
குஜராத்தின் அஹமதாபாத் நகரில் தாரியாபூர் என்ற சிற்றூர் உள்ளது. இங்குள்ள மசூதியில் 5:30 மணிக்கு காலை தொழுகைக்காக குழாய்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த குடி தண்ணீரை சுமார் 2000க்கும் மேற்பட்ட இந்துக்கள் தினமும் தங்கள் குடும்பத்துக்காக குடங்களில் எடுத்துச் செல்கின்றனர். இதற்கான செலவுகள் அனைத்தையும் முஸ்லிம்களே ஏற்றுக் கொள்கின்றனர்.
இதே அஹமதாபாத் நகரில் கவுஸர் பீவி என்ற ஒரு இஸ்லாமிய கர்பிணி தாயின் வயிற்றை கிழித்து அதன் உள் இருந்த சிசுவையும் நெருப்பில் இட்டு பொசுக்கினார்களே! இந்திய வரலாறு அதனை என்றுமே மறக்காது. அதே ஊரில் அதற்கு பரிகாரமாக முஸ்லிம்கள் இந்து தாய்மார்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அளித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
இதுதான் இஸ்லாம்.
பங்கஜ் பர்வ் என்ற இந்துத்வவாதி இதற்கு பின்னூட்டம் இடும் போது....
'இது பாகிஸ்தான் மஸ்ஜித் அல்ல. இந்தியர்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மஸ்ஜித். அதில் எங்களுக்கும் பங்குண்டு'
என்று கூறுகிறார். என்னதான் இஸ்லாமியர்கள் நேசக்கரம் நீட்டினாலும் இது போன்ற இந்துத்வாவாதிகளினால் என்றுமே பிரச்னைகளை இந்த சமூகம் சந்தித்துக் கொண்டேதான் இருக்கும். இது போன்ற அற்ப பதர்களை தூரமாக்கி 90 சதவீதமான நல்ல மனம் கொண்ட இந்துக்களை நாம் பகைக்காமல் இந்த நாட்டை சாதி சமய மோதலற்ற நாடாக மாற்ற முயற்சிப்போமாக!
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
-திருக்குறள்
'நமக்குத் தீமை செய்பவர்களை தண்டிக்க அவர் வெட்கப்படும்படியாக நன்மையை செய்துவிடுங்கள்.
No comments:
Post a Comment