Followers

Friday, November 22, 2013

இந்துத்வாவினர் காம விளையாட்டில் அடிக்கடி மாட்டுவதேன்!



தினமும் பத்திரிக்கையை திறந்தால் அந்த சாமியார் கைது இந்த சாமியார் கைது: அந்த பிஜேபி தலைவர் கைது: இந்த இந்துத்வா தலைவர் கைது என்ற செய்தி வராத நாளே இல்லை எனலாம். அனைத்து கைதுகளும் பாலியல் சம்பந்தமாகவே உள்ளதை நாம் பார்க்க வேண்டும். பிரேமானந்தா, நித்தியானந்தா, காஞ்சி சங்கராச்சாரியார், ஆசாராம் பாபு, தற்போது நரேந்திர மோடி என்று தினமும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 'பாரதீய ஜனதா பார்ட்டி'யா அல்லது 'பாரதீய ஜல்சா பார்ட்டி'யா என்று பலரும் எள்ளி நகையாடும் வகையில் தான் இவரகளின் போக்கு உள்ளது. அதிலும் காசியில் பிணங்களை தின்று வாழும் அகோரிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். பலர் முழு நிரவாணமாகவே சர்வ சாதாரணமாக கடை வீதிகளில் உலா வருகின்றனர். ஏன் இப்படி? இந்துத்வாவினருக்கு இதை விட்டால் வேறு வேலையே இல்லையா? என்று நாம் ஆச்சரியப்படுவோம். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இவர்கள் வழி வழியாக சிறு வயதிலிருந்து எதை படித்து வந்தார்களோ அது ஆழ் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அவ்வாறு படித்து வளர்ந்த இவர்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களை அறியாமலேயே ஏடாகூடமாக ஏதாவது செய்து வம்பில் மாட்டிக் கொள்கின்றனர். இதை ஒரு தவறாக நினைக்க அவர்களின் உள் மனது இடம் கொடுப்பதில்லை. நான் சொல்லும் இந்த கருத்துக்கள் உண்மையான இறை பக்தியோடு இறைவனை வணங்கி மற்ற மதத்தவர்களிடமும் அன்புடன் பழகி வரும் கோடானு கோடி இந்து மத நண்பர்களை பற்றி அல்ல. இந்த நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்வாதாரங்களை அழித்து அதன் மூலம் தங்களின் வாழ்வை மத வெறியின் மூலம் வளப்படுத்திக் கொண்டிருக்கும் இந்துத்வாவினரை நோக்கியே எனது கருத்துக்கள்.

திண்ணையில் சகோ ஷாலி அவர்களின் பின்னூட்டத்தை இதற்கு பதிலாக தருகிறேன். படித்துப் பாருங்கள்.

//கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் கண்ணனை ஏனிப்படி ஒரு காமுகனாகவே பல கவிஞர்களும் சித்திரித்து வந்துள்ளனர்? கண்ணன் உண்மையிலேயே அப்படித்தான் இருந்ததாய்ப் புராண நூல்கள் சொல்லுகின்றனவா, இன்றேல் அவை யாவும் சில காமுகர்கள் செய்த இடைச் செருகல்களா? //

கண்ணன் பற்றிய மூல நூல்களான பாகவத்திலும், மகாபாரதத்திலும்,ராதையை பார்க்க முடியவில்லை. வியாசர் எழுதிய பிரமாண்ட புராணம், வைவர்த்த புராணத்தில் உள்ள ராதா கிருஷ்ணா லீலைகளை தழுவியே ஜெயதேவர் அஷ்டபதி எனும் கீதகோவிந்தம் எழுதப்பட்டதென்பர்.

கண்ணனின் காதலியாக சொல்லப்படும் ராதை உண்மையில் அவனுக்கு அத்தை முறையானவள் மற்றுமல்ல, மாற்றான் மனைவி என்பதும் கவனிக்கத்தக்கது.

பகவான் கோபாலனுடைய லீலைகளை விரிவாய் “உபதேசிக்கும்” பகுதி பாகவதத்தில் பத்தாவது “°கந்தம்” (பகுதி). பாகவதத்தை யாக்கனத்தோடு அச்சிட்டு வெளியிட்டவர் கடலங்குடி நடேசசாஸ்திரிகள்.

இதில் கிருஷ்ணன் பர ஸ்திரீகளான (பிறர் மனைவியர்) கோபிகைகளோடு அத்யாயம் 29 ல் “ஜலக்கிரீடை” செய்ததையும், அத்யாயம் 30 ல் “வனக்கிரீடை” செய்ததையும், அத்யாயம் 31 ல் “ஸ்தலக் கிரீடை” செய்ததையும் மிக மிக …….. மொழியில் சொல்லப்பட்டுள்ளது. (ஜலக்கிரீடை – நீரில் விளையாடுவது, வனக்கிரீடை – காட்டில் விளையாடுவது, ஸ்தலக் கிரீடை – நிலத்தில் விளையாடுவது) அத்தியாயங்கள் 32, 3359 ஆகியவற்றிலும் “சிருங்கார கதை” தொடர்கிறது.

“கோபஸ்திரீகள் (கோபிகாஸ்திரீகள்) காமத்தை அதிகப்படுத்தும் கிருஷ்ணனின் கீதத்தைக் கேட்டு அவனிருக்கும் இடம் நாடி ஓடிவருகின்றனர். – பால் கறந்து கொண்டிருந்த சிலர் ஆசை கொண்டர்களாய் பால் கறப்பதை நிறுத்தி விட்டு ஓடிவந்தனர். – அன்னம் பரிமாரிக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், – குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், – கணவர்களுக்குப் பணிவிடை செய்பவர் அதை விடுத்தும், – உடம்புக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், கணவர்கள் தடுத்தும், பிதா தடுத்தும், மாதா தடுத்தும் உடன்பிறந்தான் தடுத்தும் கட்டுக்கடங்காது, மோகத்தோடு கிருஷ்ணனை நோக்கி ஓடுகின்றனர்.

ஓடிவந்த ஒய்யாரிகளோடு கோபாலன் கண்டபடி, கண்ட இடங்களில் ஆடினான், பாடினான், இறுதியில் கூடினான்.யமுனை நதியிலும், அதையொட்டிய சோலைகளிலும், நதிக்கரை திட்டுகளிலும், மனம் “திகட்டும்” அளவுக்குக் கோபியரோடு கொஞ்சினான் கோகுல கிருஷ்ணன்.

//கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் கண்ணனை ஏன் காமுகனாகவே…….//

சகோ.ஜோதிர்லதாகிரிஜா அவர்களே! நீங்கள் கேட்ட கேள்வியை இதற்க்குமுன்னால் வேறொருவர் கேட்டே விட்டார்.

போர்க்களத்தில் மரண தருவாயில் இருந்த அபிமன்யுவின் மகன் பரீட்சித்து, அரசன் சுகர் (வியாசரின் மகன்) என்ற முனிவன் சொன்ன இந்த பாகவதைத் கேட்டு, ஒரு கேள்வி கேட்டான். சுகமுனிவரை நோக்கி “தர்மம் காத்து அதர்மத்தை அழிக்க வந்த கோபாலன் என்ன எண்ணங்கொண்டு வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்தார். எல்லோருக்கும் வழிகாட்ட வேண்டிய பகவான் கோவிந்தர் “பரதாராபிமர்சனம்” (பர+தார+அபிமர்சனம் = பிறர் மனைவியைக் கூடுதல்) செய்வது தவறான காரியமல்லவா?” என்று “பச்சையாகக்” கேட்டான் பாராளும் பரீட்சித்.

அவருடைய “தத்துவ விளக்க”ப் பதில் இதோ! “மன்னா, எல்லாவற்றையும் அக்னி எரித்துவிடும். அக்னியைப் போன்ற ஒளி உடையவர்களும் அப்படியே. அவர்களை எந்த பாபமும் பற்றுவதில்லை. அவர் செய்தாரே என்பதைக் காட்டி தான் செய்ய எவரும் மனதாலும் நினைக்கக்கூடாது. அப்படிச் செய்பவன் அழிந்து போவான். சிவபெருமான் விஷத்தைச் சாப்பிட்டாரே என்று தானும் சாப்பிடுபவன் அழிந்து போவான்.” என்று விளக்குகிறார் மகரிஷி சுகர்.

- நன்றி: கடலங்குடியின் ஸ்ரீமத் பாகவதம்- கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், உரைநடையில்ஸ்ரீமத் பாகவதம் – ஸ்ரீ ஆனந்த நாச்சி யாரம்மா – ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்.

காமம்-கடவுள் இதில் முதலில் வந்தது யார்? இதோ வேதம் சொல்கிறது, “ காமம் தான் உலகில் முதலில் பிறந்தது.காமம் தான் மனசுக்கு முதல் வித்து,அந்த மனசை வைத்து ரிஷிகள் தவத்தின் மூலம் இருக்கலுக்கும் இல்லாமல் இருத்தலுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தினர்.” ரிக் வேதம்.10 வது மண்டலத்தில் 129 வது சூக்தம் 4 வது மந்திரம்.

“ உலகத்தில் முதலில் தோன்றிய காமம் சக்தி வாய்ந்தது கடவுளோ,முன்னோர்களோ,மனிதர்களோ,அதற்க்கு நிகர் கிடையாது. ஓ…காமமே! நீ..எல்லையற்ற பேரழகு கொண்டவன் நீ! எல்லா உயிர்களிலிலும் நீ நிறைந்திருக்கிறாய்! சூரியன் சந்திரன்,காற்று அக்கினி ஆகிய எல்லா தேவர்களையும் விட நீ மேலானவன்…எப்போதும் நீ மேலானவன்.”
–அதர்வண வேதம் 9 வது காண்டம் 2 வது சூக்தம் 19-21 வது மந்திரம்.

வேதம் சொல்வது உண்மைதான்.காமத்தின் முன்னே எல்லா கடவுள்களும் கவிழ்ந்து விட்டதாகவே புராணம் சொல்கிறது.

இந்திரன்,சந்திரன்,அக்கினி,மனிதர்கள் அனைவரையும் காமம் வென்று விட்டது.மன்மத லீலையை வென்றார் உண்டோ? ஒருவரும் இல்லை.

“கண்ணனுக்கே ஆமது காமம்” என்கிறார் ஸ்ரீ இராமானுஜர்.

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்று இவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம் பொருள் வீடிதற்கு என்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமனுசன் இந்த மண்மிசையே!

போற்றலும் …..தூற்றலும்….போகட்டும் கண்ணனுக்கே!

// அட! கண்ணனை விடுங்கள்.இவர்கள் இது போன்ற கதைகள் இல்லாத முருகனைக்கூட விட்டு வைக்கவில்லையே!//

முருகன் என்றால் அழகன் என்னும் அழகிய தமிழ்ச்சொல் சங்க இலக்கிய பரிபாடலில் உள்ளது.சரி!இத்துடன் முருகன் பெயர் முடியவில்லையே! கந்தன் எனும் ஸ்கந்தன்,சரவணன்,ஆறுமுகம்,கார்த்திகேயன்,சுப்பிரமணியன்.இந்தப்பெயருக்கெல்லாம் பொருள் என்ன?

புராணக்கதைகள் சொல்லும் பொருள். பார்வதியை மோகத்தோடு நெருங்கினார் பரமசிவனார்.உமையாள் அதற்க்கு மறுத்து ஒதுங்கினாள்.பரமசிவனின் ரேதஸ்(இந்திரியத் துளி௦) ஆகாயத்திலிருந்து சிதறி கங்கையில் விழுந்து நாணல் காட்டின் கரையில் ஒதுங்கி குழந்தையாகிறது.அந்த குழந்தையின் பெயர் (சமஸ்கிரதத்தில்) சரம் என்றால் நாணல் வனம் என்றால் காடு. சரவணன். ஆனின் உயிர்த்துளிகள் பெண்ணின் பாகத்தில் சேராமல் வழி தவறி விழுந்தால் அதன் பெயர்தான் ஸ்கந்தன். துளிகள் சிதறி ஆறு இடங்களில் விழுந்து குழந்தை ஆனதால் ஆறுமுகம்.அதை ஆறு கார்த்திகை நட்சத்திர பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகேயன். சரம்வனம் என்ற சரவணனின் நதி மூலம் நன்கு தெரிந்த காரணத்தால் நம்ம கவிஞர்கள் “வள்ளியே! எப்படி புடுச்சே அரோகரா! அத என்கிட்டச்சொன்னா தட்சணை தருவேன் அரோகரா!” என்று பாடுகிறார்கள்.

நம்ம கண்ணனையும் முருகனையும் இணைத்துப் பாடும் பாடலைக் கேட்போம்.

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்

இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)

அன்புடன்
ஷாலி

3 comments:

Anonymous said...

டிசம்பர் 1, 1992 அன்று ரதயாத்திரை புறப்படுவதற்கு முன்னர் வினய் கத்தியார் அத்வானியைச் சந்திக்க வந்தார்.

அந்த சந்திப்பில் நானும் உடனிருந்தேன். இந்தக் கூட்டத்தில்தான் அத்வானியும், கத்தியாரும் பாபர் மசூதியை இடிக்கச் சதித் திட்டம் தீட்டினர்.

ரதயாத்திரையின் இறுதி நோக்கம் கரசேவை செய்து இந்துக்களை தாஜா செய்வது மட்டுமல்ல, வாக்குகளைத் திரட்டி மத்தியில் அதிகாரத்திற்கு வருவதும்தான் என்று அத்வானி கத்தியாரிடம் கூறினார்....

.....பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம் அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்,

அதாவது மத்தியில் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று அத்வானி கத்தியாரிடம் கூறினார்;

பாபர் மசூதியை இடித்தால்தான் அது சாத்தியமாகும்;

ஏனெனில், அதுதான் இந்துக்களை பாஜகவிற்கு ஆதரவாக ஒன்று திரட்டும்' என்று கௌரி தன்னுடைய லிபரான் கமிஷன் முன்பு அளித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

ஆதாரம்: விக்கிபீடியா

Anonymous said...

நான் எழுதிய '' சேரமான் பெருமாள் '' என்ற நூல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

அல்ஹம்ந்‌துலில்லாஹ்.....!

ஓமன் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகருக்குச் சென்று... கள ஆய்வு செய்து.... இஸ்லாத்திற்கான அழைப்பை மையப்படுத்தி... தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம் என்று நான் எழுதிய இந்த வரலாற்று நூல்.... இன்ஷா அல்லாஹ்.... இனி பொதுத் தளத்திலும் உலா வரும்.

நான் சலாலாஹ் செல்ல உதவி செய்த
தமிழ் முஸ்லிம் அசோசியேஷன் மஸ்கட் (TAMAM) அமைப்பிற்கும்......

என்னோடு வருகை தந்த சகோதரர் அய்யம்பேட்டை அப்துர் ரவூஃப் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்லாஹு அக்பர்

-https://www.facebook.com/cmnsaleem.cmnsaleem?hc_location=stream

Dr.Anburaj said...

கண்ணனின் வரலா்று முழுமையாக புலவா்களால் நாசம் செய்யப்பட்டுவிட்டது. திருக்குறளில் கலையைச்பற்று ஏன் கூறவில்லை என்கிற புத்தகம் கிடைத்தால்படித்துப் பாருங்கள். நமது தமிழ் புலவா்கள் முதலில் மானம் ரோசம் வீரம் இதையே கருப்பொருளாகக் கொண்டு பாடல்கள் இயற்றி வந்தாா்களாம். ஒரு நிலையில் புலவா்களுக்கு போதிய வருவாய் கிடைக்காமல் போனது. எனவே சிருங்காரம் பாட ஆரம்பித்து நிறை பணம் சம்பாதித்தனராம். மக்களிடையே எதிா்ப்பு வந்தது. எனவே மக்களை முட்டாள்களாக்கிட முருகனே வள்ளியை காதலித்தான்.சைட் அடித்தான் என பலவிதமான கட்டுரைகளை எழுதி மக்களை எமாற்றி தங்களின் பணம் சம்பாதிக்கும் திட்டத்திற்கு ஏற்பட்ட எதிா்ப்பை அழித்து விட்டனா். இதுபோலவே கம்பராமாயாணத்திலும் பயங்கரமான ஆபாச வர்ணணைகள் உண்டு. சற்று கவனமாக படிக்க வேண்டும்.. இந்து சமயத்தை ஒரளவிற்கு தெளிவாக காட்டுவது ஸ்ரீராமகிருஷ்ணா் -ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தா் - ஆகிய இருவரும்தான்.தியானம் நாமஜெபம் பிரம்மச்சாியம் என்று நல்ல இந்துக்களை பண்படுத்துவதில் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கங்கள் சிறந்த முறையில் தொடாற்றி வருகின்றது. எடுத்த எடுப்பில் பழைமையை மாற்ற முடியாது. மெதுவாக மாறிவருகின்றது. இந்துக்கள் அனைவருக்கும் விவேகானந்தாின் போதனைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். என்ற இயக்கத்தை சுவனப்பிாியனும் ஆதாிக்க வேண்டும். ஒரு மனித வளம் மிக்க இந்து சமூகம் -மத வெறியற்ற இந்து சடூகம் - முன்னேற்ற பாதையில் நடைபோடும் இந்து சமூகம் உருவாக அது உதவும்.என்று பத்மாசனத்தில் அமா்ந்து சமய வழிபாடுகளைச் செய்கின்றாா்களோ அன்றுதான் இந்துக்கள் உருப்படுவாா்கள்.