Followers

Wednesday, October 02, 2013

மோடியின் 'வேதம் புதிது' - கார்ட்டூன்!

மோடியின் 'வேதம் புதிது' - கார்ட்டூன்!

'ஊழல் வழக்கில் பல வருட விசாரணைக்குப் பிறகு லல்லு பிரசாத் கைது பண்ணப் பட்டு சிறையில் அடைப்பு' - பத்திரிக்கை செய்தி!


லல்லு பிரசாத்: 'நான் கரையேறிட்டேன். நீங்க இன்னும் கரையேறாமலே நிக்கறேளே!'

-------------------------------------------------------



1 comment:

Anonymous said...

சென்னை : சென்னை மந்தைவெளி 6வது டிரஸ்ட் குறுக்கு தெருவில் நடிகர் எஸ்.வி.சேகர் வசித்து வருகிறார். இவர் ‘மகாபாரதத்தில் மங்காத்தா’ என்ற தலைப்பில் நாடகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்து அமைப்பினர் மகாபாரதத்தை கொச்சைப்படுத்துவதாக கூறி எஸ்.வி.சேகர் மீது ஆத்திரமடைந்தனர். இதை கண்டித்து, சென்னை முழுவதும் எஸ்.வி.சேகரை தரக்குறைவாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இது குறித்து அப்போது எஸ்.வி.சேகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதில் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.15 மணிக்கு எஸ்.வி.சேகர் செல்போனில் பேசிய மர்ம நபர் இங்கு இருந்து ஓடி விடு இல்லை என்றால், கொலை செய்து விடுவோம் என்று பேசி இணைப்பை துண்டித்து விட்டார். மேலும் இதேபோல், இரவு முழுவதும் தொடர்ந்து 8 செல்போன் நம்பர்களில் இருந்து மிரட்டியுள்ளனர்.

இது குறித்து எஸ்.வி. சேகர் நேற்று பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் எஸ்.வி. சேகரின் செல்போனுக்கு வந்த எண்களை வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த தொடர் கொலை மிரட்டலால் எஸ்.வி. சேகருக்கும், அவரது வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=64301