Followers

Sunday, May 27, 2018

'தூய்மை இந்தியா'


.பி.,யில், பல மாவட்டங்களில், சுகாதாரத் துறையினரின் அலட்சியம் காரணமாக, அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் வார்டுகளில், தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக, நோயாளிகள் புகார் அளித்துள்ளனர். 


வார்டுகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள படுக்கைகளின் அடியில், நாய்கள் படுத்து கிடப்பதும், நோயாளிகளின் உணவுகளை தின்பதும் வாடிக்கையாகி விட்டதாக, அவர்கள் குற்றம்சாட்டினர். இது, நோயாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி, மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் அளித்தால், 'நீங்களே அந்த நாய்களை துரத்தி விடவேண்டியது தானே... எங்களிடம் ஏன் புகார் அளிக்கிறீர்கள்' என பதிலளிப்பதாக, நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


தினமலர்
28-05-2018

'தூய்மை இந்தியா' என்று மோடி வாய் கிழிய கத்துவதன் பொருள் இதுதானோ!


No comments: