Followers

Friday, December 27, 2013

முஸ்லிம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!

முஸ்லிம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் : உடனடி வேலை - மேலாண்மை பயிற்சி !





இந்தியா இஸ்லாமிக் கல்சுரல் செண்டர் - நோபிள் எஜுகேஷன் பவுண்டேஷன் கூட்டு முயற்சி !!

ரிலைன்ஸ், இன்போசிஸ் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் பங்கேற்று பணி நியமன ஆணைகள் வழங்கின !!!

இந்தியா இஸ்லாமிக் கல்சுரல் செண்டர் மற்றும் நோபிள் எஜுகேஷன் பவுண்டேஷன் ஆகிய அமைப்புக்களின் சார்பில், முஸ்லிம் இளைஞர்களுக்கான 'சிறப்பு' வேலை வாய்ப்பு முகாம் ஒன்று டெல்லியில் நேற்று (23/12) நடத்தப்பட்டது.

உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட, நாட்டின் பல பகுதிகளிலிருந்து, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.

ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், பியூச்சர் க்ரூப், ஏர்வெய்ஸ், வோடாபோன் உள்ளிட்ட 23 நிறுவனங்களின் சார்பில் உயரதிகாரிகள் வந்திருந்து நேர்முகத்தேர்வு நடத்தி, வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கினர்.

இதுபோன்ற முகாம்களை ஆண்டுக்கு 3 முறை நடத்துவதாக கூறிய ஒருங்கிணைப்பாளர் சிராஜுத்தீன் குறைஷி,

இம்முறை பெண்கள் பலரும் கலந்து கொண்டு, அவர்களுக்கேற்ற பணிகள் பெற்று பயனடைந்ததாக கூறுகினார்.

கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்ட முயற்சிகளின் பயனாக, இதுவரை 10,000 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களை பெற்றுள்ளனர்.

அவர்களில் 60% பேர் பன்னாட்டு நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் பெறுவதாக கூறினார்.

நேற்றைய முகாமில் 200 பேருக்கு (உடனடி) பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதுடன், 1800 பேருக்கு மேலாண்மை திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

இது தவிர, 300 நபர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டதால், கடந்த ஆண்டு மட்டும், 18 இளைஞர்கள் மத்திய அரசின் உயர்பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார், சிராஜுத்தீன்.

நேற்றைய இந்த நிகழ்வுக்காக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, பார்ப்போரை வியக்க வைத்தது.

போக்குவரத்து சிலவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்,(சலுகை விலையில்) உணவுக்கான கேன்டீன்களும் ஆங்காங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

நன்றி: மறுப்பு

இது போன்ற முகாம்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடக்க சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிப்பார்களாக!

1 comment:

Anonymous said...

பிஜேபியின் அசல் பயம், மோடி பலூனை ஆம் ஆத்மி தொடர்ந்து காற்றிழக்கச் செய்துவிடுமோ என்பதுதான். அதனால்தான் ஆம் ஆத்மி மீது அத்தனை கோபமும். ராகுல் காந்தி மட்டுமே எதிரியாக இருந்தால் பிஜெபிக்கு வசதி. முட்டாள், மடையன், உதவாக்கரை என்று ராகுலை வசை பாடி மோடி டயருக்குக் காற்றடிக்கலாம். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கெதிராக அப்படி எதுவும் செய்தால் பருப்பு வேகாது.