Followers

Saturday, November 30, 2013

இஸ்லாத்தின் மேல் பிரான்சு எடுக்கும் தவறான முடிவு!



தனது உடை எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது ஒரு தனி மனிதனின் உரிமை என்று ஒரு புறம் சொல்லிக் கொள்வார்கள். மறுபுறம் ஹிஜாப் அணிந்து ஒழுக்கமாக ஒரு பெண் சென்றால் 'மத சார்பின்மைக்கு எதிரானது' என்று கைதும் பண்ணுவார்கள். ஒரு இஸ்லாமிய பெண்மணி தனது உடலை கண்ணியமாக மறைத்து சென்றதை பொருத்துக் கொள்ளாத பிரான்ஸ் காவல் துறை அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றுவதைத்தான் நாம் மேலே பார்க்கிறோம்.

இது போன்ற உதவாக்கறை சட்டங்களை வைத்து இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று பிரான்சு அரசு நினைக்கிறது போலும். ஏனெனில் நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாத்தின் வளர்ச்சியானது பிரான்சு அரசையே நடுங்க வைக்கிறது.

முன்பெல்லாம் வெளிநாடுகளிலிருந்து அகதிகளாக குடியேறிய மக்கள்தான் இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றுபவர்களாக இருந்தனர். ஆனால் இன்றோ பிரான்சின் பூர்வ குடிகள் இஸ்லாத்தை ஏற்பது தற்போது மிக அதிகரித்துள்ளது. மேற்கத்திய கலாசாரம் அந்த மக்களை நிம்மதியிழக்க வைத்தது. இணையத்தின் மகத்தான தொடர்பால் இன்று அனைத்து வீடுகளுக்குள்ளும் சர்வ சாதாரணமாக இஸ்லாம் புகுந்து விடுகிறது. இதனால் இஸ்லாத்தை விளங்கவும் அதன் சட்ட திட்டங்களை அறிந்து கொள்ளவும் அந்த மக்களுக்கு சிறந்த வழிகாட்டிகள் மிக சுலபமாக கிடைத்து விடுகின்றனர்.

வெளியூர் கேம்ப் ஒன்றில் சில இஸ்லாமிய மாணவர்கள் ரமலான் மாதத்தில் பகல் நேரத்தில் உணவை எடுக்காதது பெரும் பிரச்னையாக்கப்பட்டது. மாணவர்கள் பலகீனமாகி விடுவார்கள் என்ற சொத்தை காரணம் சொல்லப்பட்டது.

ஒரு பள்ளியில் இஸ்லாமிய மாணவி ஒருவர் உடலை மறைத்து கண்ணியமாக கல்லூரிக்கு வந்தது பெரும் பிரச்னையாக்கப்பட்டது. தற்போது அந்த பெண்ணின் பெற்றோர் அந்த கல்லூரியின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

கிறித்தவர்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மீன் உணவை கேட்கின்றனர். அது அவர்களுக்கு புனிதமாக படுகிறது. இதை எல்லாம் மதசார்பற்ற இந்த அரசு எப்படி கையாளப் போகிறது?

சீக்கியர்களின் குழந்தைகள் தலையில் தலைப்பாகையோடுதான் வருகின்றனர். இங்கும் பிரச்னை அரசுக்கு காத்திருக்கிறது.

மதசார்பற்ற அரசு எப்படி செயல்பட வேண்டும்?

பல மக்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூக சூழ்நிலையில் அந்த மக்களின் மத சடங்குகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் எந்த ஒரு மதத்தையும் சாராமல் செயல்படும் ஒரு அரசே மதசார்பற்ற அரசாக இருக்க முடியும். இருக்கும் மத அடையாளங்களை முற்றாக தடை செய்கிறேன் என்று அரசு போனால் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் நாத்திகத்திலிருந்து இன்று ஆத்திகத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளதை உதாரணமாகக் கொள்ளலாம்.

எனவே உலகில் பிறந்த எந்த மனிதனும் ஏதோ ஒரு நம்பிக்கை, ஒரு கலாசாரத்தை பின்பற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அதை அனுசரித்து அரசுகள் நடந்து கொண்டாலே அனைத்து மக்களும் குழப்பமின்றி தங்களின் வாழ்வை ஓட்ட முடியும். இதனை பிரான்சு, இந்தியா போன்ற பலதர மக்கள் வாழும் நாடுகளின் அரசுகள் புரிந்து செயல்படுவார்களாக!

அவர்கள் இறைவனின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு ஊதி அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும், இறைவன் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

குர்ஆன் 61:8




தகவல் உதவி சவுதி கெஜட்.

9 comments:

C.Sugumar said...

கண்ணியமான முறையில் -உடலை அதிகபட்சம் மூடுவது - உடை உடுத்துவது தான் நாகரீகம். ஆண்கள் பிரான்சு நாட்டில் - இந்தியாவில் கோர்ட் முழுகை மற்றும் கால்சட்டை அணிந்தால் கழுத்து முதல் கணுக்கால் வரையும் - முழுகை சட்டை அணிந்தால் தோள் முதல் மணிக்கட்டு வரை துணியால் மூடிக்கொள்கின்றனா்.இதுபோல்தானே பெண்களும் உடை உடுத்த வேண்டும். முகத்தை மறைப்பது பொருத்தமல்ல. மற்றபடி முஸ்லீம் பெண்கள் உடை அணிவது ஆண்கள் அளவிற்குதான். பிரான்சு அரசு செய்வது தவறு. முகத்தை மூடிக்கொண்டு உடை அணிவது ம் தவறானது.

suvanappiriyan said...

Prassannasundhar N on November 30, 2013 at 8:08 pm

//மொகலாயர்களின் காலத்தை விட இன்றுதான் அதிக அளவில் மத மாற்றங்கள் நடந்து வருகிறது. அதற்கு காரணம் இந்து மத வர்ணாசிரமம் என்றால் மிகையாகாது.//

அது எப்படி சுவனப்ரியன் சார்? மொகலாயர்கள் காலத்திலே வர்ணாசிரம தர்மம் அப்போது இல்லையா? இல்லாத ஒன்றைக் காட்டித் தான் இத்தனை நாட்களாக ஹிந்துக்களை ஜாதி ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறதா? சார், வர்ணாசிரம தர்மம் செத்து சுண்ணாம்பான பிறகு தான் மத மாற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதன் காரணம் வர்ணாசிரம கான்செப்டையே பிறப்பின் அடிப்படையில் மாற்றியது தான். 7 ஆம் நூற்றாண்டில் துவங்கி 8 ஆம் நூற்றாண்டில் கூட ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று அனைத்து சாதியினரும் ஒன்றாக இணைந்து தான் பக்தி இலக்கியங்களை வளர்த்து எடுத்திருக்கிறார்கள். அப்போது இல்லாத சாதி பேதம் எப்போது சார் பெரிதாக உருவெடுத்தது? களபிரர்கள் காலமாகிய 3 முதல் 6 ஆம் நூற்றாண்டு வரையில் கூட ஒற்றுமையுடன் இருந்து அதன் பிறகு தமிழையும், பக்தியையும் முன்னெடுத்துச் சென்று இருக்கிறார்களே சார்?

மொகலாயர்கள் காலத்திலே மாறவில்லை, ஆங்கிலேயர் காலத்திலே மாறவில்லை ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் மாறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஆங்கிலேயன் விட்டுப் போன ஹிந்து சிந்தனைகள் பற்றிய தவறான பிரச்சாரங்கள் தான் சார். அவன் விட்டுப் போன அதே கல்வி முறையை இன்னைக்கும் படிக்கிறோம். அடிமை புத்தி ஊறிப் போய் தான் சார் அவனவனும் மதம் மாறுறான். 8 ஆம் நூற்றாண்டில் நாயன்மார்களிடம், அழ்வார்களிடம் இல்லாத தீண்டாமை இப்பவும் இருக்குன்னா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோமே, அது என்னனு தான பாக்கணும். வர்ணாசிரம தர்மம்கறீங்க! ஒண்ணுமே புரிய மாட்டேங்குது! என்னமோ போங்க சார்!

suvanappiriyan said...

திரு சுகுமார்!

//மற்றபடி முஸ்லீம் பெண்கள் உடை அணிவது ஆண்கள் அளவிற்குதான். பிரான்சு அரசு செய்வது தவறு. முகத்தை மூடிக்கொண்டு உடை அணிவது ம் தவறானது.//

எனது கருத்தும் அதுதான். பெண்கள் முகத்தை மூடச் சொல்லி குர்ஆன் கட்டளையிடவில்லை. இது சில பெண்கள் அவர்களாகவே தங்களின் முகத்தை அந்நியர் பார்க்கக் கூடாது என்று கூடுதலாக முகத்தை மூடிக் கொள்கின்றனர். அரசிடம் பிரச்னை வரும் போது தலையில் முக்காடோடு முகத்தை திறந்து வெளியில் வரலாம். ஆனால் பிரான்சு அரசு முக்காட்டை சுத்தமாக எடுக்கச் சொல்வது தான் பிரச்னையே.

suvanappiriyan said...

ஹானஸ்ட் மேன்!

//அ)காதல் சின்னம் கட்டிய Shah jahan ன் தாய் பிறவியில் ஒரு இந்து. அவர் சாதி கொடுமையால்தான் முஸ்லிமாக மாறினாரா?....... இப்படி கட்டாய மதமாற்றம் செய்து விட்டு சாதிதான் காரணம் என்று பொய் சொல்லக் கூடாது. அன்பரே நண்பரே!//

அரச வாழ்வுக்கு மயங்கியும் மாறியிருக்கலாம். அதனை அந்த தாயின் உள் மனதே அறியும். நானோ நீங்களோ எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்? மொகலாயர் காலத்தில் வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டிருந்தால் அதன் பிறகு வந்த வெள்ளையர்களின் ஆட்சிலோ, அல்லது தற்போது நடந்து வரும் இந்துத்வா ஆட்சியிலோ தாய் மதம் திரும்பி விட வேண்டியதுதானே! ஏன் வருவதில்லை என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.

//2. மும்தாஜ் Shahjahan ன் மனைவியாக 1612 ல் ஆகி 1631 ல் இறந்தாள். அவளது 19 வருட திருமண வாழ்க்கையில் 14 குழந்தைகளை பெற்றெடுத்தாள். 14 வது குழந்தை பெற்றதுமே இறந்து விட்டாள். (இல்லையென்றால் இன்னும் பல குழந்தைகளை பெற்றிருப்பாள் அந்த மக்களைப் பெற்ற மகராசி) போதுமா இவ்வளவு குழந்தைகள்? பரம திருப்திதானே திரு. சுவனபிரியன்?//

14 குழந்தைகள் என்பது அந்த காலத்தில் சர்வ சாதாரணம். அதற்கு ஏற்ற பொருளாதார வசதி சாஜஹானிடம் இருந்தது. நூறு வருடங்களுக்கு முன்பு இந்துக்களில் கூட 8 குழந்தை, 10 குழந்தை பெற்ற தாய்மார்களை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். தற்போது அனைத்து மக்களிடத்திலும் குழந்தை பெற்றுக் கொள்வது கணிசமாக குறைந்து விட்டது.




suvanappiriyan said...

ஹானஸ்ட் மேன்!

//i ) முஸ்லிம்கள் Pork சாப்பிடகூடாது என்று அல்லா கூறியிருக்க ஜின்னா wine & PORK ஆகியவற்றை சாப்பிட்டு அல்லாவை அவமதித்தார். அப்படிப்பட்ட ஜின்னாவின் முஸ்லிம் லீகை முஸ்லிம்கள் ஏன் பின்பற்றினார்கள்? நாட்டை துண்டாடினர்?//

பாகிஸ்தானை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். எனவே ஜின்னாவை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஆதரிக்கவில்லை. அடுத்து அவர் ஒரு ஷியா பிரிவு முஸ்லிம். மார்க்க பற்று அறவே இல்லாதவர். அவர் பின்னால் எப்படி முஸ்லிம்கள போக முடியும்? நாடு பிரிவினைக்கு காங்கிரஸும், சில இந்துத்வா தலைவர்களும், முஸ்லிம் லீக்கும் காரணம். இந்த மூன்று பேரும் பிரிவினையில் பங்கு வகுத்திருக்க முஸ்லிம் லீக்கை மட்டும் குறை காணக் கூடாதல்லவா? மேலும் இஸ்லாமிய துரோகி ஜின்னா என்றால் மிகையாகாது.

//ii )Surah 5.33 ல் “இறைநிராகரிப்பளர்கள் கொலை செய்யப்படவேண்டும் அல்லது கை கால்களை துண்டிக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளதே. அது உண்மைதானே? இது சரியா? நியாயமா? தர்மமா?அடுக்குமா?//

'கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால் மாறு கை வெட்டப்படுவது அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே இறைவனுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் தண்டனை. அவர்களுக்கு மறுமையில்' கடும் வேதனை உள்ளது.'

குர்ஆன் 5:33

ஏக இறைவனை வணங்குங்கள்: மதுவை விட்டொழியுங்கள்: பெண் குழந்தைகளை வறுமைக்கு பயந்து கொல்லாதீர்கள்: மனிதர்களில் ஏற்றத் தாழ்வு கிடையாது: எல்லோரும் ஒருதாய் மக்கள்' என்று சொன்ன காரணத்திற்காக சொந்த வீட்டை விட்டு முகமது நபியையும் அவரது தோழர்களையும் விரட்டினார்கள். மதினா சென்று அங்கு ஒரு அரசை நிறுவினார்கள். அங்கும் படை திரட்டிக் கொண்டு முகமது நபியையும், முஸ்லிம்களையும் ஒழிக்க வேண்டும் என்று படை திரட்டி வந்த அந்த எதிரிகளைப் பார்த்து சொல்லப்பட்ட வசனம் இது. முகமது நபி ஆட்சியில் கிறித்தவர்களும், யூதர்களும், சிலை வணங்கிகளும் சுதந்திரமாகவே வாழ்ந்தனர்.

தன்னை அழிக்க வரும் ஒரு கூட்டத்தைப் பார்த்து வேறு என்ன வார்த்தைகளை உபயோகப்படுத்த முடியும். பாரதப் போரிலும் இதே போன்ற வசனங்களை நான் எடுத்து தரட்டுமா!

//iii )”பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கபட்டுள்ளேன்” என்று நபி பெருமைபட்டார் (ஆதாரம் புகாரி 4:52.200) நபி பெருமைப்பட்ட அந்த பயங்கரவாதம்தானே இன்று உலகம் முழுவதும் தலை விரித்தாடுகிறது?//

இப்படி ஒரு வாக்கியத்தோடு ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸை நான் பார்க்க முடியவில்லை. அறிவிப்பாளர் தொடர், வால்யூம் எண் முதற்கொண்டு தெளிவாக கொடுங்கள். பிறகு அதன் விளக்கத்தைப் பார்ப்போம்.


suvanappiriyan said...

ஹானஸ்ட் மேன்!

//iv ) இறைநம்பிக்கை கொண்ட ஓர் “”அடிமையை”" விடுதலை செய்யவேண்டும். (4:92.93) கடவுளால் படைக்கப்பட்ட அனைவரும் சமம் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் “”அடிமை”" என்பது யார்? சகோதரத்துவம் எங்கே?எங்கே?எங்கே?//

ஏற்கெனவே உலகம் முழுவதும் அடிமை வியாபாரம் கொடி கட்டிப் பறந்தது. நமது தமிழகத்திலும் இருந்தது. முகமது நபி இஸ்லாத்தை கொண்டு வந்தவுடன் குற்றத்திற்கு பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்யச் சொன்னார். சில ஆண்டுகளிலேயே முற்றிலுமாக அரேபியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. நன்மையைக் கருதி தாங்களாகவே முன் வந்து பலர் அடிமைகளை விடுதலை செய்தனர். எழுதப்படிக்கத் தெரியாத ஒருவருக்கு எழுதப்படிக்க ஒரு அடிமை கற்றுக் கொடுத்தால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று பல புரட்சி திட்டங்கள் மூலம் அடிமை முறை முழுவதுமாக ஒழிக்கப்பட்டது. அதைத்தான் இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது.

//v ) மூசாவிடம் இறைநிராகரிப்பாளர்கள் “”அல்லாவை எங்களுக்கு வெளிப்படையாக காட்டுவீராக!” என்றனர். இவ்வாறு அவர்கள் “”அக்கிரமாக”" நடந்து கொண்டதால் திடிரென ஒரு பேரிடி தாக்கியது. (ஆதாரம் 4:153.162) அல்லாவை நேரடியாக காட்டு என்றுதானே கேட்டனர்? அது ஒரு “”அக்கிரமமான”" செயலா? அந்த பேரிடியை அனுப்பிய அல்லாவே அதற்கு பதிலாக நேரில் வந்து காட்சி தந்திருக்கலாமே//

அவனை பார்ககும் சக்தி நமது கண்களுக்கு கிடையாது. அத்தனை ஆற்றல் உடைய சூப்பர் பவரானவன் நமது இறைவன். அதற்கு முன்பே அவர்களுக்கு இறைவனின் வல்லமையை ஆதாரமாக காட்டப்பட்டது. அதன் பிறகும் இவ்வாறு கேட்டதால்தான் இறைவன் கோபமுற்றான்.

இந்து மத வேதங்களிலும் இறைவனை நமது கண்களால் பார்க்க முடியாது என்ற வசனங்களை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா!

//vi )திண்ணமாக நாம் “”தவ்ராத்”"தை இறக்கினோம்.அதில் யூதர்கள் மீது உயிருக்கு பதில் உயிரும் கண்ணுக்கு பதில் கண்ணும் மூக்குக்கு பதில் மூக்கும் காதுக்கு பதில் காதும் பல்லுக்கு பதில் பல்லும் பழி வாங்கப்படும் என்று நாம் விதியாக்கினோம் (ஆதாரம்: 4:44.45) இதற்கு பெயர் அமைதி மதமா? யூதர்களை கொன்று குவித்த இட்லெர் ஒரு கொடியவன் என்றால் அதே யூதர்களை பழிவாங்க சொல்லும் அல்லாவும் அவரது தொண்டர்களும் மிக மிக மிக மிக மிக நல்லவர்களா? இது என்ன சார் நியாயம்?//

சவுதி அரேபியாவையுமம் நமது நாட்டையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். சவுதியில் 'கண்ணுக்கு கண்' என்ற சட்டம் பின் பற்றப்படுவதால் தைரியமாக வெளியில் செல்ல முடிகிறது. நமது நாட்டில் இவ்வாறு உயிருக்கு உத்தரவாதம் தர முடியுமா? வெளியில் சென்றால் இரவு வீடு திரும்பினால்தான் நிச்சயம். மக்களை பாதுகாக்காத இந்த சட்டத்தினால் என்ன பயன்? அரபு நாட்டு சட்டங்களே இந்தியாவுக்கு தேவை என்று உங்கள் தலைவர் எல் கே அத்வானி முன்பு கூறியதை மறந்து விட்டீர்களா?

suvanappiriyan said...

ஹானஸ்ட் மேன்!

//vii )நாம் “”"ஒவ்வொரு”" சமூகத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினோம் (16:35.37) அராபிய சமூகத்திற்கு ஒரு நபியை அனுப்பினீர்கள். OK இங்குள்ள இந்து சமூகத்தினர் ஏன் அராபிய சமூகத்தை சேர்ந்த நபியை பின்பற்றவேண்டும்?//

'உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்'

-குர்ஆன் 4:79

மற்ற மொழிகளுக்கு தனித்தனி தூதர்களை அனுப்பிய இறைவன் கடைசி நபியாக முகமது நபியை உலக மக்கள் அனைவருக்குமாக அனுப்புகிறான். இனி இறைத் தூதர் வர மாட்டார். இவரே 'முத்திரை நபி' என்று குர்ஆன் கூறுவதால் இந்தியர்களாகிய நமக்கும் இவரே நபி.

// எங்க இந்து சமூகத்திற்கு என்று ஒரு தூதரை அவர் அனுப்பி இருப்பாரில்லையா? அவர் வழியை நாங்கள் பின்பற்றிவிட்டு போகிறோம்.//

கண்டிப்பாக இந்தியாவுக்கும் தூதர் வந்திருக்கிறார். அவர் திருவள்ளுவரா, கிருஷ்ணனா, ராமனா அல்லது சித்தர்களா என்பது எனக்கும் தெரியாது உங்களுக்கும் தெரியாது. யாரைப் பின்பற்றுவது? எனவே தற்போது இறை வேதம் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட முகமது நபியே நமது நாட்டுக்கும் தூதுவராவார்.

அல்லது உங்கள் வேதத்தின் மூலம் இவர்தான் இந்தியாவுக்கு அனுப்பட்ட இறைத் தூதர் என்ற ஆதாரத்தை கொண்டு வாருங்கள். இதை செய்து விட்டால் இந்தியாவில் பல குழப்பங்கள் தீர வழியுண்டு. ஆதாரத்தைக் கொண்டு வருவீர்களா?

Unknown said...

//மதசார்பற்ற அரசு எப்படி செயல்பட வேண்டும்?

பல மக்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூக சூழ்நிலையில் அந்த மக்களின் மத சடங்குகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் எந்த ஒரு மதத்தையும் சாராமல் செயல்படும் ஒரு அரசே மதசார்பற்ற அரசாக இருக்க முடியும்.//

அற்புதம், அதுபோல மதச்சார்பற்ற நாட்டில் வாழும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் மத மாற்றம் செய்து அந்த நாட்டை மொத்தமாக தனது மதத்தை பின்பற்றும் நாடாக மாற்றி அதை ஒரு மதவாத நாடாக மாற்றாமல் இருப்பது அந்த நாட்டின் குடி மக்களின் கடமை, அதுவே ஒரு மத சார்பற்ற நாட்டில் வாழும் யோக்கிய குடிமகனின் கடமை, ஆனால் உங்கள் கூட்டத்திடம் அதை எதிர் பார்க்க முடியாதே. பிறகு அவர்களிடம் நீதியை எதற்கு நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள். 'ரோமுக்கு சென்றால் ரோமனியனாக இருக்க வேண்டும் தெரியுமா . உங்கள் கூட்டம் செல்லும் எந்த நாடு அமைதியாக இருந்திருக்கிறது. எந்த நாட்டுக்கு சென்றாலும் அதை அல்லாவின் தேசமாக மாற்ற வேண்டும் என்று செயல்பட்டால் இப்படிதான் இருக்கும். உங்கள் கூட்டம் கால் வைக்கும் இடம் ஓன்று தரித்திர பாலைவன பூமியாகும், அல்லது சண்டை சச்சரவுடன் ரத்த பூமியாகும். பூமியில் இப்படியும் ஒரு இனம்

ஆனந்த் சாகர் said...

@ சுவனப்பிரியன்,

//கண்டிப்பாக இந்தியாவுக்கும் தூதர் வந்திருக்கிறார். அவர் திருவள்ளுவரா, கிருஷ்ணனா, ராமனா அல்லது சித்தர்களா என்பது எனக்கும் தெரியாது உங்களுக்கும் தெரியாது. யாரைப் பின்பற்றுவது? எனவே தற்போது இறை வேதம் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட முகமது நபியே நமது நாட்டுக்கும் தூதுவராவார்.//

கடவுள் (அல்லாஹ்/யாஹ்வே/அஹுரா மஸ்தா) தூதர்களை/தீர்க்கதரிசிகளை வழிகாட்டிகளாக மனிதர்களுக்கு அனுப்பினார் என்பது சுத்த பொய். இப்படி கூறுகிற இஸ்லாம், யூதம், கிறிஸ்தவம், ஜோரோஷ்டிரம் என்ற மதங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய மனித கற்பனை மதங்கள். கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்ற கருத்து முதன் முதலில் ஜோரோஷ்டிர மதத்தில் தான் உருவாக்கப்பட்டது. பிறகு அந்த நம்பிக்கை யூதர்களால் கடன்வாங்கப்பட்டு அவர்களுடைய வேத புத்தகங்களில் நுழைக்கப்பட்டது. இந்த நம்பிக்கையையை யூதரான ஏசுவும் அவருடைய சிஷ்யர்களும் கொண்டிருந்தனர். முஹம்மதுவும் இந்த பொய்யை தன்னுடைய சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டு தன்னை அல்லாஹ்வின் தூதரென்று பறைசாற்றிக்கொண்டார்.

மனிதர்களுக்கு தனியாக கடவுளுடைய தூதரென்று வழிகாட்டி என்று எவரும் தேவையில்லை. ஒவ்வொரு மனிதரும் தனக்கு தானே கடவுளுடைய தூதர்(ரசூல்)/தீர்க்கதரிசி(நபி) ஆவார்.
(Be a Prophet unto yourself)