Followers

Tuesday, September 22, 2020

கொரோனா பலரது வாழ்வையும் புரட்டிப் போட்டுள்ளது....

 கொரோனா பலரது வாழ்வையும் புரட்டிப் போட்டுள்ளது....

'நான் என் பெயரை சொல்ல மாட்டேன். ஏனென்றால் எனது பெயரை வைத்து எனது மதம் சாதியை சிலர் தேடுவார்கள். நான் ஒரு கூலி தொழிலாளி. கொரோனா முடக்கத்தால் எனக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. நான் பல நாட்கள் பசியோடு இருந்து விடுவேன். எனது மனைவியும் குழந்தைகளும் பசியோடு இருப்பதை என்னால் காண சகிக்காது. என் மனைவி பிள்ளைகளுக்கு ஏதாவது கொண்டு செல்வேன். இன்று ஒரு ரொட்டி துண்டு தவறி கீழே விழுந்தது. இதனை எடுத்து எனது மனைவி பிள்ளைகளுக்கு உணவாக கொடுத்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். எனது தற்கொலையால் எனது பிள்ளைகளின் பசி போய் விடாது என்பதால் அந்த எண்ணத்தையும் விட்டு விட்டேன். என்றாவது ஒருநாள் விடியும் என்ற ஏக்கத்துடனே தினமும் காத்திருக்கிறேன்.
என்னைப் போல உங்கள் அருகிலும் எத்தனையோ ஏழைகள் வறுமையை வெளிக் காட்டிக் கொள்ளாமல் வாழந்து வருகிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.'



No comments: