Followers

Wednesday, September 19, 2018

விநாயகரை கரைத்தவுடன் அசுத்தமான ஏரி !

விநாயகரை கரைத்தவுடன் அசுத்தமான ஏரி !
இந்து மதக் கோட்பாடானது பூமியையும், நீரையும், மரங்களையும் தெய்வமாக வழிபட்டு அதன் புனிதம் கெடாமல் காப்பது. காலாகாலமாக இதனைத்தான் பார்த்து வருகிறோம். ஆனால் இங்கு 20 அடி 30 அடி விநாயகரை செய்து அதன் கழுத்தை அறுத்து, கைகளை வெட்டி ஏரிகளில் கரைத்து அந்த நீர் நிலைகளை அசுத்தமாக்குவதை வருடா வருடம் பார்க்கிறோம்.
முன்பெல்லாம் நமது சகோதர இந்து மதத்தினர் கையடக்கம் உள்ள சிறிய பிள்ளையாரை செய்வார்கள். அதனை நீர் நிலைகளில் கரைப்பதால் முன்பெல்லாம் இந்த அளவு சுற்று சூழல் பாதிப்படைந்ததில்லை. என்று ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முண்ணனி அரசியலுக்காக விநாயகர் சதுர்த்தியை கையில் எடுத்ததோ அன்று முதல் மக்களின் நிம்மதியும் போனது: சுற்றுச் சூழலும் மாசுபாடானது. விநாயகரை நீர் நிலையில் கரைப்பவர்கள் அந்த இடங்களை சுத்தப்படுத்தி விட்டு செல்வதுதானே முறையாக இருக்கும். இதனை தட்டிக் கேட்பது யார்? தேச நலனில் அக்கறை உள்ள யாராவது இந்த பாதக செயலை செய்வார்களா? இவர்கள்தான் தேச பக்தர்களா?


No comments: