Followers

Wednesday, September 03, 2014

பாரத் மாதா கீ.... ஜே - ஆர்எஸ்எஸ் வெறியாட்டம்!





கேரள மாநிலம் கதிரூர் என்ற இடத்தில் நேற்று முன் தினம் ஆர்.எஸ்.எஸ் உள்ளூர் நிர்வாகி தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்.எஸ்.எஸ் அழைப்பு விடுத்த முழு அடைப்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் அரங்கேறின. கந்து வட்டி பிரச்னை, பெண் பிரச்னை, ரியல் எஸ்டேட் அடிதடி என்று எதுவாக இருந்தாலும் அவர் இந்துத்வாவாதியாக இருந்தால் அதற்கு மதசாயம் பூசப்பட்டு மகான் ஆக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்திருந்த இன்றைய பந்தில் கேரள மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளை வன்முறையாளர்கள் சேதப்படுத்தினர். தொடுபுழா என்ற இடத்தில் சந்தைப் பகுதியில் திறந்திருந்த கடைகளை ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கினர். புனலூரில் ஹோட்டல் ஒன்றை அடித்து உடைத்தனர். இதுத்தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். ஹரிப்பாடு என்ற இடத்தில் 2 லாரிகள் தாக்கப்பட்டன. எர்ணாகுளம் தெற்கு ரெயில்வே நிலையம் அருகே வாகனங்கள் மீது கல்வீச்சு நடந்தது.

ஓணம் பண்டிகைக்காக ஒரு லோடு பழங்கள் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டது. ஹர்த்தால் அனுசரித்து வந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அங்கு இறக்கப்பட்ட ஒரு லோடு வாழைப்பழங்களை ரோட்டில் வீசி எறிந்து அனைத்தையும் மிதித்து அழித்தனர். கடையின் உரிமையாளரான யூனுஸ் காசிமையும் அனைவரும் சேர்ந்து தாக்கினர். மீன் மார்க்கெட்டில் மீன் விற்கும் கடைகளையும் உடைத்து நாசப்படுத்தினர். இவை அனைத்தையும் செய்து விட்டு 'பாதர் மாதா கீ... ஜே!' என்று கோஷம் போடவும் தவறவில்லை.

இந்த காட்டுமிராண்டி கும்பல்தான் இந்து மதத்தை காப்பாற்ற போகிறாம். இந்த வருட ஓணம் பண்டிகையில் பழங்களின் விலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பாதிப்படைவது இந்துக்களே! இந்த காட்டுமிராண்டி கும்பலிடம் உள்ள மூர்க்கத்தனத்தைப் பாருங்கள். பார்வையில் ஒரு வெறி. எதையும் அழித்தே பழக்கப்பட்டதல்லவா இந்த கும்பல். மனித உயிர்கள் கிடைக்கவில்லை என்றால் அந்த வேகத்தை காய்கறிகளிடம் காட்டுவார்கள் இந்த காட்டு மிராண்டிகள். தேசபக்தி என்பது இவர்கள் போடும் பகல் வேஷம். இந்த காட்டுமிராண்டி கும்பலின் பின்னால் அணி வகுக்கும் அப்பாவி இந்துக்களுக்கு உண்மையை விளக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். நமது நாட்டு நலனில் அக்கறை உள்ள ஒவ்வொரு இந்தியனும் இந்த காவிக் கும்பல்களின் அயோக்கியத்தனத்தை அனைத்து மக்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இறைவா! எனது தாய் நாட்டை இந்த காவி கயவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக!

No comments: