Followers

Thursday, November 14, 2013

ஆணவம் அழித்தல் - தாயுமானவர்



1400 வருடங்களுக்கு முன்பு அரபுலகம் பல தெய்வ வழிபாட்டிலும், சாதி வெறியிலும் மிகைத்திருந்த போது தமிழ் நாட்டில் நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மிக உயர்ந்த இடத்திலேயே இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சில பாடல்களை பார்த்து வருகிறோம்....

நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந்
தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ.


எனக்குள் குடி கொண்ட 'நான்' என்ற அகங்காரம், ஆணவம் போன்ற துர் குணங்கள் நான் அறியாமல் என்னை விட்டு அகல வேண்டும்: அவ்வாறு நீங்கியவுடன் எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகங்களுக்கும் தனது அருளை நீக்கமற செலுத்தி வரும் பரம் பொருளான அந்த இறைவனை காணும் நாள் எந்நாளோ?

தாயுமானவர் பாடல்கள் 636:7

இறைவனைக் காண வேண்டும்: அவ்வாறு காணும் நேரம் எனக்குள் இருக்கும் அகந்தை அகம்பாவம் அகங்காரம் அனைத்தும் நான் அறியாமலேயே என்னை விட்டு நீங்கி விட வேண்டும் என்கிறார் தாயுமானவர். எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற இறைவனுக்கு முன்னால் அற்ப மனிதனாகிய நான் எதற்கு அகங்காரம் கொண்டு அலைய வேண்டும் என்று கேட்கிறார் தாயுமானவர்.

ஆணவம்,அகங்காரம், கர்வம் பற்றி குர்ஆன் கூறும் கருத்தையும் பார்ப்போம்.

மலைகளின் உயரத்தை அடையவே முடியாது!

'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.'

17 : 37 - குர்ஆன்

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ராக்கெட் தொழில் நுட்பத்தால் பூமிக்கு அப்பாலும் மனிதனின் அறிவு விரிகிறது. இன்னும் ஒரு இருபது வருடங்களில் ஏற்படப் போகும் மாற்றங்களை இப்பொழுதே நம்மால் கணித்து விட முடிகிறது. ஆனால் சில விஷயங்களில் உன்னால் முடியாது என்று இறைவன் சவால் விட்டு சில விபரங்களை குர்ஆனில் ஆங்காங்கே கோடிட்டு காட்டுகிறான். அது போன்ற சவால் விடும் வசனங்களில் ஒன்று தான் நாம் மேலே பார்த்தது.

மனிதன் இன்று வரை பூமியின் கீழ் துளையிட்டு அதிக தூரம் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக அவன் சென்ற தூரம் முன்று கிலோ மீட்டர் மட்டுமே! இதற்கு மேலும் துளையிட்டு மனிதன் அங்கு செல்ல முடியாது. சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கைவிரித்துவிட்டனர்.

மலைகளின் உயரத்தை....

உலகின் மிக உயரமான மலை இமய மலை ஆகும். இம் மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இமய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட்டான். ஆனால் அந்த உயரத்திற்கு பூமியை துளையிட்டு மனிதனால் செல்ல முடியுமா என்றால் முடியாது என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. வலைப் பக்கத்திலேயே ஒரு சிலர் இறைவனை விட மனிதன் சக்தி படைத்தவன் என்று நாத்திக வாதம் பேசுவதைப் பார்க்கிறோம். அப்படிப் பட்டவர்களைப் பார்த்து இறைவன், 'இது போன்று ஆணவத்தில் பிதற்றி திரியாதே! உன்னால் பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அளவை அடையவே முடியாது' என்று எச்சரிக்கின்றான்.

விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற குர்ஆன் பூமிக்கு அடியில் நீண்ட மலையின் உயரத்திற்கு போக முடியாது என்று அடித்துச் சொல்கிறது.

தன் இனத்தை விட மற்ற இனம் தாழ்ந்தது என்று இன்றும் எழுதியும் பேசியும் வருபவர்களைப் பார்க்கிறோம். அதேபோல் நான் பெரும் சிந்தனையாளன், நான் இந்த நாட்டின் அதிபதி, நான் பெரும் கோடீஸ்வரன் என்றெல்லாம் இறுமாப்போடு உலகில் வலம் வருவோரையும் இன்றும் பார்க்கிறோம். இது போன்ற எண்ணம் கொண்டவர்களை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட குர்ஆனிய வசனம் அமைந்துள்ளது.

நீ வானத்துக்கு மேலே போகலாம், கணிணித் துறையினால் உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வரலாம். ஆனால் உன் காலுக்கு கீழே இருக்கும் பூமியை பிளந்து மலைகளின் உயரத்தை அடைய முடியுமா என்றால் முடியாது. எனவே வீண் பெருமை பேசி கர்வத்துடன் உலகில் நடக்காதே என்பது இதன் மூலம் நமக்கு கிடைக்கும் பாடம். அதே போல் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு சொன்ன இந்த கருத்து இன்றும் இனி என்றும் மெய்ப்பிக்கப் படுவதால் இது நம்மைப்படைத்த இறைவனின் வார்த்தைதான் என்ற முடிவுக்கும் வருகிறோம்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

2 comments:

Anonymous said...

//மதப்பிரிவினைவாதம் என்று அழைக்கப்படும் அந்த ஒன்றால், இந்த நாட்டில் நாம் பட்டதெல்லாம் போதும்; கசப்பும் விஷத்தன்மையும் கொண்ட அதன் கனிகளை நாம் சுவைத்திருக்கிறோம். இந்த மதவாத உணர்வு எங்கும் ஊடுருவுவதை நான் விரும்ப மாட்டேன். அதிலும் கல்வி நிறுவனங்களில் ஊடுருவுவதை அடியோடு விரும்ப மாட்டேன். கல்வி என்பது மனிதர்களை எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டியதே அன்றி, கூண்டுக்குள் போட்டு அடைத்துவைப்பதற்கானது அல்ல. வாரணாசிப் பல்கலைக்கழகம், இந்துப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதை நான் எப்படி விரும்பவில்லையோ அதேபோல் இந்தப் பல்கலைக்கழகம் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. இதனால், ஒரு பல்கலைக்கழகம் என்பது குறிப்பிட்ட கலாச்சாரத் துறைகளிலோ ஆய்வுகளிலோ தனிக்கவனம் செலுத்தக் கூடாது என்றில்லை. இஸ்லாமியச் சிந்தனை, கலாச்சாரம் போன்றவற்றின் சில அம்சங்களுக்கு இந்தப் பல்கலைக்கழகம் சிறப்புக் கவனம் செலுத்துவது சரிதான் என்றே நான் நினைக்கிறேன். //

-----1948, ஜனவரி, 24-ம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேரு ஆற்றிய உரை.

http://tamil.thehindu.com/opinion/columns/இந்தியாவில்-எல்லாருக்கும்-இடம்-இருக்கிறது/article5348487.ece

Anonymous said...

இந்தியன் முஜாஹிதீனுக்கு நிதியுதவி அளிப்பது பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்ஸின் நீண்ட கால உறுப்பினர் சங்கர் சிங் வகேலாவின் அதிர்ச்சி தகவல்

அஹ்மதாபாத்:இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்புக்கு நிதியுதவி அளிப்பது பா.ஜ.க என்று குஜராத் எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.இந்தியன் முஜாஹிதீனின் செயல்பாடு பா.ஜ.கவின் செயல்பாட்டிற்கு இணையானது என்று செய்தியாளர்களிடம் வகேலா தெரிவித்தார்.

காதியானிகளுக்கு நிதியுதவி அளித்து ஆர்.எஸ்.எஸ் அவர்களை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துகிறது.காதியானிகள் இஸ்லாமிய கடமைகளைபின்பற்றினாலும் முஸ்லிம்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை.ஆகையால் முஸ்லிம் எதிர்ப்பாளர்களாக மாறிய இவர்களை பா.ஜ.க பயன்படுத்துகிறது என்று வகேலா தெரிவித்தார்.

ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸில் தீவிரமாக பணியாற்றியவர் வகேலா. மேலும் அவர் கூறியது:புத்தகயா, பாட்னா குண்டுவெடிப்புகளில் குஜராத்தொடர்பை குறித்து விசாரணை நடத்தவேண்டும்.குண்டுவெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது குஜராத்தின் ஹாலோல்-காலோலில் என்பது தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வாட்ச், குஜராத்தில் உள்ள மோர்பியில் தயாரிக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட பைகள்,குஜராத்தில் ஹாலோலில் தயாரிக்கப்பட்டதாகும்.

இதில் இருந்து குண்டுவெடிப்பிற்குசதித்திட்டம் தீட்டப்பட்டது குஜராத்தில் தான் என்பது தெரியவருகிறது. அவ்வாறெனில் குஜராத் போலீஸ் என்னச் செய்தது? இதர மாநிலங்களில் இருந்து மோடியை கொல்ல வரும் தீவிரவாதிகளை(?) கண்டுபிடிக்கும் குஜராத் போலீசுக்கு, சொந்த மாநிலத்தில் நடக்கும் சதித்திட்டம் குறித்து எதுவும் தெரியாது என்று சங்கர்சிங் வகேலா கிண்டலாக தெரிவித்தார்.

அவ்வாறெனில் இது குஜராத் போலீசின் வேலையா? என்பது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அஹ்மதாபாத் மாவட்ட மருத்துவமனை, எல்.ஜி மருத்துவமனை ஆகியவற்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவின் கரங்கள் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். அன்றைய குண்டுவெடிப்புகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை உள்ளது? என்று வகேலாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு சங்கர்சிங் வகேலா பதிலளிக்கையில்,’நான் நீண்ட காலம் அவர்களுடன் இருந்துள்ளேன்.எனக்கு அவர்களை நன்றாக தெரியும்.அவர்களின் கொள்கைகளையும் தெரியும்.’ என்று தெரிவித்தார்.

கோத்ரா முதல் பாட்னா குண்டுவெடிப்பு வரை அதன் பின்னணியில் இருப்பது பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸுமாகும்.வாக்கு வங்கி அரசியலுக்காக பா.ஜ.க நாட்டை துண்டாடுகிறது.இவ்வாறு வகேலா கூறினார்.
— with Govindaraj Kumar