Followers

Saturday, November 07, 2015

பிஜே இலங்கை வருவதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?



இந்த கூட்டம் எதற்காக இத்தனை ஆக்ரோஷத்துடன் பிஜே வருகைக்கு இலங்கையில் எதிர்ப்பு தெரிவிக்கிறது?

இஸ்லாமியரிடத்தில் இருந்த வரதட்சணை கொடுமையை துடைத்தெறிந்தாரே..... அதற்காகவா?

கமலுக்கு ரஜினிக்கும் ரசிகர் மன்றம் வைத்தவனை நபிகள் நாயகத்தை தலைவராக ஏற்றுக் கொள்ள வைத்தாரே.... அதற்காகவா?

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ரத்த தானத்தில் முதலிடத்தை பெற்றுள்ள தவ்ஹீத் ஜமாத்தை இன்று வரை கட்டிக் காத்து வருகிறாரே.... அதற்காகவா?

தமிழக இஸ்லாமியருக்கென்று ஒரு தனி தமிழ் நடை இருந்ததை உடைத்து மாற்று மதத்தவரும் குர்ஆனை எளிதில் விளங்கும்படி விளக்கவுரை எழுதியுள்ளாரே...... அதற்காகவா?

மந்திரம், தட்டு, தாயத்து என்று புரோகிதர்களால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்த இஸ்லாமியர்களை ஐந்து வேளை தொழுகையாளிகளாக மாற்றி குர்ஆனை கையில் எடுக்க வைத்துள்ளாரே..... அதற்காகவா?

கல்வி வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீதம் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்துள்ளாரே.... அதற்காகவா

நாகூர் தர்ஹா, ஏர்வாடி தர்ஹா என்று மன நிம்மதி இன்றி அலைந்து திரிந்த பல லட்சக்கணக்கான இஸ்லாமியரை ஐந்து வேளை தொழுகையாளிகளாக மாற்றி ஏகத்துவத்தின் பால் கொண்டு வந்துள்ளாரே.... அதற்காகவா?


இரண்டு எம் எல் ஏ சீட்டுக்கும் ஒரு எம் பி சீட்டுக்கும் தன் மானத்தை அடகு வைத்து கோபாலபுரத்திலும் போயஸ் தோட்டத்திலும் வீழ்ந்து கிடந்த நம் மக்களுக்கு உண்மையை விளக்கி திமுக அதிமுக தலைவர்களை அரண்மனைக் காரன் தெருவை நோக்கி வரவழைத்திருக்கிறாரே.... அதற்காகவா?

இந்தியா முழுக்க இந்துத்வா வளர்ந்து கொண்டிருக்க தமிழகத்தில் தேய்ந்து வருகிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி இந்து முஸ்லிம் முறுகல் நிலையை நீர்த்துப் பொகச் செய்துள்ளாரே..... அதற்காகவா?

காதியானிகள், கபுர் முட்டிகள், மத்ஹப் மாயையில் தவழும் சாதி வெறியர்கள் அனைவரையும் நேரடி விவாதத்துக்கு அழைத்து அனைவரையும் ஏகத்துவத்தின் பால் மண்டியிட வைத்துள்ளாரே.... அதற்காகவா?

எதற்காக எதிர்க்கிறீர்கள்? அதற்கான காரணத்தை சொல்லி விட்டு எதிர்க்க கிளம்புங்கள்..... உங்களின் இந்த எதிர்ப்பு ஏகத்துவத்தை மேலும் பலரிடம் கொண்டு சேர்க்கும். அதனை வருங்காலம் உணர்த்தும். இதனை நானும் நீங்களும் பார்க்கத்தான் போகிறோம் இறைவன் நாடினால்....

No comments: