Followers

Wednesday, December 11, 2013

'ஆம் ஆத்மி' - அரவிந்த் கெஜ்ரிவால்!



சிறந்த பேட்டி! மிகச் சிறந்த அரசியல் தலைவராக எனக்கு தெரிகிறார். டெல்லியைப் பொருத்த வரை போன முறை பெற்ற ஓட்டை விட பிஜேபி குறைவாக பெற்றுள்ளதை சுட்டிக் காட்டி மோடி அலை என்ற ஒன்று இல்லை என்பதை அநாயசமாக விவரிக்கிறார். காங்கிரஸ், பிஜேபி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதையும் குறிப்பிட தயங்கவில்லை. வரும் நாடாளுமன்றத் தேரிதலில் மோடிக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறப் போகிறார். இவர் ஆட்சியைப் பிடிக்கா விட்டாலும் பிஜேபி மத்தியில் ஆட்சியில் அமருவதை கணிசமாக தடுப்பார். இதனால் காங்கிரஸ் திரும்பவும் மத்தியில் ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

"முஸ்லிம்களுக்கு காங்கிரஸான எங்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லை" என்று இறுமாந்திருந்த காங்கிரஸையும் தற்போது கெஜ்ரிவாலின் வெற்றி ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸூக்கு காலாகாலமாக ஓட்டளித்துளித்து வந்த முஸ்லிம்களின் ஓட்டை கணிசமாக கெஜ்ரிவால் பெற வாய்ப்புண்டு. தேர்தல் நெருங்கும் போதுதான் மேலும் நிலவரம் துல்லியமாகத் தெரியும். அதுவரை பொறுப்போம்.

1 comment:

Anonymous said...

சூரத்: இளம்பெண்கள் கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள, சர்ச்சைக்குரிய சாமியார், ஆசாராம் பாபு மற்றும் அவர் மகன், நாராயண் சாய் விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த நாராயண் சாய், இம்மாதம், 4ம் தேதி போலீசில் சிக்கினார். குஜராத் போலீசில், அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், '10க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளேன்' என, கூறியுள்ளதாக, விசாரணை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=870558