Followers

Sunday, May 06, 2018

நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் நீடிக்க இதுவும் ஒரு காரணம்.

மதுக்கூரில் நடந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான தருணங்கள்.
அவதூறுகளை பரப்பிக் கொண்டு பாவத்தை சம்பாதிப்பவன் தினமும் சம்பாதித்துக் கொண்டுள்ளான்.
இந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தை புரிய வைத்து நன்மையை கொள்ளையடிக்கும் கூட்டம் தனது வழியில் அயராது உழைத்துக் கொண்டுள்ளது.
அவதூறு பரப்புபவர்களின் பொய்யுரை எங்களின் கால் செருப்புக்கு சமானம் என்றும் சொல்லி வைக்கிறோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
-----------------------------------------------------------------
பாஸிசவாதிகளின் தாக்குதலுக்கு பிறமதத்தினை கேலி செய்யாமல் இஸ்லாம் கூறும் மனித நேயத்தை பன்பாளர்கள் முன்பாக பக்குவமாக எடுத்துறைத்து சிலரின் கோப விமர்சனங்களுக்கும் புன்னுருவலோடு விளக்கம் தரும் இந்த நூற்றாண்டின் ஓர் அழகிய தலைமை என்றும் கூறலாம் மிகையாகாது.!
பாஸிஸத்தின் சிம்மசொப்பணம்.!
தமிழகத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக பாஸிஸத்தை வேறூன்றவிடாமல் தடுத்து நிற்கும் "இஸ்லாம் ஓர் இனிய மாரக்கம்" நிகழ்ச்சி.
கடந்த முப்பைத்தைந்து வருடங்களாக இஸ்லாம் குறித்த அவதூறுகள் குற்றச்சாட்டுகள் ஆட்சேபனைகளை நேருக்கு நேராக மக்களை அழைத்து ஆக்கப்பூர்வமாக அறிவுப்பூர்வமான முறையில் சந்திக்கும் ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
பாஸிஸத்தை அறிவால் வெல்ல
கற்றுக்கொடுத்தவர் பீஜே அரிவாளால் அல்ல!
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் நாடுகளிலும் களம் கண்டு வருகிறது.
அதன் ஒரு நீட்சியாக இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் பிற சமயத்தை சார்ந்தவர்களை அழைத்து அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான மாற்றுமத சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் நீடிக்க இதுவும் ஒரு காரணம்.



No comments: