Followers

Monday, October 21, 2013

பிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பலின் பின்னணி?





தமிழகத்திற்குள் அத்து மீறி ஊடுருவிய பயங்கர அமெரிக்க ஆயுதக் கப்பல்!

சென்ற வாரம் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று இந்தியாவிற்குள் அத்து மீறி..!? உள்ளே நுழைந்தது. அது தமிழகத்தின் முக்கியத் துறைப் பகுதியாகிய தூத்துக்குடி அருகே தமிழக பாதுகாப்புப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டு கப்பலில் இருந்த 35 ஊழியர்களில் 33 பேர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். கப்பல் பராமரிப்பு பணிக்காக அதன் கேப்டன் மற்றும் தலைமை பொறியாளர் சிறையில் அடைக்கப் படவில்லை.

ஆனால் அவர்கள் இருவரும் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கப்பல் கேப்டன் மீண்டும் சிறைக்குள் தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது அமெரிக்காவின் சாதாரண கப்பல் அல்ல உலகில் பேரழிவை நிகழ்த்தி வரும் ஆயுதக் கப்பலாகும். தெரியாமல் இந்தியாவிற்குள் நுழைந்தால் உலகில் தன்னை "பெரிய அண்ணனாக " காட்டிக் கொள்ளும் அமெரிக்க ராணுவம் உடனே தலையிட்டு சரி செய்து விடுமே.

மாட்டிக் கொண்டால் உடனே தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தையும் இலங்கையையும் நடுங்கச் செய்த எல் டி டி யினரின் சிறப்பம்சம். எல் டி டி யினர் தற்கொலை செய்து கொள்வதற்கு சயனைடை பயன்படுத்தினர்.அதனை நாக்கில் தடவினாலே உடனே மரணம் தான். செத்துவிட்டால் எந்த கொம்பனாலும் பிணத்திடம் விசாரணை செய்ய இயலாது.அவன் எத்தனை பேரை கொன்றிருந்தாலும் செத்தவன் மேல் வழக்குப் பதிவு செய்ய மாட்டார்கள். எனவே கழுத்தில் சயனைடு குப்பியுடன் தான் அவர்களது பணியே ஆரம்பிக்கும்.

கேப்டனும், சீப் என்ஜீனியரும் எதற்கு தற்கொலை செய்து கொள்ள முயல வேண்டும்? அமெரிக்க ஆயுதம் தாங்கிய கப்பல் இந்தியாவிற்குள் ஊடுருவியதை பரபரப்பு செய்தியாகவோ அல்லது குறைந்த பட்சம் முக்கிய செய்தியாகக் கூட நடுநிலை நாளேடுகள் என்று பீற்றிக் கொள்ளும் ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மிக சாதாரண செய்தியாக வெளியிடுகிறது.

இதுவே உண்மையிலேயே தவறுதலாக இலங்கை, பாகிஸ்தான், அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கப்பல் நுழைந்து இருந்தால் நடுநிலை நாளேடுகள் என்று பொய் சொல்லும் கோயபல்ஸ் ஊடகங்களின் செய்திகள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.தூத்துக்குடி பகுதியில் பரவலாக மக்களுக்கு தெரிந்து விட்டதால் தான் இந்த செய்தியை கூட வெளியிட்டுள்ளது. இதுவே மற்ற மாநிலமாக இருந்திருந்தால் இந்த தகவலைக் கூட வெளியிட்டு இருக்காது. பொய் தேச பக்தி நாடகமாடும் ஊடகங்கள். மாதக் கடைசிகளில் அமெரிக்க தூதரகத்தில் அது போடும் எலும்புத் துண்டுகளுக்காக காத்துக் கிடக்கும் பயங்கரவாத ஊடகங்களின் செய்திகளை இனி நம்பலாமா..?

அமெரிக்க ஆயுதக் கப்பலில் எந்தவிதமான ஆயுதங்கள் இருந்தன? யாரை அழிக்க கொண்டு வரப்பட்டன? அதற்கு இந்தியாவில் பயங்கரவாத ஏஜெண்ட் யார்? தேர்தலை எதிர்பார்த்து எப்படி மக்களை ஏமாற்றலாம் என்ற சிந்தனையில் அரசியல்வாதிகளின் மற்றும் ,பயங்கரவாத ஊடகங்களின் கவனங்கள் இருப்பதால், உளவுத்துறை தான் நாட்டின் நலன் கருதி உண்மையை கண்டு பிடித்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும்; உளவுத் துறையாவது செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி: அன்பு செல்வன்

2 comments:

Anonymous said...

திருவாரூர்: முத்துப்பேட்டை, ஜாம்பவான்ஓடை, வயிரவன்சோலை என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று கிடைத்த தகவலின் பேரி்ல் முத்துப்பேட்டை போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து, நாட்டு வெடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரண்டரை கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜெயபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=825952

Anonymous said...

பாகிஸ்தான் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.நரேந்திரமோடி பிரதமராக வரவேண்டும்

-பா.ஜ.க செய்தி தொடர்பாளர் மீனாட்சி லெகி

பாகிஸ்தானில் உள்ள இந்துத்வா ஆட்களின் சதி வேலையாகக் கூட தற்போதய பாகிஸ்தானின் தாக்குதல்கள் இருக்கலாம். உளவுத் துறை இந்த ரீதியிலும் விசாரணையை முடுக்கி விட வேண்டும்.