Followers

Saturday, November 28, 2015

மாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நவம்பர் 26!



இந்து மதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தவர்தான் ஹேமந்த் கர்கரே! தனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அராஜகங்களை கண்டு பொறுக்காமல் உண்மையான காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஹேமந்த் கர்கரே! மாலேகான் குண்டு வெடிப்பு, முதல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வரை உண்மை குற்றவாளிகள் யார் என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்தவர். சாது பிரக்யாசிங், பார்பனரான புரோகித், அசீமானந்தா என்று வரிசையாக கைதுகளை தைரியமாக செய்து காட்டியவர்.

'நான் இந்து மதத்தை நேசிப்பவன்: எனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் கொடுமைகளை நான் எப்படி காணாதிருக்க முடியும். இந்துத்வாவாதிகளிடமிருந்து எனக்கு கொலை மிரட்டலும் வருகிறது' என்று பேட்டி கொடுத்த சில நாட்களிலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார்.

நவம்பர் 26 ஆம் தேதி திட்டமிட்டு பாவிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தானிய தீவிரவாதிகள்தான் கொன்றனர் என்று செய்தியை திரித்து வெளியிட்டனர். அஜ்மல் கசாபுக்கும் ஹேமந்த் கர்கரேக்கும் வாய்க்கா வரப்பு சண்டையா என்ன? அவரை மட்டும் குறி பார்த்து சுடுவதற்கு என்ன காரணம்? சுடப்பட்ட அந்த இடத்துக்கு அவரை கூட்டி சென்றது யார்? பாதுகாப்பு கவசம் அணிந்திருந்த நிலையிலும் அவரது உயிர் பிரிந்தது எவ்வாறு என்பது இதுவரை விடை தெரியாத கேள்வி. சில மணி நேரங்களிலேயே அவரது கவச உடையும் மாயமானது: இதை எல்லாம் நன்கு அறிந்திருந்த இவரது மனைவி மோடி கொடுத்த பண முடிப்பையும் வாங்க மறுத்து விட்டார்.

நம் வாழ் நாளிலேயே மிகச் சிறந்த தேச பக்தரை இழந்து விட்டோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் தந்தருள்வானாக!

4 comments:

ASHAK SJ said...

சுதந்திர போரில் பங்கு கொள்ளாத , காட்டியும் கூடியும் கொடுத்த ஆர் எஸ் எஸ் சங்கபரிவார் கூட்டம் செய்த குண்டுவெடிப்புகளை அம்பலபடுத்த இருந்த தருணத்தில் தான் கோழைகளால் மாவீரன் ஹேமந்த் சுட்டு கொல்லபட்டார் , பாகிஸ்தான் தீவிரவாதி மும்பை உள் வரும் வரை கடற்படை எவன் மனைவியின் பாவாடைக்கு நாடா கோத்து கொண்டிருந்தது என்று அன்புராஜ் போன்றோர் அடுத்து விளக்கம் கொடுப்பார்கள்

suvanappiriyan said...

bro ashak s!

அதிலும் அவர்கள் நுழைய தேர்ந்தெடுத்த இடம் குஜராத். அப்போதைய குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி....

Dr.Anburaj said...

நீண்ட நெடிய இந்திய கடற்கரையில் அடிக்கு ஒரு ராணுவ வீரனையா நியமிக்க முடியும் ?
முட்டாளே !அரேபிய மத வாதிகளின் பாா்வை இப்படி வக்கிரமாகத்தான்ன இருக்கும்.பாக்கிஸ்தான் என்ற அரேபிய மத நாட்டிலிருந்து அரசின் ஆதரவோடு இந்த காடையன் நாட்டின் ராணுவத்தில் பயிற்சி பெற்று ஏதோ ஒரு தந்திரம் செய்து நமது நாட்டிற்குள் நுழைவது ஒன்றும் பொிய பிரச்சனை அல்ல. ஒரு மனிதனுக்கு இசுலாம் என்ற மதம் பிடித்தால் அவர்கள்எவ்வளவு கொடுரமாக மாறுகின்றான் என்பதற்கு மும்பை கோவை பாரீஸ் பயங்கரவாத படுகொலைகள் பல உதாரணம். இப்படி ஏன் நடக்கின்றது ? குரான் படித்து தொளுகை நிறைவே்ற்றுகின்ற ஒரு மனிதனுக்குள் இவ்வளவு அரக்கத்தனம் ஏன் வந்தது? எப்படி ஏற்றப்பட்டது ? எங்கு கோளாறு என்று யோசி. சதா ஆா்எஸ் எஸ என்று உளறாதே.

ASHAK SJ said...

அடிக்கொரு ராணுவ வீரனை நிறுத்தவேண்டாம் மூடனே , ஆனால் ஒரு படகு எதிரி நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் வரை கப்பற்படை என்ன செய்தது ,
1. ஹேமந்த கர்க்க்றேயின் புல்லட் ஜாக்கட் எங்கே
2. முஸ்லிம் தீவிரவாதிகள் ஏன் சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் 22 முஸ்லிம்களை சுட்டுகொன்றனர்
3. ரங்பவன் லேனில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று கொண்டிருக்கும் போது கூட இந்த 150 பேர் கொண்ட காவல்படை அங்கு அனுப்பி வைக்கப்படவில்லை?
இன்னும் நிறைய இருக்கு