Followers

Sunday, October 27, 2013

பாட்னா குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார்?



இந்த அயோக்கியர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தங்கள் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க எனது இந்திய சகோதரன் வீணாக ரத்தம் சிந்துகிறான். இந்த நிலை என்று மாறும்? நடந்த குண்டு வெடிப்புகளை வன்மையாக அனைவரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும்.

குண்டு வெடிப்பை நடத்தியது யாராக இருக்கும் என்று சில அநுமானங்களை கனி என்ற சகோதரர் பதிவிட்டிருந்தார். அதனை அப்படியே தருகிறேன்.

பாயின்ட் நம்பர் 1-குண்டு வெடிப்பில் உயிரிழந்தது எந்த ஒரு முக்கிய பிரமுகரும் இல்லை,எல்லாம் கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த அப்பாவிகள்தான்.

பாயின்ட் நம்பர் 2-மாநாடு நடந்த மைதானத்தில் குண்டு வைக்க முடிந்தவனுக்கு,மாநாட்டு மேடையில் குண்டு வைக்க ரொம்ப நேரம் ஆகாது..ஆனா குண்டுகள் வெடித்தது எல்லாம் அப்பாவி பொதுமக்கள் இருந்த பகுதியில்தான்.இவ்வளவு பெரிய கொடூர சம்பவம் நடந்தும்கூட,எந்த ஒரு அச்சமோ பயமோ இல்லாமல் அத்தனை தலைவர்களும் அசால்ட்டா மேடையேறி பேசிட்டு போயிருக்கிறாங்க.

பாயின்ட் நமபர் 3-ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள்,நூறுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள்,காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு வேண்டிய முதலுதவிகளை செய்யவோ,அல்லது இவ்வளவு பெரிய துக்க நிகழ்வு நடந்துவிட்டதே என்று எண்ணி மாநாட்டை கேன்சல் செய்யவோ இல்லை,மாறாக மாநாட்டை நடத்துவதிலேயே குறியாய் இருந்திருக்கிறார்கள்.

பாயின்ட் நம்பர் 4-இந்தியா முழுதும் சுற்று பயணம் செய்தும்,எந்த ஒரு மாநிலத்திலும் நடக்காத அசம்பாவிதம்,மோடியின் மிக பெரிய தலைவலியாக மாறியிருக்கும் நிதிஷ்குமார் ஆட்சி செய்யும் மாநிலத்தில் மட்டும் நடக்கிறதென்றால்,இது கண்டிப்பாய் யோசிக்க வேண்டிய விசயம்தான்.நிதிஸ்குமார் மேல் பழி போடுவதற்கு இவர்களே இதை செய்திருக்க வாய்ப்புக்கள் அதிகம்.

பாயின்ட் நம்பர் 5-திருச்சியில் நடந்த பொது கூட்டத்தில்,எல்லையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்திய மோடி,இந்த மாநாடு நடப்பதற்கு சில மணிநேரம் முன்பு கொல்லப்பட்ட ஐந்து உயிர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேச வில்லை.

மேலே சொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம்,ஒரு வேளை இது இவர்களாலே செய்யபட்டிருக்கலாம் என்ற யூகத்திற்கு வலு சேர்க்கும் காரணங்கல்தானே தவிர,இவர்கள்தான் இதை செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு அல்ல.இதை பற்றி உண்மை வெளிவரும்வரை இவன்தான் இதை செய்தான் என்று சொல்லுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ,அதே மாதிரிதான் இவன் இதை செய்யவில்லை என்று சொல்லுவதும்,பார்போம்.

-s.p.kani
https://www.facebook.com/pakkir.kani.9/posts/653041668061735

குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரத்தில் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பிஜேபியிடமிருந்து வருகிறது. மோடியும் நிதிஷ்குமாரை பலவாறு விமரிசிக்கிறார். மோடியை முன்பு பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று அவமானப்படுத்தியதையும் இன்று வரை பிஜேபி யோடு உறவு வைத்துக் கொள்ள எந்த சமிக்ஞையும் நிதிஷிடமிருந்து வராததும் மோடி எந்த அளவு நிதிஷிடம் கோபமாக உள்ளார் என்பதைக் காட்டுகிறது.

ல்லலு பிரசாத் தற்போது சிறையில் உள்ளார். குழப்பத்தை உண்டு பண்ண அவரது ஆட்களின் வேலையாகவும் இருக்கலாம். இந்த வகையிலும் விசாரணை முடுக்கி விட வேண்டும்.

இவை எல்லாம் யூகங்கள் தான். வெளி நாட்டு சதிகளோ அல்லது வேறு ஏதும் தீவிரவாத குழுக்களோ கூட செய்திருக்கலாம். இது போன்று அப்பாவி மக்கள் இறப்பதை தடுக்க அரசு உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்து தூக்கில் ஏற்ற வேண்டும். அதை அரசு செய்யுமா?

ஒரு முஸ்லிமோ அல்லது இஸ்லாமிய தீவிரவாத அமைப்போ இந்த காரியத்தை செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களின் இலக்கு மோடிதான். அப்பாவி பொது மக்கள் அல்ல. இந்த குண்டு வெடிப்புகளால் பிஜேபியின் செல்வாக்கு உயரும். எனவே எந்த முஸ்லிமும் இந்த காரியத்தை செய்ய துணிய மாட்டான். ஆனால் பிஜேபி சில பெயர் தாங்கி முஸ்லிம்களை கூலிக்கு அமர்த்தி இந்த காரியத்தை செய்யவும் வாய்ப்புள்ளது.

வழக்கம் போல் 'இந்தியன் முஜாஹிதீன்' வேலை என்று சில முஸ்லிம்களை கைது செய்து வழக்கை திசை திருப்பும் வேலையும் நடக்கலாம். அதைத்தான் பிஜேபியும் எதிர்பார்த்து காயை நகர்த்துகிறது. எந்த அப்பாவி முஸ்லிம் இந்த முறை பலிகடா ஆகப் போகிறானோ பொறுத்திருந்து பார்ப்போம்.

4 comments:

Unknown said...

அதானே . முஸ்லீம்கள் எவ்வளவு அமைதியான குடிமக்கள். அவங்களைப்போய் சந்தேகப்படலாமா?

Anonymous said...

அல்ஹம்துலில்லாஹ்...பெங்களூரு வழக்கில் மூன்று நபர்கள் பீர் முகைதீன்(மேலப்பாளையம்),சதாம் ஹுசைன் (கோவை),ஹனிபா ஆகியோரை எந்த குற்றமும் இல்லை என்பதால் பெங்களூரு நீதி மன்றம் விடுவித்துள்ளது..இதில் சதாம் ,ஹனிபா ஆகியோர் வேறு வழக்கில் உள்ளதால் அவர்கள் தமிழக சிறைகளுக்கு மாற்றபடுவர்.பீர் முகைதீன் மட்டும் நாளை விடுதலை பெறுகிறார்.இவர் பெங்களூரு வழக்கில் முதன் முதலாக கைது செய்யப்பட்டவர்.காவல்துறையின் விசாரணையில் இவர் மீது எந்த குற்றமும் இல்லை என்பதால் விடுவிக்க படுகிறார்.பெங்களூரில் தங்கி டீ தூள் வியாபாரம் செய்து வந்த இவர் அப்பாவி.எந்த குற்றமும் செய்யாமல் 6 மாதங்கள் சிறையில் வாடிய இந்த சகோதரர்களுக்கு அரசு என்ன நிவாரணம் வழங்க போகிறது.இந்த சகோதரர் விடுதலையாக முயற்சி எடுத்த அணைத்து நல் உள்ளங்களுக்கும்,பிரார்த்தித்த சகோதரர்களுக்கும் நன்றி..

https://www.facebook.com/kanchiiniavan?hc_location=stream

தமீமுல் அன்சாரி said...

@jaisankar காலம் பதில் சொல்லும்...

SNR.தேவதாஸ் said...

தங்கக்கு கனி என்ற அன்பர் எழுதிக்கொடுத்த அனுமானம்போல எனக்கு மனி என்ற அன்பர் எழுதிக்கொடுத்ததை காப்பி பேஷ்ட் செய்துள்ளேன்.
பாய்ண்ட்1. படிக்க வேண்டும் என்று சொன்னதற்காக மலாலாவை சுட்டது
இந்துத்வா தீவிரவாதிகள்.
பாய்ண்ட2.ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய இராணுவத்தை சுட்டுக்கொன்றுகொண்டு இருப்பது இ்ந்து தீவிரவாதிகள்.
பாய்ண்ட்3.கோவையில் காவலரைக் குத்திக் கொன்றது இந்துத்வா தீவிரவாதிகள்.
பாய்ண்ட்4.ஆப்கனில் நடந்த நடக்கும் அனைத்து தீவிரவாத செயலுக்கும் இந்துத்வா தீவிரவாதிகள் காரணம்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்