Followers

Tuesday, September 18, 2018

அரசை தூக்கி எறிய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மணல் திருட்டைக் கண்டு கொள்ளாத அதற்கு துணை போகும் காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டம் இயற்றுக...
-தலைமை நீதி மன்றம் தமிழக அரசுக்கு ஆணை
சட்டம் இயற்ற மூன்று வார அவகாசம் வேண்டும்
-தமிழக அரசு
ஒரு ஆணை பிறப்பிக்க மூன்று வார அவகாசம் எதற்கு. உடன் சட்டம் இயற்றவில்லை என்றால் தமிழக அரசு மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.
-தலைமை நீதி மன்றம் தமிழக அரசுக்கு காட்டம்.
---------------------------------------------------------
மணல் திருட்டை தடுக்கப் போன பல அதிகாரிகளை கொன்றுள்ளனர் மணல் மாஃபியாக்கள். தமிழகத்துக்கு மணல் எந்த அளவு ஜீவாதாரம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் மூன்று வார அவகாசம் கேட்டுள்ளது தமிழக அரசு. மணல் மாஃபியாக்களிடமிருந்து மாமூல் தினமும் அமைச்சர்களுக்கு செல்வது இதன் மூலம் உறுதியாகிறது. அமைச்சர்களும் குண்டர் சட்டத்தில் கைதாக்கப்படலாம் என்பதாலேயே தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. தமிழகத்தை சுடுகாடாக மாற்றுவதற்கு முன் இந்த கையாலாகாத அரசை தூக்கி எறிய வேண்டியது காலத்தின் கட்டாயம்.


2 comments:

Dr.Anburaj said...

மணல் கொள்ளை மூலம் வரும்“ வருமானத்தை அனுபவித்து ரூசி காட்டியவா் அண்ணல் கலைஞா் அவர்களே.
இன்று சர்வகட்சி (பிஜேபி அல்லாத) கூட்டணி மணல் கொள்ளையை நடத்தி காசு சம்பாதித்து வருகின்றது.
ஆளும் கட்சிக்கு 100 லாரி மணல் கொள்ளையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றால் எதிா்கட்சிகளுக்கு 40 லாரிகள் மணல் கொள்ளையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


யாரை தூக்கி எறியப் போகின்றீா்கள் ? ஆளும்கட்சியையா? எதிா்கட்சியையா ?

ASHAK SJ said...

அடேய் சவப்பெட்டியில் ஊழல் செய்தவர்கள் அதைப்பற்றி பேசக்கூடாது, இப்ப ரபேல், பப்பு ராகுல் செருப்பாலையே அடிக்கிறார், ஒரு மூடனும் பதில் சொல்லல பிஜேபி ல இருந்து