Followers

Monday, September 28, 2020

தலித் வக்கீல் தேவ்ஜி மஹேஸ்வர் பார்பனியத்தால் கொல்லப்பட்டார்!

 தலித் வக்கீல் தேவ்ஜி மஹேஸ்வர் பார்பனியத்தால் கொல்லப்பட்டார்!


தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வக்கீல் தேவ்ஜி மஹேஸ்வர் சமூக ஆர்வலர். இணையத்தில் பல புரட்சிகரமான கருத்துக்களை எழுதி வருபவர். இந்து மதம் சம்பந்தமாகவும் பார்பனிய சமூகத்தின் அத்து மீறல்களையும் முகநூலில் அவ்வப்போது பதிந்து வந்துள்ளார். மும்பை மலட் என்ற பகுதியை சேர்ந்த பாரத் நவோல் என்பவரோடு முக நூலில் கருத்து மோதல் நடந்துள்ளது. பாரத் நவோல் பார்பனிய சமூகத்தை சேர்ந்த ஒரு இந்துத்வாவாதி.

கருத்தால் பதிலளிக்க முடியாத போது சங்கிகள் உடன் எடுப்பது ஆயுதத்தை. அந்த வகையில் பாரத் நவோல், தனது கூட்டாளிகளான ஜெயசுக் லுஹார், கீம்ஜி லுஹார், விஜயசிங் சோதா, மயூர்சிங் சோதா, பிரவினிஷ் சோதா, ஆர்ஜானிஷ் சோதா, போன்றோடு சேர்ந்து கூட்டாக தேவ்ஜி மஹேஸ்வரை அவரது அலுவலகத்துக்கு சென்று கொன்று போட்டுள்ளனர். சிசிடிவி கேமரா உதவியோடு குற்றவாளிகளை அடையாளம் கண்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பார்களா? அல்லது இறந்தது தலித் என்பதால் விடுவிக்கப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
28-09-2020



No comments: