Followers

Sunday, September 30, 2012

பௌத்த விகாரைகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்!

பௌத்த விகாரைகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்!

வங்கதேசத்தில் தென் கிழக்குப் பிராந்தியத்தில் பௌத்தர்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் மீது நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறைந்தது ஆறு பௌத்த விகாரைகளுக்குத் தீவைத்துள்ளார்கள்.



கொக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. பெருமளவிலான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.

உள்ளூரில் பௌத்தர் ஒருவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவதூறான படம் ஒன்றை வெளியிட்டு இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்தே அந்தக் கிராமங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன.

இதேவேளை, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியாகும் விதத்தில் குறித்த படம் தனது பெயருக்கு tag செய்யப்பட்டிருந்ததை தான் அறிந்திருக்கவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்துக்கு உள்ளான அந்த நபர் கூறியிருக்கிறார்.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட ராமு உபாசிலா பிரதேசத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



(பங்களா தேஷின் உள்துறை அமைச்சர் முஹையுத்தீன் கான் தீக்கிரையாக்கப்பட்ட புத்த விகாரைகளை பார்வையிடுகிறார்.)


இந்த செயல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். யாரோ ஒருவன் ஃபேஸ் புக்கில் குர்ஆன் எறிப்பு சம்பந்தமாக ஒரு படத்தை வெளியிட்டால் அதை காரணமாக வைத்து புத்த விகாரகைகளை நாசப்படுத்துவதும் மக்கள் வாழும் பகுதிகளை தீக்கிரையாக்குவதும் ஒரு முஸ்லிம் செய்யும் செயல் அல்ல. இதனை உலக முஸ்லிம்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்த காட்டு மிராண்டி தனமான செயலை செய்தவர்களை கைது செய்து இழந்த சொத்துக்களை மதிப்பிட்டு நஷ்ட ஈட்டை இந்த கயவர்களிடமிருந்து வசூலித்துக் கொடுக்க வேண்டும். ஒரு முறை இது போன்று செய்தால் மறுமுறை கூட்டத்தில் வன்முறையை கையிலெடுக்கும் கும்பலுக்கு ஒரு பயம் ஏற்படும்.

பொதுவாகவே பங்காளிகள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள். இங்கு சவுதியில் இவர்களுக்குள் அடித்துக் கொள்வது சர்வ சாதாரணம். சிறிய விஷயத்துக்கெல்லாம் கை நீட்டும் குணமுடையவர்கள். இவ்வாறு சம்பந்தமில்லாமல் வன்முறையை கையிலெடுப்பவர்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவர்களிடம் இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் மிக குறைவாக இருப்பதைக் காணலாம். ஒருவன் ஐந்து வேளையும் உளப்பூர்வமாக தொடர்ந்து தொழுது வருவானாகில் தனது கோபத்தை கட்டுப்படுத்தவும் தவறு செய்தவர்களை உரிய முறையில் திருத்தவும் பழகிக் கொண்டு விடுவான். தொழுகை அவனுக்கு அந்த அளவு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வழங்குவதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். பங்காளிகளில் 50 சதமான பேர் தொழுகையில் ஆர்வமில்லாதவர்களாகவே இருப்பர்.

சமீபத்தில் அமெரிக்காவில் வெளியான நபி அவர்களின் படத்துக்கு உலகம் பூராவும் எதிர்ப்பை முஸ்லிம்கள் காட்டினர். சில இடங்களில் வன்முறையும் வெடித்து கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன. சிலர் கொலையும் செய்யப்பட்டனர். எதிர்ப்பை காட்டுவதற்கு இது சரியான வழி அல்ல. அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோமா அதோடு பிரச்னையை முடித்து ஆக வேண்டியதை பார்க்க வேண்டும்.


முகமது நபி பிறந்து வாழ்ந்து மறைந்த சவுதி அரேபியாவில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை. கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்த படத்தை சவுதியில் தடை செய்ய சொன்னார் அப்துல்லா. தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார். இதனால் அந்த படத்தைப் பற்றிய அதிக விளம்பரமும் சவுதியில் அந்நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை. அத்தோடு முடிந்தது பிரச்னை. இது போன்ற நடை முறையைத்தான் இனி வருங்காலத்தில் முஸ்லிம்களும் கடை பிடிக்க வேண்டும். தற்போது முகமது நபி அவர்களின் உண்மையான வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் எகிப்து தயாரிபபாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். இது போன்ற முறைகளில் நாம் பதிலளித்து அவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும்.

நாம் நடத்திய மித மிஞ்சிய ஆர்ப்பாட்டத்தினால் அந்த படத்துக்கு மேலும் விளம்பரத்தையும், சரிந்திரிந்த ஒபாமாவின் செல்வாக்கை நிமிர்த்தியும் கொடுத்து நமது எதிரிகளுக்கு நாமே ஆதரவை வழங்கியுள்ளோம். ஒபாமா எதை நினைத்து காயை நகர்த்தினாரோ அது கச்சிதமாக நடந்தேறி வருகிறது.

இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் : 'மென்மை எதில் இருந்தாலும் அந்த காரியத்தை அந்த மென்மை அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும்'

-அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா
ஆதாரம்: முஸ்லிம் 2594


ஒரு கருத்துக்கு எதிர்ப்பு, பதிவு எழுதுதல், அழைப்புப்பணி, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளை நேர்வழிப்படுத்துதல் என்று எந்த காரியத்திலும் மென்மையான முறையையே நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த நபி மொழி நமக்கு கற்றுத் தருகிறது. குறிப்பாக அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு மென்மையும் பொறுமையும் அவசியமாகும். சொல்லவரும் விஷயத்தை சற்று கடுமையாக சொன்னோம் என்றால் கேட்பவர் கூட அலட்சியம் செய்து சென்று விடுவர்.


ஐரோப்பிய கல்லூரிகளில் இளம் மாணவர்கள் இறைவனை தொழும் அழகைப் பாருங்கள். இடம் இல்லை என்றாலும் படிக்கும் டெஸ்குகளை விரிப்பாக ஆக்கி தங்களின் கடமையை நிறைவேற்றுகின்றனர். இந்த தொழுகையில் நாம் கவனமாக இருந்தால் உலகின் எந்த பிரச்னைகளையும் சுலபமாக தீர்க்கும் வழியை இறைவன் நமக்கு காட்டுவான். தொழுகையில் கவனத்தை செலுத்தி தீய செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்வோம்.







மற்றுமொரு தலித் கற்பழிப்பு ஹரியானாவில்!



இது அடுத்த கற்பழிப்பு. இங்கு மூன்று கயவர்கள் அதே முறையில் ஒரு தலித் பெண்ணை பலவந்தமாக கற்பழித்து அதே முறையில் மொபைலில் அந்த நிகழ்ச்சியை பரவ விட்டுள்ளார்கள. இதுவும் ஹரியானா மாநிலத்தில்தான் நடந்துள்ளது. போலீஸ் இது வரை உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

சோனிபட் : அரியானா மாநிலத்தில் மூன்று வாரத்தில் 3வது கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலம், சோனிபட் அருகே கோகானா எனும் ஊரில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர், 3 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 3 வாரத்தில் அரியானா மாநிலத்தில் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவம் நடப்பது 3வது முறையாகும். கடந்த செப் 21ம் தேதி திருமணமான பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் 3 பேரால் கற்பழிக்கப்பட்டார். அதேபோல் 16 வயது பெண் ஒருவரும் எட்டு பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.

'எனது கழுத்தை நெரித்தனர். ஒருவன் என் கைகளை பிடித்துக் கொண்டான். மற்றொருவன் என்னை களங்கப்படுத்தினான். காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.' என்று அந்த பெண் குமுறலோடு பேட்டி கொடுப்பது கல் நெஞ்சையும் உலுக்கி விடும்.

இந்த கயவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? பரிதாபத்திற்குரிய அந்த தாழ்த்தப்பட்ட மக்களை இம்சிப்பதில் இந்த கயவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷமோ தெரியவில்லை.

‘பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).

பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379).

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).

அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412).

மனுவின் இந்த சட்டங்கள் தான் அந்த கயவர்களை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டுகிறது.

மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (8 : 21)

அம்பேத்கார்தான் நமது நாட்டின் சட்டத்தை இயற்றியவர் என்று படித்துள்ளேன். நம் நாடு எதிர் கொள்ளும் பிரச்னைகளுக்கு அம்பேத்காரும் ஒரு காரணமோ? :-)

இப்போ மேல் சாதியினரின் ஆட்சி நம் தமிழகத்தில் நடப்பதால் வறுமை நீங்கி சுபிட்சம் எல்லா வீடுகளுக்குள்ளும் வர ஆரம்பிக்கும். :-)

இதை எல்லாம் நாங்கள் பின் பற்றுவதில்லை என்று பலர் சாதிக்கலாம். ஆனால் இன்றும் மனுவின் சட்டத்துக்கு அங்கீகாரம் கொடுக்க துடித்துக் கொண்டிருக்கும் சிலரையும் பார்ப்போம்.

மனு தர்ம ஆதரவாளர்கள்

இன்றும் மனுவைப் போற்றுபவர்கள் நம்மிடையே உள்ளனர். இந்தியா விடுதலை பெற்றவுடன் உச்ச நீதிமன்றம் உருவாகும் நிலையில் அந் நீதிமன்ற வளாகத்தில் மனுவின் சிலையை நிறுவ வேண்டுமென்று வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. அவ்வாறு மனுக்குச் சிலை நிறுவினால் அதைத் தாமே முன்னின்று இடிப்பதாக அம்பேத்கர் கூறினார். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி புரிந்தபோது ஜெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுவுக்குச் சிலை நிறுவப்பட்டது. இதற்கு மாநில காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சிலை மேற்கூரை எதுவுமின்றி வீதியில் உள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி புரிந்தபோது இமாசலப் பிரதேசத்தில் மனாலி என்னுமிடத்தில் ஏற்கனவே உள்ள மனு கோயிலைப் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்துள்ளனர்.

”1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேச மாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில பா.ஜ.க. அரசின் அட்வகேட் ஜெனரல் வி.கே.என். சவுதாரி பேசுகையில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சட்ட நூல் மனுஸ்மிருதிதான் என்று குறிப்பிட்டார். இதனை ஆர்.எஸ்.எஸ். சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ (மே 10, 1992) வெளியிட்டுள்ளது”. (மார்க்ஸ்).

ஒருகால் மோடி பிரதமராகி பிஜேபி ஆட்சிக்கு வந்தால் சுப்ரீம் கோர்டில் மனுவுக்கு சிலை வைக்கப்படலாம். மனு தர்மத்தின் படி ஆட்சியும் நடக்கலாம். இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம்....

-----------------------------------------------

சுடுகாட்டில் மின்சார பற்றாக்குறையால் தகனம் பாதிப்பு!

கோவை:உயிரற்றவர்களுக்கும், மின் தடையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில், மாநகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமாக, 12 மின் மயானங்கள் உள்ளன. மின் தடையால், மின் மயானங்களில், சடலங்கள் எரியூட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சொக்கம்புதூரில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தில், மின் தடையால், 125 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டர் பழுதாகி விட்டது. இதனால், சடலம் எரியும்போது மின்வெட்டு ஏற்பட்டால், துர்நாற்றப் புகை வெளியேறுகிறது; இப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் தவியாய் தவிக்கின்றனர்.சடலம் எரிந்து கொண்டிருக்கும்போது, மின் தடை ஏற்பட்டால், பல மணி நேரத்துக்குப் பின், மீண்டும் மின்சாரம் வரும் வரை, காத்திருக்க வேண்டியுள்ளது. பாதியில் விட்டுச் செல்லவோ, மயானத்தில் காத்திருக்கவோ முடியாமல் உறவினர்கள் தவிப்பது, பரிதாபகரமானது.

சொக்கம்புதூர் மாநகராட்சி மின் மயான காப்பாளர் ஜெகன்னாதன் கூறியதாவது:இங்கு, வாரம், 25 சடலங்கள் வருகின்றன. எரியூட்டும் கல்லின் உட்பகுதியில் மின்சார காயில் இருப்பதால், ஒருமுறை எரித்தாலும் அதன் வெப்பம் 24 மணி நேரத்துக்கு கல்லில் இருக்கும்.எனினும், சடலம் எரிந்து கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டால், புகை வெளியேறுவதை தவிர்க்க முடியாது. மின்சாரம் எப்போது வரும், போகும் என்பது தெரியாத நிலையில், இப்பிரச்னை குறித்து உறவினர்களிடம் முன்பே கூறி விடுகிறோம். மின் தடையால் பணிகள் தாமதமாகி, சடலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பாப்பநாயக்கன்பாளையம் தனியார் மின் மயான ஊழியர் உண்ணி கூறுகையில், ""இங்கு தினமும், குறைந்தது, 5-6 சடலங்கள் வருகின்றன. இரண்டு மின்தளங்கள் உள்ளன. ஜெனரேட்டர் வசதி இருப்பதால் பிரச்னை இல்லை,'' என்றார்.

தகனம் தடைபடுவது உணர்வுரீதியான விஷயம் என்பதால், மின் மயானங்களில் பழுதாக உள்ள ஜெனரேட்டர்களை சரி செய்ய வேண்டும்; ஜெனரேட்டர் இல்லாத இடங்களுக்கு, அந்த வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே, பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பத்திரிக்கை செய்தி
29-09-2012

இவ்வாறு சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முறையை விட மனித உடலை மண்ணில் புதைப்பது சிறந்தது என்பது எனது கருத்து. இந்து மதத்தில் புதைப்பதில் ஏதும் சிக்கல் உள்ளதா என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்து மதத்தில் பலர் இறந்த உடலை மண்ணில் புதைப்பதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.

மின்சார பற்றா குறை நிலவும் இது போன்ற நாட்களிலாவது எரிப்பதற்கு பதில் புதைப்பது நல்லது என்பது எனது புரிதல். எங்கள் ஊரிலெல்லாம் உடல்களை வரிசையாக அடக்கி விட்டு மீண்டும் இரண்டு அல்லது மூன்று வருட இடைவெளியில் தொடங்கிய இடத்துக்கே வருவோம். மண்ணானது உடலை மக்கச் செய்து அடையாளமே இல்லாது செய்து விடும். அந்த மண்ணுக்கும் அந்த உடல் உரமாகி விடுகிறது. சுற்று சூழலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை..

Saturday, September 29, 2012

அஹ்மத் நஜாத் - ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம்!

அஹ்மத் நஜாத் - ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம்!



ஐநாவில் அஹ்மத் நஜாதின் அழகிய உரை:

தனது நாட்டை மட்டும் நினைக்காமல் உலக மக்களின் பொருளாதாரத்தையும் அவ்வப்போது தனது பேச்சினுடையே சொல்லி வரும் இந்த தலைவரைப் பற்றியும் இவரது எளிமையைப் பற்றியும் சமீபத்தில் இணையத்தில் படித்ததை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். இவரிடம் உள்ள ஒரே குறை இவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். அந்த காலத்தில் தகவல் வசதியற்ற காலத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஷியா, சன்னி என்று இரு பிரிவாக பிரிந்து விட்டார்கள். தற்போது இணைய வசதியினால் யார் தவறு செய்தது? எங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது? என்ற உண்மை பலருக்கும் தெரிய வருகிறது. இதன் மூலம் கசப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது. இவர் முயற்சி செய்தால் இவரது காலத்தில் இரண்டு பிரிவுகளும் ஒன்றாகி முகமது நபி காலத்தில் எவ்வாறு ஒன்றுபட்ட சமூகமாக இருந்தோமோ அது போன்ற நிலையை அடையலாம். அதற்கான முயற்சியை இந்த தலைவர் எடுப்பார் என்று நம்புவோம். இனி அவரது எளிய வாழ்வை சற்று பார்ப்போம்.


அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது

• •அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்

• •இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..

• •படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் (Phட in Transportation Engineering and Planning from Iran University of Science and Technolog)

• • இவரது வங்கி நிலுவை 0

• •இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி. தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்

• • அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் தன் நாட்டு விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

• • பெட்ரோலை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

• •நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம்

இந்த எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. உலக தலைவர்கள் இவரைப் போன்று அனைத்து மக்களையும் நேசிக்க ஆரம்பித்தால் உலகம் அமைதியுறும். இன்று உலகுக்கு தேவை அமைதி. அதனை கொண்டு வர இவர் ஒரு தூண்டுகோலாக இருந்தால் நல்லதே!


'உன்னை விட மாட்டேன்'

அஹமத் நஜாத் ஹீரோவாக நடிக்க ஒரு படம் எடுக்கலாம் என்ற ஐடியா! படத்தின் பெயர் 'உன்னை விட மாட்டேன்'.

அமெரிக்காவைப் பார்த்து சொல்றது மாதிரி இருக்குல்ல.....:-)

------------------------------------------------






Friday, September 28, 2012

சவுதியில் கை ரேகைகளின் முக்கியத்துவம்!

தற்போது கை ரேகைகளை பதிந்து கொள்ளும் முறை சவுதி முழுக்க பரவலாக்கப்பட்டுள்ளது. வேலைக்காக வரும் வெளி நாட்டவர் முதற் கொண்டு ஹஜ் உம்ராவுக்காகவும் சுற்றுலா வரும் அனைத்து வெளி நாட்டவரும் தற்போது அவர்களின் கை ரேகைகளை அவசியம் பதிய வைக்கப்படுகிறார்கள். சில வருடங்களாக ஹஜ் பயணிகளுக்கு இந்த கைரேகை முறையை செயல் படுத்தியதில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அடையாளம் காணும் முறை மிக இலகுவாகி விடும். மேற் கண்ட தகவலை பாஸ்போர்ட் துறைக்கான டைரக்டர் ஜெனரல் அப்துல் அஜீஸ் அல்ஜஜீரா பேப்பருக்கு கொடுத்த செய்தியில் கூறியுள்ளார்.



மருத்துவர்களாக பணிபுரியும் சவுதி பெண்கள் நோயாளிகளின் கை ரேகைகளை பதிவு செய்கின்றனர்.

முகத்தையும் மூட சொல்லி குர்ஆனோ நபிமொழியோ கட்டளையிடவில்லை. இது அந்த பெண்களாக விரும்பி அணிந்து கொள்வது. பல ஆண்களோடு கலந்து வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படுவதால் தாங்களாகவே முகத்தை மூடிக் கொள்கின்றனர். இது அவர்களின் வேலைக்கு எந்த வகையிலும் இடைஞ்சலாகவும் இல்லை. ஆனால் வெளி நாடுகளிலிருந்து பணிக்கு வரும் பெண்கள் யாரும் முகத்தை மூட மாட்டார்கள். அவர்களை யாரும் முகத்தை மூடச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் இல்லை.

//அரபு நாட்டில் வேலை செய்வபவர்களால் எல்லாம் இந்தியப்பொருளாதாரம் வாழவில்லை.தனி நபர் வாழ்க்கைக்கு தான் அப்பணம் போகிறது. அங்கு வேலை செய்பவர்கள் இந்தியாவுக்கு அனுப்புவது சொற்ப பணமே,மேலும் பெரும்பாலும் ஹவாலா என்பதால் அரசுக்கு நட்டமே.// -வவ்வால்

'உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்திய தேசத்தவர்தான் அதிக அளவில் சவுதியில் பணி புரிகின்றனர். இவர்கள் இந்தியாவுக்கு ஒரு வருடத்தில் சவுதியிலிருந்து மாத்திரம் ஆண்டுக்கு 15 பில்லியன் ரியால்களை வங்கி மூலமாக அனுப்புகின்றனர். (ஹவாலா முறையில் அனுப்புவது கணக்கில் வராது. ஆனால் நான் அனுப்புவது வங்கி மூலமே! அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தக் கூடாது அல்லவா? :-)) ஆறு வளைகுடா நாடுகளிலிருந்து மட்டும் இந்தியர்கள் ஒரு வருடத்துக்கு அனுப்பும் பணம் 37 பில்லியன் ரியால்களாகும். இந்த மொத்த பணமும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருக்கிறது' என்கிறார் சவுதி ஹாலந்து பேங்கின் மேனேஜிங் டைரக்டர். ஆக எத்தனை இலட்சம் மக்கள் நம் இந்தியாவில் இருந்து மட்டும் வருகை புரிகிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இத்தனை மக்களையும் எந்த சிக்கலும் இல்லாமலும் நிர்வாகத்தை சிறப்பாக நடத்த தற்போது இந்த கை ரேகை முறை மிக உதவியாக இருக்கிறது.

அடுத்து சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் ஆண்கள் அனைவரின் கை ரேகைளையும் பதிய ஆணை பிறப்பித்துள்ளார் இளவரசர் பந்தர் பின் அப்துல்லா. அவர் மேலும் கூறும் போது 'இந்த கை ரேகையானது வழக்கு விசாரணைக்கும் அரசு ஆவணங்களை சரி பார்ப்பதற்கும் மிக உதவியாக உள்ளது. இவை அனைத்தும் ஸ்கேன் செய்து பாதுகாக்கப்படுவதால் பல வருடங்களுக்குப் பிறகும் சம்பந்தப்பட்டவரின் தகவல்களை மிக இலகுவாக பெற முடிகிறது. விமான நிலையங்களில் தேவையில்லாமல் பெண்கள் முகத்தை காட்ட வேண்டிய அவசியமும் மட்டுப்படுத்தப் படுகிறது" என்கிறார்..

உலகின் அனைத்து நாட்டு மக்களையும் தன்னகத்தே கொண்ட சவுதி அரேபியா வெளி நாட்டு மக்களின் பிரச்னையை மிக இலகுவாக தீர்த்து வைப்பதை பார்த்தோம். ஆனால் அறிவியல் துறையில் மிக உயரிய இடத்தைப் பிடித்த நமது நாடு இன்றும் அஸ்ஸாம், மற்றும் எல்லையோர மாநிலங்களின் பிரச்னையை தீர்க்க கையை பிசைந்து கொண்டிருக்கிறது. நிலக்கரி, கிரானைட்,ஸ்பெக்ட்ரம் போன்ற முறைகேடுகளில் சுருட்டிய பணத்தை வைத்தே ஒரு வருட பட்ஜெட்டைப் போட்டு விடலாம். இவ்வளவு பணம் புரளும் நமது நாட்டில் நாட்டின் பாதுகாப்புக்காக இது போல் புகைப்படம், கைரேகை போன்றவற்றை கணிணியில் பதியும் முறையை ஏன் நம் ஆட்சியாளர்கள் ஏற்படுத்த தயங்குகிறார்கள்? இதில் என்ன சிக்கல்? தற்போதுதான் ரேஷன் கார்டை கணிணியில் பதியும் முறை ஆரம்பமாகி உள்ளது. அது இன்னும் முழுமையடையவில்லை. ஆமை வேகத்தில் பணி நடந்து வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையும் வெறும் புகைப்படத்தோடு நிற்கிறது. இன்னும் கைரேகை முறை ஆரம்பிக்கப் படவில்லை.


பண்டைய பாபிலோன் சைனா நகரங்களில் முன்பு கை ரேகைகளை களிமண்ணில் பதிந்துள்ளார்கள்.
---------------------------------------------
//வரும் காலங்களில் சவுதி பிச்சைக்காரர்களை மும்பை, டில்லி வீதிகளில் பார்க்கலாம்.
ஏன்...சென்னை, கோவையில் கூட பார்க்கலாம்.

அதுவரை நான் இருக்கவேண்டும்..அந்தக் கண் கொள்ளா காட்சியைப் பார்க்கவேண்டும்.//

ராவணன் என்ற பதிவரின் ஒரு பின்னூட்டமே இது. நமது இந்திய நலனில் மிகுந்த அக்கறை கொண்ட மன்னரையும் அந்நாட்டு மக்களையும் பிச்சைக்காரர்களாக்கிப் பார்ப்பதில் இவருக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை. 'சவுதிகளைப் போல் வசதியாக எனது இந்திய நாட்டையும் பார்க்க ஆசைப்படுகிறேன்' என்று எண்ணினால் அதை வரவேற்கலாம். என்ன செய்வது அவர் பேசவில்லை. அவருக்குள் இருக்கும் டாஸ்மாக் பேசுகிறது. இறைவன் தான் எனது நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அவருக்கு நான் கொடுத்த பதில்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்.

வாழ்வில் ஒருவர் பெருமை சிறுமை அடைவதற்கு பிறர் காரணம் அல்ல. அவரவர் செயலே காரணம். பொன் மாற்று அறிவதற்கு உரைகல் வைத்திருப்பர். பொன்னை உரசிப் பார்த்து அதன் தரம் அறிவர். அதுபோல் ராவணனின் செயலும் எண்ணமும் அவரை நல்லவரா கெட்டவரா என்பதை காட்டி விடும்.

சுருங்கச் சொன்னால் 'எண்ணம் போல் வாழ்வு' :-)

-----------------------------------------------

"சவுதியில் இன்னும் 18 ஆண்டுகளில் எண்ணெய் தீர்ந்துவிடுமா?"
என்று சார்வாகன் ரொம்பவும் கவலைப்பட்டு (அதாவது மனதுக்குள் சந்தோஷப்பட்டு) ஒரு பதிவிட்டிருந்தார்.

"நாமும் எமது மூதாதையர்களும் பேரித்தம் பழம் உண்டும், பாலைக்
குடித்தும் வாழ்ந்தவர்கள் மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்தால் நாம் மீண்டும் பேரித்தம் பழத்தோடும் பாலோடும் வாழ்ந்து கொள்வோம்"

மன்னர் பைசல் அவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான அக்டோபர் யுத்தத்தின் போது மேற்கு நாடுகளுக்கு பெட்ரோல் விநியோகிப்பதை நிறுத்திய போது சொன்ன பிரபல்யமான கூற்றுதான் இது.

பெட்ரோல் தீர்ந்தால் ஒன்றும் குடி மூழ்கி போகாது. முகமது நபி தனது ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று பேரித்தம் பழங்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார் என்பதை ஞாபகப்படுத்தினால் இவர்களும் அவரைப் போலவே வாழப் பழகிக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலையாட்களை வெளியாக்கினால் பில்லியன் கணக்கில் டாலர்களை மிச்சப்படுத்தலாம். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு டிரைவர்கள், மூன்று டிரைவர்கள் என்ற நிலை மாறி சவுதிகளே ஓட்டுனர்களாகி விடுவார்கள். தற்போது விவசாயத்திலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எனவே இஸ்லாம் என்ற அருமையான வழியை வைத்து சவுதிகளை சிக்கன வாழ்வு வாழ்பவர்களாக மாற்றி விடலாம்.

ஹஜ், உம்ரா வருபவர்களுக்காக இன்று அரசு கோடிக்கணக்கான டாலர்களை செலவழிக்கிறது. பெட்ரோல் குறைந்தால் ஒவ்வொரு வெளி நாட்டவரும் 3000 ரியால் பராமரிப்பு செலவுக்காக சவுதி அரசுக்கு கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் உலக முஸ்லிம்கள் கட்டியே தீர வேண்டும். இதை வைத்தே கூட அரசு செலவினங்களை சமாளித்து விடலாம்.

என் பையன்களுக்கே அவர்கள் ஆடம்பரமாக ஏதும் கேட்டால் இரண்டு நபி மொழிகளை எடுத்துப் போடுவேன். மௌனமாகி சென்று விடுவார்கள். எனவே கவலையை விடுங்கள். எந்த சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து விடுவர். அதற்கு இஸ்லாம் அழகிய வழி காட்டுகிறது.

மனமிருந்தால் மார்க்கமுண்டு. :-)

------------------------------------------------------

மனிதனின் விரல் ரேகைகளைப் பற்றி குர்ஆன்!

'மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்'

75 : 3, 4 - குர்ஆன்


அன்றைய அரபுகள் 'இறந்ததற்கு பின்பு திரும்பவும் எழுப்பப் படுவோமா? எலும்புகள் மக்கி மண்ணான பிறகு எவ்வாறு நம்மை இறைவன் உயிர்ப்பிப்பான்?' என்றெல்லாம் முகமது நபியிடம் சந்தேகத்தோடு கேட்க ஆரம்பித்தனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.

விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகள் எல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் இறைவன் ஏன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?

மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.

ஏன் என்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான். இதனால் தான் இன்று மேலை நாடுகளில் பேங்கிலிருந்து பணம் எடுக்க ரேகைகளை உபயோகப் படுத்துகிறார்கள். நம் நாட்டிலும் காவல் துறையிலிருந்து நீதி மன்றம் வரை விரல் ரேகைகளையே பயன் படுத்துகிறோம்.

ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்ப கொண்டு வந்து விடுவோம். நமக்கு மக்கிப் போன எலும்புகளை ஒன்றாக்கி திரும்பவும் உயிர்ப்பிப்பது பெரிய காரியம் அல்ல என்ற உண்மையை இறைவன் விளக்குகிறான்.


Thursday, September 27, 2012

முதல்வர் ஜெயலலிதாவும் அமைச்சர் மு க அழகிரியும் யோசிப்பார்களா?

முதல்வர் ஜெயலலிதாவும் அமைச்சர் மு க அழகிரியும் யோசிப்பார்களா?

மத்திய அரசிடமிருந்து நமது தமிழகத்திற்கு உதவி கிடைப்பது ஜெயலலிதா ஆட்சி வந்தவுடன் குதிரைக் கொம்பாகி விட்டது. எப்போதுமே கௌரவத்தைப் பார்க்கும் ஜெயலலிதா இந்த முறையும் அதே ஈகோ பிரச்னையால் லட்சக்கணக்கான தமிழர்களுக்கான வேலை வாய்ப்பையும் தமிழத்தின் பொருளாதாரத்தை நிமிர்த்தக் கூடிய அற்புதமான திட்டமான 'பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம்' அமைக்கும் திட்டத்தை கை கழுவி விடுவாரோ என்று அச்சம் ஏற்படுகிறது.

தமிழகத்தில், கடலூர், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், 256 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், "பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம்' அமைக்கப்படும் என, நான்கு மாதங்களுக்கு முன், மத்திய அரசு அறிவித்தது.இந்த மண்டலத்தில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில், 1.5 கோடி டன் திறன் கொண்ட, சுத்திகரிப்பு நிலையம், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் என்றும், இது தவிர, தனியார் நிறுவனங்கள் பல, 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து, தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கான ஒப்புதலை, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவைக் குழு, ஜூலை, 3ம் தேதி அளித்தது.

அதனால், பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டல துவக்க விழா, விரைவில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான அறிகுறிகள் இல்லை. இந்தத் திட்டம் தொடர்பாக, முதல் கட்டமாக, தமிழக தொழிற்துறை மற்றும் ரசாயனத் துறையுடன், மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும். அதுவே, திட்டம் துவங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை. ஆனாலும், அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்களாகி விட்ட நிலையில், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மத்தியில், இந்த திட்டத்தை அமல்படுத்தும் துறை, தி.மு.க., அமைச்சர் அழகிரியின் வசம் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், திட்டம் வழக்கம் போல, நழுவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த, பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம் அமைந்தால், தமிழகத்தின் கடலோர பகுதிகளைச் சேர்ந்த, ஏறத்தாழ, எட்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகம் மற்றும் தொலைத் தொடர்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்; அதற்கான உதவிகளை, மத்திய அரசு செய்யும். மண்டலம் அமையும் பட்சத்தில், இந்த கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டும், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை, மத்திய அரசு செலவிட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்தப் பகுதியில், நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது.

இதன் சார்பிலும், கடலூர் பகுதியில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 60 லட்சம் டன் திறன் கொண்ட, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்களில், பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம், ஏற்கனவே அமைக்கப்பட்டு, அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும், அறிவிக்கப்பட்டும், இந்தத் திட்டம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், மிகப்பெரிய துறைமுகங்களை அமைப்பது என, மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக, உரிய விவரங்களை அளிக்கும்படி, மாநில அரசுகளிடம், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கேட்டிருந்தது. நான்கு மாதங்களாகியும், இதற்கான முறையான பதில் எதுவும், தமிழக அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு வந்து சேரவில்லை.இது குறித்து கடிதம் எழுதி கேட்டும் கூட, உரிய பதில் தரப்படவில்லை என, கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஆந்திராவில், ஓங்கோல் என்ற இடத்தில், மிகப் பெரிய துறைமுகம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கி விட்டன. அதனால், இந்த விஷயத்திலும், தமிழகம், தூங்கிக் கொண்டிருக்கிறது என்பது, மேலும் வேதனை தரும் தகவல்.

அம்மா ஜெயலலிதா திமுக மந்திரிகளை எப்படி உள்ளே தள்ளுவது என்பதில் தினமும் குறியாக இருக்கிறார். மு க அழகிரி சுரங்க ஊழலில் தனது மகன் போலீஸ் கையில் அகப்பட்டு விடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கிறார். நம் தமிழக மக்களோ அடுத்த அஜீத் படம் எதுவாக இருக்கும்,. கமல ஹாஸனின் விஸ்வரூபம் வெற்றி பெறுமா என்ற ஆராய்ச்சியில் மூழ்கி உள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவோ டாஸ்மாக் விற்பனையை இன்னும் அதிகமாக்குவது எப்படி என்று மாவட்ட ஆட்சியாளர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையில் ஒழுங்காக இருந்த அண்ணா வளைவை இடித்து விட்டு தற்போது முட்டு கொடுத்து நிற்க வைத்துள்ளார்கள். முட்டுக் கொடுத்து நிற்க வைக்கும் கிரேன்களுக்கு தினமும் வாடகையை லட்சக் கணக்கில் தமிழக அரசு கொடுத்து வருகிறது. கிரேனுக்கு சொந்தக்காரர் அதிமுக அனுதாபியாக இருக்கலாம்..

'துக்ளக் ராஜ்ஜியம்' என்பார்களே அது இதுதானோ?

Tuesday, September 25, 2012

தலித் பெண் கற்பழிப்பு: தந்தை தற்கொலை!



ஹரியானா மாநிலத்தில் 18 வயது இளம் தலித் பெண் பல உயர் சாதி மிருகங்களால் கற்பழிக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பாகியுள்ளது. அந்த கயவர்கள் கற்பழித்ததோடு அல்லாமல் அந்த காட்சியை மொபைலில் படம் பிடித்து பலருக்கும் அனுப்பியுள்ளார்கள். இந்த அவமானம் தாங்காமல் அந்த பெண்ணின் தகப்பனார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் நடந்து இன்றோடு பதினைந்து நாட்களாகிறது. ஆனால் இதுவரை இரண்டு பேரை மட்டுமே போலீஸ் கைது செய்துள்ளது.



குற்றவாளிகள் யார் என்று நன்றாக தெரிந்தும் அவர்களை கைது செய்ய காவல் துறை தயங்குகிறது. காரணம். தவறு செய்தவர்கள் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களாம். என்ன கொடுமை இது. நாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்.

உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு தந்தை இதனால் தற்கொலையும் செய்து கொண்டுள்ளார். இரண்டு சோகங்களை தாங்கிக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்துக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. மேல் சாதி அமைப்புகளிலிருந்து காவல் துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதாம். போன வருடம் இதே கிராமத்தில் முழு கிராமமும் ஆதிக்க சாதியினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டதாம். இந்த வருடம் இப்படி ஒரு சோகம்.

ஒரு பெண் கற்பழிக்கப்பட்டது முதல் குற்றம்.

பல பேர் சேர்ந்து அந்த பெண்ணை கற்பழித்தது அடுத்த குற்றம்.

கற்பழித்த காட்சியை மொபைலில் பார்வைக்கு அனுப்பியது அதை விட பெருங் குற்றம்.


இன்று வரை குற்றவாளிகளை பிடிக்காமல் போக்கு காட்டும் காவல் துறையின் செயல் அதை விட கொடுங் குற்றம்.

'நாங்கள் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள். உங்களால் என்ன செய்து விட முடியும்' என்று கேட்பது போல் உள்ளது இந்த நிகழ்வு. தலித் இனத்தில் பிறந்தது அந்த பெண் செய்த பாவமா? என்ன நடக்கிறது நம் நாட்டில்?

• 2008ஆம் ஆண்டு 34 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1545 வன்கொடுமைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்துள்ளன.
• 2009ஆம் ஆண்டு 27 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1264 வன்கொடுமைகள் நடந்துள்ளன.
• 2010ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாதங்கள் 22 படுகொலைகளையும் 24 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1633 வன்கொடுமைகளைக் கண்டுள்ளன.
• 2011ஆம் ஆண்டு 44 படுகொலைகளும் 20 பாலியல் வல்லுறவும், 12 பாலியல் வல்லுறவு முயற்சிகளும் உள்ளடக்கிய 336 வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 44 பேரில் 4 வயது, 6 வயது, 11 வயது, 16 வயது சிறுமிகள் உட்பட 8 பேர் சிறுவர் சிறுமியர்.
• இந்த ஆண்டு முதல் மூன்று வாரங்களில் மட்டும் எட்டு தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


'இந்தியா ஒளிர்கிறது' என்று பெயருக்கு சொல்லி வருகிறோம்.

--------------------------------------------------

நமது கூத்தாடிகளும் தங்களது பங்குக்கு சாதியை உரம் போட்டு வளர்க்கின்றனர். 'சுந்தர பாண்டியன்' என்ற படம் ஒன்று வந்துள்ளதாம். அதில் சாதி வெறியை எவ்வளவு நாசூக்காக ஏற்றுகிறார்கள் என்பதை வினவு தளத்தில் வந்த கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


“சுந்தரபாண்டியன்”’ திரைப்படம் ஒன்றும் நாட்டை ‘திருத்த’ வந்த கருத்து சினிமா இல்லை. அப்படி அவர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த திரைப்படம் மோசமான பிற்போக்குத்தனங்களையும், அசூசையான பிழைப்புவாதத்தையும் நேர்மறையில் உணர்த்துகிறது. அவற்றை அன்றாட வாழ்க்கையின் இயல்புகள் போல சித்தரிக்கிறது. காமடி, செண்டிமெண்ட் முதலான அதுவும் தேய்ந்து போன அரதப்பழசான காட்சிகளின் ஓட்டத்தில் பார்வையாளர்கள் அதை உணர்வாளர்களா என்பது சந்தேகம்தான்.

சுந்தர பாண்டியன்’ என்ற தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் “பாண்டியன்”’ என்ற சொல், இந்தப் படத்தின் ரசிக இலக்கு யார் என்பதை நமக்கு கோடிட்டுக் காட்ட… திரை விலகி ஆரம்பக் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம்’ என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.

“இதுதான் உசிலம்பட்டி”’ என்ற வாய்ஸ் ஓவரில் முத்துராமலிங்க தேவர் பெயர் பலகையுடன் துவங்குகிறது படம். சுவரில் போஸ்டர் ஒட்டும் ஒருவரை “எங்க ஆளுகளை தவிர யாரும் ஒட்டக்கூடாது… போ, போ’” என்று விரட்டிவிடுகிறார் ஒரு வயதானவர். தமிழ்நாட்டில் எவ்வளவோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களுக்கு பிரபுவும், கார்த்திக்கும்தான் ஸ்டார்கள்’ என்கிறது குரல். இருவரும் தேவர் சாதி நடிகர்கள் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. “தமிழ்நாட்டில் ஆயிர கட்சிகள் இருந்தாலும் இவர்கள் வட இந்திய தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்துவார்கள். நேதாஜிதான் இவர்களுக்குத் தலைவர்”’ என்கிறார்கள். ஃபார்வர்டு பிளாக் பற்றியும் முத்துராமலிங்க தேவர் பற்றியும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.

“எவ்வளவு பாசக்காரய்ங்களோ, அதே அளவுக்கு கோபக்காரய்ங்க. குலசாமியா நினைச்சு வளர்க்கும் பொண்ணுங்க மனசை காதல், அது இதுன்னு எவனாவது கெடுத்துட்டா என்ன செய்வாங்க தெரியுமா?”’ என குரல் நிறுத்த.. இளைஞர் ஒருவரை கருவேலங்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டிக் கொல்கிறது ஒரு கும்பல். “குல கவுரவத்த சீண்டுறவனை கருவருக்குற இடம் இதுதான்”’ என்கிறது குரல். எங்க கிட்ட மோதினா இதுதான் கதி’ என்று நமக்கு மிரட்டல் விடப்படுகிறது. சாதித் திமிரே பெருமிதமாக, ஒரு கொலையை நியாயப்படுத்தும் நீதியாக காட்டும் இந்தக் காட்சிகளை உசிலம்பட்டி பற்றிய டாக்குமென்டரி’ என்கிறார்கள் சிலர். ஆனால், இதுதான் உசிலம்பட்டியா? தேவர்கள் மட்டும்தான் உசிலம்பட்டியா?

ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களும் அதே உசிலம்பட்டியில்தான் வாழ்கின்றனர். பாப்பப்பட்டியும், கீரிப்பட்டியும் கூட உசிலம்பட்டிக்கு மிக அருகில்தான் இருக்கின்றன. இவர்கள் யாரும் அந்தக் காட்சியின் வரம்புக்குள் வரவில்லை. தலித்துக்களையும் இதர சாதி உழைக்கும் மக்களையும் கணக்கிலேயே எடுக்காமல் உசிலம்பட்டியின் ஒவ்வொரு அங்குலமும் தேவர் சாதிக்கு மட்டுமே பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதை போல “இதுதான் உசிலம்பட்டி”’ என்கிறார்கள்.

http://www.vinavu.com/2012/09/25/sundarapandian-review/

--------------------------------------------------

தடா ரஹீம் அவர்களின் பேச்சை இங்கு கேளுங்கள்.



Monday, September 24, 2012

அமெரிக்க தூதரை கொன்றது யார்? ஜார்ஜ் தரும் தகவல்!

//தீர்வு - பேசாம இராவோட இராவா, பக்கத்து ஊருக்குள்ள புகுந்து, அந்த கிராம தலைவரை ரேப் பண்ணி, கற்பழிச்சுக் கொன்னுடுங்க! அவரை தனியா போட்டுத் தள்ள கஷ்டமா இருந்தா, இன்னும் 4 பேரை சேர்த்தே போட்டுத் தள்ளுங்க! நீங்க பண்ணினது தப்பு கெடையாது! அது “புனிதமான” செயல் அப்டீன்னு பாராட்டி பதிவு போட ஆட்களா இல்லாமல் போவாய்ங்க?//



An American amateur anti-Islam film has triggered an attack on the US consulate in the Libyan city of Benghazi, which killed US Ambassador Chris Stevens, two former Navy SEALs and a State Department worker. US President Barack Obama said the killing of the US ambassador, the first such incident since 1979, was outrageous and shocking and vowed to track down the killers. US Republican Presidential candidate, Mitt Romney, described the US administration's initial response to the attack as appeasement.

Two weeks ago, the British broadcaster, Channel 4 screened a documentary film questioning the origins of Islam. Islam, the Untold Story claimed that there was little written contemporary evidence about the origins of the religion. This sparked more than a thousand complaints since the original broadcast of the documentary.

Meanwhile, the British government has outlined plans to set up secret courts to deal with security issues. It claims the secrecy is needed to protect intelligence sharing relationships with the US and other governments. Critics however say that the tribunals are intended to conceal evidence of crimes committed by the British government.

“But of course they are not in Afghanistan any more. They’re in Syria where Britain and America have sent them next. The very people who murdered the American ambassador in Benghazi were the people that we sent into Libya and bombed Libya so that they could come to power there.”

Meanwhile, Galloway said on his YouTube posting that the 9/11 attacks in the US were “clearly a conspiracy” and the terrorists were trained in the US, “learned how to fly planes” and then “flew themselves into the twin towers.”

http://www.presstv.ir/detail/262401.html




லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார்.
யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.

ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொன்றனர் என்றும் ஜார்ஜ் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.
அமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார்.

சொன்னவரும் சாதாரணமானவர் அல்ல. பிரிட்டிஷ் எம்பி. முஸ்லிம்கள் கற்பழித்து கொன்றார்கள் என்ற செய்தியை வெகு விமரிசையாக வெளியிட்ட ஊடகங்கள் இந்த செய்தியை கண்டும் காணாதது போல் இருந்து விடுவார்கள். அவர்களுக்கு தேவை இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளே!


http://www.inneram.com/news/world-news/america-only-done-september-11-attack-and-
murder-of-american-ambassador-in-libya-uk-parlimentarian-5876.html

----------------------------------------------------

உங்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் எவ்வாறு தீர்ப்பது என்பதையும் அவருக்கு பிரச்னை ஏற்பட்டால் நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதையும் ஒரு பதிவர் விளக்குகிறார். இந்த மனநலம் பாதித்த வரை ஒரு ஜோக்கராக நினைத்து சிரித்து விட்டு சென்று விடுங்கள். இந்த பகுதியை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இனி அதையும் பார்ப்போம்.


பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான பொருட்கள்!

01. கத்தி,
02. கோடாரி,
03. மண்வெட்டி, அலவாங்கு, வாள்
04. பல சைஸில் இருக்கும் கற்கள்
05. ஆஸிட்
06. பெற்றோல்
07. வெடிகுண்டுகள், உருட்டுக் கட்டைகள்
08. நன்கு தேர்ச்சி பெற்ற கற்பழிப்பாளர்கள்

சரி இவை அனைத்தையும் பத்திரமாக சேகரித்து வையுங்கள்! ஆ....... சொல்ல மறந்துட்டேன்! தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் கற்று வைத்திருங்கள்! அது ரொம்ப ரொம்ப முக்கியம்! :)))

இதெல்லாம் நான் எங்கே கத்துகிட்டேன்னு நீங்க கேட்கப்படாது. இப்போ நான் இருப்பது ஐரோப்பாவில். இதற்கு முன் எங்கே இருந்தேன்னு உங்களுக்கு தெரியும். அங்கேதான் இது அத்தனையும் கத்துக் கிட்டேன். என் இனத்தை எதிரிகளை விட அதிகமாக எனது தலைமைதான் கொன்றது. எதிர் கருத்து உடையவர்கள் என்று பல தலைவர்களை போட்டு தள்ளிய அனுபவம் எங்களுக்கு உண்டு. சென்னை விமான நிலையத்தில் எங்களுக்கு எதிர் கருத்துடைய போராளிகளை குருவி சுடுவது போல் சுட்டு எங்களின் வீரத்தை காட்டியதை சென்னை வாசிகள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். நாடு விட்டு நாடு வந்து உதவி செய்த ராஜீவ் காந்தியையும் அவரோடு சேர்த்து 10 க்கு மேற்பட்டவர்களையும் குண்டு வைத்து தகர்த்தோம். தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை போட்டு தள்ளிய அனுபவமும் எங்களுக்கு உண்டு. கோடீஸ்வரர்களாக இருந்த பல முஸ்லிம்களை மண்டபம் முகாமில் அடுத்த வேளை சாப்பாட்டுக்காக தட்டு ஏந்த வைத்த அனுபவம் எனது தலைமைக்கு உண்டு. இதை எல்லாம் நேரில் பார்த்தும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் என் மனதை கல்லாக்கி கொண்டேன். அதன் பயனாக இன்று தண்ணி அடித்தல், விபசாரம் மொள்ளமாரித் தனம் பண்ணுதல் என்று அனைத்திலும் நன்றாக தேறி விட்டேன். அதன் ஒரு பகுதியாகத்தான் எனது நாட்டிலே விபசார விடுதி திறந்து அதனை சட்டபூர்வ மாக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து பதிவிட்டேன். அது எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆனால் எனது இந்த நல்ல எண்ணத்தை என் கூட இருப்பவர்களே கூட சிலர் விரும்புவதில்லை. நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்க நான் இவ்வளவு முயற்ச்சித்தும் அதற்கு சரியான ஆதரவு எனக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது. எனது கருத்துக்கு எனது நாட்டிலிருந்து எந்த எதிர்ப்பும் வராத போது நான் சொன்னது தவறாகுமா என்று ஐடியாவோடு நான் கேட்டாலும் யாரும் பதில் சொல்வதில்லை. என்னை கிறுக்கன் என்று யாரும் சொல்லி விடக் கூடாது என்பதற்காகத்தான் எனது பெயரிலேயே ஐடியா என்ற அடை மொழியையும் சேர்த்து வைத்துக் கொண்டேன். தற்போது சண்டைகள் ஓய்ந்து தேர்தல்கள் நடந்து மக்கள் அமைதியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இப்படி அமைதி திரும்பினால் எங்களின் பாடு அதோ கதியாகி விடும். எனவே எப்பாடு பட்டாவது திரும்பவும் அந்த மக்களை ஆயுதத்தை தூக்க வைக்க வேண்டும். அதற்கு மேற் கொண்டு நான் என்ன செய்வது என்ற ஆலோசனையை வழங்குமாறு கேட்டுக் கொள்(ல்)கிறேன்.

அடுத்து இஸ்லாத்தை ஏன் அடிக்கடி தாக்குகிறாய் என்று நீங்கள் கேட்கலாம். நான் இப்படி தாக்கினால் பதிலுக்கு அவர்களும் இந்து தெய்வங்களை தாக்க ஆரம்பிப்பார்கள். இதன் மூலம் தமிழக இந்து முஸ்லிம் பதிவர்களை பிரிக்கலாம் என்று திட்டம் போட்டேன். ஆனால் அவர்களோ பதிலுக்கு எங்களிடம் உள்ள வன்முறைகளை பேசி என் எண்ணத்தில் மண்ணைப் போட்டு விட்டார்கள்.

மேலும் எனது தாய் நாட்டில் விபசார விடுதி, நைட் கிளப், சூதாட்ட விடுதி, சாராயக் கடை போன்றவற்றை எங்கும் திறந்து புரட்சி செய்யலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் முஸ்லிம்கள் இருக்கும் வரை எனது திட்டம் நிறைவேறாது போல் இருக்கிறது. அவர்களை ஒழிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிமையே முதல்வராக்கி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது எனது நாட்டு அரசாங்கம். நிலைமை இப்படியே போனால் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டு சட்டையை கிழித்துக் கொண்டு ஐரோப்பிய வீதிகளில் திரியும் நிலை எனக்கு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன்.

அபி அப்பாவிலிருந்து டோண்டு ராகவன் வரை எங்களை கிழி கிழி என்று கிழிக்கும் நிலைக்கு பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம். இந்த சிக்கலில் இருந்தெல்லாம் விடுபட நான் என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் சொன்னீர்கள என்றால் புண்ணியமாக போகும்.




இவ்வருட நடுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட பேஷன் ஷோவின்போது எடுக்கப்பட்ட ஒரு தொகைப் புகைப்படங்கள் இவை.

இவர்கள் அரச படையினரால் புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் ஆவர். இதே போன்று அனைத்து போராளிகளும் சகஜ வாழ்வுக்கு திரும்பி அவர்கள் வாழ்விலும் வசந்தம் வீச எல்லாம வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

http://www.pagejaffna.com/?p=9023

டிஸ்கி: இலங்கை தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்பது எனது பிரார்த்தனைகளில் ஒன்று. மேலே குறிப்பிட்ட பதிவர் அந்த லிஸ்டில் வர மாட்டார் என்பதும் நமக்கு தெரியும். வன்முறைக்கும் இலங்கையின் பெரும்பாலான தமிழருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட 2 சதமான நபர்கள் தான் இன்றும் வன்முறையில் நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களுக்காகவே இந்த பதிவு. இஸ்லாத்தை எதிர்ப்பதையே தனது குறிக்கோளாக கொண்டு செயல்படும் அந்த பதிவருக்கான எதிர் வினைதான் இது.



Sunday, September 23, 2012

நியூயார்க் போலீஸுக்கு திறமை பத்தாதுங்க.......!

நியூயார்க் போலீஸ்: 6 வருடங்களாக முஸ்லிம்களை உளவு பார்த்து என்ன கிடைத்தது?

நியூயார்க் ஏரியாவில் வசிக்கும் முஸ்லீம் மக்களை ஆறு வருடங்களுக்கு மேலாக உளவு பார்த்தும், உருப்படியான ஒரு கேஸ்கூட கிடைக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளது நியூயார்க் போலீஸ் NYPD (New York Police Department)

நியூயார்க் கோர்ட்டில் நடைபெறும் சிவில் உரிமை வழக்கு ஒன்றில் சாட்சியமளித்த NYPD துணைத் தலைவர் தாமஸ் கலாடி, கோர்ட்டில் இதை ஒப்புக்கொண்டார்.

முஸ்லிம் மக்களை உளவு பார்ப்பதற்காக டெமோகிராஃபிக்ஸ் யூனிட் என்ற பிரிவு ஒன்றை அமைத்து, அதில் பல உளவாளிகளை பணியில் அமர்த்தியிருந்தது நியூயார்க் போலீஸ். காவல்துறையின் உளவு பார்க்கும் பிரிவுகளில், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதும், இந்த பிரிவுக்குதான்.

கடந்த 6 வருடங்களுக்கு மேலாக ஃபுல் ஃபோர்ஸில் இயங்கிவரும் பிரிவு இது.

டெமோகிராஃபிக்ஸ் யூனிட்டின் உளவு புரோகிராம், சி.ஐ.ஏ.-வின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. நியூயார்க் ஏரியாவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் தமது உளவாளிகளை ஊடுருவ விட்டுள்ளது இந்த யூனிட்.

முஸ்லிம்கள் வசிக்கும், ஷாப்பிங் செய்யும் இடங்களில் துவங்கி, வழிபாட்டு ஸ்தலங்கள், இஸ்லாமிய மாணவர் அமைப்புகள் என்று சகல இடங்களிலும் தமது ஆட்களை வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

கடந்த வருடம் கொண்டுவந்த புதிய நடைமுறை ஒன்றின்படி, முஸ்லிம் பெயரில் இருந்து அமெரிக்க பெயருக்கு மாற்றிக் கொள்ளும் அனைவரும் கண்காணிக்கப்பட்டனர்.

அதேபோல, வேறு மதங்களில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களும், முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தனர்.

இவ்வளவு துல்லியமாக ஊடுருவியும், இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என்று கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார், NYPD துணைத் தலைவர்.

http://www.democracynow.org/2012/8/24/nypd_admits_muslim_spy_program_generated



After years of spying on Muslim neighborhoods, infiltrating groups and eavesdropping on conversations across the northeastern United States, the New York City Police Department has admitted its secret Demographics Unit failed to yield a single terrorism investigation or even a single lead. In the years following the Sept. 11 attacks, the NYPD secretly infiltrated Muslim student groups, sent informants into mosques, eavesdropped on conversations and created databases showing where Muslims lived, worked and prayed. We’re joined by Adam Goldman, who co-wrote the Pulitzer Prize-winning Associated Press series that revealed the spy program and, most recently, its failure. [includes rush transcript]

டிஸ்கி: மிஸ்டர் பிரசிடெண்ட் ஒபாமா! உங்க ஆளுங்களுக்கு திறமை பத்தாதுங்க. எங்க நாடான இந்தியாவுக்கு உங்க போலீஸ்காரங்களை பயிற்சிக்கு கொஞ்ச காலம் அனுப்பி வையுங்கள். பொய்கேஸ் எப்படி போடுவது? குண்டு வெடித்த ஐந்து நிமிடத்தில் 'இந்தியன் முஜாஹிதீன்' 'லஸ்கர் எ தொய்பா' என்று பல பெயர்களை எங்கள் காவல் துறையே ஆட்களை வைத்து பேச வைத்து மிக கச்சிதமாக ரோட்டோர முஸ்லிம்களை எப்படி கைது செய்கிறது? விசாரணை கைதியாகவே 10 அல்லது 15 வருடங்கள் எவ்வாறு முஸ்லிம்களை வதைப்பது? என்ற ரகசியங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி கொடுப்பார்கள். பிறகு நியுயார்க்கில் தினம் 10 முஸ்லிம்கள் உங்களுக்கு குற்றவாளிகளாக கிடைப்பார்கள். இதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுத்து விடலாம். தாமதப்படுத்தாதீர்கள். :-)

Saturday, September 22, 2012

கேளுங்கள் தரப்படும்: தட்டுங்கள் திறக்கப்படும்:

//or do still you want to use your parallel universe hypothesis and wishful thinking as the facts and data? Like you do all the time, "அமெரிக்காவிலே மிகவும் விரைவாகப் பெருகிவரும் மதம் இஸ்லாம்"

"கத்தோலிக்கப்பாப்பரசர் கூறுகிறார், இஸ்லாம் விரைவாகப் பெருகிவரும் மதம்"

கட்டுப்படுத்தமுடியவில்லை... பெருகிவரும் மதத்தை அல்ல; சிரிப்பை எனக்கு..... தரவுகளைத் தந்து பேசுங்களேன்; விட்டுவிட்டு, உங்கள் கூட்டத்தைப் பின்னூட்டங்களிலே "ஆமா! ஆமா!" என்று வில்லுப்பாட்டு விதூஷகர்போல சொல்லும் பொய்களுக்கெல்லாம் ஆமா போடவைக்காமல்...//









Among every four humans in the world, one of them is Muslim. Muslims have increased by over 235% in the last fifty years up to nearly 1.6 billion. By comparison, Christians have increased by only 47 %... Islam is the second largest religious group in France, Great Britain and USA.

The following statistics show the growth of Islam in the world from (1989-1998):
North America: (25%)
Africa: (2.15%)
Asia: (12.57%)
Europe: (142.35%)
Latin America: (4.73%)
Australia: (257.01%)

Western fierce media campaign against Islam and Muslims escalated after the 11th of September attacks. Biased media, especially in the USA, rushed into a feverish contest to depict Islam as a religion based on savagery, intolerance and blood-thirst.

Not only in the media were Muslims harassed in the United States of America, Britain, Australia, and other European countries; rather, they were physically attacked at their homes, in the streets, in public places, and in their Mosques, Islamic centers, etc. The same attitude was, unfortunately, maintained toward the Noble Prophet of Islam

http://www.islamweb.net/emainpage/index.php?page=articles&id=137596

While protests against new mosques in New York, Tennessee and California made headlines, the overall number of mosques quietly rose from 1,209 in 2000 to 2,106 in 2010.

And most of their leaders say American society is not hostile to Islam, according to a comprehensive census of U.S. mosques and survey of imams, mosque presidents and board members released Wednesday.

http://www.usatoday.com/news/religion/story/2012-02-29/islamic-worship-growth-us/53298792/1

While discussing the future of Islam in North America, we must examine the parameters of a good future. If we judge the future by numbers, yes, it is true that the number of Muslims has tremendously increased in this country. When I came here nearly a quarter of a century ago, there were not more than fifty thousand (50,000) Muslims, and now there are over six million. Nevertheless, if we look at the world map, the number of Muslims is over a billion; however, they hardly have any strength in that number.

http://www.islam-usa.com/index.php?option=com_content&view=article&id=334&Itemid=288

The world’s Muslim population is expected to increase by about 35% in the next 20 years, rising from 1.6 billion in 2010 to 2.2 billion by 2030, according to new population projections by the Pew Research Center’s Forum on Religion & Public Life.
Globally, the Muslim population is forecast to grow at about twice the rate of the non-Muslim population over the next two decades – an average annual growth rate of 1.5% for Muslims, compared with 0.7% for non-Muslims. If current trends continue, Muslims will make up 26.4% of the world’s total projected population of 8.3 billion in 2030, up from 23.4% of the estimated 2010 world population of 6.9 billion.
While the global Muslim population is expected to grow at a faster rate than the non-Muslim population, the Muslim population nevertheless is expected to grow at a slower pace in the next two decades than it did in the previous two decades. From 1990 to 2010, the global Muslim population increased at an average annual rate of 2.2%, compared with the projected rate of 1.5% for the period from 2010 to 2030.

http://www.pewforum.org/The-Future-of-the-Global-Muslim-Population.aspx

இந்த மாதமும் போன மாதமும் நமது தமிழகத்தின் நிலை என்ன என்பதை இந்த சுட்டி விளக்குகிறது.

http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3

டிஸ்கி: தமிழில் எழுதுவதை விட ஆங்கிலத்தில் எழுதினால்தான் ஒரு மேட்டிமைத்தனம் தெரியும் என்று வலிந்து சிலர் ஆங்கிலத்தில் எழுதுகின்றனர். ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளி என்று நினைக்கும் தவறான போக்கும் இன்றும் நம்மிடத்திலே உள்ளது. வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போயும் ஆங்கில மோகம் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. இப்படி சொல்வதால் நான் ஆங்கிலத்துக்கு எதிரியல்ல. உலக மொழிகள் அனைத்தையும் நான் ஒரே தரத்தில் வைத்து பார்ப்பவன். தமிழ், ஹிந்தி, கன்னடம் போல் ஆங்கிலமும் ஒரு மொழி என்ற ரீதியிலே பார்க்க வேண்டும். இந்த காட்டாற்று வெள்ளம் இன்னும் சில ஆண்டுகளில் நமது தாய் மொழியையே அடித்துச் சென்று விடுமோ என்று அச்சப்பட வேண்டியதாயிருக்கிறது. பேசும் போது கூட தமிழை ஆங்கிலத்தோடு கலந்து பேசினால்தான் சபையோர் மதிப்பர் என்ற போக்கு தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது. ஆங்கிலத்தை மோகிப்போர் திருப்திக்காக இந்த பதிவு மொழி மாற்றம் செய்யப்படாமல் ஆங்கிலத்தில் அப்படியே தரப்படுகிறது.

கட்டுப்படுத்த முடியவில்லை:

பெருகி வரும் மதத்தை அல்ல:

பெருகி வரும் சிரிப்பையும் அல்ல:

பெருகி வரும் மார்க்கத்தை......


Friday, September 21, 2012

இலங்கை கிழக்கு மாகாண முதல்வராக அப்துல் நஜீப்.ஏ.மஜீத்!



இலங்கையில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நஜீப் ஏ.மஜீத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஒரு வார காலமாக ஆளும் கூட்டணிக்கும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கும் இடையே நடந்த இழுபறியுடன் கூடிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை அவரது தேர்வு முடிவானது.


இந்தப் பேச்ச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்,கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 வருட காலத்தில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்

நடை பெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மீண்டும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கின்றது.



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்குமிடையில் இடம் பெற்ற பேச்சுவார்ததையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நஜீப் ஏ மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தபட்ட இவர் 11,726 விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு உறுப்பினராக தெரிவானார்.

வளமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவேன் என கிழக்கு மாகாண புதிய முதலமைச்சரான நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்.

"ஏனைய எட்டு மாகாணங்களை விட வளமான மாகாணமாக கிழக்கு மாகாண சபை எதிர்காலத்தில் மாற்றப்படும். இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்படவுள்ளேன்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் மாகாண சபையிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள உறுப்பினர்களுடன் இணைந்து மாகாணத்தை கட்டியொழுப்ப உள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

"அரசியலுக்கு நான் புதியவனல்ல. கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். இதனால் கிழக்கு மாகாணத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்" என முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை இரவு அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண முதலமைச்சராக அப்துல் நஜீப் ஏ. மஜீத்தின் பெயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவினால் முன்மொழியப் பட்டபோது அதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதன் பெயரில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்து, முஸ்லிம், கிறித்தவ, பவுத்த மக்கள் அனைவரையும் ஒன்றாக பாவித்து அந்த மக்களின் வாழ்வில் மேலும் அமைதியையும் அபிவிருத்தியையும் இந்த அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அன்று ஜனாதிபதி உமர் எவ்வாறு மாற்று மத நண்பர்களோடு நடந்து கொண்டார்களோ அதை முன்னுதாரணமாக வைத்து இவர் தனது ஆட்சியை நடத்தினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு சீரமையும். அதுதான் நமக்கு வேண்டியது.

-தகவல் உதவி பிபிசி

--------------------------------------------------

ஒரு முறை நஜ்ரான் தேசத்திலிருந்து கிறிஸ்தவக் கூட்டமொன்று நபி அவர்களைக் காண வந்தது. பள்ளியில் இருந்த நபி அவர்களைக் கண்டு பேசிவிட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவுற்றுவதற்காக வெளியில் செல்ல முனைந்த சமயம், நீங்கள் உங்கள் பிரார்த்தனையை இந்தப் பள்ளியிலேயே நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்கள் என்றால் மாற்று மதத்தவருக்கு எத்தகைய கண்ணியம் கொடுக்கின்றது இஸ்லாம் என்பதை சொல்லத் தேவை இல்லை.

இதுபோன்றே மற்றொரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய தொழுகையை வெளியே நிறைவேற்றிக் கொண்டிருந்த கலீபா உமர் அவர்களை சர்ச்சுக்குள் வந்து நிறைவேற்றிக்கொள்ளுமாறு பாதிரியார் அழைக்க "வேண்டாம், நான் உள்ளே வந்து என்னுடைய தொழுகையை நிறைவேற்ற, அதன் விளைவாக இந்த சர்ச் நாளை பள்ளி வாயிலாக முஸ்லிம்களால் ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்" என்று மறுமொழி கூறினார்கள் என்றால் எத்தகைய கண்ணியத்தையும், பெருந்தன்மையையும் இஸ்லாம் போதிக்கின்றது என்பதை அறியலாம்.

அதோடு மட்டுமில்லாமல் 2:256 வசனம் இறக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொண்டால் இஸ்லாத்தின் உண்மை நிலை இன்னும் தெளிவாகும்.

அன்ஸார்களில் ஸாலிமுபின் அல்ஃபு என்னும் கோத்திரத்தில் ஒருவருக்கு இரு குமாரர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருப்பது அவருக்கு விருப்பமில்லாமல் இருந்தது. நபி அவர்களிடம் வந்து "நான் எனது மக்கள் இருவரையும் கிறிஸ்தவ நிலையிலிருந்து மாற்றி பலவந்தப்படுத்தி முஸ்லிம்களாக்க விரும்புகிறேன். இவ்வாறு நான் செய்வது பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்" என்று கேட்டார். அப்போதுதான் “மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை” என்ற இறைவசனத்தை ஓதிக்காட்டி, அவர்கள் அவ்வாறு செய்வதை நபி அவர்கள் தடுத்துவிட்டார்கள். ஒரு ஆட்சித் தலைவராக இருக்கும் நபி அவர்கள் எந்த அளவு மென்மையான போக்கோடு நடந்து கொண்டனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.

'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.'
-குர்ஆன் 2:256

---------------------------------------------




Thursday, September 20, 2012

அலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு!

//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கள்ள மவுனம் காக்கும் வழியை கையாண்டீர்கள்.//- வவ்வால்

அலாவுதீன் கில்ஜியைப் பற்றி வவ்வால் சொன்னது இது. என்ன செய்வது? அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாறு அவ்வளவுதான். மாலிக்காபூர் படையெடுத்து பல கோவில்களை கொள்ளையடித்ததையும் படித்திருப்போம். இந்த மாலிக்காபூர் பிறப்பால் ஒரு இந்து. சில காலத்திற்கு பிறகு இஸ்லாத்தை ஏற்கிறார் என்ற செய்தியை அழகாக மறைத்து விடுவர். அலாவுதீன் கில்ஜியின் உண்மையான வரலாறு என்ன சொல்கிறது என்பதை இனி பார்ப்போம்.

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான். இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.

ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன.

அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான். மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.

அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று. அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும்.

- பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர்,
அரசு கல்லூரி)



"உயர்ந்தவன் யார்?
கிராமவாசி? நகரவாசி?
இல்லை, விலைவாசி!"

-கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். "முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு" - எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி - அதிலும் உணவுப்பொருட்களின் விலைவாசி-கிடுகிடுவென உயர்ந்து கிடக்கிறது. கட்டுப்படுத்த வழிவகை தெரியவில்லை என்று ஆட்சியாளர்கள் கைவிரிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு ஏடு என் முன்னால் படபடத்து எழுது, எழுது என்கிறது.

ஜியாவுதீன் பரணி என்பார் முகமது பின் துக்ளக் அரசவையில் 17 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் மட்டுமல்ல, இவரது முன்னோர்களும் டில்லி சுல்தான்கள் ஆட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள். அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டும், தனது நேரடி அனுபவத்திலிருந்தும் ஒரு வரலாற்று நூலை எழுதினார். அதன் பெயர் "தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி". அந்தப்பெருநூல் பற்றி எழுதுவது என்றால் பக்கங்கள் போதாது. அலாவுதீன் கில்ஜி காலத்திலும், நூலின் பெயரைத் தாங்கிய ஃபிரோஸ்ஷா துக்ளக் காலத்திலும் எடுக்கப்பட்ட சில பொருளாதார நடவடிக்கைகளை இங்குக் குறிப்பிடுவதே எனது நோக்கம். இது சந்தைப் பொருளாதாரத்தை அதன் போக்கில் விட்டுவிடுவது என்கிற அராஜகச் சிந்தனையை இந்த நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள்கூட அங்கீகரிக்கவில்லை என்பதைப் புரியவைக்கும். பொருளியல் துறையில் அரசின் தலையீடு அவசியம் என்பதை 700 ஆண்டுகளுக்கு முந்தைய டில்லி ராஜாக்களே உணர்ந்திருந்தார்கள் என்பதை உணர வைக்கும். இன்றைய டில்லி ராஜாக்களுக்கு இதிலொரு படிப்பினை இருக்கிறது.
அலாவுதீன் கில்ஜி காலத்தில் மங்கோலியர்கள் டில்லி வரை படையெடுத்து வந்துவிட்டார்கள். அவர்களை இவன் விரட்டியடித்துவிட்டாலும் அந்த அபாயம் இருந்து கொண்டேயிருந்தது. மீண்டும் அவர்கள் வந்தால் விரட்டியடிக்க பெரும் படை தேவை என்பதை உணர்ந்திருந்தான். அதை எப்படி உருவாக்குவது என்று யோசனையில் ஆழ்ந்தான். கஜானாவில் பணம் குறைவாகவே இருந்தது. குறைந்த ஊதியத்தில் நிறைய படைவீரர்களைத் திரட்ட முடியுமா? இதற்காகத் தனது ஆலோசகர்களை அழைத்து கருத்துக்களைக் கேட்டான். அவர்களும் உள்ள நிலைமையைப் பட்டவர்த்தனமாகச் சொன்னார்கள்.

"குறைந்த ஊதியத்தில் ஒரு பெரிய நிரந்தரப் படையைப் பராமரிப்பது என்று மேன்மை தாங்கியவரின் மனதில் ஓடும் எண்ணங்கள் சிறிதும் சாத்தியமானவை அல்ல. குதிரைகள், படைக்கலன்களை வாங்கவும், தனது மனைவி குடும்பத்தைப் பராமரிக்கவும் படைவீரனுக்கு இந்தக் குறைந்த ஊதியத்தால் முடியாது. மாறாக அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலைக்கு கொண்டுவந்து விட்டால் மேன்மைதாங்கியவரின் எண்ணத்தை நடைமுறைப்படுத்த முடியும். மங்கோலியர்களின் பெரும் படை எனும் பயத்தைப்போக்க முடியும்" இப்படி அவர்கள் கூறியதும் தனது அனுபவமிக்க மந்திரிமார்களைக் கலந்தாலோசித்தான் அலாவுதீன்.
அவர்களும் இதை ஏற்றுக்கொண்டதோடு மற்றொரு முக்கிய ஆலோச னையைத் தந்தார்கள். பரணி கூறுகிறார்-"தானியங்களின் விலையை அரசு விதிமுறைகள் மூலம் கட்டுப்படுத்தாத வரை இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையாது என்றார்கள் அவர்கள். தானியவிலைக் குறைவு என்பது சகலருக்கும் நன்மை தருவது. எனவே சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவை சில ஆண்டுகளுக்கு விலையைக் குறைவாக வைத்திருந்தன"
பொருளாதார விஷயங்களைப் பொறுத்தவரை அதில் தேர்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்பது, அதைத் தனது மந்திரிமார்களிடம் கூறி அவர்களது கருத்தைக் கேட்பது என்கிற ஒரு விரிந்த நடைமுறையை சுல்தான் அலாவுதீன் கொண்டிருந்தது குறிக்கத்தக்கது. படைப்பெருக்கம் என்கிற ராணுவரீதியான நோக்கத்திலிருந்தே இந்தப் பிரச்சனை அலசப்பட்டது என்றாலும், அது முடிவில் உணவு தானிய விலைக் கட்டுப்பாட்டிற்கு இட்டுச்சென்றதை போக்க வேண்டும்.

முடிவில் இதற்காக ஏழு உத்தரவுகளைப் போட்டான் அலாவுதீன். முதல் உத்தரவானது கோதுமை, பார்லி, அரிசி உள்ளிட்ட ஆறு தானியங்களுக்கான விலைகளைத் தீர்மானித்தது. அந்த விலைப்பட்டியலைத் தந்துவிட்டு பரணி எழுதுகிறார் - "இந்த விலை அளவுகள் அலாவுதீன் உயிரோடு இருந்தவரை அப்படியே இருந்தன. நல்ல மழை பெய்தாலும் சரி, நன்றாகப் பெய்யாவிட்டாலும் சரி தானியவிலை ஒரு டாங்குகூட உயரவில்லை. சந்தைகளில் நிலைத்த தானியவிலை என்பது அந்நாளில் ஓர் அதிசயமாகப் பார்க்கப்பட்டது"
இந்த அதிசயம் எப்படிச் சாதிக்கப்பட்டது என்றால் அடுத்துப்போடப்பட்ட ஆறு உத்தரவுகளாலும், இவை அனைத்தும் கறாராக நடைமுறைப்படுத்தப்பட்டதாலும், இரண்டாவது உத்தரவின்படி "சந்தைகளின் கட்டுப்பாட்டாளர்" எனும் ஓர் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக நிறைய ஆட்கள் தரப்பட்டார்கள், உரிய வசதிகள் தரப்பட்டன. புத்திசாலித்தனமான உளவாளிகளும் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
மூன்றாவது உத்தரவின்படி அரசனின் களஞ்சியங்களில் தானியங்கள் சேமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. வரி செலுத்துவோரில் ஒரு பகுதியினர் தானியமாகத் தரும்படி கூறப்பட்டார்கள். "சரியாக மழை பெய்யாவிட்டாலோ அல்லது தானிய வண்டிகள் வந்து சேராவிட்டாலோ, இவற்றின் காரணமாகச் சந்தைகளில் தானியப் பற்றாக்குறை ஏற்பட்டாலோ அரசாங்கக் களஞ்சியங்கள் திறக்கப்பட்டு மக்களின் தேவைக்கேற்ப தானியங்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்பட்டன" என்கிறார் பரணி.

இந்தக் காலத்தில் லாரிகளை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது போல அந்தக்காலத்தில் வண்டிகளை எல்லாம் சந்தைக் கட்டுப்பாட்டாளர் வசம் கொண்டு வந்தான் அலாவுதீன். இது நான்காவது உத்தரவு. பதுக்கலைத் தடுக்கப்போடப்பட்ட உத்தரவு ஐந்தாவது. பதுக்கியவருக்கு மட்டுமல்ல, அதைக் கண்டுபிடிக்காத அதிகாரிகளுக்கும் தண்டனை காத்திருந்தது.

விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட விலையில் தானியங்களை வியாபாரிகளுக்கு விற்றாக வேண்டும் என்றது ஆறாவது உத்தரவு. இதிலே சுவையான விஷயம் அடுத்து வருவது- "லாபத்தை ஈட்ட கிராமத்தாருக்கு ஒரு வாய்ப்புத் தரும் வகையில் தங்களது விளைச்சலைத் தாங்களே சந்தைக்குக் கொண்டு சென்று, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்க அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அதாவது "உழவர் சந்தை" எனும் கருத்தோட்டம் அப்போதே நடைமுறையில் இருந்திருக்கிறது.

ஏழாவது உத்தரவும் முக்கியமானதே. "சந்தை விலை நிலவரம் பற்றியும், சந்தை நடவடிக்கைகள் பற்றியும் மூன்று இலாக்காக்களிலிருந்து தினசரி சுல்தானுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன" என்கிறார் பரணி. அரசாணை போட்டுவிட்டு பிறகு அதுபற்றி என்ன, ஏது என்றுகேட்காத ஆட்சியாளனாக அலாவுதீன் இல்லை என்பது ஆச்சரியமான விஷயமே.
இவை எல்லாம் சேர்ந்துதான் தானிய விலைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தன. பரணிக்கு புளகாங்கிதத்தைத் தடுக்க முடியவில்லை. "இது உண்மையில் இந்தக் காலத்தின் அதிசயமே; எந்தவொரு அரசனும் இதைச் சாதித்ததில்லை" என்று மீண்டும் கூறுகிறார்.

தானிய விலைகளை மட்டுமல்ல வேறு சிலவற்றின் விலைகளையும் கட்டுக்குள் வைக்க உத்தரவுகள் போட்டான் அலாவுதீன். அது அந்தக் காலத்திய வாழ்வியலையும் அடையாளம் காட்டுகிறது. குதிரைகள், அடிமைகள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு சகாய விலையைக் கொண்டுவர நான்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில் நான்காவது உத்தரவு கூறியது - 'ஒரு பணிப்பெண்ணின் விலை 5 முதல் 12 டங்காக்கள், ஒரு வைப்பாட்டியின் விலை 20, 30 அல்லது 40 டங்காக்கள் என்று நிச்சயிக்கப்பட்டன. ஓர் ஆண் அடிமையின் விலை 100 அல்லது 200 டங்காக்கள் அல்லது அதற்கும் குறைவு." சுல்தான்கள் காலத்திலேயே நிலப்பிரபுத்துவ அமைப்புமுறை வந்துவிட்டது என்றாலும், அடிமைச் சமுதாயத்தின் கூறுகளும் தொடரவே செய்தன.

"சந்தைகளின் கடைகளில் விற்கப்படும தொப்பி முதல் செருப்பு வரையிலான, சீப்பு முதல் ஊசி வரையிலான பொருட்களுக்கும் குறைந்த விலைகளைத் தீர்மானிக்கப் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவை மிகவும் சாதாரணப் பொருட்கள் என்றாலும் அவற்றுக்கும் விலைகளை நிர்ணயிக்கவும், விற்பனையாளர்களுக்கான லாபத்தை முடிவு செய்யவும் சுல்தான் பெரும் கவனம் செலுத்தினார்" என்கிறார் பரணி.

டில்லி சுல்தான்கள் என்றால் ஏதோ படை நடத்துவதிலும், இந்து ராஜாக்களை வீழ்த்துவதிலும், கோவில்களை இடிப்பதிலும், மசூதிகளைக் கட்டுவதிலும் காலத்தைப் போக்கியவர்கள் என்கிற சித்திரமே நாமக்கெல்லாம் தரப்பட்டு, இப்போதும் அதுவே மனசில் தங்கியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வேறொரு முகமும் உண்டு என்பது பரணி போன்ற அந்தக் காலத்திய வரலாற்றாளர்களின் மூல நூல்களைப் படிக்கும் போதுதான் புரிபடுகிறது.
இதன்பொருள் சுல்தான்களின் முரட்டுத் தனத்தையோ, கொடூரத் தண்டனை முறையையோ மூடி மறைப்பதல்ல. இந்த விலைக் கட்டுப்பாட்டைச் சாதிக்கக்கூட அத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது உண்மையே. "குறைந்த எடைபோட்டு பொருளை விற்றால் விற்றவருக்கு கசையடி கொடுக்கப்படும் அல்லது தொடையிலிருந்து சதை வெட்டப்படும்" என்கிறார் பரணி. இதுவெல்லாம் நடந்தது. ஆனால் வெகுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைத் தரவேண்டும் என்பதில் அந்த சுல்தான் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டான் என்பதையும் சேர்த்துச் சொல்வதுதான் வரலாற்றக்கு நியாயம் செய்வதாகும்.

அலாவுதீன் காலத்தில், 'சந்தைக்காரர்கள் நாணயமாக நடந்து கொண்டார்கள்' என்றும், 'அலாவுதீன் மரணமடைந்ததும் சந்தைக்காரர்கள் குதூகலமடைந்து மேளங்கள் முழங்கினார்கள்' என்றும் இரு காட்சிகளையும் சொல்லியிருக்கிறார் பரணி. இதிலிருந்தே விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வளவு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் அலாவுதீன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

கில்ஜி வம்ச ஆட்சி முடிந்து துக்ளக் வம்ச ஆட்சி வந்தது. அந்த வம்சத்தைச் சார்ந்தவன் ஃபிரோஸ் ஷா துக்ளக். தனது ஆட்சி பற்றி இவனே தன்வரலாறு எழுதியிருக்கிறான். நூலின் பெயர் "ஃபுது ஹாதி ஃபிரோஷ் ஷாகி" இதிலே தனக்கு முந்திய ஆட்சிகளில் முஸ்லிம் சட்ட விதிகளுக்குப் புறம்பாக விதவிதமான வரிகள் வசூலிக்கப்பட்டதாகவும், தான்அவற்றை எல்லாம் ரத்து செய்ததாகவும் கூறியுள்ளான். நீக்கப்பட்ட வரிகளை வசூலிக்கிற அதிகாரிகளுக்குத் தண்டனை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்.

"கஜானா வற்றினாலும் பரவாயில்லை
மக்களின் வயிறு நிரம்ப வேண்டும்
மார்பு பொறுமையாக இருந்தாலும் பரவாயில்லை
இதயம் பொங்கி வழிய வேண்டும்"

- என்கிற கவிதையை அவன் மேற்கோள் காட்டியிருக்கிறான். பொருளாதார விஷயங்களிலும் கவிதையைக் கையாளும் திறம்படைத்த ஒரு சுல்தான் இருந்தான்.

இவனது ஆட்சி பற்றி வரலாற்று நூல் எழுதிய இன்னொருவர் ஷம்ச சிராஜ் அபிஃப். இவர் எழுதிய நூலின் பெயரும் பரணியுடையது போல "தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி." ஆனால் பரணியின் நூலைக்காட்டிலும் இதில்தான் இந்த சுல்தானின் ஆட்சிபற்றி நிறைய விபரங்கள் உள்ளன. பரணியின் நூலில் முகமது பின் துக்ளக் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது.
விலைவாசி நிலைபற்றி அபிஃப்பும் தகவல் தருகிறார். "அலாவுதீனின் காலத்தில் திறமையான நிர்வாகத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தன. ஆனால் ஃபிரோஸ் ஷாவின் காலத்தில் அவரது முயற்சி ஏதுமில்லாமலேயே கடவுளின் கருணையால் அவை குறைந்த விலையில் கிடைத்தன" என்று சிறிதும் தயக்கமின்றி எழுதி வைத்துள்ளார். இதிலிருந்தும் அலாவுதீன் கில்ஜியின் பெருமை பிடிபடுகிறது.
எனினும், ஃபிரோஸ் ஷா எடுத்த சில பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அபிஃப் கூறத்தான் செய்துள்ளார். அவை மிக நவீனமானவை. நமது தலைமுறைக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியவை. "நகரத்தில் யாரேனும் வேலையில்லாமலிருந்தால் அவர்களைத் தன்னிடம் அனுப்புமாறு சுல்தான் உத்தரவிட்டிருந்தான். கொத்தவால் தனது மாவட்ட அதிகாரிகளை அழைத்து இவர்கள் பற்றி விசாரிப்பான். அத்தகையவர்கள் சுல்தான் முன்பு கொண்டுவரப்பட்டபோது அவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டார்கள்" என்கிறார் அபிஃப். சுல்தான் வேலைவாய்ப்பு நிலையம் நடத்தியது போலத்தெரிகிறது! இப்படிப்பட்ட சுல்தான்களும் இருந்திருக்கிறார்கள்.

எத்தகைய வேலைகளில் இவர்கள் அமர்த்தப்பட்டார்கள்? அபிஃப் தொடர்கிறார்-" எழுதத் தெரிந்தவர்களுக்கு அரசாங்க அமைப்புகளிலும் தொழில் தெரிந்தவர்களுக்கு கானி ஜஹானின் கீழும் வேலைதரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பிரபுவிடம் அடிமையாக வேலை பார்க்க எவரேனும் விரும்பினால் அதற்கான பரிந்துரைக் கடிதத்தை சுல்தானே எழுதி அனுப்பினான். நிலமான்யம் பெற்றுள்ள ஓர் அமீரிடம் ஒருவர் அடிமையாகப் போக விரும்பினால் அது பற்றிய உத்தரவு அந்த அமீருக்கு அனுப்பப்பட்டது. ஆக, ஒரு சிலர்தான் வேலையில்லாமல் இருந்தார்கள்"

சுல்தான்கள் காலத்தில் அடிமை முறையானது பெரிதும் நெகிழ்ச்சி உடையதாக இருந்ததை நோக்க வேண்டும். மனுசாஸ்திரம் காட்டிய வருணாசிரமக் கட்டமைப்பில் அடிமை முறையானது பிறப்பின் அடிப்படையில் இருந்தது. இப்போதோ அது தான் விரும்பிய பிரபுவை ஓர் அடிமைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் நெகிழ்ச்சி உடையதாக இருந்தது. "பரிந்துரைக் கடிதம்" அனுப்புகிற முறை அப்போதே இருந்தது. பிரபு என்றால் அப்படிக்கடிதம், அமீர் என்றால் உத்தரவு. அவருக்கு நிலமானியத்தை சுல்தான் தந்திருப்பதால் உத்தரவு. அடிமை முறையானது பிறப்பின் அடிப்படையில் என்பதைவிட வறுமையின் காரணமாக நடைமுறையில் இருந்தது இக்காலத்தில்.

இதன் அர்த்தம் அடிமைகள் எல்லாம் நல்ல வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதில்லை அல்லது அடிமைவேலை கிடைத்ததும் வறுமை காணாமல் போனது என்பதுமில்லை. அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சமுதாயமாக இருந்த சுல்தான்கள் காலத்தில் வாழ்வு வாய்க்கும் கைக்குமாகவே இருந்தது. யஜமானர்களின் கோபத்தீயில் அடிமைகளும் ஏழைகளும் கருகித் துடிக்கவே செய்கிறார்கள். விஷயம் என்னவென்றால் ஃபிரோஸ் ஷா போன்றவர்களின் சில கருணை நடவடிக்கைகள் இருந்தன என்பது வரலாற்று ஏடுகளில் பதிவாகியிருக்கிறது என்பதுதான்.

வேலையில்லாதாருக்கு வேலை மட்டுமல்ல ஏழைகளுக்காக இலவச மருத்துவமனைகளை உருவாக்கினான் ஃபிரோஸ் ஷா. வரலாற்றாளர் அபிஃப் தரும் அந்தத் தகவல் "பாதிக்கப்பட்ட ஏழைகள் அந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள், தங்களது நோய்களைச் சொன்னார்கள். மருத்துவர்கள் தங்களது திறமையைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைத் தந்தார்கள். மருந்து, உணவு மற்றும் பானங்கள் அரசு செலவில் வழங்கப்பட்டன" மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தரவேண்டிய கடமையை இப்போது அரசுகள் கைகழுவி வருகின்றன. அதுவும் தனியார்மயமாகிப்போனது. "ரமணா" படத்தில் வருவதுபோல அங்கே பிணத்திற்கும் வைத்தியம் பார்த்து பில் போடுகிறார்கள். இந்த சுல்தான் காலத்திலோ அரசு செலவில் மருந்தும் உணவும்தரப்பட்டது. சகல ஆட்சியாளர்களுக்கும் இந்தச் சரித்திரச் செய்தி சமர்ப்பணம்.

இதனினும் ஆச்சரியமான செய்தி சுல்தான் ஃபிரோஸ் ஷா ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி வழங்கினான் என்பது. நவீன காலத்து நலத்திட்டம் போல உள்ளது. "திருமண வயதுள்ள புதல்வியைக் கொண்டுள்ள எந்த மனிதரும் திவானி கெய்ராத்துக்கு விண்ணப்பம் தரலாம். அந்த நிறுவன அதிகாரிகளிடம் தனது நிலையையும், வறுமையையும் எடுத்துரைக்கலாம். அவர்கள் உரிய விசாரணைக்குப் பிறகு முதல்தர விண்ணப்பதாரருக்கு 50 டங்கா நிதி உதவியும், இரண்டாம் தரத்தவருக்கு 30 டங்காவும், மூன்றாம் தரத்தவருக்கு 25 டங்காவும் தருவார்" என்கிறார் ஆபிஃப், "எந்த மனிதரும்" எனும் சொல்லாட்சி முக்கியமானது. மத வேறுபாடின்றி, மதத்திற்குள்ளும் சாதி வேறுபாடின்றி இந்தத் திருமண நிதி உதவி அமலாகியிருக்கிறது என்பது அர்த்தமாகிறது. தானம் பெறும் உரிமை பிராமணர்களுக்கே உண்டு, அப்போதுதான் கொடுப்பவருக்கு புண்ணியம் உண்டு என்கிற அந்தக் காலத்தில் தர்மசாஸ்திர விளக்கவுரையாளர்களிடமிருந்து சுல்தான்களின் நடைமுறை பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

புதிய நலத்திட்டங்கள் என்று இந்தக்காலத்து அரசுகள் கூறுகிற சில திட்டங்கள் உண்மையில் மிகப்பழமையானவை என்பதற்கு வரலாற்று ஏடுகளில் ஆதாரம் இருக்கிறது. முஸ்லிம் அரசர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வரலாற்று உணர்வு அதிகம். அதிலும் போற்றத்தக்க விஷயம் பரணி, அபிஃப் போன்ற வரலாற்றாளர்கள் அரசியல் விவகாரங்களோடு இப்படிப் பொருளாதார நடவடிக்கைகளையும் கவனமாகப் பதிவு செய்திருப்பது. இத்தகைய சரித்திர உணர்வாளர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவின் பழங்கால வரலாறு போல இடைக்கால வரலாறும் புராணமயமாகிப் போயிருக்கும்.

கடந்த கால வரலாற்றிலிருந்து தற்கால செயல்பாடுகளுக்கு படிப்பனைப் பெறலாம் என்கிற நினைப்பு டில்லி சுல்தான்களுக்கு இருந்தது. இது நடைமுறையில் வெளிப்பட்டது என்பதை பரணி சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்விலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.

முகமது பின் துக்ளக் பற்றி மிக மோசமான கருத்துருவமே நம் மத்தியில் உள்ளது. அவனுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அதுபற்றி விவரிக்க இங்கே இடம் போதாது. ஒரேயொரு விஷயத்தை மட்டுமே குறிப்பிடலாம். அவனது சாம்ராஜியத்தில் அமீர்கள் எனப்பட்ட சிற்றரசர்கள் சிலர் அவ்வப்போது கலகம் செய்து வந்தார்கள். துக்ளக் மிகவும் வெறுத்துப்போனான். வரலாற்றாளர் என்ற முறையில் அதுபற்றி பரணியிடம் கலந்து பேசினான். பரணி எழுதியிருப்பதைப் பாருங்கள்- "கலகக்காரர்களின் வெற்றியும், தியோகிர் கைகழுவிப் போனதும் ராஜாவைப் பெரிதும் பாதித்தது. இப்படி வருந்திய நிலையில் ஒருநாள் இந்த நூலின் ஆசிரியராகிய என்னை கூப்பிட்டுவிட்டான். பிறகு கூறினான்: 'எனது ராஜியத்திற்கு நோய் பீடித்துவிட்டது. எந்த வைத்தியத்தாலோயும் இதைச் சரிசெய்ய முடியவில்லை. தலைவலியைச் சரிசெய்கிறார் வைத்தியர். காய்ச்சல் வந்து விடுகிறது. அதற்கு வைத்தியம் பார்க்கும் போது வேறு பிரச்சனை வந்து விடுகிறது. அதுபோல எனது ராஜியத்திலும் ஒழுங்கீனங்கள் வெடித்துக் கிளம்புகின்றன. ஓரிடத்தில் ஒடுக்கினால் இன்னொரு இடத்தில் தோன்றுகிறது. ஒரு பகுதியில் சரி செய்தால் இன்னொரு பகுதியில் பிரச்சனை எழுகிறது. இத்தகைய ஒழுங்கீனங்கள் பற்றி முந்தைய ராஜாக்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்? நான் பதில் சொன்னேன்"

பரணி சொன்ன ஆலோசனையை துக்ளக் கேட்டானா இல்லையா என்பதைவிட இப்படி கேட்டதும், அது பதிவாகியிருப்பதும் அவர்களது சரித்திர உணர்வுக்கு ஒரு தக்க சாட்சியம். சுல்தான்கள் காலத்திலேயே இப்படி என்றால் நமது காலத்திற்கு சரித்திர உணர்வு எவ்வளவு அவசியம் என்பதைச் சொல்லத்தேவையில்லை. நவீன காலத்தின் குழந்தைகளாகிய நமக்கு அவர்களைக் காட்டிலும் நெடிய வரலாறு உண்டு. அதில் எத்தனையோ படிப்பினைகள் படிந்திருக்கின்றன. குடிமக்களைவிட ஆட்சியாளர்கள் அதைக் கற்பார்களேயானால் தேசத்திற்கு எவ்வளவோ நல்லது செய்ய முடியும்.

அலாவுதீன் கில்ஜி விலைவாசியைக் கட்டுப்படுத்த காட்டிய அக்கறையை, ஃபிரோஸ் ஷா துவக்கிய மக்கள் நலத்திட்டங்களை தற்காலத்து ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டால் இத்துறைகளில் அவர்களைக் காட்டிலும் எவ்வளவோ செய்ய வேண்டும் என்கிற உந்துதல் வரும். அப்படி வந்தால் வரலாற்றாளர்கள் பரணி, அபிஃப் போன்றோரின் நோக்கம் மெய்யாலும் நிறைவேறியதாக அர்த்தம்.
-அருணன்
(செம்மலர் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

இந்திய வரலாற்றில் யார் யாரையோ தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அத்தகைய தகுதி கண்டிப்பாக அலாவுதீன் கில்ஜிக்கும் உள்ளது என்றால் அது மிகையாகாது. என்ன செய்வது அதிகார வர்க்கத்தில் உள்ளோர் திட்டமிட்ட சதியால் இன்று பொய்யையும் புரட்டையும் வரலாறாக படித்து வருகிறோம். இனி வரும் காலத்திலாவது புதைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக் கொண்டு வரும் பணியை செய்வதற்கு நல்லோர்கள் முன் வர வேண்டும்.

Wednesday, September 19, 2012

மன்னர் அக்பர் நல்லவரா? கெட்டவரா?


மன்னர் அக்பர் நல்லவரா? கெட்டவரா?

நமது வரலாற்று பாடங்களில் அக்பரைப் பற்றி மிக சாந்த சொரூபி. மத சார்பற்று நடந்து கொண்டார். அவரைப் போன்ற ஒரு முஸ்லிம் அரசரை நாம் எங்கேயும் பார்க்க முடியாது என்ற கருத்துக்களையே நாம் படித்து வந்திருப்போம்.

'அக்பருடைய சமய கோட்பாடு அவருக்கு அழியாப் புகழை தந்தது' என எட்டாம் வகுப்பு பாடநூலில் 88 ஆம் பக்கத்திலும் பிளஸ் 2 வரலாற்று பாட நூலில் 141-142 ஆம் பக்கங்களிலும் இன்னும் வரலாறு நெடுக அக்பரை பற்றி புகழ்ந்தே நமது வரலாறு புனையப்பட்டிருக்கும். ஆனால் இந்த பாராட்டு மொழிகளுக்கு கொஞ்சமேனும் அருகதை உடையவர்தானா இந்த அக்பர் என்பதை வரலாற்று ஆதாரங்களோடு பார்ப்போம்.

அக்பருடைய அரசவை எழுத்தரான பதௌனி அரசவையில் தான் கண்ட காட்சிகளை 'முன் தகாபு த் தவாரிக் பகுதி 2' ல் விபரமாக குறித்துள்ளார். இனி அவற்றை பார்ப்போம்.

தனது 25 ஆவது ஆண்டின் துவக்க நாளன்று அக்பர் பொது மக்கள் முன்னிலையில் சூரியனுக்கும் தீபத்திற்கும் சாஷ்டாங்கம் செய்தார். மாலையில் தர்பாரின் விளக்குகள் ஏற்றப்படும் போது அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர்.

-பக்கம் 262.

இஸ்லாம் பன்றியையும் நாயையும் அசுத்தமான பிராணிகளாகக் கருதுவதற்கு மாற்றமாக அவர் அவற்றை அந்தப் புரத்திலும் கோட்டையிலும் வைத்திருந்தார்.

-பக்கம் 314

காட்டு மிருகங்களான புலி, கரடியின் மாமிசம் உண்பது அனுமதிக்கப்பட்டது. ஏனெனில் அவை வீரத் தன்மை வாய்ந்த மிருகங்கள் எனக் கூறப்பட்டது.

-பக்கம் 315

அக்பர் தனது உச்சி முடியை மட்டும் நீக்கி விட்டு தலையைச் சுற்றிலும் முடியை வளர விட்டார். ஏனெனில் மரணத்தின் போது மாசற்ற படைப்பின் ஆன்மா உச்சி வழியாகவே வெளியேறும் என அவர் நம்பினார்.

-பக்கம் 335

அரண்மனையில் சூதாட்ட விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. பேரரசரோ சூதாடுபவர்களுக்கு வட்டிக்குப் பணத்தைக் கடனாக வழங்கினார்.

-பக்கம் 349

ஐந்து நேரத் தொழுகை, நோன்பிருத்தல் மற்றும் முகமது நபிகளுடன் தொடர்புடைய அனைத்து நம்பிக்கைகளும் மூடத்தனங்கள் என்று வர்ணிக்கப்பட்டன. மனிதனின் அறிவே மதத்தின் அடிப்படை ஆதாரமாகக் கருதப்பட வேண்டுமே யொழிய நபியவர்களின் வழிமுறைகளல்ல என எடுத்துரைக்கப்பட்டது.

-பக்கம் 215

அக்பர் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல மாறுதல்களை புகுத்தினார். அரசருக்குரிய மரியாதையுடன் அவரைப் பார்ப்பது சமயக் கட்டளையாகவே கருதப்பட்டது. அவர் தனது முகத்தை 'காஃப இ முரத்தத்' (விருப்பங்களின் மூலம்) 'கிப்லா இ ஹாஜத்' (தேவைகளின் இலக்கு) என்றும் வர்ணித்தார்.

-பக்கம் 266

'ஜமீன் போஸ்' (தரையை முத்தமிடுதல்) எனும் பெயரில் அரசருக்கு 'சஜ்தா' (சாஷ்டாங்கம்)செய்வது கட்டாயமாக்கப்பட்டு அரசரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

-பக்கம் 311

அஹமத், முஹம்மத், முஸ்தஃபா போன்ற பெயர்கள் குற்றத்திற்குரியனவாகக் கருதப்பட்டன. இதன் மூலம் அந்தப்புரத்தில் உள்ள அரசிகளையும் அரண்மனைக்கு வெளியிலுள்ள இறை மறுப்பாளர்களையும் அரசர் திருப்தி படுத்த முயன்றார்.

-பக்கம் 314

கடவுள் வணக்கத்தின் போது தங்க ஆபரணங்கள் ஆண்கள் அணிவதும் பட்டாடை உடுத்திக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டது.

-பக்கம் 316

ஹிஜ்ரா ஆண்டு கைவிடப்பட்டு அக்பர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டை (ஹிஜ்ரி 963) துவக்கமாகக் கொண்டு புதிய ஆணடுக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

-பக்கம் 316

அரபு மொழி வாசிப்பதும் பயில்வதும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய சட்டங்களும் திருக்குர்ஆன் விரிவுரைகளும் முகமது நபி அவர்களின் நடைமுறைகளும் தவறானவைகளாக போதிக்கப்படடன.

-பக்கம் 316

இரவு நேரங்களில் நடைபெற்ற சமூகக் கூட்டங்களின் போது முகமது நபி அவர்களின் தோழர்களைப் பற்றி பேசப்படும் தகாத வார்த்தைகளை என்னால் இங்கு விவரிக்க இயலாது. அந்த அளவு அருவறுக்கத் தக்கவையாகவும் ஆபாசமாகவும் இருக்கும். அந்நேரங்களில் நான் செவிடனாக இருந்திருக்கக் கூடாதா என எண்ணத் தோன்றும்.

-பக்கம் 318

இவ்வாறு அக்பர் முழுக்க முழுக்க இஸ்லாத்தின் பகைவராக மாறியதற்குக் காரணம் அவர் தன்னை இறைத் தன்மை பொருந்தியவராகக் காட்டிக் கொண்ட போது பிராமணர்கள் அவரை 'இராமன், கிருட்டினன் மற்றும் இன்னும் பல இந்து அவதாரங்களைப் போன்ற ஒரு அதிசய பிறவி என்று புகழ்ந்தனர். உலகை ஆள வந்தவர் என்றும் இவ்வையகத்து மாந்தர்க்கு வழி காட்ட வந்த அவதார புருஷர் எனவும் போற்றி புகழ்ந்தனர்.

-பக்கம் 326

ஆனால் முஸ்லிம்களோ அவரை மனிதனாகவே மதித்தனர். ஒரு முறை என்னை (பதௌனி) அரசருக்கு சாஷ்டாங்கம் செய்யுமாறு காதர் ஜஹான் பல முறை கேட்டுக் கொண்ட போதும் அதற்கு நான் கீழ்படியவில்லை.

-பக்கம் 389

அக்பருடைய பேரரசை நெருப்பு பெருகி வளர்ந்த போது பிராமணர்கள் அதற்கு எண்ணெய் வார்த்தனர். முஸ்லிம்களோ அந்த ஜூவாலையை அணைக்க முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அக்பர் சிறிது சிறிதாக பிராமணியத்தின் வலையில் விழத் துவங்கினார். மக்களுக்கு தரிசனம் அளிக்க அவர் காட்சி மண்டபத்துக்கு வருகையில் அவர் நெற்றியில் ஹிந்துவைப் போன்று திலகமிட்டிருந்தார். பிராமணர்களால் ஆசீர்வதித்து அணிவிக்கப்பட்டிருந்த பொன்னாபரணங்கள் அவரது மணிக் கட்டுகளில் காணப்பட்டன. அத்துடன் அவரை விடவிலலை. பீர்பால் அக்பருக்கு பிராமணர்களின் பூமாலை அணிவிக்க முயலும் அளவுக்கு அவர்களின் செல்வாக்கு அக்பரின் மேலிருந்தது.


-பக்கம் 262, 268

மறுமையை நம்பாத காரணத்தினால் ‘தீனே இலாஹி’ என்ற மதத்தை உருவாக்கி, இஸ்லாத்தை அவமதித்தார். ‘தீன் இலாஹி’யில் புதிதாக இணைந்தவர்கள், பிரதி ஞாயிறு தோறும் வணக்கம்; புரிவார்கள். இவர்கள் தம் வணக்கச் சடங்கின் போது, கைகளில் தலைப்பாகை ஏந்தியவர்களாக அரசனின் காலில் விழ வேண்டும். அரசன் அவர்களிடம் தன்னுடைய உருவப்படத்தைக் கொடுப்பார். அக்பர் தன் காலில் விழுந்து வணங்குவதையும், தன் புதிய மதச் சடங்காகவே ஆக்கினார்.

பல விதிகளையும் சடங்குகளையும் இவருடைய ‘தீன் இலாஹி’யில் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அவை:
அரசன் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
பிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும.;
பிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.
இறந்தவரின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யலாம்.
எரிக்கும்போதோ, புதைக்கும் போதோ தலை கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.

இறைச்சிக் கடைக்காரர், மீனவர், பறவைகளைப் பிடிப்போர் ஆகியோரின் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது. (வர்ணாசிரம கோட்பாடு எவ்வாறு புகுத்தப்படுகிறது பாருங்கள்)
இவ்வாறு, பல கோட்பாடுகளை உள்ளடக்கியதாக ‘தீனே இலாஹி’ காணப்பட்டது.

அக்பர் பிராமணர்கள் பக்கமே சாயட்டும். இந்து மதத்துக்கே செல்லட்டும். இதனால் இஸ்லாத்துக்கு எந்த வகையிலும் குறைவு வந்து விடாது. ஆனால் தனக்கு கீழ் உள்ள மற்ற மக்களும் இவர் கொள்கைபடி இஸ்லாத்தை விட வேண்டும். இஸ்லாமிய நம்பிக்கைகளை புறம் தள்ள வேண்டும் என்று சொல்ல இவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாட்டை ஆளுவதற்குத்தான் அரசனே தவிர அந்த மக்களின் சமய செயல்பாடுகளில் குறிக்கிடுவதை யாரும் விரும்ப மாட்டார். ஆனால் நமது வரலாற்று பாடநூல்களோ இந்த செய்திகள் எதையும் பதியாமல் இவரை பத்தரை மாற்று தங்கம் போல் காட்டுவதுதான் உச்ச கட்ட காமெடி. அதே நேரம் இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட, அகண்ட பாரதத்தை உண்டாக்கிய ஒளரங்கசீப்பை மதவெறியராகவும் இந்து மதத்தின் எதிரியாகவும் காட்டி அன்று முதல் இன்று வரை வெறுப்பு விதைத்து வருகிறார்கள்.

கோவி கண்ணன், சார்வாகன், இக்பால் செல்வன், வவ்வால் போன்றவர்களுக்கு இயல்பிலேயே இஸ்லாமிய எதிர்ப்பு உண்டாகி இருக்க காரணம் நமது நாட்டு வரலாற்று பாட நூல்களில் இது போன்ற வரலாற்று திரிபுகளை ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு வரை படித்ததன் விளைவே! பொதுவாகவே நமது இந்திய நாட்டின் இந்து மக்களில் 80 சதவீதமான மக்கள் நல்ல எண்ணத்தோடும் சகோதர பாசத்தோடும் பழகக் கூடியவர்களே! 20 சதவீதமான மக்களே இஸ்லாமியர்களை எதிரிகளாக காட்டி தங்களின் தவறை மறைக்க முயற்ச்சித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 20 சதவீதத்தினர் இஸ்லாமியர் மேல் போட்ட அனைத்து அவதூறுகளையும் களைவதில் முன்னணியில் இருப்பது பாக்கி உள்ள 80 சதவீதமான இந்துக்களே! பெரியார், அண்ணாவிலிருந்து சமீபத்தில் இறந்த ஹேமந்த் கர்கரே வரை, மேலும் குஜராத் பெண் அமைச்சர் கம்பி எண்ணும் அளவுக்கு கொண்டு வந்த அந்த இரு பெண்கள் வரை அனைவரும் இந்து சமுதாய மக்களே!

இனி வரும் காலங்களிலும் நமது இந்தியாவில் அந்த 20 சதமான மக்கள் நினைக்கும் இஸ்லாமிய எதிர்ப்பை முறியடிக்கும் கருவிகளாக மற்ற 80 சதவீதமான மக்களே இருப்பர் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதே போல் இந்து மத தெய்வங்களை கிண்டலடிப்பது அவர்களை பின்னூட்டத்தில் ஆபாச வார்த்தைகளால் ஏசுவது போன்றதையும் சில இஸ்லாமியர்கள் ஆர்வத்தில் செய்கின்றனர். சமீபத்தில் நடந்த சென்னை ஆர்ப்பாட்டத்தில் கூட சிலர் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர். இதை குர்ஆன் தடை செய்கிறது. அழகிய முறையில் விவாதிக்கவே குர்ஆன் கட்டளையிடுகிறது. அவர்கள் நமக்கு கோபத்தை உண்டு பண்ணினாலும் நம்மிடம் உண்மை இருப்பதால் நாம் அழகிய முறையிலேயே கண்ணியமாக பதிலளிப்போம். நமது செயல்களால் இஸ்லாத்தின் பால் அவர்களுக்கு மதிப்பை உண்டு பண்ண செய்வோம்..

நமது நாடு குறுமதியாளர்களின் நயவஞ்சக திட்டங்களில் வீழ்ந்து விடாமல் சாதி இன மத பேதமற்ற அமைதியான சூழலில் இன்னும் பல்லாண்டு சென்று உலக முடிவு நாள் வரை சிறந்தோங்க வேண்டும் என்று அந்த எல்லோருக்கும் பொதுவான ஏக இறையை பிரார்த்தித்து இப்பதிவை முடிக்கிறேன்.

Tuesday, September 18, 2012

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?


ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?

வெங்கட் நாகராஜ் தனது காசி பயண அனுபவத்தை பற்றி எழுதிய இடுகையை பார்த்தேன். மிக சாதுர்யமாக தனது பாசிச கருத்துக்களை மென்மையாக சொல்லி நஞ்சை எப்படி விதைக்கிறார் என்று பாருங்கள்.

//கி.பி. 490 ஆம் வருடம் காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டது. பதினோறாம் நூற்றாண்டில் மீண்டும் ஹரிச்சந்திர மஹாராஜா ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார். 1194 ஆம் அண்டு முகம்மது கோரி நடத்திய படையெடுப்பின் போது இந்தக் கோவிலையும், வாரணாசியில் இருந்த மற்ற கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடவே, இது மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது.

பிறகு வந்த குத்புதின் ஐபக்கால் மீண்டும் இடிக்கப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் பல அரசர்களால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 1351-ம் ஆண்டு ஃபீருஸ் ஷா துக்ளக் என்பவரால் மீண்டும் இடிக்கப்பட மறுபடியும் நிர்மாணிப்பதில் நீண்ட இடைவெளி. அக்பரின் ஆட்சியில் வருமானத் துறை மந்திரியாக இருந்த தோடர் மால், 1585-ம் வருடம் மீண்டும் ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார்.

1669-ஆம் வருடம் அரசாட்சி புரிந்த ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை முற்றிலும் இடிக்க ஆணையிடுகிறார். கோவில் தரைமட்டமாக்கப்பட்டு அவ்விடத்தில் கியான்வாபி மாஸ்க் என்ற மசூதி கட்டப்படுகிறது. கோவிலின் முக்கிய பூஜாரியாக இருந்தவர் சிவலிங்கத்தோடு கோவிலின் பின்பக்கம் இருந்த ஞானவாபி கிணற்றுக்குள் குதித்து விடுகிறார். இப்போதும் இந்தக் கிணறு காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கிறது. எப்போதும் சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிரே அவரது வாகனமான ரிஷப வாகனம் இருக்கும். தற்போதைய மசூதியை நோக்கி அக்காலத்தில் இருந்த ரிஷப வாகனம் இருக்கிறது. //

எந்த அளவு அவதூறுகளை பரப்ப முடியுமோ அந்த அளவு திட்டம் போட்டு சிலர் பரப்பி வருகின்றனர். ஒரு இடத்தை சுற்றிப் பார்ப்பவர் அதன் அழகை சொல்லி விட்டு அல்லது அங்குள்ள மக்களை சொல்லி விட்டுதான் செல்வார்கள். அதை விடுத்து சர்ச்சைக்குரிய அதன் இடிப்பை வலிந்து திணித்து வெறுப்பை நாசூக்காக விதைக்கிறார். முதலில் கோவில் என்பது வழிபாட்டு தலம் மட்டும் அல்ல. அந்நாட்டின் பொன்னையும் விலையுயர்ந்த சொத்துக்களையும் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக இருந்தது. எனவே வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் முதலில் கண் வைப்பது நம் நாட்டு கோயில்களைத்தான். பல இந்து மன்னர்கள் கோவிலை கொள்ளையடித்துள்ளார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளே இதற்கு சாட்சி! ஆனால் அவற்றை எல்லாம் எழுத மாட்டார்கள்.

இந்த பதிவை எழுதியவர் முகலாயர்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் இடிப்பதும் பிறகு கட்டுவதுமாக விஸவநாதர் ஆலயத்தின் வரலாற்றை எழுதுகிறார். இடித்தது மொகலாயர் ஆட்சி. அதே ஆட்சியில் அந்த கோவில் எப்படி திரும்பவும் கட்டப்பட்டது? அதை எப்படி அரசு அனுமதிக்கும்? நம் காலத்தில் இடிக்கப்பட்ட பாபரி மசூதியை இன்று வரை கட்ட முடிகிறதா? அறிவியல் வளர்ந்த காலத்திலேயே நிலைமை இப்படி இருக்க 1000 வருடங்களுக்கு முந்தய நிலையை சொல்ல தேவையில்லை. இதுதான் யதார்த்தம்.

பொதுவாக அரசர்கள் பெரும்பான்மை மக்களை அனுசரித்து செல்லவே ஆசைப்படுவர். ஏனெனில் அவர்களுக்கு சிக்கலின்றி ஆட்சி செலுத்த வேண்டும். ராமர் கோவில் கட்டுவோம் என்று சூளுரைக்கும் பிஜேபி தான் ஆட்சியில் அமர்ந்தால் அதை திரும்பி கூட பார்க்காது. இவ்வளவுதான் இவர்களின் மதப்பற்று. ஏனெனில் அவர்களின் ஆட்சி அமைதியாக செல்ல வேண்டும். காசி விசுவநாதர் கோவிலைப் பற்றி பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய ஒரு கட்டுரையை முன்பு சேமித்து வைத்திருந்தேன். அதனை தற்போது அப்படியே தருகிறேன். ஒளரங்கசீப்பின் ஆட்சியும் காசி விசுவநாதர் கோவிலின் இடிப்பின் வரலாற்றையும் சற்று நோக்குவோம்.

--------------------------------------------------------------------------


அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.

ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

முனைவர் அ. தஸ்தகீர்.(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71

இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55

-------------------------------------------

இந்து இளவரசியை மணந்த அக்பர்!

முகலாயப் பேரரசர் அக்பர் ஆஜ்மீருக்குச் சென்று திரும்புகையில் சாம்பர் (Sambhar) என்ற ஊரில் ஆம்பர் (Ambar)மன்னர் ராஜா பார்மலின் மகளை இந்து மரபுப்படி திருமணம் செய்தார். அக்பரின் முகலாய வழியும், இராஜபுத்திர வழியும் இத்திருமணத்தால் ஒன்று சேர்ந்தது.

க.வெங்கடேசன், அக்பர்,சென்னை.
1972 –Page 47,48

--------------------------------------------

ஷா பாய் என்று ஜெய்ப்பூர் ஆவணங்களில் அழைக்கப்படும் இராஜபுத்திர இளவரசியை, அக்பரை திருமணம் செய்து கொண்டதற்கு பின் மரியம்-உஸ்-ஸமானி (Mariam-uz-zamani) என்று அழைக்கப்பட்டார்.

Ashirbadilal Srivastava, Akbar The Great, volume 2, Agra, 1973, Page 59.

--------------------------------------------

இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!

முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.

“Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.

--------------------------------------------

இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.

ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.

குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.

“Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”

Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.

************************************

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!

இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?

நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!

ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.

பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.

உதயபுரி மஹல் அல்லது பாய் உதயபுரி (Udai Puri Mahal) என்ற மனைவியும் ஒளரங்கஜேப்பிற்கு இருந்ததாகச் சொல்லப் படுகிறது. (Kam Baksh) காம்பக்ஸ்என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இவர்தான்.

டி.எப்.ஆர். மஆலிசாஹிப், முஸ்லிம் மன்னர்களின் இந்து ராணிகள், பத்ஹூல் இஸ்லாம்.
1957, November, Chennai.


ஒளரங்கசீப் பல வரிகளை போட்டு மக்களை கொடுமைபடுத்தியதாக ஒரு கருத்தும் உண்டு. ஆட்சி நடத்த மக்களின் வரி பணம் அவசியம். அது இன்று வரை தொடர்கிறது. முன்பு மொகலாயர் ஆட்சிக்கு முன்னால் வரி எப்படி போடப்பட்டது?


கடவுளின் சொந்த பூமி என்கிறார்களே, அந்தக் கேரளத்தில் தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே! தலைக்கு வரி, மீசை வைத்தால் வரி, திருமணத்திற்கு வரி, இறந்தால் வரி, எந்தவிதச் சடங்கு செய்தாலும் வரி என்று விதித்தார்கள்.

பனை மரம் ஏறினால் வரி, கள் விற்றால் வரி, வலை வீசினால் வரி, மீன் பிடித்தால் வரி என்று பிழைக்கும் வழிகளுக்கெல்லாம் வரி. பாடுபடாமல் வாழ்ந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு வரி கிடையாது. ----வ.அரசு.
SOURCE:>> “viduthalai newspaper “ SUNDAY, MAY 12, 2007

ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த மொகலாயர்கள் நம்மை ஏவ்வாறு 1000 வருடங்கள் ஆள முடிந்தது என்பதற்கு இந்த வரிகளே சாட்சியாக உள்ளது. இதற்கு முன் இந்து ஆட்சியாளர்களை விட முஸ்லிம் ஆட்சியாளர்களின் ஆட்சி சிறப்பாக இருந்ததாலேயே அகண்ட பாரதத்தை மொகலாயர்களால் உருவாக்க முடிந்தது.