Followers

Thursday, September 17, 2020

பிஜேபிக்கு வாக்களித்த ஒரு உத்தர பிரதேச இந்துவின் குரல்!

 பிஜேபிக்கு வாக்களித்த ஒரு உத்தர பிரதேச இந்துவின் குரல்!

'வருடத்துக்கு 13 லட்சம் வேலை வாய்ப்பை தருகிறோம் வாக்களியுங்கள் என்று பிஜேபி எங்களிடம் வாக்குறுதி தந்தது. அதை நம்பி வாக்களித்தோம். வேலை தருவது ஒரு புறம் இருக்கட்டும். தற்போது இருந்த வேலையும் பலருக்கு போய் விட்டது. அண்ணன் தம்பிகளாக பழகி வந்த இந்து முஸ்லிம்களை பிரித்து அதன் மூலம் ஆட்சிக்கு வந்துள்ளது பிஜேபி. இவர்களை நம்பி ஓட்டளித்த எங்களுக்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது.
'எனது நண்பனின் உறவினருக்கு நான்கு பிள்ளைகள். ஒருவன் எம்டெக், ஒருவன் எம்பிபிஎஸ், ஒருவன் எம்பிஏ, கடைசி பையன் திருட்டுத் தொழில் செய்கிறான்.'
அப்போது நான் சொன்னேன் 'திருட்டு தொழில் செய்பவனை வீட்டை விட்டு துரத்த வேண்டியதுதானே' என்று
அதற்கு அவன் சொல்கிறான் 'படிக்க வைத்த மூன்று பேரும் வீட்டில் வேலையில்லாமல் தெண்டமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். திருட்டுத் தொழில் செய்பவனைக் கொண்டே அந்த குடும்பம் ஓடுகிறது' என்றான்.
இதுதான் தற்போதய உபியின் நிலை!'



No comments: