Followers

Sunday, February 15, 2015

தொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்!



தொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்!

விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த விளையாட்டை நாட்டின் கவுரவ பிரச்னையாக எடுத்துக் கொண்டு சில கிறுக்கர்கள் தொலைக் காட்சி பெட்டியை உடைப்பதைத்தான் இங்கு பார்கிறோம். அட கிறுக்கன்களா! விளையாட்டில் ஜெயித்தவனும் தோற்றவனும் கோடிகளில் புரளுவதை நீ அறிய மாட்டாயா? உடைத்த அந்த டிவியை வாங்க நீ இரண்டு மாதம் உடல் வியர்வை சிந்தி உழைக்க வேண்டுமே என்றாவது சிந்தித்தாயா? விளையாட்டு, இசை என்ற எந்த பொழுது போக்கு அம்சங்களையும் ஒரு அளவுக்கு மீறி நேசித்தால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வுகளே சாட்சிகளாக இருக்கின்றது.

இந்தியாவிலும் பகிஸ்தானிலும் தேச பக்திக்கு அடையாளமாக கிரிக்கெட்டின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த போக்கானது இரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல. வறுமையான மக்களை அதிகம் கொண்ட இந்த நாடுகள் பொருளாதார முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாகிஸ்தானிடம் ஜெயித்த சந்தடி சாக்கில் மோடி அரசு பெட்ரோல் விலையை மேலும் ஏற்றியுள்ளது. அது பற்றி எல்லாம் தேச பக்தி பேசுபவர்களுக்கு கவலையில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் பாகிஸ்தானை ஜெயித்து விட வேண்டும்.

இந்திய பாகிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் என்றுதான் சிந்திக்க தொடங்குவார்களோ! பொறுத்திருந்து பார்போம்.

No comments: