Followers

Wednesday, September 12, 2018

விநாயகரை கரைத்தவுடன் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு!

விநாயகரை கரைத்தவுடன் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு!
1. 470 நீர் நிலைகளில் தண்ணீர் பயன்படுத்த அருகதையற்றதாகி விட்டது.
2. எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள், ஊற்றுகள் அடைபட்டு முற்றிலும் வறண்டு விட்டன.
3. கடற்கரையிலிருந்து 3 கடல்மைல் தூரம் வரை மீன்கள் வரத்து முற்றிலும் நின்றுபோனது. 4. கடலில் பிடிக்கும் நண்டு உள்ளிட்ட ஓடுகளுடைய உயிரினங்கள், மீன்கள் போன்றவற்றின் உடம்பில் காரியம், ஈயம், பாதரசம் போன்றவைகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
5. இவற்றை உண்ணுபவர்கள் விரைவில் பார்வைக்கோளாறு மற்றும் நரம்புத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்படுவார்கள்
6. நகரத்தில் 10 பேரில் ஒருவருக்கு மூளை ரத்தக் கட்டி (பக்கவாதம்), இருவருக்கு நரம்பு கோளாறு, அய்ந்து பேருக்கு பார்வை தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.
7. கடற்கரையோரம் கால் நனைத்தால் காலில் அரிப்புகள் ஏற்படுவதாக நூற்றுக்கணக்கான புகார்கள் சுகாதார அலுவலகங்களுக்கு வந்துள்ளன.
8. மாநகராட்சியில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் தொகை குறிப்பிட்ட மாதங்களில் 70 மடங்கு அதிகமாகிறது.
9. குடிநீரில் மாசு கலந்துவருவதால் அனைத்து ஏரிகளில் நீர் நிறைந்திருந்த போதிலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தண்ணீர் மங்கலாக வருமானால் அதை குடிக்கப் பயன்படுத்தவேண்டாம் என்று மாநகராட்சியே விளம்பரம் செய்யும் அவலம்!
10. நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு குறைந்த பட்சம் ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படும். இதில் முக்கால்வாசி குப்பைகள் மறுசுழற்சிக்குப் பயன்படுத்த இயலாமல் எரியூட்டப்படுவதால் நகரில் பாதிப்பகுதியில் காற்று கடுமையாக மாசடைந்து வருகிறது.
மேலே உள்ள அனைத்தும் பிள்ளையார் சதுர்த்தி முடிந்து நீர் நிலைகளில் பிள்ளையார் பொம்மை களைக் கரைப்பது தொடர்பாக விளையும் பேரபாயம் ஆகும். இந்த புள்ளிவிவரங்கள் மும்பை மாநகராட்சி வெளியிட்டது ஆகும்.
தற்போது இந்துத்துவ அமைப்புகள் சென்னை மாநகரின் சுற்றுப்புறச்சூழலை அழிக்கவும், நோயுற்ற மக்கள் வாழும் பகுதிகளாக மாற்றவும் ஆங்காங்கே பிள்ளையார் சிலைகளை வைக்க ஆரம்பித்து விட்டன.
முன்பெல்லாம் விநாயக சதுர்த்தி அன்று விநாயகரைக் கடையில் வாங்கிப் பார்த்து விட்டு, வீட்டுப் புழக்கடையில் உள்ள கிணற்றில் வீசி எறிவார்கள். இப்பொழுது என்ன என்றால், அதற்கென்று ஊர்வலம் நடத்தி கடலிலும், மக்கள் பயன்படுத்தும் நீர் நிலைகளிலும் கரைக்க ஆரம்பித்து விட்டனர். அரசு எவ்வளவோ சொன்னாலும் இரசாயனம் சார்ந்த பொருள்களால் பிள்ளையார் உருவாக் கப்படுவதால், அந்தப் பொம்மைகளை நீரில் கரைக்கும் பொழுது நீர் மிகப் பெரிய அளவில் மாசு அடைகிறது.
அதுகுறித்து தான் மும்பை மாநகராட்சி ஆய்வின் அடிப்படையில் நீரில் கரைப்பதால் ஏற்படும் கேடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசு என்ன செய்யப் போகிறது? பக்தர்களும் தான் என்ன செய்யப் போகிறார்கள் - ஒரு பக்தி அழிவுக்குப் பயன்படலாமா? சிந்திப்பீர்!
தகவல் உதவி
விடுதலை
11-09-2018

4 comments:

Dr.Anburaj said...

,இவைகள் சரியா தவறா மிகைப்படுத்தப்பட்ட தகவலா எனக்கு தெரியாது.முறையான சமய கல்வி அளித்தால் இந்த பழக்கங்கள் தானாகவே மறைந்து விடும் என்பது உறுதியாக தெரியும்.எனது அனுபவமும் அதுதான். பல இடங்களில் தியானப்பயிற்சி யேகா வகுப்புகள் பஜனை தேவாரம் வகுப்புகள் நடத்தி வருகின்றோம். நாங்கள் ஒன்றும்அதை செய்யாதே என்று எந்த அறிவரையும் வழங்குவதில்லை.ஆனால் கடல் கரைக்கும் நிகழ்ச்சிகளில் எங்கள் வகுப்புக்கு வரும் குழந்தைகள் பெரியோர்கள் கலந்து கொள்வதில்லை.அவர்களது ஆன்மீக தேவை நிறைவு பெற்றுவிட்டது. அந்த ரூசி கண்டவா்கள் இதுபோன்ற ஆா்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக்கொள்வாா்கள்.
1000 ஆண்டு முறையான சமயகல்வி மறுக்கப்பட்டு கலாச்சார வாழ்வு சீரழிந்து போனதால் களைகளுக்கும் பயிா்களுக்கும் வேறுபாடு காண முடியாமல் இந்துக்களின் மனித வளம் விரயமாகிக்கொண்டிருக்கின்றது. இன்று இதை தவறு என்வவர்கள்,குறை காண்பவர்களுக்கு கடந்த 12 மாதங்கள் அவகாசம் இருந்தும் அதற்கு எதிராக எந்த பிரச்சாரத்தையும் செய்யாதது ஏன் ? மக்களை நல் வழிப்படுத்த ஏதும் செய்யாதது ஏன் ? இந்து சமய அறநிலையத்துறை என்ன செய்கின்றது ? அனைவரும் கைவிட்ட சமூதாயமாக இந்து சமூதாயமாக இருக்கும் போது களைகள் மலியத்தானே செய்யும்.

Dr.Anburaj said...

ஸ்ரீகிருஷ்ணா் பிறந்த கோகிலாஷ“டமியை தமிழ்நாட்டில் பல பிரிவு மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனா்.இதற்கு சம்பிராதயமாக முதல்வா் அவர்கள் வாழ்த்து தெரிவித்தாா்.ஆனால் கோமாளி ஸ்டாலனி முதல்வா் வாழ்த்து தெரிவித்தது தவறு என்று கண்டனம் தெரிவிக்கின்றாா். என்ன முட்டாள்தனம். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை பிறாமணா்கள் பகவத்கீதை மனப்பாடம் செய்வதில் போட்டி வைக்கின்றாா்கள். மற்றவா்கள் கீதையை மறந்து விட்டு, ஒதுக்கி வைத்து விட்டு, உறிஅடி விழாவாக கொண்டாடு வருகின்றனா். மகத்தான வாழ்வு வாழ்ந்த ஸ்ரீகிருஷணா் இன்று வெறும் உறி அடி போட்டி நாயகனாக மாறி விட்டான்.ஸ்ரீமத்பகவத்கீதை மக்கள் வாழ்வில் இருந்து ஒதுங்கிக் கிடக்கின்றது.உறிஅடித்திருநாள் ஸ்ரீமத்பகவக்கீதையை ஒரம்கட்டிவிட்டது. ஸ்ரீகிருஷ்ணா் என்றால் பகவத்கீதை என்று எப்போது மக்கள் மாறுவா்கள் ?
இந்துக்களைநேசிக்கும் ஒரு அரசு உருவாக வேண்டும். இந்து சயயமத்தில் முளைத்து வோ்விட்டு செழித்து வாழ்ந்துகொண்டிருக்கும் களைகளை சுவாமி விவேகானந்தா்-ஸ்ரீநாராயணகுரு வழியில் -வெட்டித்தள்ளி மனித வளம் காக்கும் அறப்பணியை யாா் செய்வார்கள் ?

Dr.Anburaj said...

இசுலாம் என்ற அரேபிய வல்லாதிக்கம் ஏற்படுத்தும் பாதிப்பு பயங்கர வாம் மற்றும் படுகொலைகள்.
ஈரான் கடல் எல்லைக்குள் 100 அகதிகள் -முஸ்லீம்கள்- முகம்மதுவை பின்பற்றும் ஏமாந்த மக்கள் - கடலில் முழ்கி இறந்தனா். இசுலாம் சென்ற இடம் எல்லாம் மனித இரத்த களறிதானே. இசுலாத்தை என்ன செய்ய ? தடை செய்யலாமா ?

ASHAK SJ said...

அப்பாவிகளை கொல்வது முழு மனித சமுதாயத்தையே கொல்வது போல் என்று குரான் சொல்கிறது, ஆக எந்த நாடும் இஸ்லாத்தின் பிரதிநிதி அல்ல, குரான் மற்றும் ஹதீஸே இஸ்லாம். ஆனால் கடவுள் பெயரால் உன்னை சூத்திரன் என்றானே நீ அறிவுள்ள மனிதனா?