எதிரிகளுக்கு கூட எங்கள் நிலை வர வேண்டாம்!

-பெஷாவர் பள்ளியில் ஒன்றாக படித்த மாணவர்கள்!




2 comments:

Dr.Anburaj said...

ஆயிரம் ஆண்டுகளாக இந்துஸ்தான் மண்னை அரேபிய கலாச்சாரத்தை வேருன்ற நடநது வரும் முயற்சியில் அரேபிய காடையா்களால் கொல்லப்பட்ட இந்துக்களைக் குறித்தும் கவிதைகள் பாட ஏன் மனவரவில்லை

Dr.Anburaj said...

பாக்கிஸ்தானத்து முஸ்லீம்களும் உங்களுக்கு மத சகோதரா்கள் தானே.ஆக ரொம்ப பாசம் தான். இதுபோல் ஆயிரம் சமபவங்கள் பங்களாதேஷ்யில் நடந்து வருகின்றது.கேடகத்தான் நாதியில்லை.