Followers

Sunday, December 15, 2013

25 சிறந்த இந்தியர்களில் ஏ.ஆர்.ரஹ்மானும், ரஜினி காந்தும்!



என்டிடிவி யின் 25 வருடம் பூர்த்தியானதை யொட்டி இந்தியாவில் தற்போது வாழ்ந்து வரும் 25 சிறந்த நபர்களை தேர்வு செய்தது. அதில் தமிழகத்திலிருந்து ரஜினி காந்தும், ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தனது ஏற்புரையில்....

ஏ.ஆர் ரஹ்மான்: 'எல்லா புகழும் இறைவனுக்கே'(இதை தமிழிலேயே சொன்னார்) இந்த நிலையை அடைய காரணமாயிருந்த எனது தாய், ஆசிரியர்கள், தமிழ் மக்கள் மற்றும் அனைத்து நபர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு காரணமான இறைவனையும் புகழ்கிறேன்.

ரஜினி காந்த் :'ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இந்தியாவின் 25 சாதனையாளர்களுள் ஒருவனாகி உள்ளேன். அதிசயங்கள் நிகழும் என்பதற்கு என் வாழ்க்கையே உதாரணம். இந்த விருதை தமிழ் மக்களுக்கும், எனது குரு இயக்குனர் பாலச்சந்தருக்கும் அர்பணிக்கிறேன்.

லியாண்டர் பயஸ் : தன்னம்பிக்கையுடன் கடுமையான உழைப்பு வேண்டும்.

அமிதாப் பச்சன் : அடக்கமும், உண்மையும் முன்னேற்றத்திற்கு அவசியம்.

கபில் தேவ் : கனவு காணாமல் எதையும் அடைய முடியாது.

ஷாருக்கான் : செயல்களின் மூலம் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்க வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் : தோல்வியால் சோர்ந்து விடாமல் மீண்டும் எழுந்து, அடுத்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் : நாட்டின் எதிர்காலம் வேளாண் வளர்ச்சியில் உள்ளது; ஆயுதங்களின் வளர்ச்சியில் அல்ல.

ரத்தன் டாடா : இந்தியாவின் வளர்ச்சியில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒய்.கே.ஹமீது, முகேஷ் அம்பானி, வஹீதா ரஹ்மான் போன்றோரும் விருது வாங்கியவர்களில் அடங்குவர்.

விருது வாங்கிய 25 பேரும் மிகச் சிறந்த தேர்வாக என்னால் கணிக்கப்படுகின்றனர். இந்த நாட்டின் இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர் என்ற அனைத்து மக்களின் மனத்திலும் இந்த 25 பேரும் சாதி மத வித்தியாசமின்றி மதிப்புடன் குடி புகுந்துள்ளனர்.

கூட்டத்தில் பார்வையாளராக எல்.கே.அத்வானி மிக பரிதாபமாக உட்கார்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. பிரதம வேட்பாளர் பதவிதான் பறி போய் விட்டது, "பாபரி மசூதியை இடித்த மிகச் சிறந்த மனிதர்" என்று இவருக்கும் ஒரு விருது கொடுத்திருக்கலாம். அப்படியே நரேந்திர மோடிக்கும் 'முதல்வராக இருந்து 2500 முஸ்லிம்களை வேட்டையாடிய வீரர்' என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவிததிருக்கலாம். :-)

பண்டிட் ஹரி பிரசாத் விருது வாங்கி பேசும் பொது ' மாதா, பிதா, குரு இவர்களை மதித்து நடந்தால் இறைவன் நம்மோடு நமது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பான். இறக்கும் போது நாம் எதைக் கொண்டு செல்லப் போகிறோம். நாம் செய்த நல்ல காரியங்களே நம்மோடு கூட வரும. ஜெய் ஹிந்த்' என்று முடித்தார்.

இவர் சொன்ன வார்த்தைகளை மோடியும், அத்வானியும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். நாட்டை நேசிக்கும் உண்மையான தேச பக்தன் அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். தனது இனமும் தனது சாதியும் முன்னேறுவதற்காக நாட்டில் ரத்த களறியை உண்டு பண்ணும் எவனும் உண்மையான தேச பக்தனாக முடியாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது காரணகர்த்தர்கள் அதன் பலனை அனுபவிப்பார்கள். அன்று உண்மையை மோடியும், அத்வானியும் இந்துத்வாவாதிகளும் உணர்ந்து கொள்வார்கள்.



டிஸ்கி: 25 பேரில் ஊழல் செய்ய மறுத்து அதனால் பல இன்னல்களை இன்று வரை சந்தித்து வரும் மாவட்ட ஆட்சியர் சகாயத்தை தமிழகம் சார்பில் தேர்ந்தெடுத்திருக்கலாம். நான்கு முதல்வர்களை வரிசையாக சினிமா துறையிலிருந்து தேர்ந்தெடுத்தவர்கள் தமிழர்கள் என்பதால் இந்த முறையும் தமிழகம் என்றால் சினிமாவே என்டிடிவியினருக்கு முதலில் ஞாபகத்தில் வந்திருக்கலாம். ஆனால் இந்த(ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி காந்த்) இருவரும் சினிமா துறையில் இருந்தாலும் தங்கள் மார்க்கங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தாலும் நாட்டுப் பற்றிலும், மற்ற மதத்தவர்களை மதிக்கும் பண்பிலும் சிறந்து விளங்குகின்றனர். இதற்காக இவர்களுக்கு தாராளமாக இந்த விருதுகளைக் கொடுக்கலாம்.

No comments: