Followers

Saturday, November 23, 2013

நரேந்திர மோடியின் டிவிட்டர் கூத்து! :-)



மத்திய பிரதேச மக்களுக்கு நரேந்திர மோடி டிவிட்டரில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். 'மக்கள் காலையிலேயே எழுந்து சென்று 'ஒரு மோசமான முட்டாளுக்கு' வாக்களித்து பிஜேபியை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது அவரது கட்சியின் சின்னமான தாமரை LOTUS என்று எழுதுவதற்கு பதிலாக LOUTS என்று டைப் பண்ணி விட்டார். மத்திய பிரதேச முதல்வர் சவுகான் மேல் என்ன கடுப்போ மோடிக்கு தெரியவில்லை. நிதிஷ் குமார் எவ்வாறு மோடியை நிராகரிக்கிறாரோ அதே போல் சவுகானும் மோடியை பக்கத்தில் அண்ட விடுவதில்லை. ஒருக்கால் அந்த விரக்தியில் மோடியின் மனதில் இருந்து விழுந்த வார்த்தைகளாகவும் இருக்கலாம். அல்லது 'மோசமான முட்டாள்' என்று தன்னையே சொல்லிக் கொள்கிறாரோ? :-)

மனதில் தெளிவும், உண்மையான இறை பக்தியும் உடைய ஒரு மனிதனுக்கு சிந்தனையும் ஞாபக சக்தியும் தெளிவாகவே இருக்கும். எந்த நேரமும் பொய்: தான் முன்னுக்கு வர தனது கட்சிக் காரர்களையே பலி கொடுக்கும் தந்திரம்: நாட்டு மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் ஆட்சியை பிடிக்க நினைக்கும் குள்ளநரித் தனம்: தேசபக்தி வேடமிட்டு நாட்டு மக்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவது என்று தனது வாழ்நாளில் பெரும்பாலும் ரத்த கறையோடு வாழ்ந்து வரும் ஒரு இந்துத்வவாதியிடம் இது போன்ற உளறல்களை இன்னும் எதிர்பார்க்கலாம்.

இந்துத்வாவாதிகள் பலரும் நடந்த தவறை சுட்டிக் காட்டவே உடன் டுவிட்டரில் திருத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே பலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையத்தில் உலவ விட்டுள்ளனர். இந்த கோமாளி தேர்தல் நெருக்கத்தில் இன்னும் எதை எல்லாம் சொல்லப் போகிறாரோ. பொறுத்திருந்து பார்ப்போம்.


http://indiatoday.intoday.in/story/narendra-modi-twitter-typo-lotus-vs-louts-bjp-madhya-pradesh-polls/1/326162.html

---------------------------------------------------------

பித்தலாட்டத்தின் மறுபெயர் பிஜேபி!



நான் முதல் மந்திரி ஆவதற்கு முன்பு சாலைகள் மிகவும் மோசமாக போர்க் காலத்தில் குண்டு போட்ட சாலை போல் குண்டும் குழியுமாக இருந்தன. நான் மாநிலம் முழுவது பயணம் செய்தபோது இந்த அவலத்தைப் பார்த்தேன். என்னுடைய வாகனம் செல்வதுகூட பெரும் சிரமமாக இருந்தது. இவற்றையெல்லாம் சரி செய்வதென்பது எனக்கு மிகவும் பெரிய சோதனையான ஒன்றாக இருந்தது. இந்த பாழடைந்த சாலைகளை சீர் செய்ய மிகப் பெரிய யாகம் செய்வதைப் போன்று பெரிய காரியமாக இருந்தது. இப்போது நான் செய்த காரியத்தின் பலனை நீங்களே பாருங்கள்...

இந்த சாலையைப் பார்த்த பிறகு இந்தியாவே கூறும் பாதுகாப்பான மற்றும் நவீன வசதியுடைய சாலைகள் மத்திய பிரதேச சாலைகள் என்று...

இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மத்திய பிரதேச பி.ஜே.பி. ஆட்சியால்.

உண்மை என்னவென்றால் இது மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் சாலையாகும்; பித்தலாட்டமே உன் பெயர்தான் பிஜேபியா?

http://www.viduthalai.in/headline/70874-2013-11-22-09-53-02.html

1 comment:

Anonymous said...

நாயுடுக்கு ஒருவிதமான நாக்கும் முதலியாருக்கு ஒருவிதமான மூக்கும் பார்ப்பனருக்கு ஒருவிதமான பல்லும் தலித்துக்கு ஒருவிதமான தலையும் கவுண்டருக்கு ஒருவிதமான கண்ணும் ஆண்டவன் படைக்கவில்லை. எல்லோருடைய உடம்பிலும் ஓடும் ரத்தமும் சிகப்பு நிறம்தான். எல்லோருடைய உருவத்தின் நிழலும் கருப்பு நிறம்தான் . பார்ப்பானின் ரத்தத்தில் மட்டும் A , B , O , AB என்று Blood groups களும் தலித்துக்களின் ரத்தத்தில் மட்டும் X Y Z என்று Blood Groups களுமா இருக்கின்றன? அவன் சேற்றில் “”கால்”" வைக்கவில்லை என்றால் பார்ப்பனர்கள் சோற்றில் “”கை”" வைக்கமுடியுமா? அவன் உழைக்கும்போது சிந்தும் வேர்வை மணிகள்தான் நிலத்தில் நெல்மணிகளாக மாறுகின்றன. அவன் கஷ்டப்பட்டு சிந்திய வேர்வை துளிகள் தான் cement மணல் மற்றும் செங்கல் ஆகியவற்றுடன் கலந்து கம்பீரமான வீடாக நிற்கிறது. அப்போது தீட்டு இல்லையா?

உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்தவன் ஆண்டவன் என்றால் அந்த ஆண்டவனால் படைக்கப்பட்ட தலித்துகள் மட்டும் உங்கள் (பாழும்) கண்களுக்கு ஒரு ஜிவராசியாக தெரியவில்லையா? நாயும் குரங்கும் காகமும் யானையும், மயிலும் போகும் கோவிலுக்குள் ஒரு ஆறறிவு படைத்த மனிதன் போக கூடாது என்று “”ஆலய பிரவேசத்திற்கு”" எதிர்ப்பு காட்டுவது ஏன்? காந்தியை திட்டுங்கள் நேருவை திட்டுங்கள். அவற்றை மிகச்சரி என்பேன். அவர்கள் இந்த நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள். ஆனால் திருப்பதிக்குள் ஒரு Antonia Mino என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பெண் போகலாம் ஆனால் முருகன், கோவிந்தன், ராமன், கிருஷ்ணன் என்று இந்துப் பெயரை வைத்துககொண்டு இருப்பவன் கோவிலுக்குள் போக கூடாது அவன் தேரை இழுக்கக் கூடாது என்று சொல்வதேன்? மாட்டுக்குகூட லாடம் அடிக்கிறோம். ஆனால் நிலத்தில் மாடாய் உழைக்கும் தலித்து மட்டும் செருப்பு போட கூடாது என்று சொல்வது என்னையா நியாயம்? சட்டத்தின் முன் சமம் ஆனால் சாமி முன் சமமில்லை என்றால் அந்த சாமி நல்ல சாமிதானா? இது சாமிகள் செய்யும் வேலையா? இல்லை சங்கராச்சாரியார்கள் போன்ற ஆசாமிகள் செய்யும் வேலையா? மனிதாபிமானம் உள்ளவன்தான் மனிதன். அது இல்லாதவன் கேடுகெட்ட மிருகம்.

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். சாதி சாதி என்று எதற்கு சாக்கைடையில் விழுந்து சாக விரும்புகிறீர்கள்? ஒருவன் என்ன சாதி என்று பார்க்காதீர்கள். அவன் “”ஜாத்தியானவனா?”" என்று பாருங்கள். ஜாதியை வைத்து ஒருவனை எடை போடாதீர்கள். அவன் சாதித்ததை வைத்து எடை போடுங்கள். செக்கிழுத்த தியாக செம்மல் வ.உ,சி யை இந்தியர் எல்லோரும் சேர்ந்து கொண்டாட வேண்டும். அவரது ஜாதிகாரர்கள் மட்டும் கொண்டாடுவது ரொம்ப தப்பு. ஜாதிகள் ஒழிக்கப் படவில்லை என்றால் இந்து மதம் நம் கண் முன்னேயே அழியும்.

-Honest man